Advertisement

Responsive Advertisement

JCB இயந்திரத்தின் சில்லில் சிக்கி உயிரிழந்த சிறுவன்!

 


JCB இயந்திரம் ஒன்றின் முன் சில்லில் சிக்கி 12 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.


நேற்று மாலை பனாமுர கடுவன வீதியின் கமகந்த பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கற்களை ஏற்றிய லொறி ஒன்றை JCB இயந்திரத்தின் உதவியுடன் தள்ளிச் சென்ற போது லொறியில் ஏற முற்பட்ட சிறுவன் இவ்வாறு JCB இயந்திரத்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தடயம்கந்த ஓமல்பே பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் JCB இயந்திரத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

Post a Comment

0 Comments