Home » » மட்டக்களப்பில் சங்க கால சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு!

மட்டக்களப்பில் சங்க கால சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு!

மட்டக்களப்பு – வந்தாறுமூலை பிரதான வீதியில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் மேற்கு திசையாக உள்ள வயற்கரையில் விவசாயிகளினால் கிணறு வெட்டும் போது சுடு மண்ணினால் உருவாக்கப்பட்ட கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.பத்மநாதனும், பேராசிரியரின் தொல்பொருள் ஆய்வுக்குழு உறுப்பினரும் ஆசிரியருமான செ.பத்மநாதனும் நேரடியாக கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதன்போது, இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கிணற்றின் தொல்பொருள் சான்றுகளை ஆய்வு செய்து அடையாளப்படுத்தியதோடு இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சான்றுகளில் காணப்படும் “நாகன்” எனும் வரிவடிவம் தமிழ்மொழி என குறிப்பிட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |