அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை இன்று (30) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, அதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை இணைக்குழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை கூட்டம் இன்று (30) நடைபெற்ற போதே, இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதன்படி, அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை, அடுத்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக கட்டம் கட்டமாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
0 Comments