மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமிகளுக்கும் சேர்த்து போராடுவோம்!

Saturday, July 31, 2021

 


மட்டக்களப்பு மாவட்டத்திலும் படுகொலை செய்யப்பட்ட பல சிறுமிகள் இருக்கின்றார்கள் அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா .சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சாந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் கூட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்னால் ஒரு சகோதரர் கொலை செய்யப்பட்ட அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்பது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. மட்டக்களப்பில் இந்த கொலைக்கு யாராவது அரசியல்வாதிகள் குரல் கொடுத்திருக்கின்றார்களா?

தீர்வினை பெற்று கொடுக்க வேண்டியவர்கள் வீதியில் நின்று போராட்டம் செய்வது வேடிக்கையாக இருக்கின்றது. அரசாங்க அமைச்சர்களும் போராட்டம் நடத்துகின்றனர். ரிஷாட் பதியுதீன்  வீட்டில் மரணமடைந்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

முதலாவதாக அந்த சிறுமிக்கான நீதி கண்டறியப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவன் நான். இரு சமூகங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்த முனையும் இந்த ஒட்டு குழுவினர் ஏன் மட்டக்களப்பில் படுகொலை செய்யப்படட இன்னும் பல சிறுமிகள் இருக்கின்றனர் அவற்றுக்கு எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகின்றேன் .

உண்மையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் தான் ஊடகங்களுக்கு அதிகமான இறுக்கமான சூழல் காணப்படுகின்றது.  அபிவிருத்திக் குழு கூட்டங்களில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை ஊடகங்கள் இதில் உன்னிப்பாக இருக்க வேண்டும். 4 மணித்தியாலம் நடைபெறுகின்ற கூட்டத்தில் நாலு நிமிட ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்த முடியுமா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

நீதிமன்ற கட்டளையை மீறி மாதவனை மயிலைத்த மடு பகுதியில் அடுத்த போக விவசாயத்துக்கான ஏற்பாடுகளை ஆளுநரின் அதிகாரத்தை பயன்படுத்தி மேற்கொண்டு வருகின்றனர். இவற்றை நாங்கள் கேள்வி எழுப்பினால் குழப்பவாதிகள் என சித்தரிக்கப்பட்டு அழைப்பு விடுக்க மாட்டோம் என்று தெரிவிக்கின்றார்கள்.

பல எல்லை காணிகள் திட்டமிட்டு கபளிகரம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஒரு சிங்கள பிரதிநிதித்துவத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள் தான் தற்போது நடைபெற்று வருகின்றது அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது .

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டு வருகின்றோம் ஐ.நா சபை வரைக்கும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. இன்று வடக்கு கிழக்கில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக காஸின் விலை மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபட்ட விலை காணப்படுகின்றது.

ஆகவே வடக்கு கிழக்குக்கு மட்டும் ஏன் இப்படியான அநீதி இடம் பெறுகின்றது என்பது தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

READ MORE | comments

ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்- இம்ரான் எம்.பி...!!

 


(எப்.முபாரக்)

சில கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்களது கோரிக்கை நியாயமானது என்பதால் இது குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாம் எமது நல்லாட்சி அரசு காலத்தில் ஆசிரியர்கள் உட்பட சகல அரச உத்தியோகத்தர்களினதும் அடிப்படைச் சம்பளத்தை 100 சதவீதம் அதிகரித்தோம். முன்னைய அரசு அதிகரித்து வைத்திருந்த எரிபொருள், சமையலறை எரிவாயு என்பவற்றின் விலைகளைக் கனிசமான அளவு குறைத்திருந்தோம். ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டன. சகல மருந்துப் பொருட்களினது விலைகளும் குறைக்கப்பட்டன.

இதனால் அரச உத்தியோகத்தர்கள் கடனின்றி சம்பளத்துள் சமாளித்து வாழும் நிலை உருவாக்கப்பட்டது. ஏனையோரும் தமது வருமானத்துக் கேற்ப வாழும் நிலை உருவாக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் மற்றுமொரு சம்பள அதிகரிப்புக்கான அமைச்சரவைப் பத்திரமும் எமது அரசு காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.


இந்த அரசு ஆட்சிக்கு வந்ததும் அந்த அமைச்சரவைப் பத்திரத்தை இரத்து செய்தது. சகல பொருட்களினதும் விலைகளும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. மக்கள் மீது பெருஞ் சுமைகள் திணிக்கப்பட்டுள்ளது. தமது சம்பளத்துள் வாழ முடியாத சூழ்நிலை அரச உத்தியோகத்தர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர்கள் தமது அந்தஸ்தை உறுதிப் படுத்தும் வகையிலும், நாட்டின் ஜனநாயகக் கல்வி முறையை உறுதிப் படுத்தும் வகையிலும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களது இந்த ஜனநாயகப் போராட்டத்துக்கும் அரசினால் இடையூறு செய்யப்பட்டது. இது கவலைக்குரிய விடயமாகும்.

எனவே, ஆசிரியர்களது இந்த நியாயமான கோரிக்கைகள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் திருப்திப் படும் வகையில் தீர்வினை முன்வைக்க வேண்டும்.
READ MORE | comments

விரைவில் தீர்வு காண்போம்! அரசாங்கம் வழங்கிய உறுதி


ஆசிரியர் - அதிபர் சம்பள பிரச்சினைக்கு கொள்கை ரீதியில் தீர்வு வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் பாவனையாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினை தொழிற்சங்கத்தினர் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வர்த்தகத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

ஆசிரியர் தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் முரண்பாடான வகையில் அமைந்துள்ளது.

ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளை நிறைவேற்ற கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்க தீர்மானித்துள்ளோம்.

ஏதிர்வரும் திங்கட்கிழமை இப்பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் தீர்வு வழங்குவதாகவும் அவரி மேலும் தெரிவித்துள்ளார்

READ MORE | comments

மட்டக்களப்பில் நான்கு பகுதிகள் தொடர்ச்சியாக சிவப்பு வலயங்களாக அடையாளம்...!!

Friday, July 30, 2021

 


ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு பிராந்தியத்தில் மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இதுவரை இரண்டு இலட்சத்து 78 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் இரண்டு இலட்சத்து ஆறாயிரம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பில் 58 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மட்டக்களப்பில் இதுவரை 8,525 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
READ MORE | comments

ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி இலங்கை சாதனை -WHO பாராட்டு!

 


ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திய இலங்கையின் சாதனையை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.


இலங்கையில் கொரோனா வைரஸுக்கு எதிராக நேற்று (வியாழக்கிழமை) 5 இலட்சத்து 15 ஆயிரத்து 830 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த மைல்கல்லை எட்டிய சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்கத்திற்கு உலக சுகாதார அமைப்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

அரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் அதிகரிப்பு?


 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்க வரவு செலவு திட்டத்தில் அவதானம் செலுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சூம் தொழில்நுட்பத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர், அதிபர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை இணக்கம் வெளியிட்ட போதிலும் இது தொடர்பில் ஆசிரியர் சங்கத்துடன் விசேட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

கல்முனைப்பிராந்தியத்தில் 79 கர்ப்பிணிகளுக்கு கொரோனா!

Thursday, July 29, 2021

 


கல்முனை பிராந்தியத்தில்  இதுவரை 79 கர்ப்பிணி பெண்கள் கொவிட் 19 நோயாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள் . 

கூடுதலாக அக்கரைப்பற்றில் 15பேரும் பொத்துவிலில் 13பேரும் சம்மாந்துறையில் 11பேரும் ஏனைய பிரதேச ங்களில் 10க்கும் குறைந்த கர்ப்பிணிகள் கொவிட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தடுப்பூசி இரண்டாம்கட்டம் இன்று ஆரம்பம்.

இதேவேளை கல்முனைப் பிராந்தியத்திற்கான இரண்டாம்கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று வியாழக்கிழமை (29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இதற்கென 1லட்சத்து 50ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் வந்துசேர்ந்துள்ளன.அவற்றை இன்று(29) முதல் சகல 13சுகாதாரப்பிரிவுகளிலும் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சனி ஞாயிறு இருதினங்களிலும் 50ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தெரிந்ததே.

கர்ப்பிணி பெண்களுக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து தடுப்பூசிகளை ஏற்றி கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தபட்டுள்ளது 

கல்முனைப்பிராந்தியத்திலுள்ள  13 சுகாதாரவைத்தியஅதிகாரிகள் பிரிவுகளிலுள்ள 07ஆதாரவைத்தியசாலைகளிலும் 13 பிரதேச வைத்தியசாலைகளிலும் சுகாதாரப்பிரிவினர் ஏற்படுத்தும் பாடசாலைகள் போன்ற விசேடமையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும்.

முன் ஏற்பாட்டு வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 30வயதுக்கு மேற்பட்டோர் கர்ப்பிணித்தாய்மார்கள் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலை மற்றும் சுகாதாரஅலுவலகங்களில் பணியாற்றுவோர் வீட்டிலிருக்கும் நெருங்கிய உறவுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படவிருக்கின்றன.

அதேவேளை பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன. முதலாம்கட்டத்தில் தவறவிட்டவர்கள் இன்றுமுதல் அதனை ஏற்றிக்கொள்ளலாம்.

READ MORE | comments

கல்விச்சமுகம் அரசாங்கத்துக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

 


ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகள் நியாயமான முறையில் தீர்க்கப்படாவிட்டால், தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை அடுத்த திங்கட்கிழமை தீவிரப்படுத்தப்படும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று (28) தெரிவித்தார்.

அலரி மாளிகையில் பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர், ஆசிரியர் எதிர்கொள்ளும் முதன்மை பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தாலும், அத்தகைய தீர்வுக்கு உடன்படவில்லை என்று அவர் கூறினார்.

ஆசிரியர்-முதன்மை பிரச்சினைகள் குறித்து அமைச்சரவை துணைக்குழுவை நியமித்து, அவர்களுடன் கலந்துரையாட தொழிற்சங்கங்களை கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார், ஆனால் தொழிற்சங்கங்கள் அத்தகைய எந்தவொரு குழுவையும் அறிந்திருக்கவில்லை. குழுவின் தலைவர் அல்லது உறுப்பினர்கள் யாரென தெரியாததால் குழு யாருடன் ஆலோசிக்கப்படும் என்பது தெளிவாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் தாமதத்தை காட்டுவதால் ஒன்லைன் கல்வியில் இருந்து விலகிய நிலையில் தொழிற்சங்கப் போராட்டத்தை தீவிரப்படுத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

READ MORE | comments

நாடளாவிய ரீதியில் மீண்டும் பயணக்கட்டுப்பாடு? வெளிவந்த தகவல்

 


நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களின் பெரும் எண்ணிக்கையானோர் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுவதுடன், சிக்கல் நிலைமை அதிகமாக கொண்டவர்களும் காணப்படுபவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

எனவே சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் போக்குவரத்து கட்டுப்பாடுகளை முன்னரைப் போன்று கடுமையாக்க வேண்டியேற்படும் என்றும் எச்சரித்தார்.

இது தொடர்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில்,

கடந்த சில வாரங்களைவிட தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் பெரும் எண்ணிக்கையோனோருக்கு அறிகுறிகள் தென்படுவதோடு, அவர்கள் சிக்கல் நிலைமை அதிகமுடையவர்களாகவும் உள்ளனர்.

குறிப்பாக பெருமளவானோர் ஒட்சிசன் தேவையுடையோகவுள்ளனர்.

தொற்றாளர்களை அனுமதித்து சிகிச்சையளிப்பதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த பெரும்பாலான சிகிச்சை நிலையங்கள் தற்போது நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சிகிச்சை நிலையங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்திலேனும் நாட்டை முழுமையாக திறக்க முடியுமா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.

பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படுகிறனர் என்று நாம் அவதானித்தால் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்த முடியும்.

மாறாக அவ்வாறில்லை என்றால் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் தாமதம் ஏற்படும் அல்லது கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க வேண்டியேற்படும் என்றார்.

READ MORE | comments

எட்டாத உயரத்தில் ஏழைகளின் கல்வி-சிறிமதன்

Tuesday, July 27, 2021

 



ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வியாகும். அக்கல்வியால் அறிவார்ந்த சமுதாயம் மலர்கிறது. ஒருவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி அமைக்கும்.

கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் பாடசாலைகள்,கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், தனியார்துறை நிறுவனங்கள் என அனைத்தும் பொதுமுடக்கத்தால் முடங்கிப்போயின.

கிராமம்,நகரம்,வசதி படைத்தவர்கள்,ஏழைகள் என 21-ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் உலகத்தில், கட்டமைப்பு சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக்கியுள்ளது.

கல்வி கற்கும் முறைகளில் காலந்தோறும் பல மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன கற்றல், கற்பித்தல் எனும் நேரடி வகுப்பறை நிகழ்வில் ஆசிரியரும் மாணவரும் இணைந்து செயல்படுவர். இந்நிலை இன்றைய நோய் தொற்று சூழலில் கல்வி இணைய வழியில் கற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. தகவல் தொழில்நுட்பப் பெரு வளர்ச்சியால் உலகமே ஒரு சிறிய கைப்பேசிக்குள் அடங்கிவிட்டது எனலாம்.

தற்போது நம் நாட்டில் பாடசாலை கல்வி செயற்பாடுகள் மெய்நிகர் வழியூடாக நடைபெறுகின்றது. இவ் கல்வி முறை வசதி படைத்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பயன்படும் அதே வேளை இன்னொரு பக்கத்தில் ஏழை மாணவர்களின் கல்வி மறுக்கப்படுவதாக அமைகின்றது.இதனால் மாணவர்கள் மத்தியில் கல்வி பெறும் வாய்ப்பில் ஏற்றத் தாழ்வுகள் உருவாகியுள்ளது.

இணையதளம் மூலம் கல்வி கற்பது கல்வியில் புதிய போக்காக உருவெடுத்து இருக்கலாம். ஆனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வர்க்கங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இது எப்படிப்பட்டதாக இருக்கும்?

பொருளாதார ரீதியாக பலதரப்பட்ட மக்களை கொண்டுள்ள ஒரு நாட்டில்  இப்படிப்பட்ட தவறான அணுகுமுறைகள் மாணவர்களுக்கு வெவ்வேறு அனுபவங்களை உண்டாக்கலாம்.

இலங்கையில் அதிகமான மாணவர்களுக்கு ஸ்மாட் கைபேசிகளும் இணையதள இணைப்பு இல்லாத சூழலில் இணையம் வாயிலாக கல்வி கற்பது என்பது நோய்த்தொற்று பரவலுக்கு பிந்தைய உலகில் எந்த அளவுக்கு மாணவர்களை சென்றடையும் என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

மக்கள் வாழ்விலும் பொருளாதாரத்திலும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள இச்சூழ்நிலையில் மாணவர்களின் எதிர்காலக் கல்வியிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது ஒரு மாணவன் கல்வி கற்பதற்கு தேவையான அடிப்டை தேவைகளாக இணையதளத் தொடர்பு, கணினி அல்லது ஸ்மாட் போன் முதலான வசதிகள் தேவையாகிறது.

அன்றாட கூலி வேலை செய்து வாழ்க்கையை கொண்டு செல்லும் ஒரு ஏழைக் குடும்பத்தால் ஸ்மாட் கைபேசிகளும் அதற்கான இணைய கொடுப்பனவகளையும் எவ்வாறு செலுத்தமுடியும்

ஸ்மாட் தொலைபேசி எல்லா மாணவர்களிடம் இருக்காது. அப்படியேஇருந்தாலும் இணைய இணைப்பு எல்லா நேரமும் கிடைக்காது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களால் இணைய வழியில் கல்வி கற்க முடியாத சூழல் உள்ளது. அதனால் கல்வியில் ஏற்றத் தாழ்வு ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. ஸ்மாட் தொலைபேசி இல்லாத காரணத்தால் இணையவழி வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்யும் சூழல் தற்போது நடந்து வருகிறது.உலகில் 82.6 கோடி மாணவர்களிடம் கணினி வசதி இல்லை, 70.6 கோடி மாணவர்களுக்கு இணையதள வசதி இல்லை என்ற யுனெஸ்கோவின் அறிக்கை, இணையவழி கல்விக்கான சமத்துவமின்மையைக் குறிக்கிறது.

கொரோனா நோய்தொற்றால் நாடு முடங்கி போயிருந்தாலும் கல்வி புலத்தில் இருக்கும் ஒரு சிலருக்கு இவ் காலம் பொற்காலமாகவே இருக்கின்றது தனியார் வகுப்புக்கள் என்ற போர்வையில் சில ஆசிரியர்கள் பாடசாலையில் தம்மிடம் கல்வி கற்கும் மாணவர்களை பிரத்தியோக மெய்நிகர் வகுப்புக்களில் பங்குபற்றுமாறு அவர்களை கட்டாயப்படுத்துவதுடன் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர் வசதி படைத்தவர்கள் அதிக கட்டணங்களை கொடுத்து இவ் இணைய வகுப்புக்களில் பங்குபெறச் செய்கின்றனர் ஆனால் ஏழை மாணவர்கள் பணம் இன்மையால் தங்கள் கல்வியை கற்க முடியாத சூழலில் இருக்கின்றார்கள்.

கல்வி வளமே நாட்டின் மிகச்சிறந்த மனிதவளம் ஆகும். ஆனால் இன்றைய சூழலில் கல்வி ஏழைகளுக்கு  எட்டாத உயரத்தில் உள்ளது.

-சிறிமதன்

READ MORE | comments

மட்டக்களப்பு- கல்லடி திருச்செந்தூரில் கத்திக்குத்து சம்பவம்- கத்தி குத்தினை நடத்திய நபர் தப்பி ஓட்டம்; ஒருவர் படுகாயம்...!!

Monday, July 26, 2021




மட்டக்களப்பு- கல்லடியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி பிரதேசத்தின் திருச்செந்தூர் 8ஆம் வட்டார பகுதியில் பெண் ஒருவருக்கும் ஆண் ஒருவருக்குமிடையில் வாய்த்தகர்க்கம் எழுந்துள்ள நிலையில் பெண்ணினை அவதூறாக பேசியதை அவதானித்த அங்கு நின்றிருந்த பெண்ணின் கணவன் அதனை தடுக்க முனைந்த நிலையில் மதுபோதையில் காணப்பட்ட அதே வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய செரன் அவுஸ்கோன்(சுரேன்) எனும் நபர் கையில் இருந்த சிறு கைக்கத்தியால் மூன்று தடவைகள் வெட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் கத்தி குத்துக்கு இலக்காகிய 43 வயதுடைய ரகுபதி உதயகுமார் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்தி குத்தினை நடத்திவிட்டு தப்பி சென்ற நபரை தேடும் பணியினை காத்தான்குடி பிரதேச பொலிஸார் வலைவீசி தேடிக்கொண்டு இருப்பதுடன் பொது மக்களும் தேடுதல் பணியினை மேற்கொண்டு வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

மட்டக்களப்பு- ஏறாவூரில் பிரபல ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி கைது- வியாபாரத்திற்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டது...!!

 


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

ஏறாவூர் பெண் சந்தை வீதியில் 37 வயதுடைய பிரபல ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் இன்று (திங்கள்கிழமை) மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் போதை வியாபாரத்திற்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய புலனாய்பவு பிரிவினரும் ஏறாவூர் பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 08 கிராமும் 120 மில்லி கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் போதைப் பொருள் வியாபாரத்திற்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் பிரபல போதைவஸ்து வியாபாரி என்றும் குறித்த சந்தேக நபருக்கு ஏற்கனவே போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றில் உள்ளது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறிந்த நபரே ஓட்டமாவடி , வாழைச்சேனை , பிறைந்துரைச்சேனை பிரதேசங்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை வினியோகிப்பவர் என தெரிய வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
READ MORE | comments

O/L பரீட்சை பெப்ரவரி மாதம் நடைபெறும் : கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

 


2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை அடுத்த ஆண்டு நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

அதன்படி அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் மார்ச் 03 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மேலும் உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 வரை நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

READ MORE | comments

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு!

Sunday, July 25, 2021

 


கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிகு ஆலயமாக போற்றப்படுகின்ற சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று (25) காலை 5.00 மணிக்கு தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெற்றது.


கடந்த 04 ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழா திருவோண நட்சத்திரத்தில் 25 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெற்றது.

கொடியேற்றத்தினைத் தொடர்ந்து 21 நாட்கள் இவ்வாலய மகோற்சவமானது சுகாதார துறையினரின் வழிகாட்டல்களுக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றியவாறு ஆலய நிருவாகசபையினரினதும், உபயகாரர்களதும் பங்கேற்புடன் திருவிழாக்கள் நடைபெற்றது.

இவ்வாலய மகோற்சவத்தினை காண நாட்டில் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வழமையாக வருகைதருவதுண்டு, ஆனால் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வருட மகோற்சவத்தின் இறுதிநாள் தீர்த்தோற்சவமானது ஆலய பரிபாலன சபையினர் உள்ளிட்ட உபயகாரர்கள் அடங்களாக 150 பேர் மாத்திரம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்துகொண்டதுடன், தீர்த்தோற்சம் இனிதே நிறைவுபெற்றது.
READ MORE | comments

5ஆம் தர மாணவனுக்கு உறுதியானது டெல்டா

 


இலங்கையில் முதல் தடவையாக 5ஆம் தரத்தில் பயிலும் மாணவனுக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

களுத்துறை, பேருவளை பிரதேசத்தில் உள்ள மணவனுக்கே இவ்வாறு தொற்றுறுதி செய்யப்பட்டது.

தற்போது அவர் அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார தரப்பினர் களமிறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

READ MORE | comments

மனித குலத்திற்கு மற்றுமொரு ஆபத்து - அடித்தது அபாய மணி

Friday, July 23, 2021

 


கொரோனா வைரஸின் மாறுபாடான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இவற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளில் உலக நாடுகள் முழுவதும் போராடி வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் ஏற்படலாமென உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய  மதியநேர செய்தித் தொகுப்பு, 

READ MORE | comments

தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் மீண்டும் பயணக்கட்டுப்பாடு – மக்களுக்கு எச்சரிக்கை

 


பொதுமக்கள் எதிர்வரும் வார இறுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்டால், கடந்த காலங்களில் விதித்த கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்த வேண்டி வருமென பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வார இறுதியில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக மேலதிக பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த தினத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 51 ஆயிரத்து 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகம் – ரிஷாட்டின் மனைவியின் சகோதரர் கைது

 


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமையவே மற்றுமொரு சம்பவம் தெரிய வந்துள்ளது.

இதன்போது, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணி புரிந்து வந்த பணிப்பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

44 வயதுடைய மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

22 வயதுடைய குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது

READ MORE | comments

மட்டக்களப்பு- பட்டிப்பளை பிரதேசத்தில் கடுக்காமுனை குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கை மேற்கொள்வது தொடர்பான ஆரம்ப கூட்டம்!!

 


மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வது தொடர்பான ஆரம்ப கூட்டம் கடுக்காமுனை பகுதியில் இன்று(23) காலை நடைபெற்றது.


இக்கூட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் கடுக்காமுனை குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதற்கு 300 ஏக்களர் நிலப்பரப்பு நீர்ப்பாசன தினைக்களத்தினால் தெரிவுசெய்யப்பட்டு 4 கன்டங்களுக்கு அதாவது கடுக்காமுனை, பண்டாரியாவெளி, படையாண்டவெளி மற்றும் படையாண்டகுளம் ஆகிய கண்டங்களுக்கு எத்தனை ஏக்கர் நிலப்பரப்பு தேவை என்பதனை விவசாயிகளிடம் இருந்து முன்மொழிவுகளைபெற்று நிலப்பரப்புக்களை 4 கண்டங்களுக்கும் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் கடுக்காமுனை, பண்டாரியாவெளி மற்றும் படையாண்டவெளி ஆகிய கண்டங்களுக்கு தலா 90 ஏக்கர் நிலப்பரப்பும் படையாண்டகுளம் கண்டத்திற்கு 30 ஏக்கர் நிலப்பரப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது அத்தோடு விதைக்கப்படும் நெல்லினம் விதைப்பு ஆரம்ப மற்றும் முடிவு திகதி தண்ணீர் விடும் திகதி உழவுக்கூலி ஏக்கருக்கான அறுவடைக்கூலி என்பற்றுக்கான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டு ஏகமனதாக அனைத்து கண்ட விவசாயிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் பணிப்புரைக்கு அமைய மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபாலசிங்கம், பிரதேச நீர்ப்பாசண பொறியியலாளர் சுபாகரன், பட்டிருப்பு பிரிவு உதவியாளர் மதியழகன், கமநலதிணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளர் ஜகநாத், பட்டிப்பளை பிரதேச செயலாளர் தட்சனாகௌரி தினேஸ், பட்டிப்பளை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பிரபாகன், பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் புஸ்பலிங்கம், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கட்பட்ட பகுதி விவசாயிகள் அகியோர் கலந்து கொண்டனர்.
READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள்

Thursday, July 22, 2021

 


மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரண்டு தினங்களில் இரண்டு இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.


நாளை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரி அலுலகம் ஊடாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 7863கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 112பேர் மரணமடைந்துள்ளதுடன் 6100பேர் குணமடைந்து வீடுசென்றுள்ளனர்.


கடந்தவாரம் மாத்திரம் 471 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 78000தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன் 60வயதுக்கு மேற்பட்ட 90 வீதமானவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் டாக்டர் மயூரன் தெரிவித்தார்.
READ MORE | comments

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளருக்கு வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிப்பு!

 


மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவினை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மீறக்கூடாது எனவும் நீதிமன்றத்தினை அவமதிக்கும் நிலையினை ஏற்படுத்தக்கூடாது எனவும் ஆணையாளரின் சட்டத்தரணி ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுதந்திரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாநகர முதல்வரால், ஆணையாளருக்கு எதிராக இடைக்கால தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (22)வியாழக்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மாநகர சட்டத்தின்படி மேயருக்கு இருக்கின்ற அதிகாரங்களை, விரும்பினால் ஆணையாளருக்கு பாரப்படுத்தலாம். அப்படியாக இந்தப் புதிய ஆணையாளர் வந்தபோது 10 அதிகாரங்கள் கையளிக்கப்பட்டிருந்தன. ஆனால், அதற்குப் பின்னர், கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி இன்னொரு சபைத் தீர்மானத்தின் மூலமாக கையளிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டன. அந்த அதிகாரங்களை சட்டப்படி மீளப்பெற்றிருந்தாலும்கூட தான் அதற்கு ஒழுகி நடக்கமடாட்டேன் என்றும் அந்த அதிகாரங்களைத் தானே பயன்படுத்துவென் என்றும் ஆணையாளர் விடாப்பிடியாகச் செயற்பட்டுக்கொண்டிருப்பதன் காரணமாக அவரை அப்படியான செயற்பாட்டில் இருந்து தவிர்ப்பதற்கும் அந்த அதிகாரங்களை அவர் உபயோகிப்பதைச் சட்டப்படியாக நிறுத்துவதற்கும் இவ்வாறு இடைக்கால தடை எழுத்தாணை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான இடைக்கால தலையீடு செய்யக் கூடாது என்றே நீதிமன்றம் இடைக்காலத் தடையத்தரவு கடந்த வழக்கில் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் நீதிமன்றத்தின் உத்தரவினையும் மீறி ஆணையாளர் தொடர்ச்சியாக முதல்வரினால் வழங்கப்பட்ட அதிகாரத்தில் தலையீடுசெய்வதாக இன்றைய தினம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக மாநகர முதல்வரின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் இரண்டாவது எதிர் மனுதாரரான உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் சார்பாக மாநகர முதல்வரால் கோரப்பட்ட மனுவில் உள்ள நிவாரணங்களை வழங்குவதில் எந்தவித ஆட்சேபனையும் தனக்கு இல்லை எனவும், தனது பெயரினை வழக்கில் இருந்து விடுவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். எனினும் நீதிமன்றம் அவரின் பெயர் தொடர்ச்சியாக இருக்கட்டும் எனவும் அவர் சார்பாக அவரின் சட்டத்தரணி மட்டும் ஆயராகும்படி உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஆணையாளரின் சட்டத்தரணி மாற்றப்பட்டுள்ளதாகவும், புதிய சட்டத்தரணி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் போதிய கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டமைக்கு அமைய இந்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களில் 7 பேர் பலி !

Wednesday, July 21, 2021


 கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.


அதில் மோட்டார் சைக்களில் விபத்துக்களிலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வாரம் முதல் நாள் தோறும் சுமார் 10 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, வார இறுதி நாட்களில் மது போதையில் வாகன செலுத்தும் சாரதிகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் நடவடிக்கை செயற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
READ MORE | comments

மட்டக்களப்பில் வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கத்தினால் டயகம சிறுமியின் உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

 


மட்டக்களப்பில் வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கத்தினர் அண்மையில் தலவாக்கலை டயகம 3ஆம் பிரிவை சேர்ந்த 16 வயது சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவத்தினை கண்டித்தும், சிறுவர்களை வீட்டுவேலைக்கு அமர்த்தல், பாலியல் துஷ்ப்பிரயோகம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பின்மை தொடர்பான பல விடயங்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று(21)புதன்கிழமை காலை 10.00 மணியளவில் முன்னெடுத்தனர்.


இலங்கையில் சிறுவர் உழைப்பு, துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராக கடுமையான சட்டம் இருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் ஒரு சிறுமியை வீட்டுவேலைக்கு அமர்த்தியுள்ளமை, அத்தோடு அச்சிறுமி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை ஆகியவற்றை வண்மையாக கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் .

அத்துடன் முதற்படியாக வீட்டுவேலைத் தொழிலுக்கான வயதெல்லை, கொடுப்பனவு, விடுமுறை, மற்றும் பாதுகாப்பு உட்பட மேலும் இவ்வாறான சம்பவங்கள் வீட்டுவேலைத் தொழிலில் நிரந்தரமாக ஏற்படாமல் இருப்பதற்கான பொறிமுறைகளை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தினை வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவி மாணிக்கம்மாஅவர்களின் முன்னெடுப்பில் மட்டக்களப்பில் உள்ள வீட்டுவேலை தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டிருந்தனர்.
READ MORE | comments

கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி- எச்.என்.டி.ஈ பரீட்சையை மீண்டும் நடாத்துமாறு உத்தரவு...!!

 


கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு எச்.என்.டி.ஈ ஆசிரிய ஆட்சேர்ப்புக்கான பரீட்சையை மீண்டும் நடாத்துமாறு நேற்று (20) கிழக்கு மாகாண ஆளுனர் உத்தரவிட்டுள்ளார். 


கிழக்கு மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக எச்.என்.டி ஆங்கில உயர் டிப்ளோமா பட்டம் பெற்ற மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரீட்சையை உடனடியாக அமுல்படுத்துமாறு உத்தரவிட்டார்.

முன்னர் நடாத்தப்பட்ட பரீட்சையின் போது, வினாத்தாள்கள் வெளியிடப்பட்டதாக மாணவர்கள் அளித்த முறைப்பாடுகளுக்கமைய அறிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து வினாத்தாள் கசிந்ததாக வந்த முறைப்பாடுகளை பரிசீலித்த பின்னர், முறையான விசாரணைகளை நடத்த ஆளுநர் சி.ஐ.டிக்கும் உத்தரவிட்டிருந்தார்.

எனவே தான் புதிய பரீட்சையை மீண்டும் நடாத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு 2021 அக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன் நியமனங்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்குமாறும் ஆளுநர் மாகாண பொதுசேவை ஆணை குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், இந்த பரீட்சையை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வினாத்தாள்களைத் தயாரிப்பதில், ஒவ்வொரு பாடத்திலும் பல வினாத்தாள்கள் தயாரிக்கப்பட வேண்டும் மற்றும் தேவையான கேள்விகளை வினாத்தாள்களில் இருந்து தேர்வு செய்ய வேண்டும் மற்றும் இறுதி வினாத்தாள் மாகாண பொதுசேவை ஆணைகுழுவால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட வேண்டும்.

மேலும், மாகாண பொது சேவை ஆணையகத்தின் அதிகாரிகள் அல்லது அதன் ஊழியர்கள் எவரும் வினாத்தாள்களைத் தயாரிப்பதிலும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதிலும் ஈடுபடக்கூடாது என்றும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், எழுத்து பரீட்சையின் முடிவுகள் 10.09.2021 க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், நடைமுறை சோதனை அக்டோபர் முதல் வாரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் ஒட்டுமொத்த முடிவு வெளியிடப்பட வேண்டும் என்றும் ஆளுநர் மாகாண பொது சேவை ஆணையகத்திற்கு மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

பிறந்து 05 நாட்களேயான சிசு பணத்துக்காக விற்பனை...!!

 


பிறந்து ஐந்து நாட்களேயான சிசுவை பணத்திற்காக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் - நெல்லியடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


நெல்லியடி - மந்திகை வைத்தியசாலை அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிசுவை பெற்றெடுத்த தாய் திருமணமாகாதவர் என்றும், அதனால் தனக்கு பிறந்த குழந்தையை தனது சகோதரியிடம் கையளித்திருப்பதாகவும் காவற்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மட்டக்களப்பு- ஏறாவூரில் சேதனப் பசளை வளமாக்கித் தயாரிப்பு உபகரணத் தொகுதி விநியோகம்...!!

Tuesday, July 20, 2021

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

அலுவலகங்களில் உள்ள தோட்டங்களில் சேதன வளமாக்கிகளைத் தயாரிப்பதற்காக விவசாயத் திணைக்களத்தினால் உபகரணத் தொகுதிகள் வழங்கப்பட்டு

வருகிறது.


ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நிறுனங்களான பொதுச் சுகாதாரப் பணிமனை மற்றும் ஏறாவூர் நகர சபை ஆகியவற்றுக்கு சேதன வளமாக்கிகளைத் தயாரிக்கும் உபகரணத் தொகுதிகள் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டன.

சேதன வளமாக்கிப் பாவனையை ஊக்குவிக்கும் பொருட்டு மாகாண விசேட அபிவிருத்தி மானியத் திட்டத்தின் கீழ் சுமார் 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இந்த உபகரணத் தொகுதிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட்டின் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த உபகரணக் கையளிப்பு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவின் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதாஷிரீன் உள்ளிட்டோரும் பயனாளி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
READ MORE | comments

கல்வி அமைச்சருடனான பேச்சு தோல்வி - ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு

 


கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸுடன் இன்று காலை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.

எனவே, தற்போது நடைபெற்று வரும் ஒன்லைன் மூலமான கல்விச் செயற்பாட்டை தொடர்ந்தும் புறககணிக்கவுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாளை (22) கொழும்பில் பாரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகள் தொடர்பான தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண திங்கள்கிழமை (26) அமைச்சரவையில் ஒரு திட்டத்தை சமர்ப்பிப்பதாக அமைச்சர் உறுதியளித்த போதிலும், நிரந்தர தீர்வு காணப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட தயாராக இல்லை என்று அவர் தெரிவித்தார்.

READ MORE | comments

மீண்டும் முடங்குமா நாடு! வெளிவந்தது புதிய அறிவிப்பு

 


எதிர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பிலான முழுமையான விடயங்களும் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

READ MORE | comments

சினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...!!

 


நாட்டில் கொரோனா தொற்று நிலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுள் 95 வீதமானவர்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சியடைந்துள்ளமை பரிசோதனை ஊடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அதனடிப்படையில் அது டெல்டா மற்றும் பீடா வைரஸில் இருந்து பூரண பாதுகாப்பு அழிப்பதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவப்பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

பல்கலைகழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட் பரிசோதனையில் இந்த விடயம் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

சதுரங்க போட்டியில் சாதனை படைத்தார் கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய தரம் 03 மாணவி !

Monday, July 19, 2021

 


(ஷமி.மண்டூர்)

இலங்கை சதுரங்க சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'National Rapid championship 2021 Novice’ திறந்த சுற்றுப்போட்டிகளில் ஒரு பிரிவாக வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களை இணைத்ததான பெண்கள் பிரிவுப் போட்டிகள் கடந்த ஜீலை 17,18ம் திகதிகளில் நடைபெற்றது.

இதில் மட்/கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 03ல் கல்வி பயிலும் மாணவியான செல்வி ரித்திகா ஷமி-ரஜனிக்காந் அவர்கள் 7 சுற்றுக்கள் கொண்ட போட்டியில் 6 சுற்றுக்களில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளார்.

இவர்‘Singing fish chess club’வீராங்கனை என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் இப்போட்டியில் முதல் 14 இடங்களைப் பெற்ற வீராங்கனைகள் அடுத்தகட்ட போட்டிகளான'‘NationalRapid championship 2021 Majors divison’ போட்டிகளில் பங்குபெறும் தகுதியினை பெற்றுள்ளனர். 

இவர்களின் வெற்றிகளுக்கு பயிற்றுவிப்பாளர் ஏ.சௌத்திரி அவர்களின் சிறப்பான பயிற்றுவிப்பும் வழிகாட்டல்களுமே என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

மட்டக்களப்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உலர்வுணவு பொதிகள் வழங்கிவைப்பு...!!

 


கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உலர்வுணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (19) திங்கட்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.


மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் தெரிவு செய்யப்பட கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உலர்வுணவு பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் கர்ப்பிணி தாய்மார்களுக்கான " கிரேஸ் லைப் லைன் " தொண்டு நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் இந்த அத்தியாவசிய போசாக்கு உலர்வுணவு பொதிகள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளான கே.கிரிசுதன், இ.உதயகுமார் "கிரேஸ் லைப் லைன் " தொண்டு நிறுவன பிரதிநிதிகள், குடும்பல உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
READ MORE | comments

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் தினம் குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு...!!


 நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைளினதும் கல்வி மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


அதன் பின்னர் சுகாதார அமைச்சின் அனுமதியுடன், திட்டமிட்ட அடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் முகமாக தற்போது ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் மேல் மாகாணத்தில் இன்று(19) வரை, 97 சதவீதமான ஆசிரியர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

தென் மாகாணத்தில் 83 சதவீதமானோருக்கும், ஊவா மாகாணத்தில் 68 சதவீதமானோருக்கும், வடமேல் மாகாணத்தில் 58 சதவீதமானோருக்கும், வடக்கு மாகாணத்தில் 57 சதவீதமான ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

வடமத்திய மாகாணத்தில் 56 சதவீதமானோருக்கும், சப்ரகமுவ மாகாணத்தில் 52 சதவீதமானோருக்கும், மத்திய மாகாணத்தில் 42 சதவீதமானோருக்கும், கிழக்கு மாகாணத்தில் 27 சதவீதமான ஆசிரியர்களுக்கும் மேற்படி கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

நவம்பர் மாதத்திற்குப் பிற்போடப்பட்ட பரீட்சைகள்! வெளியாகிய அறிவிப்பு


உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட தகவல் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரம் மற்றும் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சைகள் நடத்தப்படும் தினம் பற்றிய இறுதித் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு

READ MORE | comments

97 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென கீழே விழுந்த 19 வயது யுவதி!

Sunday, July 18, 2021


திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்த 19 வயதான இளம் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பதன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

4 இளம் யுவதிகள் நீர்வீழ்ச்சியை பார்வையிட வந்து நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது, நீர்வீழ்ச்சியின் உச்சியில் உள்ள தண்ணீரில் கால்களைக் கழுவச் சென்றபோது அவர்களில் ஒருவர்  திடீரென வழுக்கி மேலே இருந்து கீழே விழுந்ததாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறு கீழே விழுந்தவர் லிந்துலையில் வசிக்கும் பவித்ரா என்ற 19 வயதுடைய யுவதி என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

97 மீட்டர் உயரமுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதி ஒரு பெரிய பாறை பகுதி என்று கூறப்படுகிறது. இதேவேளை, அண்மையில் நீர்வீழ்ச்சியில் நீர்மட்டம் மிக அதிகமாக இருப்பதாகவும் அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்

READ MORE | comments

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

 


12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

மேலும், 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

நாங்கள் முதலில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டோம். பின்னர் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டோம்.

அதன்பிறகு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கும், 12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம்.

இதை ஒரு ஒழுங்கான முறையில் நாம் செய்ய வேண்டும் என்றார்.

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |