உதயம் விளையாட்டு கழகத்தின் ஏவிளம்பி வருடத்திற்கான விளையாட்டு விழா

Sunday, April 30, 2017

களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு உதயம் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு விழா இன்று காலை 15 கீழ மேல் மரதன் ஒட்ட நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது பிற்பகல் உதயம் விளையாட்டு கழகத்தின் பொது விளையாட்டு மைதானத்தில் கலாசார நிகழ்வுகள் கழகத்தின் தலைவர் இ.புவநேந்திரகுமார் தலைமையில் ஆரம்பமாகி இடம் பெற்றது.
அந்த வகையில் இவ் விளையாட்டு விழாவிற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான. 
கோ.கருணாகரம்,இரா.துரைரெட்ணம் க.கிருஸ்ணப்பிள்ளை மற்றும் மா.நடராஜா ஆகியோரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர். இ.சாணக்கியம் அவர்களும் கலந்து கொண்டனர்.
இவ் விளையாட்டு விழாவின் போது முட்டி உடைத்தல் கயிறு இழுத்தில் சறுக்கு மரம் ஏறுதல் தலையணை சமர் போன்ற பல தரப்பட்ட போட்டிகளும் பாடசாலை மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றமாணவர்களும் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிட்டதக்க விடயம்
READ MORE | comments

காணிகள் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டி­யது அவ­சியம்! -ஐ.நா

பாதிக்­கப்­பட்ட மக்­களின் காணிகள் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டி­யது அவ­சியம். அவ்­வாறு காணி­களை மீள வழங்க முடி­யா­விடின் காணி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்டும். இதுவே ஐக்­கிய நாடுகள் சபையின் நிலைப்­பா­டாகும் என்று ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்­கைக்­கான வதி­விடப் பிர­தி­நிதி உனா­ மெக்­குலே தெரி­வித்தார்.
நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை அடை­யாளம் காணும் விட­யத்தில் இலங்கை அர­சாங்­கத்­துடன் ஐக்­கிய நாடுகள் சபை செயற்­பட்டு வரு­கி­றது. அந்­த­வ­கையில் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் காணி­களை விடு­விக்கும் கார­ணி­யா­னது மிகவும் முக்­கி­ய­மான ஒன்­றாகும். அதா­வது சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வதில் இந்தக் காரணி முக்­கிய பங்­காற்றும்.
எந்­த­வொரு சமூ­கத்­திலும் ஆர்ப்­பாட்டம் நடத்­து­வ­தற்­கான உரிமை உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதே எனது கருத்­தாகும். இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் காணிப் பிரச்­சி­னை­யா­னது ஒரு பாரிய விவ­கா­ர­மாக காணப்­ப­டு­கி­றது. இது நீண்­ட­காலப் பிரச்­சி­னை­யாக இருக்­கின்­றது. காணி­களின் உண்­மை­யான உரி­மை­யா­ளர்கள் அவை எப்­போது தமக்கு கிடைக்கும் என்­பதை தெரிந்து கொள்­வ­தற்­கான உரி­மையை கொண்­டுள்­ளனர்.
இந்த காணி விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெ­று­வ­தாக நாங்கள் நினைக்­கின்றோம். இந்த வாரம்­கூட ஒரு கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­ற­தாக அறிந்தோம். அந்த கலந்­து­ரை­யா­டல்­களின் முடி­வுகள் அல்­லது விளை­வுகள் என்­ன­வென்­பதை அறிந்து கொள்ள நாங்கள் ஆவ­லாக இருக்­கின்றோம்.
ஐக்­கிய நாடுகள் சபை இலங்கை அர­சாங்­கத்­துடன் பணி­யாற்றி வரு­கி­றது. அதா­வது நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை அடை­யாளம் காணும் விட­யத்தில் இலங்கை அர­சாங்­கத்­துடன் ஐக்­கிய நாடுகள் சபை செயற்­பட்டு வரு­கி­றது. நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் காணி­களை விடு­விக்கும் கார­ணி­யா­னது மிகவும் முக்­கி­ய­மான ஒன்­றாகும். அதா­வது சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வதில் இது முக்­கிய பங்­காற்றும் கார­ணி­யாகும்.
காணிகள் விடு­விக்­கப்­பட்­டதும் நாங்கள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுடன் இணைந்து செயற்­பட்டு மக்­க­ளுக்­கான தேவை­களை பூர்த்தி செய்ய நட­வ­டிக்கை எடுப்போம். அந்த மக்­களின் வாழ்க்­கையை இயல்பு நிலைக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­காக அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டுவோம். காணி­களின் உரிமை தொடர்­பான செயற்­பா­டுகள் அடை­யாளம் காணப்­பட வேண்டும். அதன் பின்னர் காணிகள் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டி­யது அவ­சியம். அல்­லது காணி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்டும்.
உலகில் எந்த அரசாங்கமாக இருந்தாலும் காணிகள் அரச தேவைக்காக பெறப்பட்டால் அவற்றுக்கு நட்டஈடு வழங்கலாம் என்பது பெறுமதியானதொரு தர்க்கமாகும் என்றார்.
READ MORE | comments

முள்ளிக்குளம் மக்களின் காணிகள் கடற்படையினால் விடுவிப்பு!

கடற்படையினர் வசமிருந்த முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கடற்படைத் தளபதி தலைமையில் முள்ளிக்குளம் கடற்படை முகாமில் இன்று இடம்பெற்ற காணி விடுவிப்பு குறித்த உயர்மட்ட கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் அவசர கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இரு வாரங்களுக்குள் அவசர கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முள்ளிக்குளம் மக்களின் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முள்ளிக்குளம் மக்கள் இன்று முதல் தமது சொந்த நிலங்களில் குடியேற முடியும் என கடற்படைத்தளபதி தெரிவித்துள்ளார்.
முள்ளிக்குளம் மக்கள் நாளை முள்ளிக்குளம் ஆலயத்தில் திருப்பலியை ஒப்புக்கொடுத்த பின் தமது சொந்த நிலங்களில் குடியமரவுள்ளனர்” என அவர் தெரிவித்தார்.
READ MORE | comments

இலங்கையின் வளிமண்டலத்தில் நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்பமான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை முதல் நாட்டின் அனேக பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு முதல் காலி வரையிலான பகுதியின் கரையோரங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
READ MORE | comments

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள்

வறட்சியான காலைநிலை காரணமாக மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிவதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.
அதன்படி நாளொன்றுக்கான மின்சார கேள்வி 44 கிகாவோல்ட் மணித்தியாலங்களுக்கும் அதிகமாகும் என்று மின்சார சபை கூறியுள்ளது.
இதன்காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்‌ஷன ஜயவர்தன பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
READ MORE | comments

அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டுக்குள் இலங்கை! தீவிர கண்காணிப்பில் உலக நாடுகள்

பல நாடுகளின் புலனாய்வு பிரிவு இலங்கை தொடர்பில் அவதானத்தை செலுத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் காணியை, அருகில் உள்ள அமெரிக்க தூதரகம் கொள்வனவு செய்துள்ளதனை தொடர்ந்து இந்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா,நியூசிலாந்து உட்பட பல நாடுகள் தங்கள் புலனாய்வு சேவையை நடத்தி செல்வதற்காக மத்திய நிலையம் ஒன்றை உருவாக்குவதற்கு இந்த இடத்தை பயன்படுத்திக் கொள்வதே இதற்கு காரணமாகும்.
குறித்த இடத்தில் அமெரிக்கா தங்கள் அதிநவீன தொழில்நுட்ப ரேடார் கட்டமைப்பு உட்பட தொலைத்தொடர்பு உபகரணங்களை பொருத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு நடந்தால் அதன் ஊடாக ஆசிய எல்லைக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட கூடும் என ஆசிய எல்லை நாடுகளின் புலனாய்வு பிரிவு அவதானத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னர் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியவில் உள்ள 6 ஏக்கர் காணியை இரு நாடுகளின் கொடுக்கல் வாங்களாக அமெரிக்க தூதரகம் கொள்வனவு செய்துக் கொள்வதற்கான அனுமதியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே வழங்கியுள்ளார்.
கொழும்பு துறைமுகம், காலி முகத்திடல் மற்றும் கொழும்பு கோட்டை உட்பட இலங்கையின் வர்த்தக நகரங்களின் மத்தியில் அமெரிக்க எல்லை கண்கானிப்பு மத்திய நிலையம் உருவாக்குவது தொடர்பில் இந்தியா மற்றும் சீனா தீவிர அவதானத்தை செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க எல்லை கண்கானிப்பு மத்திய நிலையத்திற்காக ரேடார் கட்டமைப்பு ஒன்று பொருத்தினால் சீனா மற்றும் இந்தியா ரேடார் கட்டமைப்பொன்றை பொருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்படியிருப்பினும் அமெரிக்கா கொள்ளுப்பிட்டியில் கொள்வனவு செய்துள்ள காணிக்கு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சொந்தமான கட்டடங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு புதிய நிர்மாணிப்பிற்காக அந்த இடம் தயார்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நிர்மாணிப்பை தொடர்ந்து இலங்கை தூதரக அலுவலகம் கடும் அதிருப்பதியடைந்துள்ளது.
எல்லையின் செயற்பாட்டு மத்திய நிலையம் காரணமாக இலங்கையின் பாதுகாப்பிற்கு எதிர்வரும் காலங்களில் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட கூடும் என வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகள், இலங்கைக்கு அர சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள ஊடகம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.
READ MORE | comments

பயிற்சியாளராக மாறுவதென்பது கடினமானதொன்று -மஹில்ல ஜயவர்தன

Saturday, April 29, 2017

சுமார் 18 வருடங்கள் தொடர்ச்சியாக விளையாடி முழுநேர பயிற்சியாளராக மாறுவதென்பது உண்மையிலேயே கடினமானதொன்று. தற்போது எனது பொறுப்பு எனது குடும்பத்தினை கவனிப்பதே. அவர்களுடன் நேரத்தினை ஒதுக்க வேண்டியது எனது கட்டாயக் கடமைகளுள் ஒன்றாகும்.
இலங்கை அணி குறித்து கூறுவோமாயின் அவர்களுக்கு சிறந்ததொரு பயிற்சியாளர் இருக்கிறார். எவ்வாறாயினும் நடைமுறையிலுள்ள முறைமைகளில் இருந்து தூரமாகி இருப்பது சாலச் சிறந்தது என நினைக்கின்றேன்” என கூறினார்.
தான் இன்னும் முழுநேர பயிற்சியாளருக்கு தேவையான பக்குவத்துடன் இல்லையென்பதாலேயே இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹில்ல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஐ.பி.எல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு துடுப்பாட்ட ஆலோசகராகவும் பயிற்சியாளராகவும் உள்ள மஹில்ல ஜயவர்தன, இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கை அணிக்கு ஏன் பயிற்சியாளராக செயற்படவில்லை என இதன்போது கேள்வியெழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,
“இங்கிலாந்து மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுடன் குறுங்கால ஒப்பந்தங்களையே மேற்கொண்டுள்ளேன். ஆனால் நான் இன்னும் முழுநேர பயிற்சியாளருக்கு தேவையான பக்குவத்துடன் இல்லை
READ MORE | comments

அலரி விதை உட்கொண்ட இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்

நேற்றிரவு 7.30 மணியளவில் அலரி விதை உட்கொண்ட பிரஸ்தாப பெண் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அவரது கணவனால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து குறித்த குடும்பப் பெண்ணுக்கு அவசர தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் மரணமடைந்துள்ளார்.சரசாலை தெற்கு சாவகச்சேரியை சேர்ந்த சசிதரன் பகிரதி (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே மரணமடைந்தவராவார்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே குறித்த பெண் அலரி விதையை உட்கொண்டு மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
READ MORE | comments

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனை தோல்வி!

வடகொரியாவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வந்த அணுவாயுத சோதனைகளால் உலக நாடுகள் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வரும் நிலையிலேயே இந்த ஏவுகணைச் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வடகொரியாவால் இன்று மேற்கொள்ளப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனை தோல்வியடைந்துள்ளது. மேற்குறித்த தகவலை தென்கொரிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளனர்.
பையென்கொன் மாகாணத்தில் இருந்து ஏவப்பட்ட குறித்த ஏவுகணை, சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறியதாகவும் அது வடகொரியாவின் எல்லையைக் கூட தாண்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஏவுகணை எந்த ரகத்தைச் சேர்ந்தது என்பது தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.
வடகொரியாவால் கடந்த மார்ச் மாதம் முதல் மேற்கொண்ட ஏவுகணை சோதனை நடவடிக்கைகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையுடன் சேர்த்து மொத்தமாக நான்கு ஏவுகணை சோதனை நடவடிக்கைகள் தோல்வி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
READ MORE | comments

எரிபொருளால் முடங்கிய மக்கள்!

18 ஆம் நூற்றாணடில் இங்கிலாந்தில் கைத்தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து இருப்புருக்கு, நிலக்கரி, புடவை ஆகிய கைத்தொழில்களில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து நிலக்கரி கைத்தொழிலுடன் தொடர்புடைய தொடர்பாடல் மற்றும் போக்குவரத்து துறையும் வளர்ச்சியடைந்தது. இன்று இயந்திரமயமாக்கப்பட்ட சூழலில் நிலக்கரியுடன் தொடர்புடைய எண்ணெய்வளப் பயன்பாட்டின் தேவை என்பது மனித வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத அத்தியாவசியமானதொரு பொருளாக மாறிவிட்டது. இதில் போக்குவரத்து துறையின் இயக்கத்திற்கு பெற்றோலியம் மற்றும் டீசல் என்பவற்றின் தேவை என்பது அளவிடமுடியாதவை.
இந்நிலையில் இலங்கையில் கடந்த திங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் சாரதிகள் பலரும் முகம்கொடுக்க நேரிட்டதுடன், பலர் தமது வேலைக்களைக் கூட ஒழுங்காக செய்யமுடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலைக்கு எரிபொருள் கூட்டுத்தாபனத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையே காரணம். இலங்கையின் திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு கொடுப்பதை எதிர்த்தும், அம்பாந்தோட்டையில் உள்ள எண்ணெய் குதங்களை சீனாவிற்கு கொடுப்பதை எதிர்த்தும், உள்நாட்டு வளங்களை உள்நாட்டு அமைப்புக்களுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஞாயிறு நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட அந்த போராட்டம் ஒரு நாள் முழுவதும் முழு இலங்கையையும் ஆட்டம் காண வைத்திருந்தது. நாட்டு வளங்களை அந்நிய நாட்டிற்கு விற்பனை செய்வதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இவர்களது போராட்டம் நியாயமானதாக இருந்தாலும், உரிய கால அவகாசம் வழங்கப்படாது அந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்மை ஏற்புடையதல்ல். அது முழு இலங்கையின் பொருளாதாரத்திற்கும், மக்களது இயல்பு நிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தமையை மறுத்து விடவும் முடியாது.
இலங்கையின் தென்பகுதியைக் காட்டிலும் வடபகுதியில் இதன் தாக்கம் அதிகமாகவே உணரப்பட்டிருந்தது. செவ்வாய்கிழமை இரவு 10.30 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வழங்கிய உறுதிமொழியையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்திருந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவிருநி;த நிலையில் இது தொடர்பில் எந்தவித ஒப்பந்தமும் செய்யப்படமாட்டாது என உறுதி மொழி வழங்கியிருந்தார். அதனால் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தது. இருப்பினும் அந்த ஒரு நாள் பொழுது என்பது பலரும் நெருக்கடிகள் ஏற்படுத்திய நாளாகவே அமைந்திருந்தது. நள்ளிரவு முதல் எரிபொருள் கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போகின்றார்கள் என்ற செய்தி வடக்கைப் பொறுத்தவரை ஆரம்பித்தில் சூடு பிடிக்கவில்லை. நள்ளிரவு அவர்களின் போராட்டம் ஆரம்பித்தவுடனேயே அது தொடர்பான செய்திகள் பரவலடைய வடக்கிலும் மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. காலையில் இருந்து வடக்கின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டத்திற்கு அளவே இல்லாது நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்தது. நாளாந்தம் 100 ரூபாய் காசுக்கு பெற்றோல் அடித்து கூலி வேலைக்கு செல்பவர்கள் தொடக்கம் அரசாங்க உத்தியோகத்தர்கள் எனப் பலரும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முண்டியடித்தனர். பல உத்தியோகத்தர்கள் அன்றைய தினம் தமது வேலைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
யுத்தப் பாதிப்புக்களை எதிர்கொண்டு தற்போது மீள்குடியேறியுள்ள பலர் நாளாந்தம் கூலி வேலை செய்து தமது வயிற்றுப் பசியைப் போக்கும் குடும்பங்கள் பலவற்றுக்கும் அன்றைய நாள் என்பது மிகவும் ஏக்கம் நிறைந்த நாளாகவே அமைந்திருந்தது. எரிபொருள் பெறுவதற்காக மணித்தியாலக்கணக்கில் நீண்ட வரிசையில் நின்றதால் தமது கூலி வேலைகளுக்கு கூட செல்ல முடியாத நிலையே இருந்தது. வடக்கில் போக்குவரத்து துறையில் மோட்டர் சைக்கிள் பாவனை என்பது அதிகமாகவே இருக்கிறது. தென்பகுதியில் பலரும் வசதி படைத்தவர்களாகவும், நான்கு சில்லு வாகனங்களை உடையவர்களாகவும் இருப்பதுடன் எரிபொருளை பெருமளவில் சேமித்து வைக்கக் கூடியவர்களாகவும் உள்ளனர். ஆனால் வடக்கின் நிலை அப்படியல்ல. அன்றாடம் எரிபொருள் நிரப்பி சீவியம் நடத்தும் மக்களே அதிகம். அதனால் இந்தப் போராட்டம் அம் மக்களுக்கு அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.
யுத்த வடுக்களை சுமந்து வாழ்வை மீள கட்டியெழுப்புவதற்காக மக்கள் தினமும் 100 ரூபாக்கு பெற்றோல் அடித்து அதன் மூலம் தமது போக்குவரத்தை மேற்கொள்பவர்களும், பேரூந்துகளில் பயணம் செய்பவர்களும் அதிகம். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பேரூந்துகள் கூட டீசலை பெற முடியாது சில பகுதிக்கான போக்குவரத்துக்கள் சீராக இடம்பெறாத நிலையும் ஏற்பட்டிருந்தது.
இங்கு ஒரு நாளில் வடக்கில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் முடிந்து விடவில்லை. ஏன் எனில் வடக்கின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உடனுக்குடன் எரிபொருள் கொள்கலன்களில் வருவதில்லை. அவை இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை, மூன்று நாட்களுக்கு ஒரு தடவை என்றே வருகின்றது. அப்படி இருக்கையில் ஒருநாளில் வடக்கில் பெற்றோல் முடிந்து விட்டது என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. போராட்டம் ஆரம்பிக்கப்பட்டவுடன் அதனை பதுக்கிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தான் அதிகம். தமக்கு தெரிந்தவர்களுக்கு வழங்குதல், தனியார் கடைகளில் அதிக விலைக்கு விற்றல் என்பவற்ரைற அடிப்படையாகக் கொண்டு இந்த பதுக்கல்கள் இடம்பெற்றிருந்தது. கிளிநொச்சியில் சில தனியார் கடைகளில் ஒரு லீற்றர் பெற்றோல் 300 ரூபாய்க்கு கூட விற்பனை செய்யப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் மணித்தியாலயக்கணக்கில் நின்ற பலர் பெற்றோல் இல்லை என்றதும் ஏமாற்றதுடன் திரும்பிய சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.
ஆக, இந்தப் போராட்டம் என்பது ஒரு நாட்டின் வளத்தை வேறு நாட்டிற்கு விற்பனை செய்வதற்கு எதிரானது. அது ஒட்டுமொத்த இலங்கை மக்களின் பிரச்சனையும் கூட. ஆனால் ஒரு தொழிற்சங்கப் போராட்டத்துடன் அந்த போராட்டம் முடிந்து விட்டது. தொழிற்சங்கப் போராட்டம் ஒரு நாள் நடைபெற்ற நிலையிலேயே பல பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவை இன்னும் சில நாட்பகள் நீடித்து இருந்தால் முழு நாடும் முடங்கியிருக்கும் என்பதே உண்மை. இந்த நிலையில் அரசாங்கம் எமது நாட்டையும், இங்குள்ள வளங்களையும் கவனம் செலுத்தி நாட்டை அபிவிருத்தி செய்ய முன்வரவேண்மும். அதன் மூலமே எதிர்காலத்தில் இவ்வாறான தொழிற்சங்க போராட்டங்கள் ஏற்படுவதை தடுக்க முடியும்.
READ MORE | comments

கசிப்பு உற்­பத்­தி­யில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு 5 வரு­டங்­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்ட சிறை

கசிப்பு உற்­பத்­தி­யில் ஈடு­பட்­டார் என்ற குற் றச்­சாட்­டில் ஒரு­வ­ரை­யும் கசிப்பு உற்­பத்­திக்கு உத­வி­னார் என்ற குற்­றச்­சாட்­டில் மற்­றொ­ரு­வ­ரை­யும் பொலி­ஸார் கைது செய்­த­னர். அவர்­கள் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர்.
சாவ­கச்­சேரி நீதி­வான் மன்­றில் வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது.சந்­தே­க­ந­பர்­கள் இருவரும் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­ட­னர். கசிப்பு உற்­பத்­தி­யில் ஈடு­பட்­ட­வ­ருக்கு 4 வருட சிறைத் தண்­ட­னை­யும் அவ­ருக்கு உத­வி­யா­ள­ராக செயற்­பட்­ட­வ­ருக்கு ஒரு வருட சிறைத்­தண்­ட­னை­யும் விதித்து நீதி­வான் தீர்ப்பளித்­தார். இரு­வ­ருக்­கு­மான தண்­ட­னைக் காலம் 5 வரு­டங்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.
இதே­வேளை, எழுதுமட்டுவாழ் கரம்­ப­கம் பக­தி­யில் 180 மில்லி லீற்­றர் மற்­றும் 90 மில்­லி­லீற்­றர் கசிப்பை உடை­மை­யில் வைத்­தி­ருந்த இரு­வ­ருக்கு தலா ஆறு மாதங்­கள் சிறைத் தண்­டனை விதித்­துத் தீர்ப்­ப­ ளித்த நீதி­வான், அவர்­க­ளுக்­கான தண்­ட­ணைக் காலத்தை 5 வரு­டங்­க­ளுக்கு ஒத்­தி­வைத்­தார்.(
READ MORE | comments

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு அமேரிக்க மிசனில் நடைபெற்றது.நீண்ட இடைவெளிக்கு பின்னர் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டார்.
மத்திய குழுவில் உள்ள வடகிழக்கு மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.
அத்துடன் வடகிழக்கில் இடம்பெற்றுவரும் போராட்டங்கள் அவற்றினை தீர்த்துவைப்பற்கு அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
வடகிழக்கில் உள்ள காணிப்பிரச்சினைகள்,அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டதாக தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
READ MORE | comments

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு எதிராக கடும் எச்சரிக்கையை விடுத்து தனது விமானம் தாங்கி கப்பலையும் கொரிய தீபகற்பத்துக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ள வேளையில் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் வடகொரியா இன்று சனிக்கிழமை காலை நடுத்தர வீச்சுடைய ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கிறது.
வடகொரியாவுக்கு எதிராக ஐ நா கடும் பொருளாதர தடையை கொண்டுவரவேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று வெள்ளிக்கிழமை வலியுறுத்தி இருக்கின்ற நிலையிலும் இந்த சோதனை நடந்துள்ளது.
ஆனால் வடகொரியாவின் இன்றைய சோதனை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அமெரிக்காவும் வடகொரியாவும் கூறியுள்ளன. ஆனால் இதுதொடர்பில் வடகொரியா எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
இதேவேளை வடகொரியாவின் அணுஆயுத சோதனையை நிறுத்துவதில் அமெரிக்கா தோல்வி கண்டுள்ளதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இராணுவ பாணியில் எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துவந்த போதிலும் அவற்றை சற்றும் கருத்தில் கொள்ளாத வடகொரியா தொடர்ந்து ஆயுத சோதனைகளை நடத்திவருகிறது. தனது இரானுய்வ ரீதியிலான எச்சரிக்கைகளை வடகொரியா அலட்சியம் செய்துவரும் நிலையில் அமெரிக்கா சற்று மென்மையான போக்கை வடகொரியா தொடர்பில் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. அணு ஆயுத சோதனைகளை நிறுத்தும்பட்சத்தில் வடகொரியாவுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறும் அளவுக்கு அமெரிக்கா இறங்கியுள்ளது.
1
READ MORE | comments

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கெலை வழக்கில் சந்தேக நபராக கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
READ MORE | comments

லண்டனில் மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு- பெண்மணியொருவர் வயிற்றில் காயங்களுடன் கதறினார்

லண்டனின் வடமேற்கில் உள்ள விலெஸ்டன் என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள லண்டனின் காவல்துறையினர் பயங்கரவாத தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளான பெண் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர் குறித்து முக்கிய விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கென்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கiயில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள காவல்துறையினர் லண்டன் பாராளுமன்ற வீதி சம்பவத்திற்கும் இந்த தேடுதல் நடவடிக்கைகளிற்கும் தொடர்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
விலெஸ்டனில் உள்ள வீடொன்றை நீண்டநாட்களாக கண்காணித்து வந்ததாக தெரிவித்துள்ள காவல்துறையினர் வியாழக்கிழமை ஆயுதமேந்திய பொலிஸார் குறிப்பிட்ட வீட்டிற்குள் நுழைந்து மயக்கமருந்தை தெளித்த பின்னர் பெண்ணொருவர் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்
_95827255_willesden_raid_624
இதேவேனை கென்டில் 16 வயது சிறுவனும் 20 வயதான ஆணும் பெண்ணும் 43 வயது பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை விலெஸ்டன் பகுதியில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதன் மூலம் ஆபத்தொன்றை கட்டுப்படுத்தியுள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் பயங்கரவாத சதி முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை பயங்கரவாத நடவடிக்கையொன்றிற்கு திட்டமிட்டனர் என்ற அடிப்படையிலேயே கைதுசெய்துள்ளோம். அவர்கள் தற்போது தென்லண்டன் காவல் நிலையத்தில் உள்ளனர் எனவும் அதிகாhகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஹார்ல்ஸ்டன் வீதியில் வசிக்கும் 50 வயது நபர் ஓருவர் பெண்மணியொருவர் கைவிலங்குடன் வாகனத்தில் ஏற்றப்படுவதை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
மூகமூடியணிந்த துப்பாக்கி ஏந்திய நபர்களை நான் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியை சேர்ந்த இன்னொருவர் துப்பாக்கிசத்தங்களை கேட்டதாக தெரிவித்துள்ளார். அந்த வீட்டில் வசித்தவர்கள் முஸ்லீம்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்மணியொருவரிற்கு கையிலும் வயிற்றிலும் காயங்கள் ஏற்பட்டதாக மற்றுமொரு நபர் தெரிவித்துள்ளார்
சோமாலியாவை சேர்ந்த குடும்பமே அந்த வீட்டில் வசித்துவந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்த பெண் என்னை எனது ஆடையை எனது உடலை தொடவேண்டாம் என சத்தமிட்டதை பார்த்ததாகவும் ஓருவர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை காரணமாக அவரை கைதுசெய்யவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
_95821973_nw10.2
READ MORE | comments

உயர்தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று

உயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று வௌியிடப்பட உள்ளது.
விடைத்தாள் மீள் மதிப்பீட்டிற்காக 58,000 விண்ணப்பங்கள் கிடைத்திருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 2016 – 2017ம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர்களை தெரிவு செய்வதற்கான வெட்டிப் புள்ளிகள் மே மாதத்தின் இறுதிப்பகுதியில் வௌியிடுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 2016 – 2017ம் கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
தற்போது விண்ணப்ப படிவங்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
READ MORE | comments

மே தின ஊர்வலத்தில் 5,000 பஸ்கள்

மேதின ஊர்வலங்களுக்காக, அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், 5 ஆயிரம் பஸ்களைக் கோரியுள்ளன என்று, இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவிக்கின்றது.
எவ்வாறாயினும், பணம் செலுத்தப்பட்டதன் பின்னரே, உரிய பஸ்கள் கையளிக்கப்படும் என்று, சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரி பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்தார்.
அந்த வகையில், 100 கிலோமீற்றர் தூரத்துக்கு குறைவாயின் பஸ் ஒன்றுக்காக 7,500 ரூபாயும் 100க்கும் 150க்கும் இடைப்பட்ட கிலோமீற்றருக்காக 11,000 ரூபாயும், 250 கிலோமீற்றருக்கு 13,500 ரூபாயும், 350 கிலோமீற்றருக்கு 16,500 ரூபாயும் 750 கிலோமீற்றருக்கு மேற்பட்டால் 35,000 ரூபாயும் அறிவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
READ MORE | comments

எதிர்வரும் நாட்களில் மழை பெய்யும்

Friday, April 28, 2017

நாட்டில் சில மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி முதல் இந்த மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேல் , சபரகமுவ , தென் , மத்தி மற்றும் ஊவா மாகாணங்களில் இவ்வாறாக மழை பெய்யக் கூடுமென தெரிவிக்கப்படுகின்றது
READ MORE | comments

கணவனை வெட்டி கொன்ற மனைவி

மனைவியினால் தனது கணவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பமொன்று தெல்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இருவருக்கும் இடையே இடம்பெற்ற முறுகல் நிலைமையை அடுத்து கூரிய ஆயுதத்தால் மனைவி கணவனை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். -
READ MORE | comments

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதத்தில்

2016/2017 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப் புள்ளிகளை மே மாத இறுதியில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தற்போது, இது தொடர்பான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, குறித்த ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா கூறியுள்ளார்.
புதிய கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் நடவடிக்கை இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டதோடு, இதன்பொருட்டு 71,111 பேர் வரை விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
READ MORE | comments

அரசுக்கு அழுத்தம் கொடுக்கமுடியாவிட்டால் மக்களுடன் இணைந்து போராட வாருங்கள் -பட்டதாரிகள் அழைப்பு

Thursday, April 27, 2017

தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பில் பாராமுகமாக இருப்பது பிரஜைகள் மீது அரசாங்கம் வைத்துள்ள அலட்சிய போக்கினையே காட்டுவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 66வது நாளாகவும் இன்று வியாழக்கிழமை நடைபெற்றுவருகின்றது.
தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி காந்தி பூங்கா முன்பாக இரவு பகலாக தொடர்ச்சியாக சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டுகொண்டுவருகின்றனர்.
தமது நியாயமான போராட்டத்திற்கு இதுவரையில் உறுதியான பதில்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்கொண்டுசெல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பட்டதாரிகள் தெரிவித்தனர்.
இந்தவேளையில் இன்று நடைபெறும் காணாமல்போன உறவினர்களின் ஹர்த்தல் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ள அவர்கள் அவர்களின் நியாயமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்த ஆட்சிக்காலத்திலும் வீதியில் இறங்கி மக்கள் தொடர் போராட்டங்களை நடாத்திவரும் நிலையில் அது தொடர்பில் அரசாங்கம் பாராமுகமாக இருப்பது அவர்கள் பிரஜைகள் மீது வைத்துள்ள அலட்சியப்போக்கினையே காட்டுவதாக இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.
இன்று காhணமல்போனவர்களின் உறவினர்கள், பட்டதாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள்,நிலமீட்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.அவை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.
ஒரு மாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காகவே இந்த நல்லாட்சியை நாங்கள் ஏற்படுத்தினோம்.ஆனால் இதுவரையில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை.மீதோட்ட குப்பை பிரச்சினையை தீர்க்குமாறு அந்த மக்கள் 2011ஆம் ஆண்டில் இருந்துபோராடிவருகின்றனர்.அந்த போராட்;டம் அடக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுடன் குப்பைகள் கொட்டப்பட்டன.இன்று பலரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதன் பின்னரே அந்த மக்கள் எதற்காகபோராடினார்கள் என்று உணர்ந்துள்ளனர்.
அதுபோன்றே இந்த பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வினைப்பெறுவதற்கு எத்தனை உயிர்கள் தேவையென்பது கேள்விக்குறியாகவுள்ளது.இன்று நடைபெறும் ஹர்த்தால் போராட்டமானது இந்த அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள அவநம்பிக்கையினையே வெளிப்படுத்துகின்றது.
தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்னும் பாராமுகமாக இருக்காமல் அரசுக்கு அழுத்தங்களை வழங்கவேண்டும்.எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு அரசுக்கு தலைசாய்ந்துகொண்டிருக்காமல் அழுத்தங்களை வழங்கவேண்டும்.இல்லாவிட்டால் மக்களுடன் வீதியில் இறங்கி அவர்களுக்கான தீர்வினைப்பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றார்.
DSC06612DSC06614DSC06618DSC06625DSC06628DSC06629DSC06631DSC06634DSC06640DSC06642DSC06643DSC06646DSC06647DSC06649

READ MORE | comments

கடலில் மூழ்கியது ரஸ்ய புலானய்வு கப்பல்

துருக்கி கடற்பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றை தொடர்ந்து ரஸ்ய புலனாய்வு கப்பலொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஸ்யாவின் லீமன் என்ற கப்பலே கடலில் மூழ்கியுள்ளதாகவும் அதிலிருந்த 78 பேரும் மீட்கப்பட்டடுள்ளாதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி பிரதமர் இந்த சம்பவம் குறித்து கவலை வெளியிட்டார்.
ரஸ்ய பாதுகாப்பு தரப்பு இந்த விபத்தினால் உயிரிழப்புகள் ஏற்படவி;ல்லை என குறிப்பிட்டுள்ளது
READ MORE | comments

தென்கொரியாவில் நிறுவப்படும் ‘தாட்’ ஏவுகணை எதிர்ப்பு தொகுதியை வாபஸ் பெறுமாறு சீனா அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை

வடகொரியா அணுஆயுத தாக்குதல் நடத்தும்பட்சத்தில் தென்கொரியாவை பாதுகாக்கும்பொருட்டு அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலம் அங்கு கொண்டுசெல்லப்படும் சர்ச்சைக்குரிய தாட் (THAAD) என்ற ஏவுகணை எதிர்ப்பு தொகுதியை வாபஸ் பெறுமாறு சீனா இன்று புதன்கிழமை கடுமையாக எச்சரித்துள்ளது.
ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் அவற்றை நடுவானிலேயே எதிர்கொண்டு அவற்றின் வெடிக்கும் சக்தியை இல்லாமல் செல்லும் ஆற்றலை அல்லது அவற்றை நிர்மூலம் செய்யும் ஆற்றலை கொண்டது அமெரிக்கா 2008 ஆம் ஆண்டு தயாரித்த தாட் ஏவுகணை எதிர்ப்பு திட்டம்.
தாட் ஏவுகணையின் சில பாகங்கள் இன்று தென்கொரியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டு கிராமங்கள் வழியாக கொண்டுசெல்லப்பட்டது. இதன்போது அங்கு கிராமவாசிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
A U.S. military vehicle which is a part of Terminal High Altitude Area Defense (THAAD) system arrives in Seongju, South Korea, April 26, 2017. Kim Jun-beom/Yonhap via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. SOUTH KOREA OUT. FOR EDITORIAL USE ONLY. NO RESALES. NO ARCHIVE.
தென்கொரியாவில் இன்று புதன்கிழமை தாட் ஏவுகணை தொகுதியின் ஒரு பகுதி கொண்டுசெல்லப்படும் காட்சி
தென் கொரியாவில் நிறுத்தப்படும் தாட் ஏவுகணை தனது பகுதிகள் வரை பாயக்கூடிய ஆற்றல் கொண்டாடகு என்று சீனா அஞ்சுகிறது.
சீனாவின் வெளிநாட்டமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் சீனாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளையும் அமெரிக்காவும் தென் கொரியாவும் உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் தென் கொரியாவில் தாட் ஏவுகணை தொகுதியை நிறுவும் திட்டத்தை உடனடியாக அமெரிக்கா நிறுத்தி அந்த ஏவுகணை உபகரண தொகுதியை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்றும் சீனா கடுமையாக வலியுறுத்துகிறது என்று கூறினார்.
mfc-thaad-info-web-page-high-ground-hr
அமெரிக்காவின் யு எஸ் எஸ் வின்சன் என்ற விமானம் தாங்கி கப்பல் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு ஓரிரு நாட்களில் தென் கொரியாவை அடையவிருக்கும் வேளையில் நேற்றைய தினம் வடகொரியா மிகப்பெரும் இராணுவ ஒத்திகை ஒன்றை நடத்தியது. பதிலுக்கு அமெரிக்க மற்றும் தென்கொரிய துருப்புக்களும் இராணுவ ஒத்திகை ஒன்றை நடத்தி இருக்கின்றன.
வடகொரியாவின் அணுஆயுத சோதனைகள் மற்றும் அதன் அணுஆயுத தயாரிப்புக்களை சீனா கண்டித்துவந்தாலும் வடகொரியாவின் ஒரே பிரதான நட்பு நாடாக சீனா திகழ்கின்றது. வடகொரியா இனிமேலும் அணு ஆயுத சோதனையை நடத்தினால் அதனுடனான தனது நட்பு மீளவும் திரும்பமுடியாதவகையில் பாதிக்கபப்டும் என்று நேற்று எச்சரித்துள்ளது.
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |