சுயாதீன ஆணைக்குழு தொடர்பான புதிய அறிவிப்பு!

Monday, February 27, 2023

 


சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவற்றின் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான ஆரம்ப கட்ட விவாதம் இந்த வாரம் நடைபெற உள்ளது.

இதுவரை பெறப்பட்ட 1,600க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து முதற்கட்ட தகுதிப் பட்டியலை தயாரித்து ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

எவ்வாறாயினும், அரசியலமைப்பு பேரவையின் கூட்டத்தின் பின்னர் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

READ MORE | comments

நண்பனுடன் நீராடச் சென்ற இளைஞன் பலி!

 


நண்பர் ஒருவருடன் நானுஓயா டெஸ்போட் கால்வாயில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நானுஓயா டெஸ்போட் தோட்டத்தின் மேல் பகுதியைச் சேர்ந்த மகதேவன் சதீஷ்குமார் என்ற 18 வயதுடைய இளைஞனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பகுதியில் தொழில் செய்து வந்த உயிரிழந்த இளைஞன், நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று அவருடன் டெஸ்போட் கால்வாயில் பிற்பகல் 1 மணியளவில் நீராடச் சென்றுள்ளார்.

நீராடச் சென்ற இளைஞன் திடீரென கால்வாயில் மூழ்கி காணாமல் போயுள்ளதுடன், இளைஞனைக் காணாததால், நுவரெலியா பொலிஸ் பிரிவின் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது.

பின்னர், அதிகாரிகள் வந்து கால்வாயில் சுமார் 10 அடி ஆழத்தில் இருந்து இளைஞரின் சடலத்தை மீட்டனர்.

சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

READ MORE | comments

உள்ளூராட்சி தேர்தலிற்கான போராட்டத்தை கண்ணீர் புகை நீர்த்தாரை பிரயோகத்தின் மூலம் தோற்கடிக்க முடியாது : அனுரகுமார திசநாயக்க!

 


அதிகாரம் ராஜபக்சாக்களிற்கும் பிரேமதாசாக்களிற்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்படும் விடயமாக காணப்பட்டால் அவர்கள் தேர்தலை ஒருபோதும் ஒத்திவைக்கமாட்டார்கள் 

மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக  உள்ளூராட்சிதேர்தலிற்கான போராட்டத்தில் எந்த வழிமுறையையும் பயன்படுத்தி வெற்றிபெறுவோம் எனஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

லிப்டன் சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இதனை தெரிவித்துள்ள அவர்   உள்ளூராட்சிதேர்தலை அரசாங்கம் நடத்தச்செய்வதற்கான போராட்டத்தை கண்ணீர் புகைபிரயோகத்தின் மூலம் தடுக்க முடியாது பின்வாங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மருந்துகள் இன்றி மடியும் மக்களிற்காக வேலைவாய்ப்பின்றி காணப்படும் இளைஞர்களிற்காக துன்பத்தில் சிக்குண்டுள்ள விவசாயிகள் மீனவர்கள் உழைக்கும் மக்களிற்காக நாங்கள் உள்ளுராட்சி சபை தேர்தலிற்கான இந்த போராட்டத்தில் வெற்றிபெறுவோம் எனவும் அவர் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

ஊழல் இல்லாத போதைப்பொருள் இல்லாத பொதுமக்கள் பணம் கொள்ளையடிக்கப்படாத நாட்டை உருவாக்குவதற்கான போராட்டத்தில் நாங்கள் வெற்றிபெறுவோம்,இது இந்த தலைமுறையின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எந்த வழிமுறையையும் பயன்படுத்தி இந்த போராட்டத்தில் நாங்கள் வெற்றிபெறுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தொழில்சார் துறையினர் படையினர் விவசாயிகள் மீனவர்கள் உட்;பட அனைவரும் தங்களது ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் பின்னால் அணிதிரளவேண்டும் எனவும் ஜேவிபியின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டிலிருந்து குடும்ப ஆட்சியை அகற்றுவதற்காக பெருமளவு மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதால் அச்சமடைந்துள்ள அரசாங்கம் உள்ளூராட்சி  தேர்தலை ஒத்திவைப்பதற்காக சதிசெய்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அதிகாரம் என்பது ஒரு சில குடும்பங்களிற்கு இடையில் பரிமாறிக்கொள்ளப்படும் விடயமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அனுரகுமார திசநாயக்க முதல் தடவையாக மக்கள் வறிய மக்களிற்கான அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்வந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே அரசாங்கம் அதிக கலக்கமடைந்துள்ளதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்

அதிகாரம் ராஜபக்சாக்களிற்கும் பிரேமதாசாக்களிற்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்படும் விடயமாக காணப்பட்டால் அவர்கள் தேர்தலை ஒருபோதும் ஒத்திவைக்கமாட்டார்கள் எனவும் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒருமாதத்திற்கோ அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கோ ஒத்திவைக்க ரணில்விக்கிரமசிங்கவினால் முடியாது மேலும் அதிகளவான பொதுமக்கள் எங்களுடன் இணைந்துகொள்வார்கள் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டம்!

 


மின்சார சபை ஊழியர்கள் இன்று (27) சுகயீன விடுப்பு எடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வரிக் கொள்கை மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார ஊழியர்கள் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் மாலக விக்கிரமசிங்க தெரிவித்தார்.

READ MORE | comments

10 வயதுடைய சிறுவனை காணவில்லை : உதவிகோரும் குடும்பத்தினர் !

Sunday, February 26, 2023

 


இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில் 10 வயதுடைய சிறுவன் ஒருவர் நேற்று மாலை காணாமற் போயுள்ளதாக இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமற் போன சிறுவன் இராகலை கிருஸ்ணன் ஜூனியர் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் சுரேஷ்குமார் லுக்சான் லோகிதன் (வயது 10) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 05 மணிக்கு பிரத்தியோக வகுப்புக்கு சென்ற சிறுவன் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேநேரத்தில் இந்த சிறுவன் வீட்டை விட்டு செல்லும் போது நீல நிற நீட்ட டெனிம் காற்சட்டையும், நீல நிற சேட்டும் அணிந்திருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சிறுவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு 052 2265 222, மற்றும் 076 366 6106 என்ற தொலை பேசிக்கு தொடர்பு கொள்ளுமாறு இராகலை பொலிசார் கேட்டுள்ளனர்.

READ MORE | comments

ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்தவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது!

 


(பாறுக் ஷிஹான்)


ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள வாகன புகை பரிசோதனை நிலையத்திற்கு முன்னால் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞன் குறித்து கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

இதற்கமைய இன்று மாலை சம்பவ இடத்திற்கு சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினர் பெரிய நீலாவணை பகுதியை சேர்ந்த 35 வயதான சந்தேக நபரை கைது செய்ததுடன் சந்தேக நபரது உடமையில் இருந்து 1 கிராம் 80 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை விசேட அதிரடிப்படையிர் மீட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர் பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நீண்ட காலமாக ஐஸ் வியாபாரத்தை தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு முன்னெடுத்து வந்துள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை மாவட்ட பதில் கட்டளை அதிகாரியும் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகருமான நளீன் பெரேரா ஆகியோரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் கட்டளையதிகாரி டி.சி வேவிடவிதான ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில் உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் பண்டார(13443) பொலிஸ் கன்டபிள்களான அபேரட்ண (75812) நிமேஸ்(90699) ஜயவர்த்தன (94155 சாரதி குணபால (19401) அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்களுடன் பெரிய நீலாவணை பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

READ MORE | comments

தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவர் ஹெரோயினுடன் கைது !

Friday, February 24, 2023

 


ஹெரோயினுடன்  தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இருவரை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களுக்கு ஹெரோயின் கடத்தலில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவர் கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

READ MORE | comments

ஆசிரியர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் - சுசில் பிரேமஜயந்த!

 


பௌத்த பாலி பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கையிலேயே வியாழக்கிழமை (23) பிக்கு மாணவர்கள் கல்வி அமைச்சுக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் ஆசிரியர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் வியாழக்கிழமை நடந்த சம்பவத்தின் போது ஆசிரியர்கள் சிலர் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில்,

பௌத்த பாலி பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. அது பல்கலைக்கழக மானியத்தின் கீழான பல்கலைக்கழகம் அல்ல. உயர்கல்வி அமைச்சின் கீழ் உள்ள பல்கலைக்கழகமாகும்.

பௌத்த பாலி பல்கலைக்கழகத்திற்கு மற்றைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்ப்பது போன்று இசற் புள்ளி பார்ப்பதில்லை. அதற்கான முறை வேறானது. இது விசேட விடயங்களை கொண்டு தனியான சட்டமூலத்தின் ஊடாக அமைக்கப்பட்டது.

இப்போது பௌத்த பாலி பல்கலைக்கழகம் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. 

இவ்வாறு இருக்கையில் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் பிரச்சினையொன்று ஏற்பட்டது. அதனை தொடர்ந்து வியாழக்கிழமை இவர்கள் கல்வி அமைச்சுக்கு வந்தனர். இதில் சூழ்ச்சிக்கார சக்திகள் உள்ளன.

இதேவேளை இந்த சம்பவத்தின் போது ஆசிரியர் இடமாற்ற சபை கூட்டத்தில் கலந்துகொண்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

அதன்போது நான் சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தேன். அமைச்சர் என்ற ரீதியில் எனது கடமையை செய்துள்ளேன். ஆசிரியர்கள் தாக்கப்பட்டமை தாெடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வோம் என்றார்

READ MORE | comments

கல்வி அமைச்சினுள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் வசந்த முதலிகே மீண்டும் கைது!!

Thursday, February 23, 2023


 கல்வி அமைச்சினுள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட சில பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பிக்குகள் குழுவொன்று பேரணியாக வந்து கல்வி அமைச்சுக்குள் பிரவேசித்து வளாகத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

READ MORE | comments

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவர், செயலாளர் தெரிவு!

 


சுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் கல்முனை மாவட்ட நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது.


இவ் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது நடப்பு வருடத்திற்கான நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக சட்டத்தரணி எம்.ஐ றயிசூல் ஹாதி ஏக மனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்ந்து செயலாளராக சட்டத்தரணி ரோசன் அக்தரும் பொருளாளராக சட்டத்தரணி பிறேம் நவாத் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.அத்துடன் இதர பதவி நிலைகளுக்கும் ஏனைய நிருவாகிகளும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


READ MORE | comments

ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுமா? – ஜனாதிபதிடம் கேட்டார் சாணக்கியன்!

 


உள்ளூராட்சி தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) ஜனாதிபதியிடமான கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “எனக்கு தெரியும் உங்களுக்கு பெரிய மூளை உள்ளது என்று.

ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை IMF இனது உதவியுடன் கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காக சாக்கு போக்கு சொல்லப்பட்டு பிற்போடப்படும் உள்ளூராட்சி தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா?

ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுமா? இதற்கான கால அவகாசம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
READ MORE | comments

இன்று முதல் சீருடை துணி விநியோகம்!


 2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களின் சீருடை துணி விநியோகம் இன்று முதல் 2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களின் சீருடை துணி விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், சப்புகஸ்கந்தை பி.எப் பெரேரா களஞ்சிய வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நிகழ்வில், இலங்கைக்கான சீனா தூதுவரும் பங்கேற்கவுள்ளார்.

நாட்டிற்கு தேவையான பாடசாலை சீருடை துணியில் 70 சதவீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது..

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், சப்புகஸ்கந்தை பி.எப் பெரேரா களஞ்சிய வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நிகழ்வில், இலங்கைக்கான சீனா தூதுவரும் பங்கேற்கவுள்ளார்.

நாட்டிற்கு தேவையான பாடசாலை சீருடை துணியில் 70 சதவீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

READ MORE | comments

தன்னிடம் கல்வி கற்கும் மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது.

Wednesday, February 22, 2023


 தன்னிடம் கல்வி கற்கும் மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது.

ஆசிரியையொருவர் தன்னிடம் கல்வி கற்கும் மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்

கேரளாவில்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருச்சூர் அருகேயுள்ள ஒரு தனியார் பாடசாலையொன்றில் கல்வி கற்றுவரும் 10 ஆம் தரத்தைச் சேர்ந்த மாணவனொருவனே இவ்வாறு தனது ஆசிரியையால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக குறித்த மாணவனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானித்த அப்பாடசாலை ஆசிரியர்கள் சிலர், அம் மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்க முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து அம்மாணவனுக்கு நடத்தப்பட்ட கவுன்சிலிங்கில் ” அம் மாணவன் தான் மேலதிக வகுப்பு ஆசிரியையொருவரால் பலாத்காரம்  செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தன்னை மது அருந்த வைத்து பலாத்காரம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

 இந்நிலையில் இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், இது குறித்து உடனடியாகப் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இதனையடுத்து பொலிஸார் குறித்த ஆசிரியையிடம் மேற்கொண்ட விசாரணையில் ” அவர் தான் குற்றம் புரிந்ததை ஒப்புக் கொண்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து அவரை பொலிஸார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

READ MORE | comments

ஐ.ம.ச. ஆர்ப்பாட்டத்தில் கல்வீச்சு தாக்குதல் ; இரு பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதி!


 கடந்த 20ஆம் திகதி பிற்பகல் புறக்கோட்டையில் ஐக்கிய மக்கள் சக்தியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற கல் வீச்சுத் தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்கள் மருதானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்களாவர். சம்பவம் தொடர்பில் புறக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

READ MORE | comments

தேர்தல் இல்லையேல் ஜி.எஸ்.பி பிளஸ் அவுட் - அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

 


உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், நிதி அமைச்சு பணம் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

இதனால், சர்வதேச ரீதியிலும் பெரும் பிரச்சினையை எதிர்நோக்க நேரிடும் எனவும், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை தொடர்ந்தும் இழக்க நேரிடும் எனவும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“நாட்டின் அரசமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தால், அனைத்து அரச நிறுவனங்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சிறைத்தண்டனை

தேர்தல் இல்லையேல் ஜி.எஸ்.பி பிளஸ் அவுட் - அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Sri Lanka Local Election Postponed Effect To Gsp

ஒத்துழைப்பு வழங்காவிட்டால் குறித்த அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனையைப் பெற்றுக்கொடுக்க முடியும்.

அத்துடன் தேர்தல் நடத்தாவிட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையையும் இழக்க நேரிடும்.  அதேவேளை அச்சக பிரதானி தேர்தலுக்கான ஆவணங்களை அச்சிட முடியாது என்று கூறுகின்றார்.

இத்தகைய நிலையில் காலை வாரிவிடாமல் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

நம்பிக்கையற்றதாகும் தேர்தல்

தேர்தல் இல்லையேல் ஜி.எஸ்.பி பிளஸ் அவுட் - அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Sri Lanka Local Election Postponed Effect To Gsp

அதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் மேற்கொள்ள வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இடம்பெற்று கட்டுப்பணமும் செலவிடப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட அரச ஊழியர்கள் பதவி விலகல் செய்துள்ளனர். அந்த நிலையிலேயே இன்று தேர்தல் நம்பிக்கையற்றதாகக் காணப்படுகின்றது.

ஜி.எஸ்.பியில் சிக்கல்

தேர்தல் இல்லையேல் ஜி.எஸ்.பி பிளஸ் அவுட் - அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Sri Lanka Local Election Postponed Effect To Gsp

இதனால் பாரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. ஐ.சீ.சீ.பி.ஆர். சட்டத்தின் கீழ் தேர்தல் நடத்தவில்லை என்றால் எங்களுக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இல்லாமல் போகின்றது.

இப்போது ஜப்பான், ஜேர்மன் போன்ற நாடுகள் எம்மிடமிருந்து விலகிச் செல்ல முற்படுவதைக் காண முடிகின்றது. இவ்வாறான நிலையில் அரசு என்ன செய்கின்றது என்று கேட்கின்றேன்”  எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்

READ MORE | comments

10இற்கும் மேற்பட்ட பெண்களை அச்சுறுத்தி பலாத்காரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!


 ஆண்கள் இல்லாத வீடுகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தமை தொடர்பில்  தேடப்பட்ட “பொட்டே” என்பவரை பொலிஸார்  கைது செய்துள்ளார்.

பத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு  கொலை மிரட்டல் விடுத்து கொடூரமான முறையில் அவர்களை பாலியல்  துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலேயே 37 வயதுடைய சந்தேக நபர் கற்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்கள் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபரைக்  கைது செய்ய பயாகல பொலிஸார் பல தடவைகள் முயற்சித்தும் சந்தேக நபர் தப்பிச் சென்றமையினால் பொலிஸாரின்  முயற்சிகள் தோல்வியடைந்த நிலையிலேயே அவர்  தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் சில வீடுகளின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து பெண்களை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

READ MORE | comments

கொழும்பில் இன்றையதினம் பாரிய எதிர்ப்பு போராட்டம்!

 


அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரி கொள்கை, மின்கட்டண அதிகரிப்பு உட்பட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி மின்சாரத்துறை,பெற்றோலியம்,துறைமுகம்,நீர்வழங்கள், வங்கிச் சேவை  உடப்ட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கத்தினர் ஒன்றிணைந்து இன்று  கோட்டை புகையிரதம் முன்பாக பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய அவதானம் செலுத்தாவிட்டால் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம். கண்ணீர் புகை பிரயோகத்தின் ஊடாக அரசாங்கம் போராட்டத்தை கலைக்கிறதே தவிர முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை என துறைமுக ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் தலைவர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்.

தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரி கொள்கையினால் அனைத்து சேவைத்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக மின்கட்டணம் அதிகரிப்பு ஊடாக மக்களின் வாழ்க்கை சுமை தற்போது பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு நடுத்தர மக்கள் மீது வரி சுமையை சுமத்துவதை விட அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் விசேட வரபிரசாதங்களை குறுகிய காலத்திற்கு மட்டுப்படுத்தினால் பொருளாதார நெருக்கடிக்கு விரைவான தீர்வு காணலாம்,பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்களுக்கான சலுகைகள் ஏதும் குறைக்கப்படவில்லை.

புதிய வரி கொள்கையினால் தொழிற்துறையினர் பாதிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.மூளைசாலிகளின் வெளியேற்றம் நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே புதிய வரி கொள்கை,கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோலியம், மின்சாரம், வங்கிச்சேவை, மருத்துவ துறை, டெலிகொம், துறைமுகம், தபால்சேவை, ஆசிரிய சங்கம் உட்பட 40 இற்கும் அதிகமாக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக பாரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளும் போராட்டங்களை அரசாங்கம் நீர்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் கொண்டு கலைக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது,எமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடின் மார்ச் மாதம் 01 ஆம் திகதி பாரிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

READ MORE | comments

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு புதிய சிக்கல்!

Tuesday, February 21, 2023


தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதால், வேதனம் இல்லாமல் விடுமுறையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட செல்லும் அரச ஊழியர்களுக்கு, மூன்று மாதங்களுக்கு வேதனம் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து மூன்று மாதங்கள் வேதனம் இல்லாத விடுமுறையில் இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், திருத்தம் செய்து அந்த சுற்றறிக்கையை மாற்றுவதற்கு பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அது பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்

READ MORE | comments

கார் ஒன்றும் பஸ் ஒன்றும் புகையிரதத்துடன் மோதி விபத்து : மூவர் காயம் !

Monday, February 20, 2023

 


கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இன்று (பெப் 20) காலை கார் ஒன்றும் பஸ் ஒன்றும் புகையிரதத்துடன் மோதிய விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.


இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சும் காரும் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு சென்றுகொண்டிருந்த புகையிரதத்துடன் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி அறிவியல் நகர் நோக்கி புகையிரதம் பயணித்த போது புகையிரத கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்கு பின்னால் சென்ற பஸ் குறித்த வாகனத்தின் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த மூவர் கிளிநொச்சிவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



READ MORE | comments

இன்று நள்ளிரவின் பின் பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு!

 


இன்று (20) நள்ளிரவுக்குப் பிறகு, எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கிடைக்கப்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 70 (1) உட்பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

எனினும், அரசியலமைப்பின் 70 (1) (அ) உறுப்புரையின் பிரகாரம், தற்போதைய பாராளுமன்றம் முதல் முறையாக கூடுவதற்கு நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில், பாராளுமன்றத் தீர்மானம் மூலம் கோரா தபட்சத்தில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது.

நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2020 மார்ச் பாராளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். எனினும், கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, 2020 ஆகஸ்ட் 5 குறித்த தேர்தல் நடைபெற்றது.

 இதன்படி, ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்ஷவின் தலைமையில், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு அந்த வருடம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி கூட்டப்பட்டது. குறித்த முதல் அமர்வு இடம்பெற்று இன்று (20) நள்ளிரவுடன் இரண்டு வருடங்களும் ஆறு மாதங்கள் நிறைவடைகிறது.

 எனவே, கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு, அரசியலமைப்பின் 70 1 (அ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

வானிலை அறிவிப்பு!

 


கடுமையான மின்னல் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பல பிரதேசங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் இன்று பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழையுடன் கூடிய பலத்த காற்று வீசும் எனவும் அனர்த்தங்களை தவிக்க பொதுமக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.

READ MORE | comments

கோடீஸ்வரரின் சொகுசு விபசார விடுதி முற்றுகை: இந்தோனேஷிய பெண் உட்பட இரண்டு பெண்கள் கைது !

Sunday, February 19, 2023

 


வெளிநாடுகளிலிருந்து பெண்களை சுற்றுலா விசாவில் இலங்கைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரால் நடத்தப்பட்டதாக கூறப்படும் சொகுசு விபசார நிலையம் ஒன்றை பாணந்துறையில் ஊழல் தடுப்பு அதிரடிப்படையினர்  சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது இந்தோனேஷிய பெண் உட்பட இரண்டு பெண்களும் அதன் முகாமையாளரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இடத்திலிருந்து குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகள், பத்தாயிரம் ரூபா பணம் மற்றும் வங்கி பற்றுச்சீட்டுகள் ஆகியவை அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.

கொள்ளுப்பிட்டி மல் வீதியிலுள்ள ஆடம்பரமான இரண்டு மாடி வீடு ஒன்றில் வெளிநாட்டுப் பெண்களை பணத்துக்காக விற்பனை செய்யும் இரகசிய வியாபாரம் இடம்பெறுவதாக பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள

READ MORE | comments

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு !

 




தபால் மூல வாக்களிப்புகளை காலவரையறையின்றி ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ள நிலையில், அடிப்படை நிறுவன நடவடிக்கைகள் தொடர்பான நிர்வாகப் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பான கடிதம் அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மற்றும் அனைத்து மாவட்ட பிரதி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து ஊழியர்களுக்கும் சாதாரண அலுவலக நேரம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேர வேலைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பிரதான அலுவலகம் உட்பட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களையும் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மூடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் உரிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ ஏதாவது விசேட கடமைக்காக அலுவலகத்தை திறப்பது அவசியமானால் அதற்கு தேர்தல் ஆணையாளர் நாயகத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.

தற்போது பணியில் உள்ள தற்காலிக உதவியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்களின் சேவைகள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அலுவலக நேரத்திற்குப் பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும்.

ஊழியர்களின் போக்குவரத்துக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட அனைத்து வாகனங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தற்காலிகமாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அலுவலகத்தின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் எதிர்காலத்தில் அறிவுறுத்தல் வழங்கப்படவுள்ளதாகவும் அதுவரை பொலிஸ் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

READ MORE | comments

பௌத்த பிக்குகளின் போராட்டத்தை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை - அதிபர் ரணில்!


 "13 ம் திருத்த சட்டதை நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து பௌத்த பிக்குகள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் என்னால் தெளிவாக புரிந்துகொள்ள முடியவில்லை"

இவ்வாறு, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் பௌத்த பிக்குகள் கொழும்பில் 13 ம் திருத்தத்தின் பிரதியை எரித்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில், ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அதிபர் ரணில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதிபர் ரணில்

பௌத்த பிக்குகளின் போராட்டத்தை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை - அதிபர் ரணில்! | Ranil Said About Protest Against 13Th Amendment

மேலும் கருத்துரைத்த அவர்,

"இந்த நாட்டில் மதிக்கப்பட வேண்டிய பௌத்த பிக்குகளின் இவ்வாறான அவசர நடவடிக்கைகளை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அண்மையில் மகாநாயக்கர்களை சந்தித்து 13 ஆவது திருத்தச் சட்டதை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும், அதன்மூலம் ஏற்படும் இன நல்லிணக்கம் தொடர்பிலும் தெளிவாகக் கூறியிருந்தேன்.

மகாநாயக்க தேரர்களும் என்னுடைய கருத்தை வரவேற்றிருந்தனர்.

இந்த சூழ்நிலையில், பிக்குகளில் ஒரு பகுதியினர் இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுவது ஏன் என்று எனக்கு புரியவில்லை, இருப்பினும் இந்த விடயத்தை அரசமைப்பு ரீதியில் நான் கையாள்வேன்." என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

பாடசாலைகள் மீண்டும் திங்கள் ஆரம்பம்!

 


நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை (20) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனவரி 23 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகி, கடந்த 17 ஆம் திகதியுடன் நிறைவடைந்தன.

இதனை முன்னிட்டு ஜனவரி 20 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய திங்கள் முதல் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி , மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.

அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டுக்கான இறுதி தவணை கல்வி நடவடிக்கைகள் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.

இவ்வாண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் தினம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்தன. கடந்த 16ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. 

இப்பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கட்ட நடவடிக்கைகள் மார்ச் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

READ MORE | comments

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மின் கட்டணங்களைத் திருத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை !

Saturday, February 18, 2023




 மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் மீண்டும் மின் கட்டணங்களைத் திருத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். புனித தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் சூரிய ஒளி மின் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மாற்று எரிசக்தி மூலங்களிலிருந்து மின்சாரத்தைப் பெறுவதற்காக பன்னிரண்டு மாத காலத்துக்குள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை நாற்பது பில்லியன் ரூபாவாகும். அத்தொகையை செலுத்துவதற்காக அரச வங்கியொன்றில் ஐம்பது பில்லியன் ரூபாவை கடனாகப் பெறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பெப்ரவரி 15 முதல், மின்சாரக் கட்டணம் அறுபத்தி ஆறு சதவீதம் உயர்த்தப்பட்டது. மார்ச் மாதம் முதல் வாடிக்கையாளர்களிடமிருந்து புதிய மின் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டால் அறிவிக்கவும் : மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் !

Friday, February 17, 2023

 


அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டால் அறிவிக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களை இலக்க தகடு தெளிவாக தெரியும் வகையில் புகைப்படமெடுத்து வட்ஸ்அப் அல்லது வைபர் மூலம் அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.

அதன்படி, 070 35 00 525 என்ற இலக்கத்திற்கு வட்ஸ்அப் அல்லது வைபர் மூலம் குறித்த புகைப்படங்களை அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

READ MORE | comments

பிரித்தானியாவை தாக்கப்போகும் ஓட்டோ புயல் - முழு விபரம் வெளியீடு


 பிரித்தானியாவின் குறிப்பிடத்தக்க பகுதிகளில் ஓட்டோ புயல் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த காற்றழுத்தம் காரணமாக மணிக்கு 75 மைல்கள் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறுகின்றனர்.

ஓட்டோ புயல் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்து பிரித்தானியாவின் வடக்கே கிழக்கு நோக்கி நகரும். இரண்டு மஞ்சள் எச்சரிக்கைகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், பலத்த காற்று வீசக்கூடும் என கூறுகின்றனர்.

மேலும், வியாழன் இரவு பிரித்தானியாவை நோக்கி நகர்ந்த புயல் வெள்ளிக்கிழமை காலை பிரித்தானியாவின் வடக்குப் பகுதிகளை தாக்கும் என்றே தெரிவிக்கின்றனர்.

பலத்த காற்று - அதிக மழை

பிரித்தானியாவை தாக்கப்போகும் ஓட்டோ புயல் - முழு விபரம் வெளியீடு | Storm Otto Met Office Warns Hits Uk

ஓட்டோ புயல் காரணமாக பிரித்தானியாவில் பலத்த காற்று மற்றும் அதிக மழை காணப்படும். ஸ்காட்லாந்தின் வடக்குப் பகுதிகள் சில மற்றும் இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதிகளில் 75 மைல் வேகத்திற்கு அதிகமாக காற்று வீசக்கூடும்.

பலத்த காற்று வீசும் இரண்டு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மாலை 3 மணி வரை ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசும் வாய்ப்புகள் அதிகள், 

அதே போல் வடகிழக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காற்று வீசக்கூடும்.

சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஓட்டோ புயல் காரணமாக மேற்கு ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் 40-50 மிமீ மழை பெய்யக்கூடும்

READ MORE | comments

ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்திருத்த பெண்‍ கைது !


 மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதிராஜா மாவத்தையில் 10 கிராம் 750 மில்லிகிராம் நிறையுடைய  'ஐஸ்' போதைப்பொருளை மறைத்து வைத்திருத்த பெண்‍ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையை அடுத்தே குறித்த சந்தேகச நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப் பொருள் வர்த்தகத்தின் முலமாக பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 25,000 ரூபா பணமும் அவரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ‍கைது செய்யப்பட்ட பெண், 61 வயதுடையமாளிகவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேக நபரை நேற்றைய தினம் மாளிகாகந்தை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.  

இதேவேளை, கிராண்ட்பாஸ்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 32 வயதுடைய இளைஞர் ஒருவர்  10 கிராம் 830 மில்லி கிராம் நிறையுடைய  'ஐஸ்' போதை பொருளுடன் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன்,  தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவத்துகொடை பகுதியிலும் 6 கிராம் 700 மில்லி கிராம் நிறையுடைய  'ஐஸ்' போதைப்பொருளுடன் 45 வயதுடைய பத்தரமுல்லையைச் சேர்ந்த ஆணொருவரை தலங்கம ‍பொலிஸார் கைது செய்துள்ளனர்.

READ MORE | comments

சாரதிகளின் கவனயீன செயற்பாடு - விபத்தில் சிக்கிய பயணிகள்; பதற வைக்கும் காட்சி! (படங்கள்)


தம்புள்ளை வைத்தியசாலைக்கு முன்பாக தனியார் பேருந்து ஒன்றும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், ஒன்றுடன் ஒன்று சமாந்தரமாக ஓட்டிச் சென்றதில், இரண்டு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் ஒரு மணித்தியாலம் பேருந்துக்குள் 50க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர்.

இன்று(17) அநுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், பொலன்னறுவையிலிருந்து அனுராதபுரம் வழியாக கண்டி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த இரண்டு பேருந்துகளும் தம்புள்ளை நகரிலிருந்து ஒரே நேரத்தில் பயணிக்க ஆரம்பித்ததாகவும், நகரத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை ஒன்றையொன்று முந்திச் செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

விபத்து

சாரதிகளின் கவனயீன செயற்பாடு - விபத்தில் சிக்கிய பயணிகள்; பதற வைக்கும் காட்சி! (படங்கள்) | Accident Sltb Private Bus Dambulla Race Time

அதன்படி, தம்புள்ளை வைத்தியசாலைக்கு முன்பாக தனியார் பேருந்து, போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை கடந்து செல்வதற்கு தயாரான போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது இரு பேருந்துகளிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும், தனியார் பேருந்து மாட்டிக் கொண்டதில் 50-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் சிக்கியதால் பேருந்தில் இருந்து இறங்க முடியாமல் தவித்ததாகவும் அதில் பயணித்த சிலர் தெரிவித்திருந்தனர்.

சாரதிகளின் கவனயீன செயற்பாடு - விபத்தில் சிக்கிய பயணிகள்; பதற வைக்கும் காட்சி! (படங்கள்) | Accident Sltb Private Bus Dambulla Race Time

குறித்த விபத்து தொடர்பாக தம்புள்ளை போக்குவரத்து காவல் உத்தியோகத்தர்கள் சோதனை செய்து போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை அகற்றி தனியார் பேருந்தில் இருந்து பயணிகளை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |