நல்லாட்சியை காக்க தேர்தல் மேடையில் ஏறும் சந்திரிகா

Friday, July 31, 2015

லண்டனில் இருந்து இலங்கை திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பொதுத் தேர்தல் ஊடாக நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவதற்காக மாதுளுவாவே சோபித தேரர் தலைமையிலான பிரஜைகள் அமைப்பு மற்றும் தொழிற்சங்க ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து மேடையில் ஏறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஜனவரி 8 வானவில் புரட்சியில் சந்திரிக்காவே மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக கொண்டு வந்தார்.
அத்துடன் மைத்திரிபால சிறிசேன மீதான நம்பிக்கை தொடர்பில் நற்சான்றிதழை சந்திரிக்காவே எதிர்க்கட்சியினருக்கும் பொது அமைப்புகளுக்கும் வழங்கியிருந்தார்.
அத்துடன் நல்லாட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக எதிர்க்கட்சியுடன் ஐக்கியமான கூட்டணியை ஏற்படுத்த சந்திரிக்காவே பாரிய பங்கை முன்னெடுத்தார்.
இதனால், ஜனவரி 8 ஆம் திகதி பெற்ற வெற்றியை பாதுகாக்க உதவுமாறு சுயாதீன சிவில் அமைப்புகளும் அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கு சந்திரிக்காவும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அறியகிடைத்துள்ளது. இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இன்னும் சில தினங்களில் மாதுளுவாவே சோபித தேரர் மற்றும் தொழிற்சங்கங்க ஒன்றியத்துடன் இணைந்து தேர்தல் மேடையில் ஏறுவார் என கூறப்படுகிறது.
READ MORE | comments

மஹிந்தவின் புகைப்படங்களை அகற்றுமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகைப்படங்களை அகற்றுமாறு தேர்தல் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள், புனரமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகைப்படங்கள் அடங்கிய பெயர்ப் பலகைகள், பதாகைகள் உள்ளிட்டன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான பதாகைகளை தற்காலிக அடிப்படையில் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி தேர்தல் ஆணையாளர் பிமல் இந்திரஜித் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
மாவட்டத்தின் சகல உள்ளுராட்சி மன்றங்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த உத்தரவினை எந்தவொரு உள்ளுராட்சி மன்றமும் இதுவரையில் அமுல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

பயணப் பொதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்!

கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் பயணப் பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண் சம்பவ தினத்திற்கு முதல் நாள் கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்ததாக புலனாய்வு விசாரணைகள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
இவர்கள் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் எனவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
எனினும், எந்த லொட்ஜில், யாருடன் தங்கியிருந்தார் என்பது குறித்த விரிவான விபரங்கள் கிடைக்கவில்லை.
எனினும், லொட்ஜில் கடமையில் இருந்த ஊழியர் உள்ளிட்ட பல தரப்பினரிடம் இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஸ்டியன் வீதியில் கண்டு பிடிக்கப்பட்ட சடலம் யாழ்ப்பாண பெண்ணுடையது
கொழும்பு புறக்கோட்டை பஸ்டியன் வீதியில் மீட்கப்பட்ட சடலம் யாழ்பபாணத்தைச் சேர்ந்த பெண்ணுடைய சடலம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டையைச் சேர்ந்த 34 வயதான கார்த்திகா என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஊடகங்களில் வெளியான புகைப்படங்களை பார்வையிட்ட குறித்த பெண்ணின் கணவர், சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.
குறித்த பெண் கோட்டேயில் அமைந்துள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிரந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆண் ஒருவருடன் இந்த பெண் ஏழு நாட்கள் தங்கியிருந்தார் எனவும், சம்பவம் இடம்பெற்ற தினத்தில் குறித்த ஆண் லொட்ஜிலிருந்து பயணப் பை ஒன்றுடன் வெளியில் சென்றதாக லொட்ஜ் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
READ MORE | comments

மட்டக்களப்பில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் பலி ஏழு பேர் காயம்

Thursday, July 30, 2015


மட்டக்களப்பு திருமலை நெடுஞ்சாலையில் காலை இடம்பெற்ற வெவ்வேறு மூன்று  விபத்துக்களில் ஒருவர் மரணமடைந்ததுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் வந்தாறுமூலையில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியோரத்திலிருந்த மரமொன்றுடன் மோதியதினால் ஏறாவூர் மீராகேணியை சேர்ந்த மரக்கறி வியாபாரியான முஹம்மத் லத்தீப் பாறூக் (வயது 32) என்பவர் சம்பவ இடத்தில் மரணமடைந்தார்.

இவ்வாறிருக்க கொழும்பிலிருந்து பழுகாமம் நோக்கி சென்றுகொண்டிருந்த வான் ஒன்று மைலம்பாவெளியில்  வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின்கம்பத்துடன்  மோதியதினால் படுகாயமடைந்த நான்கு பேர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 

கொழும்பு விமான நிலையத்திலிருந்து தமது உறவினரை அழைத்துவந்து கொண்டிருந்த எஸ்.தங்கநாயகம் (வயது 46) ரீ.தவநாயகம் (வயது 28) எஸ்.நிலோஜன் (வயது 14) வான் சாரதியான கே.பாக்கியராசா (வயது 46) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

மேலும்  ஓட்டமாவடி சுற்றுவளைவு பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பயணித்துக்கொண்டிருந்த  மோட்டார் சைக்கிள் ஒன்றை இடைமறிக்க முற்பட்டபோது அம்மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர்  மீது மோதியது. இதன்போது அப்பொலிஸ் உத்தியோகஸ்தரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை  மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கைதுசெய்யப்பட்டு விசாரணையின் பின்னர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
READ MORE | comments

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பூவுடல் முழு அரசு மரியாதையுடன் ராமேஸ்வரம் பேக்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான அப்துல் கலாம் அவர்கள் மேகாலயாவின் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கிடையே பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கலாம், அங்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்கம் கலாமின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப அரசு மரபுகளைத் தாண்டி அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. கலாமின் நல்லுடல் இன்று மதியம் 12 மணியளவில் பேக்கரும்பு கிராமத்தில் 1.85 ஏக்கர் பரப்பளவிலான அரசு இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று காலை அவரது வீட்டிலிருந்து ஜனாஸா தொழுகை எனப்படும் முஸ்லிம் மக்களின் இறுதி தொழுகைக்காக கலாம் அவர்களின் உடல் ராமேஸ்வரம் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடல் அவர்களுடைய முறைப்படி தூய்மைப்படுத்தப்பட்டு மேலே அவர்களுடைய புனித ஆடை போர்த்தப்பட்டு இறுதித் தொழுகை நடத்தப்பட்டது. தொழுகை முடிவடைந்த பின்னர் கலாம் அவர்களின் புகழுடல் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து ராணுவ மரியாதையுடன் ஊர்வலமாக லட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் வெள்ளத்திற்கு இடையே பேக்கரும்பு கிராமத்திற்கு வந்தடைந்தது. முன்னதாக அப்துல் கலாம் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பேக்கரும்பு பகுதியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆளுநர் ரோசையா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ், மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கையா நாயுடு, குலாம் நபி ஆசாத், தமிழக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா உட்பட பல்வேறு மத்திய, மாநில தலைவர்கள் குவிந்திருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி கலாம் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உட்பட மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் கலாமின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மற்ற தலைவர்களுடன் வரிசையில் நின்று ராகுல் காந்தி கலாம் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். குலாம் நபி ஆசாத் மற்றும் ஷானவாஸ் ஹூசேன் ஆகியோர் கலாம் உடலுக்கு பாத்தியா ஓதி அஞ்சலி செலுத்தினர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஈவிகே எஸ் இளங்கோவன், தமிழிசை, விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ், வைகோ திருநாவுக்கரசர் ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சித் தலைவர்களுடன் அமராமல் வைகோ கலாம் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் சரியாக 11.45 மணியளவில் முப்படைத் தளபதிகளின் முழு ராணுவ மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க கலாம் உடலுக்கு இறுதி ராணுவ மரியாதை செலுத்தியது. பின்னர் அவரது உடலிலிருந்து தேசியக் கொடியானது 6 முப்படை வீரர்களால் மரியாதையுடன் நீக்கப்பட்டது. கலாமிற்கு புகழஞ்சலி செலுத்தும் மக்கள் கோஷங்கள் விண்ணப் பிளக்க சரியாக 12 மணியளவில் அந்த மக்கள் தலைவனின் உடல் மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கம் என்பதை விட ஒரு மகத்தான மக்கள் தலைவரின் உடல் அங்கு விதைக்கப்பட்டிருக்கின்றது. அடக்கம் செய்யப்பட்ட கலாமின் சமாதிக்கு, அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்களுடைய முறையில் துவா ஓதி பிரார்த்தனை செய்தனர். மகத்தான மனிதரை மண்ணுக்குள் விதைத்திருக்கின்றோம் இன்று... இனி அவருடைய கனவுகளை விருட்சமாக்க வேண்டிய பொறுப்பு இளைய சமுதாயமான மாணவர்கள் கையில்!!! 
READ MORE | comments

மட்டக்களப்பில் முன்னாள்ஈபீடிபி இயக்க உறுப்பினருக்கு மரண தண்டனை

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதேசத்தில் சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் இளம் குடும்பப் பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஈபிடிபியின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.சந்திரமணி இத்தீர்ப்பினை வழங்கினார்.
2007 டிசம்பர் 25 ஆம் திகதி வந்தாறுமூலை ஏபீசி வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய கே. எஸ். பிரமாவதி என்ற குடும்பப் பெண் அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவேளை, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சந்தேக நபரை ஏறாவூர்ப் பொலிஸார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேல்நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
இக்கொலைச் சம்பவத்தின் சந்தேக நபராக ஈபிடிபி இயக்க முன்னாள் உறுப்பினர் திலகன் என்றழைக்கப்படும் பாலுதாஸ் குறிப்பிடப்பட்டிருந்தார்.
குற்றம் நிரூபிக்கப்படதையடுத்து இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெதுப்பகம் (பேக்கரி) உரிமையாளரான குறித்த பெண்ணின் கணவரும் இவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவேளை இனந்தெரியாத குழுவினர் கதவைத்தட்டி பாண் கேட்டுள்ளனர்.
“இப்போது பாண் தரமுடியாது” எனக்கூறியதையடுத்து “உன் கணவரை சந்திக்க வேண்டும்” என கூறினர்.
“இப்போது சந்திக்க முடியாது நாளை வாருங்கள்” என அப்பெண் பதிலளித்ததையடுத்து, வெளியே நின்றவர்கள் வீட்டின் கதவிற்கு உதைத்து விட்டு கதவின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
இதனால் துப்பாக்கி ரவைகள் கதவைத்துளைத்துக் கொண்டு பெண்ணின் கழுத்தில் பட்டு ஏற்பட்ட காயத்தினால் உயிரிழந்தார்.
துப்பாக்கி நபர் ஏற்கனவே அவரது பேக்கரியில் வேலை செய்த முன்னாள் ஈபிடிபி இயக்க உறுப்பினர் என குரலின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
READ MORE | comments

நடந்தது என்ன? சவுதியில் கழுத்து அறுபட்டு வவுனியா பெண் மரணம்

சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்ற வவுனியா சிதம்பரம் அகதிமுகாமில் வசிக்கும் பெண்ணொருவர் அங்கு கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சுப்பா கமலாதேவி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிந்துள்ளார்.
உயிரிழந்த மகள் தொடர்பில் பக்கச்சார்பற்ற மரண விசாரணையை முன்னெடுக்க வேண்டும் எனவும்  மகளின் சடலத்தை நாட்டுக்கு கொண்டுவந்து தரும்படி அவரது தாய் சத்திவேல் பொன்மலர் (வயது 60) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
READ MORE | comments

பின்தங்கிய கல்வி வலய உயர்தர மாணவர்களுக்கு துர்க்கா அச்சகத்தினால் இலவச கருத்தரங்கு


மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதி மாணவர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு,கொக்குவில் துக்கா அச்சகத்தினால் இலவச கருத்தரங்கு நடாத்தப்பட்டது. இந்த வருடம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் நன்மை கருதி இந்த கருத்தரங்கு நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையான மாணவர்கள் அதிகளவில் உள்ளதும் கல்வியில் பின்தங்கியதுமான இரு வலயங்களிலும் உள்ள மாணவர்களுக்கு மட்டக்களப்பு,கொக்குவில் துக்கா அச்சகத்தினால் தொடர்ந்து இவ்வாறான கருத்தரங்குகள் நடாத்தப்பட்டுவருகின்றன. இதனடிப்படையில் கல்குடாவுக்கான கருத்தரங்கு கிரான் மகா வித்தியாலயத்திலும் மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்கான கருத்தரங்கு குறிஞ்சாமுனை வித்தியாலயத்திலும் நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு,கொக்குவில் துக்கா அச்சகத்தின் உரிமையாளர் கே.விஜயகுமாரின் சமூக நோக்கத்துடனான இந்த செயற்பாடுகளுக்கு ஆசிரியர்களும் தங்களது பங்களிப்பினை வழங்கிவருகின்றனர். இந்த கருத்தரங்குகளை கொழும்பின் பிரபல பாடசாலையான றோயல் கல்லூரியின் ஆசிரியர் நிரோசாந்தன் நடாத்தியிருந்ததுடன் ஆரம்ப நிகழ்வில் கல்குடா வலய பிரதி கல்விப்பணிப்பாளர் சாமினி கலந்து சிறப்பித்தார். கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் கிருஸ்ணானந்தராஜா மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் கே.சத்தியநாதன் ஆகியோர் இந்த செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவு வழங்கியதாக மட்டக்களப்பு,கொக்குவில் துக்கா அச்சகத்தின் உரிமையாளர் தெரிவித்தார். 


 
READ MORE | comments

மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்!

ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று திமுக தலைவர் மு.கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு-
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு, நேற்று புதன்கிழமை காலையில் அளித்த தீர்ப்பில், இந்தியாவின் இளந்தலைவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்றி உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பு சரியானது என்று தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
ராஜீவ் காந்தி கொலையை நாம் யாரும் நியாயப்படுத்துகிறவர்கள் அல்ல. இவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று பல முறை அறிக்கை விடுத்தவன் நான் என்ற முறையில், இதற்குப் பிறகும் தாமதிக்காமல், தமிழக அரசு உடனடியாக சரியான சட்ட அணுகுமுறைகளை மேற்கொண்டு இவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
READ MORE | comments

பெண்ணின் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோரும் காவற்துறையினர்

கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து தரிப்பிடத்தில் பயணப் பொதி ஒன்றில் இருந்து மீட்கப்படட பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு காவற்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 முதல் 40 வயது மதிக்க தக்க இந்தப் பெண் உயரம் சுமார் 5 அடி இரண்டு அங்குளம் எனவும் அவர் கழுத்தி்ல் அணிந்துள்ள தங்கச் சங்கிலியில் ஓம் என்ற எழுத்து பதித்த பென்டன் ஒன்றும் இருப்பதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த பெண் பற்றிய தகவல் தெரிந்தால், அது பற்றி கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் தொலைபேசி எண்களான 011-266 23 11 மற்றும் 011  2685151 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு காவற்துறையினர் பொதுமக்களை கேட்டுள்ளனர்.
READ MORE | comments

ஐ.நா. இலங்கையுடன் சேர்ந்து உருவாக்கிய போர்க்குற்ற ஆவணம்? - கெலம் மக்ரே

இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஐ.நாவில் இருந்து  கிடைத்துள்ள ஆவணம் ஒன்று ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் அறிவித்தது. இது தொடர்பில் கெலம் மக்ரே தெரிவிக்கையில்,
இந்த ஆவணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


போரில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விசாரணை மூலம் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். 

ஆனால் இந்த ஆவணம் ஐநா இலங்கையுடன் இணைந்து உருவாக்கியது போல் தோன்றுகிறது.  

இலங்கை  இராணுவ படைகள் நடத்திய  தாக்குதலிலேயே, பெரும்பாலான தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அதேவேளையில் விடுதலைப் புலிகள் தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும்  அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியது  போன்ற போர் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் ஐ.நா குறிப்பிட்டுள்ளது .

இதிலிருந்தே தெரிகின்றது திட்டமிட்டு ஐ.நா. இலங்கையுடன் சேர்ந்து ஒரு போர்க்குற்ற அறிக்கையை தயாரித்திருக்கின்றது - இந்த ஆவணத்தின் மூலம் ஐநாவின் நீதி விசாரணை நியாயமாக நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது  என கெலம் மக்ரே தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணுவோர் கிழக்கில் உள்ளனர்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணும் தரப்பினர் கிழக்கில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் பாகிஸ்தானிலிருந்து சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வந்த தரப்பினர் கிழக்கிற்கு பயணம் செய்துள்ளனர்.
ஜிஹாதிய செயற்பாட்டாளர்கள் கிழக்கில் செய்றபட்டு வருவதாக இதற்கு முன்னர் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
அண்மையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கண்டி இளைஞர் ஒருவரை மலேசியா நாடு கடத்தியுள்ளது.
இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ள இலங்கையர்கள் பற்றிய விபரங்களை திரட்டுவதற்கு இலங்கை பொலிஸார், துருக்கி, ஈராக், லெபனான் மற்றும் சிரியா உள்ளிட்ட புலனாய்வு பிரிவினரின் உதவியை கோரியுள்ளனர் என அந்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கிழக்கில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புகளைப் பேணுவோர் வாழ்வதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி சர்ச்சையை ஏற்படுத்தக் கூடுமென அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
READ MORE | comments

கொழும்பில் தனியார் பஸ் தரிப்பிடத்தில் பயணப் பையில் பெண்ணின் சடலம்

Wednesday, July 29, 2015

கொழும்பு- பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பிடத்தில் பயணப் பையொன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் செல்வதற்கான வரிசையில் இருந்தே இது மீட்கப்பட்டுள்ளது. பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவிலேயே இது கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் அவ்விட த்தில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


READ MORE | comments

அப்துல் கலாம் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்?

நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிற கேள்வியை பலமுறை எதிர்கொண்டுள்ளார் கலாம்.
தும்பா மையத்தில் வேலை பார்த்தபோது கலாம் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அவருடைய குடும்ப உறுப்பினர் களும் நண்பர்களும் பலமுறை அழுத்தம் கொடுத்தார்கள்.
ஆனால் கலாம் அதில் ஈடுபாடு காட்டவே யில்லை. உன் திருமணத்துக்கு வருகை தரும் சாக்கிலாவது நாங்கள் இரா மேஸ்வரம் பார்க்கவேண்டும் என்று கலாமின் நண்பர்கள் சொன்ன துண்டு. ஆனால் அது இறுதிவரை நிறைவேறாமலே போய்விட்டது.
திருமணம் குறித்த கேள்விக்கு கலாமின் பதில்:
‘திருமணம் என் கனவுகளைச் சிதைத்துவிடும். என் கனவும் நம்பிக் கையும் வேறு. ஒரு குடும்பத் தலை வனாக நான் குடும்பத்துக்கும் நேர மும் உழைப்பையும் கொடுத்தாக வேண்டும். அங்கே என் இலட்சியம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
இலட் சியமா, குடும்பமா என்றால் குடும்பம் என் இலட்சியத்துக்குப் பின்னால்தான். என்னுடைய இந்தக் கோட்பாட்டினால் ஒரு பெண்ணின் வாழ்க்கையும் பாழாகிவிடக்கூடாது. ஆக, இறுதி வரை நான் இப்படி இருப்பதுதான் சிறந்தது. என்னை என் போக்கில் விட்டுவிடுங்கள்” என்று தன் மீது அக்கறை செலுத்தி கேள்வி கேட்ட வர்களிடம் இந்தப் பதிலை அளித் துள்ளார் கலாம்.
READ MORE | comments

“மதுபாவனையை ஒழிப்போம் புகைத்தலை தடுப்போம்” மட்டக்களப்பு கல்லடி,உப்போடை விவேகானந்தா மாணவிகள் நாடகம்

“மதுபாவனையை ஒழிப்போம் புகைத்தலை தடுப்போம்” என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு,கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவர்கள் ஏற்பாடுசெய்த மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.


தேசிய போதை ஒழிப்பு மாதத்தினை முன்னிட்டு கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய பாடசாலை மட்டத்தினாலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் மட்டக்களப்பு, கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவர்களினால் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்பட்டது.

கல்லடி,உப்போடை பேச்சியம்மன் ஆலயத்தின் வளாகத்தில் “மதுபாவனையை ஒழிப்போம் புகைத்தலை தடுப்போம்” என்னும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நாடகம் நடாத்தப்பட்டது.

பாடசாலையின் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான மாணவர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு இந்த விழிப்புணர்வு நிகழ்வில் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்லடி மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகிலும் விழிப்புணர்வு நாடகம் நிகழ்த்தப்பட்டது.













READ MORE | comments

மட்டக்களப்பு திக்கோடையில் யானையின் தாக்குதலினால் ஒருவர் படுகாயம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடையில் யானையின் தாக்குதல் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் திக்கோடையை சேர்ந்த சீனித்தம்பி நவரெத்தினம்(55வயது)என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை திக்கோடைக்குள் புகுந்த யானை வீடு ஒன்றினை தாக்கியபோதே அந்த வீட்டில் இருந்தவர் படுகாயமடைந்துள்ளார்.

இவர் உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக வைத்தியாசலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
READ MORE | comments

மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் அவர்களுக்கு இரங்கல் நிகழ்வு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் அவர்களுக்கு இரங்கல் நிகழ்வு நாளை 2015.07.30ம் திகதி மாலை 03.00 மணிக்கு நல்லையா வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகல பிரதிநிதிகளும் கட்சி ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் போது பிரதிநிதிகளால் இரங்கல் உரைகளும் நிகழ்த்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு இளைஞர் அணியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
READ MORE | comments

கிழக்கு கல்வி அமைச்சுக்கு சொந்தமான வாகனம் தீயினால் சேதம்


கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று தீயினால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இன்று அதிகாலை 04.30 அளவில் திருகோணமலை - சிவன்கோயிலடியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.  தீ அணைப்பு வீரர்கள் சென்று நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.  இது குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

READ MORE | comments

மட்டக்களப்பில் பல முறை கட்சி தாவிய சிவகீர்தா இப்போது ஹிஸ்புல்லாவுடன்..

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமையிலான ஜனாநாயகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரான முன்னாள் மட்டு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன், 
நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டார். 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்ளப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரான் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை சந்தித்து சிவகீதா முன்னணியில் இணைந்து கொண்டதுடன், அவருடன் மட்டக்களப்பு மாநகர சபையின் 5 முன்னாள் உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர்.
ஹிஸ்புல்லா தமிழ் மக்கள் தொடர்பில் வைத்துள்ள நிலைப்பாடு ஆதாரத்துடன் வெளியாகிய நிலையில் அதனையும் பார்த்துவிட்டும் ஹிஸ்புல்லாவுடன் இணையும் இவரைப் பற்றி என்ன எழுதியா தெரிய வேண்டும் பாருங்கள் உங்கள் தெரிவு…..

ஹிஸ்புல்லாவின் வெற்றிக்காக தான் உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டவர்கள் பிரச்சாரங்களில் ஈடுபட போவதாகவும் சிவகீதா கூறியுள்ளார்.
READ MORE | comments

மட்டக்களப்பு – ஏறாவூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு: நான்குபேர் படுகாயம்

மட்டக்களப்பு – ஏறாவூர் நகரில் இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதிக்கொண்டதில் வயோதிப் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
ஏறாவூர் புன்னக்குடாவீதியில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூரைச் சேர்ந்த 70 வயதுடைய சின்னமரைக்கார் மரியம்பீவி என்பவரே இச்சம்பத்தில் உயிரிழந்தவர்.  முச்சக்கர வண்டியின் சாரதியொருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து வந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒருவழிப்பாதையில் சென்ற முச்சக்கர வண்டியை அதேவழியில் வந்த இன்னுமொரு முச்சக்கர வண்டி இடதுபுறமாக முந்திச் செல்லமுட்பட்டபோது இரண்டு முச்சக்கர வண்டியும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து ஒரு முச்சக்கரவண்டி வீதியின் நடு எல்லையில் வைக்கப்பட்டுள்ள பூச் சாடியை உடைத்துக்கொண்டு வீதியின் மறுபுறத்தில் புரண்டு விழுந்துள்ளது. அதிகவேகமே இவ்விபத்திற்குக் காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அந்த முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ளபோதிலும் கைதுசெய்யப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குருநாகலிலுள்ள தமது குடும்ப உறவினர்களைச் சந்தித்துவிட்டுத் திரும்பும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
READ MORE | comments

கசிந்தது ஐ.நா ஆவணம்..! - வெளியிட்டது சனல் 4!

ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது.
நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்படும், இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போது, அங்கு இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணை குறித்து வரும் செப்ரெம்பரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்படவுள்ள விவாதத்தை, பலவீனப்படுத்தக் கூடும் என்று விமர்சிக்கப்படக் கூடிய ஆவணம் ஒன்று சனல்4 க்கு கிடைத்துள்ளது.


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், பத்தாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா கூறுகிறது.
சுருங்கி வந்த நெரிசல் மிக்க பாதுகாப்பு வலயத்துக்குள். இலங்கை அரச படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதலிலேயே, இவர்களில் பெரும்பாலான மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.

அதேவேளை விடுதலைப் புலிகளும் கூட, தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் மனித கேடயங்கள் போன்ற மோசமான மீறல்களில் ஈடுபட்டதாகவும் ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நாவுடன் இணைந்து- ஐ.நாவின் தொழில்நுட்ப உதவிகளுடன் இலங்கை அரசாங்கம் முழுமையான உள்நாட்டு விசாரணை ஒன்றை உருவாக்குவதற்கான, திட்டவரைவு ஒன்றைக் கொண்டிருப்பதாக இந்த ஆவணங்களில் இருந்து தோன்றுகிறது.

பெரும்பாலான மனித உரிமை அமைப்புகள், உள்நாட்டு நீதிப் பொறிமுறையை அமைக்கும் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அறிவித்துள்ளன.

அது, வெற்றியாளரின் நீதிமன்றமாகவே இருக்கும் என்றும் பலர் எச்சரித்துள்ளனர்.
கசிந்துள்ள ஐ.நாவின் திட்டங்களின்படி, இந்த திட்டத்தை் நடைமுறைப்படுத்தும் பங்காளர்களாக, இலங்கை அரசாங்கமும், வடக்கு மாகாணசபையும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், வடக்கு மாகாண முதலமைச்சர், சி.வி.விக்னேஸ்வரன், இதுபற்றி தம்முடன் ஐ.நா எந்தக் கலந்துரையாடல் எதையும் நடத்தவில்லை என்று சனல்4 ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.
செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், இந்த ஆவணம் கசிந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், உள்நாட்டு விசாரணையை நடத்துவதாக கூறினாலும் தமிழ் செயற்பாட்டாளர்கள், அனைத்துலக விசாரணையையே கோருகின்றனர் என்றும் சனல் 4 தெரிவித்துள்ளது.
READ MORE | comments

திருமலை வதைமுகாமில் தொடர்பில் கிடைத்த மாபெரும் சாட்சியம் - திடுக்கிடும் தகவல்களுடன் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Tuesday, July 28, 2015

இலங்கையின் வட கிழக்கில் மற்றும் பல பாகங்களில் வதை முகாம்களா....? இவைகள் ஆதாரப்படுத்தப்படவில்லை. ஆனால் இன்று வதைமுகாம் தடுப்பிலிருந்து தப்பியவரின் திடுக்கிடும் தகவல்களடங்கிய ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.
கடந்தகால, நிகழ்கால இலங்கை அரசுகள் வதைமுகாம் தொடர்பில் மறுத்துவரும் இந்நிலையில் வடக்கு கிழக்கு உட்பட்ட கொழும்பின் பல பாகங்களிலும் வதைமுகாம்கள் இருந்தமை நிரூபணமாகியுள்ளது.


வதைமுகம் எங்கு உள்ளது?

நடத்தியவர்கள், நடத்திவருபவர்கள் யார்?

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தவர்களின் மனைவிகளும் வதைமுகாமிலா?

கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடத்தப்பட்ட 5 அப்பாவி மாணவர்களும் உயிருடன் உள்ளார்களா இல்லையா?

என பல்வேறுபட்ட கடத்தல்கள், வதைமுகாம்கள் தொடர்பில் லங்காசிறி 24 செய்திச் சேவைக்காக திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தினார் வதைமுகாமில் சித்திரவதைக்குட்பட்டு பின்னர் வெளிவந்த அப்பாவி தமிழன் திலீபன்.
READ MORE | comments

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்- அறிவு நதியின் மறைவு! சிறீதரன் இரங்கல்

இந்தியப் பேரரசின் முன்னாள் ஜனாதிபதியும் மங்காத கீர்த்தியுமான டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் மறைவு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வு என முன்னைநாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
மறைந்த அப்துல் கலாம் அவர்கள் சகலருக்கும் முன்னுதாரணமான மனிதர். குறிப்பாக இலட்சியங்களை வரித்துக்கொண்ட இலக்குகளை நோக்கி பயணிக்கும் மனிதர்களுக்கு அவரின் வாழ்க்கை சிறந்தபாடம்.
உலகின் சனத்தொகையில் முதல்வரிசைகளில் நிற்கும் ஒரு பெரிய ஜனநாயக இராச்சியத்தில் ஒரு முதன்மனிதராக ஒரு தமிழன் இருந்துள்ளான் என்பது உலகத்தமிழர்களுக்கு வரலாற்றுப்பெருமை தருகின்ற விடயம்.
அப்துல்கலாம் எளிமையின் இராச்சியம். குழந்தைகளின் தோழன். தேடல்களின் சுரங்கம். தேசப்பற்றின் மறுவடிவம்.
இந்தியாவின் தமிழ் நாட்டில் இராமேஸ்வரத்தில் ஓர் வறுமைப் பின்னணியில் பிறந்து கடைகளுக்குப் பத்திரிகை விநியோகித்து சம்பாதித்து படித்து உயர்ந்த ஓர் மாமனிதன் அப்துல்கலாம்.
அவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் இன்றைய சமுதாயம் ஓர் புத்தகமாக படிக்கவேண்டும். தன் தாய் நாடான இந்தியா பற்றி அணு விஞ்ஞானியான அப்துல்கலாம் கண்ட கனவு மிக உயர்ந்தது.
அந்தக் கனவை ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் விதைத்தார். ஏன் கண்டங்கள் நாடுகள் தாண்டியும் இளைய சமுதாயத்திடம் விதைத்தார். இந்தியாவை மற்றைய நாடுகள் திரும்பி பார்க்கவும் இந்தியாவை பற்றி ஆராயவும் வைத்தவர் அப்துல்கலாம் என்ற ஒரு எளிமையான தோற்றம் பண்பு மிக்க மனிதர்.
இந்தியப் பேரரசின் மற்றும் சர்வதேசங்களினதும் உயர்ந்த விருதுகளை பெற்றுக்கொண்டபோதும். அவரின் பணிவு ஆச்சரியப்படவைப்பது. தான் கற்றுக்கொண்ட யாவற்றையும் தான் சிந்தித்த யாவற்றையும் மற்றவர்க்கு சொன்னார்.
மற்றவர்களையும் அர்த்த புஸ்டியோடு வாழத்தூண்டினார். இந்தியாவின் குடியரசு தலைவர் பதவி என்பது இந்தியா அப்துல்கலாம் என்ற வடிவத்தில் பெற்றுக்கொண்ட வரம். ஒரு பெரும் அறிவாளிக்கு தன் தாய் நாட்டுக்காக உழைத்த ஓர் அணு விஞ்ஞானிக்கு இந்திய ஜனநாயகம் தலை வணங்கியது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.
தமிழ் பண்பாட்டியலை மொழியின் மீதான பற்றுதலை மறக்காமல் இறுதிவரை இந்த உலகத்தொடு ஒட்டி வாழ்ந்தார். அவரின் உயர்ந்த சிந்தனையான கனவு காணுங்கள் என்பது இளைய சமுதாயத்திடம் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டிருக்கும்.
மாண்புமிக்க அப்துல்கலாம் அவர்கள் பலகோடி உயரிய மனிதர்களுக்கு வித்திட்டு சென்றிருப்பார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
அவரின் மறைவு அறிவு நதியின் மறைவு. அமரர்.பாரத ரத்னா. ஏ. பி. ஜே. அப்துல்கலாம் அவர்களின் மறைவுக்கு எமது மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

MoU with UNFGG Sobhitha Thera & 75 civil society orgs to sign

The Civil Society Collective comprised of 75 organizations including the National Movementfor Social Justice led by Ven. Maduluwawe Sobitha Thera will be signing a Memorandum of Understanding (MoU) with Prime Minister Ranil Wickremesinghe representing the United National Front for Good Governance.
The signing will take place tomorrow (28) at 9:30 a.m. at the Sri Lanka Foundation Institute.
Former National Executive Council Member, Convener of the Lawyers’ Collective and Lawyers’ for Democracy and Convener of the eight-member MoU Drafting Committee Lal Wijenayake said that the MoU was an improved version of the MoU signed between Civil Society Organizations and President Maithripala Sirisena, prior to 8 January at the Viharamaha Devi Park.

The main and major additions in terms of a slight difference in the original content is the call for the urgent appointment of the Independent Commissions outlined in the 19th Amendment to the Constitution, for the Right to Information Act be enacted and the Recommendations of the Lessons Learnt and Reconciliation Commission to be fully implemented, he added.
“Representatives of all 75 civil society organizations will be signing the accord,” he explained.

-ceylontoday-
READ MORE | comments

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற காதலனும் சித்தப்பாவும் கைது

நவகத்தேகம - கலேவெவ பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற  இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் குறித்த சிறுமியின் தாயின் இரண்டாவது கணவரும், சிறுமியின் காதலனான 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமிக்கு சிறு வயதாக இருக்கும் போதே அவருடைய தந்தை இறந்து விட்டதாகவும் பின்பு தாய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யததை அடுத்து பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |