Home » » கல்லடிப் பாலத்தில் பாய்ந்து தற்கொலை செய்த பொறியியலாளரின் சகோதர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தார் ...

கல்லடிப் பாலத்தில் பாய்ந்து தற்கொலை செய்த பொறியியலாளரின் சகோதர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தார் ...

மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்லடிப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான, அண்ணனும் தம்பியும் அகால மரணமடைந்திருப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (26.01.2018) அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட இலங்கை மின்சார சபை அத்தியட்சகரான , 34 வயதுடைய கணேஷமூர்த்தி உமாரமணனின் இளைய சகோதரனான, இலங்கை மின்சார சபை ஊழியரான 21 வயதுடைய கணேஷமூர்த்தி சாரோஜிதன், இன்று (28.01.2018) தற்கொலை செய்து கொண்டுள்ளார். அண்ணன் இறந்த துயரம் தாளாது மனமுடைந்திருந்த நிலையிலேயே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரே குடும்பத்தில் இவ்வாறு அடுத்தடுத்து இடம்பெற்ற இந்த அகால மரணங்கள், அந்தக் குடும்பத்தையும் கிராமத்தையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது
.

கடந்த 24ஆம் திகதி காலை 8 மணியிலிருந்து காணாமல்போன  அண்ணனின் சடலம்  அடக்கம் செய்யப்பட்ட மறு தினம் அவரது தம்பி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடற் கூறு பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, இந்தச் சம்பவம் பற்றி காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |