Home » » தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணமில்லை! - தேர்தல் ஆணைக்குழு

தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணமில்லை! - தேர்தல் ஆணைக்குழு

பாராளுமன்றத்தில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பான விவாதம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதுவித தீர்மானமும் எடுக்கும் அதிகாரமில்லை. ஆயினும் தேர்தலை தள்ளிப்போடுவது தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள பிணைமுறி தொடர்பான அறிக்கையும், அரச பொது சொத்துக்கள் ஊழல் தொடர்பான அறிக்கையும் தொடர்பாக பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க நடக்கவிருக்கும் எட்டாம் திகதி விவாதம் தொடர்பாக அதனை நிறுத்தவோ அல்லது வேறு தீர்மானம் வழங்கவோ தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதுவித அதிகாரமும் இல்லை.
மேலும் சபாநாயகர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களிடம் தேர்தல் பிரச்சாரம் நிறைவுற்று மௌனகாலம் நிலவும் எட்டாம் திகதியை தவிர்த்து அதற்கு முன் அல்லது தேர்தலுக்கு பின் பாராளுமன்ற விவாதத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கும் நிலைப்பாட்டிலேயே தேர்தல் ஆணைக்குழு காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |