பெண் பொலிஸாருக்கு புதிய சீருடை அறிமுகம்; சட்ட ஒழுங்கு அமைச்சு அனுமதி!

Saturday, May 31, 2014

இலங்கையில் பெண் பொலிஸாருக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில், பொலிஸ் மா அதிபர் முன்வைத்த பரிந்துரைக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. 
தற்பொழுது பெண் பொலிஸார் பயன்படுத்தும் சீருடைக்கு மேலதிகமாக புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய சீருடை தற்பொழுது பயன்படுத்தும் காக்கி நிறத்தைக் கொண்டதாகவே அமையும்.
அத்தோடு, பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்ட் பதவியிலுள்ள பெண்களுக்கு நெடுங்காற்சட்டையுடன் கூடியதாக புதிய சீருடை இருக்கும். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தரம் மற்றும் பொலிஸ் பரிசோதகர் தரம் உள்ள பெண் பொலிஸாருக்கும் நெடுங்காற்சட்டையுடன் புஷ் கோட்டும் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெண் பொலிஸாரின் அலுவலக உத்தியோகபூர்வ கடமைகளையும் மற்றும் வசதிகளையும் கருத்திற்கொண்டு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படுகிறது. இது தவிர பொலிஸ் சேவையில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கும் புதிய சீருடையொன்றை அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
READ MORE | comments

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க உயர்மட்ட செயலமர்வு

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் கரையோரம் பேணல் திணைக்களத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் தொடர்ந்து பெற்றுவரும் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்த மாவட்டத்திலுள்ள அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர், பொலிஸ்அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உள்ளுராட்சி சபைகளின் செயலாளர்கள் உட்பட அரச உயர்மட்ட அதிகாரிகளுக்கு விளக்கமூட்டும் ஒருநாள் செயலமர்வு மட்டக்களப்பு கோப் இன் விடுதியில் நேற்று ஆரம்பமானது.
கரையோரம் பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.கோகுலதீபன் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒந்தாச்சிமடம் முதல் வாகரை வரையான 120 கிலோமீற்றர் கரையோர பிரதேசங்கள் உள்ளன. இவைகள் 8 பிரதேச செயலகப்பிரிவுகளில் அடங்குகின்றன.

இக்கரையோர பிரதேசசங்களில் சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணித்தல் மண்அகழ்வு மரங்களை வெட்டுதல்போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.இவற்றிற்கெதிராக எவ்வாறு சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடப்பான சட்ட ஆலோசனைகளும் இங்கு வழங்கப்பட்டன.
கரையோரம் பேணல் திணைளத்தின் சட்ட ஆலோசகர் பாஞ்சாலி பெர்னாண்டோ சட்ட ஆலோசனைகளை வழங்கினார்.

                  

                 
                 
READ MORE | comments

உதயத்தின் பத்தாவது ஆண்டு விழா


சுமார் பத்து வருடமாக சுவிசிலிருந்து இயங்கி வரும் தன்னார்வ அமைப்பான உதயம் தனது பத்தாவது ஆண்டு விழாவை எதிர் வரும் யூன் மாதம் எட்டாம் திகதி சூரிச் நகரில் நடாத்துகிறது. கிழக்கு மாகாணத்தில் வாழும் உறவுகளுக்கு பலவித உதவிகளை செய்துவரும்  உதயம் நிகழ்வில் ஐரோப்பாவின் பலபகுதிகளிலும் இருந்து கிழக்கு மாகாண உறவுகள் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார்கள். 
READ MORE | comments

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரவு நேரப்பாடசாலை ஆரம்பம்

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனைப்பற்று கோட்ட கல்விப்பணிமனையின் ஆரையம்பதி மகாவித்தியாலய பாடசாலையில் இரவு நேரப்பாடசாலை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி மகாவித்தியாலய அதிபர் தவேந்திரகுமார் தலைமையில் தரம்11, தரம்10 படிக்கும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை மேம்படுத்தும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் இரவுப்பாடசாலை நாளாந்தம் வேலை நாட்களில் மாலை 6.00 மணி தொடக்கம் இரவு  9.00 மணி வரை நடை பெறவுள்ளதாகத் தெரியவருகின்றது.
க.பொ.த.(சா/த)ப் பரீட்சையில் மாணணவர்களின் சித்தி மட்டத்தினை அதிகரிப்பதற்கு ஏதுவாக பாடசாலை  ஆசிரியர்கள் மற்றும், வெளி சிறப்புத்தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் இங்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மகிந்த சிந்தனையின் கீழ் ஆயிரம் பாடசாலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள இப்பாடசாலை 1AB தரத்தில் இயங்கும் பாடசாலை ஆகும். கலவன் பாடசாலையாக இருந்;த இப்பாடசாலை அண்மையில் தரம் 9 வரை ஆண்கள் பாடசாலையாக பிரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவ் இரவு நேரப்பாடசாலை ஆரம்பிக்கும் நிகழ்வில் முன்னால் கிழக்குமாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்
READ MORE | comments

மட்டக்களப்பு விமான நிலையம் அபிவிருத்தி

Friday, May 30, 2014

உள்ளுர் விமான சேவைகளை விருத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு விமான நிலைய ஓடு பாதை, பிரயாணிகளுக்கான வசதி மண்டபம் உள்ளிட்ட அபிவிருத்தி வேலைகளை சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிரியங்க ஜயரட்ன இன்று வெள்ளிக்கிழமை (30) முற்பகல் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
1350 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவில், 4800 அடி நீலமும், 45 மீற்றர் அகலமும் உடையதாக மட்டக்களப்பு விமான நிலையத்தின் ஓடு பாதை அமையும்.

புனரமைப்பு வேலைகளை பார்வையிட்ட அமைச்சர் பிரியங்க ஜயரட்ன அதிகாரிகளுடன் இந்த விமான நிலையத்தின் புனரமைப்பு வேலைகள் பற்றியும் அதன் முன்னேற்றம் பற்றியும் கலந்துரையாடினார்.

இதன்போது, சிவில் விமானசேவைகள் அதிகார சபையின் தலைவர் ஜெனரல் ரொஹான்தலுவத்த, சிவில் விமானசேவைகள் பிரதம பணிப்பாளர் எச்.எம்.சி.நிமால் சிறி, கட்டுநாயக்காக விமானநலைய பிரதித்தலைவர் கமல் ரத்வத்த, கிழக்கு மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் தர்மரெட்ணம், உட்பட அதன் அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.

மட்டக்களப்பு உள்ளூர் விமான நிலையத்தின் ஓடு பாதை விஸ்த்தரிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டு வருவதுடன் பிரயாணிகளுக்கு வசதியான மண்டபமும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வேலைகள் 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப் பிரயாணிகளின் வருகையினை அதிகரிக்கும் நோக்கில் இந்த அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

நகர அபிவிருத்தி அதிகா ரசபையுடன் இணைந்து விமான சேவைகள் பொறியியல்துறை இந்த விமான நிலைய புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்படுகிறது.

மட்டக்களப்பு விமான நிலைய புனரமைப்புக்கென 1350 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதுடன்  புனரமைப்பு பணிகளை அதி மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கடந்த 2013 செப்ரம்பரில் ஆரம்பித்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












READ MORE | comments

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் 12 ஜோதிலிங்கங்களின் தரிசனம் பாடசாலை மாணவர்களும் பங்கேற்றனர்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் 12 ஜோதிலிங்கங்களின் தரிசனம் பாடசாலை மாணவர்களும் பங்கேற்றனர்




































READ MORE | comments

மட்டக்களப்பு நிலைமைகள் குறித்து சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் ஆலோசனை!

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி ரெரேசா டேல்லாச்சி (Teresa Tellechea) அரசியல் நிபுணர் ஆர்.ஈ.சந்தீப் குரூஸ் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபைப் பிரதிதிநிதிகளை நேற்றுக் காலை ஓட்டமாவடி அமெரிக்கன் கல்லூரி கேட்போர் கூடத்தில் சந்தித்தனர். இச் சந்திப்பில் மாவட்டத்திலுள்ள மக்களது பிரச்சினைகள், அவர்களது தேவைகள், சமூக மட்ட அமைப்புகளின் செயற்பாடுகள், மத நிறுவனங்கள் மதம் சார்ந்த பிரச்சினைகள், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இக் கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் வீ.கமலதாஸ், உப தலைவர் ஏ.எல்.ஜுனைட் நளீமி, பொதுச் செயலாளர் எஸ்.எம்.இஸ்ஸதீன் உட்பட அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது, சமகாலப் பிரச்சினைகள், கடந்தகால முரண்பாட்டு விடயங்களுக்கான தோற்றுவாய்கள், எதிர்காலத்தில் அவ்விடயங்கள்கள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபை முன்னெடுக்கவுள்ள விடயங்கள் குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அத்துடன், சமூகத்தில் தேவையாக உள்ள ஊடக இடைவெளி குறித்தும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களது பிரச்சினைகள் குறித்தும் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது.
READ MORE | comments

மருதானை விபசார விடுதி சுற்றிவளைப்பு! - வவுனியா தமிழ் யுவதிகளும் சிக்கினர்.

மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்று பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதுடன் 7 பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.மட்டக்களப்பைச் சேர்ந்த செல்வந்தருக்கு சொந்தமான கட்டிடமொன்றிலேயே இந்த விபசார விடுதி இயங்கி வந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விடுதி சுற்றி வளைப்பின் போது இரத்மலானை, லுணுகல, வவுனியா தெஹிவளை, படால்கும்பு மற்றும் மாத்தளை பகுதிகளைச் சேர்ந்த தமிழ் சிங்களப் பெண்களை கைது செய்ததாகவும் இவர்களில் ஒருவர் 17 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
READ MORE | comments

ஆமை விடும் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ!

பெந்தோட்டைப் பிரதேசத்தில் இன்று ஆமை விடும் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கலந்துகொண்டு சிறப்பித்தார். பெந்தோட்டை பிரதேசத்துக்குச் சென்ற ஜனாதிபதிக்குக் கிடைத்த அழைப்பினை ஏற்று அவர் இந்தக் கடலாமைக் குஞ்சுகளை கடலுக்கு விடும் நிகழ்வில் கலந்துகொண்டார். பல நூற்றுக்கணக்கான ஆமைக் குஞ்சுகளைக் கடலில் விட்ட ஜனாதிபதி அப்பிரதேச மக்களுடன் அளவளாவினார். அத்துடன் கடலாமைகள் உற்பத்தி செய்யும் நிலையத்துக்கும் ஜனாதிபதி சென்று பார்வையிட்டார்.
READ MORE | comments

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் குடைசாய்ந்த லொறி –பயணித்தோர் மயிரிழையில் தப்பினார்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் சீமேந்து ஏற்றிச்சென்ற லொறி குடைசாய்ந்ததில் அதில் பயணம் செய்தோர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.

இன்று புதன்கிழமை காலை திருகோணமலையில் இருந்து சம்மாந்துறைக்கு சீமேந்து ஏற்றிச்சென்ற லொறியே இவ்வாறு குடைசாய்ந்துள்ளது.
இல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியூடாக வந்தபோது புதுக்குடியிருப்பு முன்னைய விசேட அதிரடிப்படை முகாமுக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் பயணம் செய்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் எதுவித காயங்களும் இன்றி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.
READ MORE | comments

மூன்றே நாளில் 42 கோடியை அள்ளினார் கோச்சடையான்!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் கடந்த 23ந் தேதி வெள்ளிக்கிழமை வெளியானது. உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 42 கோ ரூபாய் வசூலித்துள்ளது.இந்தியாவில் மட்டும் 30 கோடி ரூபாய். தமிழ்நாட்டில் 20 கோடி ரூபாய். வெளிநாடுகளில் 12 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த வாரம் 100 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி ரசிகர்கள் மோசன் கேப்சன் டெக்னாலஜியை புரிந்து கொண்டு படத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
இதுபற்றி ஈராஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முதன்மை துணை தலைவர் நந்து அகுஜா கூறும்போது “படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்து. முன்பதிவு எங்களை மலைக்க வைத்தது.
ரிலீஸ் அன்று காலை 5 மணி முதலே காட்சிகள் ஆரம்பமாகிவிட்டது. ரஜினி ரசிகர்கள் தம்ஸ் காட்டி படத்தின் வெற்றியை உறுதி செய்தனர். அவர்கள் தங்கள் தலைவரை புதுமையான வடிவத்தில் பார்த்தில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். தியேட்டரை நோக்கி வீசும் ரசிகர்கள் அலை தொடரும்” என்கிறார்.
READ MORE | comments

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மாடியில் இருந்து வீழ்ந்து முதியவர் பலி

Monday, May 26, 2014


பாதுகாப்பற்ற மருத்துவ விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த வயோதிபர் இன்ற இரவு மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆண்களுக்கான கண் நோயாளர் விடுதி 1வது மாடியில் அமைந்துள்ளது. 



இந்த விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மட் கன்னங்குடாவைச் சேர்ந்த 80 வயதுடைய கணபதிப்பிள்ளை என்றழைக்கப்படும் முதியவர் இன்று இரவு 8.30மணியளவில் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


குறித்த நோயாளர் விடுதியியில் உள்ள யன்னல்கள் கிறில் இல்லாமல் பாதுகாப்பின்றி இருந்ததனால் மரணமடைந்த கண் பார்வையற்ற வயோதிபர் யன்னலை வெளியேறுகின்ற கதவு என எண்ணி யன்னல் வழியாக வெளியேறியபோதே குறித்த மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அறிய முடிகின்றது.
READ MORE | comments

எல்பிட்டிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவி கொலை-Photos

Sunday, May 25, 2014

எல்பிட்டிய நகரிலுள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
21 வயதான பல்கலைக்கழக கலைப்பீட மாணவி ஒருவரே இவ்வாறு எல்பிட்டிய பஸ் தரிப்பிடத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த யுவதி கொழும்பு நோக்கி வருவதற்காக இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கூர்மையான ஆயுதம் ஒன்றினாலேயே இவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
யுவதியுடன் தொடர்பு வைத்திருந்த ஒருவரிடம் இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
unmainews1
unmainews2
unmainews3
READ MORE | comments

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பல்கலை மாணவி கொலை

Saturday, May 24, 2014


எல்பிட்டிய, பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். 


இன்று (24) அதிகாலை 6.55 மணியளவில் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 


22 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார். 


இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத அதேவேளை எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 
READ MORE | comments

வாகன சாரதிகளுக்கான வாகன புகை பரீட்சித்தல் நிகழ்ச்சித்திட்ட கருத்தரங்கு - வீடியோ


READ MORE | comments

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு பாலத்தில் வாகன விபத்து


மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லாறு பாலத்தில் இன்று சனிக்கிழமை(24) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.


காரின் முன் டயர் வெடித்ததனால் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காத்தான்குடியிலிருந்து கல்முனை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பயணித்த சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பதுடன்



மேற்படி காயமடைந்தவர் காத்தான்குடியை சேர்ந்த மொகமட் ஸ்மையில்(66) என அடையாளங் காணப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.



காரினுள் இருந்த பலூன்  வெளிவந்ததால் இவர் உயிர் பிழைத்துள்ளாதாக வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.












READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |