கின்னஸ் சாதனையை நோக்கி அனிஸ்டஸ் ஜெயராஜா..

Sunday, August 31, 2014

திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா (வயது 56) தான் நிகழ்த்தவுள்ள கின்னஸ் சாதனை முயற்சி இன்று சனிக்கிழமை 30.08.2014 காலை எட்டு மணிக்கு திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் நூலகத்தில் ஆரம்பித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தண்டாயுதபாணி உள்ளிட்ட இன்னும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முதல் 04 மணித்தியாலம் எழுத்தும் எனது வாழ்வும் எனும் தலைப்பிலும் அடுத்து வரும் 04 மணித்தியாலங்கள் எனது வாழ்வும் உங்கள் கரண்சியும் எனும் தலைப்பிலும் இறுதி 04 மணித்தியாலங்கள் கரன்;சி இல்லாத உலகம் எனும் தலைப்பிலும் எழுதவுள்ளார்.
கின்னஸ் சாதனை நிகழ்த்தவுள்ள எங்கள் உறவுக்கு உற்சாகமளித்து மற்றவா்களுக்கும் இந்தச் செய்தியைத் தெரிவியுங்கள்.
READ MORE | comments

புருசனின் நண்பனுடன் கள்ளத் தொடா்பு - கண்ணால் கண்ட புருசன் மனைவியின் கழுத்தை அறுத்தான்

தனது மனைவி தனது நண்பனுடன் கள்ளத் தொடா்பில் ஈடுபட்டிருந்த போது கையும் மையுமாகப் மனைவியைப் பிடித்த கணவன் அந்த இடத்திலேயே தனது மனைவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்தான். தனது மனைவி மாா்பகங்கள் தெரிய அந்தரங்கள் தெரிய
அரை குறை ஆடைகளுடன் காணப்பட்ட போது அவற்றை சரி செய்யச் சொல்லி உத்தரவு இட்டு அவள் அதனைச்  சரிசெய்த பின் அவளை பிடித்து  கட்டிலில் தள்ளியபின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த பின் அந்த தலையைப் பல இடங்களுக்கும் கொண்டு செல்லும் காட்சி இது. இந்த வீடியோவை எடுத்த கணவனின் இன்னொரு நண்பனும் கொலைக்கு உடந்தை என பொலிசாா் கைது செய்தனா். இச் சம்பவம் வட இந்திய மாநிலத்தில் இடம் பெற்றது வீடீயோ புகைப்படங்களுக்கு கீழ் தரப்பட்டுள்ளது.
READ MORE | comments

கொழும்பில் அஞ்சான் படம் பார்த்து இறந்த இளைஞனது குடும்பத்திற்கு நடிகர் சூரியா 500,000 பண உதவி.

கடந்த 15ம் திகதியன்று பொலன்னறுவைப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் அஞ்சான் பட்ம பார்க்க சென்ற வேளை உயிரிழந்த சம்பவம் ஊடகங்களில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
தொழில் நிமிர்த்தமாக தலைநகர் கொழும்பில்  கோட்டல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த வேளை சூரியா நடித்து வெளியான  அஞ்சான் படம்  பார்க்க தன் நண்பர்களுடன் பிரபல திரையங்கிற்கு சென்றிந்தார்.  படம் ஆரம்பிக்கபட்ட சிறிது நேரத்தில்  திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தாக தெரிவித்தனர்.
இவ் இளைஞனின் வீட்டிற்க்கு நடிகர் சூரியா 500,000 ரூபா பண உதவி வழங்கியுள்ளார். இத்தகவலை எந்த ஊடகங்களுக்கும் தெரிவிக்க மறுத்துள்ளனர் நடிகர் சூரியாவின் உதவியாளர்கள்.
READ MORE | comments

தமிழகத்திலுள்ள மக்களும் தலைவர்களும்அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்ட முறையில் ஆதரவு வழங்க வேண்டும்

தமிழ் மக்­க­ளுக்கு ஒரு விடிவு வர­வேண்­டு­மாயின் தமி­ழ­கத்­தி­லுள்ள மக்­களும் தலை­வர்­களும் அனைத்துக் கட்­சி­களும் ஒன்­று­பட்ட முறையில் ஆத­ரவு வழங்க வேண்டும். அவ்­வாறு ஆத­ரவு கிடைக்­கு­மாயின் இலங்கைத் தமிழ் மக்­க­ளுக்கு விரை வில் தீர்வு கிடைத்­து­வி­டு ­மென நாம் தமி­ழக தலை­வர்­க­ளிடம் கூறி­யுள்ளோம் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­தி ரன் தெரி­வித்தார். இந்­தியப் பிர­தமர் மோடியின் அழைப்பின்பேரில் இந்­தியா சென்ற கூட்­ட­மைப்­பினர் டில்லி விஜ­யத்தை முடித்துக் கொண்டு தமிழ்­நாடு வந்துபா.ஜ.கட்­சியின் தமி­ழக தலை­வர்­களை சந்­தித்து உரை­யா­டினர்.
இது குறித்த கருத்து தெரி­வித்த போதே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில்,
நானும் தலைவர் இரா.சம்­பந்­தனும் தமி­ழ­கத்­தி­லுள்ள பார­திய ஜனதா கட்சி தலை­வர்­க­ளான டாக்டர் சௌந்­த­ராஜன், முன்னாள் தலவைர் கணேசன் மற்றும் பொன். ராதா கிருஷ்ணன் மற்றும் முக்­கி­ய­மான தலை­வர்­களை சந்­தித்து உரை­யா­டினோம். இவர்­க­ளிடம் நாம் கூறிய முக்­கி­ய­மான விடயம் என்­ன­வென்றால், தமிழ் மக்­க­ளுக்குப் பெறு­ம­தி­மிக்க தீர்வைப் பெறு­வ­தற்கு கூட்­ட­மைப்பு இந்­தியா வந்­துள்­ளது. எமது முடிவை இந்­திய மத்­திய அரசும் ஏற்றுக் கொண்­டி­ருக்­கி­றது.
ஐக்­கிய இலங்­கைக்குள் அதி­கூ­டிய அதி­காரப் பகிர்­வுடன் கூடிய தீர்­வொன்றைக் காண வேண்­டு­மென்­பதே கூட்­ட­மைப்பின் எதிர்­பார்ப்­பென நாம் இந்­திய பிர­தமர் உட்­பட்ட அனை­வ­ருக்கும் எடுத்துக் கூறி­யுள்ளோம். எமது கருத்தை இந்­திய மத்­தி­ய­ரசு ஏற்றுக் கொண்­டி­ருக்­கி­றது. இவ்­வா­றான நல்­ல­தொரு சூழ்­நி­லையில் எமது நியா­ய­மான நிலைப்­பாட்­டுக்கு தமி­ழக பா.ஜ.கட்சி உட்­பட்ட அனைத்துக் கட்­சி­களும் ஆத­ரவு தர வேண்­டு­மென்­பது தான் எங்கள் எதிர்­பார்ப்­பாகும்.
வட கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வலு­வான ஆணை­யொன்றை வழங்­கி­யி­ருக்­கி­றார்கள். அந்த ஆணையின் பிர­காரம் நாம் செயற்­பட வேண்டும். தமிழ் நாட்டு மக்கள், அங்­குள்ள கட்­சிகள், தலை­வர்கள் ஆகி­ய­வற்றின் தொடர்ச்­சி­யான ஆத­ரவு இலங்கை தமிழ் மக்­க­ளுக்கு கிடைக்க வேண்டும்.
எதிர்­கா­லத்தில் தமி­ழ­கத்தின் ஆத­ரவு பய­னு­று­தி­யுள்­ள­தாக இருக்­கு­மென நம்­பு­கின்றோம். அதற்கு ஏற்ற வகையில் நாம் உரை­யாடி வந்­துள்ளோம்.
ஜெய­ல­லி­தா­வுடன் சந்­திப்பு
இந்­தியப் பிர­த­மரை சந்­திப்­ப­தற்­கு­ரிய கோரிக்­கையை விடுத்த அதே நேரத்தில் தமி­ழக முத­ல­மைச்சர் செல்வி ஜெய­ல­லி­தா­வையும் சந்­திப்­ப­தற்­கு­ரிய வாய்ப்­பொன்றைக் கோரி­யி­ருந்தோம். இன்னும் எமக்கு அழைப்பு கிடைக்­க­வில்லை. கிடைக்கும் பட்­சத்தில் வட கிழக்கு மக்கள் எவ்­வகை அபி­லா­ஷை­களை கொண்­டி­ருக்­கி­றார்கள், அவர்கள் எப்­ப­டிப்­பட்ட ஆணையை கூட்­ட­மைப்­புக்கு தந்­தி­ருக்­கி­றார்கள் என்­பதை தெளி­வாக எடுத்துக் கூறக் காத்­தி­ருக்­கிறோம். மக்கள் எந்­த­வகை ஆணையை வழங்­கி­யி­ருக்­கின்­றார்­களோ அந்த நிலைப்­பாட்­டி­லி­ருந்து கூட்­ட­மைப்பு எக் காலத்­திலும் விலகப் போவ­தில்­லை­யென்­பதே உண்மை.
கூட்­ட­மைப்பு இந்­தி­யா­வுக்கு சென்­றமை பற்றி இலங்கை அரசு கடும் சினம் கொண்­டி­ருக்­கி­றது என்­பது பற்றி நாம் நன்­றாக அறிவோம். இலங்கை அரசு அடிக்­கடி இந்­தி­யா­வுக்கு ஓடிப்போய் பல்­வேறு வாக்­கு­று­தி­களை அளித்­தது பற்றி உலகம் அறியும். இந்­தி­யா­வுக்கு சென்று வாக்­கு­று­தி­களை அளித்­து­விட்டு வாருங்கள் என்று இலங்கை அர­சுக்கு கூட்­ட­மைப்பு ஒரு போதும் கூற­வில்லை.
முன்னாள் பிர­தமர் மன்­மோகன் சிங் அவர்­களை நாம் சந்­திப்­ப­தற்கு முன்பே ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ சந்­தித்து உரை­யா­டினார். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி சந்தித்ததன் பின்பே நாம் போய் சந்தித்து வந்துள்ளோம். அரசு ஓடியோடிப் போய் இந்திய தலைவர்களை சந்தித்து விவகாரங்களை விளக்குகிறது. ஆனால், பொய்யாகவே சொல்லிவிட்டு வருகிறது. அப்படி இருக்கும்போது நாங்கள் போய் உண்மை நிலைமைகளை விளக்குவதில் எந்தவிதமான தவறும் இல்லையென்று நினைக்கிறேன்.

READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர்களின் கல்வியை முன்னேற்ற உழைக்க வேண்டும். முரளிதரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வியை அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டும். அதற்கான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் நான் ஏற்படுத்தித் தருவேன். மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் கல்வியை ஒரு பிரசாரமாக முன்னெடுத்து தமிழர்களின் கல்வியை முன்னேற்ற உழைக்க வேண்டும். என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
.
20 கோவில்கள், 15 விளையாட்டுக்கழங்கள், 14 பாடசாலைகள், 02 பிரதேச சபைகள் ஆகியவற்றின் அபிவிருத்திக்களுக்காக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 300 இலட்சம் ரூபாய் நிதிக் கையளிப்பு  மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (30) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 
‘எதிர்த்தரப்பு அரசியல் செய்வதால் தமிழ் மக்களுக்கு எதையும் செய்ய முடியாது. அரசாங்கத்திலிருந்தால் மாத்திரமே  அபிவிருத்திகளைச்  செய்யமுடியும்.
இன்று வடக்கு, கிழக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் நானுமே தமிழ் அமைச்சர்களாக இருக்கின்றோம். இன்னும் பல தமிழ் அமைச்சர்கள், அரசாங்கத் தரப்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்களாயின் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ளமுடியும்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கோடிக்கணக்கான ரூபாய் நிதியில் பல அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசம் பாரிய அபிவிருத்திகளை கண்டுவருகின்றது.

இன்னும் 10 வருடங்களில் படுவான்கரைப் பிரதேசத்தை மட்டக்களப்பு நகர் போன்று மாற்றியமைப்பேன். அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றேன். படுவான்கரைப் பிரதேசத்தில் மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.  அனைத்து கிராமங்களுக்கும் மின்னிணைப்பு வழங்கப்படுகின்றது.
மேலும், படுவான்கரை மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி வருகின்றேன். அம்பாறையிலுள்ள 02 குளங்களை புனரமைத்து அந்தக் குளங்களினூடாக இந்த மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள தனிக் குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான நிதியுதவியையும் நான் வழங்கியுள்ளேன்.
இவற்றையெல்லாம் அரசாங்கத்திலிருந்தால் மாத்திரமே செய்ய முடியும். எதிர்த்தரப்பிலிருந்து அறிக்கைகள் விடுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வியை அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டும். அதற்கான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் நான் ஏற்படுத்தித் தருவேன். மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் கல்வியை ஒரு பிரசாரமாக முன்னெடுத்து தமிழர்களின் கல்வியை முன்னேற்ற உழைக்க வேண்டும்.
மாணவர்களின் கல்விக்குத் தேவையான அனைத்து வசதி வாய்ப்புக்களும் இன்று ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. வாகரையில் விஞ்ஞான தொழில்நுட்பப் பாடசாலையொன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்விமான்கள், புத்திஜீவிகள், பொது நிறுவனங்கள் அனைத்தும் கல்வியை முன்னேற்றப் பாடுபடுவதுடன், அதற்கான பிரசாரத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
அபிவிருத்திகள் 02 வகைப்படும். கட்டுமான அபிவிருத்தி. மற்றையது தனி நபர் அபிவிருத்தியாகும். இதில் போதியளவு உட்கட்டுமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனிப்பட்ட குடும்பங்களின் மாத வருமானத்தை அதிகரித்து தனி நபர்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்காக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும்.
அந்த வகையில், ‘வாழ்வின் எழுச்சி’ திட்டத்தினூடாக தனி நபர்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யத் தேவையான வசதி வாய்ப்புக்கள் இன்று ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. உட்கட்டுமான அபிவிருத்தியும் தனி நபர் அபிவிருத்தியும் ஒன்றாக முன்னேற்றமடையும்போதே, நாடு செழிப்படையும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண்கள் அமைப்புக்களுக்கு 262 இலட்சம் ரூபாய் வழங்கினேன். அதனூடாக பெண்களின் வாழ்வாதரம் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 30 வருடங்களாக யுத்தத்தினால் இழந்த பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்’ என்றார்.
READ MORE | comments

இந்தியாவுடனான உறவில், அரசாங்கத்தைவிட கூட்டமைப்பு வெகுதூரம் முன்னேறிச் சென்றுள்ளது

கூட்டமைப்பின் இந்திய விஜயம் குறித்து அரசியல் விமர்சகரும் பேராசிரியருமான தயான் ஜயதிலக சிங்கள ஊடகமொன்றிடம் தெரிவித்திருந்த கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினால் இலங்கை இந்தியாவின் சவாலுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது.  தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தாம் பேசுவதில்லையென இலங்கை அரசாங்கம் கூறியது. அவர்கள் எம்மிடம் முழங்கால் மடித்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருவார்கள் என்ற அகம்பாவத்துடன் அரசாங்கம் இருந்தது.
தென் ஆபிரிக்க பிரதி ஜனாதிபதி சிரில் ரமபோஷ யாழ்ப்பாணத்துக்குச்  சென்று முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்தார். இதன்பிறகு இந்திய வெளிவிவகார அமைச்சர் முதலில் கூட்டமைப்புடன் சந்திப்பை மேற்கொண்டு விட்டு அடுத்து இந்திய பிரதமரைச் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் புகைப்படத்தைப் பார்க்கும் போது இரு நாடுகளுக்கிடையில் மேற்கெள்ளப்பட்ட பேச்சுவார்த்தை போன்றுதான் தோன்றியது. இந்தியாவிடமிருந்த வரவேற்பும் இதற்கேற்றாற் போல் தான் அமைந்திருந்தது.
இந்த இடத்தில் தான் இலங்கை அரசாங்கத்தின் தலக்கணம் பிடித்த தலைக்கு பிரதமர் மோடி ஐஸ் தண்ணீர் ஊற்றினார். இலங்கையில் தமிழர்கள் சம உரிமை, நீதி, கௌரவம், சுயமரியாதையுடன் வாழ்வதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். இலங்கை அரசு உள்ளிட்ட அங்குள்ள அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட்டு, ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப்படையில் தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் ஆக்கபூர்வமான தீர்வு காணவேண்டும்.  இவையெல்லாம் இலங்கை அரசியல் சாசனத்தின் 13–வது  திருத்தச் சட்டத்தின்படி நடைபெற வேண்டும் என பேச்சுவார்த்தையின் பின்னர் பிரதமர் மோடி விடுத்திருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்திய அரசாங்கத்திடம் இவ்வளவு தூரம் வரவேற்புக் காணப்படுவதற்கு அரசாங்கத்தின் தவறுதான் காரணம்.
மோடி பதவியேற்பு நிகழ்வில் இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா மோடியிடம் தெரிவித்திருந்தார். இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாத மோடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து வந்தார்.
அக்கால கட்டத்தில் கூட்டமைப்பு இந்தியாவினால் கணக்கிலெடுக்கப்படாது இருந்தது. அது எமக்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக காணப்பட்டது. இந்த நேரத்தில் ஜனாதிபதியிடம் மோடி 13 ஆம் திருத்தச் சட்டம் பற்றியும் நினைவுபடுத்தியிருந்தார். இருப்பினும், 13 ஆம் திருத்தச் சட்டம் பற்றி இலங்கை அரசாங்கம் விடுத்திருந்த உத்தியோகபுர்வ அறிக்கையில்,  பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தமை பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
அன்றிலிருந்து இலங்கையுடன் கசப்புணர்வொன்று இந்தியாவுக்கு உருவாகியதைக் காணலாம். இதன்பின்னர், அமைச்சுப் பதவியொன்றாவது வழங்கப்படாத, தமக்கு விசுவாசமான சுப்பிரமணியம் ஸ்வாமி என்பவரை அழைத்துவந்து பாதுகாப்பு மாநாட்டில் பேசவிட்டது அரசாங்கம். இவர் பேசிய விடயங்களை இந்தியாவின் நிலைப்பாடாக நம்ப ஆரம்பித்தது. இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பது அந்நாட்டுப் பிரதமரின் நிலைப்பாடாகும். அது சுப்பிரமணியம் ஸ்வாமியின் நிலைப்பாடு அல்ல என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்திய அரசாங்கத்துடன் மேற்கொண்ட இவ்வாறான வெளியுறவுக் கொள்கையினால் இலங்கை அரசாங்கம் செல்ல முடியாத தூரத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னேறிச் சென்றுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் மோடியை மாத்திரமல்ல அவர்களின் விஜயத்தின் போது சந்தித்துள்ளனர். அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகரையும்தான். இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு நபரும் பாதுகாப்பு அதிகாரியை இதுவரையில் சந்திக்க வில்லை. அயல் நாட்டுடன் தொடர்புகளைப் பேணுவதில் உள்ள அசமந்தப் போக்கையே இந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
READ MORE | comments

மட்டக்களப்பில் பிள்ளையானின் பெயரில் பணமோசடி 3பேர் கைது

முன்னாள் முதலமைச்சர் ச.சந்திரகாந்தனின் பெயரைப்ப் பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளிடம் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நபர்கள் இன்று பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டடுள்ளனர்
மாகாண சபை உறுப்பிரின் மாதிரிப் போலிக் கையேட்டினைப் பயன்படுத்தி 7 இளைஞர்களிடம் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு (20 இலட்சம்) அமைச்சர் குமாரவெல்கம அவர்களின் மூலம் வேலைவாய்ப்பினைப் பெற்றுத்தருவதாகக் கூறி கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு போலி நியமனக் கடிதம் வழங்கி மிகுதிப் பணத்தையும் பெற்றுக்கொண்டனர்.
நியமனம் பெற்றவர்கள் மட்டக்களப்பிலுள்ள சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குச் சென்றபோது தாம் ஏமாற்றப்பட்ட விடயம்;தெரியவந்ததையடுத்து மாகாணசபை உறுப்பினர் சந்திரகாந்தனின்கவனத்திற்கு அவர்கள் கொண்டுவந்தனர்.
இவர்களிடம் வேலைபெற்றுத் தருவதாக மட்டக்களப்பை  சேர்ந்த தம்பிராசா பாலசிங்கம் (சிறி)மற்றும் மட்டக்களப்பு நாவற்குடாவில்   வசிக்கும் ஆசிரியரான குமார் குமரேஷன் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளதுடன் ஏறாவூரைச் சேர்ந்த கரீம்   என்பவர் இவ் மோசடிச் சம்பவத்தின் முக்கிய நபராவார்.
ஆயுள்வேத வைத்தியசாலை இரயில்வே ரெலிகொம் ஆகிய இ.டங்களில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி ஒவ்வொரு நபர்களிடமிருந்து சுமார் 2 இலட்சம் தொடக்கம் 4 இலட்சம் வரையிலான பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு  மாவட்ட மக்கள் இச்சம்பவம் பற்றி மிகவும் விழிப்புடன் செயற்படுமாறு மாகாண சபை உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அவரது பெயரைக் களங்கப் படுத்தும் இவ்வாறான
சும்பவங்கள் பற்றி அறிந்தால் தனது கவனத்திற்கு கொண்டு வருமாறு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். .
READ MORE | comments

யுத்தப் பாதிப்புக்களைப் பற்றியே தொடர்ந்தும் பேசி நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது

இனியும் கடந்த கால யுத்தப் பாதிப்புக்களைப் பற்றியே தொடர்ந்தும் பேசி நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என செங்கலடிப் பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தெரிவித்தார்.
செங்கலடிப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கொடுவாமடுக் கிராமத்தில் வறுமை நிலையில் பெண்கள் தலைமை தாங்கும் ஐந்து குடும்பங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை (29) ஒரு குடும்பத்திற்கு தலா 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உள்  வளர்ப்பு ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 
கடந்த கால யுத்தப் பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு ஒவ்வொரு குடும்பமும் மிக வேகமாகச் சிந்திக்க வேண்டும். அதற்காகவே முஸ்லிம் எயிட் நிறுவனமும் இன மத பேதமில்லாது நீடித்து நிலைக்கக் கூடிய வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றது.
தற்போது ஆடு மாடுகளுக்கு நோய்  ஏற்படுவதன் காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து ஆடுகளை வாங்க முடியாத நிலையில், சிறந்த ஆரோக்கியமான ஆடுகளை உங்களுக்கு வாங்கித் தந்திருக்கின்றது முஸ்லிம் எயிட் நிறுவனம்.இந்தப் பகுதியிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு மிகப் பொருத்தமான மிருக வளர்ப்பு ஆடுகள்தான்.
இந்த உதவிகளைப் பயன்படுத்தி நீங்கள் முன்னேறும் வழிவகைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்பொழுதுதான் இன்னும் பலர் உங்களின் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் கண்டு இன்னுமின்னும் உதவ முன்வருவார்கள்.முன்னேறுபவர்களுக்கு உதவ அரசாங்கமும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் எந்நேரமும் தயாராகவே இருந்து கொண்டிருக்கின்றன.
மேலும், வாழ்வின் எழுச்சித் திட்டத்தினூடாக வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்கள் தமது வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்காக உதவும் நோக்கில் தான் முஸ்லிம் எயிட் நிறுவனத்தையும் எமது ஏறாவூர்ப் பற்றுப் பிரதேசத்திற்கு நாம் கொண்டு வந்தோம்.
எனவே, அந்த வகையில் எமது பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைப்பட்ட மக்களின் வாழ்வின் எழுச்சிக்காக பல திட்டங்களை முன்னெடுத்து வரும் முஸ்லிம் எயிட் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்  என தெரிவித்தார்
READ MORE | comments

தமிழரசுக் கட்சியின் கல்குடாத் தொகுதிக் கிளை தலைவராக கி.துரைராஜசிங்கம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கல்குடாத் தொகுதிக் கிளைபுனரமைப்பு கூட்டம் வாழைச்சேனை லயன்ஸ் கழக மண்டபத்தில் இன்று சனிக்கிழமை மாலைஇடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கல்குடாத் தொகுதி கிளை தலைவருமானகி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்புபாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா,
பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, மட்டக்களப்புமாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சேயோன்,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆர்வளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்குடாத்தொகுதிக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
நிர்வாகத் தெரிவு கல்குடாத் தொகுதியில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள்
நான்கினையும் உள்ளடக்கியதாக பகிர்வு செய்யப்பட்டது. அத்துடன் நிர்வாக
உறுப்பினர்கள் ஒவ்வொரு கிராமங்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.
அந்தவகையில் தலைவராக மாகாண சபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம், உப
தலைவர்களாக  பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் க.சௌந்தரராஜன்,செயலாளராக க.நல்லரெட்ணம், உப செயலாளராக திருமதி.மு.பொன்மணி, பொருளாளராகப.சிவநேசன் மற்றும் உறுப்பினர்களாக ந.சிவனடியான், ஜி.கேசவமேனன், கி.சேயோன்,ப.நவதீபன், க.கமலநேசன், த.சந்திரகாசன், இ.பற்குணன், எஸ்.சுதர்சன்,ஆ.பாஸ்கரன், வே.குகதாசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





READ MORE | comments

தண்ணீர் வாளிக்குள் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாபமாக மரணித்துள்ளது

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐயங்கேணி தமிழ் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (29) மாலை தண்ணீர் வாளிக்குள் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாபமாக மரணித்துள்ளது என திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.
திருமால் பவித்திரன் என்ற குழந்தையே, தனது வீட்டு குளியலறையில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியினுள் தலை கீழாக விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
குளியலறையில் உடுப்புகள் கழுவிக்கொண்டிருந்த இக்குழந்தையின் தாயாரர் தனது ஒரு மாத வயதையுடைய மற்றக் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதற்காக குளியலறையை விட்டு சென்றுள்ளார்.

அதன் பின்னர் தாயைத் தேடி இக்குழந்தை குளியலறைக்கு வந்த நிiயிலே தண்ணீர் வாளிக்குள் தவறி வீழ்ந்துள்ளது. இக்குழந்தை நீர் நிரம்பிய வாளிக்குள் தலை கீழாக விழுந்து கிடப்பதை இவரது சகோதரியின் ஐந்து வயதுச் சிறுவன் கண்டு விட்டிலிருந்தவர்களிடம் கூறியுள்ளான்.

அதன் பின்னர் தாய் ஓடிச்சென்று குழந்தையை நீர்வாளியிலிருந்து வெளியே எடுத்த பொழுது குழந்தை மூர்ச்சித்துப் போய் இருந்துள்ளது.
உடனடியாக அருகிலுள்ள ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு குழந்தையை எடுத்துச் செல்லும் போது வழியிலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.
ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
READ MORE | comments

மட்டக்களப்பு பழுகாமம் மாவேற்குடா ஆலய சித்திரத்தேரோட்டம்.

Saturday, August 30, 2014

மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் கிழக்கே சைவமும் தமிழும் சிறந்தோங்கும் சிங்காரக்கண்டி என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் பதியாம் பழுகாமத்தினிலே மாவேற்குடையானின் பஞ்சமுகம் தாங்கிய சித்திரத்தேரோட்டம் மிகவும் பக்திபூர்வமாக நேற்று(29) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதுடன் பாரளுமன்ற உறுப்பினரான பொன்.செல்வராசா அவர்களும் கலந்து கொண்டார்கள்.
















READ MORE | comments

பனை அபிவிருத்தி சபையின் கண்காட்சி கூடம் திறப்பும் சுயதொழில் உதவி வழங்கும் நிகழ்வும்


பனை அபிவிருத்திச் சபையின் கண்காட்சியும் சுயதொழில் வாய்ப்புக்கான உதவி வழங்கும் நிகழ்வும் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.


பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி; அபிவிருத்தியமைச்சின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட பனம்பொருட்கள் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக மாவட்டச் செயலகத்தின் வழிகாட்டலில்  இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாரம்பரியக் கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள பனை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும் இக்கண்காட்சியின் ஆரம்ப வபைவம் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரட்னம், மற்றும் பாரம்பரியக் கைத்தொழில் அமைச்சின் தேசிய இணைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வி க.தங்கேஸ்வரி, பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிழக்கு மாகாண முகாமையாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் சந்தானம் மற்றும் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளர் பி.குணரெட்னம், செங்கலடி பிரதேச செயலாளர் எஸ்.உதயசிறி,மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட பனை அபிவிருத்திச் சபை அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது திறந்துவைக்கப்பட்ட கண்காட்சியில் பனம் பொருளினால் உற்பத்தி செய்யப்பட்ட பல உற்பத்திப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பனம்பொருள் உற்பத்திகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பனை உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சுமார் 200 பேருக்கான வட்டியில்லா கடன் திட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியினால் வாழ்வாதார மேம்பாட்டு கடன்களும் வழங்கிவைக்கப்பட்டன.

பனை அபிவிருத்தி சபையினால் நடாத்தப்பட்டுவந்த பனை உற்பத்தி தொடர்பான பயிற்சிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு தொழில் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

































READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |