தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமெரிக்கா இன்னும் பதிலளிக்கவில்லை!

Thursday, April 30, 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமெரிக்கா இன்னும் பதிலளிக்கவில்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்கத் தூதுவர் ஜோன் கெரியை சந்திப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பதா இல்லையா என்பது குறித்து அமெரிக்கா இன்னமும் பதில் எதனையும் வழங்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்கள் சந்திப்பு நடாத்தும் நோக்கில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யுத்தக் குற்றச் செயல் உள்ள விசாரணைகள் மீது திருப்தி இல்லை எனக் கூறவும், இராணுவத்தை வடக்கிலிருந்து வெளியேற்றுமாறு கோரவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜோன் கெரியை சந்திக்க முயற்சிப்பதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் மட்டுமே ஜோன் கெரி சந்திப்பு நடத்த உள்ளதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
READ MORE | comments

கனடிய மத்திய நிதியமைச்சின் செய்தி வெளியீடு முதன் முறையாக தமிழில்!

கனடியத் தமிழ்ச் சமுதாயத்தின் அரசியல் பங்களிப்பை கனடிய அரசு மிகவும் மதிப்பதோடு தமிழர்களிற்கான தகவலை தமிழில் வழங்கும் நடைமுறையை ஆரம்பித்துள்ளது.
அதன் முதற்தடவையாக அண்மையில் விவாதிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திலுள்ள நண்மைகள் குறித்த விவரங்களை தமிழ் மொழியில் வழங்கியுள்ளது.
ஒன்ராறியோ மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாணக் கட்சியின் தலைவர் தெரிவிற்கான தேர்தலில் வாக்களிக்கவென 14,000 தமிழர்கள் இணைந்தார்கள் என்ற செய்தி வெளிப்படுத்திய ஒரு மாறுதலாகவே இந் நிகழ்வும் பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு மற்றும் மத்திய கட்சிகள் இந்த விவகாரத்தை ஆச்சரியத்துடன் பார்ப்பதுடன், மாகாண கட்சித் தலைவர் தேர்தலில் தமிழர்கள் முழுமையாக வாக்களிக்கும் பட்சத்தில் தமிழர் சமூகம் ஒரு கனதியான சமூகமாக அங்கீகரிக்கப்படும் நிலை கனடாவில் தோன்றியுள்ளது.
அதையொத்த நிலையே மாகாண மற்றும் மாநகர அலகுகளிலும் ஏற்பட்டுள்ளது.
READ MORE | comments

பிரித்தானிய தேர்தல் கொள்கைப்பிரகடனத்திலும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இடம்

தமிழகத்தை தவிர்த்து இலங்கைக்கு வெளியில் அதுவும் மேற்கத்தைய அதாவது பிரித்தானிய தேர்தல் கொள்கைப்பிரகடனம் ஒன்றில் முதல்தடவையாக இலங்கை தமிழர் தொடர்பான விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் தேர்தல் களத்தில் பிரதமர் டேவிட் கெமரோன் தலைமையிலான கொன்சவேட்டிவ் கட்சியின் தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ம் 77ம் பக்கங்களில் இந்த விடயம் அடங்கியுள்ளது.
அதில் “நாங்கள் இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகள் உட்பட போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைகளை ஊக்குவிப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு பிரதமர் டேவிட் கெமரோன் மேற்கொண்ட வரலாற்றுப்புகழ் விஜயத்தை அடுத்தே இந்த விடயம் உள்வாங்கப்பட்டுள்ளதாக அந்த தேர்தல் கொள்கைப்பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

ஐபிஎல்-8 வது சீசனில் அதிக விலைபோன வீரர்கள் மோசமாக விளையாடிய பரிதாபம்

ஐபிஎல்-8 வது சீசன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள் சரியாக விளையாடவில்லை என சர்ச்சை எழுந்து உள்ளது.

ஐபிஎல் சீசன் 8 போட்டிகளில் விளையாடிஉள்ள போட்டிகளை பார்க்கையில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக விளையாடும் அஜின்கெய ரஹானே 323 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். தொடர்ந்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் 317 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த டிவைன் ஸ்மித் 253 ரன்களும், பிரண்டன் மெக்குல்லம் 251 ரன்களும் எடுத்து உள்ளனர் மும்பை இந்தியன் அணி கேப்டன் ரோகித் சர்மா 244 ரன்கள் எடுத்து 5-வது இடத்தில் உள்ளார்.

ஆனால் அதிக விலைக்கு ஏலம் எடுக்கபட்ட வீரர்கள் மிகவும் மோசமான விளையாட்டையே வெளிப்படுத்தி உள்ளனர். டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக ரூ.16 கோடிக்கு யுவராஜ் சிங் ஏலம் எடுக்கபட்டு உள்ளார். இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் போனவர் இவர் தான். யுவராஜ் சிங் 7 போட்டிகளில் விளையாடி மொத்தம் 124 ரன்கள் எடுத்து உள்ளார். பந்து வீச்சில் விக்கெட்டுகள் எதுவும் எடுக்க வில்லை .பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கபட்டவர் தினேஷ் கார்த்திக். இவர் ரூ.10. 5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவர் 6 போட்டிகளில் விளையாடி 43 ரன்கள் எடுத்து உள்ளார். கேட்ச் மற்றும் ஸ்டெம்பிங் 7 செய்து உள்ளார்.

அடுத்தபடியாக டெல்லி டேர் டெவில் அணிக்காக இலங்கை வீரர் ஆங்கிலோ மேத்யூ ரூ.7.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவர் 6 போட்டிகளில் விளையாடி மொத்தம் 93 ரன்கள் எடுத்து உள்ளார். பந்து வீச்சு மூலம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

அதே அணியில் ரூ. 4 கோடிக்கு ஜாகீர்கான் எடுக்கபட்டு உள்ளார். இதுவரை அவர் இன்னும் விளையாட மைதானத்திற்குள் இறங்கவே இல்லை. காயம் காரணமாக அவர் விளையாட வில்லை என கூறப்படுகிறது. அதே அணியில் அமித் மிஸ்ரா ரூ.3.5 கோடிக்கு ஏலம் எடுக்கபட்டார். அவர் 7 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகள் எடுத்து உள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த டிரண்ட் போல்ட் ரூ. 3.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். ஆனால் 5 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். இதில் அதிகம் பாதிக்கபட்டது டெல்லி டேர் டெவில்ஸ் அணியும், ராயல் சேலஞ்ச்ர்ஸ் பெங்களூர் அணியும்தான்.
READ MORE | comments

அமெரிக்கக் கப்பலை சிறைப்பிடித்த ஈரான் போர்க்கப்பலை அனுப்பிய அமெரிக்கா

வாஷிங்டன்: பெர்சிய வளைகுடா பகுதியில் அமெரிக்க சரக்கு கப்பல் ஒன்றை ஈரான் வழி மறித்து சிறை பிடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்க கடற்படை தனது போர்க்கப்பலை அங்கு அனுப்பியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மார்ஷல் தீவைச் சேர்ந்த அந்த அமெரிக்கக் கப்பல், தனது கடல் பகுதிக்குள் அத்துமீறி வந்ததால் சிறை பிடித்ததாக ஈரான் கூறியுள்ளது.
மார்ஷல் தீவைச் சேர்ந்த அந்த அமெரிக்கக் கப்பல், தனது கடல் பகுதிக்குள் அத்துமீறி வந்ததால் சிறை பிடித்ததாக ஈரான் கூறியுள்ளது.
மாயர்ஸ்க் டைகிரிஸ் என்ற பெயர் கொண்ட அந்தக் கப்பலில் 24 பேர் உள்ளனர். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவர்கள் என்ற ரோந்துப் படையினரால் சிறை பிடிக்கப்பட்டது. படகுகள் மூலம் வந்த ஈரான் படையினர் அந்தக் கப்பலை செவ்வாய்க்கிழமை காலையில் சிறை பிடித்தனர். அமெரிக்கக் கப்பலின் கேப்டன் சரணடைய முதலில் மறுத்துள்ளார். இதையடுத்து அவர்களை எச்சரிப்பதற்காக துப்பாக்கியால் சுட்டனர் ஈரான் படையினர் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பென்டகன் அதிகாரிகள் கூறுகையில், சர்வதேச அங்கீகாரம் உள்ள கடல் மார்க்கத்தில்தான் அமெரிக்க கப்பல் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அதை ஈரான் படையினர் துப்பாக்கி முனையில் தங்களது பகுதிக்குள் திருப்பிச் சென்றுள்ளனர். ஈரான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து உதவி அமெரிக்க கப்பலின் கேப்டன் அமெரிக்கக் கடற்படைக்குத் தகவல் அனுப்பினார். இதையடுத்து போர்க்கப்பல் பெர்சிய வளைகுடாவுக்கு விரைந்துள்ளது என்றனர். ஈரான், அமெரிக்கா இடையே ஏற்கனவே உறவு சரியில்லை. சமீப நாட்களாகத்தான் அதில் ஓரளவு சுமூக நிலை திரும்புவது போல இருந்து வருகிறது. அணு ஆயுத அழிப்பு உள்ளிட்டவை குறித்து அமெரிக்காவும், ஈரானும் பேச ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில் தற்போது அமெரிக்கக் கப்பலை ஈரான் படையினர் மடக்கியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த அமெரிக்கா விரும்பவில்லை என்று தெரிகிறது. மார்ஷல் தீவானது, அமெரிக்காவிடமிருந்து 1986ம் ஆண்டே சுதந்திரம் பெற்று விட்டது. இருப்பினும் அமெரிக்காவை சார்ந்தே அந்தத் தீவு தொடர்ந்து செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பென்டகன் செய்தித் தொடர்பாளர் கர்னல் ஸ்டீவ் வாரன் இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில், சர்வதேச கப்பல்கள் செல்லும் பாதையில்தான் மார்ஷல் தீவு கப்பலும் சென்று கொண்டிருந்தது.
ஆனால் அதை ஈரானியர்கள் பிடித்துள்ள விதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. மேலும் எச்சரிக்கும் வகையிலும் ஈரானிய படையினர் சுட்டுள்ளனர். இதுவும் தவறானதாகும். இந்த விவகாரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம், விசாரித்து வருகிறோம் என்றார். இந்தக் கப்பலை ரிக்மெர்ஸ் ஷிப்மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் வாடகைக்கு எடுத்திருந்தது. அதில் உள்ள ஊழியர்கள் அனைவரும் கிழக்கு ஐரோப்பியர்கள் மற்றும் ஆசியர்கள் என்று கூறப்படுகிறது. துபாய் அருகே உள்ள துறைமுகம் ஒன்றை நோக்கி அது சென்று கொண்டிருந்தது. ஜெட்டாவிலிருந்து அந்தக் கப்பல் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அதில் உணவுப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட சாதாரண சரக்குகளே உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

ஜகார்டாவிற்கு கொண்டுவரப்பட்டது மயூரன் மற்றும் சானின் உடல்கள்.

புதன்கிழமை அதிகாலை வேளை இந்தோனேசியா நுசகம்பங்கன் சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட அவுஸ்திரேலிய இளைஞர்களின் சடலங்கள் தலைநகர் ஜகார்டாவில் உள்ள பிரேத அறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

துப்பாக்கியால் சுடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்ட 8 கைதிகளில் 6 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவுஸ்திரேலியர்களான மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சானின் உடல்கள் அவர்களது இறுதி ஆசைப்படி அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்தோனேசியாவிலிருந்து 8 கிலோகிராம் போதைப்பொருள் கடத்திய குற்றத்தில் கைது செய்யப்பட்ட 9 பேரில் அவுஸ்திரேலியர்கள் இருவரும் அடங்குவார்கள்.
இதனைத்தொடர்ந்து குறித்த குற்றவாளிகளுக்கு விதிக்கப்படவுள்ள மரணதண்டனையை நீக்கக் கோரி அவுஸ்திரேலிய அரசு இந்தோனேசிய ஜனாதிபதிக்கு வலியுறுத்தியும் அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் இன்று(புதன்கிழமை) அதிகாலையில் நுசகம்பங்கன் சிறைச்சாலையில் மரண தண்டனைக் கைதிகள் 8 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் மரணதண்டனைக் கைதியாகவிருந்த பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பெண்ணிற்கு இறுதி நிமிடத்தில் மரண தண்டனை ரத்துச் செய்யப்பட்டது.
மேலும் அவுஸ்திரேலியாவின் கோரிக்கைகளை நிராகரித்து இந்தோனேசியா மரணதண்டனை வழங்கியதால் அங்குள்ள தம்நாட்டு இராஜ தந்திரிகளை அவுஸ்திரேலிய அரசு நாட்டுக்கு மீண்டும் அழைத்துள்ளது.
இதேவேளை இந்தோனேசியாவின் இந்த செயற்பாட்டால் தம் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்பட்ட நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ள அவுஸ்திரேலியா, இந்த விரிசல் வர்த்த உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.Daka

READ MORE | comments

இந்தோனேசியாவுக்கான தூதரை திரும்ப அழைத்தது ஆஸ்திரேலியா

Wednesday, April 29, 2015

இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக இரு ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து, இந்தோனேசியாவுக்கான தூதரை ஆஸ்திரேலியா திரும்பப் பெற்றுள்ளது.
இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமையன்று இரவில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட எட்டுப் பேரில் ஆண்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் ஆகிய இருவரும் ஆஸ்திரேலியர்கள்.
பிரேசிலைச் சேர்ந்த ரோட்ரிகோ குலார்ட் என்பருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், இதற்கு பிரேசில் அரசு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
ஆண்ட்ரூ சானையும் சுகுமாரனையும் காப்பாற்றுவதற்காக ஆஸ்திரேலியா ராஜதந்திர ரீதியில் பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
இது குறித்து செவ்வாய்க்கிழமையன்று கருத்துத் தெரிவித்த ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட், இந்த மரண தண்டனைகள் குரூரமானவை, தேவையற்றவை என்று குறிப்பிட்டார். அவர்கள் சிறையில் இருந்த காலகட்டத்தில் முழுமையாகத் திருந்திவிட்டார்கள் என்றும் கூறினார்.
“இந்தோனேசியாவின் இறையாண்மையை மதிக்கிறோம். ஆனால், இதனை நாங்கள் ஏற்கவில்லை. இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக நாங்கள் எங்கள் தூதரைத் திரும்ப அழைத்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார் டோனி அப்பாட்.
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இந்தோனேசியா மிக முக்கியமான ஒரு நாடு. பயங்கரவாதம், புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து பணியாற்றிவருகின்றன.
இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா தனது தூதரை திரும்ப அழைப்பது இதுவே முதல்முறை.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது, கண்களை கட்டிக்கொள்ள எட்டுபேருமே மறுத்துவிட்டதாகவும் ஒன்றாகப் பாடலை இசைத்ததாகவும், அந்தத் தருணத்தில் உடனிருந்த பாதிரியார் ஒருவர் சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, அவர்களது உடல்களை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ்கள் வெளியேறின.
ரோட்ரிகோ குலார்ட்டேவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது, இரு நாட்டு உறவின் மிகத் தீவிரமான நெருடலை ஏற்படுத்தியிருப்பதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.
குலார்ட்டேவுக்கு மனச் சிதைவு நோய் இருப்பதால், அவருக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது என அவரது குடும்பத்தினர் கோரிவந்தனர்.
கடந்த நான்கு மாதங்களில் குலார்ட்டேவுடன் சேர்த்து பிரேசிலைச் சேர்ந்த இருவர் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டனர்.
கடந்த ஜனவரியில் மார்கோ ஆர்ச்செர் கார்டொசோ மொரைரா என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து, பிரேசில் தனது தூதரை திரும்ப அழைத்துக்கொண்டது.
ஒவ்வொரு நாளும் இந்தோனேசியாவில் போதைப் பொருள் பயன்படுத்துவதால் 33 பேர் மரணமடைவதாக அந்நாட்டின் தேசிய போதைப்பொருள் முகமை கூறுகிறது. இதன் காரணமாகவே இந்த விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடுகளை எடுப்பதாக இந்தோனேசியா கூறுகிறது.
READ MORE | comments

களத்தின் கடைசி நிமிடத்தில்! இறந்த பின்பும் துடிதுடித்த மயூரன் உட்பட்ட சிலர்

இந்தோனேஷியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட விடயம் சர்வதேச ஒழுங்கில் பாரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
தனது பிடியில் இருந்து சற்றும் தளராத இந்தோனேசிய அரசாங்கம் ஈழத்தமிழர் உட்பட எட்டுப் பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றி இருக்கின்றது.
தங்களுக்கு இழைக்கப்பட்ட உச்சமான அநீதியாகவே அவுஸ்திரேலிய மக்கள் இந்த மரண தண்டனையை பார்க்கிறார்கள்.
இந்த மரண தண்டனையின் பின்புலத்தை ஐ.நா எவ்வாறு அணுகப் போகின்றது போன்ற பல தகவல்களை லங்காசிறி வானொலியின் விசேட செவ்வியில் கனடாவிலிருக்கும்  சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்ணம் பகிர்ந்து கொண்டார்.
READ MORE | comments

வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பவரா நீங்கள்?

இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதமான இளநீர் வெப்பத்தை தணித்து, ஜீரண சக்தியை அளிக்கும்.
இளநீர் குடித்தால் இரத்தம் சுத்தமடைவதோடு மட்டுமல்லாமல், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது.
பெண்களின் மாதவிலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது பிற உணவுகளை தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.
சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு (Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.
டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.
அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும்.
இவ்வளவு நன்மைகளை மனிதனுக்கு வழங்கும் இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
ஏனெனில் தூங்கி எழுந்தவுடன் வயிறு சற்று சூடாக இருப்பதால், இளநீரில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்களை உருவாக்கும். ஏதாவது உணவு எடுத்த பின்னரே இளநீரை சாப்பிடவேண்டும்.
இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூட அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.
மேலும், வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம்.
எனவே, உணவு இடைவேளையில்தான் இளநீர் அருந்தவேண்டும். அதுவும் வெட்டிய உடன் இளநீரைக் குடித்துவிட வேண்டும், இல்லையெனில் ஃபுட் பாய்ஸன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.
READ MORE | comments

அப்பா கொடுத்த தகவலால் தான் மையூரன் கைது செய்யப்பட்டார்!

என் மகன் போதைப் பொருள் கடத்தும் ஆட்களுடன் திரிகிறான். அவனைக் காப்பாற்றி என்னிடம் திருப்பி ஒப்படையுங்கள் என்று மையூரனின் நண்பரான , “அன்று சானின்” தந்தை அவுஸ்திரேலியப் பொலிசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர்கள் இந்தோனேசிய பொலிசாருக்கு அறிவிக்க , அங்கே வைத்து தான் முதன் முதலில் மையூரன் கைதாகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாக ஆரம்பித்துள்ளது.
ஒரு கொலையை இயல்பான மனிதர்கள் யாராலும் செய்ய முடியாது. அது மிக கொடூரமானது. எந்த செயலாலும் ஒரு கொலையை நியாயப்படுத்தவும் முடியாது. சட்டத்தின் பரிணாம வளர்சியில் மரணதண்டனை தற்போது இல்லாமல் போய் அருகி வருகிறது. பல நாடுகளில் இத்தண்டனையை இல்லாதொழித்துள்ளார்கள். ஆனால் இந்தோனேசியாவில் , எட்டு உயிர்களை குருவி சுடுவதைப் போல சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். தனக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்ட மரணத் திக­தியை அறிந்­து­கொண்டு, தனக்­காக தயா­ரிக்­கப்­பட்ட சவப்­பெட்­டியை பார்த்­துக்­கொண்டு, தன்க்காக செய்யப்பட்ட சிலுவையைப் பார்த்துக்கொண்டு , தான் கொலை செய்­யப்­படும் முறையை அறிந்­து­கொண்டு பல வருடங்களாக கொடூர வாழ்வை வாழ்ந்துள்ளார் மையூரன்.
அன்றைய காலகட்டத்தில் , இந்­தோ­னே­சி­யா­வுக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடையில் போதைப்­பொருள் வர்த்­த­கத்தில் ஈடு­படும் குழுவை இரு­ நா­டு­களும் மிகத் தீவி­ர­மாக தேடி வந்­தன. மிகவும் சூட்­சு­ம­மாக நடத்­தப்­பட்ட கடத்­தலை கண்­டு­பி­டிப்­பதில் இரு­நா­டு­களும் பாரிய சவாலை எதிர்­நோக்­கி­யி­ருந்­தன. இந்­நி­லையில் கடந்த 2005 ஆம் ஆண்டு அவுஸ்­தி­ரே­லிய பொலி­ஸா­ருக்கு அன்று சானின் தந்­தையால் ஒரு தகவல் வழங்கப்பட்டது. “எனது மகன் இந்­தோ­னே­சி­யா­வுக்கு பய­ண­மா­கி­யுள்ளான். அவ­னுக்கு போதைப்­பொருள் கடத்­தல்­கா­ரர்­க­ளுடன் தொடர்பு இருப்­ப­தாக அறி­கிறேன். அந்தக் கடத்­தல்­கா­ரர்­க­ளி­ட­மி­ருந்து என் மகனை காப்­பாற்­றித்­தா­ருங்கள்” என்று அந்தத் தந்தை கூறி­யி­ருக்­கிறார்.
அதனை துரும்­பாகக் கொண்டு இரு­நாட்டுப் பொலி­ஸாரும் இணைந்து ,அன்று சானை மறை­மு­க­மாக கண்­கா­ணிக்கத் தொடங்­கினர். அவ­ருடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளையும் பின்­தொ­டர்ந்­தனர். இந்­நே­ரத்தில் இந்­தோ­னே­சி­யாவின் தெற்கில் அமைந்­துள்ள “குட்டா” மாவட்­டத்­தி­லுள்ள விடு­தியில் தங்­கி­யி­ருந்த மூவர் அந்­நாட்டுப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் அதி­ர­டி­யாக கைது செய்­யப்­பட்­டனர். அவர்­களில் ஒரு­வர்தான் மயூரன் சுகுமாரன். கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து 334 கிராம் ஹெரோயின் கைப்­பற்­றப்­பட்­டது. அவர்­க­ளிடம் பொலிஸார் மேற்­கொண்ட தீவிர விசா­ர­ணை­களின் பின்னர் போதைப்­பொருள் கடத்தல் குழு­வுக்குத் தலை­வ­ராக இருந்தார் என்று நம்­பப்­ப­டு­கின்ற அன்று சான் கைது செய்­யப்­பட்டார். போதைப்­பொருள் கடத்­தலில் வலை­பின்னல் போன்று செயற்­பட்ட 9 பேர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு சிறைப்­ப­டுத்­தப்­பட்­டனர்.
இந்­தோ­னே­சி­யா­வி­லி­ருந்து அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு கடத்­தப்­ப­ட­வி­ருந்த 8.3 கிலோ­கிராம் போதைப்­பொருள் அவர்­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்­டது. இதன் பெறு­மதி 3.1 மில்­லியன் அமெரிக்க டொலராகும்.இவர்கள் நீண்­ட­கா­ல­மாக போதைப்­பொருள் கடத்­தலில் ஈடு­பட்டு வந்­துள்­ள­தாக புல­னாய்வுப் பிரி­வினர் உறு­தி­படத் தெரிவித்­த­போதும் இவ்­வி­ட­யத்தில் தனக்கு தொடர்பு எதுவும் இல்லை என மயூரன் சுகு­மாரன் இறு­தி­வரை தெரிவித்து வந்தார். 2006 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 14 ஆம் திகதி இந்­தோ­னே­சி­யாவின் டென்­பசார் மாவட்ட நீதி­மன்றம் மயூ­ர­னுக்கு மரண தண்­டனை விதித்­தது. இதனை எதிர்த்து மேன்­மு­றை­யீடு செய்­த­போதும் இந்­தோ­னே­சிய உயர் நீதி­மன்றம் 2011 ஆம் ஆண்டு ஜுலை 6 ஆம் திகதி மரண தண்­ட­னையை உறுதி செய்­தது.
பாலி- 9 என்பதே இந்த கடத்தல் குழுவின் பெயராக இருந்துள்ளது. இத­னை­ய­டுத்து ஜனா­தி­ப­திக்கு கருணை மனு அளிக்­கப்­பட்டு ,பல்­வேறு மனித உரிமை நிறு­வ­னங்கள் மரண தண்­ட­னைக்கு எதி­ராக குரல் கொடுத்­தன. எனினும் அவை எதுவும் சாத்­தி­யப்­ப­ட­வில்லை. மையூரன் நுசா­கம்­பங்­க­னி­லுள்ள சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருந்தபோது , சிறைக் கைதி­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மாக திகழ்ந்தார். அடிப்படையில் கராட்டே பயின்று பெரும் பட்டம் பெற்றவர் மையூரன். சிறைச்­சா­லையில் ஏனைய கைதி­க­ளுக்கு ஆங்­கிலம், கணனிக் கல்வி, போட்­டோஷொப் வடி­வ­மைப்பு ஆகி­ய­வற்றை பயிற்­று­வித்­த­துடன் சித்­திரம் வரை­தலில் நுட்­பங்­க­ளையும் கற்­றுக்­கொ­டுத்தார். இவ்­வாண்டு பெப்­ர­வரி மாதம் கர்ட்டின் பல்­க­லைக்­க­ழகம் மயூ­ர­னுக்கு “வரை­கலை” பட்­டத்தை வழங்­கி­யது. அனைத்து கைதி­க­ளுக்கும் முன்­னு­தா­ர­ண­மாக திகழ்ந்­ததால் சிறைச்­சா­லையில் 20 கைதி­களை வழி­ந­டத்தும் தலை­மைப்­பொ­றுப்பு மயூர­னுக்குக் கிடைத்­தது.
அன்று சான் தன்னை மாற்றிக்கொண்டார். நிறைய மனமாற்றமடைந்து மதபோதகராக விரும்பினார். அவர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியிருந்தார். கணினியில் அசாதாரண அறிவுடனிருந்தவர், சிறைச்சாலை கைதிகளிற்கும் அதனை கற்றுக் கொடுத்தார். மயூரன் நிறைய சித்­தி­ரங்­களை வரைய வேண்டும் என இறுதியாக ஆசைப்­பட்டார். அதன்­படி தன்­னு­டைய படங்­களை வரைந்து இத­யத்தில் குண்டுத் துளைப்­பது போலவும் கவ­லையை வெளிக்­காட்­டு­வது போலவும் பல சித்­தி­ரங்­களை வரைந்தார். மயூ­ரனின் பெற்றோர் சகோ­தரன், அவ­ரது மனைவி, சகோ­தரி மற்றும் உற­வி­னர்கள் சில­ருடன் திறந்த வெளியில் சில மணி­நேரம் கழிப்­ப­தற்கு அவ­காசம் வழங்­கப்­பட்­டது. அதுபோல அன்று சான் தனது குடும்­பத்­தா­ருடன் தேவா­ல­யத்தில் பொழுதை கழிக்க வேண்டும் என விரும்­பினார்.
இவ்­வி­ரு­வ­ருக்கும் இரு­த­யத்தில் துப்­பாக்கிச் சூடு நடத்தி மரண தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்­பதே நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வாகும். மரண தண்­டனை நடை­முறை இவ்­வா­றுதான் அமைவது வழக்கம். நுசா­கம்­பங்கன் சிறை­யி­லுள்ள மரண தண்­டனை வழங்­கப்­படும் வளா­கத்­துக்கு கைதிகள் அழைத்துச் செல்­லப்­ப­டுவர். அவர்கள் நிற்க விரும்­பு­கி­றார்­களா, அல்­லது உட்­கார்ந்­தி­ருக்க விரும்­பு­கி­றார்­களா என விசா­ரிக்­கப்­படும். அதன் பின்னர் வெள்ளை உடை அணி­விக்­கப்­பட்டு கை, கால்கள் கட்­டப்­படும். அவர்கள் தியானம் செய்­வ­தற்­காக சரி­யாக மூன்று நிமி­டங்கள் வழங்­கப்­படும். கைதிகள் சுடப்­ப­டும்­போது கண்கள் மூடி­யி­ருக்க வேண்­டுமா அல்­லது திறந்­தி­ருக்க வேண்­டுமா என்­பதை அவர்­களே முடிவு செய்ய வேண்டும். “என்னைச் சுடும்­போது கண்­களை திறந்­தி­ருப்­ப­தையே விரும்­பு­கிறேன். நான் தைரி­ய­சா­லி­யாக இவ்­வு­லகை விட்டுப் பிரி­யவே ஆசைப்­ப­டு­கிறேன்” என மயூ­ரனின் நெருங்­கிய நண்­பரும் சித்­திர ஆசி­ரி­ய­ரு­மான பென் குவால்­டி­யிடம் மயூரன் குறிப்­பிட்­டுள்­ள­மையும் இங்கு நினை­வு­ப­டுத்த வேண்டும்.
கைதிகள் ஆயத்­த­மா­ன­வுடன் 10 மீற்றர் தூரத்தில் ஆயுதம் தாங்­கிய பன்­னி­ருவர் ஆயத்­த­மாக இருப்பர். மரண தண்­ட­னைக்­கான உத்­த­ரவை பிறப்­பிக்க சிறை அதி­கா­ரி­யொ­ரு­வரும் மர­ணத்தை உறு­திப்­ப­டுத்த மருத்­துவர் ஒரு­வரும் அங்கு வருகை தந்­தி­ருப்பர். தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­ட­வுடன் சடலங்களை தண்ணீரில் கழுவி , அதனை உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைப்பார்கள். இந்த தண்டனையும் இதன்படியே நடந்திருக்கும் என தெரிகிறது. தண்­டனை பெற்ற மயூரனுக்கும் என்ருவுக்கும் சவப்பெட்டிகள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுவிட்டன. அதில் இருவரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு 29.04.15 என திகதியிடப்பட்டு ஆத்மா சாந்தியடைவதாக என எழுதப்பட்டுள்ளது. மயூரனினதும் என்ருவினதும் உறவினர்கள் சிறைச்சாலைக்கு முன்னால் கதறி அழுதனர். அவர் வரைந்த ஓவியங்களை சுமந்த வண்ணம் தாய்,தந்தை, சகோதரர்கள் அழுத விதம் நெஞ்சை உருக்கியது. சிறைச்சாலைக்கு வெளியே பதாகைகளை ஏந்தியவண்ணமும் மெழுகுவர்த்திகளை ஏந்தியவண்ணமும் பலர் திரண்டிருந்தனர்.
எனினும் இவை எவையும் இந்தோனேசிய சட்டங்களை வளைக்க போதுமானவையாக இருக்கவில்லை. மரணம் அனைவருக்கும் பொதுவானது. எனினும் அது தண்டனையாக கிடைக்கப்பெறும்போது ஏற்படும் மன அழுத்தமும் விரக்தியும் கொடுமையானதாகும். அவர்கள் பொதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார்கள் தான். அவர்களின் செயலால் பலர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதும் உண்மைதான். ஆனால், இதில் குற்றம்சாட்டப்பட்ட மயூரன் மற்றும் அன்று ஆகியோர் புனர்வாழ்விற்குட்படுத்தப்பட்ட நிலையில் உள்ளதாக ,சிறையதிகாரியே சான்றிதழ் வழங்கியிருந்தார். உண்மையில் அவர்கள் முன்னுதாரணம்மிக்கவர்களாக மாறியிருந்தார்கள். இந்த தண்டனையின் மூலம், அவர்களின் திருந்திவாழும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அது தான் நடந்து முடிந்துள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் எரிகாயங்களுடன் இறந்த நிலையில் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் முறக்கொட்டாஞ்சேனை சேர்மன் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் எரிகாயங்களுடன் இறந்த நிலையில் குடும்பத்தினரால் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று செவ்வாய்கிழமை இடம் பெற்றுள்ளது.

வீடு தீப்பிடித்து எரிகின்றது என்று எண்ணிய அயலவர்கள் வீட்டுக் கதவை உடைத்து உட்சென்று பார்த்த போது மரணமடைந்த பெண் தீக் காயங்களுடன் இறந்த நிலையில் காணப்பட்டதாகவும், இறந்தவர் சாமித்தம்பி கமலேஸ்வரி (வயது 36) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயெனவும் அடையாளங் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக இறந்த பெண்ணின் கணவரான யோகராசா ஜெயசுதன் என்பவர் தெரிவிக்கையில்...

நான் தொழில் நிமிர்த்தம் சவுதியில் நான்கு வருடங்கள் கடமையாற்றி விட்டு கடந்த வருடம் 2014.08.10 நாடு திரும்பிய நிலையில் எனது விடுமுறைக் காலம் முடிவடைந்த நிலையில் 2015.04.28 பயணம் மேற்கொள்வதற்காக எனது பிறப்பிடமாக கல்முனையிலுள்ள தாயாரின் வீட்டிலிருந்து பிரயாணத்தை மேற்கொள்வதற்காக முறக்கொட்டாஞ்சேனையில் இருந்து கல்முனைக்குச் சென்றிருந்தேன்.

கல்முனையிலிருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த வேளையிலேயே இச்செய்தி கேள்வியுற்றேன் என்றும், என்னை மிகவும் சந்தோசமாகத்தான் வழியனுப்பி வைத்தார் என்றும், அவரது இச்செயலுக்கு என்ன காரணம் என்று தனக்கு எதுவும் தெரியாதென்றும் தெரிவித்தார்.

இச்சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஷீர் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படடைக்குமாறு ஏறாவூர் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த பெண்ணுக்கு ஏழு வயதில், நான்கு வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.








READ MORE | comments

மயூரன் சுகுமாறனின் இறுதி வார்த்தைகள்...

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நேற்று நள்ளிரவு 7 பேருடன் மயூரன் சுகுமாறனுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது இந்தோனேசிய 'நீதி'!(?). தண்டனை நிறைவேற்றப்படுவதற்குமுன் மயூரனை சந்தித்துப் பேசிய தர்மிணி மணி (மயூரனின் உறவினர்), அவருடைய கடைசி வார்த்தைகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
"நான் மயூரனிடம் பேசியபோது, அவர் பார்க்க விரும்பும் புதிய அவென்ஜர்ஸ், பேட்மேன் Vs சூப்பர்மேன், ஸ்டார் வார்ஸ் 7, சனிக்கிழமை அன்று நடக்க இருக்கும் மேவெதர் Vs பேக்கியோ குத்துச்சண்டை ஆகியவற்றை பார்க்க முடியாதே என்று வருந்தினார். அவர் அப்படிச் சொல்லும்போது என் அம்மாவுக்கும், அத்தைக்கும் கண்ணீர் வழிந்தது. ஆனால், மயூரன்  ஜோக் அடித்துக் கொண்டு அவர்களைத் தேற்றிக் கொண்டே இருந்தார். மயூரன் அப்படித்தான். சுற்றியிருப்பவர்களுக்காக தன்னைப் பற்றி சிந்திக்காமல் இருப்பார். 

என் கையையும், என் சகோதரி கையையும் பிடித்துக்கொண்டு, 'வாழ்க்கையில் யாரும் காலையில் எழும்போதே வெற்றியுடன் எழுவதில்லை. சின்ன சின்ன வெற்றிகள் ஒன்று சேர்ந்துதான் பெரிய வெற்றியாக அமையும். இதற்காக வாழ்க்கையில் கடுமையாக உழைக்க வேண்டும். உங்களுடைய உழைப்பை இந்த உலகம் கவனிக்காது. தினமும் சின்ன சின்ன இலக்குகளை வைத்துக் கொண்டு அதை அடைய முயற்சி செய்யுங்கள்.
 
தனது சகோதரியுடன் சிறு வயதில் மயூரன் 

வாழ்க்கையில், என்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்டது. யாரையும் 'முடியாது' என்று சொல்ல அனுமதிக்காதீர்கள். அவர்களுடைய எதிர்மறை எண்ணங்களை, பாசிட்டிவ் எண்ணங்களாக மாற்றுங்கள்' என்று மயூரன் கூறினார்.
 
இனி தனக்கு தேவைப்படாது என்று கூறிவிட்டு , மயூரன் தன்னிடம் இருந்த சாக்லெட்டுகளை எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கச் சொன்னார். அங்கே 2 நாட்களுக்கு முன்பு திருமணமான ஆண்ட்ரூ சான்(தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது), கல்யாணக் களையில் சிரித்துக்கொண்டிருந்தார்.

மயூரனுடன் பிரார்த்தனை செய்தபோது மயூரன், ஆண்ட்ரூ உடன் கடவுள் எப்போதும் இருக்கிறார் என சொல்லிக்கொண்டே இருந்தேன். இத்தனைக்கும்பிறகு, இதுதான் எனக்குத் தோன்றுகிறது!" என்றார். 


READ MORE | comments

இளைஞனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 3 பெண்கள்

தென்னாபிரிக்காவில் ஆணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பெண்கள் 3 பேரை அந்நாட்டு பொலிஸார் தேடிவருகின்றனர்.
குறித்த ஆண் 31 வயதானவரெனவும் , 3 நாட்கள் அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவ் இளைஞன் வீதியில் நின்றுகொண்டிருக்கும் போது அங்கு வாகனமொன்றில் வந்த பெண்கள் அவர் செல்லவுள்ள இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளனர்.
பின்னர் அவ்விடத்துக்கு அழைத்துச் சென்று முதலில் பணத்தைக் கேட்டதாகவும் , தன்னிடம் பணம் இல்லாமையால் ஆயுத த்தைக் காட்டி தன்னை கட த்தியதாகவும், பின்னர் தனக்கு குளிர்பானமொன்றைக் குடிக்க கொடுத்ததாகவும் அதனைக் குடித்ததும் தான் மயக்கமடைந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப் பெண்கள் கண் மற்றும் கைகளை கட்டிப்போட்டு இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார்.தன்னை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

சென்னையில் நடந்த தமிழர் நீதி பேரணியின் போது கொடி கம்பியில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் மரணம்


நேற்றைய நாளில் உலகை சாட்சியாக வைத்து ஒரு தமிழன் கொடூரமாக கொல்லப்பட்ட துன்பத்தில் இருந்து தமிழினம் விடுபட முன்பு அதிர்ச்சி தரும் மற்றுமொரு தமிழ் இளைஞனின் இழப்புச் செய்தியாக இன்று கிடைத்தது இந்த செய்தி.
சிதம்பரத்தை சேர்ந்த வினோத் என்ற இளைஞர் ஆந்திராவில் 20 தமிழர்களை படுகொலை செய்ததை கண்டித்து நீதி கேட்டு 28.4.2015,நேற்று மாலை 3.00 மணியளவில் சென்னையில் நடந்த தமிழர் நீதி பேரணியில் காவல் துறையின் அடக்கு முறையை எதிர்த்து ரயில் மறியலில் ஈடுப்பட முயன்ற போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி மருத்துவ மனைக்கு உடன் எடுத்துச் செல்லப்பட்டு பின்பு 29.4.2015,இன்று காலை மரணம் அடைந்துள்ளார் என்ற செய்தி ஆறாத் துயரில் தமிழ் மக்களை மீண்டும் ஆழ்த்தி உள்ளது.
கிண்டி பேரணியில்..காவல்துறையின் அலட்சியத்தாலே அப்பாவி பலியானார். கட்சித் தலைவர்கள் தொண்டர்களை கட்டுப்படுத்த தவறிவிட்டனர்..


தோழர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற வழி இல்லாமல் ஒரு மணி நேரம் தவித்தனர்..
கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க அவர் ரயில் தண்டவால வழியை கடக்க முயன்றார்.அப்போது கையில் வைத்திருந்த கொடி கம்பியில் மின்சாரம் பாய்ந்தது.
எங்கள் தமிழினத்துக்க்காக அறவழிப் போராடி தன் உயிரை துறந்த அந்த இளைஞரின் இழப்பு துயர் தரும் செய்தியாக இன்று எமக்கு கிடைத்துள்ளது. அவரின் இழப்பில் துயர் கொள்ளும் அனைத்து உறவுகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
தமிழர்களின் குரலாக உயிரீகம் செய்த தோழனின் மரணம் இது வரை எழ மறந்த தமிழர்களை இனியேனும் எழச் செய்யட்டும்.
READ MORE | comments

மட்டக்களப்பு பட்டிருப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவி தேசிய மட்ட சமூக விஞ்ஞான பொதறிவுப் போட்டியில் முதலிடம்

 
அகில இலங்கை ரீதியாகவும் தேசிய மட்ட ரீதியாகவும் இடம்பெற்ற  2014  ம் ஆண்டிற்கான சமூக விஞ்ஞான பொதறிவுப் போட்டியில் மட்/பட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவி செல்வி யோ.அகல்யா அவர்கள் முதலிடம்  பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை அனைவரும் வாழ்த்தி நிற்ககின்றனர்.


READ MORE | comments

மயூரனின் மரணம் எப்படி…?? திடுக்கிடும் படங்கள்…!

இச் செய்தியை வாசிக்கும் ஒவ்வொருவரும் தயவு செய்து இதனை மற்றவர்களுக்கும் பகிருங்கள்….. ஏனெனில் யாராவது இவ்வாறான தவறு செய்து கொண்டிருப்பவர்கள் இதனைப் பார்வையிட்டால் திருந்துவதற்கு வாய்ப்பாக இருக்கும் அன்பு வாசகர்களே!!Majurn 03Majurn 02
அன்ரு சான் , மயூரன் சுகுமாறன் ஆகியோருக்கு இன்று இரவு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இந்த விஷயம் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது-
இன்று செவ்வாய் மாலை 2.00 மணிக்கு அவர்களுக்கு இறுதிவிடை கொடுப்பதற்க்கு அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவர்கள் வேறாக்கப்பட்டு இன்று நள்ளிரவில் தண்டனை நிறைவேற்றப்படுவார்கள்.
பின்னர் சிறைக்கு வெளியே காத்திருக்கும் அவர்களது குடுபதினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்.
அன்ரு சான் அவரது இறுதி மணித்தியாலங்களை அவரது குடும்பத்தினருடன் தேவாலயத்தில் கழிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.மயூரன் சுகுமாறன் தனது இறுதி மணித்தியாலங்களை ஓவியம் தீட்டுவதில் செலவிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு இதயத்தில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. அந்த சூட்டில் உயிர் பிரியாவிட்டால் தலையில் சுட்டு தண்டனை நிறைவேற்றப்படும்.
மயூரன் சுகுமாறன் தனது இதயத்தில் துளை விழுவது போல ஓவியம் தீட்டியுள்ளார்.
அவர்களுக்கான பேழைகள் தயார் செய்யப்படுவதை படத்தில் காண்கிறீர்கள்.
இந்த செய்தியைப் படிக்கும்போது எவ்வளவு வேதனையாக உள்ளது
இறுதி மணித்தியாலங்களை எண்ணிக்கொண்டிருக்கும் அவர்களின் மனநிலை எப்படியிருக்கும் ?
அவர்களது குடும்பத்தினர்களின் மனநிலை எப்படியிருக்கும் ?
8.3 கிலோகிராம் ஹீரோயின் போதைப் பொருளைக் கடத்த முயன்ற குற்றதிற்காக இவர்கள் இருவரோடு மேலும் ஏழு இளைஞர்களும் 2005 இல் கைது செய்யப்பட்டார்கள் . ஏனையோருக்கும் விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும். இவர்கள் செய்த குற்றம் சமூகத்தைச் சீரழிக்கும் மோசமான குற்றம்தான் .
கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சியில் இவர்களைப் பார்த்து பார்த்து , எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல ஆகிப்போனார்கள். எனக்கு ஆரம்பத்தில் இவர்கள்மீதிருந்த கோபம் தணிந்து இப்போதெல்லாம் அனுதாபம்தான் தோன்றுகிறது.
இந்த இளம் வயதில் மரணம் தேவையா ?
‘அறியாத வயதில் குற்றம் செய்துவிட்டார்கள் . ஆனால் இன்று முழுமையாகத் திருந்திவிட்டார்கள்.’ என்கிறார் இவர்களின் மத போதகர்.
(இவர்கள் சுடப்படும்போது சாட்சியாக உடன் இருக்கப் போகிறவர் . இவர் மயூரன் மற்றும் சானின் விருப்பத் தெரிவு )
எனக்கே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது . இவர்களது குடும்பத்தினர் எப்படி ஜீரணித்துக் கொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை .
சானுக்கு ஒரு காதலி இருக்கிறார் . அவர் கடந்த பத்து வருடங்களாக காத்துக்கொண்டிருக்கிறார். சனின் காதலியும் , சகோதரனும் , தாயாரும் கடந்த பலமாதங்களாக இந்தோனேசியாவில் தங்கியிருக்கிறார்கள்.
சுகுமாரனின் தம்பி, தங்கை, தாயார் சுகுமறானைக் காப்பாற்ற படாத பாடு பட்டுவிட்டார்கள் . முடியவில்லை .
“அவனை சுட்டுக்கொன்ற பிறகு மீதமிருக்கும் காலங்களை நாங்கள் எப்படி கழிக்கப்போகிறோம் ? ” என்று தங்கை அழுகிறார்
மனிதவுரிமை அமைப்புகளும் அவுஸ்திரேலியாவும் எவ்வளவோ போராடிவிட்டன.ஒன்றுமே பலனளிக்க .இந்தோனேசியப் பிரதமரின் மனதை மாற்றுவதற்க்காக இந்த இறுதி மணித்தியாலங்களில் கூட அவுதிரேலியப் பிரதமர் ஒரு பிரதிநிதியை இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் நம்பிக்கை 99.9 வீதம் குறைந்துபோய்விட்டது.

இந்த இறுதி மணித்துளிகளில் அவர்களதும், அவர்களைப் பெற்றவர்களது மனநிலைகள் எப்படியிருக்கும் ?

அவர்களின் மரணத்தின் பின்னால் பெற்றோர் உற்றாரின் மீதமுள்ள நாட்கள் எப்படிக்கழியும் ?

இவற்றைச் சிந்தித்தால் போதைப்பொருட்களை கையாள யாரும் சிந்திக்க மாட்டார்கள் .
தொடர்புடையவர்கள் சிந்திக்கவேண்டும் என்பதற்க்காக இதைப் பதிவிடுகிறேன்.
READ MORE | comments

முத்தமிடும் மயூரனின் இறுதி நிமிடங்கள்…

போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கும் ஏனைய அறுவருக்கும் சற்று முன்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
12 பொலிஸார் சூழ்ந்திருக்க இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தோனேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. உயரதிகாரிகள், அவுஸ். அதிகாரிகள், பிலிப்பைன்ஸ் அதிகாரிகள், உறவினர்கள், கருணை உள்ளம் கொண்ட மக்கள் என சர்வதேச அளவில் அனைவரும் இந்தோனேசிய அரசிடம் தண்டனையை ரத்து செய்யுமாறு கேட்டபோதிலும், தண்டனையை நிறைவேற்றியுள்ளது இந்தோனேசிய அரசாங்கம்.
இறுதி முத்தமிடும் மயூரனின் நிமிடங்கள் விடை கொடுக்கும் அந்த நிமிடங்கள் அங்கு தரித்து நின்ற அதிகளாரிகள் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியதாக அங்கு உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
Maju

READ MORE | comments

சிவராமின் படுகொலைக்கு வித்திட்ட சில உண்மை விடயங்கள் உள்ளே ... (காணொளி இணைப்பு)

சிவராம் பத்திரிகைத்துறை ஜாம்பவான். இனப்பற்றும், நேர்மையும், துணிச்சலும் மிக்க ஊடகவாதி, ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளிலும் அறிவுசார் புலமையுள்ள ஒரு அரசியல். இராணுவ ஆய்வாளன்,
தமிழரின் நோக்குநிலையில் இருந்து இலங்கையின் அரசியல். சமூக விவகாரங்களையும். அன்றாடச் செய்திகளையும். ஆங்கில மொழிமூலம் வழங்கும் ‘தமிழ்நெற்’ இணையத்தளம் உலகப்பிரசித்தமானது.


இலங்கையுடன் தொடர்புடைய வெளிநாட்டு இராசதந்திரிகளின் அலுவலக மேசைகளில் அதன் நாளாந்த கணனிப் பிரதிகள் எப்போதும் இருக்குமளவிற்கு செய்திகளின் உண்மைத்தன்மையும் நேர்த்தியும் செய்தி ஆய்வுகளும் தரம் வாய்ந்தவை இத்தகைய சர்வதேச தரத்திற்கும் கீர்த்திக்கும் காரணம் அவ் இணையத்தளத்தினை உருவாக்கி வழிநடத்தியது டி.சிவராம் தான்.


டி.சிவராம் என்ற சொல்லின் பின்னால் உண்மை, நேர்மை, நட்பு, துல்லியம், தர்க்கீகம் மாக்சீசம் தீர்க்கதரிசனம் எனப்பல்வகைப் பண்பும் பல்துறை ஆற்றலும் விரிந்துகிடக்கின்றது


வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை கணினி யுகத்திற்குள் கொண்டுவந்த பெருமையும் சிவராமையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மயூரா துரதிருஸ்டவசமாக இவ்வுலகு இன்னும் நரகமாகவே இருக்கிறது! சென்றுவா உன் ஓவியங்கள் காவியமாகட்டும்:

உயிர் பிச்சைக் கேட்ட குடும்பத்துக்கு பரிசாக சோடித்தப் பேழையில் பிணத்தை கொடுக்கிறது இந்தோனேசிய அரசு...........???
ஐக்கிய நாடுகள் சபையின் உயரதிகாரிகள், அவுஸ்திரேலிய மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் அதிபர்கள், உறவினர்கள், பல நாடுகளை சேர்ந்த கருணை உள்ளம் கொண்ட பொது மக்கள் என சர்வதேச அளவில் அநேகர் இந்தோனேசிய அரசிடம் மரணத் தண்டனையை இரத்து செய்யுமாறு கேட்டப் போதிலும், தண்டனையை நிறைவேற்றியுள்ளது இந்தோனேசிய அரசாங்கம்.
வேதனையின் வலி மனிதத்துவத்தை நேசிக்கும் எல்லோரிடமும் இருக்கும். இனி இந்த பூமியில் இவ்வாறான சோக நிகழ்வொன்று நிகழாமல் இருப்பதற்கு இரண்டே வழிகள் தான் இருக்கின்றன. ஒன்று, தூக்குத்தண்டனை ஒழிக்கப்பட வேண்டும், இன்னொன்று, போதைப் பொருட்களை இல்லாமல் செய்ய வேண்டும். இவற்றை நடைமுறைப் படுத்துமா உலக அரசாங்கங்கள்..........??

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மரண தண்டனைக் கைதிகளினது  மரணத்தை எதிர்கொண்ட வலியையும் மரணத்தை எதிர்கொள்ளப் போகும்  உங்களின் வலியையும் எண்ணிப் பார்க்கிறேன். அதனைப் புரிந்து கொள்ள முடியுமா அல்லது புரிவதுதான் சாத்தியமா என எண்ணும் போது நெஞ்சுக்குள் ஏதோவொன்று புரள்கிறது.

மரணம் எம்மை நெருங்குகிறது என்பதனை நாமே உணருகின்ற தருணங்கள்  எத்துணை  கொடியது  என்பதனைப்  புறவயப்பட்டு  உணர  முடியாது மற்றவர்களின் மரணத்தைப் பார்த்து  அவர்களின்  வலியைப் பார்த்து  எமது  நெஞ்சில் எழும் சோகத்தை, பரிதாபத்தை,  அழுகையாக வெளிப்படுத்த முடியும்.  ஆனால் அந்த மரணம்  அகநிலைப்பட்டு அது எம்மை  அழிக்கப்  போகிறது  என்பதனை  நாமே  உணர்கின்ற  தருணத்தைப்  போல்  அதன்  வலியைப்  போல்  உலகில்  வேறெந்த  வலியும்  இருக்கும் என நான் நினைக்கவில்லை.

உங்களுக்கு விதிக்கப்பட்ட  மரண  தண்டனை  சரி  எனக்கூறித்  தொடரும்   பிரதிவாதங்கள் என் நெஞ்சைப் பிளக்கின்றன. உலகில்  பாரிய  தவறுகளைச்  செய்தவர்களுக்கு  எல்லாம் மரண  தண்டனைதான்  தீர்வு  என்றால்  உலக  சனத் தொகையில்  அரைப்பங்கினருக்கு  மேல்  மரண தண்டனைக்கு உரித்தானவர்களாக இருப்பார்கள்.

மகா  தவறுகளைச்  செய்தவர்கள்  எல்லாம்  இன்று  உலகத்  தலைவர்களாகவும்,  செல்வாக்குள்ள பிரமுகர்களாகவும்,  செல்வந்தர்களாகவும்  சட்டத்தின் பிடியில் அகப்படாமல் உலவுகின்ற  போது  சட்டத்தின்  பிடியில் சிக்க வைக்கப்பட்ட உங்கள்  போன்ற  அப்பாவிகள் மட்டும் தானே மரண தண்டனைகளைத் தழுவுகிறார்கள்.

கடந்த  சில  நாட்களாக  மயூரா  உன்  கூர்மையான  இறுகிய  விழிகளைப்  பார்த்துப்  பார்த்து  என்  இதயம்  அழுகிறதெடா.  நீ செய்த  குற்றம்   சமூக  விரோதக்  குற்றம்  என்பதில்  சந்தேகம் இல்லை.   பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காது உன் இளவயது மூளை எடுத்த முடிவில்  சிக்கிவிட்டாய் ஆயினும்  நீ சிறையில் உனது தவறுகளை உணர்ந்து திருந்திக் கழித்தநாட்களில்  நீ வரைந்த ஓவியங்கள்  உலகத்தின்  மனச்சாட்சியை பிழிந்தல்லவா எடுக்கின்றன.

மீண்டும்   திருந்திய மனிதனாக இந்த உலகத்தில் வாழ்வதற்கு உனக்கு உள்ள உரிமையை   மனித தர்மத்தை மதிப்பவர்கள் மறுக்க மாட்டார்கள்.  இந்தப் பாழாய் போன இந்தோனேசிய  அரசு  ஏன் உனக்கும் ஏனைய மரணதண்டனைக் கைதிகளுக்கும் திருந்தி வாழும் சந்தர்ப்பத்தை  வழங்க மறுத்தது?

போதைப்  பொருட்களை உற்பத்தி செய்து  மூட்டைகளாக  அடுக்கி வைத்திருந்து வியாபாரம் செய்பவர்களும்   அதனால்  வரும்  அளவிட  முடியாத  பணங்களை வங்கிகளில்  இட்டு வெள்ளைப் பணமாக்குவதற்கு உதவுபவர்களும்  சுக போகமாக வாழும் போது  நீங்கள் மட்டும் பலிக்கடா ஆக்கப்பட்டது என்ன நியாயம்?

திருந்தி வாழ விரும்பும் உங்களை உங்களின் பெற்றவர்களும்  உறவினர்களும்  உலகமும்  பார்த்திருக்கச்  சுட்டுக் கொன்று என்ன விதமான  நீதியை நிலைநாட்டப் போகிறதாம் இந்தோனேசிய அரசு?

ஒரு தடவை  அல்ல இரண்டு தடவைகள் நான் மரணத்திற்கு மிக அருகாமையில் கிடத்தப் பட்டிருக்கிறேன்.   மரணத்தின்  எல்லை  வரை  சென்று  திரும்பிய அவ்  வேளைகளில்  நான் அடைந்த  அச்சம்  எத்தகையது என்பதைச் சொல்ல முடியாது அல்லது அதைச் சொல்வதற்கு முனையும் வாழ்வை மீளப் பெற்றிருக்கிறேன். ஆனால் நீ? உன்னை நானறிவேன். உன் வலியை நானும் உணர்வேன்.

1986ல் எனது 19ஆவது வயதில் என்னைக் கடத்திச் சென்ற எங்கள் தேச விடுதலை இயக்கத்தின் தளபதி மாத்தையா என் நெற்றியில் கைத்துப்பாக்கியை வைத்து 'உன் இறுதிவிருப்பம் என்ன' என்று கேட்டார்.

கைகள்  பின்புறமாகக்  கட்டப்பட்டு  உள்ளாடைகளுடன் நின்ற  எனக்கு    உன்னைப்  போல் “ ஓவியம்  வரையப்  போகிறேன் ”  என்றோ என் பெற்றோரைப் பார்க்கப் போகிறேன் என்றோ சொல்லுகின்ற அளவுக்குக் கூட  உறுதியிருக்கவில்லை.  விடுதலைக்காகப்  போராடப்  புறப்பட்டது தான் என் தவறு  என  உள் மனதில் நினைத்தவாறு  சுடுவதென்று  தீர்மானித்து விட்டார்கள்,  என் மரணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது, இனி என்ன?   “ எனக்கு  இறுதி  விருப்பம்  என்று  எதுவும்  இல்லை என் உடலைப் பெற்றோரிடம் ஒப்படையுங்கள்”  என்றேன்.

அந்தக்  கணங்களை  உன்  இறுதிக்  கணங்களோடு  பொருத்திப்  பார்க்கிறேன்.  மயூரா.. வெளிப்புற அழுத்தங்களும் என்னைக் கைது செய்தவர்களின்   மன  மாற்றமும்  என்  மரணத்தை நிறுத்தி  விடுதலையைத்  தந்தன. உனக்கும் ஏனையவர்களுக்கும் அது நடக்கவேயில்லையே.

என் தந்தை இரண்டு நாட்கள் உணவைத் தவிர்த்து தியானத்தில் இருந்ததாக என் அம்மா சொன்னார். என் குடும்பம் எப்படித் துயரத்தில் துவண்டிருந்து  போயிருந்தது  என்பதைப் பிற்பாடு  அவர்கள்  வாய்வழி  சொல்லக்  கேட்டு  இருக்கிறேன்.  ஆனால்  இப்போ  உன்  குடும்பம்  கதறுவதைப்  பார்க்கும் போது மீண்டும் என் இதயம் வலிக்கிறது.

2006ல் 20 வருடங்களின் இன்னு மொருமுறை உணர்ந்த மரண வலி இருக்கிறேதே. என்னைத்  தூக்கிச்  சென்ற  இலங்கைப்  படைப் புலனாய்வாரள்கள்  என்னைக்   கொல்வதென்ற  முடிவுடனேயே  கடத்தினார்கள்.  அக்காலத்தில்   கடத்தப்பட்டவர்கள்  எவருமே  வீடு திரும்பியதில்லை.  அவர்கள்  எனது  இறுதி  விருப்பத்தைக்  கேட்கவில்லை.  ஒரு சந்தர்ப்பத்தில் நானாகவே  சொன்னேன்.  காரணம்,  நான்  1986ல்  கொல்லப்பட்டு  இருந்தால்  என் பெற்றோர்  பிள்ளையை  இழந்திருப்பார்கள்.  சகோதரர்கள்  ஒரு  சகோதரனை  இழந்திருப்பார்கள் . எனது  காதலி  தன்  காதலனை இழந்திருப்பாள். (இப்போ என் மனைவி)  ஆனால்  2006ல் நான்  கொல்லப்பட்டிருந்தால்   உலகமே  அறியாத  இரு  குழந்தைகளும்  தங்கள்  அப்பாவை  இழந்திருக்கும்.  அதனால்  சொன்னேன் : “நான்  எந்தத்  தவறும்  செய்யவில்லை.  அப்படி செய்தேன்  எனக்  கருதி  நீங்கள் என்னைக்  கொன்றால்   ' கொன்ற பின்  என் உடலை  ஆறு  அல்லது குளத்தில்  வீசிக்  காணாமல்  போகச்  செய்து  விடாதீர்கள்.  என்  வீட்டுக்கு  அருகில் கொண்டு சென்று  போட்டு விட்டு  செல்லுங்கள், அத்துடன் நான் தரும் கடிதத்தை நீங்கள் படித்துவிட்டு தபாலில் அனுப்பி விடுங்கள்”.   ஏன் என்று கேட்டார்கள். நான் சொன்னேன்: “ எனது உடலை எடுத்துத் துக்கம் கொண்டாடி அந்தத் துயரையும் அனுபவித்துப் பின்ஒரு சில வருடங்களில் அதில் இருந்து மீண்டு தமது வாழ்விற்கான வழியை  என்  மனைவி  பிள்ளைகள் தேடிக்கொள்வார்கள்.

என் உடல் கிடைக்கா விட்டால்   நான்  வருவேன்  என்ற  எதிர்பார்ப்பில்  காத்திருந்து  தமது  வாழ்வையையும்  அழித்து  விடுவார்கள்.  என்றேன்.  கொலை செய்து பழக்கப்பட்ட புலனாய்வாளர்களாக இருந்த போதும்  சற்று நேரம்  அவர்கள் எதுவும் கூறாமல் மௌனமாக இருந்தார்கள்.
அடுத்த  நாள்  அதிகாலை  என்னை  விடுவிக்கக்  கண்ணைக்  கட்டிய  நிலையில்  வாகனத்தில்  ஏற்றிய போதும்  கூட  என்னை  சுட்டுக் கொல்லப்  போகிறார்கள்  என்றே  நினைத்தேன். இறக்கி  விட்ட  போது கண்கட்டை அவிழ்க்கக்  கூடாது என்று  சொன்னார்கள். அப்போது  கூடச்  சுட்டு விடுவார்கள் என்றே நினைத்தேன்.

விடப்பட்ட நேரம் அதிகாலை  4 மணி  இருக்கும்  என  நினைக்கிறேன்  வீடு  சென்று அழைப்பு மணியை அழுத்திய  போது  யார்  என்று  கேட்டார்  என் சகலன்  குரு என்றேன். அவரால்  தன்னையே  நம்ப முடியவில்லை. காரணம் யாவரும் நான் உயிரோடு வருவேன் என்ற நம்பிக்கையை இழந்திருந்தனர்.   என் மனைவி பிள்ளைகள்,  உறவினர்கள், நண்பர்கள்  என  அனைவரும்  மரண  வீடொன்றில்  எப்படித்  துக்கத்துடன்   கூடியிருப்பார்களோ  அப்படி  இருந்தார்கள்.  உலக  நாடுகளின்  அழுத்தமும்  தமிழ் சிங்கள  ஊடக  சமூகத்தின் போராட்டமும்  கடத்தியவர்களின்  மன  மாற்றமும்  மீண்டும்  ஒரு  முறை  என் உயிரைக் காப்பாற்றின.

மயூரா  உங்களை எவராலும் காப்பாற்ற முடியவில்லையே!
உன்னையும்   உன்னுடன்  பயணிக்கும்  உன்  நண்பர்களையும்  உங்கள்  அனைவரதும்  குடும்பங்களையும்  என்  இறுதிக்  கணங்களோடும்  என்  குடும்பம்  உறவினர்கள்  மற்றும் நண்பர்களோடும்    இணைத்துப்  பார்க்கிறேன். இப்படியொரு மரணம்  எவ்வளவு  கொடுமையானது. காக்க வைத்து காக்க வைத்துக் கொல்வது?

மயூரா நீ வரைந்த ஓவியங்களுடன் உன்னை ஒரு ஓவியக் கண்காட்சியில்  சந்திக்க முடிந்திருந்தால்? தவறுகளில் இருந்து திருந்தி வாழ்வது எப்படி என்று உனது வார்த்தைகளில் இந்த உலகத்துக்குச்  சொல்ல உனக்கும் உன்னுடன் பயணிக்கக் காத்திருக்கும் அனைவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தால்?

இது ஒரு அற்புதமான உலகமாக இருக்காதா?

துரதிருஸ்டவசமாக இந்த உலகம் இன்னும் நரகமாகவே இருக்கிறது.

உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்

  
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |