விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் தற்கொலை

Thursday, June 30, 2022

 


கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமின் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


59 வயதான உதவி பொலிஸ் பரிசோதகர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
READ MORE | comments

இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி - சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்படும் அபாயம்

 


இலங்கைக்கு வரும் விமானங்களை அடுத்த பயணங்களுக்கான எரிபொருளை நிரப்பி வருமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் எரிபொருள் இருப்பு குறைந்துள்ளதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு விமான பயணங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விமான சேவை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச விமானங்கள் தடைப்படும் அபாயம்

இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி - சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் | Are Flights From India To Sri Lanka Open

விமானங்கள் திரும்பி செல்வதற்காக எரிபொருள் நிரப்பி வருவதனால் விமானங்களில் ஏற்றப்படும் சரக்குகளின் அளவு குறைவடைகின்றன. அத்துடன் இடையில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக வேறு நாடுளில் விமானங்களை தரையிறக்க வேண்டியுள்ளமையினால் செலவுகள் அதிகரித்துள்ளது. இதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில், இந்த விமானங்களின் சரக்கு மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், செலவுகளை அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த சூழ்நிலையில் விமான டிக்கெட்டுகளின் விலை மேலும் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது எனவும் விமான சேவைகள் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடி

இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி - சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் | Are Flights From India To Sri Lanka Open

பெரிய விமானம் அதிக எரிபொருளை சேமித்து வைத்து பறக்கும் என்பதனால் எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற இலங்கைக்கு அடிக்கடி செல்லும் விமானங்கள் எரிபொருளுடன் திரும்பும் என எதிர்பார்க்கலாம்.

எனினும் தற்போது தமது பயணங்களைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக விமான சேவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரையில் இலங்கைக்கு 42 விமான சேவைகள் வருகின்ற நிலையில், நீண்ட தூர பயணங்களின் போது திரும்பி செல்வதற்காக எரிபொருள் நிரப்பி செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

சராசரியாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏறக்குறைய 8 மில்லியன் லீட்டர் விமான எரிபொருளை சேமித்து வைக்க முடியும், ஆனால் தற்போதைய வெளிநாட்டு இருப்பு நெருக்கடி காரணமாக விமான எரிபொருள் இருப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எரிபொருள் விநியோகத்தை தனி நிறுவனத்திற்கு மாற்றுவது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


READ MORE | comments

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விசேட வைத்திய நிபுணர் விடுத்துள்ள கோரிக்கை

 


அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் பிரசவத்திற்காக கட்டாயம் பிரசவ மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர்கள் இருக்கும் அரச வைத்தியசாலைகுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


பிரசவ மற்றும் மகப்பேறு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சனத் லெனரோல் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாயொருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் கிடைக்காத நிலையில், சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தின் ஊடாக அம்புலன்ஸ் வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

இலங்கைக்கு வரும் 7500 மெற்றிக் தொன் எரிபொருள்! வெளியாகிய தகவல்

 


7 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசல்

LIOC நிறுவனத்திடம் இருந்து 7 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அதிகரித்துள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமை காரணமாக பல்வேறு நாடுகளிடம் இருந்தும் எரிபொருளை பெற்று கொள்ளவது பற்றிய பேச்சு வார்த்தைகளும், உலக நாடுகளுக்கான பயனங்களும் அதிகரித்துள்ளன.

இருந்தும் எவரிடம் இருந்தும் சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்காத சந்தர்ப்பத்தில் ரஷ்ய அரச தலைவர் புடினுடன் கோட்டாபய ராஜபக்ச தொலைபேசியில் தொடர்பு கொண்டு எரிபொருள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

10ம் திகதி வரை எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் 

இலங்கைக்கு வரும் 7500 மெற்றிக் தொன் எரிபொருள்! வெளியாகிய தகவல் | Sri Lanka Fuel Crisis Lioc Help

இந்நிலையில், ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சரி செய்ய யூலை 10 ம் திகதி வரை எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் என்றவாறு விநியோக சேவை மட்டுப்படுத்தபட்டாலும் கூட தற்சமயம் அரசின் அத்தியவசிய சேவைகளுக்கே வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு வார காலத்திற்கு மாத்திரம் பயன்பாடும் அளவே எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அதற்குள் எரிபொருள் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் 15 மணித்தியாலங்களாக மின்துண்டிப்பு அதிகரிக்கும் என மின்சார சபை எச்சரித்துள்ளது.

எரிபொருள் பெறுவதற்கான வேலைத்திட்டம்

இலங்கைக்கு வரும் 7500 மெற்றிக் தொன் எரிபொருள்! வெளியாகிய தகவல் | Sri Lanka Fuel Crisis Lioc Help

சகல அத்தியவசிய சேவைகளும் முடங்குவதை தவிக்கும் முகமாக அரசு பல வழிகளில் எரிபொருள் பெறுவதற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் இலங்கையில் இருப்பதாக அகழ்வாராச்சிகளில் ஈடுபட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போதய நெருக்கடி நிலைமையை தற்காலிகமாக சமாளிக்கும் பொருட்டு லங்கா IOC நிறுவனத்திடம் இருந்து 7 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்தாகவும் அதற்கான பணப்பரிமாற்றமும் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் குறித்த டீசல் இருப்புக்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

READ MORE | comments

பதுக்கிய பெற்றோலில் எரிந்து பலியான பெண் - திருகோணமலையில் சம்பவம்

 


பைஷல் இஸ்மாயில்)


திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்ள்ள சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.

வீட்டின் சுவாமி அறையில் நேற்றுக் காலையில் விளக்கேற்றி விட்டு வீசிய தீக்குச்சியின் தீ மூலமாக, சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கொள்கலனில் தீ ஏற்பட்டதனாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் உயிரிழந்தவரின் உடல் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

கிழக்கில் அடுத்த வாரம் முதல் பாடசாலைகளில் புதிய நடைமுறை

 சமகால எ


ரிபொருள் பற்றாக்குறை பிரச்சனை காரணமாக கிழக்கு மாகாணத்தில் அடுத்த வாரம் முதல் மூன்று தினங்களுக்கு பாடசாலைகளை நடாத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.


திங்கள், வெள்ளி தவிர்ந்த செவ்வாய், புதன் ,வியாழக்கிழமை ஆகிய மூன்று நாட்களும் பாடசாலைகள் வழமை போல் நடைபெறும்.

இந்த ஆலோசனையை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் முன்வைத்தார்.

கிழக்கு மாகாண கல்வி செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் உடனான Zoom தொழில்நுட்ப கூட்டத்தில் ஆளுநர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இத்தகவலை அந்தந்த வலய கல்வி பணிப்பாளர்கள் அவரவர் வலய புலனக் குழுவில் வாட்ஸ்அப் குழுவில் அதிபர் ஆசிரியர்களுக்கு அறிவித்திருக்கிறார்கள்.

செவ்வாய், புதன், வியாழக்கிழமை நாட்களிலே ஆசிரியர்களையும் மாணவர்களையும் முழுமையாக வரவழைத்து, மாணவர்களுக்கு முழு நேரசூசி வழங்கி, முழு அளவிலான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் .இதற்கு பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டார் .

இதேவேளை, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சில பிழையான வழிநடத்தல்களை முன்னெடுக்க திட்டமிட்டு இருக்கின்றது. அதனை பொருட்படுத்தாமல் அதிபர்களும் ஆசிரியர்களும் இந்த விடயத்திலே ஒத்துழைக்க வேண்டும்.

முடியுமானால் மூன்று மாவட்ட அரசாங்க அதிபர் உடன் பேசி எரிபொருள் பிரச்சனையை தீர்ப்பதற்கு உதவுவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். போக்குவரத்து பிரச்சினை உள்ள பாடசாலைகளுக்கு பொது போக்குவரத்து நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது .

வருகின்ற யூலை மாதம் திங்கட்கிழமை 4 ஆம் திகதி தொடக்கம் வெள்ளிக்கிழமை 8 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் இந்த மூன்று நாள் பாடசாலை இடம்பெறும்.

மேலும், அதன் பின்பு எவ்வாறு பாடசாலையை நடத்துவது என்று பின்னர் விரிவாக அறிவிக்கப்படும் என்று அந்த கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
READ MORE | comments

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடும் மோதல்! ஒருவர் பலி : 600இற்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம்

Wednesday, June 29, 2022

 பொலன்னறுவை -  கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. 

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பலர் தப்பியோட்டம்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடும் மோதல்! ஒருவர் பலி : 600இற்கும் மேற்பட்டோர்  தப்பியோட்டம் | Clash At Kandakadu Rehabilitation Center 

அத்துடன், அங்கிருந்து 600க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மர்மமான முறையில் ஒருவர் மரணம் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றிரவு தடுப்பு முகாமில் இருந்த கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அதன் பின்னர் முகாமுக்குள் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கலவரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றியிருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது கைதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இன்று காலை சுமார் 500-600 கைதிகள் பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

READ MORE | comments

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம்!

 


மேல்மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படும் என மேல்மாகாண பிரதம செயலாளர் ஜெயந்தி விஜேதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் அபராதம் விதிக்கப்பட மாட்டாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு இராணுவம் பெருவரவேற்பு

 


( காரைதீவு சகா)


வரலாற்றுப் பிரசித்தி பெற்றதொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கதிர்காமம் பாதையாத்திரை குழுவினரை இராணுவத்தின் முல்லைத்தீவு மாவட்ட 54வது படைப்பிரிவு வரவேற்று உபசரித்தது.

முல்லைத்தீவு மாவட்ட இராணுவ தலைமையகத்துக்கு முன்னாள் பாதயாத்திரைக் குழுவினர் அன்போடு வரவேற்கப்பட்டனர்.

இராணுவம் அவர்களை வரவேற்று உபசரித்தது. பாதயாத்திரை குழுவின் தலைவரான சி.ஜெயராஜா நன்றி தெரிவித்தார்.

இறுதியில் குழுப் புகைப்படங்களை எடுத்தனர்.



READ MORE | comments

8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

Tuesday, June 28, 2022

 


பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் நாளை மற்றும் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.


இடைநிலை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் உபுல் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

ஆசிரியைகளின் இடமாற்றத்துக்கு இடைக்காலத் தடை - கல்முனை மேல் நீதிமன்றம் அதிரடி.


 (நூருள் ஹுதா உமர்)


கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் கல்முனை கல்வி வலையத்தில் கடமை புரியும் 07 ஆசிரியைகளுக்கு வேறு வலையங்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசியல் அமைப்பின் உறுப்புரை 154 P (4) (b) யின் ஏற்பாடுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட உறுதிகேள் எழுத்தாணை மனு (Writ of Certiorari) கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி கெளரவ ட்றொக்சி முன்னிலையில் கடந்த 24.02.2022 திகதி ஆதரிப்பதற்காக அழைக்கப்பட்டது.

குறித்த வழக்கில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி. நகுலேஸ்வரி பிள்ளைநாயகம், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜெ.அருளானந்தம் மற்றும் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

மனுதாரர்கள் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த கெளரவ மேல்நீதிமன்ற நீதிபதி குறித்த வழக்கை மீண்டும் 27.06.2022 (திங்கட்கிழமை) அழைக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த எழுத்தானை மனு மீண்டும் நேற்று 27.06.2022 ஆந் திகதி ஆதரிப்பதற்காக அழைக்கப்பட்டபோது மனுதாரர்கள் சார்பாக தோன்றிய சட்டத்தரணிகள் கிழக்கு மாகாண அரச சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவையின் பிரிவு 185 யின் கீழ் அங்கீகரிக்கப்படாத ஒரு இடமாற்றத்தை மனுதாரர்களுக்கு வழங்கியமை நியாயமற்றதும் சட்டமுறணானதுமாகும் என நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்தனர். குறித்த சமர்ப்பணங்களில் மீது திருப்தியுற்ற கெளரவ மேல் நீதிமன்ற நீதிபதி மனுதார்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்துக்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளதோடு எதிர்வரும் 01.08.2022 யில் கெளரவ மன்றில் தோன்ற பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புமாறு கட்டளை ஆக்கியுள்ளார்.

குறித்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி எம்.எம். நூர்ஜஹானின் அறிவுறுத்தலில் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், சட்டத்தரணி காலித் முஹைமீன் மற்றும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் ஆகியோர் தோன்றி இருந்தனர்.
READ MORE | comments

எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படாது என அறிவிப்பு!

 


எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கொலன்னாவை பெற்றோலிய எண்ணெய் களஞ்சியசாலையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

இது லொக் டவுன் அல்ல, ஜூலை 10 வரை வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள் – ஹரின்

 


ஜூலை 10 வரை முடிந்தளவு வீட்டிலிருந்து வேலை செய்வது அவசியம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.நேற்று நள்ளிரவு முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இதை ஒரு பொது முடக்க சூழ்நிலையாகக் கருத வேண்டாம், எரிபொருள் நெருக்கடியை கருத்திற் கொண்டு இது ஜூலை 10 வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் செயல்முறையாகும், அதன் பிறகு நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

கடைகள், மருந்தகங்கள் பல்பொருள் அங்காடிகள் போன்றவை. சாதாரண நாட்கள் போல் செயல்பட வேண்டும் என்றார்.
READ MORE | comments

யூரியா உரத்தை ஏற்றிய கப்பலின் வருகை மேலும் தாமதமாகின்றது

 


யூரியா உரத்தை ஏற்றிய கப்பலின் வருகை மேலும் தாமதமடைவதாக கமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.


எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி நாட்டிற்கு வரவிருந்த கப்பலே இவ்வாறு தாமதமாகியுள்ளது.

எனினும், உரத்தை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கமர்ஷல் உர நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

ஓமனிலிருந்து நாட்டிற்கு வருகைதரவுள்ள குறித்த கப்பலில் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் உள்ளதாக அவர் கூறினார்.

இந்திய கடனுதவியின் கீழ் இந்த உரம் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக கமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூன்று தரப்பினரூடாக உரத்தின் தரம் ஆய்விற்குட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
READ MORE | comments

எரிபொருளை இறக்குமதி செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி!

 


எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது


எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

பாடசாலை மாணவர்களின் வருகை தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட தகவல்


அரசாங்கத்தின் தெளிவில்லாத அறிவித்தல் காரணமாக இன்று (27) நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் வரவு நிலை குறைவாகக் காணப்பட்டதோடு பெரும்பாலான பாடசாலைகள் இயங்கவில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

பாடசாலைகளை நடத்துவதில் சிக்கல்

01. ”மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் பாடசாலைகளை இயக்குதல் என்ற அரசாங்கத்தின் குழப்பமான அறிவித்தல்.

02. வருகைதர முடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறையாக கணிக்க முடியாது என்ற ஆசிரியர்களுக்குச் சாதகமான அறிவித்தல்.

03. அதிபர், ஆசிரியர்களுக்கான போக்குவரத்து வசதியின்மை.

04. சீரற்ற எரிபொருள் விநியோகம்.

05. இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு.

06. எரிசக்தி அமைச்சரின் எரிபொருள் இல்லையென்ற அபாயகரமான அறிவித்தல்.

இத்தகைய நிலைகளைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து மார்க்கங்கள் சீராகும்வரை பாடசாலை செல்வதைத் தவிப்போம் என நாம் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

அதன்படி நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் போக்குவரத்து மார்க்கங்கள் இல்லாத பலர் எமது வேண்டுகோளை ஏற்று பாடசாலைக்குச் செல்லவில்லை.

ஒரு சில பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்த அதேவேளை மாணவர்களின் வரவு குறைவாகவே இருந்ததாக எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள், வலயச் செயலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பாடசாலை மாணவர்களின் வருகை தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட தகவல் | Attendance Of School Students Sl

நீண்ட நாட்களுக்கு பாடசாலைகள் மூடும்நிலை

இத்தகைய நிலை தொடராமல் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் சீராக, அரசாங்கம் ஆசிரியர்களுக்கான எரிபொருள் விநியோகம், போக்குவரத்து மார்க்கங்கள் என்பவற்றிற்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்.

இல்லையேல் ஒட்டுமொத்த பாடசாலைகளையும் நீண்ட நாட்களுக்கு மூடும்நிலை ஏற்படும்” இவ்வாறு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

முடங்கும் கல்வி நடவடிக்கை: வெளியான விசேட அறிவிப்பு

Monday, June 27, 2022

 


மேல் மாகாணத்தின் கொழும்பு பிராந்தியம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளையும் ஜூலை 10 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கல்வி நடவடிக்கை

முடங்கும் கல்வி நடவடிக்கை: வெளியான விசேட அறிவிப்பு | Education Activity In Sri Lanka

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், பாடசாலைகளை நடத்துவது தொடர்பான விசேட அமைச்சரவை தீர்மானங்களை இன்று அறிவிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் விருப்பத்தின் பேரில் மற்ற பகுதிகளிலும் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் அறிவித்துள்ளார்.

READ MORE | comments

இலங்கை முழுமையாக முடங்கும் ஆபத்து - 10ஆம் திகதி வரை அனைத்தும் நிறுத்தம்

 


எரிபொருளுக்கு பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 10 திகதி நாட்டை முடக்கி வைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. 

இலங்கையில் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே இயங்குவதற்கு எரிபொருள் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறை

இலங்கை முழுமையாக முடங்கும் ஆபத்து - 10ஆம் திகதி வரை அனைத்தும் நிறுத்தம் | Sri Lanka Will Be Completely Lockdown

இன்று நள்ளிரவு முதல் ஜுலை மாதம் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, துறைமுகம் சுகாதார பிரிவு, விவசாயம் போன்ற அச்சியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜுலை மாதம் 10ஆம் திகதி வரை நகர்புற பாடசாலைகள் இயங்காது. ஏனைய அனைத்து சேவைகளும் இயங்காதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளையும் இடைநிறுத்தி வைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

READ MORE | comments

ஓட்டமாவடி கோட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோல் வழங்கக் கோரி வீதியை மறித்து போராட்டம்


 எஸ்.எம்.எம்.முர்ஷித்)


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோல் வழங்கக் கோரி இன்று திங்கட்கிழமை ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்தியில் போராட்டம் மேற்கொண்டனர்.

ஓட்டமாவடி பிரதேச சபை முன்பாக இருபக்கமும் வீதியினை மறித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி வழியாக வருகை தந்து ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று நான்கு பக்கமும் உள்ள வீதியினை மறித்து வீதியில் அமர்ந்து சுமார் இரண்டரை மணி நேரம் போராட்டம் மேற்கொண்டனர்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையிலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை வழமை போன்று இயங்குமாறு மாகாணப் பணிப்பாளர் அறிவித்த நிலையில் பாடசாலைக்கு செல்வதற்கு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் இன்மையால் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டு வருகின்றது.

ஓட்டமாவடி கோட்டத்தில் 27 பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் கஷ்டப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் தூர இடங்களில் உள்ள நிலையில் இங்கிருந்து செல்லும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போக்குவரத்து பிரச்சனை காரணமாக பாடசாலை வருகை குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் தங்களுக்கு உரிய எரிபொருளிளை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.








இதன்போது எழுத்தறிவித்தவன் நடுத்தெருவில் அவமானம், வேண்டும் வேண்டும் எரிபொருள் வேண்டும். இல்லையேல் போராட்டம் தொடரும், கல்வியை சீரழிக்காதே எரிபொருள் வழங்கு, ஆசிரியர் சமூகத்தினை சீரழிக்காதே, பாடசாலை செல்ல அதிபர், ஆசிரியருக்கு பெற்றோல் வழங்கு என பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தங்களது பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்கும் போது ஓட்டமாவடி கோட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் சென்ற சமயம் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பாவித்து அனுப்பியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

குறித்த போராட்ட இடத்திற்கு வருகை தந்த ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எம்.முஸம்மில் ஆகியோரிடம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோல் பெற்றுக் கொடுக்குமாறு கோரி மகஜர் கையளித்தனர்.

இதில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எம்.முஸம்மில் ஆகியோரால் தங்களது பிரதேசத்திலுள்ள நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் வரும் பட்சத்தில் முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கு வாரத்திற்கு ஐந்து லீற்றர் வீதம் வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கிய நிலையில் போராட்டம் இடை நிறுத்தப்பட்டது.

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியினை மறித்து சுமார் இரண்டரை மணி நேரம் போராட்டம் நடாத்தியதில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டதுடன், வாகனங்கள் போராட்டம் முடிவடைந்ததும் சென்றமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

எரிபொருளுக்கு ‘டோக்கன்’ விநியோகம் கல்முனையில் ஆரம்பம் !


 எம்.என்.எம்.அப்ராஸ்)


நாடளாவிய ரீதியில் இன்று (27) முதல் ‘டோக்கன்’ முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி கல்முனை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் பெறுவதற்காக வருகை தந்திருந்தவர்களை இராணுவத்தினரால்
பதிவு செய்யப்பட்டடு எரிபொருளுக்கான
‘ டோக்கன்’ வழங்கப்பட்டது.

நேற்று(26) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாடளாவிய ரீதியில் டோக்கன்’ முறையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


READ MORE | comments

திணறும் இலங்கை! எரிபொருளுக்காக வெளிநாட்டுக்கு பறக்கும் அமைச்சர்கள்

 


நெருக்கடியில் சிக்கி திணறும் இலங்கை 

கடந்த ஆண்டு ரணில் விக்ரமசிங்க  எச்சரித்தது போன்று பல்வேறு நெருக்கடியில் சிக்கி திணறிக் கொண்டிருக்கிறது இலங்கை. எரிபொருள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சில மாதங்களாக நிலவி வந்த நெருக்கடி நிலைமை நாளடைவில் மிக மோசமானதாக உருவாகி மீள முடியாத நிலையை எட்டிவிட்டது என உலக பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.

எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலியாக நாளுக்கு நாள் மின்வெட்டு நேரம் உயர்வடைவதுடன், பொருட்களின் விலையும் வானளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் எரிவாயுவும், எரிபொருட்களும் இன்றி மக்கள் நடுத் தெருவிற்கு வந்து நின்றும், கிடைக்காமல் கடும் விரக்தியில் இருக்கிறார்கள்.

கையிருப்பு அற்ற தன்மையும் கறுப்புசந்தையின் ஆதிக்கமும்

திணறும் இலங்கை! எரிபொருளுக்காக வெளிநாட்டுக்கு பறக்கும் அமைச்சர்கள்

நாட்கணக்கில் மக்கள் வரிசைகளில் நின்றும் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு கையிருப்பு அற்ற தன்மையும் கறுப்புசந்தையின் ஆதிக்கமும் செல்வாக்கு செலுத்து வருகின்றன.

பாரிய அளவு மோசடி இடம் பெறும் கறுப்புசந்தையை பல்வேறு கட்ட முயற்சிகளினால் அரசு கட்டுபடுத்தி வருகின்றமை ஆங்காங்கே நடைபெறுகின்ற கைது நடவடிக்கைகள் மூலமாக காண முடிகிறது.

எவ்வாறாயினும், எரிபொருளுக்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

அரசின் இயலாமை

திணறும் இலங்கை! எரிபொருளுக்காக வெளிநாட்டுக்கு பறக்கும் அமைச்சர்கள்

அரசாங்கம் எரிபொருள் விநியோகத்திற்காக பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் கூட எரிபொருளுக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பது அரசின் இயலாமை என சுட்டிக் காட்டத்தக்கது.

பல்வேறு நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற நிலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அரச இயந்திரம் முனைப்புக்காட்டி வந்தாலும், பிரச்சினைகளுக்கான உடனடி தீர்வு இல்லை என்கின்றன எதிர்கட்சிகள்.

இதுவொருபுறமிருக்க, இன்றைய எரிபொருள் இருப்பானது, 9000 மெற்றிக் தொன் டீசல் , 6000 மெற்றிக் தொன் பெட்ரோலுமே கையிருப்பில் உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஏற்படப்போகும் பாரிய நெருக்கடிகளையும் அதனால் உண்டாகப்போகும் விளைவுகளையும் முற்கூட்டியே சரி செய்வதற்காய் சர்வதேசங்கள் நோக்கி இலங்கையின் முக்கியஸ்தர்கள் பயனப்படுகின்றார்கள் 

ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பேச்சுவார்த்தை

திணறும் இலங்கை! எரிபொருளுக்காக வெளிநாட்டுக்கு பறக்கும் அமைச்சர்கள்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று திங்கட்கிழமை கட்டார் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை

திணறும் இலங்கை! எரிபொருளுக்காக வெளிநாட்டுக்கு பறக்கும் அமைச்சர்கள்

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் கலாநிதி சமன் வீரசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிசக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர 2 இலங்கைப் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை ரஷ்யா செல்லவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே, இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவராக இருந்த கலாநிதி சமன் வீரசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் ரஷ்யா செல்லவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திணறும் இலங்கை! எரிபொருளுக்காக வெளிநாட்டுக்கு பறக்கும் அமைச்சர்கள்

கடந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு அறிவிறுத்தியதுடன், காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நிமிடமும் எதிர்காலத்தில் பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதில் அக்கறை காட்டவில்லை என்பதுடன், இருவேறு நிலைப்பாட்டிலும் இருந்தது.

ஆனாலும், நெருக்கடி நிலை நீடிக்க, அரசியல் நெருக்கடிகளும் ஏற்பட்டது, அதனையடுத்து இலங்கையின் பொருளாதாரம் படுகுழிக்குள் வீழ்ந்ததையடுத்து மேலும் மக்களின் அன்றாட தேவைகளுக்கும், அத்தியவசிய பொருட்களின் கொள்வனவிற்கும் பெரும் சிக்கல் நிலை உருவாக, மக்கள் கிளர்ந்து எழுந்தனர்.

இதற்கிடையில், அன்றைய காலகட்டத்தில் அரசாங்கத்தை எச்சரித்த ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். எனினும், அவர் ஆட்சியேற்றும் கூட வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மட்டுமல்ல உடனடித் தேவைகளை கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்.

அதுமாத்திரமன்றி, அரசின் பிரச்சினைகளை அறிவிக்கும் அறிவிப்பாளராக மாத்திரமே ரணில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும், பொருளாதாரத்தை தீர்த்து வைக்கும் சிறந்த திட்டம் அவரிடமும் இல்லை என்கிறது எதிர்கட்சி.

மக்கள் தற்போது வரிசை யுகத்திற்கு முடிவு கட்டுமாறே வலியுறுத்தி கேட்கிறார்கள். ஆனால், அவற்றை சீர் செய்ய முடியாமல் அரசாங்கம் திணறுகின்றது என்பதை காண முடிகிறது.

இந்த நிலையிலேயே தற்போது ஏற்பட்டிருக்கும் எரிபொருள் சிக்கல்களை தீர்க்க அமைச்சர்கள் வெளிநாடு பறக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் இந்தப் பயணம் வெற்றியளிக்குமா? எரிபொருள் வரிசைக்கு முடிவு கட்டுவார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்

READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |