Home » » குழாய்­நீ­ரைச் சிக்­க­ன­மாக்க சென்­சர் முறை அறி­மு­கம்

குழாய்­நீ­ரைச் சிக்­க­ன­மாக்க சென்­சர் முறை அறி­மு­கம்


குழாய் மூல­மான தண்­ணீ­ரைச் சிக்­க­ன­மாக பயன்­ப­டுத்­தக் கூடி­ய­தாக சென்­சர் முறை­யி­லான குழாய் மாதிரி அமைப்பு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
இதனை முதற்­கட்­ட­மாக வடக்கு மாகா­ணத்­தில் உள்ள 50 பாட­சா­லை­க­ளுக்­குப் பொருத்­தத் தீர்­மா­னித்­துள்­ள­தாக மாகாண கல்­வித் திணைக்­க­ளம் தெரி­வித்­தது.
யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த மொரட்­டுவ பல்­க­லைக் கழ­கத்­தில் பயி­லும் மாண­வர்­க­ளால் இவற்றை உரு­வாக்­கி­யுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.
வடக்கு மாகா­ணத்­தில் தற்­போது நில­வும் வறட்­சி­யான கால நிலை­யால் குழாய் நீரைச் சிக்­க­ன­மா­கப் பயன்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வாறு சென்­சர் முறை­யில் அவை அமைக்­கப்­ப­டு­கின்­றன.
யாழ்ப்­பா­ணப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த மாண­வர்­கள் இந்­தக் குழாய் மாதிரி அமைப்பை வடி­வ­மைத்­துள்­ள­னர். இதற்­கான அறி­மு­க­நி­கழ்வு வடக்கு மாகா­ணக் கல்­வித் திணைக்­க­ளத்­தில் நேற்று இடம்­பெற்­றது.
இந்­தத் திட்­டம் பய­ன­ளிக்­கக் கூடிய வகை­யில் அமை­யும் என்ற நோக்­கில், முதற்­கட்­ட­மாக மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மா­க­வுள்ள 50 பாட­சா­லை­க­ளில் பொருத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என்று கல்­வித் திணைக்­க­ளத்­தி­னர் மேலும் தெரி­வித்­த­னர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |