வரட்சியால் வடக்கு மாகாணம், மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது

Monday, July 31, 2017

அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படியாழ்ப்பாணத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேச செயலாளர் பகுதியாக, சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு காணப்படுகிறது. அங்கு, 11,640 குடும்பங்களைச் சேர்ந்த 47,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலணை, காரைநகர், சங்கானை, தெல்லிப்பழை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், 10,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளோரைக் கொண்டுள்ளன.
அடுத்த அதிகளவிலான பாதிப்பை, வடமேல் மாகாணம் சந்தித்துள்ளது. அங்கு, 82,513 குடும்பங்களைச் சேர்ந்த 281,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் 149,962 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 131,051 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்ததாக, கிழக்கு மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு, 59,003 குடும்பங்களைச் சேர்ந்த 211,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகளவிலான பாதிப்பை, திருகோணமலை மாவட்டம் எதிர்கொண்டுள்ளது. அங்கு, 27,646 குடும்பங்களைச் சேர்ந்த 105,847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் 65,341 பேரும் அம்பாறையில் 40,548 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரட்சியின் காரணமாக, 314,049 குடும்பங்களைச் சேர்ந்த 1,093,717 (1 மில்லியன் 93 ஆயிரத்துக்கு எழுநூற்று பதினேழு) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. வடக்கு மாகாணம், மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு, 133,678 குடும்பங்களைச் சேர்ந்த 462,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், யாழ்ப்பாணத்தில் 124,206 பேரும், முல்லைத்தீவில் 115,308 பேரும், வவுனியாவில் 85,771 பேரும், கிளிநொச்சியில் 83,378 பேரும், மன்னாரில் 54,152 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்
READ MORE | comments

கொக்குவில் தாக்குதல் சந்தேக நபர் கைது!

கொக்குவில் பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவரை துரத்தித் துரத்தி வெட்டியவர்களில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த விஜயரட்ணம் ஜீவராஜ் என்பவனே கைது செய்யப்பட்டதாகவும் இவன் பொலிசாரை வெட்டிவிட்டு இன்னொரு பிரதேசத்தில் வாள் வெட்டில் ஈடுபட்ட போது காயமடைந்து யாழ் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட போது பொலிசாரின் விசேட நடவடிக்கைக் குழு இவனைக் கைது செய்ததாக பொலிஸ் தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
READ MORE | comments

இரண்டாவது டெஸ்டில் சந்திமல் விளையாடுவார்- அசங்க குருசிங்க

இலங்கை இந்திய அணிகளிற்கு இடையில் மூன்றாம் திகதி கொழும்பு எஸ்எஸ் சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்டில் தினேஸ் சந்திமல் விளையாடுவார் என இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.
சந்திமல் விளையாடுவார் என நினைக்கிறேன் அவர் கடந்த இரண்டு நாட்களாக துடுப்பெடுத்தாடி வருகின்றார் என அசங்ககுருசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரங்கன ஹேரத்தின் கைகாயம் குறித்து அணி நிர்வாகம் அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அவரது கைகாயம் இன்னமும் முழுமையாக ஆறவில்லை இறுதி நிமிடம் வரை நாங்கள் அவரிற்கு வாய்ப்பை வழங்குவோம் என அசங்க குருசி;ங்க தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிக்கு முதல்நாள் நாங்கள் அவரால் வலியின்றி பந்து வீச முடியுமா என்பதை அவதானிப்போம் அவரது கைவிரலில் வலி தொடர்ந்தும் நீடித்தால் வேறு மாற்றங்கள் குறித்து சிந்தி;க்கவேண்டியிருக்கும் என குருசிங்க தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

தொண்டமனாறு பகுதியில் இராணுவத்தினர் மணல் அகழ்வு

தொண்டமனாற்றின் நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தொண்டமனாறிலிருந்து வல்லைவரை அணை கட்டப்பட்டு வருகின்றது.
இதற்காக ஆற்றிலிருந்து மண் அகழப்பட்டே குறித்த அணை கட்டப்பட்டு வருகின்றது. இவ்வாறு அகழப்படும் மண்ணினை கடந்த வியாழக்கிழமை இராணுவத்தினர் சீருடையில் சென்று மண் ஏற்றிச் சென்றுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை ஆறுதடவை மண் ஏற்றிய இராணுவத்தினர் மீண்டும் வெள்ளிக்கிழமை இரண்டு தடவைகள் மண் ஏற்றிச் சென்றதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இராணுவத்தினர் தமது சீருடையுடன் வந்து தம்மிடம் அனுமதிபெற்றே மண்ணை ஏற்றிச் சென்றார்கள் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது
READ MORE | comments

யாழில் மர்மக் காய்ச்சலால் முன்னாள் போராளி மரணம்! தொடர் மர்மம் துலங்குமா?

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ். குரும்பசிட்டிப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். குரும்பசிட்டி மேற்குப் பகுதியைச் சேர்ந்த இராசரத்தினம் ஸ்ரீபவன் (வயது - 40) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த முன்னாள் போராளி கடந்த மாதம் 29ஆம் திகதி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
15 நாட்களாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இந்த மாதம் 14 ஆம் திகதி மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து இந்த மாதம் 24ஆம் திகதி அவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
முன்னதாக வைத்தியசாலையின் நான்காம் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 26ஆம் திகதி மாலை திடீரென நிலை தடுமாறி உறவினர்களுடன் கதைத்துள்ளதாக தெரியவருகின்றது.
அத்துடன் சுவாசப் பிரச்சினை காரணமாக அவருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டதுடன், வழமை போன்று சிறுநீர் வெளியேறுவதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்தியர்களால் வழங்கப்பட்டு வந்த தீவிர சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை(29) காலை 07.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இறக்கும் முன்னர் அவரது சிறுநீரகங்கள் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முன்னாள் போராளி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட வேளை முதல் அவரது மனைவி அடிக்கடி மயங்கி விழுந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
உயிரிழந்த முன்னாள் போராளி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படும் போது டெங்கு காய்ச்சல் என வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் இது என்ன வகையான காய்ச்சல் எனத் தங்களால் இனங்காணப்பட முடியாமலுள்ளது எனத் தெரிவித்ததாகவும் உயிரிழந்த போராளியின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த முன்னாள் போராளிக்கு திருமணமாகி ஒருவருடமே ஆவதுடன் மனைவி தற்போது கர்ப்பமாகவும் உள்ளார்.
மனைவி ஏற்கனவே திருமணமானவர் என்பதுடன் அவருக்கு ஒரு பிள்ளையும் இருப்பதாக தெரியவருகின்றது. குறித்த பிள்ளையையும் அவர்களே பராமரித்து வளர்த்து வந்துள்ளனர்.
உயிரிழந்த முன்னாள் போராளியின் ஒரு கண், கடந்த கால யுத்தத்தின் போது இடம்பெற்ற மோதலில் பறிபோயுள்ளது.
ஒரு கண் பறி போன போதும் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக தன்னம்பிக்கையுடன் கடந்த காலங்களில் மேசன் வேலை, பேக்கரி வேலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும் செய்து வந்ததுடன் இறுதியாக ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இறுதியாக புதூர் நாகதம்பிரான் ஆலய உற்சவத்தின் போது ஐஸ்கிறீம் வியாபாரம் மேற்கொண்டு விட்டு வீடு திரும்பிய அவர் காய்ச்சல் எனத் தெரிவித்து வீட்டில் ஓய்வெடுத்ததாகவும் தெரியவருகின்றது.
எல்லோருடனும் சகஜமாகவும், இனிமையாகவும் பழகக் கூடிய ஒருவர் என்பதால் அவரது திடீர் இழப்பு குரும்பசிட்டிப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் போராளியின் திடீர் மரணம் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அவரது மரணம் குறித்தான மர்மங்கள் துலங்குமா? என சமூகஆர்வளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் இவ்வாறு மர்மமான முறையில் மரணமடைவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதுடன் இது குறித்து சரியான பதிலை எதிர்பாப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
READ MORE | comments

பொலிஸ் அதிகாரிகள் மீது துரத்தி துரத்தி வாள் வெட்டு! யாழ். விரைந்த பொலிஸ்மா அதிபர்

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர திடீர் விஜயமாக இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியம் இரு பொலிஸ் அதிகாரிகள் மீது நேற்றைய தினம் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே பொலிஸ்மா அதிபர் இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், தற்போது அங்கு பாதுகாப்பு மிகவும் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் துறைமுக ஊழியர்கள்

சகல தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அகில இலங்கை துறைமுக பொது ஊழியர்கள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கையளிக்கும் ஒப்பந்தத்திற்கு எதிராகவே இந்த போராட்டத்தை நடத்தவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி போராட்டம் தொடர்பான தினத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 
READ MORE | comments

பருத்தித்துறை பகுதியில் கடற்படையினர் மீது தாக்குதல் 5 பேர் கைது

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட 5 சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
READ MORE | comments

30 வருடங்களின் பின்னர் வெல்லாவெளியில் பொலிஸ் நிலையம்

Sunday, July 30, 2017

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்திற்கான புதிய பொலிஸ் நிலையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
இதுவரை காலமும் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பாலமுனை பிரதேசத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் குறித்த வெல்லாவெளி பொலிஸ் நிலையம் இயங்கி வந்துள்ளது.
இந்நிலையில், 30 வருடங்களுக்கு முன்னர் வெல்லாவெளி பொலிஸ் நிலையம் இருந்த இடத்திலேயே புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசிர் அகமட், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களானகோ.கருணாகரம், மா.நடராஜா,ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபா செலவில் குறித்த பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஹெக்டேயர் நிலப்பரப்பில் பிரதான கட்டடதொகுதி, நிலைய பொறுப்பதிகாரி அலுவலகம், ஆயுத களஞ்சியம், கடமை உத்தியோகத்தர் அலுவலகம், தொலைபேசி இயக்குனர் அலுவலகம், இரு சிறைக்கூடங்கள், தனி பொலிஸ் அலுவலர்களுக்கான விடுதி என்பன அமைக்கப்பட்டுள்ளன.
READ MORE | comments

1095 கோடி ரூபாவை கொள்ளையிட்ட தேரர்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு சீட்டுக்களை விற்பனை செய்தன் மூலம் கிடைத்த ஆயிரத்து 95 கோடி ரூபாவை தம்புள்ளை ரன்கிரி விகாரையின் முன்னாள் பொறுப்பாளர் இனாமலுவே சுமங்கள தேரர் கொள்ளையிட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தம்புள்ள ரன்கிரி விகாரையின் தற்போதைய பொறுப்பாளர் கொடகம மங்கள தேரர் இது குறித்து அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு அறிவித்தள்ளார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை விகாரைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவுச் சீட்டுக்களை விற்பனை செய்தன் மூலம் கிடைத்த ஆயிரத்து 95 கோடி ரூபாவை முன்னாள் பொறுப்பாளர்,
மத்திய கலாச்சார நிதியம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் தம்புள்ளை விகாரையின் அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றில் வைப்புச் செய்யாது அந்த பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக மங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த நிதி கொள்ளை சம்பந்தமாக துரிதமாக கவனம் செலுத்தி விசாரணைகளை நடத்துமாறும் மங்கள தேரர், அமைச்சரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.
READ MORE | comments

தமிழ் மக்களைப் பொறுப்பேற்பது யார்..?

தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார் என்ற தலைப்பில் வவுனியா சமூக ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு வவுனியாவில் நடைபெற்றது.
வவுனியா வாடி வீட்டில் நேற்று இந்நிகழ்வு இடம்பெற்றது.
அரசியல்வாதிகள் சார்பில் வன்னியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர்களான ஜி. ரி. லிங்கநாதன், எம். தியாகராஜா ஆகியோரும் அரசியல் ஆய்வாளர்கள் நிலாந்தன், சி.அ.யோதிலிங்கம் கலந்து கொண்டதுடன் மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டாளர் எஸ். சிவகரன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது சமகால அரசியல நிலமைகள் தெர்பாக ஆராயப்பட்டதுடன் தமிழரசுக் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தது.
IMG_4174IMG_4164
READ MORE | comments

சீன -இந்திய யுத்தத்தை தவிர்க்க விரும்புகிறதா பென்டகன்?

சீன-இந்திய பதட்டம் முடிவுக்கு வராத தோற்றப்பாடு இரு தரப்புக்களின் இராணுவ குவிப்புக்கு வழிவகுத்துள்ளது. எல்லையோரத்தில் இரு நாட்டு இராணுவமும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் போர் நிகழ்வதற்கான அனைத்துபணிகளும் நிறைவு நிலைக்கு வந்துள்ளது. ஆனாலும் அரச தலைவர்கள் மத்தியில் போரைத் திட்டமிட்டபடி ஆரம்பிப்பதற்கு தடையான இராஜதந்திர நடவடிக்கைகள் நிகழ்ந்து வருகின்றன. இச்சந்தர்ப்பத்தில் இரு தரப்புக்கும் இடையில் அமெரிக்காவின் அரசாங்கமும், அதன் இராணுவத் தலைமையகமான பென்டகனும் போரை தவிர்க்க இரு நாடுகளும் முன்வரவேண்டுமென கோரிக்கை விட்டுள்ளன. இரு நாடுகளும் இராஜதந்திர ரீதியான பேச்சுவாரத்தையில் ஈடுபடவேண்டுமெனவும் இந்திய –சீனா தரப்பினை கோரியுள்ளன இக்கட்டுரையும் ஏன்? பென்டகன் இந்திய-சீன தரப்புக்கள் போருக்கு போவதை தவிர்க்க வேண்டுமென கோரியது என்பதை தேடுவதாகவே அமைந்துள்ளது.
அவ்வாறு கருதுவதற்கு 1962 ஆம் ஆண்டு யுத்தமே காரணமாகும்.இந்தியாவும் -சீனாவும் 1962 இல் யுத்தம் செய்தமை தொடர்பில் அமெரிக்கத் தரப்பின் பங்கு என்ன என்பது அப்போதைய கேள்வியாகும். இந்தியத்தரப்பு குறிப்படுவதுபோல் சீனா இந்தியாவின் முதுகில் குத்திவிட்டது என்றும் சீனாவே யுத்தத்தை ஆரம்பித்ததாகவும் இந்தியாவின் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது என்றும் கருதப்படும் நிலையில் பாரிய குழப்பமே உள்ளது.அமெரிக்காவே இந்திய–சீன தரப்பை மோதவிட்டதாகவும்,இந்தியத்தரப்பை யுத்தத்துக்கு நகரத் திட்டமிட்டு தூண்டிய நாடு அமெரிக்கா என்றும் குற்றம் சாட்டுகினறது. இதனால் சோஸலிஸ முகாம் உடைந்ததுடன் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு அதுவுமொரு காரணமென குறிப்பிடப்படுகிறது. அதனால் இந்தியா சோவியத் பக்கமும் சீனா சோவியத் யூனியனிடமிருந்து விலகியது மட்டுமல்லாது 1970 களின் பிற்பகுதியில் அமெரிக்கா பக்கம் இணைந்து கொள்ள வழிவகுத்தது. இதனால் அமெரிக்கா உட்பட்ட ஏகாதிபத்திய சக்திகளுக்கு அதிக வாய்ப்பான சூழலைத் தந்தது சோவிய அணியின் வீழ்ச்சியை முதன்மைபடுத்திய அம்சமாக சீன அமெரிக்க உறவு காணப்பட்டது.
இவ்வகைச் சூழல் ஒன்றினை மீளவும் இரு அரசுகளும் அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளன என்றே தோன்றுகிறது. இரு இராணுவமும் தயார்நிலையில் இருப்பதென்பது போரை எந்த பிறசக்தியாலும் தீர்மானிக்க கூடியதாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. அப்படியான சூழல் காணப்படும்போது ஏன்? அமெரிக்கா போரை தடுப்பதற்கான கோரிக்கையை விடுவித்துள்ளது அதனை சற்று விரிவாக பார்ப்போம்.
அரசியலில் எப்போதும் ஓரம்சம் வேண்டாமென கோருவதென்பது மறைமுகமாக வேண்டும் என்பதை உணர்த்துவதாகவே அமைவதுண்டு. ஆனால் பென்டகன் கருதுவது என்பது சற்று வேறுபட்ட தளத்தில் கருதவேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது. காரணம் பென்டகன் இராணுவ ரீதியான மையம் அதற்கு இருதரப்பு இராணுவ வலிமையும் மிகத் தெளிவாக தெரிந்திருக்ககூடியது. அதிலுல் இந்தியாவின் இராணுவ வலிமை மிகத்தெளிவாக தெரிந்த நாடு உலகிலேயே அமெரிக்கா ஒன்றாகவே இருக்கும். சீனாவின் வலிமை உலகத்திற்கே தெரிவதென்பது கடினமானது. ஆனால் சீனா பலமான இராணுவத்தைக் கட்டிவளர்க்கும் நாடு என்பதை அதன் பாதுகாப்பு செலவீனத்தினை வைத்துக்கொண்டு கணிப்பிடமுடியும்.
india china military strength
எனவே பென்டகனுக்கு போர் ஒன்று மூண்டால் எப்படியான விளைவு இருதரப்புக்கும் உலகத்திற்கும் ஏற்படுமென்பதில் புரிதல் இருக்கும். இத்தகைய யுத்தம் ஒன்றை எதர்பார்ப்பதிலும் அமெரிக்க அதிகவிருப்பம் கொண்ட நாடாகவே சர்வதேச ஆய்வாளர்களது எதிர்வுகூறல் அமைந்திருந்தது. அதிலும் அமெரிக்காவுக்கு சீன- இந்திய முரண்பாடும் பகைமையும் அதனால் ஏற்படும் யுத்தமும் விருப்பமாகவும் அவசியமானதாகவும் அமைந்திருக்கும். காரணம் இரு சக்திகளும் ஆசியகண்டத்தை சார்ந்தவை இன்றைய பொருளாதார போட்டியும் வளர்ச்சியும் இருதரப்பும் வேகமாகக் பயணிக்கின்றன என்பதை உணர்த்துகின்றது. இவற்றின் மக்கள் தொகையால் ஏற்பட்ட சந்தையே உலகவர்த்தகத்தின் மிகப்பிரதான பங்கெடுப்பாக உள்ளது. குறிப்பாக கூறுவதனால் இருநாடுகளதும் சந்தையினாலும் பொருளாதாரக் கொள்கைளாலுமே அமெரிக்கா உட்பட்ட மேற்குலகப் பொருளாதார நெருக்கடியும் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்படுகிறது.
சீனாவும் -இந்தியாவும் தங்கள் சந்தைகளை திறந்த சந்தையாக கொண்டிருப்பது மேற்குலகப் பொருளாதாரம் நிலைத்திருப்பதற்கு வாய்ப்பாக விளங்குகிறது. அதிலும் இந்தியச் சந்தையானது எந்தத் தடையுமில்லாத திறந்தசந்தையாகும் சீனா தனது சந்தையை இரண்டு தளத்தில் மிகத் தெளிவாக வகைப்படுத்தி வைக்குள்ளது. ஒன்று தனது நாட்டின் எல்லைக்குள் மிக கட்டுப்பாட்டுடன் கூடிய சந்தைக்கட்டமைப்பையும்,வெளிநாடுகளில் அந்நந்த நாடுகளின் இயல்புக்கு அமைவாக சந்தையின் கட்டமைப்பில் வடிவமைத்துள்ளது. உள்நாட்டச் சந்தையை மிக தெளிவாக கட்டுப்படுத்தியுள்ள அதே சந்தர்ப்பத்தில் வெளிநாடுகளில் திறந்த சந்தையை ஊக்குவிக்கின்றது. அதற்கான அரசியல் பொருளாதாரக் கொள்கையை வரைந்து செயல்படுகின்றது.
இதனால் பொருளாதார ரீதியல் அமெரிக்க உட்பட மேற்குலகம் சீனா-இந்தியா நாடுகளில் அதிகம் தங்கியுள்ளது. இதனை இழப்பதற்கு அந்த நாடுகள் தயாராக இல்லை. மேலும் சீனாவின் கடன்களிலும் பொருளாதார ஒத்துழைப்புக்களிலும் அமெரிக்கா அதிகமாக நெருக்கத்தினைக் கொண்டுள்ளது. அதனால் சீனாவைள பொருளாதார ரீதியில் பகைக்கவேண்டுமாயின் சீனாவுக்கு நிகரான ஒரு நாடு அமெரிக்காவுக்கு தேவையாகும். அவ்வகை நாடாக அமெரிக்கா இந்தியாவையே அடையாளம் கண்டுள்ளது. ஆனால் இந்தியாவின் வளர்ச்சி வேகமும் போட்டிக்கான உந்துதலும் சீனா போன்றில்லை என்பதுடன் தற்போது தான் இந்தியா பொருளாதாரத்தின் அதிகமான வளர்ச்சிப்போக்கை காட்டிவருகிறது முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் காலத்தைவிட ட்ரம்ப்-மோடி நெருக்கமும் அரசியல் பொருளாதார இராணுவ ஒத்துழைப்பும் அதிகமாகியுள்ளது. இதன் அடிப்படையில் அமெரிக்க சார்பு வெளியுறவுக் கொள்கை கொண்டுள்ள இந்தியா அதிகமான ஒத்துழைப்புகளுக்கு தயாராகின்றது.
இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் அமெரிக்க மட்டுமன்றி அமெரிக்க நாட்டு சக்திகளுடான உறவு அதிலும் இஸ்ரேலுடனான நெருக்கம் இந்தியா –சீனா யுத்தத்தை சாத்தியப்படும் என்ற கணிப்பீடு எதிர்காலத்திற்கானது. அதனை தவிர்ப்பதென்பது கடினமானதாகவே அமையும.; அவ்வகை மோதல் நிகழாதுவிட்டால் அமெரிக்க உட்பட்ட மேற்கின் இருப்பு கேள்விக்குரியதாக அமைவதனைவிட சீனா -இந்தியத் தரப்பிடம் சரணடைய வேண்டிய நிலை ஏற்படும். மேற்கின் பிரதான உத்தி வலுவான போட்டித்தன்மையுடைய சக்திகளை மோதவிடுவதன் மூலம் அல்லது போரை அத்தகைய சக்திகளை நோக்கி நகர்த்துவதன் மூலம் அவ்வகை சக்திகளின் இயல்பான வளர்ச்சியை முடக்குவதாகும்.
இந்தியாவுடனான நட்பு என்பதற்காக அமெரிக்கா இந்தியாவை வளர்க்கிறது அல்லது இதன் வளர்ச்சிக்காக உதவப்போகிறது என்பதல்ல. மாறாக அத்தகைய வளர்ச்சியை மட்டுப்படுத்துவும் தனது எல்லைக்குள் அடங்கவுமே நட்புறவை வளர்க்கின்றது. அவ்வாறே கடந்த அரை நூற்றாண்டுக்;கு மேலாக மேற்குலம் ஏனைய கண்ட நாடுகளை கையாண்டள்ளது. இதில் அமெரிக்காவின் தயவில் எழுச்சி பெற்ற சீனாவும் தற்போது அமெரிக்க தயவில் வளர்க்கப்படும் இந்தியாவும் மோதினால் அமெரிக்காவுக்கு பலமான எதிரி காணாமல் போய்விடும் அல்லது மேற்குக்கு சவாலிடும் தேசம் காணாமல் போய்விடும். இத்தகைய தளத்தில் சீன- இந்திய யுத்தம் ஒன்று அவசியமானது எதிர்காலத்தில் அதனை தவிர்க்க முடியாது.
VBK-INDO-CHINABORDER
ஆனால் தற்போது இரு தரப்பினை இராணு ரீதியில் அளவிட்டால் சீனா வெற்றி பெறும் நிலையிலுள்ளது. எல்லைப் பாதுகாப்பில் இந்தியா கற்பனையில் செயல்படுவதாக சீனா தரப்பு குற்றம் சாட்டுகிறது. அதனால் இந்திய தரப்பை அதிகம் தயார்படுத்தவேண்டிய கடப்பாடு அமெரிக்காவிற்கு தேவைப்படுகிறது.அது மட்டுமன்றி சீனாவும் அமெரிக்காவின் தென்சீனக்கடல் விவகாரம், வடகொரியா விவகாரத்திற்கு பதிலாக இந்திய எல்லை விடயத்தை நோக்குகிறது. நிச்சயமாக இந்தியத்தரப்புடன் யுத்தத்துக்கு போன அனுபவத்துடன் இந்தியாவை எப்படி கையாளலாமென சீனாவுக்கு நன்கு தெரியும். பாகிஸ்தான் விடயத்தல் இந்தியாவின் நகர்வை எப்படி மட்டுப்படுத்துதல் நேபாளம், பூட்டானுடன் இந்தியாவின் செல்வாக்கை எப்படி முடிவுக்கு கொண்டுவருவதென சீனா கருகிறது. இதனால் சீனா இந்தியாவை இலக்குவைப்பதைவிட இந்தியாவின் நட்புக்கரமான அமெரிக்காவை இலக்குவைத்தே நர்க்கிறது. ஏறக்கறைய சீனாவின் தந்திரம் செயல்பட ஆரம்பித்துள்ளது. இது நிச்சயம் அமெரிக்காவின் பின்புலங்களை இந்திய அரசியலில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இந்திய ஆளும் தரப்பிலுள்ள கேரளா மேட்டுக்குடிகளும் சீனாவுடன் சுமூகமான உறவை வைத்துக்கொள்ளவும் எல்லை நாடுகளுடன் நட்புறவாக செயல்படவேண்டுமெனவும் உணருகின்றன. எல்லைநாடு பெரிய பொருளாதார தேசம் அதனுடன் பகைப்பது நியாயமற்றது தவறானது என்ற வாதம் அவர்களிடம் உண்டு.
மாறு தரப்பு மேட்டுக்குடியானது அதாவது பிராமணர் தரப்பு சீனாவுடன் முரண்பட்டுக்கொண்டு அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை பெறவேண்டும் எனக் கருதுகின்றன.அதாவது சீனாவை எதிரியாகக் கருதுவது தவிர்க்கமுடியாதெனக் குறிப்பிடும் பிராமணர் தரப்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு அவசியமானது எனக்கூறுகிறது இத்தகைய இழுபறியை சீனா பயன்னடுத்துவதன் மூலம் அமெரிக்காவை நிராகரிக்க முனைகிறதா என்பதும் இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையை கைப்பற்றி வைத்துள்ள சீனா போரை எதிர்கொள்வதன் மூலம் இந்தியமத்திய அரசை சமூகங்களுடன் மோதவிடலாமென கணக்குப்போடுகிறது.
சீனா அதனது வரைபடத்தில் என்றுமே இந்திய எல்லையோர மாநிலங்களை அதனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர எத்தனிக்கிறது அதன் நீண்டகால இலக்காகவும் கொண்டு இயங்குகிறது. எனவே இராணுவ ரீதியில் இந்தியா ஒரு போருக்கு போவதனாது இந்தியத்தரப்பு விரும்புகிறதோ இல்லையோ ஆனால் அமெரிக்கா விரும்பவில்லை. இதனை இந்திய ஆளும் தரப்புத்தான் தீர்மானிக்கவேண்டும் என்றில்லை. பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் அமெரிக்கா உட்பட மேற்குலக்கு ஆபத்தானது. சீனாவைப் பொறுத்தவரை காத்திருப்பது தயார்செய்வது எல்லையை தொடர்ச்சியாக கண்காணிப்பது என அது சரியான நகர்வை அல்லது இந்தியாவுக்கு சவாலான நிலையை எடுத்துவருகிறது. இதில் இந்தியத்தரப்பு மேலும் தனது நிலையை சிக்கலாக்கி வருகிறது. பிற அரசுகளில் தங்கியிருந்து போர்புரிவதென்பது அதன் இருப்புக்கு அபாயமானது.
இந்திய – சீனப் போரை எல்லோரும் தவிர்க்க விரும்புகின்றமை இராஜதந்திர உரையாடலில் தெளிவாக தெரிகிறது. அதனால் சீனா முன்நோக்கி நகர்கிறது. இந்தியா சிக்கலுக்குல் நகர்கிறது. அமெரிக்கா தந்திரமான எதிர்காலத்தில் மோத விடுவதற்கான உத்தியுடன் செயல்படுகிறது.
READ MORE | comments

நீதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு சிலை வைப்பார்கள் போல் இருக்கின்றது: வி.எஸ்.சிவகரன்

கடமை தவறிய நீதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு சிலை வைப்பார்கள் போல் இருக்கின்றது என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற ‘தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார் ?’ என்னும் தலைப்பில் இடம்பெற்ற கலந்தாய்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவித்ததாவது,
ஒரு மெய்பாதுகாவலராக இருந்தவர் அந்த மெய்பாதுகாவலரின் நிலைப்பாட்டுக்கு அப்பால் சென்று பஞ்சாயம் தீர்க்க போய் நடந்த ஒரு சம்பவத்தை அவரை ஒரு தியாகியாக்கி எம்மவர்கள் வீர வணக்கம் செலுத்துகின்றார்கள். நான் நினைக்கின்றேன் சிலையும் வைத்து விடுவார்கள் போல் இருக்கின்றது.
பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கின்றது. நாங்கள் இழக்க முடியாதவர்கள் எல்லோரையும் இழந்தவர்கள். இந்த விடுதலையில் நாங்கள் எத்தனையோ தியாகங்களையெல்லாம் சந்தித்தவர்கள். இந்த விடுதலைக்காக பல்வேறு கால கட்டங்களில் போராடியவர்கள். அவர் தன்னுடைய கடமையை கூட சரியாக செய்யவில்லை. கடமையை கூட சரியாக செய்யாத பொலிஸ் காரனுக்கு பதவி உயர்வு கொடுத்திருக்கின்றார்கள். அதாவது இராணுவ சட்டத்தின் பிரகாரம் தன்னுடைய துப்பாக்கியை எதிரி பறித்து அவனுடைய துப்பாக்கியால் எதிரி சுட்டவனுக்கு பதவி உயர்வு கொடுத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம் அதற்கு எம்மவர்கள் வீர வணக்கம், தியாகி, அறப்போர் நாயகம் என்றெல்லாம் சொல்கின்றார்கள்.
நீதிபதியை இலக்கு வைக்கவில்லை என்றும் சொல்லிவிட்டார்கள். இப்பொழுது நீதிபதியும் முதலமைச்சர் ஆகப்போகின்றார் அவரையும் தியாகி என்றெல்லாம் சொல்கின்றார்கள். எனக்கு தெரியவில்லை இந்த நீதி, நீதிபதிகளெல்லாம் இந்த பயங்கரவாத அரசியலமைப்புக்கு உட்படுத்தப்பட்டு தமிழ் மக்களுடைய போக்குகளுக்கு எவ்வாறான நிலைப்பாடு.
அண்மையில் இந்த கண்ணதாசனுடைய தீர்ப்பு. எனக்கு தெரியவில்லை. புனர்வாழ்வு அளிப்பது தண்டனையில்லையா? அல்லது அதற்கு பிறகும் தண்டனை வழங்குவதா? கண்ணதாசனுக்கு இப்பொழுது ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கின்றது. அப்படியென்றால் முன்னாள் போராளிகள் எல்லோருக்கும் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டுமா? அல்லது ஆதரவாக இருந்த எங்களை போன்றவர்களுக்கும் ஆயுள் தண்டனை தர வேண்டுமா? இது விளங்கவில்லை.
இந்த ஜனநாயக சூழல் எவ்வாறு போகின்றது. ஜனநாயக சூழலை உருவாக்குகின்ற நிலை எப்படி போகின்றது. அல்லது இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற சம்மந்தன், சுமந்திரன் போன்றவர்கள் அதற்கு எவ்வளவு ஒத்தூத போகின்றார்கள். ஒன்றுமே புரியாத காலகட்டமாக இருக்கின்றது. அரசோடு ஒத்துழைப்பதற்கு தண்டனையில்லை. ஒத்துழைக்காதவர்களுக்கு தண்டனையா? என்ன நீதி? என்ன நியாயம்? கங்காரு நீதிமன்றம் போல் தான் இந்த நீதி செயற்பாடுகளும் போகின்றனவா? என்ற கேள்விகளும் எழுகின்றது.
ஆகவே தமிழ் மக்களுடைய ஒழுக்க நெறி முறைகள் சார்ந்த அரசியல் கட்டமைப்புக்கள் போக்குகள் எல்லாம் திசைமாறிய நிலையிலே ஒரு வீர வணக்கம் போடுகின்ற நிலைப்பாடுகளோடு வந்து நிற்பது வெட்ககேடான காரியமாக இருக்கிறது. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் போக்குக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென மேலும் கருத்து தெரிவித்தார்.
READ MORE | comments

கிழக்கின் வளங்கள் அபிவிருத்திக்கு முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை! - பிரதமர் ரணில்

Saturday, July 29, 2017

போர் முடிவடைந்ததும் நாங்கள் வலுவிழக்கவில்லை. பாரிய அபிவிருத்திகளையும் சாவால்களையும் நோக்கியோ சென்று கொண்டிருக்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மட்டக்களப்புக்கு நேற்று பயணம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், கிழக்கு மாகாணத்தில் அதிகளவான வழங்கள் உள்ளது.அவற்றில் முழுமையான பிரயோசனங்கள் அடையப்படவில்லை. அந்த வளங்களை பயன்படுத்தி எவ்வாறு பிரயோசனம் அடையளாம் இலங்கையில் மூவின மக்களும் வாழும் பிரதேசமாக காணப்படுகின்றது. மூவினங்களும் ஒன்றிணைந்து எவ்வாறு இந்த திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவே நாங்கள் இங்கு கலந்துரையாடியுள்ளோம்.
கிழக்கு மாகாணசபையும் மத்திய அரசாங்கமும் ஒன்றிணைந்து பயணிக்கும் வகையிலான திட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது. அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. மாகாணசபையுடன் இணைந்து மேலதிக அபிவிருத்திகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் ஆராய்கின்றோம்.அதனை எவ்வாறு குறுகிய காலத்திற்குள் நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.
கதைத்து கதைத்துக்கொண்டிருக்கின்றோமே தவிர எதுவித முன்னேற்றத்தினையும் நாங்கள் காணமுடியவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி அபிவிருத்திகளை மேற்கொள்ளும்போது அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். குறைந்தபட்சம் எதனையாவது செய்துள்ளோமா என்பதையாவது காட்டவேண்டும்.
யுத்தின் பின்னர் வட,கிழக்குக்கு பெருமளவான நிதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துவது நாங்கள் ஆய்வுசெய்து அதனைக்கையாள வேண்டும்.சர்வதேசத்தின் ஊடாக அந்த நிதிகள் வழங்கப்பட்டுள்ளது.அதனை நாங்கள் உரிய முறையில் பயன்படுத்தவேண்டும். அதேபோன்று திருகோணமலையில் சிங்கப்பூர் அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. சில கிராமங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. பாரிய அபிவிருத்திகள் வெளிநாடுகளினால் நடாத்தப்படுகின்றது.
மட்டக்களப்பில் உள்ள விமான நிலையத்தினை இலங்கையில் உள்ள ஏனைய விமான நிலையங்களுடன் ஒருங்கிணைத்து அதன் மூலம் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்யமுடியும் என எதிர்பார்க்கின்றோம். குறைந்த நேரத்தில் மாத்தறையில் இருந்து மட்டக்களப்பு வந்து செல்லமுடியும். அதேபோன்று பாதை புனரமைப்புக்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
காடுகளை பாதுகாத்து சுற்றுலாத்துறையினை ஈர்க்கும் இடங்களாக மாற்றுவதன் மூலமும் எமது வளங்களை சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக மாற்றுவதன் மூலமும் நாங்கள் இப்பகுதிகளை அபிவிருத்தி செய்யமுடியும். எமது வளங்களை சரியான முறையில் திட்டமிட்டு பயன்படுத்தப்படுமானால் எமது பகுதிகளில் உள்ள வாழ்வாதார பிரச்சினைகள் குறைவடையும். அதற்கான உதவிகளை அரசாங்கமும் வழங்கும்.
சுற்றுலாத்துறை மூலம் மீன்பிடித்துறையினை அபிவிருத்தி செய்வதற்கும் மீன்பிடியாளர்களின் வளத்தினை அதிகரிப்பதற்கும் பாரியளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கமுடியும். தனிப்பட்டவர்களின் காணிகளை அவர்களுக்கு வழங்கவேண்டும். அபகரிக்கப்பட்ட நிலங்களை நாங்கள் மீண்டும் மீட்கவேண்டும்.
இந்த அபிவிருத்திட்டங்களை மாகாண,மாவட்ட.பிரதேச ரீதியாக நடைமுறைப்படுத்தவேண்டும். இதனை சிலர் எவ்வாறு செய்வது என கேட்கின்றனர். இதனை சவாலாக எடுத்து செய்துபார்க்கவேண்டிய தேவையுள்ளது. குறுகிய காலத்திற்குள் தீர்மானிக்கப்படும் வேலைத்திட்டங்கள் வெற்றியடைவதில்லையென கூறுகின்றனர். அதனை செய்துபார்ப்போம். யுத்தம் முடிவடைந்ததும் நாங்கள் வலுவிழக்கவில்லை.பாரிய அபிவிருத்திகளையும் சாவால்களையும் நோக்கிய சென்று கொண்டிருக்கின்றோம் என அங்கு மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக்கு கிடைத்த ஆசிய நோபல் பரிசு!

ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ராமன் மக்சாசே விருது 82 வயது இலங்கைத் தமிழ் பெண்மணியான கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்சின் புகழ்பெற்ற அதிபரான ராமன் மக்சாசே நினைவாக ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது இலங்கைத் தமிழ்ப் பெண்மணி கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கெத்சி சண்முகம் இலங்கையில் யுத்த காலத்தில் கணவரை இழந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கிய ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

கைது செய்யப்படுவாரா விஜயகலா? திங்கட்கிழமை விசாரணைக்கு அழைப்பு

வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை தப்பிக்க விட்ட விவகாரம் தொடர்பாக, வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்வதற்காக இன்று குற்ற விசாரணை பிரிவிற்கு வருமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் கைது செய்யப்படும் கூடும் என்ற அச்சத்தினால் அவர், விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு மாற்றிக் கொண்டுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க விடுவித்த சம்பவம் தொடர்பில் அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக விஜயகலா அழைக்கப்பட்டிருந்தார். விஜயகலா மகேஸ்வரன் மற்றும் கொழும்பு சட்டபீட பேராசிரியர் தமிழ்மாறனிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு ஊர்காவற்துறை நீதிபதி அப்துல் மஜிட் மொகமட் றியாழ் கடந்த செவ்வாய்க்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய நேற்றையதினம் தமிழ் மாறன் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்து கொள்ளப்பட்டுள்ளது. புங்குடுதீவில் பிறந்த நபரான தமிழ் மாறனிடம் சுவிஸ் குமாரை காப்பாற்றுமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனே ஆலோசனை வழங்கியுள்ளார்.
அப்போதைய யாழ் மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, தமிழ் மாறனின் கீழ் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனிதாபிமான சட்டம் தொடர்பில் கற்று வந்ததனை நன்கு அறிந்த விஜயகலா மகேஸ்வரன் இதனை சாதகமாக பயன்படுத்தி சுவிஸ் குமாரை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
குற்ற விசாரணை பிரிவினரால் இதற்கு முன்னர் விஜயலாவிடம் வாக்குமூலம் ஒன்று பெற்றுள்ள போதிலும் இந்த தொடர்பை அவர் தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி மறைத்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
READ MORE | comments

Sri Lanka's conflict-affected Tamil women still seeking justice - report

Eight years after the end of Sri Lanka's armed conflict, Tamil women in the war-torn north and east are still seeking justice and truth for wartime violations, a report released by a non-governmental organization committed to preventing and resolving deadly conflict says.
The International Crisis Group in a report released today says the promises by the government to the United Nations Human Rights Council in 2015 have failed to materialize and the urgent economic and psychosocial needs of all conflict-affected groups remain unmet. The report notes that the legacy of war continues to impose hardships, particularly on conflict-affected women: lack of information on missing relatives, displacement from their land, economic deprivation, psychological trauma, vulnerability to sexual violence and exploitation, plus a militarized environment that reinforces much of the above. Despite their agenda-setting activism, women have been given little role in shaping transitional justice policies, the ICG says in its report.
The conflict-affected women's most urgent demand is to know the fate of missing relatives but they also insist that the truth and justice they seek must be part of a broader approach to meet their economic, social, psychological, and security needs. The ICG urges the Sri Lankan government to prioritize the needs and rights of conflict-affected women if Sri Lanka is to address the past in a way that reconciles its communities and builds lasting peace. The ICG among the recommendations made to the Sri Lankan government urged to make the Office of Missing Persons (OMP) operational immediately with independent staff, offices and give sufficient resources to set up branches in the north and east.
"Addressing the specific needs of conflict-affected women and involving them more fully in the design and implementation of transitional justice programs are essential steps, both for reducing the rising tension in the north and east and for restoring hope that the political transition promised in 2015 can still be realized," the report said.
READ MORE | comments

மகிந்த பெற்ற கடனை அடைப்பதற்கு மட்டும் 3.2 ட்ரில்லியன் தேவை

மகிந்த ராஜபக்‌ச அரசு பெற்­றுக்கொண்ட கடன்­களை மீளச் செலுத்த 2019ஆம் ஆண்டு 3.2 ட்ரில்­லி­யன் ரூபா தேவைப்­ப­டு­வ­தாக நிதி­ய­மைச்­சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அரசு பத­வி­யேற்ற பின்­னர், பன்­னாட்டு அரங்­கி­லி­ருந்து மனித உரி­மைப் பிரச்­சினை, பெரும் கடன்­சுமை, ஊழல் மோசடி, குப்­பைப் பிரச்­சினை எனப் பல்­வேறு குப்­பை­மே­டு­க­ளைச் சுமக்க வேண்டி ஏற்­பட்­டது.
கடந்த ஆட்­சிக் காலத்­தில் இடம்­பெற்ற மோச­டி­கள் தொடர்­பில் எவ­ருக்­கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்­லை­யென்ற குற்­றச்­சாட்டு காணப்­ப­டு­கி­றது.
ராஜபக்‌ச குடும்­பத்­தில் வீடு வாங்­கி­யமை, கறுப்­புப் பணப் புழக்­க­மென 3.1 பில்­லி­யன் ரூபா பெறு­ம­தி­யான மோசடி குறித்த தக­வல்­கள் நீதி­மன்­றத்­துக்கு வழங்­கப்­பட்டு வழக்­கு­கள் தொடுக்­கப்­பட்­டுள்­ளன. எனி­னும் வெளி­நாட்­டில் மறைத்து வைக்­கப்­பட்ட நிதி தொடர்­பான விவ­ரங்­க­ளைப் பெற­மு­டி­யா­துள்­ளது.
நாட்­டின் கடன்­சு­மை­க­ளுக்­காக இந்த வரு­டத்­தில் அரசு 2,085 மில்­லி­யன் டொலர்­க­ளைச் செலுத்­தி­யுள்­ளது. இதில் 72 வீதம் கடந்த அர­சின் காலத்­தில் பெறப்­பட்ட கடன்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வா­கும்.
2019ஆம் ஆண்­டா­கும்­போது வரு­டத்­துக்­கான கடன் மீள் கொடுப்­ப­ன­வுக்­காக 3.2 ட்ரில்­லி­யன் ரூபா தேவைப்­ப­டு­கி­றது.
இதில் 82 வீத­மா­னது கடந்த அர­சின் காலத்­தில் பெறப்­பட்­ட­தா­கும். இது வரு­மா­னத்­தை­விட மூன்று மடங்கு அதி­க­மா­ன­தா­கும். 2020 ஆம் ஆண்­டா­கும் போது 3752 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­கள் செலுத்த வேண்­டி­யி­ருக்­கும். 2022 ஆம் ஆண்டு தலை­யைத் தூக்க முடி­யதள­வுக்­குக் கடன் பெறப்­பட்­டுள்­ளது.
பன்­னாட்டு நாணய நிதி­யம் எமது நிதி நிலை­மை­க­ளின் பலத்தை அறிந்து உதவி வரு­கி­றது. இவ்­வா­றான நிலை­யி­லேயே வெளி­நாட்­டுச் செலா­வ­ணி­யைத் தாரா­ள­ம­யப்­ப­டுத்­தும் வகை­யி­லான சட்­டத்தை அரசு கொண்­டு­வந்­துள்­ளது.இத­னூ­டாக வெளி­நாட்டு மூல­தன முத­லீ­டு­களை நாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
READ MORE | comments

‘நீதித்துறை மீதான அச்சுறுத்தல்கள் நாட்டை இருண்ட யுகத்திற்கு இட்டுச் செல்லும்’

நீதித்துறை கட்டமைப்பு மீதான அச்சுறுத்தல்கள் நாட்டை இருண்ட யுகத்திற்கு இட்டுச் செல்லும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
நாட்டின் நீதித்துறைக் கட்டமைப்பின் பாதுகாவலர்களான நீதிபதிகளையோ அவரது பாதுகாப்புத் தரப்பினரையோ இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களால் நாட்டின் சாதாரண பிரஜைகளது பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் தோன்றுகின்றன.
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவலர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் குறிப்பிட்டார்.
யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா இளஞ்செழியனின் மெய்ப் பாதுவலரான பொலிஸ் உத்தியோகத்தரின் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் தனது கடுமையான கண்டனத்தையும் வௌியிட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னால் பாரிய திட்டமிடல்கள் இருப்பின் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை இனிமேல் நாட்டின் நீதித்துறைக் கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் விடுக்க எண்ணும் எவருக்கும் எச்சரிக்கையாக அமைய வேண்டும்.
இதன்மூலம் நாட்டில் வாழும் சாதாரண மக்களுக்கும் தம் பாதுகாப்பு குறித்து ஒரு நம்பிக்கை பிறக்கும் என்பதுடன் இந்த சம்பவம் சர்வதேச மயப்படுத்தப் பட்டுள்ளமையால் இலங்கையின் சட்டம் ஒழுங்கு குறித்து சர்வதேச ரீதியிலும் சிறந்த தோற்றப்பாட்டை உருவாக்கலாம்.
நாட்டின் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் பாரபட்சம் பாராது தீர்ப்புக்களை வழங்கும் நீதிபதிகளது பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் முன் வரவேண்டும்.
சுயாதீனமானதும் சுதந்திரமானதுமான நீதித்துறையின் ஊடாகாவே வளமான நாட்டிற்கான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதை மிகத் தௌிவாக கூறிக் கொள்கிறேன்.
எனவே குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கான தண்டனைகள் மென்மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.
READ MORE | comments

குழாய்­நீ­ரைச் சிக்­க­ன­மாக்க சென்­சர் முறை அறி­மு­கம்


குழாய் மூல­மான தண்­ணீ­ரைச் சிக்­க­ன­மாக பயன்­ப­டுத்­தக் கூடி­ய­தாக சென்­சர் முறை­யி­லான குழாய் மாதிரி அமைப்பு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
இதனை முதற்­கட்­ட­மாக வடக்கு மாகா­ணத்­தில் உள்ள 50 பாட­சா­லை­க­ளுக்­குப் பொருத்­தத் தீர்­மா­னித்­துள்­ள­தாக மாகாண கல்­வித் திணைக்­க­ளம் தெரி­வித்­தது.
யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த மொரட்­டுவ பல்­க­லைக் கழ­கத்­தில் பயி­லும் மாண­வர்­க­ளால் இவற்றை உரு­வாக்­கி­யுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.
வடக்கு மாகா­ணத்­தில் தற்­போது நில­வும் வறட்­சி­யான கால நிலை­யால் குழாய் நீரைச் சிக்­க­ன­மா­கப் பயன்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வாறு சென்­சர் முறை­யில் அவை அமைக்­கப்­ப­டு­கின்­றன.
யாழ்ப்­பா­ணப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த மாண­வர்­கள் இந்­தக் குழாய் மாதிரி அமைப்பை வடி­வ­மைத்­துள்­ள­னர். இதற்­கான அறி­மு­க­நி­கழ்வு வடக்கு மாகா­ணக் கல்­வித் திணைக்­க­ளத்­தில் நேற்று இடம்­பெற்­றது.
இந்­தத் திட்­டம் பய­ன­ளிக்­கக் கூடிய வகை­யில் அமை­யும் என்ற நோக்­கில், முதற்­கட்­ட­மாக மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மா­க­வுள்ள 50 பாட­சா­லை­க­ளில் பொருத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என்று கல்­வித் திணைக்­க­ளத்­தி­னர் மேலும் தெரி­வித்­த­னர்.
READ MORE | comments

அரசாங்கத்திற்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கைகளை அடக்குவோம் : ராஜித

அரசாங்கத்தை குழப்பும் வகையில் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டங்கள் உள்ளிட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் போராட்டங்களை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் தொழிற்சங்க உரிமைகள் தவிர்ந்த அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியே ஆக வேண்டுமெனவும் இது தொடர்பாக எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்திலும் , கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
READ MORE | comments

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க யோசனை

சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 200 ரூபாவினால் அவற்றின் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இதற்கு அரசாங்கம் இன்னும் பதில் வழங்கவில்லையெனவும் இது தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையே பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
READ MORE | comments

நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்

நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் ரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிந்து வீழக்கூடிய பல இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
READ MORE | comments

3 மாகாண சபைகள் ஆளுனர்களின் பொறுப்பில்

எதிர்வரும் செப்டம்பர் இறுதியில் ஆயுட்காலம் முடிவடைவுள்ள சப்ரகமுவ , வட மத்தி மற்றும் கிழக்கு மாகாண சபைகளை ஆளுனர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
இதன்படி செப்டம்பரில் அவற்றின் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னர் அவற்றை ஆளுனர்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு 9 மாகாண சபைகளினதும் ஆயுட்காலம் முடிந்த பின்னர் அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்கே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பாக தீர்மானம் மேற்கொண்டுள்ளதுடன் எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடர்களின் போது இது தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றவுள்ளதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்றது
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |