Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் புதிய ஆசிரிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு


மட்டக்களப்புஆசிரியர்கலாசாலையில் 2014ஆம் 2015ஆம் ஆண்டுக்கான புதிய ஆசிரிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது.

கிழக்குமாகாணத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஆசிரியர்கள் பயிற்சிகளைப்பெறும் ஆசிரியர் கலாசாலையாகமட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை உள்ளது.

இரண்டுஆண்டுகள் பயிற்சிகளைநாடெங்கிலும் உள்ளதமிழ் மொழி மூலமான ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை வழங்கிவருகின்றது.

புதியமாணவர்களைவரவேற்கும் நிகழ்வுஆசிரியர்கலாசாலையின் முதல்வர்ஏ.எஸ்.யோகராஜன் தலைமையில் சிறப்பாகநடைபெற்றது.
இந்தநிகழ்வில்மட்டக்களப்புதேசியகல்விக்கல்லூரிபீடாதிபதிஎஸ்.இராஜேந்திரன் பிரதமஅதிதியாககலந்துகொண்டார்.

அத்துடன் ஆசிரியகலாசாலையின் விரிவுரையாளர்கள்,இரண்டாம் ஆண்டுமாணவர்கள் உட்படபலர் இந்தநிகழ்வில் கலந்துகொண்டனர்.
புதிய ஆசிரியமாணவர்களை வரவேற்கும் நிகழ்வினை மட்டக்களப்பு ஆசிரியர்கலாசாலையின் சிரேஸ்ட மாணவர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர்.

புதியமாணவர்களைசிரேஸ்ட மாணவர்கள் வரவேற்றதுடன் வரவேற்புநிகழ்வுகலாசாலையின் விபுலானந்தாமண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போதுபுதியஆசிரியமாணவர்களைவரவேற்கும் வகையில் பல்வேறுகலைநிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்ததுடன் கருத்துரைகளும் வழங்கப்பட்டன.















Post a Comment

0 Comments