குருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை - துலாம் மற்றும் விருச்சிகம்

Sunday, July 31, 2016

துலாம்
சித்திரை 3,4-ம் பாதம் 75% சுவாதி 80% விசாகம் 1,2,3-ம் பாதம் 77%
விறுவிறுப்பையும், உண்மையையும் நேசிப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து கொண்டு எதிலும் வெற்றியையும், பதவி, கவுரவத்தையும் தந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை விரயஸ்தானமான 12-ம் வீட்டிற்குள் நுழைவதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் பங்குவர்த்தகம் மூலமும் பணம் வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் என அடுத்தடுத்து சுபச்செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். குடும்பத்தில், கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. இரவு நேரத்தில் வாகனத்தில் பயணிப்பதை தவிர்க்கப்பாருங்கள்.
பிள்ளைகளை அன்பால் வழி நடத்துங்கள். நீண்ட நாட்களாக போக நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். குருபகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். குரு பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அரசுக்காரியங்கள் தாமதமாகி முடியும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். சமூகத்தில் பிரபலமடைவீர்கள். மகளுக்குத் திருமணம் முடியும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் வருமானம் உயரும்.
குடும்பத்தில், கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். மனைவிவழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் உங்கள் ராசியில் குரு அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால் காய்ச்சல், சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை, வயிற்று உப்புசம் வந்துச் செல்லும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
இந்த குரு மாற்றம் புதிய பாதையையும், புதிய அனுபவங்களையும் தருவதாக அமையும்.
விருச்சிகம் 
விசாகம் 4-ம் பாதம் 85% அனுஷம் 90% கேட்டை 91%
தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொள்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்கான வேலைகளால் அவதிப்படுத்தியதுடன், சொன்ன சொல்லையும் காப்பாற்ற முடியாமல் திணறடித்து வந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திக்கு திசையறிந்து இருட்டிலிருந்து வெளியுலகத்திற்கு வருவீர்கள். இனி தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சமூகத்தில் ஒருபடி அந்தஸ்து உயரும். மற்றவர்களின் தயவின்றி தீர்க்கமாக யோசித்து தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்க அதிகாரிகள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதுவீடு கட்டி குடிபுகுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.
02.8.2016 முதல் 19.9.2016 வரை சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் பயணிப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் உங்களின் புகழ், கவுரவம் உயரும்.
25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் எதிர்ப்புகள் குறையும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 12-ம் வீட்டில் குரு மறைவதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் நெருக்கடிகளை சமாளிக்கும் சாமர்த்தியமும் பிறக்கும்.
வியாபாரத்தில் புதிதாக முதலீடு செய்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்யோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அலுவலக சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்துக் கொள்வார்கள்.
READ MORE | comments

குருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை - சிம்மம் மற்றும் கன்னி

சிம்மம்
மகம் 77% பூரம் 85% உத்திரம் 1-ம் பாதம் 70%
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்டுபவர்களே! இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்மகுருவாக அமர்ந்து உங்களுக்கு ஏகப்பட்ட மன அழுத்தத்தையும், எப்போதும் மருந்து, மாத்திரைகளுமாக சுற்றித் திரிய வைத்த குருபகவான் 02.08.2016 முதல் 01.09.2017 வரை உங்கள் ராசியை விட்டு விலகி தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால் முடங்கிக் கிடந்த நீங்கள் இனி புத்துயிர் பெறுவீர்கள். அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சந்தேகத்தாலும், ஈகோ பிரச்சினையாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். உங்கள் முகம் மலரும். தோற்றப் பொலிவு கூடும். பெரிய நோய் இருப்பதை போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். உடல் நலம் சீராகும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். அவர்களின் பிடிவாதம் தளரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். உங்களை கிள்ளுக்கீரையாக நினைத்தவர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுப்பீர்கள். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவார்கள். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
குருபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் ஆலோசனையால் நீங்கள் புதிய பாதையில் செல்வீர்கள். சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். நவீன மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். குருபகவான் 8-ம் வீட்டை பார்ப்பதால் திட்டமிடாத செலவுகளைப் போராடி சமாளிப்பீர்கள். அக்கம்பக்கத்தாருடன் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வேலை கிடைக்கும். உங்களைத் தாழ்த்திப் பேசியவர்கள் திருந்துவார்கள். வழக்கு சாதகமாகும்.
02.8.2016 முதல் 19.9.2016 வரை சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் அடிக்கடி பதட்டப்படுவீர்கள். 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் வசதி, வாய்ப்புகள் கூடும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 3-ம் இடத்தில் குரு மறைவதால் புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். பதவி உயர்வுக்காக உங்களது பெயர் பரிசீலிக்கப்படும். சம்பளம் உயரும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதாக அமையும்.
கன்னி
உத்திரம் 2,3,4-ம் பாதம் 65% அஸ்தம் 70% சித்திரை 1,2-ம் பாதம் 73%
கல் மனசுக்காரர்களையும் கனிவான பேச்சால் கரைப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து வீண்பழி, அலைச்சல், திடீர் பயணங்களையும் தந்த குருபகவான் 02.08.2016 முதல் 01.09.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்மகுருவாக அமர்வதால் வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் முழுக்கவனம் செலுத்தப்பாருங்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் காட்டுங்கள். என்றாலும் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் முடிவுகளெடுப்பதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலை உயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். ஜென்ம குருவால் கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்னக் கசப்புணர்வுகள் வந்தாலும் அன்பு குறையாது.
குரு, உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் பணப் புழக்கம் கணிசமாக உயரும். தந்தையாருக்கு இருந்த மருத்துவச் செலவுகள் குறையும். அவருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்சினை நல்ல விதத்தில் முடியும். குருபகவான் ராசிக்குள்ளேயே தொடர்வதால் தலைச் சுற்றல், காய்ச்சல், மஞ்சள் காமாலை, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல் வரக்கூடும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. காய்ச்சிய தண்ணீரை அருந்துங்கள். காய், கனி, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். குடும்பத்தில் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும்.கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. காசோலை மற்றும் பத்திரங்கள் விஷயத்தில் கவனம் தேவை. சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள உங்கள் ரசனைக்கேற்ற வீட்டிற்கு குடிபுகுவீர்கள்.
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் லாபாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் நினைத்தது முடியும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 2-ம் வீட்டில் குரு அமர்வதால் ஆரோக்யம் சீராகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன்- மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள்.
READ MORE | comments

குருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை - மிதுனம் மற்றும் கடகம்

மிதுனம்
மிருகசீரிஷம் 3,4ம் பாதம் 70% திருவாதிரை 65% புனர்பூசம்1,2,3-ம் பாதம் 68%
இளகிய மனசு உள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் மறைந்துக் கொண்டு எந்த வேலைகளையும் முழுமையாக முடிக்க முடியாமல் முடக்கிப் போட்ட குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை 4-ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் சகிப்புத் தன்மையையும், விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால் மூளைபலத்தால் முன்னேறுவீர்கள். பழையப் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். நீண்ட காலமாகச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களின் 10-ம் வீட்டை குரு பார்ப்பதால் புது வேலை அமையும். கவுரவப் பதவிகள் தேடி வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதியதை வாங்குவீர்கள்.
குருபகவான் ராசிக்கு 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேகம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மகளுக்கு நிச்சயமாகும். 02.8.2016 முதல் 19.9.2016 வரை உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் பயணிப்பதால் எதையும் தாங்கும் மனோபலம் கிடைக்கும். இளைய சகோதரர்களால் பயனமடைவீர்கள். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வராத பணம் கைக்கு வரும். இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் வீண் விரயம், தயக்கம், தடுமாற்றம், சகோதர வகையில் சச்சரவு, தாழ்வுமனப்பான்மை, மறைமுக எதிர்ப்புகள், முன்கோபம் வந்துச் செல்லும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். ரத்த அழுத்தம் அதிகமாகும். ஆனால் 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 5-ம் வீட்டில் குரு அமர்வதால் மனக்குழப்பங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வாடகை வீட்டில் குடி இருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் தொந்தரவுகள் வந்துப் போகும். சிலருக்கு வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். அவருக்கு முழங்கால் வலி, முதுகுத் தண்டில் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகளெல்லாம் வந்துப் போகும். பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். மறைமுக அவமானங்கள் வரும். அலுவலக ரகசியங்களை சொல்ல வேண்டாம். சக ஊழியர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். சம்பள உயர்வு, சலுகைகளெல்லாம் சற்று தாமதமாகும்.
இந்த குருப்பெயர்ச்சி நெருக்கமானவர்களின் மற்றொரு முகத்தை காட்டிக் கொடுப்பதுடன், எதிர்நீச்சல் போட வைக்கும்.
கடகம்.
புனர்பூசம் 4-ம் பாதம் 73% பூசம் 70% ஆயில்யம் 85%
சொல்வன்மையும், செயல்திறனும் கொண்ட வர்களே! இதுவரை உங்களின் தன வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு ஓரளவு சமூக அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 02.08.2016 முதல் 01.09.2017 வரை மூன்றாம் வீட்டில் மறைவதால் எதையும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. என்றாலும் உங்களின் 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். ஆடை, ஆபரணம் சேரும். கணவன் மனைவிக்குள் சச்சரவுகள் வரும். என்றாலும் அன்பும், அன்யோன்யமும் குறையாது. குருபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. தந்தையாரின் நோய் குணமாகும். அவருடன் இருந்து வந்த மோதல்களும் விலகும். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.
குருபகவான் 11-ம் வீட்டைப் பார்ப்பதால் கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். இழுபறியாக இருந்த அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். ஆனால் 3-ம் வீட்டில் குரு தொடர்வதால் எடுத்த வேலைகளை முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். திடீரென்று புதிதாக அறிமுகமாகும் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். வசதி, செல்வாக்கை கண்டு மயங்கி தவறானவர்களுடன் சென்றுவிட வேண்டாம். தினமும் எளிய உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குரு பயணிப்பதால் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். அரசு காரியங்கள் உடனே முடியும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் ராசிநாதனான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பிரபலமாவீர்கள். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும்.
ஆனால் 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 4-ம் வீட்டில் குரு நுழைவதால் இனந்தெரியாத சின்னச் சின்னக் கவலைகள் வந்துப் போகும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும்.வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். கடையை விரிவுப்படுத்துவது, மாற்றுவது போன்ற முயற்சிகளில் இறங்குவீர்கள்.
READ MORE | comments

குருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை - தனுசு மற்றும் மகரம்

தனுசு
மூலம் 68% பூராடம் 72% உத்திராடம் 1ம் பாதம் 77%
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருந்து புதிய அனுபவங்களை கற்றுத் தந்து உங்களின் இலக்கை நோக்கி முன்னேற வைத்த குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால் உத்யோகம், பதவி, கவுரவத்திற்கு பங்கம் வருமே என்றெல்லாம் கலங்க வேண்டாம்! ஓரளவு நன்மையே உண்டாகும். வெளிநாட்டில் சிலருக்கு வேலை அமையும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை பார்க்க வேண்டி வரும். என்றாலும் குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது வேலை அமையும். திடீரென்று அறிமுகமாகும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வழக்கு சாதகமாகும். வீடு மாறுவீர்கள். இடமாற்றம் உண்டு. குருபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். கவுரவப் பதவி தேடி வரும். ஆனால் குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் சில சமயங்களில் எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் மனஇறுக்கத்திற்கு ஆளாவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம்.
வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். கணவன்- மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். சிலர் மனைவி, பிள்ளைகளை விட்டுப் பிரிந்து அயல்நாடு, வேற்றுமாநிலம் சென்று வேலைப் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் திடீர் அதிர்ஷ்ட, யோகம் உண்டா கும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. தந்தை பக்கபலமாக இருப்பார். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். திருமணம், சீமந்தம், காதுகுத்து என்று வீடு களை கட்டும்.
தந்தைவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் அட்டமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். அவ்வப்போது அடிவயிற்றில் வலி, இரத்த சோகை, கண் வலி வந்துப் போகும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். சொத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத பயணங்கள் உண்டு. உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 11-ம் வீட்டில் குரு அமர்வதால் எங்குச் சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். மகனின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கூடாப்பழக்கங்கள் தொற்ற வாய்ப்பிருக்கிறது.
வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் திடிரென்று பணியை விட்டு விலகுவார்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாக பேசுவார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உங்களுடைய உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் நல்ல பெயரெடுத்து முன்னேறுவார்கள். அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
இந்த குருமாற்றம் பணத்தின் அருமையை அறிய வைப்பதாகவும், சகிப்புத் தன்மையும், பொறுமையும் அவசியம் என்பதை உணர்த்துவதாகவும் அமையும்.
மகரம்
உத்திராடம் 2,3,4-பாதம் 80% திருவோணம் 90% அவிட்டம் 1,2-ம் பாதம் 85%
பெற்ற தாய்க்கும், பிறந்த மண்ணுக்கும் முதல் மரியாதை தருபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானமான 8-ம் வீட்டில் அமர்ந்து வீண் அலைச்சல்களையும், தாழ்வுமனப்பான்மையையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை 9-ம் வீட்டில் அமர்வதால் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவார். பிரச்சினைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.
கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உங்கள் கல்வித் தகுதிக்கேற்ற நல்ல உத்யோகம் அமையும். இளைய சகோதர வகையில் பண உதவி, பொருளுதவி கிட்டும். உங்களுடைய அனுபவ அறிவுக் கூடும். வீட்டில் வர்ணம் பூசுவது, கூடுதல் அறைக் கட்டுவது, தளம் அமைப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும். உறவினர், நண்பர்கள் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றுவீர்கள். குருபகவான் உங்களின் ராசியைப் பார்ப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். புது பதவி, பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை பார்ப்பதால் தைரியம் பிறக்கும். சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாக திரும்பும்.
குருபகவான் 5-ம் வீட்டை பார்ப்பதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் பயணிப்பதால் திடீர் பயணங்களும், செலவு களும் அதிகரிக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மதிப்பு, மரியாதைக் கூடும். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மொழியறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டிற்கு சில நாட்களில் குடிப்புகுவீர்கள். சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் மூத்த சகோதரர் உதவுவார். சிலர் புதிதாக தொழில் தொடங்குவீர்கள். தாயாருக்கு இருந்த மருத்துவச் செலவுகள் நீங்கும். பழைய காலி மனையை எதிர்பார்த்த விலைக்கு விற்று விட்டு நகரத்தில் புது வீடு வாங்குவீர்கள்.
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 10-ம் வீட்டில் குரு அமர்வதால் உத்யோகத்தில் இடமாற்றம் வரும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வீண் பழிச் சொல் வரக்கூடும். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அடிக்கடி ஒரு தேக்க நிலை, மந்த நிலை உண்டாகும். குடும்பத்துடன் வெளியூர் சென்று மாறுபட்ட சூழ்நிலையில் தங்கி வந்தால் மனஇறுக்கங்கள் குறையும். பசியின்மை, வயிற்று உபாதைகள் வந்துப் போகும்.
வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சந்தை ரகசியங்களை தெரிந்துக் கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஆடர்கள், ஏஜென்டுகள் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர் பணிந்து வருவார். உத்யோகத்தில் உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும், சலுகைகளும் கிடைக்கும். வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
READ MORE | comments

குருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை - கும்பம் மற்றும் மீனம்

கும்பம்
அவிட்டம் 3,4 பாதம் 72% சதயம் 85% பூரட்டாதி 1,2,3-ம் பாதம் 77%
மறப்போம், மன்னிப்போம் என்ற குணம் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு குடும்பத்தில் சந்தோஷத்தையும், பதவி, பட்டத்தையும் தந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும் என்றாலும் குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் பிரச்சினைகள் வெகுவாக குறையும். கடன் பிரச்சினைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். வேற்றுமதம், மாநிலம் மற்றும் மொழியினரின் ஆதரவுக் கிட்டும். உங்களால் பயனடைந்தவர்கள் தற்சமயம் உங்களுக்கு உதவ வாய்ப்பிருக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குரு பகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால்
பணவரவு திருப்திகரமாக இருக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். அறிவுப் பூர்வமானப் பேச்சால் அனைவரின் இதயத்திலும் இடம் பிடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுப நிகழ்ச்சிகள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். குருபகவான் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்ப்புகள் குறையும். வருங்காலத் திட்டமெல்லாம் தீட்டுவீர்கள். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆனால் எட்டாம் வீட்டில் குரு அமர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். பெரிய விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள்.
கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். அவர்களின் பேச்சை கேட்டு வீணாக சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, பிரேக் ஓயர் சரியாக இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்வது நல்லது. அவ்வப்போது கோபப்படுவீர்கள். பலவீனமாக இருப்பதாக சில நேரங்களில் உணருவீர்கள். பிள்ளைகளிடம் அவ்வப்போது குறைகளை கண்டுப்பிடித்து வருத்தமடைவீர்கள். நிறைகளையும் பாராட்டத் தயங்காதீர்கள். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு செல்வது நல்லது. வீட்டில் களவு போக வாய்ப்பிருக்கிறது. நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆனால் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் கணவன் - மனைவிக்குள் இருந்த மோதல் விலகும். அடகிலிருந்த நகைகள், பத்திங்களை மீட்க உதவிகள் கிட்டும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.
ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுவது நல்லது. நேரம் தவறி சாப்பிட வேண்டி வரும். சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் வீட்டில் தடைப்பட்டு வந்த திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். வழக்கு சாதகமாகும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 9-ம் வீட்டில் குரு நுழைவதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுக்கு சிலர் உதவுவதாக சொல்லி உபத்திரவத்தில் சிக்க வைப்பார்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆன்மித்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்யோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும். எல்லா நேரமும் கறாராக பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக் கூட போராடிப் பெற வேண்டி வரும்.
இந்த குருப்பெயர்ச்சி ஒரு பக்கம் பணவரவையும், மறுபக்கம் கூடுதல் செலவுகளையும் தருவதாக அமையும்.
மீனம்
பூரட்டாதி 4ம் பாதம் 80% உத்திரட்டாதி 85% ரேவதி 83%
வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்தவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்துக் கொண்டு வெளியில் சொல்ல முடியாதபடி பல நெருக்கடிகளையும், சிக்கல்களையும், வேலைச்சுமையையும், அவமானங்களையும் தந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் உங்களுடைய திறமைகளையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிரபலங்களின் தொடர்புக் கிடைக்கும்.
உற்சாகமாக பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு புது வழியில் யோசிப்பீர்கள். உங்கள் பணத்தை ஏமாற்றியவர்கள் இப்போது திருப்பித் தருவார்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். குழந்தையில்லையே என வருந்திய தம்பதிகளுக்கு அழகான வாரிசு உருவாகும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். நகர எல்லையைத் தாண்டி வீட்டு மனை வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டைப் பார்ப்பதால் நினைத்த காரியம் சுலபமாக முடியும். எங்குச் சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும்.
இந்தி, மலையாளம் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனைவி உங்கள் முயற்சியை ஆதரிப்பார். அவரின் ஆரோக்யம் சீராகும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். குருபகவான் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். நீண்ட காலமாக பார்க்க நினைத்தவரை சந்தித்து மகிழ்வீர்கள்.
புதிதாக வாகனம், செல்ஃபோன் வாங்குவீர்கள். உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருந்துவீர்கள். அடிவயிற்றில் வலி, ஒற்றை தலை வலி, நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு வந்துப் போகும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும்.
மகள் உங்களைப் புரிந்துக் கொள்வார். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 8-ம் வீட்டில் குரு மறைவதால் எதிலும் ஆர்வமின்மை, காரியத் தாமதம், வீண் டென்ஷன், செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வங்கிக்கு கட்ட வேண்டிய கடனை முறையாக செலுத்துங்கள். 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சகோதரர்கள் அதிருப்தி அடைவார்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் நீங்கள் இருப்பீர்கள்.
வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபார சங்கம், தேர்தல் இவற்றில் நல்ல பதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். அயல்நாட்டில் வேலை வாய்ப்புகள் வரும். பதவி உயர்வுக்காக தேர்வெழுதி காத்திருந்தவர்களுக்கு அந்த வாய்ப்புத் தேடி வரும். சம்பள உயர்வு, மறுக்கப்பட்ட உரிமைகளெல்லாம் தடையின்றி கிடைக்கும்.
இந்த குரு மாற்றம் சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அங்கீகாரத்தையும், பணம், பதவியையும் தந்து உயர்த்தும்.
READ MORE | comments

குருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை - மேஷம் மற்றும் ரிஷபம்

மேஷம்:
அஸ்வினி 55% பரணி 70% கிருத்திகை 1ம் பாதம் 60%
எதிலும் முதலிடத்தை விரும்புபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றித் தந்த குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை 6-ம் இடத்தில் அமர்வதால் கொஞ்சம் வளைந்துக் கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தள்ளிப் போன சுபநிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து வீட்டில் நடந்தேறும். பிரபலங்கள் உதவுவார்கள். புது வேலை கிடைக்கும். எதிர்பார்த்த அயல்நாட்டு விசா வந்து சேரும்.
குருபகவான் 12-ம் வீட்டை பார்ப்பதால் உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசத்தையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். திடீர் பயணங்கள் உண்டு. ஆனால் குரு ,6-ம் வீட்டில் மறைவதால் வேலைச்சுமையால் மனஇறுக்கம் உண்டாகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னை, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். மற்றவர்களுக்கு பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.
அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்காதீர்கள்.
02.8.2016 முதல் 19.9.2016 வரை சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால் குழந்தை பாக்கியம் கிட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 காலகட்டத்தில் வீடுமாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.
தாயாரின் ஆரோக்கியம் சீராகும். கடனில் ஒருபகுதியை திரும்பத் தருவதற்கு வழிபிறக்கும். 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் அழகு, ஆரோக்கியம் கூடும். ஆனால் 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசியில் 7-ம் வீட்டில் குரு அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கவிருப்பதால் உங்களுடைய உழைப்பிற்கும், நீங்கள் சிந்திய வியர்வைக்கும் அங்கீகாரம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். ஆனால் 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் சகோதர வகையில் அலைச்சல், சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம், எதிலும் நிம்மதியின்மை, வழக்கால் நெருக்கடிகள் வந்துச் செல்லும்.
இந்த குருமாற்றம் திட்டமிடுதலும், முன்னெச்சரிக்கை உணர்வும் தேவை என்பதை உணர வைக்கும்.
ரிஷபம்
கிருத்திகை 2,3,4ம் பாதம் 70% ரோகிணி 77% மிருகசீரிஷம் 1,2 ம் பாதம் 85%
எப்போதும் நேர்பாதையில் செல்பவர்களே! இதுவரை உங்களின் ராசிக்கு 4-ம் இடத்தில் அமர்ந்துக் கொண்டு நாலாவிதத்திலும் பாடாய்படுத்திய குருபகவான் 02.08.2016 முதல் 01.09.2017 வரை 5-ம் வீட்டில் நுழைவதால் இனி புதிய சகாப்தம் படைப்பீர்கள். குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குரு உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தொலைநோக்குச் சிந்தனையால் எதையும் சாதிப்பீர்கள். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை, பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். தந்தையார் உதவிகரமாக இருப்பர். உங்களின் லாப வீடான 11-ம் வீட்டை குரு பார்ப்பதால் பங்குவர்த்தகம் மூலம் பணம் வரும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய பதவி, பொறுப்புகளுக்கு ்தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
வேலை நியமன உத்தரவுக்காக காத்திருந்திருந்தவர்களுக்கு அழைப்பு வரும். 02.8.2016 முதல் 19.9.2016 வரை உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் பயணிப்பதால் அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பெற்றோரின் உடல் நலம் சீராகும். அரசாங்கத்தால் ஆதாயமடைவீர்கள். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உங்கள் ரசனை மாறும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாடு சென்று வருவீர்கள். 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் கணவன்மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். பழைய கடன் பிரச்சினை தீரும். ஆனால் 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 6-ம் வீட்டில் குரு மறைவதால் குடும்பத்தில், கணவன் மனைவிக்குள் ஈகோப் பிரச்னைகள் வரக்கூடும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். ஆரோக்யத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறை ஏற்படும்.
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் வீண் செலவினங்கள், பதற்றம் வந்து போகும். விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். குரு 5-ல் நுழைவதால் குடும்பத்தில் சந்தோஷம் குடிக்கொள்ளும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு எதிர்பார்த்தபடி உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். சலுகைத் திட்டங்களை அறிமுகம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையில் உங்கள் உழைப்பையும், நல்ல மனதையும், சக ஊழியர்கள் புரிந்துக் கொள்வார்கள். பாரபட்சமாக நடத்திய அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும்.
READ MORE | comments

கிழக்கில் பட்டிருப்பு வலயம் முதலிடம். வலயக்கல்வி பணிப்பாளர் புகழாரம்

கிழக்கு மாகாண  பாடசாலைக்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சிகள் இம்மாதம் 27ம்திகதி தொடக்கம் 30ம் திகதி வரை திருகோணமலை கந்தளாய்லீலாரெட்ண விளையாட்டு மைதானத்தில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஏ.ரி.எம்.நிஷாம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விளையாட்டு நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயம் 211 புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் இவ்வெற்றியினை பெற்றுக் கொண்டுள்ளது. இரண்டாவது இடத்தினை 187 புள்ளிகளுடன் அம்பாரை கல்வி வலயம் பெற்றுக்கொண்டது. 
பட்டிருப்பு கல்வி வலயத்தில் களுதாவளை மகா வித்தியாலயம் 10 தங்கபதக்கம் உட்பட தலா 9 வெள்ளி, வெண்கல பதக்கங்களைப் பெற்றதுடன் 94 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். செட்டிபாளையம் மகா வித்தியாலயம் 52 புள்ளிகளையும், மண்டூர் 13 விக்கினேஸ்வரா வித்தியாலயம் 26 புள்ளிகளையும், பட்டிருப்பு மத்தி மகா வித்தியாலயம் 24 புள்ளிகளையும், வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயம் 09 புள்ளிகளையும், மகிழூர் வித்தியாலயம் 03 புள்ளிகளையும், மண்டூர் 14 அ.த.க.பாடசாலை 03 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டனர். 
இதேவேளை ஆண்களுக்கான மெய்வல்லுனர் போட்டியில் முதலிடத்தை பட்டிருப்பு கல்வி வலயம் 100 புள்ளிகளைப் பெற்று முதலிடத்;தையும், கிண்ணியா கல்வி வலயம் 92 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், பெண்களுக்கான மெய்வல்லுனர் போட்டியில் அம்பாரை கல்வி வலயம் 139 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், பட்டிருப்பு கல்வி வலயம் 111 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர். பாடசாலை ரீதியாக ஆண்கள் பிரிவில் முதலிடத்தை 62 புள்ளிகளைப் பெற்று திருகோணமலை மத்திய கல்லூரியும், 57 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தினை பெற்றது.
களுதாவளை மகா வித்தியாலய மாணவனான ஜெயரெத்தினம் ரிஷானன் 15வயதிற்கு கீழ்பட்ட பிரிவில் சாம்பியன் பெற்றுள்ளதுடன் பல கிழக்கு மாகாண புதிய சாதனைகளும் இப்பாடசாலையால் முறியடிக்கப்பட்டது என பட்டிருப்பு கல்வி வலய உடற்கல்வி ஆசிரியர் நாகமணி ராமேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார். 
பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளைநாயகம் வாழ்த்து தெரிவிக்கையில்,
எமது பட்டிருப்பு கல்வி வலயம் இம்முயையும் சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டமையினை இட்டு நான் மகிழ்ச்சி அடைவதாகவும் இவ்வெற்றியினை பெற்றுத்தந்த வீர, வீராங்கணைகளுக்கும், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர், ஒத்துழைப்பு வழங்கிய அதிபர்கள், பெற்றோர்களுக்கு நன்றியதலைத் தெரிவித்ததுடன், தேசிய மட்டத்திலும் வெற்றியினைப் பெற வேண்டுமென வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
எமது வலயம் தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் இவ்வெற்றியினை பெற்றுள்ளது. ஆனால் எமது வலயத்தில் நவீன மயப்படுத்தப்பட்ட மைதானங்கள் இல்லை. பாடசாலைகளுக்கு போதுமான விளையாட்டு உபகரணங்கள் இல்லை. இதனை சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது கவனத்தில் கொண்டு முன்வந்து  இவற்றை பெற்றுத் தந்தால் இன்னும் பல வெற்றிகளை நாம் பெறுவது திண்ணம் என கூறியதுடன், நாம் எதிர்பார்த்த வெற்றிகளை பெற முடியாமல் போனமையினை கவலை அடைவதாகவும் தெரிவித்தார். கோட்டத்திற்கு தலா ஒரு பாடசாலை மைதானத்தையாவது நவீன மயப்படுத்தியால் இன்னும் பல வெற்றிகளை பெறலாம் எனவும், தெரிவித்தார்.





READ MORE | comments

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையான மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் மீன்டும் முதலிடம்

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையான மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் 211 புள்ளிகள் பெற்று பட்டிருப்பு கல்வி வலயம் மீன்டும் முதலிடம் பெற்று தனது சாதனையை மீன்டும் புதுபித்துள்ளது.எனவே இவ்விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து மாணவ செல்வங்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்களை நல் வழிகாட்டி ஆசிரியர்கள், பெற்றோர்கள், விளையாட்டுகழகங்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும் எமது  இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்.
READ MORE | comments

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் களுதாவளை மகா வித்தியாலயம் முன்னிலையில்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில்  களுதாவளை மகா வித்தியாலயம் முன்னிலையில் உள்ளது.

இதுவரை  அறிவிக்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் களுதாவளை மகா வித்தியாலயம் 10 தங்கம், 4 வெள்ளி, 9 வெங்கலப் பதக்கங்களைப் பெற்று 79 புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்கின்றனர்

பட்டிருப்பு கல்வி வலயம் முதல் நிலையில் செல்கின்றது.

அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்

READ MORE | comments

கொழும்பின் புறநகர் பகுதியில் சடலம் மீட்பு!

கொழும்பின் புறநகர் பகுதியான மத்தேகொட நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு எதிரில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக கஹாதுடுவ பொலிஸார் கூறியுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 38 வயதானவர் எனவும் இவர் பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நபர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டுள்ளாரா? என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

பால் குடித்த குழந்தை உயிரிழப்பு

தாய்ப்பால் அருந்திய 2 ½ மாத பெண் குழந்தை மூச்சுத்திணறி சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். பாரதிபுரம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சிவதாசன் கிசானா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. காலை 7 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுத்த தாய், காலை உணவை சமைத்து முடித்து விட்டு, 9.30 மணிளவில் குழந்தையை தூக்கியுள்ளார்.
இதன்போது, குழந்தை எவ்வித அசைவும் இன்றி உடல் குளிர்வடைந்து இருந்தத்தை கண்ட அவர், உடனடியாக குழந்தையை யாழ். போதான வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளார்.
எனினும் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மரண விசாரணைகளை, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகளை அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு உள்வாங்கவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம் நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிசாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தம்மிக்க முனசிங்க மற்றும் அதன் ஆலோசகர் தென்னே ஞானானந்த தேரோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.
2012ஆம் ஆண்டுக்கு பின்னர் பட்டம்பெற்ற 1500க்கும்மேற்பட்ட பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளபோதிலும் இதுவரையில் அவர்களுக்கான எந்தவித நியமனங்களும் வழங்கப்படவில்லையெனவும் சங்கத்தின் தலைவர் ரி.கிசாந்த் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட பல்வேறு தரப்பினரும் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியபோதிலும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை தாங்கள் பட்டப்படிப்பினை பல்வேறு கஸ்டத்தின் மத்தியில் நிறைவு செய்து நான்கு வருடங்களை கடந்துள்ளபோதிலும் தமக்கான நியமனங்கள் எதுவும் வழங்கப்படாமை மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக இதில் கலந்துகொண்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடங்கள் உள்ள நிலையிலும் அவற்றினை பட்டதாரிகளை கொண்டு நிரப்புவதற்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கம் தமது கோரிக்கை தொடர்பில் உரிய பதில் வழங்காவிட்டால் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்துடன் இணைந்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கும் நிலையேற்படும் எனவும் சுட்டிக்காட்டினர்.
IMG_0539IMG_0542IMG_0553IMG_0572IMG_0574IMG_0579IMG_0585IMG_0604IMG_0610IMG_0614
READ MORE | comments

இந்திய அம்பியூலன்ஸ் சேவைக்கு 2 ஆயிரம் அழைப்புகள்

இந்தியாவின் உதவியின் கீழ், இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைக்கான அம்பியூலன்ஸ் வண்டி சேவைக்கு இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் கிடைத்துள்ளன.
அரச வைத்தியசாலைகளில் இந்த அம்பியூலன்ஸ் வண்டி சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில்  இந்திய அம்பியூலன்ஸ் வண்டி சேவை தற்போது வழங்கப்படுகின்றது.
READ MORE | comments

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் களப்புப் பகுதியில் 12 வயது சிறுவன் சடலமாக மீட்பு

களுவாஞ்சிக்குடி – ஓந்தாச்சிமடம் களப்புப் பகுதியில் 12 வயதான சிறுவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவத்தில் பலியான சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த, மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

தங்கத்துக்கு மாற்றாக அறிமுகமாகிறது மற்றொரு புதிய உலோகம்!

Saturday, July 30, 2016

தங்கத்திற்கு மாற்றாக 'லீடிங் ஜுவல்லர்ஸ் ஆப் தி வேர்ல்டு' என்ற, உலக தங்க நகை கூட்டமைப்பு, 'லுமினக்ஸ் யூனோ' என்ற புதிய மதிப்புமிகு உலோகத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
தங்கம், பிளாட்டினம், பலேடியம், வெள்ளி ஆகிய உலோகங்களின் கலவையில் இருந்து, 'லுமினக்ஸ் யூனோ' உலோகம் தயாரிக்கப்படுகிறது.
தற்போது, 10 கிராம், 'லுமினக்ஸ் யூனோ' உலோகத்தின் விலை, 1,250 ரூபாய்.
தங்கம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு அடுத்தபடியாக, 'லுமினக்ஸ் யூனோ' என்ற உலோகத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம் என, அந்த கூட்டமைப்பு உறுதி அளித்துள்ளது.
தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்து வருவதால், நகைக் கடை உரிமையாளர்கள், தங்கம், பிளாட்டினம் நகைகளுக்கு மாற்றாக, 'லுமினக்ஸ் யூனோ' உலோகத்தால் ஆபரணங்களை செய்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது, இந்த உலோகம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் கிடைக்கிறது.
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |