(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களின் செளபாக்கிய கொள்கையின் கீழ் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் "நீர்ப்பாசன செழிப்பு" எனும் 5000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் அடிப்படையில்
வவுனியா மாவட்டத்தில் சுமார் 100 குளங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு ஓடைவெளிக்குளம் புனரமைப்பிற்கான அங்குராப்பண நிகழ்வு சனிக்கிழமை (27.03.2021) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் பங்கேற்போடு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ குலசிங்கம் திலீபன் அவர்களினால் இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு. பிரதாபன், மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர், நீர்பாசன பிரதி முகாமையாளர், விவசாய திணைக்கள பொறியியலாளர்கள், பிரதேச சபை தவிசாளர், கமநல சேவைகள் உதவிப் பணிப்பாளர், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இத்திட்டத்திற்காக சுமார் 8.8மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments