யோஷித்த பணி நீக்கம் செய்யப்பட்டார் : நேற்று முதல் அமுல் என கடற்படை அறிவித்தது

Monday, February 29, 2016

சீ.எஸ்.என் தொலைகாட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்‌ஷ கடற்படையில் வகித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை சுயாதீனமாக நடத்தும் நோக்கிலேயே அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
READ MORE | comments

யானையின் தாக்குதலுக்குள்ளாகிவரும் படுவான்கரை பிரதேச மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேச மக்கள் போர்ச்சூழலில் பாதிக்கப்பட்டு நிம்மதி பெருமூச்சினை விடும்வேளையில் இன்று தொடர்ச்சியான யானையின் தாக்குதலுக்குள்ளாகிவருவது கவலைக்குரிய விடயமாக மாறிவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பலாச்சோலைக் கிராமத்தினுள் இன்று திங்கட்கிழமை (28) அதிகாலை புகுந்த 6 காட்டு யானைகளைக் கொண்ட கூட்டத்தினால் பெரும்சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
தீப்பந்தம் ஏந்தியும், பட்டாசு கொழுத்தியும், சத்தமிட்டும், ஒருவாறு கிராமத்தை விட்டு யானைக் கூட்டத்தை வெளியேற்றியுள்ளனர்.
இந்நிலையில் இக்கிராமத்திலிருந்த வீடு ஒன்றை முற்றாக உடைத்துச் சேதப்படுத்தியுள்ளதுடன், 30 இற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளையும், சேதப்படுத்தியதோடு பயன்தரும், தென்னை, வாழைகளையும், அழித்துவிட்டு காட்டுக்குள் யானைகள் சென்றுள்ளன.
இதன்போது அப்பகுதி கிராமசேவை உத்தியோகஸ்தர், மற்றும், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளனர். இவ்விடத்திற்கு திங்கட் கிழமை காலை விரைந்த கிராமசேவை உத்தியோகஸ்தர், மற்றும், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும், நிலமையினைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
தற்போது பெரும்போக அறுவடைகள் நடைபெற்று நெல்லினை வீடுகளுக்கு கொண்டுசென்றுள்ள மக்கள் அவற்றினை பாதுகாக்கமுடியாத நிலையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும், அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
n10
1IMG_8886IMG_8902IMG_8904IMG_8926
READ MORE | comments

கல்முனை சர்வோதயா நிறுவனத்தின் முகாமையாளர் கொலை செய்யப்பட்ட விதம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் photoes

கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் பெண் முகாமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிறுவனத்தில் முன்னர் முகாமையாளராகப் பணிபுரிந்த பொன்னம்பலம் உதயகுமார் என்பவரே இக்கொலை தொடர்பான சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக, கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யூ. அப்துல் கபார் தெரிவித்தார்.


வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண்ணும், கொலைச் சந்தேக நபரான முன்னாள் முகாமையாளரும் உடன்பிறவாச் சகோதரர்கள் எனத் தெரியவந்துள்ளது. இருவரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்தவர்கள்.

முன்னாள் முகாமையாளரின் நிதி தொடர்பான பிரச்சினையே இக்கொலைக்கு காரணமாக இருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.

கல்முனை, மட்டக்களப்பு பிரதான வீதியில் மிகவும் சனசந்தடிமிக்க வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள இந்நிதிநிறுவன அலுவலகத்தில் இச்சம்பவம் பட்டப்பகலில் இடம்பெற்றமை பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

அதனால், செய்தி அ றிந்ததும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் அவ்விடத்திற்குச் சென்று பல மணி நேரம் காத்திருந்தனர். நற்பிட்டிமுனை குளோரி வீதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் சுலக்ஷனா (வயது 33) என்ற இளம் பெண் முகாமையாளரே இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தாய் என்பதும் கணவர் தையல் வேலை செய்பவர் என்றும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:-

வழமை போன்று சனிக்கிழமையன்று காரியாலயத்துக்கு சென்று கடமையாற்றிக் கொண்டிருக்கும் போதே இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது. அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் காப்புகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவருடன் கடமையிலிருந்த மற்றொரு வெளிக்கள உத்தியோகத்தர் பகல் உணவுக்காக வெளியில் சென்று மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது இந்த உதவி முகாமையாளர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அப்துல் கபார் தலைமையிலான பொலிஸ் குழுவினர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், அம்பாறையிலிருந்து விசேடமாக வரவழைக்கப்பட்ட ‘சோக்கோ் பொலிஸ் அணியினர் விசாரணையிலீடுபட்டனர்.

கல்முனை மாவட்ட நீதிவானும், பதில் நீதிபதியுமான ராமகமலன் ஸ்தலத்துக்கு விஜயம் செய்து விசாரணைகளை நடாத்தினார். மூடிய அலுவலகத்துள் பிற்பகல் 3 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை விசாரணை தொடர்ந்தது.








அலுவலக ஊழியர்கள் அறுவர், சந்தேக நபரான முன்னாள் முகாமையாளர் பொன்னம்பலம் உதயகுமார் ஆகியோரை பொலிசார் 4 மணி நேரம் பூரண விசாரணை செய்துள்ளதோடு கொலையாளியை கையும் மெய்யுமாக அடையாளம் கண்டனர்.

கொலையாளியை அடையாளம் கண்டது எப்படி?

நிறுவனத்துக்குள் வைக்கப்பட்டிருந்த தலைக் கவசத்தை பற்றி சந்தேக நபரிடம் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விசாரணை செய்துகொண்டிருந்த போது சந்தேக நபரின் கை விரலில் புதிய காயம் ஒன்று இருந்துள்ளது. அதனை விசாரித்த போது வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த போது ஏற்பட்ட காயம் என அவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை உறுதிப்படுத்த சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று விசாரித்த பொலிசார், “அப்படியொன்றும் நடக்கவில்லையென ஊர்ஜிதம் செய்தனர். சந்தேக நபரின் காயப்பட்டிருந்த விரல் நகம் துண்டிக்கப்பட்டிருந்ததை அவதானித்த பொலிஸ் பொறுப்பதிகாரி கபார் கொலை செய்யப்பட்ட சடலத்தின் வாய்ப் பகுதியை பார்வையிட்டபோது சந்தேக நபரின் கை விரல் நகம் சடலத்தின் வாய்ப் பகுதியில் இருந்துள்ளது. கொலைச் சம்பவம் நடைபெற்ற போது அப்பெண் கொலையாளியின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிசெய்த போது விரல் கடிக்கப்பட்டு நகம் வாயினுள் சென்றிருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கொலை நடைபெற்ற நேரமும், இடமும் கொலையாளிக்கு ஒரு கொலை செய்யக்கூடிய வாய்ப்பு குறைவாக இருந்த போதும் நன்கு திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கொலையாகவே பார்க்க முடிகின்றது. நிறுவனத்தில் யாரும் இருக்கவில்லை. காவலாளி இல்லை, சீசீரிவீ கமரா இல்லை. இத்தனை விடயங்களும் ஒரே நேரத்தில் அறிந்திருக்கக் கூடியமையானது அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த அல்லது அந்த நிறுவனத்தைப் பற்றி நன்கு அறிந்தவரால் மட்டுமே தீர்மானித்திருக்க முடியும்.

இந்த நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள நிதி மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்டிருப்பதால் ஏற்பட்ட முரண்பாடே இந்தக் கொலைக்கான காரணமென தெரியவருகிறது. இது குடும்ப தகராறாக இருக்கலாம் என்று பலரால் ஊகம் தெரிவிக்கப்பட்டாலும் கொல்லப்பட்ட புதிய முகாமையாளரின் வருகையின் பின்னர் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள பல மோசடி சம்பவங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. இதனைத் தாங்க முடியாத நிலையில் இக் கொலைக்கான திட்டம் வகுக்கப்பட்டிருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று முன்தினம் கொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் திரண்ட மக்களினால் பதற்ற நிலை ஏற்பட்டதுடன் வீதிப் போக்குவரத்தும் தடைப்பட்டன. குறித்த பிரதேசம் எங்கும் பொலிசார் குவிக்கப்பட்டு அமைதி நிலை ஏற்படுத்தப்பட்டது.

நாட்டில் பல வருடங்கள் கடந்தும் கண்டு பிடிக்க முடியாமல் உள்ள சூழலில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்று 5.00 மணித்தியாலத்தில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டமையானது கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யூ. ஏ. கப்பாரின் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. பாரிய வன்முறை சம்பவம் ஒன்று அப்பிரதேசத்தில் நடப்பதற்கான சூழல் அமைந்திருந்த போதும், எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாமல் மிக சூட்சுமமாக கொலையாளி கைது செய்யப்பட்டமைக்கு கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் சாமர்த்தியமான நடவடிக்கையே காரணமாகும்.

சாப்பாட்டுக்கு வருவேன் என்றவர் வரவில்லை

கொலை செய்யப்பட்ட பெண் முகாமையாளர் கர்ப்பிணி என தகவல்கள் வெளியாகிய போதிலும் அது ஊர்ஜிதம் செய்யப்படவில்லை.

இவர் கடமைக்குச் சென்றதும் வீட்டிலிருந்து பகல் உணவு அனுப்பப்படுவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. சம்பவ தினம், மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டே சுலக்ஷனா சென்றுள்ளார்.

வீட்டிலிருந்து அன்றைய தினம் அலுவலகம் புறப்படுவதற்கு சற்றுமுன்னர் தாயாரை அழைத்த சுலக்ஷனா, “பிள்ளைக்குச் சாப்பாடு கொடுங்கள். நான் சாப்பாட்டுக்கு வருகிறேன்” என கூறிவிட்டே அலுவலகம் புறப்பட்டுள்ளாரென குடும்ப உறவிகனர்கள் தெரிவித்தனர்.
READ MORE | comments

அம்பாறை காரைதீவில் தூக்கில் தொங்குவதாக நடித்துக் காட்டியவரின் உயிர் பிரிந்து சென்ற பரிதாபம்

Saturday, February 27, 2016

அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
காரைதீவு 12ச் சேர்ந்த, 02 பிள்ளைகளின் தந்தையான தம்பிப்பிள்ளை பிறைசூடி (40 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது: 
மரமேறும் கலையைப் பிரதான தொழிலாகக் கொண்டுள்ள குறித்த நபர் நேற்று இரவு 8.00 மணியளவில் தனது வீட்டு முற்றத்தில் உள்ள கிட்டத்தட்ட 60 அடி நீளமுள்ள இலவம்பஞ்சு மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளார்.
இதற்கிடையில் தனது மனைவி ஏற்கனவே வெளிநாடு சென்று திரும்பியிருந்த நிலையில் அவர் மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று கணவனிடம் கூறியதாகவும்,
அதற்கு அவர் "நீ மீண்டும் வெளிநாடு சென்றால் இவ்வாறே தூக்கில் தொங்குவேன்" என விளையாட்டிற்காக நடித்துக்காட்டிய வேளையில் அவரின் உயிர் பிரிந்து சென்றதாகவும், உயிரிழக்கும் போது குறித்த நபர் குடிபோதையில் இருந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.
இதேவேளை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேற்று இரவு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் ஏ.எம். நசீல் நேரடியாகச் சென்று பார்த்ததோடு,
சுமார் 40 அடி தூரத்தில் தொங்கிய சடலத்தினை கீழே இறக்குவதற்கான உத்தரவினப் பிறப்பித்த போதும், பொதுமக்களும், பொலிசாரும் இணைந்து குறிப்பிட்ட சடலத்தினை கீழே இறக்க முயற்சிகளை செய்த போதும் இரவு 11.30 மணியை தாண்டியதால் அம்முயற்சி கைக்கூடவில்லை.
இன்று காலையிலேயே குறித்த சடலம் கீழே இறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

சிங்கள மக்கள் எப்போது தான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ? மகிந்தவின் கூத்தை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு என்றுமே வெளியேறாதவன் என்றும் கட்சி நெருக்கடிக்குள்ளான காலகட்டங்களில் எல்லாம் தலைமைத்துவத்துக்கு உறுதுணையாக இருந்து கட்சியை கட்டி வளர்க்கப் பாடுபட்டவன் என்றும் உரிமை கோரிக் கொள்வதில் எப்போதுமே பெருமைப்படுபவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
பண்டாரநாயக்கவின் பிள்ளைகளுக்கே இல்லாத கட்சி விசுவாசம் தன்னிடம் இருந்ததாக அவர் கூறியதையும் நாம் கண்டிக்கிறோம். ஆனால், இப்போது அவர் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். முன்னைய விசுவாசம் இப்போது எங்கே போய்விட்டது?
சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறாமல் இருந்தால் என்றைக்காவது ஒரு நாள் அக் கட்சியின் ஊடாக ஆட்சியதிகாரத்திற்கு வரமுடியுமென்பதை நன்குணர்ந்து மிகுந்த சாதுரியத்துடன் தனது வியூகங்களை வகுத்துச் செயற்பட்டார் மஹிந்த என்பதில் சந்தேகமில்லை. பண்டாரநாயக்கவின் பிள்ளைகளுக்கு இருக்கக்கூடிய பலவீனங்களையும் நன்கு புரிந்துகொண்டு தைரியமாக செயற்பட்டார்.
இப்போது ஆட்சியதிகாரம் கைவிட்டுப் போன நிலையில் சுதந்திரக் கட்சியை மீண்டும் தனது நலன்களுக்குப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இனிமேல் இருக்கப் போவதில்லை என்பதை நன்குணர்ந்த நிலையிலேயே அவர் புதிய கட்சி பற்றிப் பேசுகிறார்.
அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு இனிமேல் தன்னால் பயன்படுத்த முடியாத சுதந்திரக் கட்சி மீது விசுவாசத்தை வைத்திருந்து என்ன பயன் வரப்போகிறது? அதிகாரத்தைத் தரமுடியாத விசுவாசத்துக்கு அரசியலில் ஏது பெறுமதி? நாட்டு மக்களுக்குத்தான் புதிய கட்சியொன்று அவசரமாகத் தேவைப்படுகிறது என்று வேறு ராஜபக்ச கூறிக் கொண்டிருக்கிறார். அதுவும் தனது தலைமையில்.
அவரது நிலைமை இவ்வாறிருக்கையில், சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்வசமாக்கி ஒருவருடம் கடந்துவிட்ட போதிலும் இன்னமும் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
ஜனாதிபதியுடன் சேர்ந்து நிற்கின்ற சுதந்திரக்கட்சியின் மூத்த முக்கியஸ்தர்களும் கூட அமைச்சர் பதவிகளை அனுபவித்துக் கொண்டே மஹிந்தவின் புகழ்பாடத் தவறவில்லை. அதை சிறிசேனவினால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. சில தினங்களுக்கு முன்னர் கூட அமைச்சர் ஜோன் செனவிரத்ன ராஜபக்சவே போரை முடிவுக்கு கொண்டுவந்த யுகபுருஷர் என்று வர்ணித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
கட்சிக்குள் ராஜபக்சவின் செல்வாக்கை இல்லாமல் செய்யக் கூடிய வலிமையை அண்மைய எதிர்காலத்தில் சிறிசேனவினால் வரவழைக்கக் கூடியதாக இருக்குமென்று நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. ராஜபக்ச தனிக்கட்சி அமைத்துக் கொண்டு வெளியேறினால் சுதந்திரக் கட்சி பலவீனப்படக் கூடிய ஆபத்து இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதி சிறிசேனவுக்கு உறுதுணையாக நிற்கின்றார். எனினும் கட்சியை வலுப்படுத்துவதற்கு உதவக்கூடிய ஒரு அரசியல் செல்வாக்குத் தகுநிலையில் அவர் இருப்பதாகக் கூறமுடியாது.
ராஜபக்ச சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குடையவராக விளங்குவதற்கு முக்கிய காரணம் அவரது ஆட்சிக் காலத்தில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டமையும் அவர் கடைப்பிடித்து வருகின்ற சிங்கள பௌத்த மேலாதிக்கவாத அரசியல் அணுகுமுறையுமேயாகும்.
போர் வெற்றிக்கு ராஜபக்ச ஏகபோக உரிமை கொண்டாடுகின்ற அபத்தத்தை சிங்கள மக்கள் புரிந்து கொள்வதாக இல்லை. மஹிந்தவுக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்கள் சகலருமே புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிப்பதற்கு தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டார்கள். சிலர் சமாதான முயற்சிகள் என்ற பெயரில் முன்னெடுத்ததும் வேறு வழிகளிலான போர் நடவடிக்கைகள்தான்.
ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் (ஐ.ஆர்.ஏ) அரசியல்பிரிவிலான சின் பீனின் தலைவர் ஜெறி அடம்ஸ் சமாதான முயற்சிகள் எனப்படுபவை வேறுமார்க்கங்களிலான போர் (Peace process is wair by other means) என்று ஒரு தடவை கூறியிருந்தார்.
சிங்கள அரசியல் அதிகாரத்தை ஆயுதமேந்தி சவாலுக்கு உட்படுத்திய பிரபாகரனுடனோ அவரது இயக்கத்துடனோ அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு எந்த சிங்களத் தலைவரும் விரும்பியதில்லை. அவர்கள் சகலருமே இராணுவத் தீர்வொன்றையே மனதிற்கொண்டு செயற்பட்டார்கள் என்பதே உண்மை.
போரின் முன்னைய கட்டங்களை முன்னைய ஆட்சியாளர்கள் தங்களால் இயன்றவரை கையாண்ட பிறகு இறுதிக் கட்டமே ராஜபக்சவின் கையில் வந்து வீழ்ந்தது. இந்த இறுதிக் கட்டப் போரைத்தான் நான்கு வருடங்களாக ராஜபக்ச ஆட்சி அப்பாவித் தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் நேரக் கூடிய அழிவுகளைப் பொருட்படுத்தாமல் முழுமூச்சாக முன்னெடுத்து வெற்றி கண்டது.
அதில் கண்ட வெற்றிக்கு ராஜபக்ச ஏகபோக உரிமை கொண்டாடுவது என்பது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் கடைசி விக்கெட்டை வீழ்த்திய விளையாட்டு வீரர் தானே போட்டியை வென்றதாகவும் தானே ஆட்ட நாயகன் என்றும் களத்தில் இறங்கி அட்டகாசம் செய்வதற்கு ஒப்பானதாகும்.
சிங்கள மக்கள் எப்போது தான் இந்தக் கூத்தை புரிந்து கொள்ளப் போகிறார்களோ?
READ MORE | comments

ரவிராஜ் கொலைக்கு 5 கோடி வழங்கிய கோத்தபாய ராஜபக்ச

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்கு 5 கோடி ரூபா பணம் வழங்கியதாக கோத்தபாய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரவி கொலை செய்வதற்காக கருணா தரப்பிற்கு இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப்பிரிவின் முன்னாள் அதிகாரி ரியனாச்சி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் அவர் நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொலை கடந்த அரசாங்கத்தின் சூழ்ச்சித்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் வசந்த ஊடாக கருணா தரப்பிற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க, அரச புலனாய்வுப் பிரிவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டுல், கருணா தரப்பு வருண் ஆகியோருக்கு தெரிந்தே கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டது.
ரவிராஜை கொலை செய்யப் போவதாக வருண் என்னிடம் கூறினார் அரச புலனாய்வு தகவல் பிரிவிற்கு சொந்தமான பச்சை நிற முச்சக்கர வண்டியொன்றில் பிரசாத், விஜிர, செனவி, அஜித் போன்றவர்கள் இருந்தார்கள். வஜிரவின் கையில் கறுப்புநிற பையொன்று இருந்தது.
இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களின் பின்னர் ரவிராஜ் கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் மீளவும் தேசிய நூதன சாலைக்கு அருகாமையில் வருணை சந்தித்தேன், ரவிராஜ் கொலைக்காக கோதா 5 கோடி வழங்கினார் என அவர் என்னிடம் கூறினார் என லியனாரச்சி அபேரட்ன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணைகள் அடுத்த மாதம் 2ம் திகதி நடைபெறவுள்ளது.
READ MORE | comments

ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் உரையாற்றவுள்ள அல் ஹூசைன்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31வது கூட்டத்தொடர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலாவது அமர்வின் போது உரையாற்றவுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் பேரவைக்கு விளக்கமளிக்கவுள்ளார்.
செய்ட் அல் ஹூசைன் தனது நீண்ட உரையில் இலங்கை தொடர்பாக ஒரு பகுதியை ஒதுக்கியிருப்பார் எனவும் அதனூடாக இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பான தனது குறுகிய விளக்கத்தை அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதம் 24ம் திகதிவரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு எந்தவொரு தினமும் இதுவரை நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் ஒதுக்கப்படவில்லை.
எனினும் நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றும் போது அவ்வப்போது இலங்கை குறித்து கேள்விகள் எழுப்பப்படும் என கூறப்படுகின்றது.
இலங்கையின் சார்பில் ஜெனிவாவில் உள்ள இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் 31 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.
உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள், முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் உள்ளிட்ட பல்வேறு நிலைமைகள் குறித்து இம் முறை 31வது கூட்டத் தொடரில் 47 உறுப்பு நாடுகளினால் விரிவாக ஆராயப்படவுள்ளது.
மேலும் எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள முதலாவது அமர்வில் மனித உரிமைப் பேரவையின் தலைவர் சொய் கியோம்லிங், ஐ.நா பொதுச் சபை தலைவர் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
அதன் பின்னர் பல்வேறு உறுப்பு நாடுகள் உரையாற்றவுள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியும் முதலாம் நாள் அமர்வில் உரையாற்றவுள்ளார். இதன்போது இலங்கை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
READ MORE | comments

பட்டப்பகலில் கல்முனை நகரில் நிதிக் கம்பனியின் பெண் உதவி முகாமையாளர் வெட்டிக்கொலை

அம்பாறை மாவட்டம், கல்முனைப் பொலிஸ் பிரிவில் கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள சர்வோதய அபிவிருத்தி நிதிக் கம்பனியின் உதவி முகாமையாளரான பெண்ணொருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கும் 2.30 மணிக்குமிடையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் மேலும் கூறினர்.
குளோரி வீதி நற்பிட்டிமுனை, கல்முனையைச் சேர்ந்த 7 வயதுப் பெண் குழந்தையின் தாயான ராஜேஸ்வரன் சுலக்ஷனா (வயது 33) என்பவரே கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
வழமை போன்று சனிக்கழமையும் காரியாலத்திற்pகுச் சென்று கடமையாற்றிக் கொண்டிருக்கும்போதே இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது.
அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவருடன் கடமையிலிருந்த மற்றொரு வெளிக்கள உத்தியோகத்தர் பகல்போஷனத்திற்காக வெளியில் சென்று மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது இந்த உதவி முகாமையாளர் கழுத்து வெட்டப்பட்டு கீழே கிடப்பது கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
READ MORE | comments

காணாமல் போனவர்களுக்கு நடந்தது என்ன?- யோகேஸ்வரன்

Friday, February 26, 2016

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சுமார் 3,270 பேர் காணாமல் போயுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அரசாங்கம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு, புலிபாய்ந்தகல் அ.த.க. பாடசாலையின் அதிபர் கந்தலிங்கம் சத்தியவரதன் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டின் கடந்தகால அசாதாரண சூழ்நிலையால் எமது உறவுகள் பலரை இழந்து, அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இதுவரை எந்த தகவல்களும் கிடைக்காமல் தினமும் வேதனையுடன் வாழ்கின்றனர்.
1983ஆம் ஆண்டு தொடக்கம் 1987ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சுமார் 1,552 பேர் காணாமல் போயுள்ளார்கள், அவர்களை இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழுக்களுமே கடத்திச் சென்றுள்ளதாக அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர்.
1987இல் இந்திய இராணுவத்தினரால் 165 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 1990ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 1,560 பேர் காணாமல் போயுள்ளனர்.
இவர்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்தவர்களில் சிலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை அறியாத நிலையில் அவர்களது உறவினர்கள் அலைந்து திரிகின்றார்கள்.
யுத்தத்தின் பின்னர் 130க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளார்கள்.
அவர்கள் பற்றி எந்த தகவல்களும் இல்லை காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளின்போது, யாரெல்லாம் பலவந்தமாக அழைத்துச் சென்றார்கள் என காணாமல் போனவர்களது உறவினர்கள் சாட்சியமளித்துள்ளார்கள்.
இதுவரை இந்த விடயங்கள் தொடர்பாக எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த விசாரணைகள் மீது எமது உறவுகள் நம்பிக்கை இழந்துள்ளனர்' என அவர் இதன்போது, தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

இலங்கையை ஆசியாவின் ஒளியென பாராட்டிய வேளை திடீரெனச் சூழ்ந்த இருள்

நியூசிலாந்து பிரதமர் இலங்கையை ஆசியாவின் உண்மையான ஒளி என்று பாராட்டிய 24 மணிநேரத்தில், நாடு முழுவதும் நேற்று மின்சாரத் தடை ஏற்பட்டு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
நேற்றுமுன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்வில், இலங்கையை ஆசியாவின் உண்மையான ஒளி என்று நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ புகழ்ந்திருந்தார்.
நேற்று நியூசிலாந்து பிரதமர் கண்டியில் பயணம் மேற்கொண்டிருந்த போது பிற்பகல் 2 மணியளவில் இலங்கை முழுவதும், மின்சாரத் தடை ஏற்பட்டது.
அந்த வேளையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பில் உள்ள சினமன் கிரான்ட் விடுதியில், ஆசிய பசுபிக் அனைத்துலக ஜனநாயக ஒன்றியத்தின் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
மின்சார விநியோகத்தை படிப்படியாக ஆரம்பிக்க குறைந்தது மூன்று மணிநேரம் ஆனதால், நேற்று பிற்பகல் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டன.
மின்சாரம் இல்லாததால், வர்த்தக நிலையங்களும், அரச, தனியார் பணியகங்களும் நேரகாலத்துடனேயே மூடப்பட்டன.
வழக்கமாகவே கொழும்பில் வாகனப் போக்குவரத்து நெருக்கடியாக இருக்கும் நிலையில், மின்சார விநியோகம் தடைப்பட்டதால், வீதி சமிக்ஞை விளக்குகளும் ஒளிரவில்லை.
இதனால், வீதிகளி்ல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைச் சீர்படுத்த காவல்துறையினர் போராட வேண்டியிருந்தது.
இந்த திடீர் மின்சாரத் தடைக்கான காரணம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, பிரதான மின் விநியோகப் பாதையில் மின்னல் தாக்கி, இந்த தடை ஏற்பட்டிருக்கலாம் என்ற மின்சாரசபை வட்டாரங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன
READ MORE | comments

மின்சாரத்தை சிக்கனமாக பாவியுங்கள்! இலங்கை மின்சார சபை மக்களிடம் வேண்டுகோள்

இன்று வெள்ளி மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையான நேரத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அநாவசியமான மின் உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் இலங்கை மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அதை சரிசெய்து  மீள செயற்படுத்தும் வரையே இதனை பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. 
READ MORE | comments

ஜீ.ஜீ. பொன்னம்பலம் செய்த தவறே தமிழரசுக் கட்சி தோன்ற காரணம்!

இந்த நாட்டில் பிரஜாவுரிமைச் சட்டம் 1948ம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது அதற்கு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பதனாலேயே தமிழ் அரசுக் கட்சியினை தந்தை செல்வா தோற்றிவித்தார் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விவாதம் இன்று  நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் அங்கு உரையாற்றிய அவர்,
READ MORE | comments

வாழ்நாள் முழுதையும் அர்ப்பணிப்பேன்! மெக்கல்லம் உருக்கமான பேச்சு (வீடியோ இணைப்பு)

நியூசிலாந்து அணியின் அணித்தலைவரான பிரண்டன் மெக்கல்லம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
அதற்கு பின் வீரர்கள் பற்றிய பேசிய மெக்கல்லம், கடந்த சில ஆண்டுகள் மகிழ்ச்சியானவை என்று கருதுகிறேன். நாம் சில சாதனைகளை செய்துள்ளோம், சில போட்டிகளில் தோற்றுள்ளோம்.
ஆனால் முக்கியமான விஷயம் நாம் நமது ஆன்மாவை திரும்ப பெற்றுள்ளோம். நாம் இணைந்து விளையாடிய நாட்களை என் வாழ்நாள் முழுவதும் நினைவு கூர்வேன். அடுத்து வரும் சில ஆண்டுகளில் இந்த அணி பல சாதனைகளை படைக்கும்.
உங்கள் அனைவருக்கும் நன்றி, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.
மேலும் குடும்பம் பற்றி பேசுகையில், குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் சாதனைகள் புரிய இயலாது, கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சிரமமானது.
கடந்த 14-ஆண்டுகளாக என் கனவை வாழ்ந்து பார்க்க ஆதரவு கொடுத்தீர்கள். லிஸ் நான் உன்னிடம் கூறியது போல் என் வாழ்நாள் முழுவதையும் அர்பணித்து இந்த கடனை திருப்பி அடைப்பேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

களுத்துறையில் பாடசாலை மாணவன் கடத்தல் முயற்சி முறியடிப்பு

களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவரை கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பொதுமக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் களுத்துறை, கட்டுகுருந்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவர் நாடகம் மற்றும் அரங்கியற்கலை தொடர்பான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் செயற்பாட்டு பரீட்சைக்குத் தோற்றி விட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது வான் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் சிலர் மாணவனை இழுத்து வானுக்குள் போட்டுக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதனைக் கண்ட பொதுமக்கள் ஒன்றுதிரண்டு கடத்தல்காரர்களின் முயற்சியை முறியடித்துள்ளதுடன், பொலிசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ள பொலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
READ MORE | comments

தாஜூதீன் படுகொலை குறித்து கைதாகப்போகும் பிரமுகர் யார்? கொழும்பு அரசியலில் பரபரப்பு

கொலை செய்யப்பட்ட ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை நிரூபணமாகியுள்ளதால், அதனை குற்றமாக கருதி கொலையாளிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸினால் இன்றைய தினம் குறித்த உத்தரவு வழங்கப்பட்டது. நீதிமன்ற வைத்திய அதிகாரியின் அறிக்கை மற்றும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வு அறிக்கை உள்ளிட்ட 6 அறிக்கைகளை கருத்திற்கொண்ட நீதவான், குறித்த உத்தரவை விடுத்தார்.
இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் என 16 பேர் விரைவில் கைதாகலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது. ராஜபக்‌ஷவின் மகன் நாமல் ராஜபக்‌ஷ, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுரா திசாநாயக்க உட்பட பலர் அடுத்த சில தினங்களில் கைதாகலாம் என பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகின்றது.
READ MORE | comments

தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்தும் போராடுவோம்: சிறி மோகன்

Thursday, February 25, 2016

கௌதம புத்தன் பெயரால் தன்னை ஒரு புனிதனாக காட்டிக்கொண்ட துறவியால் தான் முதலில் துப்பாக்கி ஏந்தி இனமுறுகல் நிலை ஏற்பட்டது. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறி மோகன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு யாப்பு உருவாக்கம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன வேறுபாடு இன்றி பல இலட்ச கணக்கான மக்களை இழந்துள்ளோம்.

வெள்ளையர்களின் அடக்குமுறையை எதிர்த்து போராடியவர்களில் ஒருவனே பண்டார வன்னியன் அவனுக்கென்று ஒரு வீரம் உண்டு. கப்பம் கொடுத்து பிச்சை ஏந்திய மன்னன் அல்ல அவன்.

அதேபோன்று தான், அரசியலமைப்பு மாற்றம் என்ற போர்வையில் நீங்கள் போடும் பிச்சையை ஏற்பவர்கள் அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

தற்போதைய அரசாங்கத்தின் அரசியலமைப்பு, தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும் இல்லையெனில், நாம் தனித்தே வாழ தொடர்ந்தும் போராட வேண்டிய நிலை ஏற்படும்.

READ MORE | comments

இலங்கை தீவு முழுவதும் மின்சாரம் இல்லை - சீரற்ற காலநிலையே காரணம்

இலங்கை முழுவதும் தற்போது மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
இந்த மின் வெட்டு தொடர்பான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
மேலும், மின்சாரத் தடை காரணமாக அனைத்து அலுவலகங்கள், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்கள்,வைத்தியசாலை உள்ளிட்ட பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையே காரணம்
இலங்கை மின்சார சபையை தொடர்பு கொண்டு வினவிய போது,
மேற்படி மின்சார தடை சீரற்ற காலநிலை காரணமாகவும் பலத்த இடியின் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையினர் தெரிவித்தனர்.
மேலும், இன்னும் மூன்று மணித்தியாலங்களுக்குள் மின்சாரத்தை மீளவும் வழமை நிலைக்கு மாற்ற மின்சார சபை ஊழியர்கள் முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர்.
READ MORE | comments

புதிய அரசியலமைப்பிற்க்கான .. முன் மொழிவுகள்.ஞா . ஸ்ரீநேசன்


.சோல்பரி யாப்பின் 29 ஆவது சரத்தின் இரண்டாவது உபபிரிவில் உள்ள நான்கு விதிகள் காணப்பட்டன. அவை எந்தவொரு சமுகப்பிரிவினரதும் சுதந்திரமான செயற்பாடுகளை கட்டுப்படுத்த இயலாத வகையிலும் ஒரு சமுகப்பிரிவினருக்கு வழங்கப்படாத சிறப்புரிமைகளை வேறு ஒரு சமுகப்பிரிவினருக்கு வழங்க முடியாத வகையிலும் அமைந்து இருந்தது. 

READ MORE | comments

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றுநிருபத்தை வெளியிட அமைச்சரவை அனுமதி

அரச சேவையில் தற்போது பெறப்படும் அடிப்படை சம்பளத்துக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ள விசேட கொடுப்பனவு மட்டும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தேர்தல் வாக்குறுதியின் படி வழங்கப்பட்ட 10,000 கொடுப்பனவுகளை மாதாந்தம் கட்டம் கட்டமாக சம்பளத்தில் சேர்க்கும் வகையில் அரச சேவையின் சம்பள திருத்தங்கள் 2016 வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் தேசிய சம்பளங்கள் ஆணைக்குழுவின் சிபார்சின் பெயரில் மற்றும் நிதி அமைச்சின் விருப்பத்திற்கிணங்கவும் தயாரிக்கப்பட்ட சம்பள திட்டம் 2016-01-01 திகதி முதல் அமுல்படுத்தவும் அதனடிப்படையில் குறித்த சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்கும் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர்  ரன்ஜித் மத்துமபண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
READ MORE | comments

பொன்சேகா அமைச்சரானார்

பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  முன்னிலையில் அவர் அமைச்சராக பதவிப் பிரமானம் செய்துக்கொண்டார்.
இதன்படி பொன்சேகாவுக்கு பிரதேச அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

யோஷித்த 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது மகன் யோஷித்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட 5 பேரும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று மீண்டும் கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய நிலையில் அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய தினம் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது மஹிந்த ராஜபக்‌ஷ , சிராந்தி ராஜபக்‌ஷ , நாமல் ராஜபக்‌ஷ ஆகியோர் யோஷித்த ராஜபக்‌ஷவை பார்வையிடுவதற்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
READ MORE | comments

சட்டவிரோதமாக அவுஸ்திரெலியா சென்ற 15 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Wednesday, February 24, 2016

சட்ட விரோதமான முறையில அவுஸ்திரெலியாவுக்கு சென்றிருந்த 15 இலங்கையர்கள் நேற்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக திருப்பியனுப்பப்பட்டவர்களில் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் சிலர் இங்கிருந்து சிங்கப்பூர் ஊடாக மலேசியாவுக்கு சென்று அங்கிருந்து கடல் வழியாக அவுஸ்திரெலியாவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக அங்கு சென்ற இவர்களை அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் விசேட விமானம் மூலம் நேற்றைய தினம் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளனர்.
இதன்படி இங்கு வந்த 15 பேரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் ஆரம்பக் கட்ட விசாரணையை தொடர்ந்து குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை இவர்கள் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

பாராளுமன்றத்தில் ஸ்ரீநேசன் M.P

அந்நியர்களால் சிறுபான்மையோருக்கென்று வகுக்கப்பட்ட காப்பீடுகளை எமது நாட்டின் ஆட்சியாளர்களே தகர்த்து விட்டனர். ஆங்கிலேயரால் இலங்கைக்கு வரைந்தளிக்கப்பட்ட "சோல்பரி" யாப்பில் சிறுபான்மை மக்கள் விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டு இருந்தது, அதற்கென்று சிறுபான்மையோர் காப்பிட்டு ஏற்பாடுகள் வளங்கப்படிருந்தன. அவற்றை எல்லாம் குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட எமது ஆட்சியாளர்களே வழங்க மறுத்துவிட்டனர். என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  ஞா . ஸ்ரீநேசன்  அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 'புதிய அரசியலமைப்புக்கான முன் மொழிவுகள்' விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர் சோல்பரி யாப்பின் 29 ஆவது சரத்தின் இரண்டாவது  உபபிரிவில் உள்ள நான்கு விதிகள் காணப்பட்டன. அவை எந்தவொரு சமுகப்பிரிவினரதும் சுதந்திரமான செயற்பாடுகளை கட்டுப்படுத்த இயலாத வகையிலும் ஒரு சமுகப்பிரிவினருக்கு வழங்கப்படாத சிறப்புரிமைகளை வேறு ஒரு சமுகப்பிரிவினருக்கு வழங்க முடியாத வகையிலும் அமைந்து இருந்தது. 

இதனோடு இணைந்து கீழ் சபையின் ஆறு நியமான உறுப்பினர்கள், மேல் சபையான செனட் சபை, சுதந்திரமான நீதிச்சேவை ஆணைக்குழு, நடுநிலையான பொதுச்சேவை ஆணைக்குழு , பல அங்கத்துவ தேர்தல் தொகுதிகள், கோமறைக்கழகம் என்பன சிருபன்மையோரை பாதுகாப்பதற்காக ஆங்கிலேயரால் எமக்கு அளிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்த யாப்பு மாற்றப்பட்டு 1972யில் ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட முதலாம் குடியரசு யாப்பில் சிறுபான்மையோர் காப்பிட்டு அம்சங்கள் நீக்கப்பட்டு இருந்தன. அந்த யாப்பில் அரச கரும மொழி சிங்களம் என்றும் அரச மதம் பௌத்தம் என்றும் பொறிக்கப்பட்டதோடு  சிறுபான்மை தமிழ் மொழியும், மதங்களும் புறக்கணிக்கப்பட்டு, பலவீனப்படுத்தப்பட்டன .


தொடர்ந்து 1978 இல் கொண்டு வரப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பிலும் கூட சிங்கள மொழி, பௌத்த மதம் என்பவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. எனவே தமிழ் இளைஞர்கள்  ஜனநாயக வழியில் நம்பிக்கையிழந்து வன்முறை அரசியலுக்குள் தள்ளப்பட்டனர். 30 வருட கால உள்நாட்டு யுத்தமும் நீடித்தது இதன் ஊடாக இவ் அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டி படிப்பினைகள் பல உள்ளன. எனவே புதியதொரு அரசியல் யாப்பு பற்றிய சிந்தனையை நல்லாட்சி என்று சொல்லப்படும் அரசாங்கம் எட்டியுள்ளது. ஆதலால் கடந்த கால கசப்பான படிப்பினைகளை கருத்தில் கொண்டு இனிமேலும் அமையப்போகின்ற அரசியல் யாப்பானது முன்னைய யாப்புகளைப் போன்றல்லாமல் ஒற்றயாட்சி பரிமாணம் நீக்கப்பட்டு  கூட்டாட்சி தத்துவம் அமையக் கூடியதாகவும், நியாயமானதும் நீடித்து நிற்கக் கூடியதுமாகவும் அமைய வேண்டும் என தனது உரையில் தெரிவித்தார்.
READ MORE | comments

டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் தீ 15 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் பகுதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பற்றியது.
24.02.2016 அன்று பிற்பகல் வேளையில் பரவிய தீ காரணமாக இந்தப்பகுதியில் சுமார் 15 ஏக்கர் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாராவது தான் இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.
தீயை கட்டுப்படுத்த திம்புள்ள – பத்தனை பொலிஸார் முயற்சித்தபோதும் காற்றின் வேகம் காரணமாக தீ அதிகளவில் பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினரும், திம்புள்ள – பத்தனை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து தீயை கட்டுப்படுத்த மாலை 5.30 மணிவரை முயற்சித்தனர்.
ஆனால் சில பகுதிகளில் மட்டுமே அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது.
எனினும் தீ வேகமாக பரவியதன் காரணமாக சுமார் 15 ஏக்கர் எரிந்து சாம்பலாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
DSC03988DSC03995DSC04013DSC04035
READ MORE | comments

கைது செய்வதை தடுக்குமாறு கெஞ்சும் பசில்

Tuesday, February 23, 2016

தன்னை கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. இந்த வழக்கிற்கு சம்பந்தப்பட்ட தகவல்களை தாக்கல் செய்வதற்கு காலம் தேவை என்று மனுதாரர்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி கூறியிருந்தார்.நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தன்னை கைது செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், அவ்வாறு சட்டத்திற்கு முரணாக தான கைது செய்யப்படுவதினை தடுக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பசில் ராஜபக்ச உச்ச நீதிமன்றில் கோரியுள்ளதாக எமது அத தெரண செய்திளானர் கூறினார்.தன்னை கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்',கைது செய்வதை தடுக்குமாறு கெஞ்சும்  பசில்தன்னை கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்"
READ MORE | comments

ரணில் மற்றும் மஹிந்தவுக்கு கடுமையான ஆலோசனை வழங்கிய கலபொட ஞானிஸ்வர தேரர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு, கலபொட ஞானிஸ்வர தேரரால் கடுமையாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக கொழும்பு, ஹூனுப்பிட்டிய கங்காராம விகாரையில் நவம் வருடாந்த ஊர்வலம் நடைபெற்றது. இதன்போது பிரதமர் மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது கங்காராம விகாரையின் விகாராதிபதி கலபொட ஞானிஸ்வர தேரர், இருவருக்கும் பல மணிநேரம் போதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
கோபதாபங்களைக் குறைத்துக் கொள்ளுமாறும் பிரதமருக்கும் ,மஹிந்தவிற்கும் அறிவுரை தேரரால் வழங்கப்பட்டுள்ளதாகவும், தனது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும்படியும் தேரரால் கோரப்பட்டுள்ளது.
பிரதமர் மற்றும் மஹிந்த ஆகிய இருவரும் கோபங்களை மறந்து நண்பர்களான செயற்படுவதுடன், வரலாற்றில் பேசப்பட வேண்டியவர்களான செயற்பட வேண்டும் எனவும் தேரர் ஆலோசனை வழங்கினார்.
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |