Advertisement

Responsive Advertisement

ஊரடங்குச்சட்டம் நீடிக்கப்படுமா? இன்று அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

 


நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிப்பதா? இல்லையா? என்பது பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை என்று அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு கொழும்பில் இன்று காலை நடந்தது. இதில் உரையாற்றிய அமைச்சரவை இணைப் பேச்சாளர் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரண இதனைத் தெரிவித்தார்.

அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை 14ஆம் திகதிவரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் அதுபற்றி நேற்று நடந்த அமைச்சரவை சந்திப்பில் பேசப்படவே இல்லை என அமைச்சர் தெரிவித்தார்

Post a Comment

0 Comments