இலங்கை மக்களுக்கு எச்சாிக்கை..! 5ம் திகதி தொடக்கம் 15ம் திகதிவரை சூாிய கதிவீச்சு நேரடியாக தாக்கும்.

Saturday, March 30, 2019


இலங்கை மக்களுக்கு எச்சாிக்கை..! 5ம் திகதி தொடக்கம் 15ம் திகதிவரை சூாிய கதிவீச்சு நேரடியாக தாக்குமாம்.

இலங்கையில் ஏப்ரல் மாதம் 5ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரையில் சூாிய கதிா்வீச்சின் தாக்கம் நேரடியாக உணரப்படும். இதனால் இரவி லும், பகலிலும் கடுமையான வெப்பம் நிலவும். என காலநிலை அவதா ன நிலையம் எச்சாித்துள்ளது.
எதிர்வரும் 5ஆம் திகதிமுதல் 15ஆம் திகதிவரை சூரியக் கதிர்வீச்சின் தாக்கம் நேரடியாக இடம்பெறவுள்ளமையினால் இவ்வாறு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். எனவே, பொது மக்கள் வெப்பநிலையின் தாக்கத் திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்
கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது. தென்மாகாணத்தின் திக்வெல்ல, கெகனதுரு, கொட்டவில முதலான பிரதேசங்களுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி சூரிய கதிர்வீச்சுத் தாக்கம் நேரடியாக இடம்பெறவுள்ளது. 
இதேநேரம், வட மாகாணத்திற்கு எதிர்வரும் 15ஆம் திகதி சூரிய கதிர் வீச்சுத் தாக்கம் நேரடியாக இடம்பெறவுள்ளது. தற்போது நிலவும் கால நிலை தன்மைக்கு அமைய, குருநாகல் மாவட்டத்தில் அதிக வெப்ப நிலை பதிவாகியுள்ளதாக 
காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குருநாகலின் வெப்பநிலை சாதாரணமாக 32 பாகை செல்சியஸாக பதிவாகின்ற நிலையில், தற்போது 38.8 பாகை செல்சியஸ் அளவில் அங்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்த வெப்பமான காலநிலை காரணமாக பொது மக்கள் அதிகளவில் நீரை அருந்த வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் அதிகளவில் நீரை அருந்துவதுடன், 
அதிகளவான நேரத்தை குளிப்பதற்கு செலவிடுவதன் ஊடாக சரும நோ ய் ளை மற்றும் தொற்றுநோய்களைத் தவிர்க்க முடியும் என சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் தீபால் பெரேரா தொிவித்து ள்ளாா். 
READ MORE | comments

யாழில் கொள்ளையடிக்க வெளிநாட்டில் இருந்து விசா எடுத்து வந்த தமிழர்கள்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்..

பொருள் விற்பனையாளர் போர்வையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரந்தனையில் கொள்ளையடித்துக் கொண்டு, யாழ் நகருக்கு தப்பிச் சென்ற இரண்டு இந்திய கொள்ளையர்களையும் பொலிசார் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர்.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் நாரந்தனை பகுதிகளில் அண்மைக்காலமாக மேற்குறித்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மண்டைத்தீவு பொலிஸ் சோதனைச்சாவடியில் பாதுகாப்பினை பொலிஸார் பலப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை (27) மாலை கரம்பன் மற்றும் நாராந்தனை பகுதிகளில் பொருள் விற்பனைக்காக சென்ற இரு இந்திய பிரஜைகள் வீடுகளில் தனித்திருந்த பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றிருந்தனர்.
உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் மண்டைத்தீவு பொலிஸ் காவல் அரணுக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் விவேகானந்தன் தலைமையிலான குழுவினருக்கு அறிவித்தனர். இதனடிப்படையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசேகரவின் ஆலோசனையின் படி செயற்பட்ட பொலிசார், கொள்ளையடித்த நகைகள், பொருட்களுடன் யாழ்ப்பாணத்துக்கு தப்பிச்சென்ற இரு இந்தியபிரஜைகளையும் துரத்தி சென்று மடக்கிப்பிடித்தனர். அவர்கள் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், வங்கி அட்டைகள், கடவுச்சீட்டுகள், கடவுள் விக்கிரகங்கள், இந்திய நாணயங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் விஸ்தீரணத்துக்கேற்ப பொலிஸாரின் ஆளணி வளம் பொதுமானதாக இல்லாமையே இந்த பகுதியில் பல சமூகவிரோதச் செயற்பாடுகள் அதிகரிக்கக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் தமிழகத்தினைச் சேர்ந்த சரளமாக தமிழ் பேசக் கூடிய தமிழர்கள் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்து.
இதேவேளை யுத்தத்தின் பின்னர் தமிழகத்தில் இருந்து தாயகத்திற்கு வரும் வியாபாரிகள் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக வியாபார நடவடிக்கைகளுக்காக இவர்கள் வடக்கு கிழக்கு தமிழர்களை குறிப்பாக யாழ் குடாநாட்டு மக்களை குறிவைத்து வருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் ஆடை வியாபாரத்திற்காகவே அதிகளவில் வருகின்றனர்.
யாழில் வீடு வீடாக சென்று ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் காணக் கூடியதாக உள்ளது. இவ்வாறு வருபவர்களை மக்கள் சந்தேக கண்ணோடு பார்க்காமல் வீட்டிற்கு உள்ளே அழைத்துச் சென்று ஆடைகளை வாங்குகின்றனர். இவ்வாறு வியாபார நடவடிக்கைகளுக்காக வருகின்றவர்கள் வீடுகளை நோட்டமிட்டுவிட்டு ஒரு சில பேர் திரும்ப கொள்ளையடிப்பதற்காக வருகின்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.
எனவே இவ்வாறு வியாபார நடவடிக்கைகளுக்காக வீடுகளிற்கு வருபவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாகவும் விழிப்புணர்வுடனும் செயற்பட வேண்டும்.




READ MORE | comments

இலங்கைக்கு இயற்கையால் கிடைக்கவுள்ள வரபிரசாதம்

இயற்கை வாயு மற்றும் பெற்றோலியப் பொருட்களை ஸ்ரீலங்காவில் விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை மன்னாரின் அகழ்வு பணிகள் வழங்கியுள்ளதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
12 நிறுவனங்கள் இதற்கான செயற்பாடுகளில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளதுடன் 2020 இல் உற்பத்தி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்தாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றை உற்பத்தி செய்யும் நாடாக ஸ்ரீலங்காவை வெகுவிரைவில் உருவாக்க முடியுமென்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

மட்/ பட்டிருப்பு தேசியபாடசாலை, களுவாஞ்சிகுடியில் பத்து மாணவர்கள் 9A சித்தி பெற்றுச் சாதனை


மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இருந்து இம் முறை பத்து மாணவர்கள் 9A சித்தி பெற்று அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளதுடன் அகில இலங்கை ரீதியில் சாதாரண தரப் பரீட்சையில் 9413 மாணவர்கள் சகல பாடங்களிலும் A சித்தி பெற்று சிறந்த பெறுபேறுகளை நிலை நாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1.மட்டக்களப்பு மட்/வின்சன்ட் உயர்தர மகளிர் தேசிய பாடசாலை 9A - 22 மாணவர்கள்
2.மட்டக்களப்பு புனித மிக்கேல்கல்லூரி 9A - 19 மாணூவர்கள்
3..காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை 9A - 19 மாணவர்கள்
4. மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம்
தேசிய பாடசாலை 9A - 10 மாணவர்கள்
5.மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை 9A - 09 மாணவர்கள்
6.களுதாவளை மத்திய மாகா வித்தியாலயம்
தேசிய பாடசாலை 9A - 03 மாணவர்கள்
READ MORE | comments

மின்வெட்டு தொடர்பில் நாட்டு மக்களுக்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

நாட்டில் தற்போது அமுலிலுள்ள மின்வெட்டு பிரச்சினை சுமார் 10 நாட்களுக்கே இருக்கும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என்பதை பொதுமக்களுக்கு அறியத்தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ருவான் வெலிசாயவில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் உரையாற்றும் போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க அமைச்சர் ரவி கருணாநாயக்க ருவான்வெலிசாய பூமியில் மின்சார சிக்கனம் தொடர்பான நிகழ்வையும் ஆரம்பித்து வைத்தார்.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தற்போது பெரும் நீர்த்தட்டுப்பாடு நிலவுகிறது. கடும் வரட்சியின் காரணமாக மின் உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு முன்னரும் இவ்வாறு மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். அதனை மக்கள் ஏற்றுக்கொண்டு செயற்படுத்தினார்கள்.
இரவு வேளைகளில் 3600 யுனிட் முதல் 3700யுனிட் வரை மின்சார தேவை இருந்தது. தற்போது இது 3200ஆக குறைவடைந்துள்ளது. இதனையிட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
இந்த உக்கிரமமான நெருக்கடி இன்னும் 10தினங்களுக்கு மட்டுமே இருக்கும். தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறேன். மீண்டும் இவ்வாறான ஒரு பிரச்சினை ஏற்படாதவாறு இருக்க நாம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
இதற்கு நிலையான மின் உற்பத்தி வேலைத்திட்டமொன்று எம்மிடம் இருக்கவில்லை என்பதை மனவருத்தத்துடன் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். பல வருடங்களாக மின் உற்பத்திக்கான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை. வருடாந்தம் 6வீதம் முதல் 7வீதம் வரை மின்சார தேவை அதிகரிக்கிறது. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் மின் உற்பத்தியும் அதிகரிப்பட வேண்டும்.
நாட்டிலுள்ள மின்சார தேவையை எம்மால் தடுத்து நிறுத்த முடியாது. இதற்கு ஈடுசெய்யும் வகையில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தை தெளிவுபடுத்தவுள்ளோம்.
அனல் மின் நிலையம் உட்பட ஏனைய மின் நிலையங்கள் ஊடாக சுமார் 500 முதல் 600 மெகா​வோட்ஸ் மின்சாரத்தை தேசிய கூட்டமைப்புக்குள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
READ MORE | comments

235,373 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

Friday, March 29, 2019


வெளியாகியுள்ள 2018 க.பொ. த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின்படி உயர்தரம் கற்பதற்காக 235,373  பேர் தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சைக்காக 656, 641 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.  இவர்களில் உயர்தரம் கல்வி கற்பதற்காக 235,373  பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, இம்முறை சாதாரண தர பரீட்சையில் 64.11 வீதமான மாணவர்கள் கணிதப்படத்தில் சித்தியடைந்துள்ளனர்.

9413 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ´ஏ´ சித்திகளை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (3)
READ MORE | comments

கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் முழுமையாக்கப்படாமல் இருப்பதென்பது அங்கு வாழுகின்ற தமிழ் மக்களுக்கு இளைக்கின்ற அநீதியாகும்


பாராளுமன்ற உறுப்பினர் - ஞா.ஸ்ரீநேசன்



30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் முழுமையாக்கப்படாமல் இருப்பதென்பது அங்கு வாழுகின்ற 91 வீதமான தமிழ் மக்களுக்கு இளைக்கின்ற அநீதியாகவே இருக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட அமர்வில் உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சுக்கான விடயதானங்கள் தொடர்பிலான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயக பாரம்பரியம் விழுமியங்களை விரிவுபடுத்துவதாக இருந்தால் அரசியல் அலகுகள் நிருவாக அலகுகள் என்பவற்றுக்கான அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும், பகிர்வு செய்யப்பட வேண்டும். அந்த வகையில், இருக்கின்ற பிரதேச செயலகங்கள் உள்ளுராட்சி சபைகளுக்கான அதிகாரங்களை மேலும் மேலும் பரவலாக்கம் செய்ய வேண்டும். அதே போல் உபசெயலகங்களுக்கான அதிகாரங்களை வழங்கி முழுமையான செயலகங்களாக மாற்ற வேண்டும். அத்துடன் புதிய பிரதேச செயலகங்கள் புதிய உள்ளுராட்சி சபைகள் என்பவற்றை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.

குறிப்பாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் 1989ம் ஆண்டு காலப் பகுதியிலே உருவாக்கப்பட்டது. 1993ல் அதனை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றுவதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் கூட கொண்டுவரப்பட்டது. இப்படியான சூழ்நிலையில் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் முழுமையாக்கப்படாமல் இருப்பதென்பது அங்கு வாழுகின்ற 91 வீதமான தமிழ் மக்களுக்கு இளைக்கின்ற அநீதியாகவே இருக்க முடியும். அத்தோடு 27 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கல்முனை வடக்கு பிரதேச பகுதியில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அதேவேளை தமிழ் மக்கள் தம்மை நீண்ட காலமாக அரசு புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்ட முயற்சி என்ற வகையிலும் தமிழ் மக்களின் நிருவாகச் செயற்பாடுகளை இழுத்தடிக்காமல் துரிதமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற வகையிலும் அந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற வகையிலும் அதற்கான நிதி மூலங்கள் அதிகாரங்களை உடன் வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டன.
எனவே காலத்தை மேலும் கடத்தாமல் முரண்பாடுகள் பகைகளை உருவாக்கிக் கொள்ளமால் அப்பிரதேச இராஜாங்க அமைச்சர் ஹரிஸ் அவர்கள் எமது சகோதர பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனுடன் நட்பு ரீதியாக இணைந்து புரிந்துணர்வுடன் இதனைச் செய்ய வேண்டும் என ஜனநாயக அடிப்படையில் கேட்டுக் கொள்கின்றேன். இதனைச் செய்வதன் மூலமாக தமிழ் முஸ்லீம் மக்கள் இடையிலான நட்பினைப் பலப்படுத்திக் கொள்ள முடியும். மேலும், 1989க்குப் பின்னர் உருவாக்கப்பட்ட 27 பிரதேச செயலகங்கள் முழுமையாக்கப்பட்டுள்ளன. ஆனால் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் மாத்திரமே முழுமையாக்கப்படவில்லை. எனவே இதனை ஒரு நியாயமாகக் கொள்ள முடியாது.

அவை மட்டுமல்லாது மட்டக்களப்பிலும் இரண்டாகப் பிரிக்கக் கூடிய பல பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன. அந்தவகையில், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகமானது 39 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கியது. 656ற்கும் அதிகமான சதுரகிலோமீட்டர் பரப்பினையும் கொண்டது. யுத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். எனவே அப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமாக இருந்தால் அதனை இவ்விரண்டு பிரதேச செயலகங்களாகவும், பிரதேச சபைகளாகவும் பிரிக்க வேண்டும். அதே போல் போராதீவுப் பற்றுப் பிரதேச செயலகம் 43 கிராம உத்;தியோகத்தர் பிரிவுகளைக் கொண்டது. பரந்தளவு நிலப்பிரதேசத்தைக் கொண்டதும், யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். எனவே இதனையும் இரண்டு பிரதேச செயலகங்களாகவும் இரண்டு பிரதேச சபைகளாகவும் மாற்ற முடியும். அதே போல் மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச செயலகம் 45 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்டது. மிக நீளமான பிரதேச செயலகமாகவும் காணப்படுகின்றது. எனவே இதனையும் இவ்விரண்டு பிரதேச செயலகங்களாகவும், பிரதேச சபைகளாகவும் பிரிக்க வேண்டிய தேவையும் உள்ளது.

இவை போன்று இன்னும் பல பிரதேச செயலகங்கள் பிரதேச சபைகள் பிரிக்கப்பட வேண்டியவையாக உள்ளன. இவற்றை விபரமாகக் குறிப்பிடுவதற்கு நேரம் போதாமல் இருக்கின்றது. அவை பற்றிய தகவல்களைத் தர இருக்கின்றேன்.

அரசியற் தீர்வு விடயத்திற்கு மத்திய அரசில் இருக்கின்ற அதிகாரங்கள் அதிகமாப் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து ஓங்கி வருகின்றது. இந்த நிலையில் மக்களின் ஜனநாயக உரிமைகளை பேணிப் பாதுகாப்பதற்கும், அபிவிருத்திகளை மேம்படுத்துவதற்கும் பிரதேச செயலகங்கள், மாகாணசபைகள், உள்ளுராட்சி சபைகளுக்கு முறையே நிருவாக அதிகாரங்களையும், அரசியல் அதிகாரங்களையும் பரவலாக்கம் செய்தாக வேண்டும். இது காலத்தின் கட்டாய தேவையாகும். கடந்த காலத்தில் நாங்கள் மக்களின் அபிலாசைகளை உணர்ந்து அதற்கேற்ற விதத்தில் செயற்பாடாமையால் நாடு 30 வருட கால யுத்தத்தை சுமந்திருக்கின்றது. எனவே கடந்த காலப் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு அதிகாரத்தைப் பரவலாக்கம் செய்வதற்கும், பகிர்வு செய்வதற்கும் இந்த அமைச்சு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

2018ம் ஆண்டிற்கான க.பொ.த. (சா.தர) பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

Thursday, March 28, 2019

2018ம் ஆண்டிற்கான க.பொ.த. (சா.தர) பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.
www.doenets.lk    முகவரியை அழுத்துங்கள் 
READ MORE | comments

இலங்கையில் நிறுத்தப்படும் குறிப்பிட்ட வகை வாகன இறக்குமதி!

இலங்கையில் அதிகளவில் விற்பனையாகும் வாகனமான Wagon-R கார்கனை இனிமேல் இறக்குமதி செய்யாதிருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்ச்சிகே தெரிவித்தள்ளார்.
கொழும்பில் நேற்று இலங்கை வாகன இறக்கமதியாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இருந்து இதுவரை 55,000 இற்கும் அதிக Wagon-R வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 50,000 இற்கும் அதிகமானவை Hybrid என இனங்காணப்பட்டு சுங்கப்பிரிவால் வெளியாக்கப்பட்டுள்ளதாகவும் மெரின்ச்சிகே மேலும் கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தில் வாகனங்னளுக்கான வரி அறவீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் Wagon-R வாகன இறக்குமதியை நிறுத்துவதன் மூலம் நாட்டின் வாகன இறக்குமதி தொழிற்துறை பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய Wagon-R வாகனத்தின் மூலம் 16,25,000 ரூபா வரியை அறவிடுவதாகவும் குறித்த வரி கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் 8,25,000 ரூபாவாக காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் சுங்கத்தினால் Wagon-R வாகனம் பெற்றோல் வாகனம் எனக் கருதி வெளியிட்டுள்ளமையால் 1,25,000 இற்கு மேலதிக வரியை செலுத்த வேண்டியுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் கீர்த்தி குணவர்தன கருத்துத்தெரிவிக்கையில்,
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கான வரி அறவீடுகளில் 48,000 மில்லியன் ரூபாயை எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த தொகையானது ஒட்டுமொத்த வரி அறவீட்டு வருமானத்தில் 38 சதவீதம். வாகன இறக்குமதி வீழ்ச்சியடையும் பட்சத்தில் அனைத்து வரி அறவீடுகளும் அற்றுப்போய் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
இதேவேளை சுங்க திணைக்களத்தினால் அநியாயமாக Wagon-R வாகனங்களுக்காக அறவிடும் வரியை நிறுத்துவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மட்டக்களப்பு ஏறாவூரில் 1990ஆம் ஆண்டு யுத்த காலத்தின் போதான மோட்டார் குண்டு!

மட்டக்களப்பு ஏறாவூர் காளிகோயில் தோட்டம் வீதியிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குற்றத் தடயவியல் பொலிஸார் தடயங்களை பதிவு செய்த பின்னர் மோட்டார் குண்டினை செயலிழக்கச் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காளிகோயில் தோட்ட வீதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து மோட்டார் குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து குடியேறிய தனியார் குடியிருப்பாளரான ஆனந்தசாமி அரசம்மா என்பவரின் காணியிலிருந்து இந்த மோட்டார் குண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த காணி உரிமையாளர் நேற்று மாலை தனது வீட்டு முற்றத்தை துப்பரவு செய்து குப்பைகளை வெட்டிப் புதைப்பதற்காக குழி தோண்டிய போதே மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து இன்றைய தினம் குறித்த இடத்தில் குற்றத் தடயவியல் பொலிசார் தடயங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, மோட்டார் குண்டினை செயலிழக்க வைக்கும் பிரிவு ஊடாக மோட்டார் குண்டினை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
READ MORE | comments

இந்தியாவில் மீண்டும் பயங்கரத் தாக்குதல்?? கடும் அச்சத்தில் பாகிஸ்தான் பிரதமர்!

இந்தியத் தேர்தலுக்கு முன் மீண்டும் ஏதோ ஒரு ராணுவ நடவடிக்கை இருக்குமோ என தான் அச்சப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பிப்ரவரி 14ஆம் தேதி இந்திய துணை பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் ஜெய்ஷி இ முகமது பயங்கரவாத இயக்கமே பொறுப்பு என்றும் செய்திகள் வந்தன.
இந்த நிலையில் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக பிப்ரவரி 26ஆம் தேதி இந்திய விமானப் படை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பால்கோட் பகுதியில் அதிகாலையில் தாக்குதல் நடத்தியது. இதில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிபிசி, ராய்ட்டர் போன்ற செய்தி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று இதனை மறுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்குப் பின் இந்திய மிக் விமானம் பாகிஸ்தானில் வீழ்ந்ததில் விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிக்கொண்டார். அவர் இரு நாட்களுக்குப் பின் இந்தியாவிடம் பாகிஸ்தானால் ஒப்படைக்கப்பட்டார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் குறைந்தாலும் எல்லையில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை அவ்வப்போது நீடித்து வருகிறது.
இந்தப் பின்னணியில் ‘ஃபைனான்சியல் டைம்’ இதழுக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “இந்தியாவில் பொதுத் தேர்தல் நடப்பதற்கு முன் என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருப்பதாக எனக்குச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன” என்று சொல்லியிருக்கிறார்.
மேலும், “எனது ஆட்சிக்காலத்தில் ‘புதிய பாகிஸ்தான்’ பிறந்திருக்கிறது. புதிய பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு இடமில்லை. பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை விதித்து அவற்றைச் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். இதுவரை இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒடுக்கியுள்ளோம்.
ஆனாலும், இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன் இந்திய தரப்பிலிருந்து மீண்டும் ஏதோ ஒரு ராணுவப் பகை நடவடிக்கை இருக்குமோ என்று நான் பயப்படுகிறேன். ஏதோ ஒன்று நடக்கப் போவதற்கான அறிகுறிகளை நான் உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.
READ MORE | comments

வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிய வடக்கு ஆளுநர்!

ஐ. நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையிலுள்ள சில குறைபாடுகளை உயர்ஸ்தானிகர் ஏற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியதாக இலங்கை குழு உறுப்பினரும் வட மாகாண ஆளுநருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ள கருத்தை ஐ. நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் மிசல் பசிலேட் முற்றாக நிராகரித்துள்ளார்.
மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் தான் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை குழுவுடனான கலந்துரையாடலில் தான் தெரிவித்த கருத்துகள் திரிபுபடுத்தப்பட்டிருப்பது குறித்து கவலையடைந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணையாளர், மனித உரிமையாளரால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த மார்ச் 20ம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைப் பேரவையில் பங்கேற்க வந்திருந்த இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழுவொன்றுடன் தான் அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலக அறிக்கை ஒன்று தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இலங்கை அரசின் ஒரு முக்கிய அதிகாரி செவ்வாய்கிழமையன்று பத்திரிகை ஒன்றிற்கு கருத்துத் தெரிவிக்கையில் தவறான விதத்தில் எடுத்துரைத்துள்ளார்.
இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழவின் ஒரு அங்கத்தவராக ஜெனீவாவில் பங்கேற்ற வட மாகாண ஆளுநரான கலாநிதி சுரேன் ராகவன் கருத்துத் தெரிவிக்கையில், ‘இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐ. நா மனித உரிமை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் அறிக்கையில் உள்ள சில விடயங்களை எவ்வகையிலும் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது’ என ஐ. நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதன் பிறகு ‘அதிக பொறுப்புணர்ச்சி மற்றும் எச்சரிக்கையுடன்’ செயல்படுமாறு ஐ.நா மனித உரிமை உயர் ஸ்தானிகர் அவருடைய இரு முக்கிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியதாக ஆளுநர் ராகவன் கூறியதாக பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் வட மாகாண ஆளுனரின் மேற்படி கூற்றுக்களை முற்றாக மறுக்கும் ஐ. நா மனித உரிமை உயர் ஸ்தானிகர் பேஷிலெட், ‘இந்த இரு கருத்துக்களில் எதுவும் உண்மையானதல்ல’ என வலியுறுத்தியுள்ளார்.
‘ஒன்றில், ஆளுநர் கூறியதை பத்திரிகைகள் தவறாக புரிந்திருக்கவேண்டும். அல்லது நான் கூறியதை ஆளுநர் தவறாக விளங்கியிருக்க வேண்டும், அல்லது தவறாக என்னை மேற்கோள் காட்டியிருக்க வேண்டும்’ என உயர் ஸ்தானிகர் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த உயர் ஸ்தானிகர் பேஷிலேட், மனித உரிமை பேரவைக்கு தான் சமர்ப்பித்த எழுத்து மற்றும் வாய்மூல கூற்றுக்கள் விடயத்தில் தான் ஸ்திரமாக இருப்பதாகவும், அக்கூற்றுக்கள் இலங்கையின் தற்போதைய நிலைமையை மிகச் சரியாக பிரதிபலிப்பதாக தான் நம்புவதாகவும் கூறினார்.
‘இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழுவினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் நான் கூறிய கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளமை என்னை மிகவும் கவலை கொள்ளச் செய்துள்ளது’ எனக் கூறிய உயர் ஸ்தானிகர், ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கூறப்படும் விடயங்களை பாரிய விதத்தில் தவறாக எடுத்துரை செய்யும் போக்கை இலங்கை பத்திரிகைகள் தொடர்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
சாதாரண வழமையின் பிரகாரம் ஐ. நா. மனித உரிமை உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கையின் பிரதிகளை, அது பிரசுரிக்கப்படுவதற்கு முன் பேரவையின் 47 அங்கத்தவ நாடுகளினதும் வேண்டுகோளினடிப்படையில் இலங்கை அரசிற்கும் பகிரப்பட்டுள்ளது.
அறிக்கையை இறுதி மாற்றங்களுடன் பிரசுரிக்கப்படுவதற்கு முன் இலங்கை அரசின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதுடன், கடந்த பெப்ரவரி மாதம் ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய உயர் அதிகாரிகளைக் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இலங்கை அரசின் பல உயர் அதிகாரிகளை சந்தித்து அறிக்கையின் விடயங்கள் தொடர்பாக மிக விரிவாக கலந்துரையாடல்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கருத்து தெரிவித்த உயர் ஸ்தானிகர் பேஷிலேட், ஐ. நா மனித உரிமை பேரவையின் 30/1 (2015) மற்றும் 34/1 (2017) தீர்மானங்களை செயற்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க தானும் தனது அதிகாரிகளும் முற்றாக அர்ப்பணமாகியிருப்பதாக உறுதியளித்தார்.
அத்துடன் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தீர்மானத்தின் (40/1) போது, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசு வாக்களித்த சில விடயங்களை பூர்த்தியாக செயற்படுத்த மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டதையும் பெஷிலேட் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் 2009 ஆண்டு முடிவுக்கு வந்த மோதல்களின்போது நடைபெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கன பொறுப்புக்கூறல் மற்றும் நியாயம் வழங்குதல் தொடர்பான தமது கடப்பாடுகளை நிறைவேற்றுவதால் சம்பந்தப்பட்ட முன்னெடுப்புக்களில் இலங்கை அரசு மீள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், என்ன நடந்தது என்ற விடயம் தொடர்பான உண்மைகளை நிலை நிறுத்தவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் தேவையான தமது பொறுப்புக்களை நிறைவேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்ஸ்தானிகர் பெஷிலேட் வலியுறுத்தினார்.
READ MORE | comments

மட்டக்களப்பில் சிறந்ததொரு கூத்துக்கலைஞராக விளங்கிய கலாபூஷணம் கந்தையா சோமசுந்தரம் இறைபதமடைந்தார்




க.விஜயரெத்தினம்

துறைநீலாவணை கிராமத்தின் கரகாட்டக்கலைஞர் கலாபூஷணம் கந்தையா சோமசுந்தரம் தனது 78ஆவது வயதில் இயற்கை எய்தினார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்ததொரு கூத்துக்கலைஞராக திகழ்ந்தும்,அரச திணைக்களங்களில் நடைபெறும் கலைநிகழ்வுகளிலும்,பல ஆலயங்களில் நடைபெறும் உற்சவ காலங்களிலும் கலந்துகொண்டு கரகம் ஆடியும், கிராமியக்கலைக்கு புத்துயிர் அளித்துவரும் கந்தையா சோமசுந்தரம் தனது இல்லத்தில் வியாழக்கிழமை(28)காலை 7.00 மணியளவில் வெல்லாவெளி மாலையர்கட்டில் இறைபதமடைந்தார்.



துறைநீலாவணை கிராமத்தில் பிறந்த இவர் கூத்துக்கலைகளில் சிறப்பாக அமைந்துள்ள கரகாட்டம் ஆடுவதில் வல்லவராக கிழக்கு மாகாணத்திலே திகழ்ந்தார்.இவர் தனது 18ஆவது வயதில் துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலயத்தில் முதன்முதலாக கரகம் ஆடுவதில் ஈடுபட்டார்.ஒர் சிறந்த கூத்துக்கலைஞராக திகழ்ந்த இவர் 2012 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அரசவிருதான கலாபூஷணம் விருதைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



2018ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கல்வி, பண்பாடு, கலாச்சார, விளையாட்டுதுறை அமைச்சினால் நடாத்தப்பட்ட தமிழ் இலக்கிய விழாவில் உயர்விருதான "வித்தகர் விருது" வழங்கியும்,பொன்னாடை போற்றியும் கௌரவிக்கப்பட்டார்.இவரை பல சமூக நிறுவனங்கள்,அரச திணைக்களங்கள் இவரின் கரகாட்டக்கலையை பாராட்டி கௌரவித்துள்ளது.



கரகாட்டக்கலைஞர்,கலைத்தென்றல்,வித்தகர் விருது,கலாபூஷணம் உட்பட பல விருதுகளை கரகாட்டக்கலை மூலம் பெற்று சிறந்த கலைஞராக வடகிழக்கு,மலையம் போன்ற பகுதிகளில் கரகம் ஆடி தனது கரகாட்டக்கலையை இறக்கும்வரையும் வளர்த்தெடுத்து கூத்துக்கலையையும்,கரகாட்டக்கலையையும் பேணிப்பாதுகாத்து வந்துள்ளார்.



சிறந்த சமூகசிந்தனையும்,கலைப்பற்றும் உள்ள சோமசுந்தரம் தமிழ்தேசிய கொள்கையுடன் இறுதிவரையும் மூச்சுவிட்டார்.இவர் எல்லைப் புறத்தித்திலிருந்து பல தமிழ் கிராமங்களை பாதுகாத்தவர்.
READ MORE | comments

ஐ. நா தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை தயார் இல்லை : ஜனாதிபதி


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
”நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரான எந்தவொரு யோசனையையும், நிச்சயமாக நடைமுறைப்படுத்தமாட்டேன்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பல அறிக்கைகள் தவறானவை. சரியானதை மாத்திரம் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் தவறானவற்றை நிராகரிக்கும்.
வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள காணிகள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர், சில குழுக்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார்.
அவரது அறிக்கையில் காணிகள் விடுவிப்பு தொடர்பாக கூறப்பட்டுள்ள பரிந்துரையை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க அரசாங்கம் எடுத்து முடிவு பற்றி எனக்குத் தெரியாது.
எனக்கு அறிவிக்காமலேயெ, பெப்ரவரி 25ஆம் நாள், ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதனை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா சார்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கை எனது தலையீட்டுடன் தான் வரையப்பட்டது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான கலப்பு விசாரணைக்கு உறுதியான எதிர்ப்பு தெரிவிப்பதே அதன் நோக்கம்.
சிறிலங்காவுக்கு வெளிநாடுகளுடனான உறவுகள் முக்கியம். ஆனால், வெளிநாட்டு சக்திகளை இங்கு அதிகாரம் செலுத்த அனுமதிக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

தரம் 13 வரை கட்டாய கல்வியை தொடரும் மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு


அரசாங்க பாடசாலைகளில் தரம் 13 வரையிலான கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை ஊடாக நிறுவனப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

தரம் 13 உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் கற்கைநெறியை தொடரும் மாணவர்கள் 2ஆம் கல்வி ஆண்டில் தெரிவுசெய்யப்பட்ட தொழில் விடயத்துக்கான தேசிய தொழில் ஆற்றல் (NVQ) 4 மட்ட சான்றிதழை வழங்குவதற்கு அனுமதியுள்ள தொழில் பயிற்சி நிறுவனத்தில் கல்வியை பெறவேண்டியுள்ளது.

இவ்வாறான தொழில் பயிற்சி நிறுவனங்கள் பல முக்கிய நகரங்களில் அமைந்துள்ளமை மற்றும் சில பயிற்சி நிறுவனம் ஒரு இடத்தில் மாத்திரம் அமைந்திருப்பதன் காரணமாக சில மாணவர்கள் போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக அதிக தொகையை செலவிடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாடசாலை ஊடாக நிறுவனப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் ஏனைய செலவுகளுக்காக நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
READ MORE | comments

மட்/குருக்கள்மடத்தைச் சேர்ந்த செல்லையா தவராசா 26.03.2019 அன்று காலமானார்

Wednesday, March 27, 2019

மட்/குருக்கள்மடத்தைச் சேர்ந்த செல்லையா தவராசா 26.03.2019 அன்று காலமானார்









READ MORE | comments

5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை ரத்துசெய்ய அரசு முடிவு : ஜனாதிபதி

Tuesday, March 26, 2019


தனது முன்மொழிவுகளில் ஒன்றாக அரசாங்கம் 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை ரத்துசெய்ய முடிவெடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துளார்.
பொலநறுவையில் நிகழ்வு ஒன்றில் நேற்று உரை ஆற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர், வசதி இல்லாத மாணவர்கள் பாடசாலைக்கு கூடுதல் வசதிகளுடன் செல்வதற்கான சந்தர்ப்பதை வழங்கும் பொருட்டே புலமைப்பரிசில் பரீட்சை கொண்டுவரப்பட்டதாகவும் ஆனால் இன்று பிரபல பாடசாலைகளுக்கு செல்வதற்கான போட்டி பரீட்சையாக மாறிவிட்டதாகவும் அவர் கூறினார்.
புலமை பரிசில் பரீட்சையில் பெரும் பிரச்சினை இருப்பதாகவும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் அனேகமானவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடையாதவர்களே என்றும் அவர் கூறினார்.
READ MORE | comments

மட்டக்களப்பில் ரணவிரு குடும்பங்களுக்கு வீடுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவிரு குடும்பங்களுக்காக அமைக்கப்பட்ட 39 வீடுகள் எதிர்வரும் 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக ரணவிரு சேவா அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் ரீ.எச்.கீர்திகா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று காலை ரணவிரு சேவா சங்கத்தின் ஊடாக வீடுகள் வழங்கப்பட உள்ளவர்களுக்கான கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதில் தலைமை வகித்து உரையாற்றும் போதே ரீ.எச்.கீர்திகா ஜயவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவிரு சேவா பயனாளிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 39 குடும்பங்களுக்காக ஒவ்வொன்றும் தலா 2,250,000 ரூபாய் செலவில் வீடுகள் அமைக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு வீட்டு பத்திரங்களை வழங்கவுள்ளனர்.
அன்றைய தினம் 500 ரணவிரு குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.







READ MORE | comments

2018ம் ஆண்டிற்கான க.பொ.த. (சா.தர) பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படுகின்றது


2018ஆம் ஆண்டில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபெறுகள் இந்த வாரம் 28ம் திகதி வெளியாகிறது.
பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
இந்தப்பரீட்சையில் 656,641 பரீட்சாத்திகள் 4661 நிலையங்கள் ஊடாக தோற்றியுள்ளனர். பெறுபேறுகளைப் பார்வையிட

https://www.doenets.lk/     முகவரியை அழுத்துங்கள் 
READ MORE | comments

மட்டக்களப்பில் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட கூட்டம்

Monday, March 25, 2019


பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கிழக்கு அபிவிருத்தி செயலணியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட கூட்டம் நடைபெற்றுள்ளது.
குறித்த விசேட கூட்டமானது கிழக்கு அபிவிருத்தி செயலணியின் கிழக்கு மாகாணத்திற்கான இணைப்பாளர் குகநாதன் தலைமையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் கிழக்கு அபிவிருத்தி செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஜெயசிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வரவு செலவு திட்டத்தின் ஊடாக அபிவிருத்திக்கு முதல் கட்டமாக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதன்மூலம் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக குடிநீர், சுகாதாரம், கல்வி, வீதி கட்டமைகள், உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய வாழ்வாதார திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நீண்டகால அபிவிருத்திகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.



READ MORE | comments

ஏப்ரல் இறுதி வரை நாடுமுழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுத்தப்படும் என மின்சார சபை தகவல்


ஏப்ரல் இறுதியில் பருவகால மழைவீழ்ச்சி ஏற்படும்வரை நாடுமுழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுத்தப்படும்” என்று மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள அதிகரித்த வெப்பத்துடனான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியாகும் நீர்வீழ்ச்சிகளின் நீர் வரத்துக்கு குறைவடைந்துள்ளது.அதனால் கிடைக்கின்ற மின் உற்பத்தியைக் கொண்டு மின் வழங்கலை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைக்கு இலங்கை மின்சார சபை தள்ளப்பட்டுள்ளது.மேலும் மின் வெட்டு தொடர்பான தகவல்களை பெற்று கொள்ள வடக்கு மாகாணம் – 0212024444,கிழக்கு மாகாணம் – 0265988988,தொடர்பு கொள்ளும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)
READ MORE | comments

மீண்டும் உலகை உலுக்கிய கொடூரப் படுகொலை! பிணக் குவியலாக மாறிய கிராமம்!!

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான தோகோன் பழங்குடியினருக்கும் புலானி விவசாயிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தோகோன் பழங்குடியினர் அடிக்கடி புலானி மக்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி ஏராளமானவர்களை கொன்று குவித்து வருகின்றனர்.
மோப்டி பிராந்தியத்தில் புலானி மக்கள் அதிகம் வசிக்கும் ஒக்சாகாகோவ் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் தோகோன் இனத்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர்.
இவ்வாறு புகுந்தவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். கத்தி, அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் பலரை வெட்டி சாய்த்தனர்.
சற்றும் ஈவு இரக்கமின்றி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 130 பேரை கொன்று குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து ஒட்டுமொத்த கிராமத்தையும் சூறையாடிவிட்டு தோகோன் இனத்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதன் காரணமாக அப் பிரதேசத்தில் உள்ள புலோனி விவசாய மக்கள் எப்பொழுதும் அச்சத்துடன் வாழ்ந்து வருகினறனர்.


READ MORE | comments

மக்களே அவதானம்! கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வைத்தியர்களின் எச்சரிக்கை

நாட்டில் கடந்த மாதத்தில் இருந்து அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக பல சுகாதார பிரச்சனைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் அதி வெப்பமான காலநிலை கடந்த ஒரு மாத காலமாக நிலவி வருவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல்வேறு நோய் தொற்றுக்குள்ளாகி அரச மற்றும் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விவசாயச் செய்கைக்கு அதிகளவான நீர் கடந்த சிறுபோகத்திற்கு திறந்து விடப்பட்டதாலும் இருமாத காலமாக மழைவீழ்ச்சி இப் பகுதிகளில் கிடைக்காததாலும் நீர் நிலைகள் வற்றி வறண்டு வருவதுடன், புழுதிப்படலம் மனித சுவாசத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
அவ்வப்போது ஏற்படுகின்ற சுழல் காற்றினால் புழுதிப்படலம் மிக மோசமான சுற்றாடல் தாக்கத்தினை உண்டாக்கியும் வருகின்றது.
தற்போது சூழலில் வெப்பம் அதிகரித்து வருவதினால் மனித உடலில் இருந்து வியர்வை அதிகம் வெளியேறுகின்றது இதன் காரணமாக வியர்க்குரு, கொப்பளங்கள் தோலில் ஏற்பட்டு அவதிக்குள்ளாவதுடன் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வைத்திய சிகிச்சைக்கு உட்பட்டு வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மக்கள் நீர்ச்சத்து அதிகம் உள்ள கீரைவகைகள், வெள்ளரி, தர்பூசனி, இளநீர் போன்ற பல பொருட்களை அதிகளவில் உட்கொள்ளுமாறு வைத்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக இவ் வகையான உணவுகளை கூடுதலாக கொள்வனவு செய்வதனால் இவற்றின் விலைகள் சந்தையில் சடுதியாக அதிகரித்தும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

சிறுபான்மை மக்கள் என எவருமில்லை!

Sunday, March 24, 2019

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றிரவு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
செய்தியாளர்: ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாரா?
கோத்தபாய: தயார்... தயார்.
செய்தியாளர்: உங்களை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கோத்தபாய: மகிந்த ராஜபக்ச வருகிறார். விபரங்களை அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.
செய்தியாளர்: உங்களை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோத்தபாய: அது முக்கியமல்ல. நாட்டை எப்படி முன்னோக்கி கொண்டு செல்வது என்பதே முக்கியம். வேட்பாளர் யார் என்பதற்கு பதிலாக மாற்றம் ஏற்பட்ட பின்னர், கொள்கையை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதே முக்கியமானது.
செய்தியாளர்: ஜெனிவா யோசனைக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளது. அது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
கோத்தபாய: உலகில் உள்ள பிரதான நாடுகள் கூட பயங்கரவாதத்திற்கு எதிராக பயங்கரவாதத்தை எதிர்கொண்டு, பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டுள்ளன. அந்நாடுகளை பாராட்டி, அதனை வெற்றி என கருதுகின்றனர்.
எனினும் உலகில் மிகவும் பயங்கரமான பயங்கரவாதத்தை நாங்கள் தோற்கடித்த பின்னர், தோற்கடித்தவர்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். இது மிகவும் அநீதியானது. இதில் இருந்து உலகம் பாடம் கற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.
நாங்கள் போரை மட்டும் செய்யவில்லை. போருக்கு பின்னர் பெரியளவில் புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கினோம். அவற்றை மறந்து விட்டனர்.
செய்தியாளர்: நீங்கள் உங்களது வெளிநாட்டு குடியுரிமையை கைவிடுவீர்களா?.
கோத்தபாய: அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.
செய்தியாளர்: சிறுபான்மை இனத்தவர்களின் ஆதரவு எப்படி இருக்கின்றது?
கோத்தபாய :சிறுபான்மை மக்கள் என்று ஒன்றில்லை. இலங்கையர்கள் என்ற வகையில் அனைத்து இனங்களுக்கும் தற்போதைய அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. நாங்கள் பொதுவாகவே இந்த பிரச்சினையை அணுகுவோம்.
செய்தியாளர்: முழு நாடும் உங்களது தயார் நிலை குறித்து எதிர்பார்த்துள்ளது?
கோத்தபாய: மிகவும் நல்லது.
READ MORE | comments

சுமந்திரனை படுகொலை செய்யதிட்டம்?

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தற்போதைய அமர்வுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனை தென்னிலங்கை பாதாள உலகக் குழு மூலமும் தீர்த்துக்கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டமை அம்பலமாகியிருப்பதாகக் கொழும்பு சிங்களப் பத்திரிகை ஒன்று பரபரப்புத் தகவல் வெளியிட்டிருக்கின்றது.
2016 கடைசிக்கும் 2017 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் முன்னாள் போராளிகள் சிலரைப் பயன்படுத்தி வடக்கில் வைத்து கிளைமோர் தாக்குதல் மூலம் சுமந்திரனைக் கொல்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன.
அந்தச் சந்தேக நபர்கள் நான்கு தடவைகள் சுமந்திரனைக் கொல்ல முயன்றனர். ஆனால், முயற்சி பயனளிக்கவில்லை.
இது தொடர்பாகப் புனர்வாழ்வளிக்கப்பட்ட நான்கு முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்பட்டனர். அந்த முயற்சிக்குப் பின்னால் நோர்வேயைச் சேர்ந்த ஒருவர் சூத்திரதாரியாக இருந்தார்.
இப்போது கொழும்பில் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த மகிழன்கமுவ சஞ்சீவ என்பவர் மூலம் சுமந்திரனைக் கொல்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டமை பற்றிய தகவல் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.
விடுதலைப் புலிகள் உறுப்பினராக இருந்த வேந்திரன் என்பவர் ஆஸ்திரேலியாவுக்கும் பிற இடங்களுக்கும் ஆள்களைக் கடத்தும் விடயம் சம்பந்தமாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அவருக்கும் சமையன் குழு என்ற பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த அஸங்க என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அஸங்கவே பின்னர் சஞ்சீவவை வேந்திரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
இவர்கள் இருவரும் பின்னர் பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அண்மையில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் வேந்திரன் உட்பட எட்டுப் பேரை ஆயுதங்களுடன் வெயாங்கொடைப் பகுதியில் வைத்துக் கைதுசெய்தனர்.
அந்தக் குழுவினரைப் பொலிஸார் நன்றாகக் கவனித்து விசாரித்தபோதே பிரான்ஸிலும், சுவிட்ஸர்லாந்திலும் உள்ள புகலிடத் தமிழர்கள் சிலர் பணத்துக்கு சுமந்திரனைக் கொல்லுவதற்கு - அதுவும் தற்போதைய ஜெனிவா அமர்வு முன்னர் அவரைத் தீர்த்துக் கட்டுவதற்கு - வழிகாட்டுதல் வழங்கியிருந்தனர் என்ற அதிர்ச்சித் தகவல் பொலிஸாருக்குத் தெரியவந்தது.
என குறித்த பத்திரிகையின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
READ MORE | comments

தெற்கில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கப்பல் மதுஷுடையதா? : (PHOTOS)


இலங்கைக்கு தெற்கே கடல் பகுதியில் ஹெரோயினுடன் பிடிக்கப்பட்ட கப்பலுக்கும் டுபாயில் கைதாகியுள்ள மாந்துர மதுஷுக்கும் இடையே தொடர்புகள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இன்று அதிகாலை கடல்பகுதியில் குறித்த கப்பலை சுற்றி வளைத்த போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் கடற்படையினர் அதிலிருந்து 100 கிலோ ஹெரோயினுடன் 7 ஈரானியர்களை கைது செய்திருந்தனர்.

இதன்போது அந்த கப்பலிலில் 600 கிலோ வரையான ஹெரோயின் இருந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதுடன் அவற்றில் 100 கிலோ கடலில் கொட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த கப்பல் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் ஊடாக வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் இதனுடன் மாகந்துர மதுஷின் தொடர்புகள் இருந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. -(3)2 6
READ MORE | comments

மின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு


பிரதேசங்கள் சிலவற்றில் தற்போது இடம்பெறும் மின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு இடம்பெறுமெனவும் அதற்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் மின்சாரதுறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கேள்விக்கு அதிகமாக விநியோகம் இடம்பெறுகின்றது. இன்னும் 10 நாட்களில் இதற்கான தீர்வுகள் மேற்கொள்ளப்படும் அது வரை மின் வெட்டுக்கள் இடம்பெறும். இந்நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி தமக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். -(3)
READ MORE | comments

நாடு பூராகவும் நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு : நேர அட்டவணை வெளியானது


அளவுக்கு அதிகமான மின்சாரத்திற்கான கேள்விகளால் போதுமான அளவுக்கு தொடர்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் நாளை முதல் மின்வெட்டுகளை மேற்கொள்ளும் வகையில் நேர அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஒவ்வொரு பிரதேசங்களிலும் பகுதி பகுதியாக காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையும் , முற்பகல் 11.30 மணிமுதல் பிற்பகல் 2.30 மணி வரையும் , பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரையும் , மாலை 6 மணி முதல் 7.30 மணி வரையும் மற்றும் இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் மின் வெட்டு இடம்பெறவுள்ளது. -(3)
READ MORE | comments

அடிக்கடி மின் வெட்டு இடம்பெறலாம்

Saturday, March 23, 2019


பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைவடையும் நிலையில் அதனால் நாட்டில் அடிக்கடி மின் வெட்டு இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறாக மின் வெட்டு இடம்பெறும் பிரதேசங்கள் , நேரங்கள் குறித்த தகவல்கள் மின்சார சபையினால் மின்சார துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)
READ MORE | comments

ஐ.பி.எல் திருவிழா இன்று ஆரம்பம் : சென்னை-பெங்களூரு முதல் போட்டியில் மோதல்


12 ஆவது ஐ.பி.எல். ரி 20 கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இன்று தொடங்கவுள்ள போட்டிகள் எதிர்வரும் மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.

இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

2011 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு ஐ.பி.எல். போட்டி ஆரம்பமானது.. ஆனால் முதல்முறையாக இந்த ஆண்டு உலக கிண்ண போட்டிக்கு முன்பாக ஐ.பி.எல். நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். முடிந்து அடுத்த இரண்டரை வாரங்களில் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதனால் இந்த ஐ.பி.எல்.-ல் முன்னணி வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி நல்ல ஆட்டத்திறனோடு தேசிய அணிக்கு திரும்ப முயற்சிப்பார்கள். அதனால் இந்த ஐ.பி.எல். தனித்துவம் பெற்றுள்ளது.

தொடக்க லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும்இ விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) களமிறங்குகின்றன.

பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த சீசனில் அம்பத்தி ராயுடு (602 ரன்), ஷேன் வாட்சன் (555 ரன்), கேப்டன் டோனி (455 ரன்), சுரேஷ் ரெய்னா (445 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் அளித்த கணிசமான பங்களிப்பு கோப்பையை வெல்ல உதவிகரமாக இருந்தது. இந்த முறையும் இவர்களை தான் சென்னை அணி அதிகமாக நம்பி இருக்கிறது. சென்னை அணியில் 12 வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள். இதில் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிருக்கு 39 வயது ஆகிறது. ஆனாலும் அவர்களின் அனுபவம் அணிக்கு அனுகூலமாக இருக்கும்.

உள்ளூரில் ரசிகர்களின் ஆரவாரம் சென்னை அணிக்கு எப்போதும் கூடுதல் உத்வேகம் அளிக்கும். காவிரி நதிநீர் பிரச்சினை போராட்டம் காரணமாக கடந்த ஆண்டில் சென்னையில் ஒரு ஆட்டம் மட்டுமே நடந்தது. எஞ்சிய ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த முறை இங்கு 7 லீக்கிலும் சென்னை அணி விளையாட இருப்பது சாதகமான அம்சமாகும். -(3)
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |