Home » » தமிழகத்திலுள்ள மக்களும் தலைவர்களும்அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்ட முறையில் ஆதரவு வழங்க வேண்டும்

தமிழகத்திலுள்ள மக்களும் தலைவர்களும்அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்ட முறையில் ஆதரவு வழங்க வேண்டும்

தமிழ் மக்­க­ளுக்கு ஒரு விடிவு வர­வேண்­டு­மாயின் தமி­ழ­கத்­தி­லுள்ள மக்­களும் தலை­வர்­களும் அனைத்துக் கட்­சி­களும் ஒன்­று­பட்ட முறையில் ஆத­ரவு வழங்க வேண்டும். அவ்­வாறு ஆத­ரவு கிடைக்­கு­மாயின் இலங்கைத் தமிழ் மக்­க­ளுக்கு விரை வில் தீர்வு கிடைத்­து­வி­டு ­மென நாம் தமி­ழக தலை­வர்­க­ளிடம் கூறி­யுள்ளோம் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­தி ரன் தெரி­வித்தார். இந்­தியப் பிர­தமர் மோடியின் அழைப்பின்பேரில் இந்­தியா சென்ற கூட்­ட­மைப்­பினர் டில்லி விஜ­யத்தை முடித்துக் கொண்டு தமிழ்­நாடு வந்துபா.ஜ.கட்­சியின் தமி­ழக தலை­வர்­களை சந்­தித்து உரை­யா­டினர்.
இது குறித்த கருத்து தெரி­வித்த போதே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில்,
நானும் தலைவர் இரா.சம்­பந்­தனும் தமி­ழ­கத்­தி­லுள்ள பார­திய ஜனதா கட்சி தலை­வர்­க­ளான டாக்டர் சௌந்­த­ராஜன், முன்னாள் தலவைர் கணேசன் மற்றும் பொன். ராதா கிருஷ்ணன் மற்றும் முக்­கி­ய­மான தலை­வர்­களை சந்­தித்து உரை­யா­டினோம். இவர்­க­ளிடம் நாம் கூறிய முக்­கி­ய­மான விடயம் என்­ன­வென்றால், தமிழ் மக்­க­ளுக்குப் பெறு­ம­தி­மிக்க தீர்வைப் பெறு­வ­தற்கு கூட்­ட­மைப்பு இந்­தியா வந்­துள்­ளது. எமது முடிவை இந்­திய மத்­திய அரசும் ஏற்றுக் கொண்­டி­ருக்­கி­றது.
ஐக்­கிய இலங்­கைக்குள் அதி­கூ­டிய அதி­காரப் பகிர்­வுடன் கூடிய தீர்­வொன்றைக் காண வேண்­டு­மென்­பதே கூட்­ட­மைப்பின் எதிர்­பார்ப்­பென நாம் இந்­திய பிர­தமர் உட்­பட்ட அனை­வ­ருக்கும் எடுத்துக் கூறி­யுள்ளோம். எமது கருத்தை இந்­திய மத்­தி­ய­ரசு ஏற்றுக் கொண்­டி­ருக்­கி­றது. இவ்­வா­றான நல்­ல­தொரு சூழ்­நி­லையில் எமது நியா­ய­மான நிலைப்­பாட்­டுக்கு தமி­ழக பா.ஜ.கட்சி உட்­பட்ட அனைத்துக் கட்­சி­களும் ஆத­ரவு தர வேண்­டு­மென்­பது தான் எங்கள் எதிர்­பார்ப்­பாகும்.
வட கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வலு­வான ஆணை­யொன்றை வழங்­கி­யி­ருக்­கி­றார்கள். அந்த ஆணையின் பிர­காரம் நாம் செயற்­பட வேண்டும். தமிழ் நாட்டு மக்கள், அங்­குள்ள கட்­சிகள், தலை­வர்கள் ஆகி­ய­வற்றின் தொடர்ச்­சி­யான ஆத­ரவு இலங்கை தமிழ் மக்­க­ளுக்கு கிடைக்க வேண்டும்.
எதிர்­கா­லத்தில் தமி­ழ­கத்தின் ஆத­ரவு பய­னு­று­தி­யுள்­ள­தாக இருக்­கு­மென நம்­பு­கின்றோம். அதற்கு ஏற்ற வகையில் நாம் உரை­யாடி வந்­துள்ளோம்.
ஜெய­ல­லி­தா­வுடன் சந்­திப்பு
இந்­தியப் பிர­த­மரை சந்­திப்­ப­தற்­கு­ரிய கோரிக்­கையை விடுத்த அதே நேரத்தில் தமி­ழக முத­ல­மைச்சர் செல்வி ஜெய­ல­லி­தா­வையும் சந்­திப்­ப­தற்­கு­ரிய வாய்ப்­பொன்றைக் கோரி­யி­ருந்தோம். இன்னும் எமக்கு அழைப்பு கிடைக்­க­வில்லை. கிடைக்கும் பட்­சத்தில் வட கிழக்கு மக்கள் எவ்­வகை அபி­லா­ஷை­களை கொண்­டி­ருக்­கி­றார்கள், அவர்கள் எப்­ப­டிப்­பட்ட ஆணையை கூட்­ட­மைப்­புக்கு தந்­தி­ருக்­கி­றார்கள் என்­பதை தெளி­வாக எடுத்துக் கூறக் காத்­தி­ருக்­கிறோம். மக்கள் எந்­த­வகை ஆணையை வழங்­கி­யி­ருக்­கின்­றார்­களோ அந்த நிலைப்­பாட்­டி­லி­ருந்து கூட்­ட­மைப்பு எக் காலத்­திலும் விலகப் போவ­தில்­லை­யென்­பதே உண்மை.
கூட்­ட­மைப்பு இந்­தி­யா­வுக்கு சென்­றமை பற்றி இலங்கை அரசு கடும் சினம் கொண்­டி­ருக்­கி­றது என்­பது பற்றி நாம் நன்­றாக அறிவோம். இலங்கை அரசு அடிக்­கடி இந்­தி­யா­வுக்கு ஓடிப்போய் பல்­வேறு வாக்­கு­று­தி­களை அளித்­தது பற்றி உலகம் அறியும். இந்­தி­யா­வுக்கு சென்று வாக்­கு­று­தி­களை அளித்­து­விட்டு வாருங்கள் என்று இலங்கை அர­சுக்கு கூட்­ட­மைப்பு ஒரு போதும் கூற­வில்லை.
முன்னாள் பிர­தமர் மன்­மோகன் சிங் அவர்­களை நாம் சந்­திப்­ப­தற்கு முன்பே ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ சந்­தித்து உரை­யா­டினார். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி சந்தித்ததன் பின்பே நாம் போய் சந்தித்து வந்துள்ளோம். அரசு ஓடியோடிப் போய் இந்திய தலைவர்களை சந்தித்து விவகாரங்களை விளக்குகிறது. ஆனால், பொய்யாகவே சொல்லிவிட்டு வருகிறது. அப்படி இருக்கும்போது நாங்கள் போய் உண்மை நிலைமைகளை விளக்குவதில் எந்தவிதமான தவறும் இல்லையென்று நினைக்கிறேன்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |