Home » » தாதியர் பயிற்சிக் கல்லூரியில் தாதியர் பயிற்சியை நிறைவு செய்த தாதியர்களுக்கு நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு

தாதியர் பயிற்சிக் கல்லூரியில் தாதியர் பயிற்சியை நிறைவு செய்த தாதியர்களுக்கு நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு


 எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


அம்பாறை இலங்கை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் 2016 ஆண்டு தாதியர் பயிற்சியை நிறைவு செய்த தாதியர்களுக்கு நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு அம்பாறை தாதியர் பயிற்சிக் கல்லூரி கேட்போர் கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி திருமதி.ஜுமானா ஹஸீன் , அம்பாறை பொது வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர்.  உபுல் விஜயநாயக, அம்பாறை தாதியர் பயிற்சி கல்லூரி அதிபர் திரு.ஜே.கனகநாயகம் ஆகியோர் உட்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் பலரும் பலர் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தின் பிரகாரம் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நியமனம் பெற்ற தாதியர் இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் சேவையினை தொடரவுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |