அமெரிக்கப் பிரதிநிதி நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கை வந்தார்; யாழ்ப்பாணத்திற்கும் செல்கிறார்

Friday, January 31, 2014

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு- மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) கொழும்பை வந்தடைந்துள்ள அவர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 02) வரை இலங்கையில் தங்கியிருந்து நிலைமைகளை ஆராயவுள்ளார்.
குறிப்பாக, வடக்கு மாகாணத்துக்கான விஜயத்தினை நிஷா தேசாய் பிஸ்வால் மேற்கொள்ளவுள்ளார். அங்கு மாகாண சபையின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயம் அறிவித்துள்ளது.
அத்தோடு, மோதல்களுக்குப் பிந்திய நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நிஷா பிஸ்வால்  இந்த விஜயத்தின் போது அதிக கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினை கொண்டுவருவதற்கு அமெரிக்கா தீர்மானித்து செயலாற்றி வருகின்றது. அதனொரு கட்டமாகவே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு- மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளரின் இலங்கை விஜயமும் அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
READ MORE | comments

சன்னி லியோன் ஒரு அதிசயமான நடிகை! – சொல்கிறார் ஜெய்

உலக அளவிலான கவர்ச்சிப்பிரியர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் சன்னி லியோன். ரசிகர்களை துவம்சம் செய்ய வேண்டும் என்பதற்காக தனது உடல்கட்டை அடிக்கடி கூர் பாய்த்து வரும் சன்னி, வட இந்தியாவில் இருந்து ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்தவர், அதே வேகத்தில் கோலிவுட்டிலும் வடகறி மூலம் என்ட்ரி கொடுத்து தமிழ்நாட்டு கவர்ச்சிப் பிரியர்களுக்கு கலக்கி எடுக்க வந்துள்ளார்.
ஆனால், இந்த படத்தில் அவரது பேவரிட் காஸ்டியூமான டூ-பீஸ் உடையணியாமல் தாவணி கட்டி ஆடியதாக செய்தி பரவியிருக்கிறது.
ஆனால், கிராமத்து பொண்ணுங்களே பாவாடை தாவணியை ஏறெடுத்து பார்க்காத இந்த காலத்தில், துக்கடா டிரஸ் அணிந்து நடிக்கும் கவர்ச்சி நடிகைப்போய் அப்படி நடிப்பாரா? என்று கோடம்பாக்கத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அப்படத்தின் நாயகனான ஜெய், அந்த பாடலில் தான் முழுக்க முழுக்க சன்னியுடன் நனைந்தபடி ஆடியதாக தனது அபிமானிகளிடம் சீக்ரெட்டாக சில தகவல்களை லீக்அவுட் செய்து வருகிறார்.
அதோடு, நான்கூட முதலில் சன்னி லியோனை நெருங்கிப்பழக தயக்கத்துடன்தான் நின்றேன். ஆனால், அவர் என்னுடன் சகஜமாக பழகினார். உலக அளவில் ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் மிகப்பெரிய நடிகை, என்னுடன் அப்படி பழகியது ஆச்சர்யமாக இருந்தது.
மேலும், சில ரிஸ்க்கான நெழிவு சுழிவுகளை அபாரமாக வெளிப்படுத்தி அவர் ஆடியதைப்பார்த்து அசந்து விட்டேன். அப்படியொரு கலக்கலான ஆட்டம்.
ஆக, அவருடன் இணைந்து குத்தாட்டமாடினபோதும், நானும் ஒரு ரசிகனாகத்தான் நடித்தேன் என்று கூறிவரும் ஜெய், சன்னிலியோனிடம் மற்ற நடிகைகளிடம் இல்லாத அப்படி என்ன அதிசயம் உள்ளது என்று நானும் சில நண்பர்களிடம் பேசும்போது கேட்டிருக்கிறேன்.
ஆனால், அவரை நெருங்கிப்பார்த்தபோதுதான், அவர் ஒரு அதிசயமான நடிகைதான் என்பதை உணர முடிந்தது என்கிறாராம்.
READ MORE | comments

மனிதனை போல சத்தம் போட்டு சிரிக்கும் அபூர்வ பறவை..(அரிய வீடியோ)

ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் குறிப்பாக யுகலிப்டஸ் காடுகளில் கூகாபுரா என்ற பறவை இனம் காணப்படுகின்றது. மீன் கொத்தி இனத்தைச் சேர்ந்த இந்த பறவை மீன் கொத்தி இனத்திலேயே மிகப் பெரியதாகும். நதிகளில் உள்ள மீன்களையும் சில சமயங்களில் சிறிய பாம்புகளைக் கூட உண்ணும் பழக்கம் இந்த பறவைக்கு இருக்கிறது. 

இப்பறவை சூரியன் உதயமானவுடன் இந்த பறவை எழுப்பும் ஒலி, மனிதனின் சிரிப்பொலி போல இருப்பதால் இங்கு உள்ள பூர்வகுடி மக்கள் இதனை‘காட்டுவாசிகளின் மணி’என்று அழைக்கின்றனர். அப்பறவையின் சிரிப்பொலியை நீங்களே கீழே உள்ள வீடியோவில் கேட்கலாம்....!



   

READ MORE | comments

செல்போனே வெடித்து இன்று ஒரு மாணவன் பலி கட்டாயம் பாருங்கள் பகிருங்கள்

எவ்வளவோ செய்திகளை நாம் பகிருகின்றோம் தேவையான இப்படியான செய்திகளை தயவு செய்து பகிருங்கள் நண்பர்களே

தயவு செய்து செல்போனை சார்ச் சேயும் பொது answer பண்ணாதீர்கள்

மும்பைளின்று ஒரு மாணவன் செல்போன் சார்ஜ் செயும் போது கால் வந்ததால் தெரியாமல் அட்டெண்ட் செய்து தன் உயிரை இழந்து விட்டான்….


READ MORE | comments

களுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா

கடந்த சில நாட்களாக பிரதியமைச்சர் முரளிதரன் அவர்கள் செல்கின்ற இடங்களில் எல்லாம் தாம் பேசுகின்றபோது களுதாவளை மக்கள் நன்றி கெட்டவர்கள் என்று பேசி வருகின்றார்.

அத்துடன் களுதாவளையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்ற கலாசார மண்டபத்தினை தான் கட்டிக் கொடுத்ததாகவும். அதனை களுதாவளை மக்கள் மறந்துவிட்டதாகவும் நன்றி கெட்டவர்கள் என்று பேசி வருகின்றார்.

களுதாவளையில் கட்டப்பட்ட கலாசார மண்டபம் பிரதியமைச்சர் முரளிதரனால் கட்டப்பட்டதா? முரளிதரன் சொல்வது உண்மையா என்பதைப்பற்றி நாம் ஆராய்ந்தோம்.

களுதாவளையில் புதிதாக கட்டப்பட்டிருக்கின்ற கலாசார மண்டபமானது. மிகவும் அழகாகவும் பிரமாண்டமாகவும் சகல வசதிகளும் கொண்டதுமாக அமையப்பெற்றிருக்கின்றது.

இக்கலாசார மண்டபம் தன்னால் கட்டப்பட்டது எனும் மாயையை மட்டக்களப்பில் தோற்றுவித்து. அதில் அரசியல் குளிர் காயும் நோக்கிலேயே இக்கலாசார மண்டபத்தினை தான் கட்டியதாகவும் களுதாவளை மக்கள் நன்றி கெட்டவர்கள் என்றும் முரளிதரன் பேசி வருகின்றார்.

இக்கலாசார மண்டபம் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தினால் அமைக்கப்பட்ட ஒன்றாகும் இதில் பெருமளவு நிதி ஆலயத்தின் பங்களிப்பாகும்.

இக்கலாசார மண்டபத்தினை கட்டுவதற்காக பல அரசியல்வாதிகள் நிதி வழங்கியதாக அறிய முடிகின்றது. கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினராக இருக்கின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வெள்ளிமலை, அமிர்அலி உட்பட பல அரசியல்வாதிகள் நிதி வழங்கி இருக்கின்றனர். இக்கலாசார மண்டப வேலைகளை துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக பிள்ளையான் அவர்களால் அண்மையில் 35 இலட்சம் நிதி வழங்கப்பட்டதாகவும் முன்னர் பிள்ளையானால் 20 இலட்சம் நிதி வழங்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.மொத்தமாக பிள்ளையானால் 55 இலட்சம் நிதி வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் முரளிதரனால் எந்தவிதமான நிதியும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அறிய முடிகின்றது.

அண்மையில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலனசபையினை அழைத்த முரளிதரன் தன்னை அழைத்து கலாசார மண்டபத்தினை திறந்து வைக்கும்படியும் அதற்கு முன்னர் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் தன்னை அழைத்து கிராம்தில் இருக்கின்ற பொது அமைப்புக்கள் பொது மக்களுடனான சந்திப்பு கூட்டம் ஒன்றியை நடாத்தும்படியும் கேட்டுக் கொண்டதாகவும்.

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் இதுவரை எந்தஒரு அரசியல் சார்ந்து செயற்படவில்லை. அத்துடன் அரசியல் கூட்டங்களை ஆலயத்தில் நடாத்தவுமில்லை. கருணா வற்புறுத்தியதனால் கூட்டத்தினை கூட்டியிருக்கின்றனர்.

அத்துடன் திறப்புவிழா செய்யப்பட்ட கலாசார மண்டபத்தினை மீண்டும் திறப்புவிழா செய்ய வேண்டும் எனவும் அதற்கு பிரதம அதிதியாக தன்னை அழைக்க வேண்டும் எனவும் மிரட்டியிருக்கின்றார்.

அத்துடன் தான் செல்லும் இடம் எல்லாம் களுதாவளை மக்கள் நன்றி கெட்டவர்கள் என்று பேசியும் வருகின்றார்.

இதுவரை களுதாவளைக்கு எந்த ஒரு அபிவிருத்தியும் செய்யாத, களுதாவளைப்பக்கமே வராத கருணாவுக்கு களுதாவளையைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என்று களுதாவளையில் மக்கள் பேசுகின்றனர்.

READ MORE | comments

மட்டக்களப்பு காத்தான்குடியில் படகு கரை ஒதுங்கியது


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரையில் இன்று காலை (31.1.2014)ஆளில்லாத படகு ஒன்று கரை ஒதுங்கியது.

கரையொதுங்கிய இந்த படகு மூங்கில்களால் செய்யப்பட்ட  27 அடி நீளமும் 12 அகலமும் கொண்டது.

காத்தான்குடி கடற்கரை யோரம் கரையொதுங்கிய இந்த படகை மீளவர்கள் மற்றும் பொதுமக்கள் காத்தான்குடி ஏத:துக்கால் கடற்கரையில் இழுத்து கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ்.ரி.ஜோர்ஜ் உட்பட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் இராணுவ அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.

இந்த படகு மியன் மார் நாட்டு படகாக இருக்கலாம் எனவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு சவுக்கடி கடலிலும் இவ்வாறான ஒரு படகு கரையொதுங்கியதாகவும் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ்.ரி.ஜோர்ஜ் தெரிவித்தார்.

இந்த படகின் சில பகுதிகள் தீப்பற்றி எரிந்து காணப்பட்டது இந்த படகை ஏராளமான பொதுமக்கள்.. பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














READ MORE | comments

பட்டிருப்புக் கல்வி வலயத்தில் 1200 ஆசிரியர்கள்

பட்டிருப்பு கல்வி வலயத்தில் 60 ஆங்கில ஆசிரியர்களுக்கும், 34 தகவல் தொழில்நுட்பட ஆசிரியர்களுக்கும், பற்றாக்குறை இருந்து வருகின்றது’ என பட்டிருப்பு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று (29) பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் கலந்துகொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வலயக் கல்விப் பணிப்பாளர், ‘பட்டிருப்பு கல்வி வலயத்தினுள் 1,200 ஆசிரியர்கள் இருந்தாலும் பாடரீதியாக ஆசிரியர்களின் பற்றாக்குறை இருந்து வருகின்றது. இந்த விடயம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரிடமும் எடுத்துக் கூறியிருந்தேன். அதன் காரணமாக 40 ஆசிரியர்கள் இந்த வலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்’ என்றார். 
‘ஆனாலும் தற்போது 60 ஆங்கில ஆசிரியர்களுக்கும், 34 தகவல் தொழில்நுட்பட் ஆசிரியர்களுக்கும், எமது வலயத்தில் பற்றாக்குறை இருந்து வருகின்றது. இந்நிலையில் கலைப் பட்டதாரிகளுக்கும் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கும் பயிற்சியளித்து விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களைக் கற்பிப்பதற்கு பயன்படுத்தி கடந்த காலங்களில் மாணவர்களின் பெறுபேறுகளை உயர்தியிருந்தோம். அந்த வகையில் இந்த வலயத்திற்குட்பட்ட அதிபர்கள். ஆசிரியர்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்கள்.
பட்டிருப்பு கல்வி வலயத்தில் 80 வீதமான ஆசிரியர்கள் பெண்களாக இருந்து சிறந்த முறையில் கற்பித்து வருகின்றார்கள். இம்முறை வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்குமேல் 72 வீதமான மாணவர்கள் இந்த வலயத்தில் பெற்றுள்ளமையினையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
விளையாட்டில் மாகாண மட்டத்தில் எமது கல்வி வலயம் இரண்டாம் இடம்பெற்றுக் கொண்டுள்ள இவ்வேளையிலும் பல பாடசாலைகளில் மைதானப் பற்றாக்குறைகளோடு இயங்கி வருகின்றன. இவ்வாறு பாடசாலைகளில் காணப்படுகின்ற பௌதீக வளப்பற்றாக்குறைகளை தீர்க்கப்பட வேண்டும் என பிரதியமைச்சரிடம் இவ்விடத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன்’ என அவர் தெரிவித்தார்.
READ MORE | comments

விபத்தில் துண்டான கையை காலில் வளர்த்து மீண்டும் பொருத்திய டாக்டர்கள்

Wednesday, January 29, 2014

பீஜிங்: சீனாவில் தொழிற்சாலையில் துண்டான கையை, காலில் ஒட்ட வைத்து வளர்த்து பின்னர் அதை வாலிபருக்கு மீண்டும் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் ஷாங்டே என்ற ஊரை சேர்ந்தவர் ஜியாவோ வெய் (20). இவர் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார். 

கடந்த நவம்பர் 10ம் தேதி தொழிற்சாலையில் வேலை செய்த போது எதிர்பாராத விதமாக ஜியாவோ வெய்யின் வலது கை இயந்திரத்துக்குள் சிக்கி துண்டானது. வலியில் அலறி துடித்தவரை, சக தொழிலாளர்கள் மீட்டனர். மணிக்கட்டு வரை துண்டாகி இயந்திரத்துக்குள் விழுந்திருந்திருந்த துண்டனை எடுத்து கொண்டு ஷாங்டேவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது கையை காப்பாற்றுவது கடினம் என்று கைவிரித்து விட்டனர். அங்கிருந்த டாக்டர்களின் அறிவுரைப்படி மண்டல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் சுமார் 2 மணி நேர பயணத்துக்கு பிறகு மண்டல மருத்துவமனையில் ஜியாவோ வெய்யை சேர்த்தனர். வாலிபரின் நிலையை கண்ட டாக்டர்கள், இது மிகவும் கடினமான சிகிச்சை.எனவே நேரடியாக மணிக்கட்டை கையில் பொருத்த முடியாது. வேறு மாதிரி முயற்சி செய்து பார்க்கலாம் என்று கூறினர். அதன்பின் துண்டான அவரது கையை அவரது இடது காலில் கணுக்கால் அருகே ஒட்டுசெடியை ஒட்ட வைப்பது போல் வைத்து, அதை உயிர் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதுவரை அவரது வலது கரத்தையும் மருந்துகள் மூலம் பாதுகாத்தனர்.

சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு துண்டான கையின் அனைத்து செல்களும் உயிர் பெற்றன. இதனால் மகிழ்ச்சி அடைந்த டாக்டர்கள், காலில் வளர்ந்திருந்த மணிக்கட்டை மீண்டும் ஆபரேஷன் மூலம் அகற்றி வலது கையில் பொருத்தினர். தற்போது ஜியாவோ வெய்யின் வலது கரம் வழக்கம் போல் நன்றாக செயல்படுகிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். கை திரும்ப கிடைத்த சந்தோஷத்தில் கண்ணீரோடு ஜியாவோ வெய் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதுகுறித்து இங்கிலாந்து டாக்டர்கள் கூறுகையில், இது ஒரு மருத்துவ அதிசயம். மிகவும் அரிதான முறையில் கையை பிழைக்க வைத்து சீன டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். 
READ MORE | comments

ஐபிஎல் 7-வது சீசன் ஏலம்: சேவாக், யுவராஜ் சிங் ரூ.2 கோடி அடிப்படை விலை


மும்பை: 7-வது இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் 10 நாடுகளில் இருந்து 233  வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியில் 46  இந்திய வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.  யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், தினேஷ் கார்த்திக், பிரக்யான் ஓஜா, யூசப் பதான் அடிப்படை விலை மதிப்புள்ள பட்டியலில் வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2 கோடிக்கு மேல் அடிப்படை விலை மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவர்களை எட்டு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏலத்தில் எடுக்கவுள்ளனர்.

சர்வதேச நட்சத்திரங்கள், ஐபிஎல் போட்டிகளில் முந்தைய வெற்றி போன்றவை பொறுத்து ஏலத்தில் எடுக்கவுள்ளனர். நியூசிலாந்தின் கோரே ஆண்டர்சன் மற்றும் அலெக்ஸ் ஆகியோர் ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியும். 

முந்தைய ஆறு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த இலங்கை வீரர் குமார் சங்ககாரா, இந்த ஆண்டு போட்டித் தொடரில் கலந்து கொள்ளவில்லை. மஹேலா ஜெயவர்த்தனே, தில்ஷன் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக் மற்றும் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் ஆகிய இருவரது ஏல மதிப்பு இந்த ஆண்டு குறைந்துள்ளது.

ஐபிஎல் வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12 மற்றும் 13 ம் தேதி நடக்கிறது. முதல் முறையாக இந்திய ரூபாயின் மதிப்பின் படி வீரர்களின் ஏலம் நடக்கவுள்ளது.

பின்வரும் வீரர்கள் ஒவ்வொருவரும் ரூ.2 கோடி அதிகபட்ச அடிப்படை விலை மதிப்புடையவர்கள்:
பிரவீண் குமார், அமித் மிஸ்ரா, ஆசிஷ் நெஹ்ரா, திவாரி, ராபின் உத்தப்பா, முரளி விஜய், ஜார்ஜ் பெய்லி , பிராட் ஹாடின், பிராட் ஹாட்ஜ், மைக்கேல் ஹசி, மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, ஷான் மார்ஷ், ஜேம்ஸ் பாட்டின்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், அலெக்ஸ், சமித் படேல், கெவின் பீட்டர்சன், பிரண்டன் மெக்கல்லம், ராஸ் டெய்லர், காலிஸ், திலகரத்னே தில்ஷன், ஜெயவர்த்தனே ஜெயவர்தனே, ஏஞ்சலோ மேத்யூஸ், மார்லன் சாமுவேல்ஸ்.
READ MORE | comments

பேரிக்காய் சாப்பிடுங்கள் எடையை குறையுங்கள்


ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளை தாயகமாகக் கொண்டவை பேரிக்காய்கள். ரோசாசியே தாவர குடும்பத்தை சேர்ந்த பேரிக்காயின் அறிவியல்  பெயர் பைரஸ் கமியூனிஸ். பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களிலும், உருண்டை, மணி வடிவங்களிலும் பேரிக்காய்கள் விளைகின்றன.  ஆசிய பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் பேரிக்காய் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன.

உடலிற்கு வலிமையளிக்கக் கூடிய நார்சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன. 100 கிராம் பழத்தில் 3.1  கிராம் நார்ப் பொருட்கள் காணப்படுகின்றன.

பேரிக்காயில் உள்ள நார்ப் பொருட்கள் குடல் புற்றுநோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகின்றன. இதில் காணப்படும் எளிதில் கரையாத  பாலிசாக்ரைடு மூலக்கூறுகள் குடலில் சேரும் புற்று நோய் நச்சுகளை அகற்றவல்லது.
குறைந்த ஆற்றல் அளிக்கக் கூடியவை பேரிக்காய்கள். 100 கிராம் பழத்துண்டில் 58 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இவற்றை தொடர்ந்து  சாப்பிட்டால் உடல் எடை, கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
அதிக அளவிலான வைட்டமின் சி சத்துப்பொருட்கள் பேரிக்காயில் நிறைந்து உள்ளன. புதிதாக பறித்த 100 கிராம் பழத்தில் 7 சதவீதத்திற்கு  வைட்டமின் சி காணப்படுகிறது.
பேரிக்காயில் பீட்டா கரோட்டீன், லுட்டின் மற்றும் ஸிசான்தின் போன்ற சத்துப் பொருட்களும் காணப்படுகின்றன. இவை உடலுக்கு வலிமை  அளிப்பதுடன், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகின்றன.
தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது உப்புகள் பேரிக்காயில் கணிசமாக உள்ளன. இவை தவிர பி குழும வைட்டமின்களான  பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் போலேட் போன்றவையும் மிகுதியாக காணப்படுகின்றன.
பேரிக்காய் பழங்கள் உடலுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற உபாதைகளை ஏற்படுத்துவதில்லை.
READ MORE | comments

மூளையை பயன்படுத்தி விளையாடுங்கள் : டோனி காட்டம்

நியூசிலாந்துக்கு எதிரான 4 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. அத்துடன் ஒருநாள் போட்டித் தொடரையும் இழந்தது. 

இதனால் கடும் அதிருப்தியடைந்த அணித்தலைவர் டோனிபந்துவீச்சாளர்கள் மீது குறை கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது

நமது பந்துவீச்சாளர்கள் திறமைசாலிகள்தான். ஆனால் மோசமான பந்துவீச்சின் காரணமாகவே இத்தொடரை இழந்துள்ளோம்.

இத்தொடரில் சமி மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். புவனேஷ்குமார் இத்தொடரில் ஜொலிக்காவிட்டாலும் அவர் சிறந்த பந்துவீச்சாளர் ஆவார்.

ஆனால் தங்களது முழுத்திறமையையும் வெளிப்படுத்த மூளையை அதிகமாக பயன்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும்.

கடைசி நேரத்தில் ஓட்டங்ளை வாரி வழங்குவதை பந்து வீச்சாளர்கள் நிறுத்தவேண்டும். புதுப்பந்தைக் கையாளும் போது கவனமாக இருப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.


READ MORE | comments

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் புதிய ஆசிரிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு


மட்டக்களப்புஆசிரியர்கலாசாலையில் 2014ஆம் 2015ஆம் ஆண்டுக்கான புதிய ஆசிரிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது.

கிழக்குமாகாணத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஆசிரியர்கள் பயிற்சிகளைப்பெறும் ஆசிரியர் கலாசாலையாகமட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை உள்ளது.

இரண்டுஆண்டுகள் பயிற்சிகளைநாடெங்கிலும் உள்ளதமிழ் மொழி மூலமான ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை வழங்கிவருகின்றது.

புதியமாணவர்களைவரவேற்கும் நிகழ்வுஆசிரியர்கலாசாலையின் முதல்வர்ஏ.எஸ்.யோகராஜன் தலைமையில் சிறப்பாகநடைபெற்றது.
இந்தநிகழ்வில்மட்டக்களப்புதேசியகல்விக்கல்லூரிபீடாதிபதிஎஸ்.இராஜேந்திரன் பிரதமஅதிதியாககலந்துகொண்டார்.

அத்துடன் ஆசிரியகலாசாலையின் விரிவுரையாளர்கள்,இரண்டாம் ஆண்டுமாணவர்கள் உட்படபலர் இந்தநிகழ்வில் கலந்துகொண்டனர்.
புதிய ஆசிரியமாணவர்களை வரவேற்கும் நிகழ்வினை மட்டக்களப்பு ஆசிரியர்கலாசாலையின் சிரேஸ்ட மாணவர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர்.

புதியமாணவர்களைசிரேஸ்ட மாணவர்கள் வரவேற்றதுடன் வரவேற்புநிகழ்வுகலாசாலையின் விபுலானந்தாமண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போதுபுதியஆசிரியமாணவர்களைவரவேற்கும் வகையில் பல்வேறுகலைநிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்ததுடன் கருத்துரைகளும் வழங்கப்பட்டன.















READ MORE | comments

மட்டக்களப்புக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 513மில்லியன் ஒதுக்கியுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கென முதல் கட்டமாக 513 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாக மட்டக்களப்பு திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

இந்த நிதி ஒதுக்கீடுகள் தேர்தல் தொகுதி வாரியாக மட்டக்களப்புக்கு 208 மில்லியன், கல்குடாவுக்கு 137 மில்லியன், பட்டிருப்புக்கு 168 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவை ஒருகிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம், திவிநெகும, கிராமப்புறப்பாலங்களும் பிரவேச வழிகளும், கிராமிப்பாடசாலை அபிவிருத்தியும் சுகநல நிகழ்ச்சித்திட்டங்கள், சிறுவர் முதியோர் இல்லங்கள் திருத்தம் செய்தல், உள்ளிட்ட அபிவிருத்தி வேலைகளுக்கு என பயன்படுத்தப்படவுள்ளது.

அபிவிருத்தித்திட்டங்களின் அடிப்படையில் பிரதேச செயலகங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் ஊடாக வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்சு உட்பட அனைத்து அமைச்சுகளினாலும் அபிவிருத்தித்திட்டங்களுக்கென 6028 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இதில் சுமார் 2000 மில்லியன் ரூபாய்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினுடையதாகும்.

இந்த நிதிகளில் 5130 அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் 75 வீதமான வேலைகள் அனைத்தும் பூரணப்படுத்தப்பட்டு, மிகுதியான உள்ள வேலைகள் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

கடந்த வருடத்தில் ஊட்டப்பாடசாலைகள், தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம், திவிநெகும, கைவிடப்பட்ட பூர்த்தியாகாத சொத்துக்கள், திரிய பியச, உட்பட பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த
READ MORE | comments

மட்டக்களப்பில் கடலில் மூழ்கி இறந்தவர்களின் சடலம் கரையொதுங்கியது

Tuesday, January 28, 2014

மட்டக்களப்பு பனிச்சையடிக் கடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞர்கள் மூவரில் இருவரின் சடலம் சவுக்கடி கடல்கரை பகுதியில் கரையொதுங்கியாதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர் நண்பர்கள் 07 பேர் ஒன்றாக கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது 04 பேர் திரும்பி கரைசேர்ந்ததாகவும் இருப்பினும் தங்களுடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் மூவர் கடல் அலையால் அள்ளுண்டு செல்லப்பட்டதாக தப்பி வந்தவர்கள் கூறியதாகவும் பொலிஸார் கூறினர்.



READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |