Home » » யோசித்த வைக்கப்பட்டுள்ள கொழும்பு விளக்க மறியல் சிறைக்கு கடும் பாதுகாப்பு : இரவு முழுவதும் யோசித்த உறங்கவில்லையாம்

யோசித்த வைக்கப்பட்டுள்ள கொழும்பு விளக்க மறியல் சிறைக்கு கடும் பாதுகாப்பு : இரவு முழுவதும் யோசித்த உறங்கவில்லையாம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்‌ஷ அடங்கலாக 5 பேரும் கொழும்பு விளக்க மறியல்சிறைச் சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு 8 மணியளவில் 5 பேரும் குறித்த சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் இன்று அதிகாலை வரை யோசித்த ராஜபக்‌ஷ உறங்காதிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் யோசித்த சகஜமாக பேசிக்  கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |