ஆட்சிக்கவிழ்ப்புத் தோல்வியை ஏற்கத் தயாரில்லாத மகிந்தவும், மைத்திரியும்! - அமெரிக்க ஊடகம்

Thursday, November 29, 2018

இலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்பு தோல்வியடைந்துள்ள போதிலும் தேர்தல் மூலம் அந்த ஆட்சியதிகாரத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணம் மகிந்த ராஜபக்ச தரப்புக்கு ஏற்பட்டுள்ளதாக போரின் பொலிஸி என்ற அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு விரோதமாக செயற்பட்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை கவிழ்த்தார்.இதனையடுத்து சட்டவிரோதமாக மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். எனினும் அவரால் அந்த ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளமுடியவில்லை.இது அவரைப் பொறுத்த வரையில் தோல்வியாக கருதப்படுகிறது. எனினும் அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை.
அதேபோன்று அவரால் நியமிக்கப்பட்ட மஹிந்தவும் பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. எனவே இருவரும் தாம் தீர்மானித்த தேர்தல் ஒன்றுக்கு செல்வதையே குறியாக கொண்டுள்ளனர்.அதன்மூலம் மீண்டும் தங்களின் ஆட்சியை பிடிக்கலாம் என்பதே அவர்களின் எண்ணமாக உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
READ MORE | comments

மஹிந்த தொடர்பில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ரவிகருணாநாயக்க!

நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் 26ஆம் திகதி பதவியேற்றதன் பின்னர், நாட்டினுள் பயணங்களை மேற்கொள்வதற்காக ஹெலிகொப்டரை பயன்படுத்தியுள்ளார். இந்தப் பயணங்களுக்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக சற்று முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் ரவி கருணாநாயக்க .
மேலும் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒரு மாதகாலத்திற்குள் உள்நாட்டில் ஹெலிகொப்டரில் பயணிப்பதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார்.
பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்க கோரும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
READ MORE | comments

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ” ஒளிவிழா ”

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
பட்டிருப்பு  மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி கிறிஸ்தவ ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த ” ஒளிவிழா ” பாடசாலை ஆராதனை மண்டபத்தில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் கடந்த புதன் கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்லாறு மெதடிஸ்த திருச்சபை கல்லாறு கேசரம் அருட்செல்வி ஜோதினி சீனித்தம்பி , முன்னாள் மண்முனை தென் எருவில்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.திரவியராஜா , ஓய்வுபெற்ற ஆசிரியைகளான ஜயந்தி , சுந்தரி , பாடசாலை பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , கல்வி சாரா உத்தியோஸ்தர்கள்  மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.




READ MORE | comments

கூட்டமைப்பின் முடிவு; ஜனாதிபதிக்கு பறந்தது அவசர கடிதம்!

சிறிலங்காவில் நிலவும் ஆட்சிக் குழப்பத்தின் மத்தியில் பிரதமர் தொடர்பான உரிய தீர்மானத்தை நாட்டின் அரசியலமைப்புக்கேற்ப விரைந்து மேற்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.
கூட்டமைப்பின் சகல உறுப்பினர்களினதும் கையெழுத்துக்கள் அடங்கிய குறித்த கடிதம் சிறிலங்கா ஜனாதிபதியின் ஜனாதிபதி செயலகத்திற்கு முகவரியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
குறித்த கடிதத்தில், மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக ஏற்கமுடியாதென்றும் நாடாளுமன்றப் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய உறுப்பினர் ஒருவர் என ஜனாதிபதி கருதும் ஒருவரை பிரதமராக நியமிக்கும்படியும் கேட்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை ஜனாதிபதிக்கு அறியத்தரவுவது தமது கடமை எனவும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
READ MORE | comments

புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கை தயார் : மொத்தமாக 1735 பில்லியன் ரூபா செலவு


2019ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கையை தயாரித்துள்ள அரசாங்கம் விரைவில் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.

இதன்படி முதல் 4 மாதங்களுக்காக 1735 பில்லியன் ரூபாவை செலவு செய்யும் வகையில் புதிய இந்த இடைக்காக கணக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பொதுசேவைகளை முன்னெடுப்பதற்காக 760 மில்லியன் ரூபாவும் , பல்வேறு சட்டங்கள் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள செலவை மேற்கொள்வதற்காக 970மில்லியன் ரூபாவும் , அரசாங்கத்தின் முற்பண கணக்கு நடவடிக்கைகளுக்காக 5 பில்லியன் ரூபாவும் என்ற ரீதியில் மொத்தமாக 1735 பில்லியன் ரூபாவை செலவு செய்வதற்கான பரிந்துரையை ( இடைக்கால நிறைவேற்றுக் கணக்கு அறிக்கை) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதறற்காக நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (3)
READ MORE | comments

பாராளுமன்ற கூட்டத்தை ஆளும் கட்சி இன்றும் பகிஷ்கரித்தது


இன்றைய தினமும் பாராளுமன்ற கூட்டத்தை பகிஷ்கரிப்பதற்கு ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தீர்மானித்துள்ளது.

இன்று காலை நடைபெற்ற தமது கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. -(3)
READ MORE | comments

பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை முடக்கும் பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேறியது


பிரதமர் அலுவலகத்தின் நிதியை முடக்குவது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 பேர் வாக்களித்துள்ளனர்.

இன்று காலை 10.30க்கு பாராளுமன்றம் கூடியதுடன் அது தொடர்பாக நடத்தப்பட்ட விவாதத்தை தொடர்ந்து பிற்பகல் 12.22 மணியளவில் இலத்திரனியல் மூலமான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது ஐ.தே.க , தமிழ் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சியினர் பிரேரணையை ஆதரித்து வாக்களித்தனர்.
எதிராக எவரும் வாக்களிக்கவில்லை.
-(3)
READ MORE | comments

சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்ட பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாகஆற்று மண் ஆகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்ட பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாகஆற்று மண் ஆகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,இதற்காகபயன்படுத்திய ஒரு உழவு இயந்திரமும்ஒரு டிப்பர் வாகனமும்  கைப்பற்றப்பட்டுள்ளதாகசவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
சவளக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சவளக்கடை பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி .எம்.எம்.நஜீம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டசுற்றிவளைப்பின் போது நாவிதன்வெளி பிரதேசத்தினை சேர்ந்த ஒரு உழவு இயந்திரமும்சம்மாந்துறையை பிரதேசத்தினை  சேர்ந்த ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்அதனுடன் தொடர்புடைய இரு நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு நபர்களையும்கைப்பற்றப்பட்டுள்ள இருவாகனங்களையும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த நவரெத்தினராசா அரங்கன் அவர்கள் அகில இலங்கைக்கான சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

மட்டக்களப்பு குருக்கள்மடத்தை பிறப்பிடமாகக் கொண்டு களுவாஞ்சிக்குடியில் வசித்துவரும் சிவஸ்ரீ. நவரெத்தினராசா அரங்கன் சர்மா அவர்கள் அகில இலங்கைக்கான சமாதான நீதவானாக மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி திரு. த.கருணாகரன்  அவர்களது முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மட்/பட்/ குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் பணி புரிந்து வருகின்றார்.
குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தை நிருவகிக்கும் திருவருள் ஆண்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளராக சேவையாற்றிய இவர் ஆன்மீக சேவையாளரும் சமூக சேவையாளரும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க செயற்கை கோள் தரை இறங்கியது – ‘நாசா’ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

Tuesday, November 27, 2018


அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என ஆய்வு மேற்கொண்டு வருகிறது.கடந்த 1997-ம் ஆண்டு ‘நீர்’ ஆதாரத்தை கண்டறிய ‘யத்பைண்டர்’ என்ற விண்கலத்தை அனுப்பியது.2003-ம் ஆண்டில் ‘பீகிள் 2’ என்ற விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது. 2004-ம் ஆண்டில் ‘ரோவர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது அங்கு தரை இறங்கி நீர் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தின் உள் பகுதியில் தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள ‘இன்சைட்’ என்ற செயற்கைக் கோளை அனுப்பியுள்ளது. இது ரூ.7400 கோடி செலவில் உருவாக்கப்பட்டது.கடந்த மே 5-ந் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அது 6 மாதங்களாக பயணம் மேற்கொண்டது.201811261533106321_NASA-InSight-landing-on-Mars-to-be-broadcast-at-Times-Square_SECVPF
50 கோடி கி.மீ. தூரம் கடுமையான பயணத்துக்கு பிறகு இன்று இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு தரை இறங்கியது.அப்போது கடுமையான புழுதி புயல் வீசியது. இருந்தும் மிக பாதுகாப்பாக இன்சைட் செயற்கை கோள் தரை இறக்கப்பட்டது. அதை தொடர்ந்து முதல் போட்டோவை பூமிக்கு அனுப்பியது.
புழுதி புயல் காரணமாக இந்த போட்டோ தெளிவாக இல்லை. அதன் பின்னர் செவ்வாயின் மேற்பரப்பு போட்டோ பூமிக்கு வந்தது. அது மிக தெளிவாக இருந்தது.‘இன்சைட்’ செயற்கை கோள் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியதும் கலிபோர்னியாவில் உள்ள ஜெட் புரோபுல்சன் ஆய்வகத்தில் இருந்த விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.73d806f0d34841f4a08dee1cea36f851
ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். இந்த ஆய்வகத்தின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் பிரைடைன்ஸ்டைன் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறினார். இது ஒரு ‘அதிசயிக்கத்தக்க நாள்’ என வாழ்த்தினார்.
‘இன்சைட்’ செயற்கை கோள் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார்.இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்ப நிலை, அதன் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளும். அத்துடன் தண்ணீர் இருக்கிறதா என்பதை தீவிரமாக ஆராயும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.(15)
READ MORE | comments

இன்னும் அனுமதி அட்டை கிடைக்காத ச.தா பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்


க.பொ.த சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 3ஆம் திகதி முதல் நாடு பூராகவும் 4661 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இந்தப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு இது வரை அனுமதி அட்டை கிடைக்காவிட்டால் பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளடக்கி அதனை தரவிறக்கம் செய்துகொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. -(3)
READ MORE | comments

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள திடீர் உத்தரவு!

அரச நிறுவனங்கள் எதற்குமே இப்பொதைக்கு எந்தவொரு நியமனமும் மேற்கொள்ளவேண்டாம் என்று சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சகல அமைச்சர்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பித்துளார்.
இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி மேற்படி உத்தரவினை வழங்கியுள்ளார்.
குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி,
“அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு தலைவர்கள் மற்றும் புதிய பணிப்பாளர் சபை நியமனங்கள் இப்போதைக்கு வேண்டாம். இது காபந்து அரசு என்பதை நினைவில் வையுங்கள்” என அறிவுறுத்தினார்.
இதேவேளை சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இதே உத்தரவினை ஜனாதிபதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தகதாகும்.
READ MORE | comments

எதிர்வரும் 30ம் திகதி 3ம் தவணைக்கான கற்றல் கற்பித்தல் நிறைவடைந்து பாடசாலைகள் மூடப்படுகின்றன.

Monday, November 26, 2018

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணை விடுறைக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் அனைத்து பாடசாலைகளும் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் எதிர்வரம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மட்டக்களப்பில் நினைவுத்தூபி!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக நினைவுத்தூபி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முயற்சியில் குறித்த நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த நினைவுத்தூபி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வரும் பதில் முதல்வருமான க.சத்தியசீலன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் கே.சித்திரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறக் கூடாது என்பதற்காகவும் உண்மைக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த ஊடகவியலாளர்களை வரலாற்றில் என்றும் மறக்க கூடாது என்பதற்காகவும் இந்த நினைவுத்தூபி அமைக்கும் பணியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மேற்கொண்டு வருவதாக அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
READ MORE | comments

க.பொ.த சாதாரண தர பரீட்சை வகுப்புகள் -கருத்தரங்குகளுக்கு தடை!


எதிர்வரும் 3ஆம் திகதி க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் அதனுடன் தொடர்புடைய வகுப்புக்கள் , கருத்தரங்குகள் உள்ளிட்ட சகல செயற்பாடுகளுக்கும் நாளை (27)திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது.

இதன்படி நாளை நள்ளிரவு முதல் பரீட்சைகள் முடிவடையும் வரை அந்த பரீட்சையுடன் தொடர்புடைய வகுப்புகள் , கருத்தரங்குகள் , மாதிரி வினாத்தாள் விநியோகங்கள் , மாணவர் சந்திப்புக்கள் , கலந்துரையாடல்கள் போன்ற செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் பிரகாரம் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் இந்த அறிவிப்பை மீறுவோர் தொடர்பாக 1911 , 119 , 0112784208 , 0112784537 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுப் பரீட்சைகள் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பிருந்து அது தொடர்பான வகுப்புகள் , கருத்தரங்குகளை தடை செய்யும் சட்டத்திற்கு அமையவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. -(3)
READ MORE | comments

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிரான மனு மீதான விசாரணை 30ஆம் திகதி ஆரம்பம்


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவை நியமனம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதற்கு சட்டரீதியான உரிமை இல்லை எனவும் அவருடைய பதவியை ரத்து செய்யக் கோரியும் 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனு மீதான விசாரணை 30ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

எனினும், ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பிற்கு முரணானதென்றும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதற்கு சட்டரீதியான உரிமை இல்லை எனவும் குறிப்பிட்டு, அவருடைய பதவியை ரத்து செய்யக் கோரியும் மற்றும் புதிய அமைச்சரவை சட்டவிரோதமானது எனவும் அதனையும் இரத்துச் செய்யக் கோரியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. -(3)
READ MORE | comments

முக்கிய புள்ளியின் திடீர் அறிவிப்பு; கடும் தடுமாற்றத்தில் மைத்திரி-மஹிந்த!

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடியான அரசியல் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட சிலர் தனி அணியாகச் செயற்படத் திட்டமிட்டுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
கடந்த ஒக்ரோபர் 26ஆம் திகதி சிறிலங்கா அதிபர் நடத்திய ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்குப் பின்னர் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க கடும் வெறுப்படைந்துள்ளார். அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவப் போவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியானது.
எனினும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச நேரடியாக துமிந்த திஸாநாயக்கவின் வீட்டுக்குச் சென்று அவருடன் பேச்சுக்களை நடத்தியதைத் தொடர்ந்து அவர் மைத்திரி மஹிந்தவின் புதிய அரசாங்கத்தில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
எனினும் துமிந்த திஸாநாயக்க இன்னமும் அவரது அமைச்சுக் கடமைகளைப் பொறுப்பேற்காத நிலையில், கடந்த 14ஆம் திகதிக்குப் பின்னர் கூடிய நாடாளுமன்றின் எந்த அமர்வுகளிலும் அவர் பங்கேற்கவுமில்லை. இவ்வாறு அரசியல் மாற்றம் தொடர்பில் அமைதிகாத்து வந்த துமிந்த திஸாநாயக்க நேற்று தனது மௌனத்தை உடைத்துள்ளார்.
“தற்போதைய அரசியல் முறையை நான் விரும்பவில்லை. நாட்டின் அபிவிருத்திக்காக எந்தவொரு கட்சி எல்லைகளுக்குப் அப்பாற்பட்ட புதியதொரு சக்தியை கட்டியெழுப்ப நான் பணியாற்றுகிறேன்.” என அவர் கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
தமது அடுத்த நகர்வு எந்தவொரு கட்சி எல்லைகளையும் அடிப்படையாக கொண்டதாக இருக்காது என்றும், 2015 ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தது போன்ற தேசிய நலன்களை மனதில் வைத்துப் பணியாற்றப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.“ஒரு நாடு முன்னோக்கிச் செல்வதற்கும், பொருளாதாரத்துக்கு உதவுவதற்குமான ஒரு புதிய அமைப்பு முறையை உருவாக்க எதிர்பார்க்கிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மீண்டும் அதிரப்போகும் கொழும்பு அரசியல்; பிரதம நீதியரசரின் திடீர் நடவடிக்கை!

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு புதிய ஆயம் ஒன்றை பிரதம நீதியரசர் நளின் பெரேரா நியமித்துள்ளார்.

தான் உட்பட உயர் நீதிமன்றத்தில் அங்கம்வகிக்கும் ஏழு நீதியரசர்கள் கொண்ட ஆயம் ஒன்றினையே பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.

இதன்படி இந்த ஆயம் ஒன்றுகூடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அதுகுறித்த இறுதித் தீர்மானத்தை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஒன்பதாம் நாள் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விடுத்த மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றைக் கலைத்து எதிர்வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

அவரது அறிவிப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் என பலதரப்பும் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தன.

இந்த மனு மீதான விசாரணையை மேற்கொள்வதற்காக பிரதம நிதியரசர் உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் கொண்ட ஆயம் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

வழக்குத் தொடுநர் தரப்பும் எதிர்த்தரப்பினரும் தமது வாதங்களை முன்வைத்திருந்த நிலையில் ஜனாதிபதியின் நாடாளுமன்றக் கலைப்புக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் மீண்டும் நாடாளுமன்றம் குட்டப்பட்டு பல்வேறுபட்ட குழப்பங்கள் நிலவிவரும் மத்தியிலேயே பிரதம நிதியரசர் குறித்த மனுகள் மீதான விசாரணைக்காக ஏழு நீதியரசர்கள் கொண்ட ஆயத்தினை அமைத்துள்ளார்.
READ MORE | comments

கல்வித் தரத்தில் வடமாகாணம் 9வது இடத்தில் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தகவல்

Sunday, November 25, 2018


இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல் நேற்று(சனிக்கிழமை) யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அந்த கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே வடமாகாணம் கல்வி மட்டத்தில் 9வது மாகாணமாக விளங்குவதற்கு வடமாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வடமாகாணத்தில் உள்ள கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்ட போது, விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு. விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள், வேறு துறைகளுக்குச் சென்றுவிட்டார்கள். வடகிழக்கு மாகாணங்களில் கணித விஞ்ஞான பாட ஆசிரியர்கள் மிகக்குறைவாக இருக்கின்றார்கள். ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களின் 394 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இதேபோன்ற ஒரு விபரத்தை தயாரித்து வழங்கி வருகின்றோம். மாற்று வழிகளை தேடுமாறு கோரியிருந்தோம். பட்டதாரிகளுக்கு நியமனம் கொடுக்கின்றார்கள். மாகாணத்தில் மட்டும் பட்டதாரி அல்லாதவர்களுக்கு மத்திய அமைச்சு நியமனம் கொடுக்கின்றது.
அமைச்சர்களின் விருப்பமாகவும், பாடசாலைக்குச் செல்லாதவர்களும், தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்படுகின்றது. கணித பாட ஆசிரியர்கள் 188 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. விஞ்ஞான பாடத்திற்கு 161 ஆசிரிய வெற்றிடங்களும், ஆங்கில பாடத்திற்கு 51 வெற்றிடங்களும் நிலவுகின்றன.
தமிழ் பாட ஆசிரியர்கள் 99 வெற்றிடங்கள் நிலவுகின்றன. இந்த நியமனங்களை யார் வழங்குவது? மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, வேறு மாகாணங்களில் வழிவகுத்த விடயங்களை மாகாண கல்வி அமைச்சிடம் கொடுத்தோம். அதை யாரும் கேட்பதாக இல்லை.
இந்நிலையில் கடந்த 5 வருடங்களாக மாகாண சபையில் சண்டையும் சர்ச்சரவும் நிகழ்ந்தது. தற்போது, ஓய்ந்து நின்மதியாக இருக்கின்றது.மேலும் கல்வித் தரத்தில் வடமாகாணம் 9வது இடத்திலும், கிழக்கு மாகாணம் 8வது இடத்திலும் இருக்கின்றது. வடகிழக்கு மாகாணங்களில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதன் பின்னர், இந்த நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.(15)
READ MORE | comments

மீண்டும் அரசாங்கத்தை அமைப்போம் : ஐ.தே.மு


அடுத்த வாரத்திற்குள் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தை அமைப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் சிலர் எங்களுடன் இணைவதற்கு விருப்பத்துடன் இருக்கின்றனர். அவர்கள் அமைதியாக இருக்கின்றனர். தற்போது அரசாங்கம் என கூறிக்கொண்டிருப்போருக்கு இறுதியில் எஞ்சப் போவது 85 பேரே ஆகும். இதனால் மீண்டும் அரசாங்கத்தை அமைப்போம். ஐக்கிய தேசிய முன்ணணியுடன் இணைந்த கூட்டு அரசாங்கமாக இது அமையும். என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று மாலை ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதுடன் இதன்போது தமது அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)
READ MORE | comments

மனம் திறந்த ஜனாதிபதி மைத்திரி


ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க இனியொருபோதும் இடமளிக்க மாட்டேன். மகிந்த ராஜபக்‌ஷவுக்கு பெரும்பான்மையை நிறைவேற்ற முடியாவிட்டால் அவர் அது தொடர்பாக தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

”சன்டே ரைம்ஸ்” ஆங்கில வாரப் பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன். அந்த கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன். மஹிந்த ராஜபக்சவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் அவர் ஆட்சியை தொடரலாம். அப்படி இல்லை என நிரூபிக்கப்பட்டால் அது தொடர்பில் அவர் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். ரணில் கூடுதல் அதிகாரங்களை கையில் எடுத்து ஜனாதிபதி போல செயற்பட முனைந்தார். நான் சொன்ன நல்ல ஆலோசனைகள் எதையும் கேட்கவில்லை. இந்த அரசியல் நெருக்கடிக்கு விரைவில் முடிவு கட்டப்படும். என் மீதான கொலை சதி முயற்சி குறித்தான விசாரணைகள் புதிய கோணத்தில் நடைபெறவுள்ளன.

உயர்நீதிமன்றம் தேர்தல் விடயத்தில் என்ன தீர்ப்பை கொடுக்கிறதோ அதை ஏற்போம். பாராளுமன்ற கலைப்பு பற்றியே நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. பிரதமர் நியமனம் தவறென யாரும் நீதிமன்றம் செல்லவில்லை.எல்லாமே அரசியலமைப்பின்படியே நடந்துள்ளது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)
READ MORE | comments

மீண்டும் இன்று காலை தடம்புரண்ட புகையிரதம்!

மீண்டும் பணியாளர்களை ஏற்றிசென்ற புகையிரதம் தடம்புரண்டதால் மலையக புகையிரத சேவை மீண்டும் பாதிபபடைந்துள்ளது.
தலவாகலையில் இருந்து கொழும்பு பகுதியை நோக்கி பணியாளர்களை ஏற்றிசென்ற புகையிரதம் ஹட்டன் பகுதியில் வைத்து நேற்றய தினம் தடம்புரண்டமைக்கு பிறகு 25.11.2018.ஞாயிற்று கிழமை காலை 07 மணிக்கு மீண்டு வழமைக்கு திரும்பி கொழும்பு பகுதியை நோக்கி பயணித்து கொண்டிருந்த வேளை இன்று காலை 08மணி அளவில் ஹட்டன் மற்றும் ரொசல்ல பகுதிகளுக்கம் மிடையில் 67ம் இலக்க தூன் பகுதியில் மீண்டும் தடம் புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான புகையிரத சேவை இன்று காலையில் இருந்து தடைப்பட்டுள்ளதாக புகையிரத காட்டு பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் பதுளை - கொழும்பு கொழும்பு - பதுளைக்கான மலையக புகையிரத சேவை தற்காலிகமாக பாதிக்கபட்டுள்ளதாகவும் பணியாளர்களை கொண்டு சீர் செய்தவுடன் மலையகத்திற்கான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பலாம் என புகையிரத கட்டுபாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.
READ MORE | comments

சபாநாயகர் அறிவித்ததன் படி அமைச்சரவை கலைப்பு

Thursday, November 22, 2018


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தான் நினைத்த ஒரு நபரை பிரதமராக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரயெல்ல தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஏற்றுக் கொண்டால் அது தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கான அதிகாரமானது உயர்நீதிமன்றத்திற்கோ, ஜனாதிபதிக்கோ இல்லை.
சபாநாயகர் அறிவித்ததன் படி அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாத நபரொருவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டதாலேயே இப்படியான நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அரசியல் குழப்ப நிலைமை ஏற்பட்டால் எவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது இலங்கை அரசமைப்பில் இல்லையெனில், பிரித்தானிய நாடாளுமன்ற சம்பிரதாயங்களை பின்பற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

இலங்கையில் வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்



வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியான தகவலொன்றை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் ஆண்டில் வாகனங்களின் விலைகள் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பானது தற்போது நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி என்பவற்றால் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று 179 ரூபாயை தாண்டியதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டிருந்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அத்துடன் இந்த நிலை நீடித்தால், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 190 ரூபாய் வரை உயரும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

தமிழ் சிறைக்கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை


வழக்கு தாக்கலுக்கு உட்படாத சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்க்கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இவர்களது விடுதலை குறித்து அமைச்சரவைக்கு அறிவித்திருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் றோகண லக்ஸ்மன் பியதாச இன்று எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.

இதேபோன்று தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பது தொடர்பில் அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் எமது செய்திப்பிரிவிற்கு இன்று மாலை தெரிவித்தார்.
ஜனவரி மாதத்தில் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பில் கேட்டபோது. ஜனவரி மாதத்திற்கு முன்னதாகவே கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டர்.
READ MORE | comments

விவாக மற்றும் பிறப்பு, இறப்பு பதிவுகளை வழங்கும் திட்டங்கள் இணைய கணனி வசதிகளுடன் ஆரம்பம்

இணைய கணனி வசதிமூலம் உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் நிகழ்ந்த விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை வழங்கும் திட்டம் திங்கள் முதல் ஆரம்பம்.
இணைய கணனி வசதிமூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிகழ்ந்த விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை 26.11.2018 முதல் ஆரம்பமாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் முதல் தடவையாக கணனி வலையமைப்பூடாக இலங்கையில் எல்லாப் பாகங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள மக்கள் தங்களின் விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை பெற்றுக் கௌ்ள முடியும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மேலதிக பதிவாளர் நாயகமுமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
பொதுமக்கள் இதற்கான விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து உரிய கட்டணத்தினை செலுத்தி உடனடியாக பிரதிகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கால விரயத்தினையும் பண விரயத்தினையும் தவிர்க்கும் முகமாக அரசாங்கம் இவ்வாறான செயற்திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது விடயமாக மேலும் தெரிவித்த மாவட்டச் செயலாளர், தற்போது அந்தந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளில் மாத்திரமே பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்  விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை நாட்டின் எப்பாகத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் வசதியளிக்கப்பட்டுள்ளது. ‪
இணையக் கணனி வசதியின் ஊடாக இந்த நாடளாவிய மற்றும் வெளிநாட்டில் நிகழ்ந்த விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை வழங்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் மாவட்ட செயலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
1960ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையான பதிவுகளை திங்கட்கிழமை முதல் வார நாட்களில் பெற்றுக் கொள்ள முடியும்.
இதே போன்று இலங்கையில் மாகாண ரீதியான வலய அலுவலகங்களிலும், மாவட்ட ரீதியில் மாவட்ட அலுவலகங்களிலும் விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை வழங்கும் இணையக் கணனி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
READ MORE | comments

ஜனாதிபதி செயலகத்தின் அதிரடி அறிவிப்பு; அதிர்ச்சியில் மஹிந்த?

இலங்கையிலுள்ள அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்கு மறு அறிவித்தல் வரும்வரை புதிய நியமனங்களை வழங்க வேண்டாமென ஜனாதிபதியின் செயலாளர் விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஆனாலும் அவசர தேவை இருக்குமாயின் மேலதிக செயலர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் அல்லது ஓய்வு பெற்ற தகைமை உள்ள அரச அதிகாரி ஒருவர் அல்லது சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அரசியல் பின்புலம் எதுவும் இல்லாத வகையில் நியமிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி செயலர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவித்தலானது அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதமர், அமைச்சரவை, பொதுநிர்வாக அமைச்சு, நிதி அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய அமைச்சரவையின் பிரகாரம் மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினரால் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிப்பதற்கான முயற்சி மேற்கொள்லப்பட நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டால் அது தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
READ MORE | comments

அமைச்சரவை தீர்மானங்கள் (21/11/2018)


2018.11.21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
1. பெறுகைக்குக்குப் பின்னர் மற்றும் பின்னூட்டத்தையடுத்து விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 05ஆவது விடயம்)
அரசாங்கத்தின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பெறுகைக்கு பதிலாக அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதிக்கு உரிய பெறுமதி கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதன் மூலம் அந்தப் பணிகள் அரசாங்கத்தின் பெறுகை வழிகாட்டல் விதிகளுக்கமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக அரசாங்க நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்து பெறுகைத் தொடர்பில் மேற்கொள்ளப்படும் பின்னரான மதிப்பிடுதல் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக உத்தேசத்திட்டம் ஏனைய அமைச்சுக்களின் வேலைத்திட்டங்களுடன் இரண்டாம் நிலை ஏற்படாத வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

2. உள்ளுர் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களை ஊக்குவித்தல் (நிகழ்ச்சி நிரலில் 06ஆவது விடயம்)
வெலிமடை மற்றும் அதனை அடுத்துள்ள பிரதேசங்களில் அதிக உருளைக்கிழங்கு அறுவடை கிடைத்ததினால் சந்தையில் உள்ளுர் உருளைக்கிழங்கு விநியோகம் அதிகரித்ததுடன் இந்த உற்பத்தியாளர்களுக்கு நியாயமான வில கிடைப்பதை உறுதி செய்வதற்கும் உருளைக்கிழங்கு அறுவடையைக் கொள்வனவு செய்வதற்கும் அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொளளப்பட்டது. இதற்கமைவாக வரையறுக்கப்பட்ட இலங்கை நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை உருளைக்கிழங்கிற்காக உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவை பூர்த்தி செய்வதற்காக தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதற்காக மேதகு ஜனாதிபதி மைத்திரிபல சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. சிசெல்ஸ் குடியரசின் கரையோர பாதுகாப்பில் கரையோர பாதுகாப்புக்கான இரண்டு படகுகளை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில 07ஆவது விடயம்)
மேதகு ஜனாதிபதி அவர்கள் சிசெல்ஸ் குடியரசிற்கு இராஜதந்திர சுற்றுலா விஜயத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில் சிசெல்ஸ் குடியரசின் கரையோர பாதுகாப்பில் கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இரண்டு படகுகளை நிர்மாணித்துத்தருமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டது. இதற்கமைவாக இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் கரையோர பாதுகாப்பு நடவடிக்கைக்காக 2 படகுகளை நிர்மாணிக்கும் பணியை இலங்கை கடற்படையினால் மேற்கொள்வதற்கு பாதகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீககாரம் வழங்கியுள்ளது.
04. 1990ஆம் ஆண்டு இலக்கம் 2 இன் கீழான கடனைத் திரும்ப அறவிடுதல் (சிஷேட ஒழுங்கு விதிகள்) சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல். (நிகழ்ச்சி நிரலில் 08ஆவது விடயம்)
கடனை அறவிடுதலை துரிதப்படுத்தும் நடைமுறை விதி ஒன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் 1990 ஆம் ஆண்டு இலக்கம் 2இன் கீழான கடனை திரும் அறவிடுதல் (விஷேட ஒழுங்கு விதிகள்) என்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தபோதிலும் இந்த சட்டத்தின் மூலம் அப்போது நிலவிய கடனை வழங்கும் நிறுவனம் மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன் இதன் பின்னர் அமைக்கப்பட்ட அனுமதிபெற்ற விசேட வங்கியை இந்த சட்டப்பணிகளுக்காக உள்வாங்குவதற்கும் தேவையான உடனடி நிதியை வழஙகுவதற்கும் குறிப்பிட்ட சட்டத்தின் 31வது சரத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. உள்ளுர் சோள உற்பத்தியை அதிகரிப்பதற்காக வசதிகளை செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 13வது விடயம்)
காலநிலை மற்றும் பல்வேறு காரணங்களினால் உள்ளுர் சோளத்தின் மூமான தயாரிப்பு உள்ளுர் சந்தைக்கு தேவையை பூர்த்தி செய்யக்கூடியளவிற்கு இல்லாமையினால் சோளத்தை இறக்குமதி செய்யும் நடவடிக்கை கடந்த வருடம் முழுவதும் இடம்பெற்றது. உள்ளுர் தேசிய சோள தயாரிப்புகளை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியை குறைப்பதன் ஊடாக வெளிநாடுகளுக்கு செல்லும் வெளிநாட்டு நாணயத்தை கட்டுப்படுத்துவதற்கும் அதே போன்று தேசிய சோள உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் முடிந்துள்ளது. இதற்கமைவாக நிவாரண வட்டி விகிதத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கடன் திட்டத்தன் மூலம் தேசிய சோள உற்பத்தியை அதிகரிப்பதற்காக தேவையான கடன் வசதிகள் வழங்கப்படவுள்ளது. இதற்காக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. கரவை பசு பண்ணைகளின் செயல்திறனை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 16வது விடயம்)
இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஐரோப்பிய இன மற்றும் கலப்பின 5000 கரவை பசுக்களை அவுஸ்திரேலியாவில் இருந்தும் நிவசிலாந்திலிருந்தும் இறக்குமதி செய்து நாடுமுழுவதிலும் உள்ள கரவை பசு பண்ணைகளுக்கும் விநியோகிகக்கப்பட்டுள்ளது. இந்த கரவை பசுக்கள் மூலம் நாளாந்தம் 20-25 லீற்றர் இடையில் பாலைல பெற்றுக்கொள்ள முடிந்த போதிலும் பலவீனமான முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களினால் 10-15 லீற்றர் அளவில் மிகவும் குறைந்த பால் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பண்ணைகளை பயனுள்ள வகையிலும் செயற்திறன் மிக்கதாகவும் மேம்படுத்துவதாக வகுக்கப்பட்டுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்காக தேவையான மூலோபாயங்களை மதிப்பீடு செய்து சிபார்சுகளை சமர்ப்பிப்பதற்காக கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களமும் தேசிய பசு வள அபிவிருத்தி சபையின் பிரதிநிதிகளைக் கொண்ட புத்திஜீவிகள் குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி கிராம பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் விஜித் விஜஙமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. நட்புறவை மேம்படுத்தும் எண்ணக்கருவின் கீழ் இலங்கையில் உள்ளுராட்சி மன்ற நிறுவனம் மற்றும் வெளிநாட்டு நாடுகளில் உள்ள உள்ளுராட்சி மன்றத் தலைவர்களுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேற்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில 18ஆவது விடயம்)
நட்புறவு நகர எண்ணக்கருவின் கீழ் பல்வேறு உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களினால் வெளிநாடுகளில் ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களுடன் புரிந்துணர்வுடன் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான வேலைத்திட்டங்கள் அல்லது உடன்படிக்கையை எட்டுவதற்காக கிடைக்கப்பெற்ற கோரிக்கையை பாராட்டி எதிர்கால நடவடிக்கையை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சு நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதிகாரிகளைக்கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்காக மாகாண சபை உள்ளுராட்சி; மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகுகாரம் வழங்கியுள்ளது.
08. இலங்கை துறைமுக அதிகார சபையின் ஜய கொள்கலன் முனைவுகளின் நடவடிக்கைகளுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்தல். நிகழ்ச்சி நிரலில 30வது விடயம்)
இலங்கை துறைமுக அதிகார சபையின் ஜய கொள்கலன் முனைவுகளை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஜய கொள்கலன் முனைகளில் (JCT) – V இற்காக

கப்பல்களிலிருந்து தரைவரையில் கொள்கலன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான 03 கிரேன்களை இந்த அதிகார சபையின் நிதியைப்பயன்படுத்தி கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 25.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வரையறுக்கப்பட்ட செங்ஹாய் சென்ஹுவா ஹெவி இன்டஸ்ரீஸ் நிறுவனத்திடம் வழங்குவதற்காக துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சர் கௌரவ மகிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கபட்பட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. இலங்கை துறைமுக அதிகார சபையின் ஜய கொள்கலன் முனைவில் ஆழமான நங்கூரமிடும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் சிவில் பணி ஒப்பந்தத்தை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 31வது விடயம்)
கொழும்புத் துறைமுகத்திற்கு வரும் பெரும் எண்ணிக்கையிலான கப்பல்களை கையாளுவதற்காக போட்டி மிகுந்த சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்வதற்க மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு அமைவாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜய கொள்களல் முனைவை ஆழமான நங்கூரமிடும் ஆற்றலை அதிகரிப்பதற்காக இந்த அதிகார சபையின் நிதியைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தில் சிவில் பணிக்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய ms china Harbour engineering company Ltd  எனற நிறுவனத்திடம் வழங்கப்படவுள்ளது. இதற்காக துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. பேராதனை பல்கலைக்கழகத்தில் கலை பீடத்திற்காக 7மாடிகளைக் கொண்ட புதிய கட்டடிடத்தை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 32ஆவது விடயம்)
பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைபீடத்திற்காக 7 மாடிகளைக்கொண்ட கட்டிடமொன்றை நிரமாணிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய வரையறுக்கப்பட்ட சதுட பில்டர்ஸ் நிறுவனத்திற்கு 397.3 மில்லியன் ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. சமூக நல்லிணக்கத்திற்காக கல்வி திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 35வது விடயம்)
சமூக ஒருங்கிணைப்புக்கான கல்வித் திட்டத்தை 2005ஆம் ஆண்டிலிருந்து ஜேர்மன் அசாங்கத்தின் தொழில்நுட்ப நன்கொடையின் கீழ் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் திட்டமாகும். பல்லின சமூக நல்லிணக்கத்துடன் அமைதியான முறையில் ஒன்றிணைவதற்காக பிள்ளைகள் இளைஞர்கள் அவர்களின் குடும்பம் போன்றே சமூகத்திற்கு வசதிகளை செய்யும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த திட்டத்திற்காக 15.8 மில்லியன் யுரோக்கள் ஜெர்மன் அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு இதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்காக மேலும் 250,000 யுரோக்களை வழங்குவதற்கு ஜேர்மன் பெடரல் குடியரசு உடன்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த நன்கொடையை பெற்றுக்கொள்வதற்காக கைமாறு பத்திரத்தில் கைச்சாத்திடுவதற்காக நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கெரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12 தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்க பெறுகைகளை தாமதமின்றி மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 38வது விடயம்)
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சு விடயதானத்தின் கீழ் மாற்றங்களுக்கு அமைவாக தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அரசாங்க பெறுகை பணிகளை தாமதமின்றி மேற்கொள்ளப்படுவதற்காக பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. 2019 ஆம் ஆண்டுக்கான முதல் நான்கு மாதத்திற்கான அரசாங்கத்தின் செலவீனத்தை ஈடுசெய்தல். (நிகழ்ச்சி நிரலில் 41ஆவது விடயம்)
சமீபத்தில் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் காரணமாக 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு போதுமான கால அவகாசம் இல்லாமையினால் இதற்கு முன்னர் மற்றும் பொதுவான சந்தர்ப்பங்களில் கடைபிடிக்கப்பட்ட எடுத்துக்காட்டான நடைமுஙைகளுக்கு அமைவாக 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அங்கீகரிக்க்கப்படும் வரையில் 2019 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வரையில் அரச சேவைகளை தொடச்சியாக முன்னெடுக்கும் பொருட்டு தேவையான வரவு செலவு மானியத்தை இடைக்கால கணக்கின் மூலம் பெற்றுக்கொள்வதற்கும் இதற்கான பரிந்துரையை தயாரிப்பதற்கும் திருத்த சட்டத்தை முன்னெடுப்பதற்குமாக நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் கௌவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
-(3)
READ MORE | comments

இலங்கை விவகாரம் - ஜெனிவாவில் இன்று விவாதம்!

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று விவாதம் ஒன்று நடைபெறவுள்ளது. ‘மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை பாதுகாப்பதில் இலங்கை நாடாளுமன்ற வகிபாகம்’ எனும் தலைப்பில் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.
கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் இலங்கை நாடாளுமன்றில் பல்வேறு ஜனநாயகம் மற்றும் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக வெளிநாடுகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் இன்றும் நாளையும் இடம்பெறும் இந்த விவாதத்தின் போது இலங்கைக்கு அண்மையில் ஏற்பட்ட விடயங்களால் பெரும் நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக இங்கு இடம்பெறவுள்ள விவாதத்தில் சிவில் சமூகத்தை சேந்தவர்களான நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாலோசணைச் செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து, அசங்க வெலிகல, மனித உரிமை செயற்பாட்டாளரான ஷிரீன் சரூர், மற்றும் அலன் கீனன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
READ MORE | comments

மைத்திரிக்கு அமெரிக்கா விடுத்துள்ள மறைமுக எச்சரிக்கை!

சிறிலங்கா ஜனாதிபதியின் நடவடிக்கையானது இலங்கை-அமெரிக்க இருதரப்பு சினேகபூர்வ உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்று அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர் கிறிஸ்தோபர் வன் ஹொலன் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசெனவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் குறித்த கடிதத்தை கிறிஸ்தோபர் வன் ஹொலன் அனுப்பியுள்ளதுடன் இலங்கையின் அரசியலமைப்பின்படி உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுமாறு கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டுநியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டுநம்பிக்கையில்லா பிரேரணைகளில் தோற்கடிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளுமாறும் ஹொலன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீ லங்காவுடனான தனது நீண்டகால நட்புறவை நினைவூட்டியுள்ள ஹொலன், சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் தலைவணங்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்காவில் கடந்த சில வாரங்களாக நடக்கும் சம்பவங்கள் ஸ்ரீலங்காவின் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் மிகப்பெரிய சவால் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
பதவியில் இருந்த பிரதமரை பதவியில் இருந்து நீக்கியமை, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தமை, அவசர தேர்தலை அறிவித்தமை மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவுகளை ஏற்று கொள்ளாமை போன்ற விடயங்கள், ஸ்ரீலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராஜதந்திர தொடர்புகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் கிறிஸ் வென் ஹொலன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய நல்லிணக்க வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லுமாறும், 2015ஆம் ஆண்டுக்கு பின் ஸ்ரீலங்காவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்து காணப்பட்டதாகவும் ஹொலன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மேலும், கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான உறவில் நெருக்கம் ஏற்பட்டதாக கூறும் கிறிஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லிணக்க செயற்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்வதாக உறுதியளித்திருந்ததாகவும் சுட்டிக்காடியுள்ளார்.
இது தொடர்பான கடிதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

தெரிவுக் குழு விவகாரம் : நாளை சபையில் கடும் சர்ச்சை உருவாகலாம்


தெரிவுக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினருக்கும் இடையே கடும் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போது நாங்களே ஆளும் கட்சியாக இருப்பதாக கூறி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 உறுப்பினர்களை நியமித்துள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் எங்களுக்கே இருக்கின்றது இதனால் எங்கள் தரப்பிலிருந்தே அதிகமான உறுப்பினர்களை நியமிக்க முடியுமென ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தெரிவுக் குழுவுக்குறிய 12 உறுப்பினர்களில் 7 உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அது தொடர்பான பட்டியலை பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பி வைக்க மகிந்த அணி நடவடிக்கையெடுத்துள்ளது. எவ்வாறாயினும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி இது தொடர்பாக போராடவுள்ளது.

இவ்வாறான நிலைமையில் பாராளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடும் போது இரண்டு தரப்பினருக்கும் இடையே இது தொடர்பாக கடும் சர்ச்சை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)
READ MORE | comments

மஹிந்த-மைத்திரிக்கு எதிராக இன்று களத்தில் இறங்குகிறார் முக்கிய தேரர்!

Wednesday, November 21, 2018

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின், அரசியல் சதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
கொழும்பில் உள்ள விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு எதிரே, இன்றைய தினம் தம்பர அமில தேரர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரணில் - மைத்திரி தலைமையிலான நல்லாட்சி கடந்த 26ஆம் திகதி ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அத்துடன், முன்னாள் ஆட்சியாளர் மஹிந்த ராஸபக்ஷவை மைத்திரி - மஹிந்த அரசாங்கத்தின் பிரதமராக அறிவித்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கடந்த வாரம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இரண்டு முறை நம்பிக்கையில்லா பிரேரணை குரல் வழியான வாக்கெடுப்பு ஊடாக வெற்றிப்பெற்றதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எனினும், அதனை ஏற்றுக்கொள்ளாத மஹிந்த தரப்பினர் நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். அத்துடன் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையை நிரூபித்ததாக ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ளது.
நாட்டில் தற்போது பிரதமர் மற்றும் அமைச்சரவை இல்லை என்றும் நாடாளுமன்றில் பெரும்பான்மை உள்ள தமக்கு அரசாங்கத்தை அமைக்க வழிவிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுத்து இன்று ம் பிற்கல் 3 மணிக் கொழும்புவிகாரமகாதேவி பூங்காவில் சத்தியாகிரக போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.
கட்சி பேதமின்றி அனைவரையும்இணைத்துக்கொண்டு சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இந்த போராட்த்திற்கும் ஜனாதிபதியிடமிருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால் சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அதன் ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜீத் பீ.பெரேரா நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த போராட்டத்தை ஜனநாயகத்துக்காக போராடும் சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன
முன்னதாக கடந்த சனிக்கிழமை தம்பர அமில தேரரினால் முன்னெடுக்கப்படவிருந்த சத்தியாக்கிரகப் போராட்டம் பிற்போடப்பட்டிருந்தது.
தம்பர அமில தேரர் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இவ்வாறு சத்தியாக்கிரப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தியே அவர் இவ்வாறு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தார்.
எனினும் குறித்த போராட்டம் பிற்போடப்பட்ட நிலையில், இன்றைய தினம் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |