மேலும் 4,221 பேருக்கு கொரோனா உறுதி

Tuesday, August 31, 2021

 


கொரோனா தொற்று உறுதியான மேலும் 4,221 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 440,302 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,164பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 374,156 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் (30) கொரோனா தொற்றினால் 194 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,185 ஆக அதிகரித்துள்ளது.

READ MORE | comments

ஒருபோதும் ஏற்கோம் -பணிபகிஸ்கரிப்பு தொடரும் - ஜோசப் ஸ்டாலின் அறிவிப்பு


ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு 'கோரப்பட்ட தீர்வுகளை வழங்காமல்' செப்ரெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு ரூ. .5,000 கொடுப்பனவை வழங்குவதற்கான முன்மொழிவு 'தெளிவாக ஆசிரியர்களை ஏமாற்றுவது' என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தென்னலங்கை ஊடகமொன்றுக்கு கருத்த தெரிவித்த அவர்,​​

ஆசிரியர் துணை அதிபர் அறிக்கையில் கூட குறிப்பிடப்படாத இந்த முன்மொழிவை ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் ஏற்கவில்லை என்றும், அவர்களின் திட்டங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.

இந்த ரூ.5000 பணிக்கு வருபவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறதா?

"நான் வேலைக்கு செல்லவில்லை. பாடசாலைகள் இன்னும் தொடங்குவதாக தெரியவில்லை. , நாங்கள் நிச்சயமாக எங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம். நாங்கள் 52 நாட்கள் இருந்தோம், மேலும் 100 நாட்களுக்கு செல்லலாம்.

ஆசிரியர்-முதல்வர் போராட்டத்தை ஏமாற்றுவதற்காகவே ரூ .5,000 கொடுப்பனவு வழங்கப்படுகிறதா?

"இது ஒரு முழுமையான ஏமாற்று வேலை. இது தெளிவாக ஆசிரியர்களை ஏமாற்றும் செயல்.

" ரூ .5,000 சிறப்பு கொடுப்பனவு கொடுக்கும் நடவடிக்கை உங்கள் போராட்டத்திற்கு சாதகமான பதிலா?

"நாங்கள் இதை ஏற்கவில்லை. ரூ. 5,000 கொடுப்பனவு கதையை நாங்கள் ஏற்கவில்லை. நாங்கள் ஏற்காததால் அது பொருந்தாது. துணைக்குழு தீர்மானத்தில் அப்படி எதுவும் இல்லை, அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் இருந்து கட்டம் கட்டமாக நிவாரணம் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுவரை, செயலில் உள்ள தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை கைவிடுமா?

"சுபோதனி குழுவின் அறிக்கையை அமைச்சரவை துணைக்குழு அறிக்கையில் சேர்க்க நாங்கள் முன்மொழிந்தோம். இதை ஒதுக்கி வைத்து 2022 பட்ஜெட்டில் பகுதிகளாக செயல்படுத்தப்படும் என்று கூறுவது தவறு என்று கல்வி அமைச்சரிடம் கேட்டோம். . "எங்கள் கோரிக்கையை செயல்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். அமைச்சு துணைக்குழுவும் சுபோதனி அறிக்கையைப் பாராட்டுகிறது. ஆசிரியர்-அதிபர் சம்பள பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய ஒரு நடவடிக்கையாக, இன்று (ஓகஸ்ட் 31) அமைச்சரவையின் முடிவுகளை அறிவிப்பதில், ரூ. ரூ .5000 / - சிறப்பு கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

READ MORE | comments

மருத்துவமனை பிணவறை, குளிரூட்டிகளில் சவப்பெட்டிகள் நிறைந்த மோசமான நிலை!!

 


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிணவறை மற்றும் குளிரூட்டி பெட்டி என்பவற்றில் சவப்பெட்டிகள் நிறைந்து காணப்படுகின்றன.

கொவிட் தொற்றுநோயால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருவாய் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டில் 10 நாட்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாகியுள்ள நிலையில், தொற்றுப் பரவல் குறைந்திருக்கும் என்று டாக்டர் ஹேமந்த ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

READ MORE | comments

நாடு பூராவும் அவசரகால நிலை பிரகடனம்

 


அவசரகால நிலை நாடு பூராவும் பிரகடனப்படப்படுத்த பட்டிருக்கிறது. இது நேற்று நள்ளிரவிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது

READ MORE | comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சி...!!

 


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.


இதற்கமைய மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 204.89 ரூபாயாக அதிகரித்துள்ளது.
READ MORE | comments

இறுதி நேரத்தில் தலிபான்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா - தாக்கி அழிக்கப்பட்ட 73 போர் விமானங்கள்

 


காபூலில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் அங்குள்ள அமெரிக்காவின் 73 போர் விமானங்கள், நவீன ஏவுகணை தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை செயலற்றதாக்கி விட்டதாக, அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி கென்னத் மெக்கன்சி தெரிவித்துள்ளார்.

இந்த விமானங்களால் மீண்டும் பறக்க முடியாது என்றும் தலிபான்களால் அவற்றை இயக்கவும் முடியாது என்றும் அவர் கூறினார்.

காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகளில் சுமார் 6 ஆயிரம் அமெரிக்க துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டனர் என கூறிய அவர், அவர்கள் கடைசியாக நாடு திரும்புவதற்கு முன்னர் தலா 10 லட்சம் டொலர் மதிப்புள்ள 70 இராணுவ ஆயுத கவச வண்டிகளையும், 27 Humvees இராணுவ டிரக்குகளையும் செயலற்றதாக மாற்றி விட்டனர் என தெரிவித்தார்.

அதே நேரம், காபூலில் இருந்து புறப்படும் வரை பாதுகாப்பு தேவை என்பதால், ரொக்கெட் எதிர்ப்பு கருவியான C-RAM மட்டும் அதே நிலையில் விட்டு வைக்கப்பட்டு அதன் பின்னர் செயலற்றதாக மாற்றப்பட்டதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும் இறுதி நேரத்தில் அமெரிக்க இராணுவத்தின் இச் செயல்பாடுகள் தலிபான் தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன

READ MORE | comments

அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் அரசு 3வது தடுப்பூசி?

 


அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


அது தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவிற்கு கடித மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமந்த ஆனந்த அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்: அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆறு முக்கிய விடயங்களை முன்வைத்து சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கிணங்க நாட்டை மீண்டும் திறப்பதானால் கண்டிப்பாக அனைத்து சுகாதார பிரிவுகளும் பலப்படுத்தப்பட வேண்டும்.

சுகாதாரத் துறை ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் சிலர் மரணமடைந்தும் உள்ளனர்.

எந்தளவு ஆஸ்பத்திரிகளில் இருந்தாலும் நோயாளிகளை பராமரிப்பதற்கு ஊழியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது.

சுகாதாரத்துறை ஊழியர்களின் பிள்ளைகளும் மிகுந்த எச்சரிக்கை நிலையில் உள்ளனர். அதனைக் கவனத்திற் கொண்டு சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியைப்பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
READ MORE | comments

நாளையும் மறுதினமும் தபாலகங்கள் திறப்பு

 


ஓகஸ்ட் மாதத்துக்கான முதியோர் கொடுப்பனவுகள் மற்றும் பிற பொது உதவி கொடுப்பனவுகள் உள்ளிட்டவை நாளை (01) மற்றும் நாளை மறுதினம் (02) வழங்கப்படும் என தபால் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட இரண்டு நாட்களில் திறந்திருக்கும் என்றும் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

கொடுப்பனவுகளைப் பெறும்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, தபால் அலுவலகங்களுக்கு வந்து தொடர்புடைய உதவியைப் பெறுமாறு தபால் தலைமையகம் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளது.
READ MORE | comments

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்


உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெயியிட்டுள்ளன.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. தற்பொது தங்கத்தின் விலை 1,813 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அண்மைய கொரோனா பாதிப்பு காரணமாக உலகளவில் தங்கத்தின் விலை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை மதிப்பிடப்படும்.

ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு பவுண் ஆகும். இது 24 கரட் சொக்கத் தங்கமாகும்

READ MORE | comments

இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி - அரசாங்கத்தின் கடுமையான உத்தரவு

 


கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசு செலவினங்களை கடுமையாக கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கொவிட் தொற்றுநோயால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருவாய் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்,

இது இந்த ஆண்டு தொடர்ச்சியான செலவுகளை ஈடுசெய்ய கூட போதாது. இந்த நிலையில், அரசு நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், இதுவரை தொடங்கப்படாத திட்டங்கள், கொள்முதல், கட்டடங்கள் கட்டுதல், கட்டடங்களை சீரமைத்தல் போன்றவற்றை நிறுத்தி வைக்குமாறு நிதி அமைச்சகம் அமைச்சக செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை நியமனக் கடிதங்கள் வழங்கப்படாத பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை நிறுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. நலன்புரி நடவடிக்கைகளுக்காக அடையாளம் காணப்பட்ட பயனாளிகளின் பட்டியலை மறுபரிசீலனை செய்யவும் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மட்டுமே மானியத்தை கட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமைச்சகத்தின் செயலாளர்கள் மற்றும் துறைகளின் தலைவர்களின் ஒப்புதலுடன், நிதி அமைச்சகம் சம்பளமில்லாத கொடுப்பனவுகள் மற்றும் செலுத்தப்பட்ட பில் தீர்வுகளை மதிப்பாய்வு செய்து உண்மையிலேயே சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அமைச்சகங்களின் செயலாளர்கள் தங்கள் நிறுவனங்களின் அலுவலர்களுக்கு செலுத்தப்படும் எரிபொருள் கொடுப்பனவுகளை வட்டார அடிப்படையில் வந்து சேரும் திகதியில் மட்டுமே செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

செலவினங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சேமிக்கப்படும் நிதியின் அளவு குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சகம் செயலாளர்களிடம் கோரியுள்ளது

READ MORE | comments

கொரோனா மரணங்களில் 20 சதவீதமானவை வைத்தியசாலைக்கு வெளியே இடம்பெறுகின்றன- இலங்கை மருத்துவ சங்கம்

 


கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்களில் 20 சதவீதமானவை வைத்தியசாலைக்கு வெளியே இடம்பெறுவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.


இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்களில் 20 சதவீதமானவை வீட்டில் அல்லது கொரோனா தொற்றாளர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இடம்பெறுவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில், தற்போது ஒரு மணித்தியாலத்துக்கு 9 மரணங்கள் இடம் பெறுவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

கொழும்பு பகுதியில் அதிகளவில் டெல்டா திரிபு பரவி வருகின்றது என்றும், குறித்த தொற்றால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்ளே அதிகளவில் உயிரிழப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

ஊரடங்குச்சட்டம் நீடிக்கப்படுமா? இன்று அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

 


நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிப்பதா? இல்லையா? என்பது பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை என்று அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு கொழும்பில் இன்று காலை நடந்தது. இதில் உரையாற்றிய அமைச்சரவை இணைப் பேச்சாளர் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரண இதனைத் தெரிவித்தார்.

அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை 14ஆம் திகதிவரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் அதுபற்றி நேற்று நடந்த அமைச்சரவை சந்திப்பில் பேசப்படவே இல்லை என அமைச்சர் தெரிவித்தார்

READ MORE | comments

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

 


சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளை தவிர்த்து பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தி வருவதாக அறியமுடிகிறது.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சுக்கும், பரீட்சைகள் திணைக்களத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்று வருவதாக கல்வியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கலந்துரையாடலில், க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய 622,000 மாணவர்களில், 170,000இற்கும் குறைவான மாணவர்களே, சங்கீதம், நடனம் மற்றும் சித்திரம் போன்ற செயன்முறைப் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ளனர்.

எனவே, செயன்முறைப் பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கவுள்ள மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு, ஏனைய மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை தாமதப்படுத்துவதும் செயற்பாடானது, அடுத்துவரும் பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல் சிக்கல் நிலைமையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகின்றமையினால், உயர்தர கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண சாதாரண தர பரீட்சை பரீட்சைகள் நிறைவு பெற்று, 6 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறாததால் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 15 பேர் சுயதனிமையில்

 


கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட குடாஓயா பிரதேத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட 15 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


நேற்றைய தினம் (30) இத்திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய, திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த 15 பேரும் எச்சரிக்கப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
READ MORE | comments

மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி - கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

 




நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் வேகமும் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி செயற்றிட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி முதற்கட்டமாக, கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு செலுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது குறித்து, சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய, பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் சரியான திகதி இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். நாட்டில் சுமார் 45 லட்சம் பாடசாலை மாணவர்கள் உள்ளதாகவும், அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சுடன் இணைந்து, இந்த திட்டத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்

READ MORE | comments

பாலூட்டும் தாய்மாருக்கு விசேட அறிவித்தல்

 


தாய்மார்களுக்கு கொரோனா இருந்தாலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.


குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவுவது எந்த பரிசோதனையிலும் தெரியவரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாய் கொரோனா தொற்றுக்குள்ளாகி குழந்தைக்கு தொற்றுக்குள்ளாகவில்லை என்றாலும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணிந்து முகத்தை ஒதுக்கி வைத்து தாய்ப்பால் கொடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும் அந்த தாய்ப்பாலிலிருந்து வரும் நோய் எதிர்ப்பு சக்தியை வேறு எதிலும் பெற முடியாது என்றும் குறிப்பிட்டார்.

சரியான நேரத்தில் தாய்ப்பால் கிடைக்காததால் குழந்தைகளில் புற்றுநோய், குழந்தை பருவ காய்ச்சல் மற்றும் நீரிழிவு போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் வெளிப்படுத்ததுவதாகவும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஏராளமான தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியதாக தங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

இனி இலங்கையில் தடுப்பூசியை பெற மறுத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

 


நாட்டில் தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் மட்டும் கொவிட்19 தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது.

டெல்டா வைரஸ் மிகவும் அபாயகரமானது. அத்துடன் வேகமாகப் பரவுகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை நாட்டு மக்களால் மட்டுமே தடுக்க முடியும். அவசரத் தேவை தவிர வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், முகக்கவசம் அணியாதவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போது கொவிட்டை கட்டுப்படுத்த முடியாது.

எனவே ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

READ MORE | comments

அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு – அமைச்சரவை வழங்கிய அனுமதி

Monday, August 30, 2021

 


அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை இன்று (30) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, அதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை இணைக்குழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை கூட்டம் இன்று (30) நடைபெற்ற போதே, இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதன்படி, அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை, அடுத்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக கட்டம் கட்டமாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

READ MORE | comments

லம்டா திரிபில் இருந்து தடுப்பூசியே காக்கும்

 


தற்போது பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகள், கொரோனாவின் டெல்டா மாறுபாடு விட மிகவும் கடுமையான லம்டா மாறுபாட்டிலிருந்து பாதுகாப்பை வழங்கும் என்று நம்பப்படுகிறது என்று கொழும்பு மருத்துவ பீடத்தின் மருந்தியல் பேராசிரியர் டொக்டர் பிரியதர்ஷனி கலப்பதி தெரிவித்தார்.


எதிர்காலத்தில் உருவாகும் கொரோனாவின் புதிய திரிபுகளுக்கு
தடுப்பூசியே பாதுகாப்பை வழங்கும் என்று நம்பப்படுவதாகவும் கொரோனாவின் பல்வேறு மாறுபாடுகள் இருந்தாலும், இன்று பயன்படுத்தப்படும் அதே சிகிச்சை முறைகளைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயங்களை அவர் தெரிவித்தார்.

கொரோனா நோயாளிகளுக்கு வழங்க உலக சுகாதார நிறுவனத்தால் அங்கிகரிக்கப்பட்ட டோசிலிசு மோப் என்ற மருந்து பற்றி இப்போது பலர் கேட்கிறார்கள் என்றும், அது ஒரு நிபுணரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே நோயாளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தற்போது கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசியே சிறந்த வழி என்றும் இரண்டு ஊசிக்குப் பின்னர் வைரஸ் பாதிக்கப்பட்டாலும் சிக்கல்கள் வெகுவாகக் குறைக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், இது மரண அபாயத்தைக் குறைப்பதுடன், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது என்றார்.
READ MORE | comments

இலங்கையில் நேற்று அதி உயர் கொரோனா மரணங்கள் பதிவு

 


இலங்கையில் நேற்றைய தினம் மீண்டும் 200க்கும் அதிகமான கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன.

அந்த வகையில் நேற்றைய தினம் (29) 216 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8, 991ஆக உயர்ந்து, 9000ஐ அண்மித்துள்ளது

READ MORE | comments

மிக மோசமான கட்டத்தை இலங்கை எட்டப்போகிறது - கடுமையான எச்சரிக்கை

 


எதிர்வரும் அக்டோபர் மாதமளவில் இலங்கை மிகமோசமான உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

உலகசந்தையில் சீனியின் விலையை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இலங்கையில் அனைத்து செலவுகளையும் சேர்த்ததன் பின்னர் ஒரு கிலோகிராம் சீனியை 98 ரூபாவிற்கு சந்தைக்கு வழங்கமுடியும்.

ஆனால் அரசாங்கத்தினால் அதற்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கிய முறைகேடான வாய்ப்புக்கள் மற்றும் கடந்த வருடம் அக்டோபர் மாதத்திலிருந்து இடம்பெற்றுவரும் பாரிய சீனிமோசடி ஆகியவற்றின் காரணமாகவே தற்போது ஒருகிலோகிராம் சீனியின் விலை 220 ஆக அதிகரித்துள்ளது.

அதுமாத்திரமன்றி உரியவாறான திட்டமிடல்கள் அற்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டின் பயிர்ச்செய்கையும் சீர்குலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

எனவே எதிர்வரும் சில மாதங்களுக்குத் தேவையான உணவுற்பத்தியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் அக்டோபர் மாதமளவில் நாடு மிகமோசமான உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்றார்

READ MORE | comments

தடுப்பூசிக்கு மடியாத திரிபு அடைந்த புதிய வைரஸ் வந்தது!

 


கொரோனா தடுப்பூசிக்கு கட்டுப்படாத வீரியம் கொண்ட புதிய கொவிட் பிறழ்வொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


தென் ஆபிரிக்காவில் இந்த புதிய வகை வீரியம் கொண்ட வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

C.1.2 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை வைரஸ் பிறழ்வு, மிகவும் ஆபத்தானது என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இந்த வைரஸ் இனமானது, மிகவும் வேமாக பரவும் தன்மை கொண்டது எனவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
READ MORE | comments

அதிபர், ஆசிரியர் மற்றும் இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு...!!

 


நாட்டில் தற்போது சேவையில் உள்ள அதிபர், ஆசிரியர், இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கு கல்வி முகாமைத்துவ முதுமானி, கல்வி முகாமைத்துவ கல்விமானி ஆகிய இரு பட்டக்கற்கைகளை தேசிய கல்வி நிறுவகம் அறிமுகம் செய்துள்ளது.


கற்கை நெறிகளை தொடர விரும்புவோர் தமது விண்ணங்களை ஒன்லைன் மூலம் தேசிய கல்வி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கலாம். என்று தேசிய கல்வி நிறுவகம் அறிவித்துள்ளது.
READ MORE | comments

கல்முனை பிராந்தியத்தில் தடுப்பூசியின் முக்கியத்துவமறிந்த மக்கள் : நீண்ட வரிசையில் காத்திருந்து இரண்டாம் தடுப்பூசியை பெற்றனர்




 நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார வைத்திய அதிகாரிகளின் தலைமையில் இன்று முதல் முதலாவது தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகிறது.

சுகாதார திணைக்கள  வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள், பொலிஸார், இராணுவம் அடங்களான முப்படையினர், பட்டதாரி பயிலுனர்கள், பிரதேச சமூக சேவை அமைப்புக்கள் அடங்கிய குழுவினரினால் இந்த இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொது கட்டிடங்கள், பாடசாலைகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

இரண்டாவது தடுப்பூசியை பெற கல்முனை பிராந்திய அரச அதிகாரிகள், 30 வயதிற்கு மேற்பட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை பெற்றுவருகின்றனர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், இறக்காமம், சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இந்த இரண்டாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
READ MORE | comments

சிறிலங்காவில் வீரியம் கொண்டுள்ள “சூப்பர் டெல்டா” - அடுத்த பேரழிவு ஆரம்பம்

 


நாட்டில் தற்போது அதிகரித்துச் செல்லும் கொரோனா தாக்கத்தினால் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் கொரோனாவின் திரிபு வைரஸ் டெல்டாவும் நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டன.

தற்போது நடைமுறைப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டமானது செம்டம்பர் 30ஆம் திகதி வரையில் தளர்த்தக் கூடாது என வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

READ MORE | comments

செப்டெம்பர் 17 வரை இலங்கையில் பொது முடக்கம்? அவசர கோரிக்கை

 


நாட்டை செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை முடக்கினால்தான், உயிர்களைப் பாதுகாக்க முடியும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு 100 வீதம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வுகூறலின்படி,

நாட்டில் எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை முடக்கநிலையை அமுலாக்கினால்தான் உயிர்களைப் பாதுகாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“டெல்டா வைரஸ் பிறழ்வடைந்து, மேலும் ஒரு திரிபு தற்போது கொழும்பில் பரவிக் கொண்டிருக்கின்றது.இந்தத் திரிபு ஏனைய மாகாணங்களுக்கும் பரவிக் கொண்டிருக்கின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

மேலும் ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை முடக்கநிலையை அமுலாக்கினால், மேலும் 10 ஆயிரம் உயிர்களைப் பாதுகாக்க முடியும் என அரசாங்கத்துக்கு அறிக்கை ஒன்றின் ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், தற்போயை சூழ்நிலையில் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.

இதற்கு காரணம், பெரும்பாலான இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகின்றது. ஆகையினால் அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே உரிய பாதையை நோக்கி பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

READ MORE | comments

அமைச்சர் பந்துலவின் மனைவிக்கும் கோவிட்!

 


வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


அவர் தற்போது சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் பந்துலவுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
READ MORE | comments

இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்..!

 


இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்..!


டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத்தால் இந்த தங்கப் பதக்கம் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்து இந்த தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

F46 ஈட்டி எறிதல் போட்டியில் வௌ்ளிப் பதக்கத்தையும், வெங்கலப் பதக்கத்தையும் இந்திய வீரர்கள் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

இன்றாவது தீர்வு கிடைக்குமா?

 


ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு இன்று தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் போராட்டத்தை கைவிட இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதிபர், ஆசிரியர்களின் பல காலமாக இழுத்தடிக்கப்படும் சம்பள பிரச்சினையை முன்கொண்டு இணையவழி கற்பித்தல் நடவடிக்யைில் இருந்து விலகி சம்பள பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு அனைத்து ஆவிரியர்களும் வழியுறுத்து வருக்கின்றனர்.

அதற்கு இன்று உடன் தீர்வு கிடைக்குமாயில் தமது பணிப் பகிஷ்கரிப்பை கைவிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக கல்வி கற்கும் மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலைக்கு இன்றாவது தீர்வு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

READ MORE | comments

மேலும் 3,698 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகினர்

Sunday, August 29, 2021

 


நாட்டில் மேலும் 3,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 425,255 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,203 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 357,598 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 59,074 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, மேலும் 212 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 8,583 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

டெல்டாவை கட்டுப்படுத்தாவிட்டால் ஐந்தாவது அலையை தடுக்க முடியாத நிலை ஏற்படலாம்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

 


கொரோனா வைரஸ் பரவல் ஆபத்தினை அரசாங்கம் கவனத்தில் கொள்ளாவிட்டால் ஐந்தாவது அலை உருவாவதை தடுக்க முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


நிலைமை மோசமடைந்தால் நாட்டை காலவரையறையின்றி முடக்கிவைத்திருப்பதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லாமல் போய்விடும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும்,இதிலிருந்து மீள்வதற்கு பல வருடங்கள் எடுக்கும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் புதிய பிறழ்வுகள் தோன்றுவதற்கான வாய்ப்பு சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் எப்போதும் உள்ளது என தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடு இந்த நிலையை எதிர்கொள்ள தயாராகவிட்டால் மக்களிற்கு பெரும் ஆபத்து ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளது
READ MORE | comments

மேலும் 7 பிளாஸ்டிக் உற்பத்திகளை தடை செய்ய திட்டம்


 ஒரு முறை பாவித்து நீக்கப்படும் 7 வகையான பிஸாட்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை தடை செய்வதுடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரம் ஒன்று நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


இவற்றினுள், பிலாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் பானம் உறிஞ்சான், முட்கரண்டி, குடிநீர் கோப்பை, கேக் வெட்டும் கத்தி,இடியப்பத் தட்டு மற்றும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனினால் தயாரிக்கப்பட்ட பூ மாலைகள் ஆகியன உள்ளடங்குகின்றன.

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியில் இருந்து ´செசே´ பெக்கெட்டுகள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிலாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திப் பொருட்களை தடை செய்ய சுற்றுச்சூழல் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

அதேபோல், ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து உக்காத லன்ச்சீ்டடை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஆண்டுதோறும் 2 பில்லியனுக்கும் அதிகமான பொலித்தீன் பைகள் கொட்டப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது
READ MORE | comments

நாளை முதல் சதொசவில் 130 ரூபாய்க்கு சீனி


 நுகர்வோருக்கு 130 க்கு ரூபாய்க்கு விற்பனை செய்யத் தேவையான பழுப்பு சீனி தொகை சதொசவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் நாளை முதல் இலங்கை சீனி நிறுவனத்தால் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வாக்கும்புர தெரிவித்தார்.


நாட்டில் சீனி விலை அதிகரிப்பால் நுகர்வோர் எதிர்கொள்ளும் கஷ்டங்களை போக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தொலைபேசியில் தெரிவித்தார்.

செவனகல, பெலவத்த மற்றும் ஹிங்குரான சீனி தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் சீனி இலங்கை சீனி நிறுவனத்தால் விநியோகிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் சதொச விற்பனை நிலையங்களில் நுகர்வோர் சீனியை ரூ .130 க்கு வாங்க முடியும் என குறிப்பிட்டார்.

இலங்கை சீனி நிறுவனத்தின் சீனி இருப்பு குறைந்து விட்டால், அரசாங்கம் வழங்கும் வரிச் சலுகையின் கீழ் சீனியை இறக்குமதி செய்யவும், நாட்டில் இருக்கும் சீனி ஏகாதிபத்தியத்திலிருந்து நுகர்வோரை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீனியின் இறக்குமதி வரியை 50 ரூபாயில் இலிருந்து அரசாங்கம் குறைத்தது என்றும் ஆனால் சந்தையில் சீனியின் விலை 200 ரூபாயைத் தாண்டிவிட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.
READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீர் சுற்றிவளைப்பு நெல் களஞ்சியங்களுக்கு சீல் வைப்பு; பலருக்கு எதிராக வழக்குகள் பதிவு

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீர் சுற்றிவளைப்பு நெல் களஞ்சியங்களுக்கு சீல் வைப்பு; பலருக்கு எதிராக வழக்குகள் பதிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நுகர்வோர் அதிகார சபையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது நெல் மூடைகள்  பதுக்கி வைக்கப்பட்டமை தொடர்பாக பல வியாபாரிகளுக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டதுடன், பல நெல் களஞ்சியங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.


நாடு பூராகவும் நெல் தட்டுப்பாடு தொடர்பான ஆய்வில் இச் சுற்றிவளைப்பு நடாத்தப்பட்டு இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான நெல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நுகர்வோர் அதிகார சபையினர் மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களிலுள்ள பதிவு செய்யப்படாத நெல் களஞ்சியசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்புகளை 25, 26, 27, 28 ஆம் திகதிகளில் மேற்கொண்டனர்.

இதன் போது பல ஆயிரக்கணக்கான நெல் மூடைகளை பதுக்கி வைத்திருந்தமைக்கு களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டதுடன் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள இந்நிலையில் மனிதாபிமானமின்றி ஒரு சில வியாபாரிகள் அரசாங்கத்தின் நிர்வாக நடைமுறையை கண்டுகொள்ளாமல் தங்களது வியாபார தந்திரோபாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட வரையறைக்கு உட்பட்டு இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே,கருணாகரன் வழங்கிய ஆலோசனைக்கமைய இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆர்.எப்.அன்வர் சதாத் மேலும் தெரிவித்தார்.

READ MORE | comments

களுவாஞ்சிக்குடியில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் உலாவித்திரிந்த 80 பேர் கைது...!!


மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் உலாவித்திரிந்தவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாது சுகாதார நடைமுறையை பின்பற்றாத 80 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு 15 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் நீதிமன்றம் அபதாரம் விதித்துள்ளதாக இன்று சனிக்கிழமை களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 20ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 6ம் திகதிவரையில் அரசாங்கம் தனிமைப்படுத்தி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டடுள்ளது இதனையடுத்து ஊடரங்கு சட்டதை மீறி குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் வீதிகளில் முககவசம் அணியாது சுற்றிதிரிந்தவர்களை பொலிசார் கைது செய்யும் நடவடிக்கை ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையில் இன்று சனிக்கிழமை வரை 80 பேரை கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதுடன், இதில் வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை 15 பேர் நீதிமன்றில் ஆஜரானபோது அவர்களுக்கு தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் ஒரு இலச்சத்து 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனா
READ MORE | comments

JCB இயந்திரத்தின் சில்லில் சிக்கி உயிரிழந்த சிறுவன்!

 


JCB இயந்திரம் ஒன்றின் முன் சில்லில் சிக்கி 12 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.


நேற்று மாலை பனாமுர கடுவன வீதியின் கமகந்த பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கற்களை ஏற்றிய லொறி ஒன்றை JCB இயந்திரத்தின் உதவியுடன் தள்ளிச் சென்ற போது லொறியில் ஏற முற்பட்ட சிறுவன் இவ்வாறு JCB இயந்திரத்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தடயம்கந்த ஓமல்பே பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் JCB இயந்திரத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
READ MORE | comments

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்


 இலங்கையில் கடந்த வருடம் முதல் வாகனம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் வாகனங்களின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக விலையில் வாகனங்களை விற்பனை செய்வதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் மீண்டும் வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கிய பின்னர் லீசிங் நிறுவனங்கள் பாரிய வீழ்ச்சியடைந்து பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட கூடும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது

READ MORE | comments

ஊரடங்கு தளர்வு குறித்து வெளிவந்த தகவல்


எதிர்வரும் 6 ஆம் திகதியுடன், தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு ஆலோசனை நடத்தப்படுவதாக தென்னிலங்கை ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த செய்திக்குறிப்பில், ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 6 ஆம் திகதியுடன் தளர்த்துவதற்கு அரச உயர்மட்டம் ஆலோசனை நடத்தி வருகிறது.

எனினும் தற்போது நடைமுறையில் உள்ள மாகாண போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் கடுமையான தனிமைப்படுத்தல் சட்டங்களை தொடர்ந்தும் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைப் பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் அ.அரியதுரை ஆசிரியர் அவர்கள் இன்று (29.08.2021) காலமானார்.


 மட்டக்களப்பு குருக்கள்மடத்தைப் பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் அ.அரியதுரை அவர்கள் இன்று (29.08.2021)  காலமானார். இவர் மட்/சிவாநந்த வித்தியாலயம் தே.பா யில் ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர். அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.

READ MORE | comments

உடன் தயார்படுத்தலை மேற்கொள்ளுங்கள் - கோட்டாபய பிறப்பித்துள்ள பணிப்புரை

 


பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி நிறைவடைந்ததன் பின்னரும், கொரோனா பரவுமாக இருந்தால், அதனை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய சுகாதார பிரிவின் விசேட வைத்தியர்கள் குழுவொன்றை நியமித்து பரிந்துரைகளை முன்வைக்க தயார்படுத்துமாறு சுகாதார தரப்புக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே, ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் முதலாவது மருந்தளவு (DOSE) சுமார் 100 வீதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது மருந்தளவு (DOSE) சுமார் 56 வீதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந் நிலையில், தடுப்பூசி செலுத்தி முழுமை பெற்றதன் பினனரும், கொரோனா பரவுமாக இருந்தால், அடுத்தகட்டமாக செய்ய வேண்டியது என்னவென்பது தொடர்பில் ஆராயுமாறு சுகாதார தரப்புக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேளை, இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவிக் கொண்டிருப்பதால் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நாட்டில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையான ஒத்துழைப்பினை அனைத்து தரப்பினரும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

READ MORE | comments

மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் மட்டக்களப்பு - வெல்லாவெளி மாணவி பொறியியல் பீட (Civil Engineering) இறுதியாண்டில் சாதனை

 


மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட (Civil Engineering) இறுதியாண்டில் கல்வி பயின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளியினைச் சேர்ந்த செல்வி. நிஷாங்கனி- கௌரிகாந்தன் எனும் மாணவி 125 மாணவர்களுக்கிடையில் இறுதியாண்டுப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் (Batch top) பெற்றுள்ளார்.


இலங்கையின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் கல்வி பயிலும் இப் பல்கலைக்கழகத்தில் மட்டக்களப்பு மாணவி ஒருவர் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இவர் ஆரம்பக் கல்வியினை மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையிலும், இடைநிலை, உயர்தரக் கல்வியினை மட்/மட்/வின்சன்ட் மகளிர் தேசிய கல்லூரியிலும் பயின்றவராவார். ஆசிரியர்களான கௌரிகாந்தன், சரஸ்வதிதேவி ஆகியோரின் புதல்வி ஆவார்.
READ MORE | comments

மட்டக்களப்பு ஆபத்தான நிலையில்- மக்களை எச்சரிக்கும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...!!

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா வேரியன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது தொற்றும் வீதம் அதிகமாகவும் மரண வீதம் அதிகமாக ஏற்படுத்தக்கூடியது எனவும் மக்களை அவதானமாக செயற்படுமாறும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.


நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 274கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 10பேர் மரணமடைந்துள்ளனர். மட்டக்களப்பு பகுதியில் 56பேரும், களுவாஞ்சிகுடி பகுதியில் 47பேரும், செங்கலடி பகுதியில் 48பேரும், வவுணதீவு பகுதியில் 27பேரும், வெல்லாவெளி பகுதியில் 28பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மரண மடைந்தவர்களில் மட்டக்களப்பில் மூவரும், களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை, செங்கலடி, ஏறாவூர், வவுணதீவு, வெல்லாவெளி, ஆரையம்பதி பகுதிகளில் தலா ஒருவரும் மரணமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 211பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர். கடந்த வாரத்தில் 1982கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 36பேர் மரணமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சராசரியாக 300கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுவதுடன் சராசரியாக ஐந்து மரணங்களும் நிகழ்கின்றன.

நேற்று மருத்து ஆராய்ச்சி நிறுவகத்தினால் வழங்கப்பட்ட அறிக்கையின்படி முதன்முறையாக டெல்டா வேரியன் அடையாளம் காணப்பட்டுள்ளது. அல்பா வேரியன் மட்டுமே மட்டக்களப்பில் அடையாளம் காணப்பட்டிருந்தது. அல்பா வேரியனுடன் ஒப்பிடும்போது டெல்டா வேரியன் தொற்றும் தன்மை அதிகமாகவும் மரண வீதம் அதிகமாகவும் காணப்படுகின்றது.

பொதுமக்கள் வீட்டில் இருப்பதன் மூலமே கொவிட் தொற்றினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரமுடியும். அத்துடன் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றவேண்டும்.

தடுப்பூசியைப் பொறுத்த வரையில் முதல் தடுப்பூசி 270000 வரையில் ஏற்றப்பட்டுள்ளது. 30வயதுக்கு மேற்பட்ட 92வீதமானவர்களுக்கு முதலாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 30வயதுக்கு மேற்பட்ட 108000பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. 37வீதமான மக்களை உள்ளடங்குகின்றது. இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்குவதற்கு 115000 வரையான தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றன. நாளை(இன்று) இன்னும் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |