Home » » ரணில் மற்றும் மஹிந்தவுக்கு கடுமையான ஆலோசனை வழங்கிய கலபொட ஞானிஸ்வர தேரர்

ரணில் மற்றும் மஹிந்தவுக்கு கடுமையான ஆலோசனை வழங்கிய கலபொட ஞானிஸ்வர தேரர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு, கலபொட ஞானிஸ்வர தேரரால் கடுமையாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக கொழும்பு, ஹூனுப்பிட்டிய கங்காராம விகாரையில் நவம் வருடாந்த ஊர்வலம் நடைபெற்றது. இதன்போது பிரதமர் மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது கங்காராம விகாரையின் விகாராதிபதி கலபொட ஞானிஸ்வர தேரர், இருவருக்கும் பல மணிநேரம் போதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
கோபதாபங்களைக் குறைத்துக் கொள்ளுமாறும் பிரதமருக்கும் ,மஹிந்தவிற்கும் அறிவுரை தேரரால் வழங்கப்பட்டுள்ளதாகவும், தனது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும்படியும் தேரரால் கோரப்பட்டுள்ளது.
பிரதமர் மற்றும் மஹிந்த ஆகிய இருவரும் கோபங்களை மறந்து நண்பர்களான செயற்படுவதுடன், வரலாற்றில் பேசப்பட வேண்டியவர்களான செயற்பட வேண்டும் எனவும் தேரர் ஆலோசனை வழங்கினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |