மட்டக்களப்பில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை- மக்களுக்கு எச்சரிக்கை...!!

Wednesday, March 31, 2021

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது அந்த வகையில் கடந்த 2021 மார்ச் 19ஆந் திகதி தொடக்கம். 2021 மார்ச் 26 ஆந் திகதி வரையும் 71பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.


இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மட்டக்களப்பு 20 நோயாளர்களும், வாழைச்சேனை 12 நோயாளர்களும், காத்தான்குடி12 நோயாளர்களும், ஏறாவூர் 07 பேரும், செங்கலடி 6 நோயாளர்களும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 நோயாளர்களும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 3 பேரும் டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அது போன்று கோறளைப்பற்று மத்தி பிரிவில் 2 நோயாளர்களும், கிரான் 2 நோயாளர்களும், வவுனதீவு 1 நோயாளர்களும் மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் வாகரை, வெல்லாவெளி, பட்டிப்பளை, ஆரையம்பதி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

மேலும் கடந்த சில வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார். மொத்தமாக கடந்தவாரம் 20 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் நாட்டில் பொதுவாக டெங்குநோய் பரவும் அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பிரதேச மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கிகிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
READ MORE | comments

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்குள்ளான சியோன் தேவாலயத்திற்க்கு அமேரிக்கா உயர்ஸ்தானிகர் கள விஜயம்!

 

(வரதன்)
கடந்த 2019 ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறன்று குண்டுவெடிப்புக்கு உள்ளான
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை இன்று அமேரிக்கா உயர்ஸ்தானிகர்
அலுவலகத்தில் இருந்து பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தனர்.

அமேரிக்கா உயர்ஸ்தானிக அரசியல் உயர் அதிகாரி அன்டோனி எப்.
ரேன்சுலி யும் அவரது குழுவினரும் இன்று பிற்பகல் தேவாலயத்திற்கு
வந்து தேவாலயத்தின் தற்போதைய நிலை பற்றி கேட்டறிந்தனர்.

சியோன் தேவாலய பிரதான போதகரின் மனைவி திருமதி ரொசான்
மகேசன் அவர்கள் உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு தேவாலயத்தின் தற்போதைய நிலைமை பற்றி எடுத்துரைத்தார்.

அமேரிக்க பிரதிநிதி சம்பவம் இடம்பெற்ற இடத்தையும் அதன்
பின்னனயியையும் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் பற்றியும் அவர்களது
குடும்ப நிலை பற்றி கேட்டறிந்தகொண்டதுடன் ஆலயத்தில் கடந்த
நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள் கட்டுமான பணிகள் இடைநடுவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பின்னனியையம் கேட்டறிந்ததுடன் தாக்கப்பட்ட ஏனைய தேவாலயங்களின் புனரமைப்புக்கள் முடிவடைந்த நிலையில் இதன் பணிகள் இடைநடுவில் நிற்பதையொட்டி தனது கவலையை தெரிவித்ததோடு இனி வரும் காலங்களில் தம்மாலான முழு உதவியினையும் வழங்கவுள்ளதாகவும் சியோன் தேவாலய பிரதான போதகரின் மனைவி திருமதி ரொசான் மகேசனிடம் தெரிவித்தார்.
READ MORE | comments

தாதியர் பயிற்சிக் கல்லூரியில் தாதியர் பயிற்சியை நிறைவு செய்த தாதியர்களுக்கு நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு


 எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


அம்பாறை இலங்கை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் 2016 ஆண்டு தாதியர் பயிற்சியை நிறைவு செய்த தாதியர்களுக்கு நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு அம்பாறை தாதியர் பயிற்சிக் கல்லூரி கேட்போர் கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி திருமதி.ஜுமானா ஹஸீன் , அம்பாறை பொது வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர்.  உபுல் விஜயநாயக, அம்பாறை தாதியர் பயிற்சி கல்லூரி அதிபர் திரு.ஜே.கனகநாயகம் ஆகியோர் உட்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் பலரும் பலர் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தின் பிரகாரம் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நியமனம் பெற்ற தாதியர் இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் சேவையினை தொடரவுள்ளனர்.
READ MORE | comments

வளமான நாடொன்றில் வளமான நாளையொன்றிற்காக அர்ப்பணிப்போம்


 எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


"வளமான நாடொன்றில் வளமான நாளையொன்றிற்காக அர்ப்பணிப்போம்" எனும் தொனிப்பொருளில் தேசிய நிகழ்வாக மாவட்ட  ரீதியில் இடம்பெற்று வரும் அகில இலங்கை சமூர்த்தி உத்தியோகத்தர் சங்க மாநாடு அண்மையில் வவுனியா மாவட்ட செயலக புதிய கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது. 

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் பங்கேற்போடு இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சமூர்த்தி சங்கத்தின் செயலாளருமான கௌரவ ஜெகத் குமார, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ குலசிங்கம் திலீபன், சமூர்த்தி சங்கத்தின் தலைவர் கே.கீர்த்ஸ்ரீ, வவுனியா மாவட்ட சமூர்த்தி சங்கத்தின் தலைவர் எஸ். சம்பத், வவுனியா மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் குறித்த மாநாட்டில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

உள்ளக விளையாட்டரங்கம் மிகச் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டு திறந்து வைப்பு


(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் உடற்கல்வி பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.இர்ஷாத்துடைய முயற்சியினால் உள்ளக விளையாட்டரங்கம் மிகச் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர்கள் பயன்பெறும் வகையில் திறந்துவைக்கப்பட்டது.  
பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.அஸ்மி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி  நிகழ்வில்  கல்முனை கல்வி வலயத்தின் உடற்கல்வி  உதவிக் கல்விப் பணிப்பாளர் முஹம்மட் சாஜித்  கலந்து கொண்டு உள்ளக விளையாட்டு அரங்கத்தை திறந்துவைத்தார். 
இந்த அடிப்படையில்இப்பாடசாலையில்  மைதானம் இல்லாத குறையை மாணவர்கள் உள்ளக விளையாட்டரங்கத்தைப் பயன்படுத்தி உடற்கல்வி செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனி முயற்சியால் உள்ளக விளையாட்டு அரங்கத்தை  மாணவர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கிய உடற்கல்வி பயிற்றுவிப்பாளர் ஏ.எம். பவாஸ்(இர்ஷாத்) அவர்களுக்கு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ச நன்றிகளையம் பாராட்டுக்களையும்  தெரிவித்துள்ளனர்.
READ MORE | comments

200 அடி பள்ளத்தில் பாய்ந்த பார ஊர்தி- பசறையில் சம்பவம்!!

Tuesday, March 30, 2021

 


பசறை- பதுளை பிரதான வீதி பால் சபைக்கு முன்பாக லொரி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் சாரதி உட்பட மேலும் இரண்டு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த லொரியானது 200 அடி பள்ளத்தில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. லொறி சாரதி படுகாயங்களுடன் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
READ MORE | comments

இலங்கையில் மேலும் 102 பேருக்கு கொரோனா

 


இலங்கையில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் குறிப்பிட்டார்.

READ MORE | comments

இலங்கை அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அவுஸ்ரேலிய பேராசிரியர்

 


உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தனது பெயர் இடம்பெற்றுள்ளமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பேராசிரியர் லுக்மன் தலிப் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகமொன்று அவர் அனுப்பிய மின்னஞ்சலில்

தனக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு நடவடிக்கைகளைத் தொடங்குமாறு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் மாலைதீவில் நான்கு மத தீவிரவாதிகளை சந்திக்க லுக்மான் தாலிப் மற்றும் அவரது மகன் லுக்மான் தாலிப் அகமது ஆகியோர் வசதி செய்ததாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

லுக்மான் தாலிப்பும் அவரது மகனும் 2019 ஆம் ஆண்டில் இலங்கையில்நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த, சுயாதீன சட்டத்தரணிகள் அமைப்பான CAGE குறித்த ஆங்கில் ஊடகத்துக்கு தெரிவித்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்ற விவாதங்களின் போது எதிர்பாராத வகையில் எனது பெயருக்கு களங்கமேற்படுத்தப்பட்டுள்ளது என பேராசிரியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிகாரிகள் என்னை தொடர்புகொள்ளவில்லை,எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அவர்கள் என்னை விசாரிக்கவில்லை எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

மாறாக பத்திரிகைகள் மூலம் நான் இதனை அறிந்தேன் என தெரிவித்துள்ள அவர் இது எனக்கான உரிய நடைமுறைகளை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது எனக்கு முற்றிலும் வெறுப்பை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ள பேராசிரியர்,நான் எனது வாழ்நாளின் பெரும்பகுதியை பொதுசுகாதாரம் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக செலவிட்டுள்ளேன் பொதுமக்களின் உயிர்களின் பாதுகாப்பிற்காக செலவிட்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த அவதூறு குற்றச்சாட்டுகளுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்குமாறு நான் எனது சட்டத்தரணிகளை கேட்டுக்கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ள பேராசிரியர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கையில் உள்ள எனது உறவினர்கள் துன்புறுத்தல்களை சந்தித்துள்ளனர் என தெரிவித்துள்ளதுடன் இலங்கை அரசாங்கம் இவ்வாறான முக்கிய விசாரணைகளை மேற்கொள்வதற்கான நம்பகதன்மையும் பக்கசார்பின்மையும் தன்னிடம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக அது யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது நான் கட்டார் பல்கலைக்கழகத்தில் சிரேஸ்ட பேராசிரியர் என்ற நிலையிலிருந்து தன்னிச்சையாக நீக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ள அவர் நான் ஆறுமாத சித்திரவதையை எதிர்கொண்டுள்ளேன் இது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனது துயரங்களிற்கு நான் பிறந்த நாடே காரணம் என்பது தெளிவாகின்றது அவர்கள் இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

பொலிஸார் தாக்குதல் நடத்தினால்; உயிர்பாதுகாப்பிற்காக பதில் தாக்குதல் நடத்தலாம் - வெளியானது அறிவிப்பு

 


பொலிஸார் தமது உத்தியோகபூர்வ சீருடையுடன் சிவில் நபர் மீது தேவையற்ற வகையில் தாக்குதல் நடத்தினால், உயிர்பாதுகாப்பிற்காக அவர் பதில் தாக்குதலை நடத்தக்கூடிய அதிகாரம் சட்டத்தில் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இது தொடர்பாக ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹரகம பொலிஸ் நிலைய வீதிப்போக்குவரத்து அதிகாரி, நேற்றையதினம் வீதியில் வைத்து பட்டப்பகலில் நபர் ஒருவர் மீது நடத்திய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்ட அதேவேளை, இன்று நுகேகொடை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த தாக்குதலுக்கு இலக்காகிய நபரால் பதில் தாக்குதலை பொலிஸார் மீது நடத்தியிருக்கலாமா என பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவியபோது, முடியும் என்று அவர் பதிலளித்திருக்கின்றார்.

குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையின் 92,93ஆம் பிரிவுகளில் அதற்கான விளக்கம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

தீவிரவாதத்தையோ, பிரிவினைவாதத்தையோ எவர் பரப்பினாலும் தடை செய்வோம் - அரசாங்கம்

 


விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே தான் அதற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கும் செயற்பாடுகள் , நாட்டில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு சில அமைப்புக்களை மீண்டும் தடை செய்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.


அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்,

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு மாத்திரம் தடை செய்யப்பட்டுள்ளன என்று கூற முடியாது.

எவ்வாறிருப்பினும் விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.

அதற்கமைய அந்த அமைப்பிற்கு ஆதரவாக செயற்படுகின்றமை , ஆதரவான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நிதி திரட்டுகின்றமை , கருத்துக்களை வெளியிடுகின்றமை என்பன தடை செய்யப்பட்டவையாகும்.

இவ்வாறு விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு சார்பாக செயற்படுபவர்கள் உள்நாட்டில் வசித்தாலும், வெளிநாடுகளில் வசித்தாலும் அவர்களின் செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்படும்.

அதற்கமைய நாட்டில் பிரிவினை வாதத்தை தோற்விக்கும் வகையில் செயற்படுதல் அல்லது விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கருத்துக்களை முன்வைத்தல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்ட விடயங்களாகும் என்பதை உறுதியாகக் கூறுகின்றோம் என்றார்.
READ MORE | comments

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று!

 


கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டதையடுத்து 3434 அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர்அ.லதாகரன் தெரிவித்தார்.


பேலியகொடை மீன்சந்தை கொத்தனியையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிவரையிலான 24 மணித்தியாலயத்தில் பிசிஆர் பரிசோதனை மூலம் கிழக்கில் தம்பலகாமத்தில் ஒருவரும், நிந்தவூரில் ஒருவரும், செங்கலடியில் ஒருவரும், ஏறாவூரில் இரண்டுபேரும், காத்தான்குடியில் இரண்டுபேரும், கோறளைப்பற்று மத்தியில் ஒருவரும், உகணனையில் நான்குபேரும், தமணயில் ஒருவர் உட்டபட 13 பேர் கொரோனா தொற்று உறிதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை சுகாதார பிராந்தியத்தில் 733பேரும், மட்டக்களப்பில் சுகாதார பிராந்தியத்தில் 909 பேரும், அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 321 பேரும், கல்முனை சுகாதார பிராந்தியத்தில் 1471 பேர் உட்பட கிழக்கு மாகாணத்தில் 3434 பேராக கொரோனா தொற்று அதிகரித்துள்ளதுடன் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கில் அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 8136 பேருக்கும், திருகோணமலை சுகாதார பிராந்தியத்தில் 17122 பேருக்கும், மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 19954 பேருக்கும், கல்முனை சுகாதார பிராந்தியத்தில் 27871 பேருர் உட்பட 73083 பேருக்கு பிசிஆர் பரிசோதனை இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 253 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை அம்பாறை . காத்தான்குடி, திருகோணமலை, உப்புவெளி, ஏறாவூர், உப்புவெளி, கிண்ணியா, உகண. ஆகிய பிரதேசங்கள் சிவப்பு வலயங்களாக சுகாதார பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது எனவே கோரோனா தொற்று அபாயம் இன்னும் நீங்கவில்லை என்பதுடன் பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அமைச்சின் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக செயற்படுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
READ MORE | comments

நுண்கடனை நிறுத்தக்கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்!!


நுண்கடன் திட்டத்தினை நிறுத்தி பெண்களை பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமும் மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பும் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மட்டக்களப்பு,கித்துள் பிரதேசத்தில் முன்னெடுத்தனர்.

நுண்கடன் அரக்கர்களிடம் இருந்து பெண்களை பாதுகாப்போம் என்னும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிறுத்து நிறுத்து நுண்டகடன் திட்டங்களை நிறுத்து,பாதுகாப்போம் பாதுகாப்போம் நுண்கடனில் இருந்து பெண்களை பாதுகாப்போம்,நுண்கடனை நிறுத்தி பெண்களை பாதுகாக்க ஜனாதிபதியே நடவடிக்கையெடுங்கள் போன்ற கோசங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர்.

செங்கலடி-பதுளை வீதியில் கித்துள் சந்தியில் அமைதியான முறையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

கடனில் இருந்து விடுபட்டு எங்களையும் மனிதர்களாக வாழவிடு,வறுமையின் கோரப்பிடியில் வாழும் மக்களுக்கான நீதியை நிலைநாட்டு,நுண்கடனால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு முன்னெடுக்கும் போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு முழுமையான ஆதரவு வழங்குகின்றது,இலங்கை நாட்டில் நுண்கடன் செயற்பாடுகளை முழுமையாக ரத்துச்செய்யவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

நுண்கடன் பெறும் நிறுவனங்களின் செயற்பாடுகளினால் இந்த நாட்டில் பல பெண்கள் தினமும் தற்கொலைசெய்யும் நிலையேற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக தனியார் நுண்கடன் திட்டங்களை நிறுத்தி அரச வங்கிகள் ஊடாக பெண்களுக்கான கடன்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்பட்டது.
READ MORE | comments

திருக்கோவில் கருணாலயம் ஸ்ரீ சீரடிசாய்நாதரின் ஒலிப்பேழை வெளியீடு மகாகும்பாவிஷேகமும்

 




செ.துஜியந்தன்

அம்பாறை திருக்கோவில் பிரதேசம் தாமரைக்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ள ஷீரடிசாய் நாதரின் கருணாலயத்தின் மீது பாடப்பெற்ற ஷீரடிசாய் கருணாலய கீதங்கள் பாடல் இசை தொகுப்பு வெளியீட்டு விழா ஷீரடி கருணாலயத்தில் ஷீரடி பக்தரான திருமதி சீதா விவேக் தலைமையில் நடைபெற்றது.




இவ் இசைத் தொகுப்பில் ஷீரடி சாய்நாதரின் புகழ்பாடும் ஐந்து பாடல்கள் அடங்கியுள்ளது. பாடல்களுக்கான வரிகளை திருமதி சீதா விவேக் மற்றும் நிறோஷ் ஞானச்செல்வன் ஆகியோர் எழுதியுள்ளனர். 

பாடலுக்கான இசையினை இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் வழங்கியுள்ளார். தாள வாத்தியம் சிவசக்தி பவன். பாடல்களை என்.ரகுநாதன், கந்தப்பு ஜெயந்தன், பிரதா கந்தப்பு, கந்தப்பு ஜெயரூபன் ஆகியோர் பாடியுள்ளனர். அறிமுக உரையினை ஐங்கரமுத்து யோகநாதன் வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மிகப்பிரமாண்டமான முறையில் ஷீரடி சாய்நாதருக்கு கருணாலயம் அமையப்பெற்றுள்ளது. இவ் ஆலயத்தின் மஹா குடமுழுக்கு கும்பாவிஷேகம் எதிர்வரும் 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 9மணி தொடக்கம் 10.30 மணிவரையுள்ள சுபமுகூர்த நாளில் நடைபெறவுள்ளது. 

பூர்வாங்க கிரியைகள் யாவும் 31 ஆம் திகதி முதல் நடைபெற்றுவருகின்றன.
ஷீரடிசாய் நாதருக்கு பக்தர்கள் தமது கரங்களால் பால் காப்பு சாத்தும் நிகழ்வு முதலாம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஷீரடிசாய் கருணாலயத்தின்ட ஆதின தர்மகர்த்தா திருமதி சீதா விவேக் மேற்கொண்டுள்ளார். ஆலய கும்பாவிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேக பூசைகள் நடைபெறவுள்ளன.

இக் கருணாலயம் மூலம் சமய, சமூகப்பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
READ MORE | comments

வாசிகசாலை ஒன்று ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு

 


எம்.ஐ.எம்.அஸ்ஹர்

சம்மாந்துறை கல்வி வலத்திற்குட் பட்ட  சம்மாந்துறை நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலய மாணவர்களின் நன்மை கருதி அப்பாடசாலையில்  வாசிகசாலை ஒன்று ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று  அல்-அக்ஸா வித்தியாலயத்தில் இடம் பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர்  கலந்து கொண்டதோடு, வித்தியாலய அதிபர் ஏ.பி. ஹிபத்துல்லா மற்றும் அல்-ஹாஜ் முஹமட் ரீஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தனிப்பட்ட பங்களிப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இவ் வாசிகசாலையில் மாணவர்களின் பத்திரிகை மற்றும் புத்தக  வாசிப்புத்திறனை ஊக்குவித்து அவர்களின் உலக அறிவை மேம்படுத்தும் முகமாக தினசரி பத்திரிகைகள் மற்றும் பயனுள்ள புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன
READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடம் பிரதான வீதியில் வடிரக வாகனம் விபத்து

Monday, March 29, 2021


 மட்டக்களப்பு குருக்கள்மடம் பிரதான வீதியில் வடிரக வாகனம் விபத்து

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் சந்தியில் இந்த விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வடி ரகவாகனம் வேகக் கட்டுப்பாட்டை மீறி குருக்கள்மடம் சந்தியில் வளவுக்குள் புகுந்துள்ளது. இதனால் சாரதிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE | comments

வரலாற்றிலேயே மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி


அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.77 ரூபாயாக உள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 197. 28 ரூபாயாக உள்ளது.

இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக 201. 77 ரூபாயாக உள்ளமை வரலாற்றிலேயே முvvதல் முறையாகும்.

READ MORE | comments

முற்றாக முடக்கப்பட்ட யாழின் முக்கிய பிரதேசம்- மக்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

 


யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று காரணமாக அபாய இடர் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி ஜே 114 பாற்பண்ணை கிராமத்தில் வாழும் மக்கள் தமக்கு உதவிப் பொருட்கள் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் 1136 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் 804 குடும்பங்கள் நிரந்தர வருமானமின்றி நாளாந்தம் தொழிலுக்குச் சென்று தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் எனவே தற்போது குறித்த பகுதியானது கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வெளியேற முடியாது தடுக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் வசித்து வரும் 800 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தோடு குறித்த பகுதியை சேர்ந்தோர் கூடுதலாக திருநெல்வேலி சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தற்பொழுது சந்தை மூடப்பட்டுள்ளதன் காரணமாக தமது அன்றாட வாழ்வாதார செயற்பாடு முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.

எனவே தமக்கு தொண்டு அமைப்புகள் யாராவது உதவ முன்வந்தால் நல்லூர் பிரதேச செயலருடன் தொடர்பு கொள்வதன் மூலம் குறித்த பகுதி மக்களுக்கான உதவிப் பொருட்களை வழங்கி வைக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று காலையில் இருந்து குறித்த பாற்பண்ணை பகுதி கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி நுழைவாயில்களில் ராணுவம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் 51 தொற்றாளர்கள். இனங்காணப்பட்டதையடுத்து அப்பகுதி கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.

READ MORE | comments

இலங்கையர்களின் ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம்!

 


இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதுதொடர்பான சட்டமூலத்தை மேலும் ஆய்வுக்குட்படுத்தும் பேச்சுவார்த்தை எதிர்வரும் முதலாம் திகதி தொழிலமைச்சில் இடம்பெறவுள்ளது.

மேற்படி பேச்சுவார்த்தையில் அமைச்சின் அதிகாரிகளுடன் தொழிற்சங்கங்களின் முக்கியஸ்தர்கள் தொழில் வழங்கும் நிறுவனங்களின் பிரதானிகளும் பங்கேற்கவுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

தொழில் ஆலோசனை சபையின் ஏற்பட்டில் நடைபெறும் மேற்படி பேச்சுவார்த்தையில் சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச்சேவைகள் ஊழியர் சங்கம் ஆகியன பங்கேற்கவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் அன்ரன் மார்க்கஸ் தெரிவித்துள்ளார்.

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 60 ஆக அதிகரிப்பதற்கு கடந்த வரவுசெலவு திட்டத்தின் போது அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் கடந்த 24 ஆம் திகதி தொழிற்சங்கங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் பெண்களின் ஓய்வூதிய வயதெல்லை 50 ஆகவும் ஆண்களின் ஓய்வூதிய வயதெல்லை 55 ஆகவும் இருக்கின்றது.

இலங்கையர்களின் ஆயுட்காலத்தை அடிப்படையாக கொண்டே ஓய்வூதிய வயதை அதிகரிப்பது காலத்திற்கு பொருத்தமானதென்பதை தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதேவேளை தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதிற்கு ஒரு முறையான காலஎல்லை காணப்படவில்லையென்பதையும் அந்த நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் நியமனக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வயதுக்கிணங்கவே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கிணங்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் திருத்தம் செய்யப்படவேண்டும் என்றும் அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

READ MORE | comments

ஆண்களுக்கான உடல் கட்டழகு போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் நான்கு பதக்கங்களை வெற்றியீட்டியுள்ளது.

 


எஸ்.எஸ்.அமிர்தகழியான்)


2020 ஆண்டுக்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழாவானது தற்போது திருகோணமலையில் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஆண்களுக்கான உடல் கட்டழகு போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் நான்கு பதக்கங்களை தம்வசப்படுத்தியுள்ளது.

இவ் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான உடல் கட்டழகு போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டு தங்க பதக்கங்களையும், ஒரு வெள்ளி பதக்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் அடங்கலாக நான்கு பதக்கங்களை வெற்றியீட்டியுள்ளது.

இதில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சார்பில் 75 கிலோ எடைப்பிரிவில் போட்டியில் பங்குபற்றிய கி.ஜீஜானந்த் தங்கப் பதக்கத்தையும், மண்முனை வடக்கு பிரதேச செயலகம் சார்பில் 65 கிலோ எடைப்பிரிவு போட்டியில் பங்குபற்றிய டியோன் ஒரு தங்க பதக்கத்தையும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் சார்பில் 55 கிலோ எடைப்பிரிவு போட்டியில் பங்குபற்றிய றிபாஸ் வெள்ளி பதக்கத்தையும், 60 கிலோ எடைப்பிரிவில் போட்டியில் பங்குபற்றிய அயாஸ் வெண்கல பதக்கத்தையும் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரிப்பு - பொலிஸார் எச்சரிக்கை

 


பண்டிகை காலப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தொடர்பான திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


அதன்படி பொகவந்தலாவை மற்றும் மட்டக்குளி பகுதிகளில் இரு முச்சக்கர வண்டிகளும், குருணாகல் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்களும் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்லும்போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
READ MORE | comments

ஏப்ரல் முதல் சினமன் எயார் உள்நாட்டு விமான சேவை ஆரம்பம்!

 


இலங்கையின் முதன்மையான உள்நாட்டு விமான நிறுவனமான சினமன் எயார் , ஏப்ரல் முதலாம் திகதி முதல் தனது உள்நாட்டு பட்டய விமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவுள்ளது.


கொவிட் தொற்றின் காரணமாக பல மாதகால இடைவெளிக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், ரத்மலானை விமான நிலையம் மற்றும் கொழும்பு நகரம் ஆகியவற்றிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு (பாசிக்குடா), ஹம்பாந்தோட்டை, தங்காலை, கோகல்ல, கண்டி, காஸ்டில்ரீக், சீகிரிய, யாழ்ப்பாணம், அறுகம்பை, அனுராதபுரம் மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கு இந்த விமான சேவை முன்னெடுக்கப்படுகிறது.

விமான நிறுவனம் மிக உயர்ந்த பாதுகாப்பை வழங்க உறுதி பூண்டு உள்ளதுடன், அனைத்து பயணிகளும் சுகாதார மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை அவசியம் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
READ MORE | comments

வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம்


எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் விஷேட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளின் பேரில்  வவுனியா மரக்காரம்பளை கணேசபுரம் பகுதிக்கான 2 கிலோமீட்டர் வீதி 58.2 மில்லியன் ரூபாய் செலவில்  புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு உத்தியோகப்பூர்வமாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.03.2021)ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளர் திரு. முரளிதரன், பிரதேச சபை பிரதி தவிசாளர் திரு. மஹேந்திரன்,  பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள்  எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

போலி நாணயத்தாள்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்!!

 


பண்டிகை காலத்தில் பொது மக்கள் போலி நாணயத்தாள்களின் பயன்பாடு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.


கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் 5000 ரூபா போலி நாணயத்தாளுடன் முகத்துவாரம் பகுதியில் 21 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தொடர்ந்தும் இவ்வாறான குற்றச்செயல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எனவே, பண்டிகை காலத்தில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

குறிப்பாக 5,000 ரூபா நாணயத்தாள்களை பயன்படுத்தும் போது போலி நாணயத்தாள் குறித்து கவனமாக செயற்பட வேண்டும்.

அவ்வாறு போலி நாணயத்தாள்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்குமாயின் அருகிலுள்ள காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் போரத்தின் தலைவர் எம்.சஹாப்தீன் தலைமையில் இன்று இடம்பெற்றது.


 (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

எம். சஹாப்தீன் தவிசாளராகவும் ,எம்.ஏ. பகுர்தீன் தலைவராகவும் , எம்.எஸ்.எம். ஹனீபா செயலாளராகவும் , 
எம்.எஸ்.எம். அப்துல் மலீக் பொருளாளராகவும் , 
யூ.எல்.எம்.றியாஸ் அமைப்பாளராகவும் ,
ஏ.எல்.ஏ. நிப்றாஸ் பிரதி தலைவராகவும் , 
வி. சுகிர்தகுமார் உப தலைவராகவும் , 
யூ.கே. காலிதீன் உப செயலாளராகவும் , 
 ஏ.எல். றியாஸ் கணக்காய்வாளராகவும் , எம்.எப். நவாஸ், எம்.ஐ.எம். வலீத் , எல். கஜன் ,   என்.எம்.எம். புவாட், கே.எல். அமீர்,  பி. முஹாஜிரீன், ஏ.எல்.எம். சியாத் , ஐ. உசைதீன்,  அஸ்லம் எஸ். மௌளானா
ஆகியோர் நிர்வாகசபை உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
READ MORE | comments

கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி

Sunday, March 28, 2021

 


(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


விளையாட்டு அமைச்சினால் கடந்த சனிக்கிழமை  அம்பாறை மாவட்டத்தில் உள்ள தெஹியத்தகண்டியில் நடைபெற்ற கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிபலித்து போட்டியிட்ட  RAM KARATE DO ORGANIZATION ஐ சேர்ந்த வீர வீராங்கனைகள் 2 தங்கம், 4 வெள்ளி, 3 வெள்ளி அடங்கலாக மொத்தம் 9 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளதுடன் இப்போட்டியில்  தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற வீரர்கள் தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற தெரிவாகியுள்ளனர்.

இவ் வீரர்களுக்கான பயிற்சியினை ராம் கராத்தே டூ அமைப்பின்  பிரதம போதனாசிரியர் சிஹான் கே கேந்திரமூர்த்தி  தலைமையில் பயிற்றுவிப்பாளர்களான சென்ஸி கே.ராஜேந்திர பிரசாத் ,சென்ஸி கே.சாரங்கன் ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

READ MORE | comments

தலவாக்கலையில் பற்றியெரிந்த ஆயுதக் களஞ்சியம்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

 


தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை புகையிரத நிலையத்தில் அமைந்துள்ள ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக முற்றாக எரிந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் அசம்பாவிதம் இன்று மதியம் 12 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தால் எவருக்கும் உயிர் ஆபத்தோ காயங்களோ ஏற்படாத போதிலும் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்களை தவிர அனைத்தும் எரிந்து நாசமாகி உள்ளன.

தீப்பரவல் ஊழியர்களால் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலவாக்கலை பிரதேசத்தில் கடும் மழை பெய்து வருவதன் காரணமாக தீ கட்டுப்படுத்துவது இலகுவாக அமைந்துள்ளது.

குறித்த தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இத் தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE | comments

நாளை முதல் மூடப்படவுள்ள யாழ். கல்வி வலய பாடசாலைகள்- அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

 


யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும் நிலையில் யாழ் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்ததோடு, தற்போதுள்ள இடர் காலத்தை கருத்தில்கொண்டு நாளை முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை யாழ் கல்வி வலய பாடசாலைச் செயற்பாடுகளை இடை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.


READ MORE | comments

Youth Volunteers Day Tree Planting Program-2021

 


(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


தேசிய இளைஞர்சேவை  மன்றத்தினால்  ஏற்பாடுசெய்யப்பட்ட  , இளைஞர் தன்னார்வு தின மரநடுகை திட்டத்தின் கீழ் (Youth Volunteers Day Tree Planting Program-2021) காரைதீவு கல்வி கோட்டத்திற்குட்பட்ட மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஐ.எம்.அஸ்மி தலைமையில் காரைதீவு பிரதேச செயலக இளைஞர் சம்மேளன உப தலைவர் எஸ்.எம் சம்ஷித்  அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் காரைதீவு இஞைர் சேவை அதிகாரி ஜனாப் முஹம்மட்  பரீட்,  மற்றும்  பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.
READ MORE | comments

ஸஹிரியன் 947 " இன் வருடாந்த ஒன்று கூடல்


 (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1994 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரத்திலும் 1997 ஆம் ஆண்டு க.பொ.த .உயர்தர கலை , வர்த்தக, விஞ்ஞானப் பிரிவுகளிலும் கல்வி கற்று இன்று தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல்துறையிலும் காற்பதித்துள்ள பழைய மாணவர்கள் அமைப்பான.                    " ஸஹிரியன் 947 "  இன் வருடாந்த ஒன்று கூடலும் , சீருடை அறிமுக நிகழ்வும் மாட்டுப்பளை விவசாய வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாட்டின் பல பிரதேசங்களிலுமிருந்து பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
READ MORE | comments

சாரா உயிருடன் உள்ளாரா, தப்பிச் சென்றாரா? மீண்டும் மரபணு சோதனை!





உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் காணாமல் போன சாரா ஹஸ்துன் என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் இறந்து விட்டாரா? என்பதை உறுதிப்படுத்த புதிதாக மரபணு பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதற்காக சாய்ந்தமருது பிரதேசத்தில் பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாசிமின் குடும்பத்தினர் உயிரிழந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டு புதைக்கப்பட்ட உடல் பகுதிகளை மீண்டும் தோண்டி எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதி ஸஹ்ரான், ஹஸ்துன் தொடர்பில் ஆரம்பத்தில் நடத்தப்பட்ட மரபணு பரிசோதனைக்காக மாதிரிகள் பொலிஸ் அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதை அடுத்தே புதிதாக மரபணு பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வழங்கப்பட்ட சாரா ஹஸ்துனின் மரபணு பொருந்தவில்லையென்பதால், புதைக்கப்பட்ட உடல் பகுதிகளை மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனை நடத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும் இதற்குப் பதிலாக பொலிஸார் ஏற்கனவே இருந்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக சாய்ந்தமருது தாக்குதலில் கொல்லப்பட்ட 08 பேரின் உடல் பகுதிகளின் மாதிரிகளை மீண்டும் பெற்று பரிசோதனை நடத்த நீதிமன்ற அனுமதியை பெறுமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

சாரா ஹஸ்துன், தாக்குதலில் இறந்து போனாரா? அல்லது இந்தியாவுக்கு தப்பிச் சென்றாரா? என்பதை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த இந்த மரபணு பரிசோதனை நடத்தப்படவுள்ளது. சாரா காணாமல் போயுள்ளமை குறித்து நாட்டில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

நீர்ப்பாசன செழிப்பு கிராமிய குளங்கள் புனரமைப்பு வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு ஓடைவெளிக்குளம் புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைப்பு



(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களின் செளபாக்கிய கொள்கையின் கீழ் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்    "நீர்ப்பாசன  செழிப்பு" எனும் 5000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் அடிப்படையில் 

வவுனியா  மாவட்டத்தில் சுமார் 100 குளங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய  வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு ஓடைவெளிக்குளம் புனரமைப்பிற்கான அங்குராப்பண  நிகழ்வு சனிக்கிழமை (27.03.2021) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேற்படி  நிகழ்வில்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் பங்கேற்போடு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ குலசிங்கம் திலீபன் அவர்களினால் இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு. பிரதாபன், மாவட்ட  விவசாய திணைக்கள பணிப்பாளர், நீர்பாசன பிரதி முகாமையாளர்,  விவசாய திணைக்கள பொறியியலாளர்கள், பிரதேச சபை தவிசாளர், கமநல சேவைகள் உதவிப் பணிப்பாளர்,  கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் குறித்த நிகழ்வில்  கலந்து கொண்டிருந்தனர்.

இத்திட்டத்திற்காக சுமார் 8.8மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

READ MORE | comments

காணி வழங்கல் நேர்முகத் தேர்வு

 


செ.துஜியந்தன் 


வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கு அமைவாக காணி கோரி விண்ணப்பித்த இளைஞர் யுவதிகளுக்கான நேர்முகத் தேர்வுகள் பிரதேச செயலகப் பிரிவுகளில் நடைபெற்று வருகின்றன.
இதற்கமைய மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவில் காணி கோரி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வுகள் நடைபெற்றுவருகின்றன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் 7ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பித்திருந்தனர். இவர்களுள் முதற்கட்டமாக ஒரு ஏக்கருக்கும் குறைந்த காணி கோரி விண்ணப்பித்திருந்த 1706 பேருக்குமான நேர்முகத் தேர்வுகள் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் அதிகாரிகளினால்


நடத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
READ MORE | comments

இரண்டு கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! மூவர் படுகாயம்!

Saturday, March 27, 2021

 


திருகோணமலை, ஹபரணை பிரதான வீதியில் கொள்கலன் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் அவ்வாகனங்களில் சென்ற மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இரண்டு வாகனங்களும் விபத்துக்குள்ளாகி பாலமொன்றினுள் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (27) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பயணம் செய்த லொறியின் சாரதியொருவரும், கொள்கலனில் பயணித்த சாரதியும் அதன் உதவியாளரும் படுகாயமடைந்த நிலையில் ஹபரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையிலிருந்து ரத்மலானை பகுதிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலனும், குருணாகலையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற லொறியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
READ MORE | comments

2020 ம் ஆண்டின் Most Youth Favourite Radio Presenter விருதை வென்றார் சக்திFM வானொலியின் ஆர்.ஜே. மொஹமட் சௌக்கி

 


எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


2020 ம் ஆண்டின் Most Youth Favourite Radio Presenter விருதை வென்றார் சக்திFM வானொலியின் ஆர்.ஜே. மொஹமட் சௌக்கி

IELC மற்றும் youth for human rights international அமைப்பினால் மத்திய மாகாணத்தின் கண்டி இந்து கலாசார மண்டபத்தில் இன்று (27) இடம்பெற்ற விருது வழங்கல் விழாவில் சாய்ந்தமருதை சேர்ந்த சக்தி வானொலியில் கடமையாற்றும் முஹம்மத் சௌக்கி 2020 ஆம் ஆண்டுக்கான புகழ்பெற்ற இளைய தலைமுறையினரிற்கான வானொலி தொகுப்பாளரிற்கான விருதை   தனதாக்கிக் கொண்டார்.

  பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவினால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

முஹம்மத் சௌக்கி கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் பல விருதுகளை வென்றவர்.

 2014 ம் ஆண்டு கொழும்பு ஆனந்தா கல்லூரியின் சந்தேசிய தேசிய விருதையும் ,2015 ஆம் ஆண்டு கண்டி மஹிந்த கல்லூரியில் இடம்பெற்ற அபிமான விருது வழங்கல் விழாவில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு இரண்டு தேசிய விருதுகளை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

2021 ஆம் ஆண்டின் முதலாவது சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழுக்கூட்டம்

 


எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


2021 ஆம் ஆண்டின் முதலாவது சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழுக்கூட்டம் பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெகராஜன் அவர்களின்  தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் திரு. கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் , காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லிமா  அமானுல்லா , கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் , சம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள், கல்முனை மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மாவட்ட இணைப்பாளர், கோட்டக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் பெண்களுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களும்,  Gaffso, AW F, MFCD நிறுவன உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.
READ MORE | comments

O/L விடைத்தாள் மதிப்பிடும் முதல் கட்ட பணிகள் இன்று ஆரம்பம்!!


 2020 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பிடும் முதல் கட்ட பணி இன்று (27) ஆரம்பமாகவுள்ளது.

நாட்டிலுள்ள 86 பாடசாலைகள் மற்றும் 111 மத்திய நிலையங்கள் இதற்காக ஏற்பாடு செய்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இந்த முதற்கட்ட பணிகள் இன்று 27 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 05 ஆம் திகதி வரையில் நடைபெறும். நாட்டில் 57 நகரங்களில் இந்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

பழைய மாணவர்களாகிய "1995 O/L Batch"அங்கத்தவர்களினால் பாடசாலைக்கு தேவையான பல விடயங்கள் நிறைவு செய்யப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

 


(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை ) களுவாஞ்சிக்குடி அதிபர் திரு.எம்.சபேஸ்குமார் மற்றும் முகாமைத்துவ குழு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக  பாடசாலையின் பழைய மாணவர்களாகிய "1995 O/L Batch"அங்கத்தவர்களினால் பாடசாலைக்கு தேவையான பல விடயங்கள் நிறைவு செய்யப்பட்டு அண்மையில் பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தனர்.




இப் பழைய மாணவர்கள் குழுமத்தின் ராவ் ஆரம்ப பிரிவின் இரு கட்டடங்கள் திருத்தம் , தரம் 11 வகுப்பறைகள் திருத்தம்,  நடன மற்றும் சங்கீத அறைகள் திருத்தம்,.உடைந்த தளபாடங்கள் திருத்தம் ,.மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அன்பளிப்பு போன்ற செயற்பாடுகள் செயற்படுத்தப்பட்டன. 
மிகக் குறுகிய காலத்தில் இச் செயற்பாடுகளை செயற்படுத்திய 
பழைய மாணவர்களான திரு.க.கோகுவ ரஞ்சன் , திரு.ந.கேதீஸ்வரன் , திரு.ஆ.பிரதீபன் , திரு.மோ.பிரதீபன் , திரு.சோ.உதயசுந்தரம் , திருமதி.சுபோதினி திருச்செல்வம் , திருமதி.சகீதா குகானந்தன் , திருமதி றுசேஜந்தினி தவநாதன் , திருமதி.நித்தியா நவருபன் , திரு.சி.ஜீலன் , திருமதி.சிவமலர் நவதாசன் ,ஆகியோருக்கு பாடசாலை அதிபர் , பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , பகுதித் தலைவர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்வி சாரா உத்தியோஸ்தர்கள் மற்றும் பாடசாலை கல்வி சமூகம் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
READ MORE | comments

கிளிநொச்சி-பளை இத்தாவில் பிரதேசத்தில் பாரிய வாகன விபத்தில் மூவர் பலி


(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

 
கிளிநொச்சி - பளை - இத்தாவில் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் பயணித்த லொறியொன்றும் எதிரில் பயணித்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த 38 வயதுடைய குடும்பஸ்தரும் அவரின் 11 , 13 வயதுடைய புதல்வர்களும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தை அடுத்து லொறி  சாரதி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |