Home »
எமது பகுதிச் செய்திகள்
» கொக்குவில் தாக்குதல் சந்தேக நபர் கைது!
கொக்குவில் தாக்குதல் சந்தேக நபர் கைது!
கொக்குவில் பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவரை துரத்தித் துரத்தி வெட்டியவர்களில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த விஜயரட்ணம் ஜீவராஜ் என்பவனே கைது செய்யப்பட்டதாகவும் இவன் பொலிசாரை வெட்டிவிட்டு இன்னொரு பிரதேசத்தில் வாள் வெட்டில் ஈடுபட்ட போது காயமடைந்து யாழ் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட போது பொலிசாரின் விசேட நடவடிக்கைக் குழு இவனைக் கைது செய்ததாக பொலிஸ் தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: