Home » » கொரோனா மரணங்களில் 20 சதவீதமானவை வைத்தியசாலைக்கு வெளியே இடம்பெறுகின்றன- இலங்கை மருத்துவ சங்கம்

கொரோனா மரணங்களில் 20 சதவீதமானவை வைத்தியசாலைக்கு வெளியே இடம்பெறுகின்றன- இலங்கை மருத்துவ சங்கம்

 


கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்களில் 20 சதவீதமானவை வைத்தியசாலைக்கு வெளியே இடம்பெறுவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.


இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்களில் 20 சதவீதமானவை வீட்டில் அல்லது கொரோனா தொற்றாளர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இடம்பெறுவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில், தற்போது ஒரு மணித்தியாலத்துக்கு 9 மரணங்கள் இடம் பெறுவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

கொழும்பு பகுதியில் அதிகளவில் டெல்டா திரிபு பரவி வருகின்றது என்றும், குறித்த தொற்றால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்ளே அதிகளவில் உயிரிழப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |