தேசிய சம்பியனாக சாதனை படைத்த சிவாநந்தா தேசிய பாடசாலையின் இளம் டெனிஸ் வீரர்கள் மட்டு மண்ணை ஒளிரச்செய்துள்ளனர்

Thursday, September 29, 2022

 



கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று (28-10-2022) கொழும்பில் இடம்பெற்ற தேசிய டென்னிஸ் பகிரங்கச் சுற்றுப்போட்டியில் சிவாநந்தா தேசிய பாடசாலை இளம் வீரர்களின் நிதானமும் அதிரடியும் கலந்த பரபரப்பான ஆட்டம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேசிய அளவில் இடம்பெற்ற போட்டியில் பல பாடசாலை அணிகளை வெற்றிகொண்டு இறுதிப்போட்டியில் விளையாட்டு விற்பன்னர்களை விசேடமாகக்கொண்ட கொழும்பு ஆனந்தாக் கல்லூரி அணியினை சாகச ஆட்டம் மூலம் வீழ்த்தி 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தேசிய சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டது சிவாநந்தா தேசிய பாடசாலை அணி.



இளம் வீரர்களின் வெற்றி சிவாநந்தாவின் வரலாற்றுச் சாதனைகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சிவாநந்தா தேசிய பாடசாலையின்  நாமத்தையும் மட்டு மண்ணின் பெருமையையும் தேசிய அளவில் பிரகாசிக்கச் செய்த இளம் சாதனை வீரர்களான செல்வன் கோ. தனுஸ்கர்,  செல்வன் ர.இளங்கோவன் மற்றும் செல்வன் க.ஜெயர்சன் ஆகியோர் பாராட்டப்படவேண்டியவர்கள்.


மட்டக்களப்பு டென்னிஸ் பயிற்சி நிலையத்தின் விளையாட்டு வீரர்களாகத் திகழும் சிவாநந்தாவின் இளம் சாதனை வீரர்களின் சாதனைப் பயணத்திலும் வெற்றியின் பின்னாலும் பயணித்துக்கொண்டிருப்பவர்களில் டென்னிஸ் பயிற்றுவிப்பாளர்களும், பெற்றோர்களும் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியவர்கள்.


பிள்ளைகள் சிறந்த வீரர்களாக மிளிர அயராது பாடுபடும் பெற்றோர்களான திரு&திருமதி கோகுலதாசன் , திரு&திருமதி ரவீந்திரன், திரு&திருமதி கனகரெத்தினம் ஆகியோர் போற்றுதற்குரியவர்களாவர்.


 உடற்கல்வி ஆசிரியார்கள், உடற்கல்வி ஆசிரியரான வி. தினேஸ்குமார், பயிற்றுவிப்பாளர்களான திருவாளர் ஈ. லுக்சன் மற்றும் திருவாளர் ஸ்ரான்லி வருண் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். பயிற்றுவிப்பாளர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புமிக்க சேவை தொடர வாழ்த்துக்கள்.


எல்லாவற்றிற்கும் மேலாக பயணச் செலவு, பயிற்ச்சிச் செலவு, தங்குமிடச் செலவு முதலானவைகளை அனுசரணைகளெதுவுமில்லாமல் தாங்களே பொறுப்பெடுத்ததோடு பாடசாலையின் பெயர் மிளிரக் காரணமான பெற்றோர்கள் உண்மையில் மெச்சத்தக்கவர்களாகின்றனர்.

சிவாநந்தாவிற்கென பிரத்தியேக பயிற்சிக் களமோ பயிற்றுவிப்போ இல்லாவிடினும், சிவாநந்தா தேசிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரின் தட்டிக்கொடுப்புகள், ஊக்குவிப்புக்கள் என்பன இளம் சாதனை வீரர்கள் தேசிய ரீதியில் வெற்றிவாகை சூட உதவியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் சகல வசதிகளுடனும் கூடிய டென்னிஸ் பயிற்ச்சிக் களம் உருவாகுவது காலத்தின் தேவையென உணரப்பட்டுள்ளது.


மேற்படி வெற்றியின் ரகசியம், இளம் வீரர்களின் சாதனை, சாதனைப் பயணத்திற் பங்குகொண்டோரென அனைவரையும் வரவேற்றுக் கௌரவிக்கும் நிகழ்வொன்றினைச் செய்வதற்கு சிவாநந்த வித்தியாலய கல்விசார் மற்றும் கல்வி சாரா ஊழியர் நலன்புரிச் சங்கம் முடிவெடுத்துள்ளனர். பாடசாலைமீது ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கொண்டுள்ள ஈடுபாட்டினையும் அர்ப்பணிப்பினையும் இது எடுத்துக்காட்டுகின்றது.









READ MORE | comments

Tuesday, September 27, 2022

 


தற்போதைய பிரச்சினைகள் எதுவும் தமது ஆட்சிக் காலத்தில் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அப்போது பொருட்களின் விலை குறைவாகவும், சம்பளம் அதிகமாகவும் இருந்தது. மக்கள் கடவுளின் உதவியால் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் அனைத்துக் கட்சி அரசுகள் உருவாகவில்லை. எனவே, மிகவும் முற்போக்கான கட்சிகளை ஒன்று திரட்டி கூட்டமைப்பை உருவாக்கி மக்கள் நேய ஆட்சியை உருவாக்குவேன் என நம்புகிறேன்.கொழும்பைச் சூழவுள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரிக்கப்படுவது நல்லதொரு சூழ்நிலை அல்ல. அதன் மூலம் அரசுக்கு எதிரான மக்களின் எழுச்சி அதிகரிக்கவே செய்யும்’’ என்றார்

READ MORE | comments

8-10 மணித்தியால மின் வெட்டுக்கு அவசியமில்லை -இலங்கை நிலக்கரி நிறுவனம்

 


நிலக்கரி இருப்புகளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் 8-10 மணித்தியால இடையில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.



கடந்த வருடம் முன்பதிவு செய்யப்பட்ட நிலக்கரி கையிருப்பை செலுத்தி இறக்குமதி செய்ததன் பின்னர் 2021 டிசம்பர் 31 ஆம் திகதி வரை நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை இயக்க முடியும் என நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கு 38 நிலக்கரிக் கப்பல்கள் தேவைப்படுவதாகவும், கடந்த ஆண்டு இருபத்தைந்து நிலக்கரி கப்பல்கள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் மேலும் 13 கப்பல்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
READ MORE | comments

மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோன் குடித்து வந்த குடும்பஸ்தர் மரணம்

 


மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு உள்ளே இந்த சம்பவம் நேற்று (25) இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் மட்டுமல்லாது, மதுபான போத்தல்களின் விலையும் அதிகரித்துள்ளது. மதுபானம் வாங்க முடியாத நிலையில், இவர் தொடர்ச்சியாக ஓடிகலோன் குடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய மதியம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 

READ MORE | comments

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை! வெளியாகிய தகவல்



க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வருடம் டிசெம்பர் மாதம் க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடாத்துவதன் மூலம் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட 6 மாதங்கள் ஆனதாகவும், 3 மாதங்களில் மீண்டும் அதே பரீட்சையை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

எனவே க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

READ MORE | comments

மட்டக்களப்பில் வீடொன்றில் கோழிகள், நாய் ஒன்றை திருடிய 5 மாணவர்கள் கைது

Monday, September 26, 2022

 


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் 10 கோழி , நாய் என்பற்றை தீருடிச்சென்ற உயர் தரத்தில் கல்வி கற்று வரும் 5 பாடசாலை மாணவர்களை கைது செய்து அவர்களது பெற்றோரை வரவழைத்து அவர்களை எச்சரித்து விடுவித்துள்ள சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வைத்தியரின் வீட்டில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை இரவு உள்நுழைந்த 5 மாணவர்கள் வீட்டின் பின்பகுதியில் அமைந்துள்ள கோழிக் கூட்டில் இருந்த 10 கோழிகளை திருடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த நாய் ஒன்றையும் திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.


இது தொடர்பாக வைத்தியர் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து பொலிஸார் மேற்கொண்டுவந்த விசாரணையில் வைத்தியரின் வீட்டுக் கோழிகளை திருடிச் சென்ற பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்றுவரும் 5 மாணவர்களை கைது செய்ததையடுத்து வைத்தியர் அவர்களை மன்னித்துவிடுமாறு கோரியதையடுத்து மாணவர்களின் பெற்றோரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து கைது செய்யப்பட்ட மாணவர்களை எச்சரித்து பிள்ளைகளை கவனிக்குமாறு பெற்றோருக்கு அறிவுரை கூறி விடுவித்துள்ளதாக தெரிவித்தனர்

READ MORE | comments

மசகு எண்ணெயை குடிக்கவே முடியும் - காஞ்சன விஜேசேகர !

 


மசகு எண்ணெயின் தரம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சட்டரீதியாக பதிலளிக்கும் என மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (26) தெரிவித்தார்.


கூட்டுத்தாபனத்திடம் போதியளவு டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பு உள்ளது என்றும் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

லக்ஷபான மின்நிலையத்தில் ஏற்பட்ட செயலிழப்பு, நீர் மின்சார முகாமைத்துவ பிரச்சினை மற்றும் டீசல் மற்றும் உலை எண்ணெய்க்கு போதிய நிதி இன்மை ஆகிய காரணங்களாலேயே இலங்கை மின்சார சபையால் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

தவறான வகை மசகு எண்ணெயை இலங்கை அதிகாரிகள் இறக்குமதி செய்ததால் மின்வெட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்ததையடுத்தே அமைச்சரால் மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெயில் உள்ள நாப்தாவில் அதிக அளவு கந்தகம் உள்ளதால் அதை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்த முடியாது என்றும் அதை இப்போது குடிக்கவே முடியும் என்றும் அவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

READ MORE | comments

காரைதீவில் அதிகளவில் பிடிபட்ட கிளவல்லா மீன்கள்!

Sunday, September 25, 2022

 வி.ரி.சகாாதேவராஜா)

காரைதீவு கடற்கரையில் நேற்று ஆயிரக்கணக்கான கிளவல்லா மற்றும் வளையா மீன்கள் பிடிபட்டன.

கிருஸ்ணபிள்ளை ஜெயவீரா என்ற மீனவருக்குச் சொந்தமான ஆழ் கடல் பாரிய மீன்பிடி படகில் இப்பாரிய பாடு பிடிப்பட்டிருக்கின்றது.

ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர் ஜெயவீரா கூறுகையில்.

இன்றைய சமகால பொருளாதார நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் இப்படி பெரு

ந்தொகையான மீன்கள் பிடிபட்டிருப்பது மகிழ்ச்சியானது.

சுமார் ஆறாயிரம் கிலோ மீன்கள் பிடிபட்டன

மொத்த வியாபாரிகள் கிலோ 550 ரூபாய்க்கு கொள்வனவு செய்தார்கள். கருவாடு போடுபவர்கள் கிலோ 200 ரூபாய்க்கு கொள்வனவு செய்தார்கள்.

அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கும் மீன்கள் விநியோகிக்கப்பட்டன. என்றார்.
மீன் வாங்குவதற்காக  பொதுமக்களும் கூடிக் காணப்பட்டனர்.

கடலுக்குள் இருந்து இந்த மீன்களை கரைக்கு கொண்டு வருவதற்கு எட்டு மணித்தியாலங்கள் எடுத்தது .அதாவது காலை 6 மணி இருந்து பிற்பகல் 2 மணி வரைக்கும் மீனவர்கள் மீன்களை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







READ MORE | comments

சட்டவிரோத ஆர்ப்பாட்ட பேரணி என தெரிவித்து 83 பேர் கைது

 


நேற்று பிற்பகல் மாலை லிப்டன் சுற்றுவட்டத்தில் சோசலிச வாலிபர் சங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக தெரிவித்த பொலிஸார், குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைத்த போது, ​​தொடர்ந்தும் சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குறித்த 83 பேரை பொலிஸ் காவலில் எடுத்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

லிப்டன் சுற்று வட்டத்திலிருந்து டீன்ஸ் வீதியை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் செல்லத் தொடங்கியவுடன், அது 1865 ஆம் ஆண்டு பொலிஸ் கட்டளைச் சட்டம் இலக்கம் 16 மற்றும் இலங்கை தண்டனைக் கோவைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சட்டவிரோதமானது எனவும் கலைந்து செல்லுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் பொலிசார் அறிவித்தனர்.

போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் முன்னேறிச் சென்ற போது அவர்களை கலைந்து செல்லும்படி பொலிசார் மீண்டும் நடவடிக்கை எடுத்தனர், அதையும் பொருட்படுத்தாமல் டீன்ஸ் வீதி வழியாக போராட்டத்தை தொடர்ந்ததால், தற்போதுள்ள சட்டத்திற்கு அமைய, அது சட்டவிரோத போராட்டம் என்பதால் மீண்டும் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி தெரிவித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பல எச்சரிக்கைகளையும் மீறி குறித்த ஆர்ப்பாட்ட பேரணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீது இது தடவைகள் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை மேற்கொண்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி, ஒரு சட்டவிரோத ஆர்ப்பாட்டம் என்பதாலும், வீதியில் பயணிக்கும் நபர்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதாலும், தனியார் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் மற்றும் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைய முயற்சித்தால் ஏற்படும் அபாயங்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு, பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் இலங்கை தண்டனைக் கோவைச் சட்டங்களின் பிரகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி தேவையான பலத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 77 ஆண்களும், 04 பெண்களும், 2 பௌத்த பிக்குகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சோசலிச வாலிபர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகரவும் உள்ளடங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி மேற்பார்வையில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தமது கருத்துக் கூறும் அடிப்படை உரிமை மீறப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மற்றும் சிவில் அமைப்புகள் இக்கைது நடவடிக்கை எதிராக குரல் கொடுத்து வருவதோடு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ளது

READ MORE | comments

A/L மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில் !

 


சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, ஒரு கல்வி வலயத்தில் இருந்து 30 பேர் என நாடு முழுவதிலும் உள்ள 99 வலயங்களைச் சேர்ந்த 2,970 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புலமை பரில் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரை அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5,000 உதவித்தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருமுறையும் சாதாரண தரப் பரீட்சை வெளியாகி, க.பொ.த உயர்தரம் ஆரம்பமாகமுன்னர், புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் பத்திரிகை ஊடக விளம்பரப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பில் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்

READ MORE | comments

பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்

 


பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 22ஆம் திகதி அதிகாலை பாரிஸின் புறநகர் பகுதியான லாக்னோரில் இடம்பெற்றதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாரிஸில் கொலை

பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் | Sri Lanka Death In Paris

இந்தத் தாக்குதலில் 24 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன் 30 வயதான மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளது.

பழிவாங்கும் நடவடிக்கை

பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் | Sri Lanka Death In Paris

இந்த கொலைச்சம்பவம் பழிவாங்கும் நோக்கத்தில் இடம்பெற்றிருக்கக் கூடும் என பாரிஸ் குற்றவியல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

READ MORE | comments

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான புதிய நடைமுறை! வெளியாகியுள்ள சுற்றறிக்கை

 


சுற்றறிக்கை

அரசாங்க உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (26) சுற்றறிக்கையை வெளியிடக்கூடியதாக இருக்கும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்தார்.

பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்லும் போது சேலை அல்லது அலுவலகத்திற்கு பொருத்தமான ஆடையொன்றை அணியலாம் என்று ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொருத்தமான அலுவலக ஆடை

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான புதிய நடைமுறை! வெளியாகியுள்ள சுற்றறிக்கை | Sri Lanka Government Servant Dress

இருப்பினும், சேலை உள்ளிட்ட ஆடைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சிலர் சுற்றறிக்கையின் முதல் பகுதியை மாத்திரம் பின்பற்றுவதாகவும் பொருத்தமான அலுவலக ஆடை என்றால் என்ன என்பதை மறந்து விட்டதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

READ MORE | comments

மட்/புனித மிக்கேல் கல்லூரியின் மைக்வோக்

Saturday, September 24, 2022

 





MIKE WALK 2022

தேசிய ரீதியில் சாதனை படைத்த புனித மிக்கேல் கல்லூரியின் 150வது பாடசாலை தினத்தை முன்னிட்டு நடைபவனி ஓன்று இன்று காலை நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நடைபவனி பாடசாலை வளாகத்தில் இருந்து ஆரம்பமாகியது. பாடசாலை மாணவர்களுடன் கூட்டம்  நடைபெற்று நடைபவனியில் ஒழுக்க,விழுமியங்களை பேணும்படி அறிவுறுத்தப்பட்டனர். அத்துடன் பாடசாலைக்காக சேவையாற்றிய சற்குணநாயகம் அடிகளாரும் பாடசாலை சமுகத்தால் கெளரவிக்கப்பட்டார். 

காலை 7  மணியளவில் ஆரம்பமாசிய இவ் நடைபவனியில் பாடசாலை பாண்டு வாத்திய குழு சாரணர்கள் பாடசாலை மாணவர்கள் பழைய மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர். இந்நடைபவனியில் போதைப்பொருள் ஒழிப்பு சம்மந்தமாகவும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றை பற்றி விழிப்புணர்வூட்டும் பதாதைகள் மாணவர்களால் கொண்டு செல்லப்பட்டது.அத்துடன் பாடசாலையின் வலைப்பந்தாட்ட குழுவினர் மற்றும் பாடசாலை விளையாட்டு குழு ஆகியோர் கலந்துகொண்டனர். கலைகலாசார நிகழ்வுகளுடனும் மாணவர்களின் ஆடல் பாடல்களுடன் இந் நடைபவனி நடைபெற்றது.

பெருமளவான மாணவர்களுடன் நடைபெற்ற் இந் நடைபவனியானது பாடசாலையிலிருந்து மட்டு நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று பின்னர் பாடசாலையை மீண்டும் வந்தடைந்தது. இம்முறை பாடசாலை தேசிய ரீதியில் சாதனை படைத்ததாலும் பாடசாலையின் 150வது பாடசாலை தினம் என்பதால் பாடசாலை மாணவர்கள் பழைய மாணவர்கள் அதிகம் கலந்துகொண்டனர். அதிகளாவான மாணவர்கள் கலந்து கொண்டமையால் வீதியீல் வாகன நெருக்கடி ஏற்பட்டு வீதிகள் சில நேரம் ஸ்தம்பித்து காணப்பட்டமையும் குறிப்பிடதக்கது

READ MORE | comments

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மீண்டும் அழைக்கப்படும் படையினர் !

Friday, September 23, 2022

 


நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானியின் ஊடாக அறிவித்துள்ளார்.


ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி (செப்டம்பர் 22 2022) முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டின் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடந்த சில மாதங்களாக பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பாக மாதாமாதம் 22ஆம் திகதியன்று ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

தொல்பொருள் என்னும் பெயரிலே தமிழரின் வரலாற்றுப் பெருமை கொண்ட திருக்கோணேஸ்வரம் சூரையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது : ஜனா

 


தொடர்புடைய ஏனைய மதத்தவர்கள் இல்லையா? கிழக்கு மாகாணத்திற்கென நூறு வீதம் சிங்களவர்களினால் மாத்திரம் உருவாக்கப்பட்ட செயலணியும், தொல்பொருள் சம்மந்தமாக ஆராய்ச்சி செய்யும் பல்கலைக்கழக மாணவர்களும் எதனைச் செய்ய முனைகின்றார்கள்?


கிழக்கு மாகாணத்திலே சிங்களப் புராதனச் சின்னங்கள் மாத்திரம் தான் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்த முயற்சிக்;கின்றார்களா? ஏனைய மதத்தவர்களும் அந்தச் செயலணிக்குள் உள்ளடக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அந்தச் செயலணி கலைக்கப்பட வேண்டும். அந்தச் செயலணிக்குள் ஏனைய மதத்தவர்களோ, ஆராய்ச்சி செய்யும் பல்கலைக்கழக மாணவர் குழாமிற்குள் ஏனைய மத மாணவர்களோ உள்வாங்கப்பட்டால் அங்கிருப்பது எந்த மதத்தைச் சார்ந்த, எந்த மதத்தினர் வழிபட்ட புராதனப் பொருட்கள் என்பது வெளிப்பட்டுவிடும் என்ற பயமா?

முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இந்த நாட்டிலே நாங்கள் நல்லிணக்கத்தை விரும்புகின்றோம். நீங்கள் கூறுவது போன்று நீங்கள் தமிழருக்கு இரத்தம் கொடுத்திருக்கலாம், நீங்கள் குறிப்பிட்ட தமிழர்களுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம். ஆனால், கடந்த அமைச்சரவையிலே இருந்த இனவாதிகளுள் முக்கியமான இனவாதி நீங்களாகவே இருப்பீர்கள்.

இந்த நாட்டை அழித்த சில இனவாதிகள் இருந்திருக்கின்றார்கள். குறிப்பாக கே.எம்.பி.ராஜரெட்ண, ஆர்ஜி.சேனநாயக்க, சிறிலால் மத்தியு போன்ற மூன்று மிகவும் துவேசமான இனவாதிகள் இருந்திருக்கின்றார்கள். அந்த மூன்று இனவாதிகளையும் ஒன்று திரட்டி ஒரே ஆளாக நீங்கள் இருக்கின்றீர்கள். ஏனெனில் நீங்கள் தற்போது பேசும் போது சுற்றிவர இருந்தவர்களுக்கு முன்னுரிமை, நாங்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றும் கூறுகின்றீர்கள். ஆனால், இந்த நாட்டிலே கடந்த காலங்களிலே நடைபெற்றவைகளுக்கு நீங்களும் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றீர்கள்.

எனவே, தொடர்புடைய அமைச்சரிடம் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் ஏழாம் நூற்றாண்டிலே பாடல் பெற்ற இந்தத் திருக்கோணேஸ்வரம் முன்னூற்று நாற்பது ஏக்கர் பரப்பளவைக் கொண்டதை 1971ம் ஆண்டு தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டிருந்தாலும், பதினெட்டு ஏக்கருக்கு உட்பட்ட காணி கோயிலுக்குச் சொந்தமானதாக இருக்கின்றது. அந்தக் கோயில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். பாடல் பெற்ற தளம் இராஜகோபுரம் இல்லாமல் இருக்கின்றது. அதற்கான இராஜகோபுரம் அமைக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து இங்கு சுற்றுலாவிற்கு வருபவர்கள் இந்த நாட்டைப் பற்றிப் படித்து விட்டுத்தான் வருகின்றார்கள். இந்த நாட்டிலே சோழர் பல்லவ காலத்து ஆட்சியைப் பற்றி அறிந்து விட்டுத்தான் வருகின்றார்கள். அவர்கள் திருக்கோணேஸ்வரத்திற்குச் செல்லும் போது வழியிலே கடைகளை வைத்து இந்து சமயத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வழிபடுவதற்கும், ஆராய்வதற்கும், சுற்றலாப் பயணிகள் மேலும், மேலும் வருவதற்கும் ஆவணம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு பெரும்போக பாவனைக்கு 4000 தொன் பசளை !

 


மட்டக்களப்பு மாவட்ட விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் நேற்று (22) சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோரை பாராளுமன்றத்தில் சந்தித்துப் பேசினர். விவசாய நடவடிக்கைகளில் தாங்கள் எதிர்கொள்ளும் பிர்ச்சினைகள் மற்றும் சவால்களை எடுத்து விளக்கிய விவசாயிகள், இவற்றை நிவர்த்திக்க அவசர முயற்சிகளை செய்யுமாறு அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.


இதையடுத்து விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் நஸீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் மேற்கொண்டனர்.

இச்சந்திப்பில் அமைச்சர் நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் , பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், அமைச்சின் செயலாளர் புஷ்பகுமார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விவசாயிகளின் பிரச்சினைகளை செவிமடுத்த அமைச்சர் மஹிந்த அமரவீர, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நாலாயிரம் தொன் பசளையை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தார். எதிர்வரும் ஒக்டோபரில் செய்கை பண்ணப்படவுள்ள பெரும்போகச் செய்கைகளுக்கு இந்தப்பசளைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

மேலும், உரிய வேளைக்கான நீர்ப்பாசனம், கால்நடையாளர்களால் உரிமை கோரப்படும் மேய்ச்சல்தரை போன்ற விடயங்களுக்கு இருதரப்பினருடனும் கலந்துரையாடி முடிவெடுப்பதென இங்கு தீர்மானிக்கப்பட்டது.

READ MORE | comments

காத்தான்குடி உணவகங்களில் திடீர் சோதனை - பேக்கரி உள்ளிட்ட 03 கடைகளுக்கு சீல் !

 


எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு காத்தான்குடியில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள், பேக்கரிகள் உணவு தயாரிக்கும் இடங்களில் நேற்று (22) திகதி திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு இல்லாமல் மனித பாவனைக்குதவாத உணவுகள் காணப்பட்ட சில ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள், பேக்கரிகள் உணவு தயாரிக்கும் இடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் உரிமையாளர்களுக்கு இவைகளை சீர் செய்வதற்காக
கால அவகாசமும் வழங்கப்பட்டதுடன், பேக்கரி உள்ளிட்ட மூன்று உணவகங்களுக்கு இதன்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி குணசிங்கம் சுகுணன் தலைமையில் அவருடைய வழிகாட்டலிலும்
நடைபெற்ற இச்சோதனை நடவடிக்கையில் சுகாதார வைத்திய அதிகாரிகள்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள், சுகாதார அதிகாரிகள் என 60 உத்தியோகத்தர்கள் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.

உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள நடவடிக்கை எடுகப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

இதன்போது காத்தான்குடி நகரில் காணப்பட்ட 69 உணவு நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், இதில் 41 வர்த்தக நிலையங்களில் இருந்து 73 வகையான மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் 23 வகையான பொருட்கள் இன்றே எரித்து அழிக்கப்பட்டதுடன் ஏனையவைகளின் மாதிரிகள் ஆய்வுக்காக கொழும்பிலுள்ள மருத்துவ ஆய்வு மையத்திற்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதென பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் இதன்போது தெரிவித்துள்ளார்.





READ MORE | comments

அரசாங்கத்தின் மற்றுமோர் சுற்று நிருபம் - அரச ஊழியர்களுக்கு

Thursday, September 22, 2022

 


22-09-2022.*, 


அரச உத்தியோகத்தர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது அலுவலகத்திற்கு பொருத்தமான உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சு தீர்மானித்துள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பிலான சுற்று நிரூபத்தினை தயாரிப்பதற்குரிய ஆலோசனை உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது, பெண்கள் சேலையும், கர்ப்பிணி பெண்கள் அவர்களுக்கு பொருத்தமான உடையையும், அணிய வேண்டும் என சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆண்களுக்கு வெள்ளை நிற மேற்சட்டையும், கருப்பு நிற காற்சட்டையையும் அலுவலக ஆடையாக பரிந்துரைக்கவும், சப்பாத்து அணிவதனை கட்டயாமாக்குவதற்கும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும்,  பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன  தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

100 ஊழியர்களால் செய்யப்படும் வேலையை 50 பேரால் செய்ய முடியும் ! அரச நிறுவனங்களின் நிலவரம்

Tuesday, September 20, 2022

 


அதிக ஊழியர்கள் உள்ள அரச நிறுவனங்களில் பணிபுரிவோரை, குறைந்த ஊழியர்கள் உள்ள நிறுவனங்களில் இணைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாக இலங்கை அரச ஊழியர்களின் தொழிற்சங்க சங்க அமைப்பாளர் பிரதீப் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.


எனினும் இது ஒரு நீண்ட கால வேலைத்திட்டமாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது சில அரச நிறுவனங்களில் 100 ஊழியர்களால் செய்யப்படும் வேலையை, 50 ஊழியர்களால் கூட செய்ய முடியும். எனவே, அதிக பணியாளர்கள் உள்ள நிறுவனங்களில் இருந்து, போதுமான எண்ணிக்கையிலான பணியாளர்கள் இல்லாத நிறுவனங்களுக்கு பணியாளர்களை ஒதுக்கீடு செய்வதில் எந்த சிக்கலும் இல்லை.

அரச ஊழியர்களின் அதிகப்படியான பணிக்கு நீண்டகால தீர்வாக இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். என்றாலும், நீண்ட காலத்திற்கு அரசாங்கம் அதை முன்மொழிவதாகத் தெரியவில்லை, எனவே எதிர்கால அரசாங்கங்கள் மீண்டும் ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் திட்டத்தை மாற்றியமைக்கலாம்.

அரசியல் ஆதாயத்திற்காக அரச துறைக்கு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது வேலையற்றோர், குறிப்பாக பட்டதாரிகள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தும். இது ஒரு நீண்ட கால தீர்வாக இருக்க வேண்டும். அத்துடன் எதிர்கால அரசாங்கங்கள் தங்கள் சொந்த லாபத்திற்காக இதை மாற்ற அனுமதிக்க கூடாது. இதேவேளை நாட்டில் வேலையற்றோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பட்டதாரிகளை அரச துறைக்கு ஆட்சேர்ப்பு செய்யாமை அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும்.

எனவே அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் முடிவிற்கு எமக்கு ஆட்சேபனை இல்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அரச துறைக்கான ஆட்சேர்ப்புகளை நிறுத்தி வைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு, 60 வயதில் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அரச பணியில் உள்ள வெற்றிடங்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் அதிகப்படியான பணியாளர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அரச நிறுவனங்கள் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், அரச நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறையோ அல்லது சேவைகளை வழங்குவதில் குறைபாடுகளோ ஏற்படாது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

சுகாதார அணையாடைகளை உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை -கெஹலிய ரம்புக்வெல்ல

 


இலங்கையில் சுகாதார அணையாடைகளை தயாரிக்கும் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் ‘PAD-MAN’ என அழைக்கப்படும் இந்திய தொழில்முனைவோர் அருணாசலம் முருகநாதனுடன் கலந்துரையாடல் தொடர்கிறது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


பிரேமநாத் டோலவத்த, ரோகினி கவிரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று சபையில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, இலங்கையில் சமீபகாலமாக எழுந்துள்ள எரியும் பிரச்சினைக்கு தீர்வாக இந்தத் திட்டம் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

“இலங்கையில் சுகாதார அணையாடைகளை தயாரிக்கும் திட்டத்தை தொடங்குவதற்கு நாங்கள் ‘PAD-MAN’ உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது இலங்கையிலுள்ள இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன், இருப்பினும் இது எங்கள் கலாசார மற்றும் சமூக கட்டுப்பாடுகளின் விளைவாக இலங்கையில் அடிக்கடி பொதுமக்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்படவில்லை, ”என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மையில் டெய்லி மிரர் வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டிய எம்.பி.தொலவத்த, பெண் குழந்தைகள் தாங்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான இந்த சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்ய முடியாததால் அவர்கள் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்ப்பது கவலையளிக்கிறது. “இது நான் சமீபத்தில் டெய்லி மிரரில் படித்த ஒரு எரியும் பிரச்சினை” என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

சுகாதார அணையாடைகளுக்கு 42% வரி விதிக்கப்படுவதாகவும், அதிக வரிகள் விலைவாசி உயர்வைத் தூண்டின என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது இந்த விடயத்தை எடுத்துக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், “அந்த காலத்தில் நான் கேலி செய்யப்பட்டேன், குறிப்பிட்ட பெயரால் அழைக்கப்பட்டேன், ஆனால் அது இன்று தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ளது. குறைந்தபட்சம் சுகாதார அணையாடைகளுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்க அரசாங்கம் ஏதாவது ஒரு தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்றார்.
READ MORE | comments

எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கு ரணிலின் திட்டம்! பகிரங்கப்படுத்திய வஜிர அபேவர்தன

Sunday, September 18, 2022

 


தேசிய கொள்கை

அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாத தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதே அதிபர் ரணிலின் திட்டம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், ரணில் விக்ரமசிங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், அவர் தனது கொள்கை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

25 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாத தேசிய கொள்கை கட்டமைப்பு

எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கு ரணிலின் திட்டம்! பகிரங்கப்படுத்திய வஜிர அபேவர்தன | Ranil Sri Lanka Political25 Years

அரசியலமைப்பின் 27ஆவதுசரத்தின்படி 2048 ஆம் ஆண்டுக்குள் இளைய தலைமுறையினருக்கு நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது வலுப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாத தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதே அதிபரின் நோக்கமாகும்.

இந்த இலக்கை நனவாக்க அனைவரின் உதவியும் தேவை. அரசியல் அடிப்படையில் சில குழுக்கள் பிளவுபட்டால், அந்தப் பணியை எப்படி நிறைவேற்றுவது என்பதை முதலில் சொல்ல வேண்டும்.

இந்தச் சவாலில் வெற்றிபெற ஒற்றுமையே மிக முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.  

READ MORE | comments

திருகோணமலையில் நபர் ஒருவர் வெட்டிக் கொலை -

 


தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை - கண்டி வீதி பெதிஸ்புர பிரதேசத்தில் அதிகாலையில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொலைச் சந்தேகத்தின் பேரில் 28 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருகில் இருந்த சிசிடிவி கெமராவில் கொலை சம்பவம் பதிவாகியுள்ளது.

READ MORE | comments

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை யூரியா உரம் இலவசம்!

 


எதிர்வரும் அறுவடை காலத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை (50 கிலோ) யூரியா உரம் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த பிரேரணைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அகுனுகொலபொலஸவில் நேற்று சனிக்கிழமை (17) இடம்பெற்ற நிக்லாவில் கலந்துகொண்டு பேசும்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இரண்டரை ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலங்களைக் கொண்ட விவசாயிகளுக்கு உரம் ஒரு மூட்டை வழங்கப்படவுள்ளதாக கூறியுள்ளார்.

READ MORE | comments

பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும்

 


பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிகரிக்கப்படும் மேலதிக நேரம் மாணவர்களின் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தது 2 மணித்தியாலங்களாவது, பிள்ளைகள் விளையாட்டில் ஈடுபடவேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்

READ MORE | comments

ஆசிரியர்கள், அரச ஊழியர்களின் சம்பளம் போதவில்லை விரைவில் அறகல செய்வோம் - யோசப் ஸ்டாலின் -

 






READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |