கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று தீயினால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 04.30 அளவில் திருகோணமலை - சிவன்கோயிலடியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ அணைப்பு வீரர்கள் சென்று நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» கிழக்கு கல்வி அமைச்சுக்கு சொந்தமான வாகனம் தீயினால் சேதம்
கிழக்கு கல்வி அமைச்சுக்கு சொந்தமான வாகனம் தீயினால் சேதம்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: