மட்டக்களப்பு கிரான்குளத்தில் வீதி விபத்து மாங்காடு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வைத்தியசாலையில்

Tuesday, June 30, 2015

மாங்காடு கிராமத்தை சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளி கிராங்குளத்தை நோக்கி துவிச்சக்கர வண்டியில் செல்று கொண்டிருந்த வேளையில் காத்தான்குடி நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது வேகமாக மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த மாங்காட்டை சேர்ந்தவர் தலையில் காயத்துடன் ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மீன்டும் அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரனை நடார்த்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மதுபோதையில் இருந்ததாக அறிய முடிகின்றது
11412146_850152031699008_5682692760303767895_n 11536040_850151545032390_7623841163117696134_n 11666940_852237854823759_1073501959_n
READ MORE | comments

கிழக்கு மாகாணத்தில் முதலாவது பாடசாலையாக திகழ்வதற்கு பங்களிப்பு செய்த மாணவர்களை கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 110 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்ட மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும்செவ்வாய் கிழமை (07/07/2015) பி.ப. 12.30 மணிக்கு பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் 264 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தையும், அம்பாரை கல்வி வலயம் 160 புள்ளிகளை 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. இதில்…..
களுதாவளை ம.வி. – 110 புள்ளிகள்
செட்டிபாளையம் ம.வி. – 84 புள்ளிகள்
மண்டூர் 13 விக்னே……..- 46 புள்ளிகள்
வெல்லாவெளி க.ம.வி. – 11 புள்ளிகள்
ஏனைய பாடசாலைகள் – 13 புள்ளிகள்
கிழக்கு மாகாணத்தில் அதிக புள்ளிகளை பெற்ற பாடசாலையாக களுதாவளை மகா வித்தியாலயம் தெரிவாகியுள்ளது. இதில் ஆண்கள் 64 புள்ளிகளையும் பெண்கள் பிரிவில் 46 புள்ளிகளையும் பெற்று மொத்தமாக 110 புள்ளிகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
11535890_895205143858819_8076443928888617917_n 11428485_895205243858809_5105354464891991260_n 11427217_895205070525493_7202712115960725735_n 11401106_895205050525495_7408293849405648039_n 11406862_895046220541378_7349807713540905396_n 11401590_895205163858817_5407456768218823815_n 11061284_895205177192149_2166339900002948734_n 10849988_895046290541371_8639737229612596530_n 10666063_895205103858823_5662530131192776679_n 1912469_895046410541359_8710701147065783494_n 1912469_895046410541359_8710701147065783494_n (1)
READ MORE | comments

மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு சுதந்திர கட்சிக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை

ஐக்கிய மக்கள் சுதந் திரக் கூட் ட ணியின் பிர தமர் வேட் பா­ளராக முன்னாள் ஜனா தி பதி மஹிந்த ராஜபக் ஷவை நியமிக்கக் கோரி ஜனாதிபதி நிய மித் துள்ள ஆறு பேர் கொண்ட குழு வினர் ஜனா தி ப திக்கு பரிந் துரை செய் துள் ளனர். குழு வி னரின் இறுதி அறிக் கை யினை இன்று ஜனா தி ப தி யிடம் கைய ளிக் க வுள் ளனர்.
நடை பெ ற வி ருக்கும் பொதுத் தேர் த லில் சுதந் திரக்கட்சி தலை மை யி லான ஐக் கிய மக்கள் சுதந் திரக் கூட் ட ணியின் சார்பில் யாரை பொது வேட் பா ள ராக நிய மிப்பதென்ற சிக்கல் நிலைமை தோன் றியுள்ள நிலையில் கட் சிக்குள் தொடர்ச் சி யான முரண் பா டுகள் எழுந்துள்ளன. கட் சியை ஒன் றி ணைத்து அர சாங்­கத்தை அமைக்கும் நோக் கத்தில்
  

ஐக் கிய மக்கள் சுதந் திரக் கட் சியின் முக் கிய தலை மைகள் முக் கிய கலந் து ரை யா டல் களை மேற் கொண்டு வரு கின் றனர். அந்த வகையில் நேற்றும் ஐக் கிய மக்கள் சுதந் திரக் கூட் ட ணியின் முக் கிய சந் திப் புகள் நடை பெற் றுள் ளன. நேற்று ஐக் கிய மக்கள் சுதந் திரக் கூட் ட ணியின் இட து சாரிக் கட் சிகள் மற்றும் ஐக் கிய மக்கள் சுதந் திரக் கட் சியின் ஏனைய முக் கிய உறுப் பி னர்கள் மற்றும் ஜனா தி ப திக் கி டையில் முக் கிய சந் திப் பொன்று நடை­பெற் றது. இதில் ஐக் கிய மக்கள் சுதந் திரக் கூட் ட ணியில் பங் காளிக் கட் சி களை இணைத் துக் கொண்டு பல மான கூட் ட ணி யாக கள மி­றக்கும் நோக் கத்தில் அணைத்து தலை மை களும் பேச் சு வார்த்தை நடத் தி யுள் ளன.
இது தொடர்பில் அமைச் ச ரவை பேச் சாளர் ராஜித சேனா­ரத்ன கேச ரிக்கு தெரி விக் கையில் ,
இந்த பேச் சு வார்த் தையின் போது கட் சியின் வேட்பு மனுத்­தாக்கல் தொடர்பில் கலந் து ரை யா டப் பட் டது. இதன் போது ஐக் கிய மக்கள் சுதந் திரக் கூட் ட மைப்பின் பிர தான கட் சி யாக ஸ்ரீலங்கா சதந் திரக் கட்சி அங்கம் வகிப் ப தனால் வேட்பு மனுத் தா களின் போது ஏனைய கட் சி களை விடவும் ஸ்ரீலங்கா சுதந் திரக் கட் சிக்கே அதிக வாய்ப் புகள் இருப் ப தா கவும் இதனால் ஏனைய கட் சிகள் புறக் க ணிக் கப் படும் வாய் புகள் இருப் ப தா கவும் கட் சிகள் தமது நிலைப் பாட் டினை முன் வைத் தனர் . எனினும் கட் சியில் அனைத்துப் பங் காளிக் கட் சி க ளையும் பாது காக்கும் வகையில் ஐக் கிய மக்கள் சுதந் திரக் கட் சியின் வேட் பு மனு தயா ரிக் க படும் எனவும், குற் ற வா ளிகள் மற்றும் கட் சியில் கடந்த காலத்தில் குழப்பம் விளை வித்த மோச டிக் கா ரர்கள் யாரையும் இம் முறை ஐக் கிய மக்கள் சுதந் தரக் கட்சின் சார்பில் கள மி றக் கப் பட மாட்­டாது என ஜனா தி பதி தெரி வித் துள்ளார்.
அதேபோல் முன்னாள் ஜனா தி பதி மஹிந் தவை கட் சியின் பிர தமர் வேட் பா ள ராக நிய மிக்கும் திட்டம் இல்லை எனவும், தேசியப் பட் டி யலில் கூட இட மில்லை என தெளி வாக ஜனா தி பதி தெரி வித் துள் ள தா கவும் அவர் குறிப் பிட்டார்.
எனினும் எதிர் வரும் பொதுத் தேர் தலில் மஹிந் தவை பிர­தமர் வேட் பா ள ராக நிய மிப் பதா இல் லையா என் பதை ஆராயும் வகையில் ஜனா தி ப தியால் நிய மிக் கப் பட ஆறு பேர் உள் ள டங் கிய குழு வினர் தமது அறிக் கையை இன்று ஜனா தி பதி மகி திர் பால சிறி சே ன விடம் கைய ளிக் க வுள் ளனர். இது தொடர்பில் குழுத் தலைவர் டிலான் பெரேரா தெரி விக் கையில்,
ஐக் கிய மக்கள் சுதந் திரக் கட் சியின் பிர தமர் வேட் பாளர் தொடர்பில் கடந்த சில கால மா கவே கட் சிக்குள் முரண் பாட்டை ஏற் ப டுத் தி யுள்ள நிலையில் கட் சியின் பெரும் பான்மை ஆத ரவை ஆராயும் வகையில் நாம் பல பேச் சு வார்த் தை களை நடத் தி யி­ருந்தோம். அதன் இறுதி முடிவை நாளை (இன்று ) ஜனா தி ப தி­யிடம் ஒப் ப டைக் க வுள்ளோம். இதன் பொது முன்னாள் ஜனா தி பதி மஹிந் தவை ஐக் கிய மக்கள் சுதந் திரக் கூட் ட ணியின் பிர தமர் வேட் பா ள ராக கள மி றக்க வேண்டும் என்ற தீர் மா னத் துக்கு வந்­துள்ளோம். எனவே ஜனா தி பதி எந்தத் தீர் மா னத் துக்கு இணக்கம் தெரி விப்பார் என்ற நம் பிக்கை எமக்கு உள் ளது. கட் சியின் ஒரு­மித்த கருத்தும் இதுவே என அவர் குறிப் பிட்டார்.
இதே வேலை முன்னாள் ஜனா தி பதி மஹிந் தவை பிர தமர் வேட் பா ள ராக கள மி றக் கு வது தொடர்பில் ஆராயும் வகையில் ஐக் கிய மக்கள் சுதந் திரக் கூட் ட ணியின் பிர தான உறுப் பி னர்கள் நேற்று விசேட சந் திப் பொன்றை நடத் தினர். சுமார் மூன்று மணி­நேரம் நடை பெற்ற இந்த சந் திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந் தரக் கட்­சியின் பொதுச் செய லாளர் அனுர பிரி ய தர் ஷன யாப்பா, ஐக் கிய மக்கள் சுதந் திரக் கட் சியின் பொதுச் செய லாளர் சுசில் பிரே மா ஜெ­யந்த மற்றும் எதிர்க் கட்சி தலைவர் நிமல் சிறி பா லடி சில்வா ஆகிய மூவரும் கலந் து ரை யா டி யுள் ளனர். இதன் பின்னர் ஜனா தி­பதி மைத் தி ரி பால சிறி சே னவை ஜனா தி பதி செய ல கத்தில் சந்­தித்து பேச் சு வார்த்தை நடத் தி யுள் ளனர். எனினும் இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் மூவரும் ஊடகங்களுக்கு எவிதக் கருத்தையும் தெரிவிக்காது தவிர்த்துள்ளனர். இந்த பேச்சுவாதையின் போது மஹிந்தவை பிரதமர் வேட்பாளர் ஆக்கும் கட்சியின் தீர்மானம் தொடர்பில் மூவரும் இரகசியம் காத்து வருகின்றனர். எனினும் இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சசுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகின்றது.

READ MORE | comments

எம்மை பழிதீர்ப்பதை தவிர வேறேதும் நடக்கவில்லை நல்லாட்சி குறித்து மஹிந்த விசனம்

சிறு பான்மையான 46 ஆசனங் களை மட்டும் கொண்ட கட்சிக்கு பிரதமர் பதவி வழங் கப் பட் டுள் ளது. இது முற் றிலும் தவறான­தாகும். பிரதமர் பதவிக்கு டி.எம்.ஜயரத்ன தகுதி இல்லாவிட்டால் அதே கட்சியிலிருந்து வேறு ஒரு வரை நிய மித் தி ருக்க முடியும் என்று முன்னாள் ஜனா திபதி
மஹிந்த ராஜ பக் ஷ தெரி வித்தார்.கட்டுகஸ் தோட்டை கலுகலை விஹா ரையில் நேற்று முன்தினம் மாலை இடம் பெற்ற சமய வழிபாடு களின் பின்னர் மக்கள் மத் தியில் உரை யாற்றும் போதே அவர் இதனை தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது.
நாங்கள் இந் நாட்டில் ஒழுக்கம் மிக்க ஒரு சமூகத்தை உரு­வாக்கவே முயற்சி செய்தோம். ஆனால் அது இடை நடுவே கை நழுவி விட்டது.
இந்த நாட்டில் இடம் பெற்று வந்த கொடூர யுத் தத்தை நாங்கள் முடி வுக்கு கொண்டு வந்தோம். அதற்கு துணை யாக இருந்த அனைத்து இரா ணுவ வீரர் க ளையும் நினைவு கூரு வது நன்றி உள்ள மக்கள் என்ற வகையில் எங் க ளது கட மை யாகும். இருந்த போதும் இன்று உயர் மட் டத்தில் உள்ளவர் களே யுத்த வெற்றி தினத் தையும் மறந்து விட் டுள் ளனர்.
மேலே உள் ள வர்கள் அதனை மறக்கும் போது அதனை நினைவு படுத் து வது எங் க ளது கட மை ய ாகும். இன்று நாங்கள் அத னையே செய்து வரு கின்றோம்.
இன்று தேர்ந் தெடுத்த சில நாடு களில் மேற் கத்தேய நாடுகள் ஆட் சியை மாற்றி வரு கின் றன. அவ் வாறு மேற் கத் தேய நாடு க ளால் ஆட்சி மாற்றம் ஏற் ப டுத் தப் பட்ட நாடு களில் இன்னும் யுத்தம் இடம் பெற்று வரு கின் றது. லிபியா, சிரியா இதற்கு உதா ர­ண மாகும். இன்றும் அங்கு யுத்தம் இடம் பெற்று வரு கின் றது.
முன்னாள் ஜனா தி பதி என்ற வகையில் எனக்கு எதி ராக மக்கள் வாக் க ளித்து ஒரு புதிய ஜனா தி ப தியை நிய மித் தது உண்­மைதான். இருந்த போதும் ஒரு புதிய பிர த ம ரையும் அமைச்சர­வையும் நிய மிப் ப தற்கு எவ் வித மக்கள் ஆணையும் பெறப் ப ட­வில்லை. அப் படி இருந்தும் 46 ஆச னங் களை மட்டும் கொண்ட கட் சிக்கு பிர தமர் பதவி வழங் கப் பட்டுள்ளது. இது முற் றிலும் தவ­றா ன தாகும். பிர தமர் பத விக்கு டி.எம்.ஜய ரத்ன தகுதி இல்லா விட்டால் அதே கட் சி யி லி ருந்து வேறு ஒரு வரை நிய மித் தி ருக்க முடியும்.
நூறு நாள் வேலைத் திட்ட நல் லாட் சியில் நடந் தது என்ன? எங்கள் மீது போலிக் குற் றங்கள் சுமத்தி எம்மைப் பழி தீர்ப் பதைத் தவிர வேறேதும் நடக்க வில்லை. எங் களை பார்த்து திரு டர்கள் எனக் கூறும் நல்லாட்சி னரைப் பார்த்து நாம் அவர் களைக் கொள்ளை காரர்கள் என் றுதான் கூற வேண் டியுள் ளது.
மத் திய வங் கிக்கு புதிய அர சினால் நிய மிக் கப் பட்ட ஆளுனர் ஒரே தினத்தில் பெற்றுக் கொண்ட தரகுத் தொகை குறித்து கோப் அறிக் கையில் வெளிவர உள் ளது. கோப் அறிக்­கையை பற்றி என்னால் கூற முடியும் .
ஆனாலும் நான் இப் போ தைக்கு அதைப் பற்றி எதுவும் கூற முடி யது. ஏன் என்றால் அறிக்கை வெளிவர முன் எனக்கு எப் படி தெரியும் என என்னை விசா ர ணைக்குட் ப டுத் து வார்கள். எனக்கு ஒன் று மட்டும் கூற முடியும் எங்களை திருடர்கள் என கூறுபவர்கள் மக்களின் சொத்துகளை கொள்ளையடிக்கும் கொள்ளைகாரர்களாக உள்ளனர் என்பது மட்டும் உண்மையாகும் என்றும் முன்னாள் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

READ MORE | comments

தனிநபர் வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்! மைத்திரியின் திட்டம்

இந்நாட்டின் தனிநபர் வருமானத்தை எதிர்வரும் 5 ஆண்டுகளில் 6000 அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதற்கு அரசு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அதற்குரிய முதலீடுகள் கைத்தொழில்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் விரிவான அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சீதாவகை ஆற்றில் இரத்தினக் கற்கள் அகழும் ஒருங்கிணைந்த முன்னோடிக் கருத்திட்டத்தின் பயன்களை அப்பிரதேச மக்களிடம் ஒப்படைக்கும் வைபவம் நேற்று தெகியோவிட்ட பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது அங்கு கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, 
இரத்தினக்கல் கைத்தொழில் இருந்து வியாபாரிகளும் அரசும் பெறுகின்ற இலாபத்தில் ஒரு பகுதியை அவ் வளங்களை பெற்றுக் கொடுக்கின்ற பிரதேசங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களிடையே பகிர்ந்தளிப்பதை கொள்கை ரீதியான விடயமாக எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.
இதற்கான மிகத்தகுதியானவர்களை தெரிவு செய்யும் பொறுப்பு பிரதேச செயலாளர் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், உள்ளிட்ட பிரதான வெளிக்கள உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது.
இதில் ஏதேனும் முறைகேடுகள் நிகழுமானால் அதுதொடர்பில் குறித்த அதிகாரிகள் பொறுப்புக் கூறவேண்டும்.
சூழல் அமைச்சுக்கு கிடைக்கும் அனைத்து முறைப்பாடுகள் தொடர்பாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஆராய்ந்து பார்ப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் இரத்தினக்கல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் சட்டபூர்வமாக சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை ஆகக்கூடிய அளவில் உறுதிப்படுத்துவதாகவும், அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி  தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக எந்தவிதத்திலும் திருப்திப்பட முடியாது.
இரத்தினக்கல் கைத்தொழிலை மேற்கொள்ள வேண்டியவர்கள் அக் கைத்தொழில் ஈடுபட்டிருக்கின்றவர்களேயொழிய அரசியல்வாதிகள் அல்ல.
அரசியல் தலையீடுகள் இன்றி தூய்மையான நிறுவனமாக இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அத்தாவுத செனவிரத்ன, சப்ரகமுக மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவி டாக்டர் துஷித்தா விஜயமான, இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகாரசபையின் தலைவர் அனுர குணவர்தன ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
READ MORE | comments

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த்திருவிழா

கடந்த 18ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவ திருவிழாவில் கடந்த 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு முத்துச் சப்பறமும், 27ம் திகதி பகல் விசேட கருட சர்ப்ப பூசையும் வாயு பட்சணி நாகம் வீதியுலாவும் இடம்பெற்று 29ம் திகதி இரவு சப்பறத் திருவிழா நடைபெற்றது.
இன்று செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
நாட்டின் பல பாகங்களிலுமிருந்து பக்தர்கள் கூடி அன்னையின் தேர்வடம் பிடித்து நேர்த்திகளை நிறைவேற்ற பரிவார மூர்த்திகளும் தேர் உலா வந்து அருட்காட்சி வழங்கினர். 
இன்றைய தேர்த்திருவிழாவுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

பல நூற்றுக்கணக்கானோரின் விசாவை ரத்துச் செய்த அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்படும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென குடிவரவு அமைச்சர் பீற்றர் டற்றன் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் 490 பேரின் விசாக்களை  அவுஸ்திரேலிய அரசாங்கம் ரத்துச் செய்திருக்கிறது.

கடந்த சில மாத கால பகுதியில் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர்களில் பாலியல் குற்றவாளிகள் 24 பேர், சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகள் 28 பேர், கொலைக் குற்றவாளிகள் 12 பேர் ஆகியோரும் அடங்குவார்கள்.

இந்த நபர்களில் பசுபிக, மத்திய கிழக்கு, ஐரோப்பிய பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக குடிவரவு அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் குடியேற்ற கொள்கையானது மிகவும் குழப்பம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.


மேலும், புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு அவுஸ்ரேலியா திரும்பும் படகுகள் குறித்தான எதிர்மறை தகவல்கள் தொழிலாளர் கட்சியினை சார்ந்ததே தவிர, அது தொடர்பாக யூலை மாதம் நடக்கவிருக்கும் கருத்தரங்கு கூட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என குடிவரவு அமைச்சர் பீற்றர் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

மேலும் அவுஸ்ரேலியா நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள் என பிரதமர் டோனி அப்பாட் கூறிய கருத்தை அந்நாட்டு குடிவரவு அமைச்சர் பீற்றர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
READ MORE | comments

கராத்தே போட்டியில் அம்பிளாந்துறை மாணவன் 02ம் இடம்

அகில இலங்கை ரீதியில் கராத்தே சம்மேளனத்தால் திரு.கே.இராமச்சந்திரன் அவர்களின் 01வது ஞாபகார்த்தமாக மாத்தளையில் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கராத்தே போட்டியில் மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா
வித்தியால மாணவன் செல்வன் நடராசா ஜோதீபன் அவர்கள் கொமிட்டியில் 02ம் இடமும், காட்டாஸில் 03ம் இடமும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
இம் மாணவனின் சாதனையை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகம் பாராட்டி நிற்கிறது. அத்துடன் படுவான்கரை பிரதேசத்தில் இருந்து இவ்வாறான மாணவர் ஒருவரை அகில இலங்கை ரீதியில் வெற்றிபெற வைத்த பயிற்றுனர் ஜெ.சுதேஸ்கரன் அவர்களுக்கும் படுவான்கரை சமூகம் பாராட்டுதலுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றது.
1505509_652281158206588_5606597373582477186_n 10984501_652281101539927_1326529245481125371_n

READ MORE | comments

‘எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடகிழக்கில் 20ற்கும் மேற்பட்ட ஆசனங்களைப்பெற்று பலமுள்ள கட்சியாக மாறும்’

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடகிழக்கில் 20ற்கும் மேற்பட்ட ஆசனங்களைப்பெற்று பலமுள்ள கட்சியாக மாறும்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார். மட்டக்களப்பு,புகையிரத வீதியில் திங்கட்கிழமை (29) இரவு இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கiயில், ‘நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதானது தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடமாகும். 20ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவருவதுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பழைய விகிதாசார முறைப்படி தேர்தல் நடைபெறவேண்டும் என்பதில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு உட்பட சிறுபான்மைக்கட்சிகள் மற்றும் சிறு கட்சிகள் உறுதியாக இருந்தன’. ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலத்தில் மட்டும் மக்களிடம் செல்வதில்லை.
நாங்கள் தொடர்ச்சியாக மக்களை சந்தித்துவருகின்றோம். அவர்களின் பிரச்சிகளை ஆராய்ந்து முடிந்தவரையில் தீர்த்துவருகின்றோம்’. ‘மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற அத்துமீறிய குடியேற்றங்கள் மற்றும் அம்பாறை மாவட்ட பெரும்பான்மையினத்தின் அத்துமீறிய பயிர்ச்செய்கைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. அண்மையில் கூட அத்துமீறிய குடியேற்ற வாசிகளுக்கு வாக்காளர் விண்ணப்பங்கள் கூட வழங்கப்பட்ட நிலையில் அவற்றினை நிராகரிக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே குரல்கொடுத்துவந்தது’. ‘கடந்த காலத்தில் இருந்த அராஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதுக்கு சிறுபான்மைக்கட்சிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டன. அத்துடன், கடந்த கால ஆட்சியில் கபளீகரம் செய்யப்பட்ட வடக்கிலுள்ள காணிகள் தற்போது படிப்படியாக வழங்கப்பட்டுவருகின்றன.
ஏற்கனவே ஆயிரம் ஏக்கர் காணிகள் வடமராட்சியில் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று சம்பூர் பகுதியில் மீள்குடியேற்றத்துக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன’. ‘2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தமிழர்களுக்கு யார் தலைவர்கள் என்று வெளிக்காட்டியது. 2009ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழர்களின் தலைவர்கள் யார் என்ற கேள்விக்குறி இருந்தது. இந்நிலையில், 2010ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றது. அதில் 14 பிரதிநிதிகள் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றோம். அதன்பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் அமோக வெற்றிபெறச்செய்தனர்’. ‘இதேபோன்று, எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும். தமிழ் மக்களுக்கு கைகொடுக்கும் கட்சியாக இந்த நாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே உள்ளது’ என அவர் தெரிவித்தார்.
READ MORE | comments

மட்டக்களப்பு சிறைச்சாலை 4 சிறைச்சாலை அதிகாரிகள் பணிநீக்கம்

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கடந்த சனிக்கிழமை (27) கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் 4 சிறைச்சாலை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் உயர் அதிகாரியை மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பொலன்னறுவை சிறைச்சாலைக்கு மாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் கோரியுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
READ MORE | comments

மட்டக்களப்பு தாழங்குடா கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் நெஞ்சுவலி காரணமாகஉயிரிழந்துள்ளார்

மட்டக்களப்பு தாழங்குடா கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சிரமதான நடவடிக்கைக்காக நேற்று திங்கட்கிழமை சென்றிருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாழங்குடா கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராக கடமையாற்றும் புஸ்பலதா அன்டனி(49வயது)என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்களின் பாடசாலை சமூக செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட இரு பாடசாலைகளில் சிரமதான பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்கீழ் கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் நேற்று சிரமதானங்கள் நடைபெற்றதுடன் அங்கு தங்கியிருந்து இன்று செவ்வாய்க்கிழமை குறிஞ்சாமுனையில் சிரமதானம் மேற்கொள்ளப்படவிருந்தது.
இந்த நிலையிலேயே மாணவிகளுடன் தங்கியிருந்த குறித்த விரிவுரையாளருக்கு நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.






READ MORE | comments

மட்டக்களப்பில் காடுகள் அழிக்கப்பட்டதால் அதிகளவில் வெப்பம் -பிரதேச செயலாளர் தவராஜா

Monday, June 29, 2015

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிளவான காடுகள் அழிக்கப்பட்டதன் காரணமாகவே இன்று வெப்பம் கூடிய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்வதாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு விவேகாவின் பசுமை செய்திமடல் வெளியிடும் நிகழ்வு நேற்று காலை பாடசாலை அதிபர் திருமதி ஹரிதாஸ் திலகவதி தலைமையில் நடைபெற்றது.
உலக சுற்றாடல் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் அதனுல் மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் முதாலாவது செய்திமடலாக இது வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இராம கிருஸ்ணமிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சதுர்ப்புஜானந்தஜி மகராஜ ஆன்மீக அதிதியாக கலந்துசிறபித்தததுடன் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா கலந்துகொண்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர்,
அகச்சூழல் புறச்சூழல் என்பது தனி மனிதனுக்கும் உள்ளது.ஒரு சமூதாயத்துக்கும் உள்ளது.ஒரு மனிதன் என்னும்போது அவனின் அகம் சுத்தமடையும்போது அவனின் வெளிச்சூழலும் சுத்தம் அடையும்.இந்த இரண்டு விடயத்திலும் நாங்கள் கவனம் செலுத்தும்போதே சூழலை பாதுகாக்கமுடியும்.
எதிர்கால சமூதாயத்துக்கு நிலையான வாழ்வினை நாங்;கள் வழங்கவேண்டும் என்றால் ஒரு நிலையான சூழலையும் அவர்களுக்கு வழங்கவேண்டும்.இல்லையென்றால் நாங்கள் வாழும் வாழ்க்கையின் காலங்கள் குறைந்துகொண்டே செல்லும்.
இன்று நீர் மாசடைவது என்பது பெரும் பிரச்சினையாக மாறிவருகின்றது.எதனை சுத்தப்படுத்துவது என்றாலும் நாங்கள் நீரினை பயன்படுத்துகின்றோம்.ஆனால் இன்று நீரினையே சுத்தப்படுத்தி அருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இதற்கு காரணம் நாங்கள் சூழலை பேணாமையே ஆகும்.
சில நாட்களாக கிழக்கு மாகாணத்தில் அதிக்கப்படியான வெப்பம் மட்டக்களப்பிலேயே பதிவாகியுள்ளது.அதற்கு காரணம் மட்டக்களப்பில் அதிகளவான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.அதன்காரணமாக மாணவர்கள் இயற்கையில் கவனம் செலுத்தவேண்டும்.இந்த பாடசாலையினை பசுமையாக மாற்றவேண்டிய தேவையிருக்கின்றது.
நாங்கள் ஒரு வீட்டை பசுமையாக மாற்றவேண்டும்.அதற்காக பயன்தருமரங்களை நடவேண்டும்.நாங்கள் பயன்தரும் மரங்களை என்றும் நடுவதில்லை.பயன்தராத மரங்களையே நட்டு பராமரிக்கின்றோம்.
எங்களுக்கு தேவையான மரக்கறிகளை நாங்கள் வீட்டிலேயே வளர்த்;துக்கொள்ளமுடியும்.இதன் காரணமாக சூழலும் சிறப்பாக இருக்கும் வாழ்க்கை செலவும் குறைவடையும்.
இன்று படுவான்கரையில் மக்களை சுற்றி சகல மரக்கறி வகைகளும் உள்ளது.அவர்கள் அதனைக்கொண்டுவந்து மட்டக்களப்பு நகர்ப்புறங்களில் விற்பனைசெய்துவிட்டு இங்கிருந்து கரட்,போஞ்சிக்காயை இங்கிருந்து வாங்கிச்செல்கின்றனர்.அந்த பழக்கத்துக்கு அவர்கள் மாறிவிட்டனர்.
மேலைத்தேய நாடுகள் தமது பழமையை நோக்கி பின்நோக்கி சென்றுகொண்டிருக்கின்றார்கள்.ஆனால் நாங்கள் இன்னும் மேலைத்தேய கலசாரங்களுக்கு அடிப்பட்டவர்களாக மாறிக்கொண்டுசெல்கின்றோம்.அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படவேண்டும்.
சூழலை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது.இந்த பங்கினை வகிக்கவேண்டிய முக்கியமானவர்களாக இன்று மாணவர்கள் உள்ளனர்.

READ MORE | comments

அம்பாறை மாவட்டத்தில் 80ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் இருந்தும் இதுவரை சரியான தமிழ்த்தலைமைத்துவங்கள் இல்லாமையினால் அவர்களது தேவைகள் உரிமைகள் அபிவிருத்திகள் மறுக்கப்பட்டிருந்தன

ஜனவரி 8 இல் அனைத்து இனமக்களும் இணைந்து நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி புதுயுகம் படைத்ததுபோல் எதிர்வரும் ஆகஸ்ட் 17இல் அனைவரும் இணைந்து வன்முறையற்ற இனமதபேதமற்ற அடக்குமுறையற்ற ஜ.தே.கட்சி அரசாங்கத்தைத் தோற்றுவித்து புதுயுகம் படைப்போம். அனைவரும் வாரீர்.
முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஜ.தே.கட்சி அமைப்பாளருமான பி.தயாரத்னா பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன்பிற்பாடு இடம்பெற்றகாரைதீவுமக்களுடனான முதல்சந்திப்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு அறைகூவல் விடுத்தார்.
இச்சந்திப்பு சனிக்கிழமையன்று காலை காரைதீவு.3 கலைமகள் சனசமுக நிலையக் கட்டடத்தில் தயாரத்னாவின் மாவட்ட அரசியல்விவகாரங்களுக்கான இணைப்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது இதுவரைகாலமும் தமிழரசுக்கட்சியின் காரைதீவுப்பிரதேச முக்கியஸ்தராகவிருந்த ஓய்வுநிலை விஞ்ஞான ஆசிரியரும் காரைதீவு மகா விஸ்ணு ஆலய தர்மகர்த்தாவுமான சு.தில்லையம்பலம்  நாவிதன்வெளிப்பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் ஏ.ஆனந்தன் அமைச்சரின் இணைப்புச்செயலாளர் வி.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அங்கு தயாரத்னா மேலும் உரையாற்றுகையில்:
ஆட்சி மாற்றத்தின்பின்பு நான் நான் பாராளுமன்றத்தில் ஜ.தே.கட்சியிலிருந்தும் எதிர்க்கட்சி ஆசனவரிசையிலேயே அமர்ந்திருந்தேன். இருதரப்பிலும் நல்லவர்களுமிருந்தார்கள் மாறானவர்களுமிருந்தார்கள். அதனாலே ஆசன அமைவிடம் என்பது முக்கியமாக படவில்லை.
எனினும் கடந்த வெள்ளியன்று பாராளுமன்ற அமர்வில் ஆளும் ஜ.தே.க. ஆசன வரிசையில் முதல்தடவையாக அமர்ந்தேன். அன்றிரவு பாராளுமன்றம் கலைந்தது. இது துரதிஸ்டமா? அதிஸ்டமா? என விளங்கவில்லை.

எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் விகிதாசாரப்பிரதிநிதித்துவ தேர்தல் முறையிலேயே  அதாவது தற்போதுள்ள தேர்தல் முறையிலே நடைபெறவுள்ளது.
அடுத்துவரும் இருவாரங்களுள் அம்பாறை மாவட்டத்தில் யார் யார் எந்தெந்தக் கட்சியில் போட்டியிடுவார் என்ற விபரங்கள் வெளியாகிவிடும். உங்கள் பிரதேசம் அபிவிருத்தியடையவேண்டுமெனின் தங்கள் தேவைகள் பூர்த்தியாகவேண்டுமெனில் இனமதபேதமற்ற ஜ.தே.கட்சியைத் தெரிவுசெய்யுங்கள்.

நல்ல தமிழ்த்தலைமைத்துவம் தேவை!
அம்பாறை மாவட்டத்தில் 80ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் இருந்தும் இதுவரை சரியான தமிழ்த்தலைமைத்துவங்கள் இல்லாமையினால் அவர்களது தேவைகள் உரிமைகள் அபிவிருத்திகள் மறுக்கப்பட்டிருந்தன.
அதனால் மாவட்டத்திலுள்ள 51 தமிழ்க்கிராமங்களிலுள்ள தமிழ்மக்களுக்கு நிறைய பிரச்சினைகளுள்ளன என்பதை நானறிவேன்.
அம்பாறை மாவட்ட தமிழ்மக்களது பிரச்சினைகள் ஆயிரமிருந்தும் தமிழ்த்தலைவர்கள் என்று சொல்லப்படுவோர் சர்வதேசத்துடன் கதைக்கின்றார்களாம். அப்படியெனின் இவர்களுக்காக குரல்கொடுப்பது யார்?
எனக்கு பாசை பிரச்சினையாகவிருந்தும் முடிந்தளவு விசுவாசமாக யாரையும் ஏமாற்றாமல் நேர்மையாக குரல்கொடுத்து முடிந்த பிரச்சினையைத் தீர்த்துவருகின்றேன்.
எம்.சி.கனகரெத்தினம் போன்று நல்ல தலைமைத்துவங்கள் உருவாகினால் நான் ஒதுங்கிவிடுவேன். நான் சகல இனங்களையும் நேசிப்பவன்.என்னை நாடிவரும் யாராக விருந்தாலும் உதவுவது வழமை.

நான் தவறணைக்கு எதிர்ப்பானவன்!
எனது 38வருட பாராளுமன்ற உறுப்பினர் காலத்தில் ஒரு தவறணைக்குகூட அனுமதி வழங்கவில்லை.தவறணைக்கு பூரண எதிர்ப்பானவன் நான்.
அம்பாறையில் எனது காலத்தில் ஒரேயொரு தவறணை இருந்தது. ஆனால் இடைப்பட்டகாலத்தில் 15தவறணைகள் உருவாகின.மாலையானதும் ஒரே நெரிசல். என்னால் முடியுமாகவிருந்தால் அவற்றை எப்போதே மூடியிருப்பேன்.
நாட்டில் மதுவுக்கு முற்றுப்பள்ளி என்ற திட்டம் கொண்டுவரப்;படபின்பு பல பியர் கடைகள் ஆரம்பமாகியுள்ளன. ஒருவர் மச்சாங் என்ற தலைப்பில் 14 பியர் கடைகள் வைத்துள்ளார். அதுகூட அல்ககோல்தானே. அதுவும் பிழைதானே.
இங்குள்ள தவறணையை மூடுமாறு மக்கள் வேண்டுகின்றனர். ஒவ்வொன்றுக்கும் சில வழிமுறைகள் இருக்கின்றன்.முறைப்படி சட்டப்படி அனுமதியுடன் ஒரு தவறணை நிறுவப்பட்டிருந்தால் அதனை மூடிவிட முடியாது. அனுமதியில் ஏதாவது லூப்புகள் இருந்தால் முயற்சிக்கலாம்.
thayaratna-bthayaratna-c
READ MORE | comments

முள்ளிவாய்க்கால் மனித உடலங்களை நாய்கள் உண்டன: திகைப்பில் ஐ.நா..! வெளிவரும் உள்ளகத் தகவல்

மிழ் மக்கள் மீது 2009 இல் நடாத்தப்பட்ட யுத்தத்தில் பல அழிவுகள் இடம் பெற்றன. அவற்றின் சில முக்கிய காட்சிகள் ஐ.நா அதிகாரிகள் வசம் சிக்கியுள்ளன. அவை எவை? விளக்குகிறார் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநர் ச.வி.கிருபாகரன்.
2014ம் ஆண்டு மார்ச் மாதம் மனித உரிமைச் சபையில் அதிகமாக வேலை செய்தோம். ஓகஸ்ட் 10ம் திகதிக்கு பின் இலங்கை தொடர்பான அறிக்கை வரலாம்.
அவ்வறிக்கை யாருக்கு சாதகம்? போன்ற ஐ.நாவின் முழு விபரங்களையும் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் கூறுகிறார் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநரும் மனித உரிமைகள் ஆர்வலருமான ச.வி.கிருபாகரன்.
READ MORE | comments

மஹிந்தவுக்கு வேட்புரிமை வழங்க கூடாது! கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தல்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் முன்னாள் ஜனாதிபதிக்கு பிரதமர் வேட்புரிமை வழங்க வேண்டாம் என தற்போது நடைபெற்று வரும் கலந்துரையாடலின் போது வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவதற்கு பல்வேறு வகையில் ஆதரவு வழங்கிய பலர் இன்றைய சந்திப்பில் பங்கேற்றுள்னளர். இதன்போது மஹிந்தவுக்கு பிரதமர் வேட்புரிமை வழங்கக்கூடாதென வலியுறுத்தியுள்ளதாக சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவடையாத வகையில் ஜனாதிபதி செயற்படுவார் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று மாலை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவதற்கு ஆதரவு வழங்கிய முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைக்கு இன்று மாலைக்குள் முடிவு கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

விடுதியில் சமூக விரோத செயல்கள் இடம்பெறுவதாகக் கோரி கிரான்குளத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிரான்குளத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.
கிரான்குளம்-புதுக்குடியிருப்பு எல்லையில் உள்ள விடுதி ஒன்றை அப்பகுதியில் இருந்து அகற்றுமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.
குறித்த விடுதிக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விபுலானந்தா கல்வி நிலையத்திற்கு அருகில் உள்ள குறித்த விடுதியில் மதுபாவனையினால் கல்வி நடவடிக்கையினை பாதிக்கும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த விடுதியில் சமூக விரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
READ MORE | comments

தேர்தலை நீதியான முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் அரச அதிகாரிகள், பணியாளர்களுக்கு நீதிமன்ற தண்டனை விதிக்கப்படும்

Sunday, June 28, 2015


இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நீதியான முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நீதிமன்ற தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்ரிய எச்சரித்திருக்கிறார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடக்கும் என்று ஜனாதிபதி   வெள்ளிக்கிழமை இரவு அறிவித்த பின்னணியில் நேற்று  சனிக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர் இதனை தெரிவித்தார்.


இலங்கை அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய தனக்கு இந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய மகிந்த தேஷப்ரிய, நீதியான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்கத் தவறும் அரச பணியாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக விளக்கினார்.
இப்படியான வழக்குகளில் குற்றவாளியாக காணப்படும் அரச பணியாளர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ஒரு லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கும் நீதி மன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு அரசவளங்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று கூறிய தேர்தல்கள் ஆணையாளர், இதனை மேற்கொள்ளும்போது அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பயன்படுத்தப்படுமென்றும் அறிவித்தார்.

READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |