Home » » டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் தீ 15 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் தீ 15 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் பகுதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பற்றியது.
24.02.2016 அன்று பிற்பகல் வேளையில் பரவிய தீ காரணமாக இந்தப்பகுதியில் சுமார் 15 ஏக்கர் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாராவது தான் இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.
தீயை கட்டுப்படுத்த திம்புள்ள – பத்தனை பொலிஸார் முயற்சித்தபோதும் காற்றின் வேகம் காரணமாக தீ அதிகளவில் பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினரும், திம்புள்ள – பத்தனை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து தீயை கட்டுப்படுத்த மாலை 5.30 மணிவரை முயற்சித்தனர்.
ஆனால் சில பகுதிகளில் மட்டுமே அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது.
எனினும் தீ வேகமாக பரவியதன் காரணமாக சுமார் 15 ஏக்கர் எரிந்து சாம்பலாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
DSC03988DSC03995DSC04013DSC04035
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |