Home » » தன்னிடம் கல்வி கற்கும் மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது.

தன்னிடம் கல்வி கற்கும் மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது.


 தன்னிடம் கல்வி கற்கும் மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது.

ஆசிரியையொருவர் தன்னிடம் கல்வி கற்கும் மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்

கேரளாவில்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருச்சூர் அருகேயுள்ள ஒரு தனியார் பாடசாலையொன்றில் கல்வி கற்றுவரும் 10 ஆம் தரத்தைச் சேர்ந்த மாணவனொருவனே இவ்வாறு தனது ஆசிரியையால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக குறித்த மாணவனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானித்த அப்பாடசாலை ஆசிரியர்கள் சிலர், அம் மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்க முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து அம்மாணவனுக்கு நடத்தப்பட்ட கவுன்சிலிங்கில் ” அம் மாணவன் தான் மேலதிக வகுப்பு ஆசிரியையொருவரால் பலாத்காரம்  செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தன்னை மது அருந்த வைத்து பலாத்காரம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

 இந்நிலையில் இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், இது குறித்து உடனடியாகப் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இதனையடுத்து பொலிஸார் குறித்த ஆசிரியையிடம் மேற்கொண்ட விசாரணையில் ” அவர் தான் குற்றம் புரிந்ததை ஒப்புக் கொண்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து அவரை பொலிஸார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |