Home » » பிள்ளையானின் செயலாளர் பிரசாந்தனின் விளக்க மறியல் நீடிப்பு

பிள்ளையானின் செயலாளர் பிரசாந்தனின் விளக்க மறியல் நீடிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரன் ஆகியோரின் விளக்கமறியல் மார்ச் 08ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர் இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியில் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி பாடசாலை ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு அளித்திருந்த வாக்குமூலத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |