Home » » பழைய மாணவர்களாகிய "1995 O/L Batch"அங்கத்தவர்களினால் பாடசாலைக்கு தேவையான பல விடயங்கள் நிறைவு செய்யப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

பழைய மாணவர்களாகிய "1995 O/L Batch"அங்கத்தவர்களினால் பாடசாலைக்கு தேவையான பல விடயங்கள் நிறைவு செய்யப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

 


(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை ) களுவாஞ்சிக்குடி அதிபர் திரு.எம்.சபேஸ்குமார் மற்றும் முகாமைத்துவ குழு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக  பாடசாலையின் பழைய மாணவர்களாகிய "1995 O/L Batch"அங்கத்தவர்களினால் பாடசாலைக்கு தேவையான பல விடயங்கள் நிறைவு செய்யப்பட்டு அண்மையில் பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தனர்.




இப் பழைய மாணவர்கள் குழுமத்தின் ராவ் ஆரம்ப பிரிவின் இரு கட்டடங்கள் திருத்தம் , தரம் 11 வகுப்பறைகள் திருத்தம்,  நடன மற்றும் சங்கீத அறைகள் திருத்தம்,.உடைந்த தளபாடங்கள் திருத்தம் ,.மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அன்பளிப்பு போன்ற செயற்பாடுகள் செயற்படுத்தப்பட்டன. 
மிகக் குறுகிய காலத்தில் இச் செயற்பாடுகளை செயற்படுத்திய 
பழைய மாணவர்களான திரு.க.கோகுவ ரஞ்சன் , திரு.ந.கேதீஸ்வரன் , திரு.ஆ.பிரதீபன் , திரு.மோ.பிரதீபன் , திரு.சோ.உதயசுந்தரம் , திருமதி.சுபோதினி திருச்செல்வம் , திருமதி.சகீதா குகானந்தன் , திருமதி றுசேஜந்தினி தவநாதன் , திருமதி.நித்தியா நவருபன் , திரு.சி.ஜீலன் , திருமதி.சிவமலர் நவதாசன் ,ஆகியோருக்கு பாடசாலை அதிபர் , பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , பகுதித் தலைவர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்வி சாரா உத்தியோஸ்தர்கள் மற்றும் பாடசாலை கல்வி சமூகம் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |