ஜெனீவா பிரேணை முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்

Sunday, January 31, 2016

ஜெனீவா பிரேணை முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதில் பிரித்தானியா தெளிவாக இருப்பதாக இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரித்தானிய  உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு தொடர்பில் கடந்த தினங்களில் சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வந்தன.இது குறித்து அவரிடம் வினவிய போது, இது குறித்த கருத்துக்களை தெரிவிப்பதைவிட, ஜெனீவா பிரேரணையின் அமுலாக்கத்தில் அவதானம் செலுத்துவது சிறந்தது என்று கூறியுள்ளார்.
இந்த பிரேரணையில் இலங்கை அரசாங்கம் பயணிக்க வேண்டிய பாதை தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதனை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எவ்வாறான திட்டங்களை வகுத்துள்ளது என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
எனினும் இந்த ஆண்டு ஜுன் மாதத்துக்கு முன்னதாக குறித்த பிரேரணையின் அமுலாக்கம் குறித்த முதற்கட்ட அறிக்கை, மனித உரிமைகைள் ஆணையகத்தில் முன்வைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
READ MORE | comments

சிறைக்கு சென்ற மகிந்த

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  மகன் யோசித்த ராஜபக்ஷவை பார்க்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு இன்று பகல் சென்றார்.
இவருடன் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரும் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
READ MORE | comments

கல்முனை சாய்ந்தமருதில் ஆயுதக் கொள்கலன் மீட்பு…!

கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது நகரில் இன்று நண்பகல் ஆயுதக் கொள்கலன் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அம்பாறை புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாய்ந்தமருது அல் அமானா வீதியிலுள்ள காணி ஒன்றில் மலசல கூடம் அமைப்பதற்கான குழியொன்றைத் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களால் இந்த ஆயுதங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற புலனாய்வுப் பொலிஸாரும் கல்முனை பெருங்குற்றப் பிரிவுப் பொலிஸாரும் இணைந்து ஆயுதக் கொள்கலனை மீட்டுள்ளனர்.
அதிலிருந்து கைக்குண்டு ஒன்றும், ரீ-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் ரவைகள் 32, ரீ 84 எஸ் ரவைகள் 44, எஸ்எல்ஆர் துப்பாக்கி ரவைகள் 9, ஒன்பது மில்லி மீற்றர் துப்பாக்கி ரவைகள் 9, 38 றிவோல்வர் ரக துப்பாக்கி ரவைகள் 9 ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அம்பாறை புலனாய்வுப் பொலிஸாரும் கல்முனை பெருங்குற்றப் பிரிவு பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

யோசித்த உள்ளிட்ட ஐவரும் ஒரே சிறையில்

சீ.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பேர், கொழும்பு விளக்கமறியலில் ஒரே சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அவருடன் கைதான ஐந்தாவது நபரான கவிஷ் திஸாநாயக்க, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
READ MORE | comments

மட்டக்களப்பு நாவற்குடாவில் பொதுச்சுகாதார பரிசோதகரின் வீட்டின் மீது தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் பொதுச்சுகாதார பரிசோதகரின் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று இரவு 11.00மணியளவில் நாவற்குடா,மேல்மாடி வீதியில் உள்ள கல்லடி பொதுச்சுகாதார பரிசோதகர் ஜெயசங்கரின் வீட்டின் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது வீட்டின் முன்பாக இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெடிப்புச்சத்தம் ஒன்று கேட்டு வெளியே வந்து பார்த்தபோது இரண்டு மோட்டார் சைக்கிளும் எரிந்துகொண்டிருப்பதை கண்டதாக பொதுச்சுகாதார பரிசோதகரின் மனைவி தெரிவித்தார்.
ஸ்தலத்துக்கு விரைந்துள்ள காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


READ MORE | comments

யோசித்த வைக்கப்பட்டுள்ள கொழும்பு விளக்க மறியல் சிறைக்கு கடும் பாதுகாப்பு : இரவு முழுவதும் யோசித்த உறங்கவில்லையாம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்‌ஷ அடங்கலாக 5 பேரும் கொழும்பு விளக்க மறியல்சிறைச் சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு 8 மணியளவில் 5 பேரும் குறித்த சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் இன்று அதிகாலை வரை யோசித்த ராஜபக்‌ஷ உறங்காதிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் யோசித்த சகஜமாக பேசிக்  கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
READ MORE | comments

முழுக்குடும்பத்தையும் சிறையில் அடைத்தாலும் தளரமாட்டோம்: தனது முகநூலில் மகிந்த

“முழுக்குடும்பத்தையும் கைது செய்து, அதுவும் போதாது என்று என்னை சிறையில் அடைத்தாலும் 1936 இலிருந்து வந்த அனுபவமும் முதிர்ச்சியும் ராஜபக்ஸ குடும்பத்திற்கு இல்லாது போகாது” என்று தனது மகன்
யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மகிந்தவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ச பல தடவைகள் சிறைக்கு சென்று வந்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர் யோசித கைதுசெய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட சில படங்களையும் பிரசுரித்துள்ளார்.
இதேவேளை மாத்தளையில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ராஜபக்ஸ கைதுகள் மூலம் ராஜபக்ஸவினரின் அரசியல் பயணத்தை எவரும் தடுத்துவிட முடியாது என்று கூறயுள்ளார்.
READ MORE | comments

மட்டக்களப்பு மண்ணின் புகழ்பூத்த மிருதங்கவித்துவான் அமரர் வேல்முருகு சிறிதரன் அவர்களது இறுதி ஊர்வலம்

மட்டக்களப்பு லேக் வீதியிலுள்ள அவரது வீட்டில் 27.01.2016 புதன்கிழமை அதிகாலை மணியளவில் இவர் மரணமடைந்துள்ளார்.

இவரது இறுதிக்கிரியைகள்  29.01.2016 நேற்று வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் நடைபெற்று  ,அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் இருந்து இவர் விரிவுரையாளராக பணியாற்றிய சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்திற்கு நேற்று நண்பகல் பூதவுடல் ஊர்வலமாக விரிவுரையாளர்களின் மரியாதை அணிவகுப்புடன் எடுத்துவரப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக இவரது உடல் கல்லடி சுவாமி விபுலானந்த அழகிய கற்கை நிறுவகத்தில் வைக்கப்பட்டது . 


 இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கல்லூரி பணிப்பாளார், விரிவுரையாளர்கள், மாணவர்கள், கல்விசார உத்தியோகத்தர்கள், அரச அலுவலக அதிகாரிகள் , கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மண்ணின் புகழ் பூத்த மிருதங்க வித்துவான் திரு. வேல்முருகு சிறிதரன் அவர்களை இன்று இம்மண் இழந்து நிற்கின்றது. இவர் 21.03.1958 அன்று இலங்கை கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறையில் வீரமுனை திரு. திருமதி. வேல்முருகு தங்கரட்ணம் தம்பதியினருக்கு இரண்டாவது ஆண் வாரிசாகப் பிறந்தார்.

இவர் தனது தந்தை திரு. வேல்முருகு அவர்களை ஆரம்ப குருவாகக் கொண்டு மிருதங்கக் கலையைக் கற்றார். 

தொடர்ந்து அக்கலையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் வசித்த இந்திய மிருதங்க வித்துவானான ஏ. எஸ். இராமநாதன் அவர்களிடம் பல வருட காலம் மிருதங்கக் கலையினை சிறப்புறக் கற்றுத் தேர்ந்தார்.

தனது மிருதங்க அரங்கேற்றத்தினை மட்டக்களப்பில் நிகழ்த்தினார். பின்னர் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியின் மிருதங்க ஆசிரியராக 1986ஆம் ஆண்டிலிருந்து கடைமையாற்றினார்.. 


பின் 2001ஆம் ஆண்டில் இருந்து  மிருதங்க போதனாசிரியராகவும், 2005 ஆம் ஆண்டில் இருந்து விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.

இக் காலம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது முதுதத்துவமானி மேற்படிப்பினை மேற்கொண்டு வந்தார். கடமைபுரியத் தொடங்கிய காலத்திலிருந்து நடைபெற்ற சகல விழாக்களிலும் இசை  நடன மாணவர்களின் ஆற்றுகைகளிலும் இவர் தனது திறமைமிக்க பங்களிப்பை ஆற்றி வந்தார்.


வேல்முருகு சிறிதரன் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மிருதங்க கலைஞராகவும் திகழ்ந்தார் .

 இலங்கை கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் இலங்கை வந்த நடன கலைஞரான திருமதி உமா ஆனந்த் அவர்களின் நடன நிகழ்விற்கும் அணிசேர் கலைஞராக பங்களிப்பு செய்தார்.

இவர் வடஇலங்கை சங்கீத சபையினால் வழங்கப்பட்ட கலாவித்தகர் பட்டத்தினையும் இந்துக்கலாசார இந்து சமய தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சின் அமைச்சரான   சி. இராஜதுரை அவர்களால்   “லய இசைச்செல்வன்” என்ற பட்டத்தினையும்  கல்லாறு சத்தியசாயி பாபா சபையினால் சர்ம வாத்தியகலாபதி” எனும் பட்டத்தினையும்  மிருதங்க சாகரம்  , மிருதங்கக்கலைமாமணி போன்ற பல பட்டங்களையும் பெற்ற மிருதங்கக் கலைஞராவார். 


இவர் மட்டக்களப்பில் தான் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற இசை விழாக்கள்  நிகழ்வுகளில் மட்டுமல்ல சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்திலும் இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியதாகும்.

இன்று நாம் இக்கலைஞரை இழந்தமையானது ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

 இவரது இடத்தை நிவர்த்தி செய்ய முடியாத நிலைமையானது மிகவும் மன வேதனைக்குரியதொன்றாகும்.

அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு இப்புகழ் மிக்க கலைஞரின் ஆத்ம சாந்திக்காக நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.













READ MORE | comments

மட்டக்களப்பு எருவில் இளைஞர் கழக பொது நூலக திறப்பு விழா

Saturday, January 30, 2016

மட்டக்களப்பு எருவில் இளைஞர் கழக பொது நூலக திறப்பு விழா

இந்நிகழ்வில்  பட்டிருப்புத் தொகுதி மாகாண சபை உறுப்பினர்கள், ம.தெ.எ. பற்று பிரதேச செயலாளர் , கிராமத் தலைவர்கள்  கலந்து சிறப்பித்தனர் 29.01.2016 பி.ப. 3.00 மணி அளவில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதில் சில படங்களைக் காணலாம் .












READ MORE | comments

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு விழா - 2016

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று வெள்ளிகிழமை (29.01.2016) பிற்பகல் 02.00 மணியளவில் இப்பாடசாலையின் சிசிலியா விளையாட்டரங்கில் பாடசாலையின் முதல்வர் அருட்சகோதரி. அருட்மரியா தலைமையில் கோலகாலமான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமாகிய திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களும், மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.சுகுமாரன், மட்டக்களப்பு நகர ஹட்டன் நெசனல் வங்கியின் சிரேஸ்ட முகாமையாளர் பி.ரமணதாச ஆகியோர்கள் அழைப்பு அதிதிகளாகவும் மற்றும் பிரதி அதிபர் எம்.சுந்தரலிங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், டபிள்யு.ஜெ.பி.ஜெயராஜா ஆகியோர்கள் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பெண்களுக்கான கிரிகெட் சுற்றுப்போட்டி, எல்லைப்போட்டி, ஈட்டி எறிதல், பரிதி வட்டம் வீசுதல், குண்டெறிதல், உயரம் பாய்தல், வினோதஉடை போட்டி, நீளம் பாய்தல், பெற்றோர்களுக்கான நிகழ்ச்சி உட்பட பல்வேறுபட்ட இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இவ்விளையாட்டுபோட்டியில் கசில்டா, பிறிடா, கொன்சிலியா, மாறி என நான்கு இல்லங்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் கசில்டா இல்லத்தினர் 650 புள்ளிகள் பெற்று முதலாம் இடத்தினையும், பிறிடா இல்லம் 605 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், மாறி இல்லம் 554 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும், கொன்சிலியா 535 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தினை தட்டிக்கொண்டது. இப்போட்டியில் பங்குபற்றிய சகல மாணவிகளுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும், வெற்றி கேடயங்களும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ் மற்றும் கோட்டைக்கல்வி அதிகாரி சுகுமாரன் உட்பட பலர் வழங்கி வைத்தனர்.  சிறந்த அணி நடையாக கொன்சிலியா இல்லம் முதலாம் இடத்தினையும், கசில்டா இல்லம் இரண்டாம் இடத்தினையும், ஏனைய இரண்டு இல்லங்களும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டனர்.










READ MORE | comments

பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் மஹிந்தவின் தங்கம் இல்லை : பொலிஸார் உறுதிப்படுத்தினர்

இராஜகிரியவிலுள்ள பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்திலுள்ள மண்ணை அகற்றி அதில் தங்கம் ஏதும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என நேற்று காலை முதல் தேடுதல் நடத்திய போதும் அதிலிருந்து தங்கமோ அல்லது வேறு எந்த பொருட்களோ மீட்கப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6 அடி முதல் 2 அடி வரையான ஆழமும் 30 அடி நீளமும்  கொண்ட குறித்த நீச்சல் தடாகம் முழுமையாக மண்ணால் மூடப்பட்டுள்ள நிலையில் நேற்று காலை 10 மணி முதல் அதிலுள்ள மண்ணை அகற்றும் நவடிக்கைகள் முன்னொடுக்கப்பட்டது. ஆனால் உள்ளேயிருந்து எந்த பொருட்களும் மீட்கப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்கொண்டு மூடப்பட்டிருந்த குறித்த நீச்சல் தடாகத்திற்குள் மஹிந்தவின் தங்கம் மற்றும் பணம் பொலித்தீன் பையொன்றில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில வாரங்களாக சில ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அது தொடர்பாக அந்த மாளிகையின் உரிமையாளரான லியனகே பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய நேற்றை தினம் அந்த நீச்சல் தடாகத்திலுள்ள மண்ணை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

தேசிய கீதத்தை தமிழில் பாடுவது அரசியலமப்பை மீறும் செயல் : கம்மன்பில

தேசிய கீதம் தமிழிலும் பாடப்படுமாகவிருந்தால் அது அரசியலமைப்பை மீறும் செயல் என பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக பாடப்படுமாகவவிருந்தால் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையும் கொண்டு வர முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத் தின நிகழ்வின் போது தமிழிலும் தேசிய கீதம் பாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பாக சிங்கள சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள கருத்தொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

கிழக்கிலங்கையை அபிவிருத்தி செய்ய முதலீட்டாளர்கள் மாநாடு

கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என மாகாண முதலமைச்சர் ஹாஃபீஸ் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
அவ்வகையில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 500க்கும் அதிகமான முதலீட்டாளர்கள், இது தொடர்பில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்துகொண்டனர் என அவர் கூறுகிறார்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை , கைத்தொழில், விவசாயம், கால் நடை மற்றும் மீன்பிடி என பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பாக மாகாண சபை தயாரித்துள்ள திட்டங்கள் இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டன எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
இந்த திட்டங்கள் மற்றும் யோசனைகள் தொடர்பாக சாதகமான பதில்கள் முதலீட்டாளர்களிடமிருந்து கிடைத்துள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.
இந்திய நிறுவனமொன்று கேரளாவில் உள்ளது போல் கிழக்கு மாகாணத்தின் கடலேரிகளில் சொகுசு படகு வீடுகளை அமைக்க முன்வந்துள்ளது எனவும் ஹாஃபீஸ் நசீர் அகமட் கூறுகிறார்.
உத்தேச முதலீடுகள் செயல்வடிவம் பெறும்போது கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்புகள் பெருகி அங்குள்ள மக்களின் சமூகப் பொருளாதார வாழ்க்கை மேம்படும் என தாங்கள் நம்புவதாகவும் மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் இந்தியா, சவுதி அரேபியா உட்பட பல நாடுகள் முதலீடுகளைச் செய்ய உறுதியளித்துள்ளன.
READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் பொங்கல்விழா


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் பொங்கல்விழா 29.01.2016 இல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.கோபாலரெத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,கலந்து கொண்டனர்.
பிரதேச செயலக ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றன.










READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |