Home » » நாளையும் மறுதினமும் தபாலகங்கள் திறப்பு

நாளையும் மறுதினமும் தபாலகங்கள் திறப்பு

 


ஓகஸ்ட் மாதத்துக்கான முதியோர் கொடுப்பனவுகள் மற்றும் பிற பொது உதவி கொடுப்பனவுகள் உள்ளிட்டவை நாளை (01) மற்றும் நாளை மறுதினம் (02) வழங்கப்படும் என தபால் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட இரண்டு நாட்களில் திறந்திருக்கும் என்றும் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

கொடுப்பனவுகளைப் பெறும்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, தபால் அலுவலகங்களுக்கு வந்து தொடர்புடைய உதவியைப் பெறுமாறு தபால் தலைமையகம் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |