சுகாதார ஊழியர்கள் நாளை தொழில்முறை நடவடிக்கையில்

Monday, March 18, 2024

 


நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பிக்க சுகாதார ஊழியர்கள் உறுதியளித்துள்ளதாக சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சுகாதார ஊழியர்களுக்கு பொருளாதார நீதி வழங்குவது தொடர்பான தொழில்நுட்ப அறிக்கையை சுகாதார அமைச்சகம் மார்ச் 5 ஆம் திகதி நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில், நிதியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஒப்புதல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டதுடன், சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்பானது அக்காலப்பகுதியில் வேலைநிறுத்தம் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த அறிக்கையின் அங்கீகாரம் நாளுக்கு நாள் தாமதமாகி வருவதாகத் தோன்றுவதால், கடந்த 14ஆம் திகதி கூடிய சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர்கள் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் மீண்டும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

இன்று (18) சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்கள் மீண்டும் சந்திக்க உள்ளனர்.

எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் தொழில்சார் நடவடிக்கை மற்றும் அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என தொழிற்சங்க கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

READ MORE | comments

பாடசாலைகளில் 08 முதல் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு புதிய மாற்றம்

Wednesday, March 13, 2024

 


பாடசாலைகளில் 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு

தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தகவல் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவும் அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அதன் முன்னோடித் திட்டம் 17 பாடசாலைகளை உள்ளடக்கி எதிர்வரும் மார்ச் 19 திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக கல்வி அமைச்சுடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் இணைந்து செயற்படுவதாகவும் இதன் மூலம் சர்வதேச தரத்திற்கமைவாக இந்நாட்டு மாணவர்களுக்கு பாட அறிவை வழங்க முடியும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

READ MORE | comments

“ஜுன் மாதம் முதல் அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரணம்”

Tuesday, March 12, 2024


 அஸ்வெசும நலன்புரி திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலஅவகாசம் இந்த மாதம் 15ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது

தற்போது, சுமார் 2 மில்லியன் பயனாளிகள் அஸ்வெசும கொடுப்பனவுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இரண்டாவது கட்டத்தின் கீழ் அந்த எண்ணிக்கையை 2.4 மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

எரிபொருள் விலையை மேலும் குறைக்க தயார்

Monday, March 11, 2024

 


திருத்தப்பட்ட மின்சார சபை சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதிய சட்டமூலம் சட்ட திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் அடுத்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விலை சூத்திரம் தொடர்பில் பங்குதாரர்களை அழைத்து எரிபொருளின் விலையை மேலும் குறைக்க தயாராக இருப்பதாக அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்திரமான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் அண்மையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மின்வலு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

READ MORE | comments

மாணவர்களுக்கு திறன் மற்றும் விருப்புகளுக்கு ஏற்ப எதிர்கால இலக்குகளை அடைய வாய்ப்பு - சுசில்

Monday, March 4, 2024

 


04-03-2024

எதிர்காலத்தில் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களது திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அவர்களின் எதிர்கால இலக்குகளை அடைவதற்குத் தேவையான பின்னணி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தரம் எட்டு மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களில் உள்ள மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவு பாடத்தையும் கற்பதற்கு வாய்ப்பு கிடைக்கபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்


அதற்கமைய, முன்னோடி திட்டமாக 20 பாடசாலைகளில் இந்த திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


அத்துடன், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்காக தயாராகும் பிள்ளைகளுக்கு பெற்றோர் கொடுக்கும் அழுத்தம் நிறுத்தப்பட வேண்டும்.


புலமைப்பரிசில் பரீட்சை எதிர்காலத்தில் நடத்தப்படும் ஆனால் போட்டியைக் குறைக்க தேவையான சூழல் தயார் செய்யப்படும்.


வகுப்பறைக்கு வெளியில் உள்ள செயல்பாடுகளுக்கு மாணவர்கள் காட்டும் திறமைகளை அங்கீகரித்து அந்த திறன்களுக்கான மதிப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


அதேநேரம், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான தற்போதைய பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் எனவும், எஞ்சிய மூன்று பாடங்களை தொழில் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த விடயங்களை கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


READ MORE | comments

தொழில் ஆசை காட்டி போருக்கு அனுப்பிய வேலைவாய்ப்பு நிறுவனம்

 


கொழும்பு, நுகேகொடையில் அமைந்துள்ள ஒரு வேலைவாய்ப்பு நிறுவனமொன்று, ரஷ்யா மற்றும் ரஷ்யாவின் இராணுவத்தின் சிவில் வேலைகளுக்காக என அனுப்பி வைத்த 17 இலங்கையர்களை அந்நாட்டு இராணுவத்தில் ஆட்சேர்ப்பு செய்யும் முயற்சியை தடுத்து அதிலிருந்து விடுபட்டு நேற்று(03) கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்தனர்.

அவர்களில் கம்பஹா, கண்டி, கம்பளை, ருவன்வெல்ல, காலி, மாத்தறை, அக்குரஸ்ஸ ஆகிய இடங்களில் வசிக்கும் Hardware கடைகளில் வேலை செய்பவர்கள், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளிகள் மற்றும் இலங்கையில் இராணுவ சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் என உள்ளடங்குகின்றனர்.

இந்த சம்பவத்தால் அச்சமடைந்த அவர்கள், இந்த ரஷ்ய பயணத்தின் அனுபவத்தை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்கள்.

இந்த பயணத்திற்காக ஒரு நபருக்கு சுமார் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவழித்ததாகவும், அந்த பணத்தை வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இருந்து திரும்பப் பெற உள்ளதாகவும் கூறினார்கள். பணத்தைத் திரும்பப் பெறுவதில் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறி ஊடகங்களை தவிர்த்து விமான நிலையத்தை விட்டு விரைவாக குறித்த தரப்பினர் வெளியேறி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை

Tuesday, February 20, 2024


இலங்கை அணியின் பங்களாதேஷ் போட்டி சுற்றுப்பயணம் தொடர்பான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி அங்கு 3 இருபதுக்கு20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

மேலும், இந்த சுற்றுப்பயணத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.


போட்டியின் இருபதுக்கு20 போட்டிகள் மார்ச் 4, 6 மற்றும் 9 ஆம் திகதிகளிலும் ஒருநாள் போட்டிகள் மார்ச் 13, 15 மற்றும் 18 ஆம் திகதிகளிலும் நடைபெறும்.

முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 22ம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 30ம் திகதியும் தொடங்குகிறது.

இந்த சுற்றுப்பயணம் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு கீழே.

READ MORE | comments

அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்

Tuesday, February 13, 2024




இன்று (13) அதிகாலை புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 15 ஆம் தூண் பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த போது, ​​பாராளுமன்ற உறுப்பினரின் கார் அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்தின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உழவு இயந்திரத்தை ஓட்டிச் சென்றவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த காரின் சாரதி சாலியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE | comments

அஸ்வெசும – புதிய விண்ணப்பங்கள் நாளை முதல் கோரல்

Friday, February 9, 2024

 


நான்கு இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி நாளை (10) ஆரம்பமாகவுள்ளது.

பயனாளிகளை தெரிவு செய்யும் போது பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சில நிபந்தனைகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

குடும்பங்களைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்திய விதிகளில் யாராவது இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்றால், அவர்களும் இதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதேவேளை, ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இழப்பீடு பலன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதிதாக அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுநீரகக் கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

லாப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம்?

Friday, February 2, 2024

 


பிப்ரவரி மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம் இல்லை லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஜனவரி மாத விலை பிப்ரவரி மாதத்திற்கும் பொருந்தும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ நிறுவனம் இன்று (02) காலை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபரில்?

 


ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதம் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்று (02) அனுராதபுரத்தில் தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்ட ஐ.தே.க மாநாட்டில் உரையாற்றிய ரங்கே பண்டார, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வருவார் என்பதால், அதற்கு அனைவரும் தயாராகுமாறும் கேட்டுக் கொண்டார்.

READ MORE | comments

சுகாதார தொழிற்சங்கங்கள் நாளையும் வேலை நிறுத்தம்

Wednesday, January 31, 2024

 


வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார ஊழியர்கள் சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.

35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள வைத்தியர்களின் கடமை இடைநிறுத்தம், வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகள் அல்லது DAT கொடுப்பனவுகளை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்று பிற்பகல் தொழிற்சங்கங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுகாதார ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதில் அரசாங்கமோ அல்லது நிதியமைச்சோ சாதகமான தலையீடு இல்லாததால், நாளையதினம்(01) 72 சுகாதார சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

READ MORE | comments

SLT பங்குகளை கொள்வனவு செய்வதற்கு 02 நிறுவனங்கள் தகுதி

 


ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இரண்டு நிறுவனங்கள் முன் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது.

சீனாவின் கோட்யூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் (Gortune International Investment Holdings) மற்றும் பிரபல இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ஜியோ பிளட்ஃபோர்ம் (Jio Platforms) நிறுவனங்களே இவ்வாறு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான 50.23 சதவீதமான பங்குகளை விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

READ MORE | comments

வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை

 


ஜெர்மனியில் வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை என்ற புதிய நடைமுறை நாளை(01) முதல் அமலுக்கு வர உள்ளது.

உலகம் முழுவதிலும் வாரத்தின் 5 நாட்கள் வேலை நாள், சனி, ஞாயிறு விடுமுறை அல்லது 6 நாட்கள் வேலை நாள் ஞாயிறு விடுமுறை என பல்வேறு வகையான வேலை, விடுமுறை நாள் அமைப்பு அமுலில் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக சில நாடுகள் வேலை நாட்களுக்கு இணையான விடுமுறை நாட்கள் அளிப்பது குறித்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் பணியாளர்கள் மகிழ்ச்சி அதிகரித்துள்ளதாகவும், உற்பத்தி திறனும் கூடியுள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
இந்நிலையில் இந்த வேலைத்திட்ட முறையை ஜெர்மனியும் சோதித்து பார்க்க உள்ளது.

READ MORE | comments

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு குறைந்தபட்ச வேக வரம்பு உள்ளிட்ட புதிய விதிமுறைகள்

Tuesday, January 30, 2024


 அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைந்தபட்ச வேகம் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை விரைவில் அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய விதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டு அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் வர்த்தமானி வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

READ MORE | comments

அமைச்சுகளுக்கு வாகன இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி


 துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எவ்வாறாயினும், துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சகங்கள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக நிதி அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்த கோரிக்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

READ MORE | comments

மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

 


மேற்காசியாவில், இந்திய கடல் பகுதியில் பல தீவுகளை உள்ளடக்கிய மாடுதான் மாலைத்தீவு.

மாலைத்தீவுக்கு முக்கிய வருவாய், இயற்கை அழகு நிறைந்த அதன் தீவுகளை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து கிடைத்து வந்தது. சினிமா, கிரிக்கெட், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இந்தியர்கள் சுற்றுலாவிற்கு மாலைத்தீவிற்கு செல்வது வழக்கம்.

மாலைத்தீவில் 2023 செப்டம்பர் மாதம் 88 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அந்நாட்டின் தலைநகர் மாலே நகர மேயர் மொகமது முய்சு தேர்தலில் வென்று ஜனாதிபதியானார்.

ஜனாதிபதி முய்சு சீன-ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்த முய்சுவின் சீன ஆதரவு நிலையினால், இந்திய பிரபலங்கள் அங்கு சுற்றுலா செல்வதற்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டனர்.

நேற்று, முய்சு அமைச்சரவையில் மேலும் 4 உறுப்பினர்களை சேர்க்க ஒப்புதல் பெற அந்நாட்டின் பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், இந்த கூட்டத்தில் மோதல்கள் வெடித்து கைகலப்பும் ஏற்பட்டது.

இந்த மோதலில் ஒரு உறுப்பினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அங்கு அமைச்சர்களுக்கு ஒப்புதல் அளிக்க வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

இதை தொடர்ந்து, முய்சுவிற்கு எதிராக அந்நாட்டு எதிர்கட்சிகள் “இம்பீச்மென்ட்” கொண்டு வந்து, பதவி நீக்குவதற்கான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்றனர். இதற்கு தேவையான கையொப்பங்களை உறுப்பினர்களிடம் பிரதான எதிர்கட்சியான மாலைத்தீவு ஜனநாயக கட்சி சேகரித்து விட்டது.

இந்நிலையில் பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை முய்சு சமாளிப்பாரா அல்லது தானாக பதவி விலகுவாரா என்பது வரும் தினங்களில் தெரிந்து விடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

READ MORE | comments

ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்ற உத்தரவு

 


கொழும்பில் இன்று (30) நடைபெறவிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளர் முஜிபர் ரஹ்மான், மத்திய கொழும்பு அமைப்பாளர் அப்சரா அமரசிங்க, கட்சியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேற்குறிப்பிட்ட பிரதிவாதிகள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள முஸ்லிம் மயானத்திற்கு அருகில் பிரதீபா மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, மில்டன் பெரேரா மாவத்தை மற்றும் ஜும்மா சந்தி வழியாக சங்கராஜ சுற்றுவட்டத்தின் ஊடாக பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

READ MORE | comments

காலணி வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

Monday, January 29, 2024

 


பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் காலணி வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த வவுச்சரின் செலுப்படியாகும் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த வவுச்சரின் செலுப்படியாகும் காலம் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியுடன் காலாவதியாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

‘லொரென்சோ புதா 4’ பற்றி சோமாலிய கடற்படையுடன் கலந்துரையாடல்

 


சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த ‘லொரென்சோ புதா 4’ கப்பலின் மீனவர்களை பாதுகாப்பாக விடுவிப்பதற்காக சோமாலிய கடற்படையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வி.கண்ணநாதன், எத்தியோப்பியாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து, சோமாலியாவின் கடற்படைத் தலைவர் அட்மிரல் அப்திவர்சாமி ஒஸ்மானுடன் நெருக்கமாகச் செயற்படுவதாகத் தெரிவித்தார்.

இதனிடையே, சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட பல நாள் மீன்பிடி கப்பல் குறித்து விசாரணை நடத்துமாறு பஹ்ரைனில் உள்ள கூட்டு கடல் படைக்கு இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. 39 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பஹ்ரைனின் கூட்டு கடல்சார் படை, கடற்படைக் கப்பல்களின் பாதுகாப்பைக் கையாளும் ஒரு அமைப்பாகும்.

கடந்த 12ஆம் திகதி திக்ஓவிட்ட துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ‘லொரென்சோ புதா 4’ என்ற கப்பலை, ஷேல்ஸ் மாகாணத்திற்கு அருகில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை 06 ஆகும்.

READ MORE | comments

கப்பல்களால் நிரம்பி வழியும் கொழும்பு துறைமுகம்


 செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் துறைமுகத்திற்கு கப்பல்களின் வருகை 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

துறைமுகத்தின் கொள்கலன் நடவடிக்கைகளும் 72 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜயபஹலு முனையத்தின் விசேட கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், செங்கடல் நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்தின் வருமானம் அதிகரித்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியாது என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

சொத்து விபரங்களை முன்வைக்க வேண்டியவர்கள் குறித்த புதிய பட்டியல் இதோ

 


ஜனாதிபதி, பிரதமர், அரச உத்தியோகத்தர்கள், ஊடகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட நபர்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசியல்வாதிகள் மற்றும் அரச சேவையில் உள்ள ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் (1,50,000) அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகள் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் சொத்துக் கடன் அறிக்கைகளைப் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

அண்மையில் இயற்றப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு சட்டத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 31 துறைகளைச் சேர்ந்த நபர்கள் ஒவ்வொரு வருடமும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

READ MORE | comments

பாடசாலைகள் ஆரம்பிக்கும் போதே ஆசிரியர் போராட்டங்களும் தொடரும்

Sunday, January 28, 2024

 


அடுத்த பாடசாலை தவணை ஆரம்பமானதும் பெற்றோருடன் இணைந்து பாரிய பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை இருபதாயிரம் ரூபாவினால் அதிகரிப்பது, பாடசாலை மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு கல்விச் செலவுகளை தேவையில்லாமல் சுமத்துவது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிடுகின்றார்.

அபிவிருத்திச் சங்கங்களின் ஊடாக தற்போதைய அரசாங்கத்தினால் பாடசாலைகளின் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தும் சுமை பெற்றோர்கள் மீது மறைமுகமாக சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

READ MORE | comments

சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கையின் மீன்பிடி படகொன்று கடத்தல்

Saturday, January 27, 2024


 சிலாபம் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜனவரி 12 ஆம் திகதி இலங்கையிலிருந்து 6 மீனவர்களுடன் புறப்பட்ட மீன்பிடி இழுவைப்படகு, அரேபிய கடல் பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை மீன்பிடி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் இருந்து சுமார் 1160 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடத்தப்பட்ட மீனவர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

READ MORE | comments

இலங்கைக் கிரிக்கெட் மீதான தடை அடுத்த சில நாட்களில் நீக்கம்?

 


இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) இடைநிறுத்தம் அடுத்த சில நாட்களில் நீக்கப்படும் என்று இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை தெரிவித்தார்.

வத்தளையில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய போது விளையாட்டுத்துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |