சூப்பர் மூன்: சிவப்பு நிறத்தில் மாறிய நிலவு- நாசாவின் நேரலை காட்சிகள்

Wednesday, January 31, 2018

சுமார் 151 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதோன்றக்கூடிய அரிய சந்திர கிரகணத்தின் நேரலை காட்சிகளை அமெரிக்காவின் விண்வெளிக் கழகமான நாசா நேரலை செய்து வருகிறது.
அதனை கீழே பார்க்கலாம். -(3)



READ MORE | comments

சமஸ்டி என்ற சொல் இல்லாவிட்டாலும் அதையொத்த ஆட்சி முறை இருக்கவேண்டும்: இரா.சம்மந்தன்

Tuesday, January 30, 2018

இடைக்கால அறிக்கையில் சமஸ்டி என்ற சொல் பாவிக்கப்படாவிட்டாலும் சமஸ்டி முறையிலான ஆட்சி முறையாக இருக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
வவுனியாவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டம் கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றபோது அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
முஸ்லீம் மக்களுடன் பேசி இணக்கப்பாட்டுக்கு வந்து பிரச்சனைகளை தீர்க்கவேண்டிய கடமைப்பாடு எமக்குள்ளது. அதில் நாம் எல்லோரும் பங்கெடுக்கவேண்டும். எல்லோரும் ஒன்றிணையவேண்டும். தந்தை செல்வாவின் கருத்துக்கள் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு சார்பாகவே இருந்தது. அதை முஸ்லீம் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
செல்வா பண்டா ஒப்பந்தமாக இருந்தாலும் சரி டட்லி செல்வா ஒப்பந்தமாக இருந்தாலும் சரி வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்றே உள்ளது. ஆகவே வடக்கு கிழக்கை இணைப்பதற்கு தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் ஒத்துழைத்து ஒருவரின் உரிமையை ஒருவர் மதித்து நல்லதொரு முடிவுக்கு வரவேண்டும்.
இடைக்கால அறிக்கையில் இணைப்பு இடம்பெறலாம். இடம்பெறாமல் இருக்கலாம் இணைப்பு நடைபெறுவதாக இருந்தால் சர்வஜனவாக்கெடுப்பு இடம்பெறவேண்டும் என்ற 3 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சமஸ்டி என்ற சொல் பாவிக்கப்படவில்லை. ஆனால் அது சமஸ்டி முறையிலான ஆட்சி முறையாக இருக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். சமஸ்டிக்கு பொருத்தமான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக மத்தியிலும் மாகாணத்திலும் அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். எனவே அதில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். அது தொடர்பில் நாம் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்பட்டு வருகின்றோம்.
இந் நிலையில் இதை தூக்கி எறிந்து விட்டு இதில் எதுவும் இல்லை என்று சொல்லும் நிலை தற்போது இல்லை. இதை தொடர்ந்து எமக்கு ஏற்புடையதாக மக்களுக்கு ஏற்புடையதாக மாற்றவேண்டியது எமது பொறுப்பு. ஆகவே அந்த பொறுப்பை நிறைவேற்றாமல் கவலையீனமாக இருக்கமுடியாது.
READ MORE | comments

தயா மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தியவர் பிணையில்விடுதலை

யாழ்ப்பாணம் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் கத்தி, பொல்லுடன் அத்துமீறி நுழைந்து அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டரைத் தாக்கிய வயோதிபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்புக் கலையகத்துக்கு கடந்த 9ஆம் திகதி மாலை வயோதிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார்.அவரது கைகளில் வெட்டுக்கத்தி மற்றும் பொல்லு என்பன இருந்தன. கலையகத்தின் வரவேற்பு அறைக்குள் நுழைந்த அவர் அங்கு பணியிலிருந்த செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வே.தயாநிதியைத் தாக்கினார்.
அடாவடியில் ஈடுபட்ட முதியவரைத் பிடித்த தனியார் நிறுவனப் பணியாளர்கள், அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்திருந்தனர். விசாரணைகளின் பின்னர் முதியவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என காவல்துறையினரihல் தெரிவிக்கப்பட்டதன அடிப்படையில் நீதிமன்றின் உத்தரவில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
மேலும் முதியவர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் இன்று செவ்வாய்க்கிழமைவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் முதியவர் இன்று மன்றில் முற்படுத்தப்பட்ட வேளை வழக்கை விசாரணை செய்த யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன், சந்தேகநபரை 2 ஆள் பிணையில் விடுக்க உத்தரவிட்டார். அத்துடன் வழக்கு விசாரணை வரும் மார்ச் 20ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
READ MORE | comments

உலகளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்கும் கனடிய தமிழர்!

உலக மாஸ்டர் பேக்கர் (World Master Baker) சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா வாழ் இலங்கை தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள தலை சிறந்த வெதுப்பக உற்பத்தியாளர்களை கொண்ட Masters de la Boulangerieக்கு எதிராக, இலங்கை தமிழ் இளைஞன் இறுதி போட்டியை நிறைவு செய்யவுள்ளார்.
ACE வெதுப்பகத்தின் சிரேஷ்ட இயக்குனர் மார்கஸ் மரியதாஸ் என்பவரே இறுதி போட்டியை நிறைவு செய்யவுள்ளார். அவர் பாரம்பரிய ஐரோப்பிய முறைகளில் தனது நிபுணத்துவத்தை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து மரியதாஸ் கருத்து வெளியிடுகையில் -" நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன் மற்றும் சர்வதேச நடுவர்களுக்கு மத்தியில் போட்டியிடுவதென்பது உற்சாகமாக, உள்ளது. சர்வதேச நடுவர்களை வெற்றி கொள்வதென்பது ஒரு வாடிக்கையாளரை வென்றது போலாகும். புதுமையான படைப்புக்களை அவர்கள் எதிர்பார்ப்பார்கள். சிறந்த சுவையான தயாரிப்புகளை கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்தார்.
இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக 1995 ஆம் ஆண்டு மரியதாஸ் கனடா சென்றார். டொரொன்டோவில் வாழ்ந்து வருகிறார். கணக்கியல் படிக்கும் போது, அவர் ACE வெதுப்பகத்தில் பகுதி நேர வேலையில் இணைந்தார். மரியதாஸிற்கு வெதுப்பக தொழில் அனுபவம் இல்லாத போதிலும், எண்களை கையாளக்கூடிய திறன் அவரிடம் காணப்பட்டது. வெதுப்பகத்தில் அவரின் திடமான செயற்பாடுகள் காரணமாக சிரேஷ்ட இயக்குநராக தரமுயர்ந்தார். அதன் பின்னர் வெற்றிகரமாக பணியை முன்னெடுத்தவர் 400க்கும் அதிகமான பாண்களை தயாரித்தார்.
தற்போது உலகின் தலை சிறந்த பேக்கர் போட்டின் இறுதி போட்டி வரை முன்னேறியுள்ளார்.
READ MORE | comments

ரஸ்யா போன்று சீனாவும் அமெரிக்காவிற்கு ஆபத்தானது- சிஜஏ தலைவர் எச்சரிக்கை

ரஸ்யா போன்று சீனாவும் அமெரிக்காவிற்கான மிகப்பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது என சிஐஏயின் தலைவர் மைக்பொம்பியோ பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் இரகசிய நடவடிக்கைகள் போன்று மேற்குலகில் தனது செல்வாக்கை விஸ்தரிப்பதற்காக சீனா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும் ஆபத்தானவையாக காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளாhர்.
ரஸ்யாவின் நடவடிக்கைகளை விட பாரிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான திட்டங்கள் சீனாவிடம் உள்ளன என தெரிவித்துள்ள அவர் அமெரிக்காவின் வர்த்தக தகவல்களை திருடுவதற்கு சீனா மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளிற்குள் ஊருடுவுவதற்காக அது மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் உதாரணமாக காட்டியுள்ளார்.
ரஸ்யாவை விட சீனாவிடம் தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பலமும் வாய்ப்பும் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குலகின் மீது அழுத்தங்களை திணிப்பதற்கான சீனாவின் முயற்சிகளை மேற்குலம் கூட்டாக எதிர்கொள்ளவேண்டும் என சிஐஏயின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
READ MORE | comments

நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் -வளிமண்டலவியல் திணைக்களம்


இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தையடுத்து நாடெங்கிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையை அண்டியுள்ள வான்பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டின் அநேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். விசேடமாக கிழக்கு – ஊவா மாகாணங்களிலும், மாத்தளை – பொலன்னறுவை மாவட்டங்களிலும் ஏனைய சில இடங்களிலும் அடைமழை பெய்யலாம். நாட்டின் வடபாகத்திலும், அம்பாந்தோட்டை- மாத்தறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்
READ MORE | comments

125 பேருடன் ஐ.தே.க அரசாங்கத்தை அமைக்க தயார்

125 பேருடன் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பிரதி பொதுச் செயலாளரான அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தற்போது எதிர்க்கட்சியிலுள்ள உறுப்பினர்கள் உள்ளிட்ட மற்றைய கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இதன்படி 125 பேர் தங்களுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் எந்தவேளையிலும் அரசாங்கத்தை அமைப்பதற்கு தயராகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணமில்லை! - தேர்தல் ஆணைக்குழு

பாராளுமன்றத்தில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பான விவாதம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதுவித தீர்மானமும் எடுக்கும் அதிகாரமில்லை. ஆயினும் தேர்தலை தள்ளிப்போடுவது தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள பிணைமுறி தொடர்பான அறிக்கையும், அரச பொது சொத்துக்கள் ஊழல் தொடர்பான அறிக்கையும் தொடர்பாக பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க நடக்கவிருக்கும் எட்டாம் திகதி விவாதம் தொடர்பாக அதனை நிறுத்தவோ அல்லது வேறு தீர்மானம் வழங்கவோ தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதுவித அதிகாரமும் இல்லை.
மேலும் சபாநாயகர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களிடம் தேர்தல் பிரச்சாரம் நிறைவுற்று மௌனகாலம் நிலவும் எட்டாம் திகதியை தவிர்த்து அதற்கு முன் அல்லது தேர்தலுக்கு பின் பாராளுமன்ற விவாதத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கும் நிலைப்பாட்டிலேயே தேர்தல் ஆணைக்குழு காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.
READ MORE | comments

152 வருடங்களின் பின் முழு வட்ட சந்திரனையும், பூரண சந்திர கிரகணத்தையும் நாளை லங்கை மக்கள் பார்வையிடலாம்

கடந்த 1866 ஆம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக முழு வட்ட சந்திரனையும், பூரண சந்திர கிரகணத்தையும் நாளை புதன்கிழமை தென்படும் பௌர்ணமி தினத்தன்று இலங்கை மக்கள் பார்வையிடலாம்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் சந்தன ஜயரட்ன இதுதொடர்பில் தெரிவிக்கையில்,
நீல நிலவு என்றழைக்கப்படும் இந்த சந்திரனை எந்த தடங்கலும் இன்றி முழுமையாக இலங்கையிலுள்ளவர்களுக்கு காணக் கிடைக்கின்றமை சிறப்பம்சமாகும்.ஏனைய பௌர்ணமி தினங்களை விட 14 சதவீதம் பெரிதாகவும் 30 சதவீதம் வெளிச்சமாகவும் இந்த சந்திரன் தென்படும்.
சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வருகின்றமையே இதற்கான காரணமாகும் என்று தெரிவித்தார்.குறித்த கிரகணம் பிற்பகல் 4.21 இற்கு தென்படும். பூரண சந்திர கிரகணம் மாலை 6.22 முதல் 7.38 வரை தென்படும். இரவு 7.31 முதல் 8.41 வரை பாதியளவில் சந்திரன் தென்படவுள்ளது. இரவு 9.31 இற்கு சந்திர கிரகணம் நிறைவடையும்
READ MORE | comments

Government accused of failing to fulfill pledge on PTA

Monday, January 29, 2018

The Sri Lankan Government has failed to fulfill its pledge to abolish the abusive Prevention of Terrorism Act (PTA), Human Rights Watch said in a report released today. For decades, the PTA has been used to arbitrarily detain suspects for months and often years without charge or trial, facilitating torture, and other abuse.
“The Sri Lankan government has been all talk and no action on repealing the reviled PTA,” said Brad Adams, Asia director at Human Rights Watch. “Replacing this draconian counterterrorism law with one that meets international standards should be an urgent priority if the government is serious about protecting human rights.”
The 46-page report, “Locked Up Without Evidence: Abuses under Sri Lanka’s Prevention of Terrorism Act,” documents previous and ongoing abuses committed under the PTA, including torture and sexual abuse, forced confessions, and systematic denials of due process. Drawing on interviews with former detainees, family members, and lawyers working on PTA cases, Human Rights Watch found that the PTA is a significant contributing factor toward the persistence of torture in Sri Lanka. The 17 accounts documented in the report represent only a tiny fraction of PTA cases overall, but they underscore the law’s draconian nature and abusive implementation.
The PTA was enacted in 1979 to counter separatist insurgencies, notably the Liberation Tigers of Tamil Eelam (LTTE), and the law was widely used to detain hundreds of people during the country’s 26-year-long civil war. Yet while other emergency regulations have lapsed since the conflict ended in May 2009, the PTA remains in effect. The Sri Lankan government arrested at least 11 people under the PTA in 2016 for alleged terrorist activities.
The PTA allows arrests without warrant for unspecified “unlawful activities,” and permits detention for up to 18 months without producing the suspect before a court. Human Rights Watch has received several reports of people detained for a decade or more without access to legal recourse, who were subsequently acquitted or released without charge, yet received no compensation, reparations, or apologies from the government. Government figures released in July 2017 indicate that 70 prisoners have been held in pretrial detention under the PTA for more than five years, and 12 for over 10 years.
Many of those detained under the PTA described being tortured to extract confessions. Of the 17 individuals whose cases are detailed in the report, 11 reported beatings and torture. Human Rights Watch has previously documented cases where security forces raped detainees, burned their genitals or breasts with cigarettes, and caused other injuries through beatings and electric shock. A senior judge responsible for handling PTA cases said he was forced to exclude confession evidence in more than 90 percent of cases he had heard in 2017 because it was obtained through the use or threat of force. Former detainees frequently suffer from psychological and physical trauma as a result of their incarceration and ill-treatment in custody, Human Rights Watch said.
The PTA provides immunity for government officials responsible for abuses if deemed to have been acting in good faith or fulfilling an order under the act, which gives broad cover to security force personnel to engage in torture and other abuses. Numerous reports from United Nations special procedures have documented similar findings on the grave impact of the PTA. The then-special rapporteur on counterterrorism, Ben Emmerson, said after his July 2017 visit that “the use of torture has been, and remains today, endemic and routine, for those arrested and detained on national security grounds.” His post-mission report found that 80 percent of those arrested under the PTA in 2016 reported being subject to torture and other ill-treatment following their arrest. In October 2017, the special rapporteur on transitional justice, Pablo de Greiff, called for all PTA convictions that were based solely on the accused’s confession to be reviewed.
After a two-week country visit in December, the UN Working Group on Arbitrary Detention called for an immediate repeal of the PTA, referring to it as a “key enabler” of abuse. The European Union also reiterated its call for the PTA to be repealed at an EU-Sri Lanka Joint Commission meeting in January 2018.
The Sri Lankan government agreed to a resolution at the UN Human Rights Council in October 2015 outlining a series of commitments on accountability and justice. Yet more than two years on, it has largely failed to implement key pledges on security sector reform, including repealing the PTA. The UN high commissioner for human rights, Zeid Ra’ad Al Hussein, highlighted Sri Lanka’s lack of progress in his opening remarks at the 36th session of the Human Rights Council in September 2017, calling on the government to realize that its obligations are not a mere “box-ticking exercise.” At Sri Lanka’s Universal Periodic Review (UPR) in Geneva in November, several UN member countries pressed the government to implement safeguards against torture and repeal the PTA.
While the government of President Maithripala Sirisena has taken some steps to charge or release PTA detainees, it has not put forward a plan to provide redress for those unjustly detained, or addressed the issue of detainees charged and prosecuted solely on the basis of coerced confessions obtained during detention.
Although the government has floated several drafts of a new counterterrorism law, none have complied with international human rights standards. In May 2017, the cabinet approved with little public consultation a draft Counter Terrorism Act (CTA) to replace the PTA. Although the bill improves upon the PTA in some ways, it still allows prolonged arbitrary detention, enabling rights abuses such as torture. It also includes broad and vague definitions of terrorist acts, which could be used to criminalize peaceful political activity or protest. Ultimately, the proposed law falls far short of the government’s commitments to the Human Rights Council, and suggests it does not intend to fully relinquish the broad and too easily abused powers available to it under the PTA.
Rather than enacting a law that will perpetuate the wrongs committed for decades under the PTA, the government should consult with Sri Lankan victim groups, human rights organizations, and international experts to draft a law that protects both national security and human rights. This should be undertaken as one component of broader security sector reforms, including accountability for abuses carried out under the PTA, Human Rights Watch said.
“The 2015 Human Rights Council resolution did not mean an end to international scrutiny of Sri Lanka,” Adams said. “Rather, it offered tangible benchmarks that UN member countries should draw on to highlight Sri Lanka’s lack of progress and press for needed reform.”
READ MORE | comments

தலைமன்னார் கடலில் 7 கிலோ எடையுள்ள 120 தங்கக் கட்டிகளுடன் இருவர் கைது!

தங்கக்கடத்தலில் ஈடுபட்ட இரு இலங்கையர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இருவரும் தலைமன்னார் பகுதியிலுள்ள உறுமலை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 70 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 12 கிலோ எடையுள்ள 120 தங்கக் கட்டிகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலதிக விசாரணைகளையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவரையும் பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
READ MORE | comments

தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இனஅழிப்புக்கு இணையானது! - ஐ.நாவின் முன்னாள் அதிகாரி

இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், இன அழிப்புக்கு இணையானது” என, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி பெஞ்சமின் டிக்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில், விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி பகுதியில், ஐ.நா அலுவலகத்தின் தகவல் தொடர்புப் பிரிவு மேலாளராக பெஞ்சமின் டிக்ஸ் கடமையாற்றினார்.
2004 முதல் 2008ஆம் ஆண்டுவரையான 4 ஆண்டுகள் பணியாற்றிய இவர், அங்கு நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான டிக்ஸ், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் இலக்கியத் திருவிழாவில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கிடையே அவர் பிடிஐ செய்தியாளரிடம் வழங்கிய செவ்வியின் போதே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது, இரு தரப்பினரும் நிகழ்த்திய குற்றங்கள் மிகக் கொடூரமானவை. குறிப்பாக, இராணுவத்தின் செயல்கள் போர்க் குற்றத்துக்கு நிகரானவை. இன்னும் சொல்லப்போனால், இன அழிப்புக்கு இணையானவை. இலங்கை இராணுவம் இனப்படுகொலை செய்துள்ளது.
ஆனால், தமிழர்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்தி உள்ளோம் என்பதை, இராணுவம் ஏற்க மறுக்கிறது. தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்ததாக கூறிக்கொள்கிறது. தமிழர்களைப் பொறுத்தவரை, அது விடுதலை அல்ல, அவர்களுக்கான பேரழிவு. போர் ஓய்ந்த பிறகும், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவர்களது அடையாளம் மற்றும் வரலாறு ஆகியவற்றை அழிக்கும் பணியில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால், முன்பைவிட இப்போது நிலைமை சற்றுப் பரவாயில்லை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

வடக்கு - கிழக்கில் ஆகக் கூடுதலான அபிவிருத்தியை ஏற்படுத்த நடவடிக்கை

வடக்கு - கிழக்கில் ஆகக் கூடுதலான அபிவிருத்தியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி நெடுஞ்சாலைகள்  அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இங்கு உட்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்துள்ளன. வடக்கு - கிழக்கின் அபிவிருத்திக்காக இந்தியாவின் உதவியை பெறும் விசேட பெக்கேஜ் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 475 கிராமிய பாதைகள் காப்பட் முறையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியின் அனுகூலங்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில், இலங்கையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலைகளையும், பாலங்களையும் மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கப் போவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.
READ MORE | comments

நாளை மறுதினம் வானில் நிகழவுள்ள மூன்று அதிசயங்கள்

மூன்று அரிய சந்திர நிகழ்வுகளான, முழு சந்திர கிரகணத்துடன் கூடிய இரத்த நிலவு, சுப்பர் நிலவு, நீல நிலவு என்பன, 152 ஆண்டுகளுக்குப் பின்னர், நாளை மறுநாள் ஒரே நாளில் வானத்தில் தோன்றவுள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான அலகின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன,“இந்த மூன்று அரிய சந்திர நிகழ்வுகளையும் ஒருங்கே, நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்குப் பின்னர் கிழக்குத் திசையில் காண முடியும். 1866ஆம் ஆண்டுக்குப் பின்னர், நிகழும் அரிய நிகழ்வு இதுவாகும்.
இதன்போது சந்திரன், பூமிக்கு நெருக்கமாக வருவதால், கடல் அலைகள் உயரமாக மெலேழும்.இதுபோன்ற வானியல் நிகழ்வுகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட போது, பூமி அதிர்ச்சிகளோ, வேறு இயற்கை அனர்த்தங்களோ ஏற்பட்டதாக பதிவாகவில்லை.
அன்றைய நாளில் பூமி அதிர்ச்சி, ஆழிப்பேரலை, சூறாவளி ஏற்படும் என்று கூறப்படுவது வெறும் வதந்திகளேயாகும்.முழு அளவிலான சந்திர கிரகணம் இரத்த நி்லவு என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், சந்திரன் பூமியின் நிழலில் முழுமையாக மறைக்கப்படும் போது செந்நிறமாக காட்சியளிக்கும்.
சந்திரன், பூமிக்கு மிக நெருக்கமாக வரும் போது, அது சுப்பர் நிலவு என்று அழைக்கப்படுகிறது.ஒரே மாதத்தில் வரும் இரண்டு முழு நிலவுகளில், இரண்டாவதாக வரும், முழு நிலவு, நீல நிலவு என்று அழைக்கப்படும். ஆனால் இது நீல நிறத்தில் காட்சியளிக்காது.
இந்த மூன்று அரிய நிகழ்வுகளும் ஒரே நாளில்- வரும் 31ஆம் நாள் இடம்பெறவுள்ளது.இலங்கையில் முழு சந்திர கிரகணத்தை, மாலை 6.15 மணியில் இருந்து பார்வையிட முடியும்.ஆனால் இலங்கை நேரப்படி மாலை 4.21 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகி, 9.38 மணியளவில் நிறைவடையும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

செல்ஃபி எடுத்த வெளிநாட்டு யுவதிகள் படுகாயம்

திருகோணமலை, உட்துறைமுக வீதியில் மோட்டார்  சைக்கிளில் பயணித்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு, நேற்று படுகாயமடைந்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

 இவ்வாறு காயமடைந்தவர்கள், அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 27, 28 வயது பல்கலைக்கழக யுவதிகள் எனவும் அவர்கள் இருவரும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து கல்வி தொடர்பிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, திருகோணமலை வந்த மேற்படி யுவதிகள், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அலைபேசியில் செல்ஃபி எடுத்த வேளை, முன்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் துறைமுக பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
READ MORE | comments

இரண்டு கோடி விவகாரம்: நடந்தது இது தான் எம்.ஏ.சுமந்திரன் விளக்கம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட இரண்டு கோடி ரூபாய் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே இவ்வாறு விளக்கமளித்துள்ளார். அவர் அங்கு தெரிவித்ததாவது,
துரதிஸ்ட வசமாக சில பொய்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு தரப்பட்டுள்ளது. பொய்களுக்கு கொடுக்கின்ற விளக்கம், பொய்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் கொடுக்கப்படுவதில்லை. இதை எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பொய்கள் எப்படியானவை என்பதை விளங்கப்படுத்துவதற்காக கொடுக்கப்படுகின்ற விளக்கம். ஏனென்றால் இப்படியான பொய்களை சொல்பவர்கள் எப்படியானவர்கள் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது.
சுமந்திரன் மந்திரியாக இருந்தார் என்று எல்லா பத்திரிகைகளும் பிரசுரித்தது. மந்திரியானால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டும். அந்த விளக்கமும் தெரியாமல் அப்படியொரு பொய். ஒரு வீடு கொடுக்கப்பட்டுள்ளதாக திரு சுரேஸ் பிறேமச்சந்திரன் சொன்னார். நான் அப்படி என்றால் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கிறேன் என சொன்னேன். அதற்கு பிறகு ஒரு விலாசத்தையும் சொல்கிறார். நான் போய் பார்த்தேன். அங்கே இருப்பது பங்களாதேஸ் உயர் ஸ்தானிகரது அலுவலகம். நோர்வே உயர் ஸ்தானிகரது வீடு. அவுஸ்ரேலிய மற்றும் சுவிஸ்லாந்து உயர் ஸ்தானிகரது வீடு. அவர் சொன்ன ஒரு வீட்டையும் நான் கண்டு பிடிக்க முடியவில்லை. சொல்கிற பொய்யை அப்பட்டமாக ஒரு வித கூச்சமும் இல்லாமல் பகிரங்கமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தான் வரவு செலவுத் திட்டத்திற்கு தலா இரண்டு கோடி லட்சம் கொடுக்கப்பட்டதாக திரு நடேசு சிவசக்தி வவுனியாவில் வைத்து சொல்லியிருக்கிறார்.
நடேசு சிவசக்தி என்ற பாராளுமன்ற உறுப்பினர் இதற்கு முதல் பல வரவு செலவுத் திட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச காலத்தில் 2010 ஆம் ஆண்டு ஆதரவாக வாக்களித்தவர். இந்த புதிய அரசாங்கத்தில் இதற்கு முதல் இரண்டு தடவைகள் ஆதரவாக வாக்களித்தவர். அவரிடம் நாங்கள் கேட்க வேண்டிய கேள்வி ஆதரவாக வாக்களிப்பதற்கு லஞ்சம் வாங்கித் தான் வாக்களிப்பதாக இருந்தால் இதற்கு முன்னர் நீங்கள் ஆதரவாக வாக்களித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வளவு பணம் லஞ்சமாக வாங்கினீர்கள் என்பதை நீங்கள் மக்களுக்கு சொல்ல வேண்டும்.
உளவு வேலைக்களாக ஒரு அடுக்குமாடி வீடொன்றை இங்கு உங்களுக்கு கொடுத்துள்ளனர். உங்களுக்கும், ஈபிடிபிக்கும், றிசாட் பதியுதீனுக்கும் இங்கு விடுதி வழங்கப்பட்டிருக்கிறது தானே. அதை ஒரு சில நாட்களுக்கு முன்னர் வரை ஒரு வித வாடகையும் இல்லாமல் வைத்திருந்தீர்கள் தானே. தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டு அதை மீள கையளிக்குமாறு சொல்கிற வரைக்கும் அதை வைத்திருந்தீர்கள் தானே. இப்படியானவர் எந்த துணிச்சலோடு இப்படியான பொய்களை திருவாய் மலர்கிறார். சில பத்திரிகைகள் எழுதுகின்றன சிவசக்தி ஆனந்தன் இப்படி சொல்லிற்றார். கூட்டமைப்பு எம்.பிமார் வித்தியாசமான விளக்கம் சொல்கிறார்கள். அதனால் அவர் சொல்வதில் ஏதோ உண்மை இருக்க வேணடுமாம். நானும் படித்து பார்த்தேன். அந்த இரண்டு, மூன்று விளக்களையும் ஒரு வித்தியாத்தையும் காணல.
திரு சிறிதரன் எங்களுக்கு ஒருவரும் கையில் இரண்டு கோடி தரவில்லை என்று சொல்லியிருக்கிறார். அது சரி. ஒருவருடைய கையிலும் பணம் கொடுக்கப்படவில்லை. திரு சேனாதிராஜா எப்படி செலாவனது என பட்டியல் கொடுத்திருகிறாராம் . அதனால் அது முரண்பட்ட செய்தியாம். மாவட்ட செயலகம் அதனை எப்படியாக செலவு செய்கின்றது என்பதையே அவர் சொல்லியிருக்கிறார். அவர்கள் கையில் தந்தார்கள். நான் இப்படி செலவு செய்திருக்கின்றேன் என்றா சொல்லியிருக்கிறார் இல்லையே. திரு சித்தார்த்தன் வவுனியாவில் சொல்லியிருக்கிறார் தனக்கு முதலில் தெரியாது. நான் முன்மொழிவுகளை கொடுக்கப் போகிறேன். நீயும் கொடு என ஆனந்தனிடம் சொன்னராம். ஆனால் அவர் கொடுக்க மாட்டன் என்றாராம். வவுனியாவிற்கு அந்த நிதியில் இருந்து அபிவிருத்திக்கு நிதியை பயன்படுத்த ஆனந்தன் விரும்ப வில்லை. வவுனியாவிற்கு வரவிருந்த நிதியை அவர் பிரயோசனப்படுத்தவில்லை.
இந்த நிதி ஒரு விசேட நிதியாக வடக்கு, கிழக்குக்கு கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஒவ்வொரு வரவு செலவுத் திட்டத்திலும் வடக்கு, கிழக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது என்று பேசியிருக்கிறோம். விசேடமாக போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மற்ற மாகாணங்களைப் போல் அல்லாது விசேடமாக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என கோரியுள்ளோம். இதைவிட கூடுதலான விடயங்களை பேசி நாங்கள் பெற்றிருக்கின்றோம். அதற்காக நாங்கள் பெறவில்லை. நாங்கள் பேசி மக்கள் பெற்றிருக்கிறார்கள். இதைவிட கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவை பல திட்டங்களுக்காக பெறப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இந்த வருடம் செப்ரெம்பர் மாதத்தில் இது நடந்தது. வரவு செலவு திட்டத்தில் நாங்கள் டிசம்பரிலேயே வாக்களித்தோம்.
செப்ரெம்பர் மாதத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒரு சுற்றறிக்கை போனது. அதற்கு பிறகு பிரதமர் செயலகத்தில் இருந்து வடக்கு, கிழக்கு மாவட்ட செயலங்களுக்கு ஒரு சுற்றறிக்கை போனது. இந்த திட்டத்திற்கு வேறு பெயர் இருக்கிறது. மேலதிகமாக கிராமிய மேம்பாட்டுக்கான விசேட செயற்திட்டம் இது. இந்த நிதியை எப்படி செலவு செய்ய வேண்டும் என்று அந்த மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து யோசனை கேட்கப்பட்டது. நாங்கள் கொடுத்தது யோசனைகள் தான். முன்மொழிவுகள் இல்லை. மக்கள் பிரதிநிதிகளை கேட்காமல் எப்படி செய்வது. அதற்கு பிறகு சத்தம் போடுவோம். கொழும்பில் இருந்து மக்கள் பிரதிநிதிகளை கேட்காது தான் நினைத்ததை சொய்கிறார்கள் என்று கூறுவோம். அதற்கமைவாக எமது யோசனைகளை வழங்கினோம். அதுவும் என்ன திட்டத்திற்கு கீழே அதனை வழங்க முடியும் என 14 விடயங்களை உள்ளடக்கிய நிரல் ஒன்று வழங்கப்பட்டது. சில அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அந்த நிரல்களுக்குள் அடங்கவில்லை.
என்ன படிமுறையின் கீழ் ஒதுக்க வேண்டும் என எங்களுக்கு எல்லாம். கடிதம் வந்தது. அதை விட்டு ஒதுக்கினால் நிராகரிக்கப்படும் என தெரிவித்திருந்தார்கள். அப்படியாக எங்களுடைய முன்மொழிவுகளைத் தான் கொடுத்தோம். பணம் ஒன்றும் எங்களுக்கு வாறதில்லை. அமைச்சிடம் இருந்து மாவட்ட செயலகத்திற்கு பணம் ஒதுக்கப்படும். மாவட்ட செயலகம் தான் அதனை உபயோகிப்பது. திரு சேனாதிராஜா அவர்கள் அந்த பணத்தை எவ்வாறு செலவு செய்வது என்ற யோசனைகளை முன்மொழிந்ததை வெளியிட்ட பின்னர் இன்னொரு குற்றச்சாட்டு. அவர் அந்த முன்மொழிவுகளை குறித்தொரு மாவட்டத்திற்கும், பகுதிக்கும் ஒதுக்கியுள்ளார். அது நாங்கள் எங்களுக்குள் பேசி அவர் ஒரு குறித்த பிரதேசத்திற்கு, நான் இன்னொரு குறித்த பிரதேசத்திற்கு, திரு சித்தார்த்தன் வேறொரு குறித்த பிரதேசத்திற்கு, திரு சரவணபவன் வேறொரு குறித்த பிரதேசத்திற்கு, சிறிதரன் வேறொரு குறித்த பிரதேசத்திறகு என நாங்கள் எங்களுக்குள் பேசி அதை பிரித்து எல்லா பிரதேசங்களிலும் நடக்கக் கூடியதாக முன்மொழிவு திட்டஙகளை கொடுத்திருக்கிறோம்.
ஆகவே, சிரிப்புக்கிடமான குற்றசாட்டுக்கள் வைக்கிறார்கள். ஆனால் சிரிப்புக்கு இடமானது என விடமுடியாதுள்ளது. ஏனெனில் அதை வைத்து ஒவ்வொரு நாளும் விமர்சனங்கள் எழுதுகிறார்கள். பத்திகைகளில் ஆசிரியர் தலையங்கள் வருகிறது. பத்திரிகை ஆசிரியர்களுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவல்லை. அப்ப இது அரசியல் லஞ்சம் தானே என ஒருவர் எழுதுகிறார். திரு ஆனந்தனை பார்த்து சிரிப்பதா அல்லது பத்திரிகை ஆசிரியர்களை பார்த்து சிரிப்பதா என்று எனக்கு தெரியவில்லை. இந்தவகையில் எந்தவித அடிப்படைகளும் இல்லாமல் தரக்குறைவான செயலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை வேறு சிலர் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இன்றோடு இந்தப் பேச்சு இறுதி பெற வேண்டும். இது குறித்து பேசுவதற்கு இன்னும் எதுவும் இருக்க முடியாது. இதுக்கு பிறகும் விளக்கம் இல்லை என்றால் இந்த இடைக்கால அறிக்கையில் ஒன்றும் இல்லை என விமர்சிப்பவர்களைப் போல தான் பார்க்க வேண்டியுள்ளது என்றார்.
READ MORE | comments

ஜனாதிபதி தலைமையில் இன்று நடந்த கட்சி தலைவர்கள் கூட்டம் : நடந்தது என்ன?

பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையுடன் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான விசேட கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
வழக்குத் தொடருதல் மற்றும் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து சட்ட மா அதிபர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் விரிவாக விளக்கினர்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான புதிய சட்டங்களை ஆக்குதல் மற்றும் ஏற்கனவேயுள்ள கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான வரைபுகளை ஆக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்தில் 1994 ஆம் ஆண்டு முதல் இது வரையில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், அதற்கான சட்ட வரைபுகளைத் தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் அதனை இன்னும் சில வாரங்களில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி இலங்கை மத்திய வங்கியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களுக்கான புதிய திட்டமிடல்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான விசாரணை அறிக்கையில் சில பக்கங்கள் குறைவாக உள்ளதாகக் குறிப்பிடப்படும் கருத்துக்கள் குறித்து விளக்கமளித்த அதிகாரிகள் அவ்வாறு அறிக்கையின் எவ்வித குறைபாடும் இல்லையென்றும் அதனுடன் தொடர்புடைய துணை ஆவணங்கள் பெருமளவில் இருப்பதாகவும் குறித்த வழக்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்வரை இரகசியத்தன்மையுடன் பாதுகாக்க வேண்டிய ஆவணங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தல், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை மீட்டெடுத்தல் மற்றும் ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் தொடர்ச்சியாக வினைத்திறன்மிக்க வகையில் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையில் குறித்த துறைத் தலைவர்கள் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டமொன்றை வாரத்திற்கு ஒரு முறை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஹெல உருமய கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளடங்களாக பல்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். 
READ MORE | comments

வைத்தியர்கள் நாளை வேலை நிறுத்தம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சைற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டே இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். -
READ MORE | comments

கல்லடிப் பாலத்தில் பாய்ந்து தற்கொலை செய்த பொறியியலாளரின் சகோதர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தார் ...

மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்லடிப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான, அண்ணனும் தம்பியும் அகால மரணமடைந்திருப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (26.01.2018) அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட இலங்கை மின்சார சபை அத்தியட்சகரான , 34 வயதுடைய கணேஷமூர்த்தி உமாரமணனின் இளைய சகோதரனான, இலங்கை மின்சார சபை ஊழியரான 21 வயதுடைய கணேஷமூர்த்தி சாரோஜிதன், இன்று (28.01.2018) தற்கொலை செய்து கொண்டுள்ளார். அண்ணன் இறந்த துயரம் தாளாது மனமுடைந்திருந்த நிலையிலேயே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரே குடும்பத்தில் இவ்வாறு அடுத்தடுத்து இடம்பெற்ற இந்த அகால மரணங்கள், அந்தக் குடும்பத்தையும் கிராமத்தையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது
.

கடந்த 24ஆம் திகதி காலை 8 மணியிலிருந்து காணாமல்போன  அண்ணனின் சடலம்  அடக்கம் செய்யப்பட்ட மறு தினம் அவரது தம்பி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடற் கூறு பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, இந்தச் சம்பவம் பற்றி காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
READ MORE | comments

அரசாங்கத்தை அமைப்பதற்கான ஜனாதிபதியின் அழைப்புக்கு மகிந்த அணி பதில்

Sunday, January 28, 2018

தமது கட்சியின் 96 உறுப்பினர்களும் ஒன்றாக வந்தால் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைக்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அழைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பதிலளித்துள்ளனர்.
ஜனாதிபதியின் தற்போதைய அழைப்பை தாங்கள் நிராகரிப்பதாகவும் , அது ஜனாதிபதி தரப்பினரின் தோல்வியையே எடுத்துக்காட்டுவதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். 
READ MORE | comments

மகிந்த காலத்து ஊழல் , மோசடிகளை விசாரிக்க விசேட நீதிமன்றம்!

ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக விசேட நீதிமன்றத்தை அமைப்பதற்கான சட்ட மூலம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
காலி மொரவக்க நகரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நிதி மோசடிகள் விசாரணைப் பிரிவுக்கு 300 வரையான முறைப்பாடுகள் விசாரணை நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 96 விடயங்கள் அந்த பிரிவினால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் இன்னும் குறைபாடுகள் இருக்குமாக இருந்தால் அது தொடர்பாகவும் விசாரணை நடத்தமாறு கூறப்பட்டுள்ளது. தற்போது வரை 15 முறைப்பாடுகள் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றில் 2 விடயங்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற முறையில் , வழக்கு விசாரிக்கும் காலப்பகுதி ஆகியவற்றிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை அரச நிறுவனங்கள் சிலவற்றின் ஒத்துழைப்புகள் கிடைக்காமையினால் அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன்படி மிக விரைவில் விசேட நீதிமன்றத்தை அமைத்து இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக சட்டமூலமொன்று எமது நீதி அமைச்சரின் ஊடாக அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார். 
READ MORE | comments

சு.கவுக்கு இடமளிக்காது ஐ.தே.க ஆட்சியமைக்க திட்டம் : த.தே.கூ இணையுமா?

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினர் முயற்சிப்பார்களா இருந்தால் அதற்கு இடமளிக்காது ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்ள திட்டமிட்டு வருவதாகவும் இது தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 96 உறுப்பினர்களும் ஆதரவளித்தால் இன்றைய தினமே தனித்து அரசாங்கத்தை அமைக்க தயார் என ஜனாதிபதி நேற்றைய தினம் அறிவித்துள்ளார். இந்த கருத்தானது ஐக்கிய தேசிய கட்சிக்குள் பதற்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால தமது கட்சியிலிருந்து யாரும் வெளியில் செல்லாதவாறு நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய கட்சியின் உயர் பீடம் தீர்மானித்துள்ளதுடன் மேலும் தமது அரசாங்கம் அமைப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக எதிர் தரப்பிலிருந்து உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள திட்டமிட்டு வருகின்றது. இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் , ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலுள்ள சிலரின் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்ளவதற்கு திட்டமிட்டுள்ளதுடன் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தரப்பிலிருந்தும் சிலரை இணைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
READ MORE | comments

துறைநீலாவணையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் விஷேட பொதுக்கூட்டம். மா.வை பங்கேற்பு

துறைநீலாவணையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் க.சரவணமுத்து அவர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை 27 ஆம் திகதி வேட்பாளரின் வளாகத்தில் இடம்பெற்றது.

 இக் கூட்டத்திற்கு அதிதிகளாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், , வியாழேந்திரன் கிழக்குமாகாண முன்னாள் அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் செயலாளர் நாயகமுமான கி.துரைராசசிங்கம் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்புத்தொகுதியின் தமிழரசுக்கட்சியின் தலைவருமான பா.அரியநேத்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


















READ MORE | comments

வாக்குச்சீட்டை படம் பிடித்த ஆசிரியர் கைது!

தபால் வாக்களிப்பின்போது வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரவபொத்தான பகுதியில் வைத்தே குறித்த 44 வயதான ஆசிரியர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்களிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸாருக்கு வழங்கிய தகவலிற்கமைய குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
READ MORE | comments

உலகில் ஆபத்தான 11 நாடுகளில் இலங்கை!

பணச்சலவை தொடர்பாக, ஆபத்தான 11 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக நாடுகளுக்கிடையிலான நிதி நடவடிக்கை செயலணி தெரிவித்துள்ளது. பணச்சலவை குறித்த அதிக ஆபத்துள்ள மற்றும் கண்காணிப்பு அதிகார வரம்புக்குட்பட்ட 11 நாடுகளை நாடுகளுக்கிடையிலான நிதி நடவடிக்கை செயலணி பட்டியலிட்டுள்ளது.
இதில் இலங்கை, பொஸ்னியா- ஹெர்சகோவினா, வடகொரியா, எதியோப்பியா, ஈரான், ஈராக், சிரியா, ரினிட்டாட் அன் டுபாகோ, துனிசியா, வனாட்டு, மற்றும் யேமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியல் நாடுகளுக்கிடையிலான நிதி நடவடிக்கை செயலணியின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாடுகள் தீவிரவாதத்துக்கான நிதியிடல் மற்றும் அனைத்துலக நிதி முறைமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
READ MORE | comments

மகிந்தவின் வாழ்நாள் குடியுரிமையை பறிக்க பரிந்துரை!

பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சிவில் உரிமைகளை நீக்குவது தொடர்பான பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பாக பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
காலி -மொரவக்க நகரில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ' குற்றம் செய்தவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இதன்படி அந்த குற்றவாளிகள் தொடர்பாக கட்சி செயற்பட வேண்டும். அந்த அறிக்கையில் காணப்படும் பரிந்துரையில் ஒன்றாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் சிவில் உரிமைகளை 7 வருடங்கள் அல்ல வாழ்நாள் முழுவதும் நீக்கப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

காத்தான்குடியில் தேர்தல் காரியாலயம் தீக்கிரை!

Saturday, January 27, 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் காத்தான்குடி நகரசபைத் தேர்தலுக்காகப் போட்டியிடும் ரீ.எல்.ஜவ்பர்கானின் தேர்தல் காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகம்  சனிக்கிழமை அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி மீராபள்ளி வட்டாரத்தில் அமைந்திருந்த குறித்த வேட்பாளரின் அலுவலகமே இனந்தெரியாதோரால் முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |