இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை

Tuesday, February 20, 2024


இலங்கை அணியின் பங்களாதேஷ் போட்டி சுற்றுப்பயணம் தொடர்பான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி அங்கு 3 இருபதுக்கு20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

மேலும், இந்த சுற்றுப்பயணத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.


போட்டியின் இருபதுக்கு20 போட்டிகள் மார்ச் 4, 6 மற்றும் 9 ஆம் திகதிகளிலும் ஒருநாள் போட்டிகள் மார்ச் 13, 15 மற்றும் 18 ஆம் திகதிகளிலும் நடைபெறும்.

முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 22ம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 30ம் திகதியும் தொடங்குகிறது.

இந்த சுற்றுப்பயணம் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு கீழே.

READ MORE | comments

அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்

Tuesday, February 13, 2024




இன்று (13) அதிகாலை புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 15 ஆம் தூண் பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த போது, ​​பாராளுமன்ற உறுப்பினரின் கார் அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்தின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உழவு இயந்திரத்தை ஓட்டிச் சென்றவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த காரின் சாரதி சாலியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE | comments

அஸ்வெசும – புதிய விண்ணப்பங்கள் நாளை முதல் கோரல்

Friday, February 9, 2024

 


நான்கு இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி நாளை (10) ஆரம்பமாகவுள்ளது.

பயனாளிகளை தெரிவு செய்யும் போது பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சில நிபந்தனைகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

குடும்பங்களைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்திய விதிகளில் யாராவது இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்றால், அவர்களும் இதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதேவேளை, ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இழப்பீடு பலன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதிதாக அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுநீரகக் கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

லாப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம்?

Friday, February 2, 2024

 


பிப்ரவரி மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம் இல்லை லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஜனவரி மாத விலை பிப்ரவரி மாதத்திற்கும் பொருந்தும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ நிறுவனம் இன்று (02) காலை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபரில்?

 


ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதம் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்று (02) அனுராதபுரத்தில் தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்ட ஐ.தே.க மாநாட்டில் உரையாற்றிய ரங்கே பண்டார, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வருவார் என்பதால், அதற்கு அனைவரும் தயாராகுமாறும் கேட்டுக் கொண்டார்.

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |