காலநிலையில் இன்று முதல் ஏற்படும் மாற்றம்! குளிரில் உறையப் போகும் வடகோளம்

Tuesday, January 31, 2017

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை இன்றிருந்து குறைவடையும் எனவும் நாளை முதல் பல பகுதிகளுக்கு மழையற்ற காலநிலை ஏற்படும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டின் வட கோளத்தில் காலை மற்றும் இரவு நேரத்தில் குளிருடனான காலநிலை ஒன்றை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைமை சில நாட்களுக்கு நீடிக்கும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
எப்படியிருப்பினும் நாளைய தினம் தென் மாகாணத்தின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் எனவும், மேல் மாகாணம், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பனியுடனான காலநிலை ஒன்றை எதிர்பார்க்க முடியும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கப்படுகின்றது.
திணைக்களம் இன்று மதியம் 12 மணியளவில் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
READ MORE | comments

ஆரையம்பதி வைத்தியசாலையை புனரமைத்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஆரையம்பதி வைத்தியசாலையின் குறைகளை நிவர்த்தி செய்து தருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பிரதேசமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரையம்பதி வைத்தியசாலையானது மட்டக்களப்பு பிரதான வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்ட காலத்தை சேர்ந்தது.
இவ்வைத்தியசாலையினை உரிய வகையில் புனரமைத்துத் தருமாறு பிரதேச மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேலும் இவ்வைத்தியசாலைக்கு வருகை தந்த சுகாதார அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில்பார்த்து அதன் நிலைமையை கருத்தில் கொண்டு வைத்தியசாலையை தரம் உயர்த்தி கட்டடவசதிகளையும் ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதியளித்து சென்றுள்ளனர்.
ஆனால் இன்று வரை குறித்த வைத்தியசாலை பாரிய குறைபாடுகள் மத்தியில் இயங்கி வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது இவ் வைத்தியசாலையில் நோயாளிகள் அதிகம் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
மேலும் வைத்தியசாலையின் ஆண், பெண் விடுதிகளும் இடிந்து விழும் தருவாயில் காணப்படுகின்றது.
பிரேத அறை கட்டப்பட்டு 5 வருடம் ஆகியுள்ளது. ஆனால் முறையான குளிரூட்டி வசதி இல்லாமல் மூடிக்கிடக்கின்றது.
வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளால் சிகிச்சைப் பெற வரும் நோயாளர்கள் அதிகம் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர்.
ஆகவே வைத்தியசாலையினை விரைவில் புனரமைப்பதற்கு ஜனாதிபதி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
READ MORE | comments

மேல்மாகாண தமிழ் பாடசலைகளுக்கு புதிதாக 600 ஆசிரியர்கள்

மேல்மாகாண தமிழ் மொழி பாடசாலைகளுக்காக புதிதாக 600 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
தொடங்கொட கொடஹேன தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்ஷ உரையாற்றுகயில் இதனை தெரிவித்தார்.
இதற்கான நேர்முகப்பரீட்சைகளை மேல்மாகாண கல்வித்திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
தெரிவுசெய்யப்படுபவர்களுக்கு அடுத்த மாதம் நியமனக் கடிதங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
30 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 3 மாடிக் கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
READ MORE | comments

மாலபே தனியார் வைத்திய கல்லூரி மருத்துவ பட்டம் சட்டரீதியானது

மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் பட்டம்பெறும் பட்டதாரி,  இலங்கை வைத்தியர் சங்கத்தில் பதிவுசெய்யும் உரிமை உள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மாலபே தனியார் வைத்திய கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மேற்படி  தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
READ MORE | comments

மூதூர் விபத்தில் ஒருவர் பலி

திருகோணமலை-மட்டக்களப்பு வீதி, மூதூர் இறால்குலி பாலத்துக்கு அருகாமையில் இன்று காலை மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொண்ட 36 வயதுடைய மூதூரை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவரின் உடல் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டி சாரதி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிப்பர் வாகனத்தின் சாரதியை மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர்.
READ MORE | comments

லண்டனை தாக்க போகும் பனிப்புயல்..! உயிரிழப்பு வீதம் அதிகரிக்கலாம் என அச்சம்

பிரித்தானியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் மத்தியில் பனிப்புயல் தாக்கும் பேராபத்து எழுந்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவில் காலநிலை தொடர்ந்து அபாய நிலையில் நீடிப்பதால் எதிர்வரும் 2 வாரங்களில் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்த காலகட்டங்களில் 70mph அளவுக்கு காற்று வீச்க்கூடும் எனவும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த காலகட்டத்தில் இருதயம் தொடர்பான நோய்கள், மார்பு தொடர்பான நோய்கள், உள்ளிட்டவை முதியவர்களை அதிகமாக பாதிப்புக்கு உள்ளாக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்தில் கடும் குளிர் காரணமாக ஐரோப்பாவில் சுமார் 1023 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் கடும் குளிர் பிரித்தானியாவையும், தலை நகர் லண்டனையும் தாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
READ MORE | comments

பதினொரு கோடி ரூபா கடத்த முயன்றவருக்கு ஒரு மில்லியன் அபராதம்

இலங்கையிலிருந்து பதினொரு கோடி ரூபா பெறுமதியான பணத்தைக் கடத்திச் செல்ல முயன்ற நபருக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29ம் திகதி இலங்கையிலிருந்து டுபாய் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வருகை தந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்லப்பட இருந்த பதினொரு கோடி ரூபா பெறுமதியான இலங்கை மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்கள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பரந்துபட்ட விசாரணைகளை முன்னெடுத்த சுங்கப் பிரிவினர், கைப்பற்றப்பட்ட பணத்தை அரசாங்கத்தின் கருவூலத்தில் சேர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அத்துடன் கடத்தலில் தொடர்புடைய நபருக்கு நேற்றைய தினம் ஒரு மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது,
READ MORE | comments

பள்ளத்தில் கவிழ்த பஸ் : 15பேர் படுகாயம்

Monday, January 30, 2017

தம்புள்ள ஹபரண வீதியில் இன்று அதிகாலை பஸ் ஒன்று வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கதுருவெலவிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த பஸ் பள்ளத்தில் விழுந்து தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இதில் காயமடைந்த அனைவரும் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -(3)
READ MORE | comments

மட்டக்களப்பில் 69வது காந்தி ஜெயந்தி தினம்

69வது காந்தி ஜெயந்தி தினம் மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை காலை சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலை அருகில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது மகாத்மா காந்தியின் சிலைக்கு அதிதிகளினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள் நடைபெற்றன.
காந்தி சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜா,பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
உலகுக்கு அகிம்சையை போதித்த மகானாகவுள்ள மகாத்மா காந்தியின் இந்த ஜெயந்தி தின நிகழ்வில் பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.IMG_0015IMG_0037IMG_0044
READ MORE | comments

சாய்ந்தமருதில் இடம்பெற்ற விபத்தில் 3 குழந்தைகள் பலி

அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் சாய்ந்தமருதில் இடம்பெற்ற வாகன விபத்தில வேனில் வந்த 3 சிறுவர்கள் அந்த இடத்தில் உயிரிழந்ததுடன் ஏனையோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று அதிகாலை 5.15க்கு இந்த விபத்து நடைபெற்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றார்கள்.
கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து மதக்கடமைக்கு சென்றுவிட்டு தங்களது ஊரான பாலமுனை நோக்கி சென்று கொண்டிருந்த வேனும் அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பேரூந்தும் மோதியதில் வேனில் இருந்தவர்களில் 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளார்கள் ஏனையவர்கள் தற்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
3 சிறுவர்களில் இரண்டரை வயது, 4 வயது, 8 வயது மதிக்கத்தக்க குழந்தைகளே பலியாகி உள்ளனர்.
ஏனையவர்களில் ஒரு சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.IMG_1016rtw
READ MORE | comments

கடலில் நீராடச்சென்ற இருவர் மாயம்

கடலில் நீராடச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திருகோணமலை அலஸ்தோட்ட கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று இளைஞர்கள் நீராட சென்ற நிலையில், அந்த பகுதி மீனவர்களினால் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சந்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. திருகோணமலை செல்வநாயகபுர பிரதேசத்தை சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
READ MORE | comments

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய நூலகம் திறந்துவைப்பு

மட்டக்களப்பு - மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் தரமுயர்த்தப்பட்ட நூலகம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த நூலகம் பாடசாலை அதிபர் எஸ்.சண்டேஸ்வரன் தலைமையில் கிழக்கு லயன்ஸ் கழகத்தின் உதவியுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுனர் லயன் அசேல குணவர்த்தன மற்றும் அக்கரைப்பற்று லயன்ஸ் கழகத்தின் தலைவர் ஏ.எம்.ஹலீம்,பிராந்திய செயலாளர் லயன் ஜி.முரளிதரன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.
கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த பாடசாலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை கருத்திற்கொண்டு லயன்ஸ் கழகத்தினால் இந்த நூலகம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை,பாரதி வித்தியாலயத்தில் எதுவித வசதிகளும் இல்லாமல் இயங்கி வந்த நூலகத்திற்கு தளபாடங்கள் உட்பட பெருமளவான நூல்கள் வழங்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், லயன்ஸ் மாவட்ட தலைவர் ரி.ஆதித்தியனின் முயற்சியால் இந்த நூலகம் அபிவிருத்தி செய்யப்பட்டு தரமுயர்த்தப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தினராலும் பாடசாலை பொதுநூலகத்திற்கு ஒரு தொகை நூல்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வின் போது லயன்ஸ் மேலதிக மாவட்ட அமைச்சரை பொருளாளரும் மாவட்ட கிரிக்கட்சபையின் தலைவருமான லயன் பொறியியலாளர் என்.பி.ரஞ்சனின் 56வது பிறந்த தினமும் கொண்டாடப்பட்டமை குறிப்பித்தக்கது.
READ MORE | comments

தொடர்ந்தும் மழை பெய்யலாம்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வானிலை அவதான நிலையம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த தினங்களில் ஏழு மாவட்டங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, 4065 குடும்பங்களைச் சேர்ந்த 12,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக வௌ்ள நிலைமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
READ MORE | comments

ஆட்சி அதிகாரம் சாதாரண மக்களின் கைகளுக்கு கிடைக்க வேண்டும் : அனுரகுமார

எப்போதும் சொத்துள்ள உயர் வர்க்கத்தினரிடம் இருக்கும் நாட்டின் ஆட்சி நிர்வாகம் சாதாரண மக்களின் கைகளுக்கு கிட்டும்வரை நாட்டில் நல்லதொரு மாற்றத்தை எதிர்ப்பார்க்க முடியாது என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் அத்தியாவசிய சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை. மாணவர்களின் கல்வியில் அநீதி இழைக்கப்படுகின்றது. பிள்ளைகள் சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லாது போயுள்ளது. ரோபோக்களை போன்ற ஒரு எதிர்கால சமுதாயம் உருவாக்கப்படுகின்றது. இவர்கள் ஆரோக்கியமான சமூகமாக உருவாகுவது சாத்தியமற்றது. சிறந்த ஒரு சமூக சூழ்நிலையை உருவாக்க முடியாக அரசாங்கம் பயனற்றதாகும். எனவே கடந்த 69 வருடங்களாக தொடர்கின்ற சொத்துள்ள வர்க்கத்தினரின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து சாதாரண பொதுமக்களின் கைகளுக்கு ஆட்சி கைமாற்றப்பட வேண்டும் என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

கல்முனை - நற்பிட்டிமுனைக் கிராமத்தில் பிறந்தநாளை கொண்டாட்டிய இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

Sunday, January 29, 2017

கல்முனை - நற்பிட்டிமுனைக் கிராமத்தில் பிறந்தநாளை கொண்டாட்டிய இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியைச் சேர்ந்த பொன்னுத்துரை தர்மேந்திரா (வயது 30) என்பவரே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞரின் சடலம் அவர் வசித்த வீட்டிற்கு அருகிலிருந்த உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் நேற்று பகல் தனது 30ஆவது பிறந்த நாளை கொண்டாடியதுடன், இன்று அவரது உறவினர் முறையான நபர் இறந்து ஒரு வருட திவசத்திற்கான பொருட்கள் வாங்குவதிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையின் குறித்த இளைஞன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது பற்றிய மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



READ MORE | comments

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயமும், பட்டிருப்பு வலய விஞ்ஞான பாட ஆசிரியர்களும் இணைந்து ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாவட்ட வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட  கட்டடத் தொகுதியைத் திறப்பதற்காக எதிர்வரும் 01.02.2017 புதன்கிழமை  அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்கள் வருகை தரவுள்ளார்.   இதனை முன்னிட்டு சிரமதானங்கள், விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடாத்தப்படுகின்றன. அந்த வகையில் 28.01.2017 அன்று  மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலய ஊழியர்களும், பட்டிருப்பு வலய விஞ்ஞான பாட ஆசிரியர்களும் இணைந்து டெங்கு தொடர்பான விழிப்பு, போதைப்பொருள் தொடர்பான, புகைத் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பதாதைகளைத் தாங்கிய வண்ணம் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் அம்மணி, பட்டிருப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.மா.உலககேஸ்பரம் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள்,  முகாமைத்துவ ஊழியர்கள், பட்டிருப்பு வலய விஞ்ஞான பாட ஆசிரியர்கள் என்போர் கலந்து சிறப்பித்தனர். இவற்றைப் படங்களில் காணலாம்.











READ MORE | comments

நல்லாட்சி அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்காது: சஜித் பிரேமதாச

நல்லாட்சி அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்காது.பௌத்த மதத்திற்கான முன்னுரிமைக்கு குந்தகம் ஏற்படாது என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், பௌத்த மதத்திற்கான முன்னுரிமை குறையாது எனவும் கடந்த அரசாங்கமே நாட்டுக்கு பாதகம் ஏற்படக்கூடிய சமஷ்டி ஆட்சி முறையிலான அரசியல் சாசனமொன்றை உருவாக்க முயற்சித்தது எனவும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

அமெரிக்காவிற்குள் செல்லத் தடை! ட்ரம்ப்பின் முடிவு: சிக்கலில் சர்வதேச உறவு

அமெரிக்காவில் நிகழ்ந்த அரசியல் மாற்றம் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி நடந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவு அமெரிக்கர்கள் மட்டுமல்ல, ஏனைய நாட்டவர்களும் எதிர்பார்க்கவில்லை.
ஆனாலும், வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. தான் அதிகாரத்திற்கு வந்தால் குடியேற்றவாசிகளை வெளியேற்றுவேன் என்று தேர்தல் பிரசாரங்களின் போது ட்ரம்ப் அதிகம் சொல்லியிருந்தார்.
இந்நிலையில், கடந்த 20ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதுடன், நேற்று முந்தினம் அமெரிக்காவிற்குள் சிரியா, லிபியா, ஈரான் உட்பட ஏழு நாட்டவர்களுக்கு விசா வழங்கப்படாது என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பில் பல்வேறு நாடுகளும் விமர்சனம் வெளியிட்டுள்ளதுடன், அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.
எனினும் இது இதற்கு காரணம் தெரிவித்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,
சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக யாரும் இனி அமெரிக்கா வர முடியாது. தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கையை எடுத்தேன்.
சுமார் 10 மில்லியன் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்களை சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்ப வேண்டும். இதற்காக 10 ஆயிரம் அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலே சொன்ன குறித்த ஏழு நாடுகளும், முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள்.
அங்கே முஸ்லிம்களின் ஆட்சி நடைபெறுகிறது. ட்ரம்பின் இந்த முடிவானது, ஒரு விடயத்தை மிகத் தெளிவாக உணர்த்தி நிற்கிறது.
முஸ்லிம்களுக்கு எதிரான அவரின் வன்மத்தையும், அவரின் எதிர்ப்பையும் காட்டியிருக்கிறது.
எனினும் அவரின் இந்த முடிவை உடனடியாக விமர்சனம் செய்தவர்கள், ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சுக்கர்பெர்க்ம், கூகுள் முதன்மைப் பொறுப்பாளராக இருக்கும் சுந்தர் பிச்சையும் தான். இவர்கள் இரண்டு பேருமே ஒரு கருத்தில் ஒத்துப் போகின்றார்கள்.
அமெரிக்காவின் வரலாற்றில் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் நிச்சையம் பெரும் சரிவைச் சந்திக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஏனெனில், தன்னுடைய எதிர்ப்பு உணர்விற்காக குறித்த நாட்டவர்களுக்கு விசா வழங்கப்படாது என்றும், குடியேற்றவாசிகள் வெளியேற்றப்பட வேண்டும் எனச் சொல்வதும் ஏனைய நாடுகளை பகைத்துக் கொள்வதைப் போன்றதாகவே தோன்றுகிறது.
இதுவொருபுறமிருக்க, அமெரிக்காவின் பொருளாதாரத்திலும் இதன் தாக்கம் அதிகரிக்கும்.
ஆக, அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் இந்த மாறுதல்கள் எதிர்வரும் காலங்களில் புலம்பெயர் வாசிகளுக்கு பேராபத்தைத் தான் உருவாக்கும்.
அதனால் தான் இப்பொழுதே இந்த எதிர்ப்புக்கள், அதிருப்திகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உணர்ந்து கொள்வாரா தெரியவில்லை.
இது அமெரிக்காவின் வெளிநாட்டு நட்புறவிற்கு பெரும் குந்தகத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்கிறார்கள் சர்வதேச அரசியல் விமர்சகர்கள்.
READ MORE | comments

தமிழர்களின் வரலாறு எதிர்கால சந்ததிக்கு உணர்த்தப்படவேண்டும்: அரியநேத்திரன்

தமிழர்களின் வரலாறுகள் எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என்பதற்காகவே படுகொலைகள் நினைவுகூரப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1987 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம் இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளை கிளையின் ஏற்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் இன்று(28) இந்த நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
உரிமைக்கான போராட்டம் காரணமாக 2009ஆம் ஆண்டுவரையில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களையும் 50ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகளையும் இழந்து நிற்கின்ற போதிலும் இதுவரையில் தமிழர்களுக்கான எந்த தீர்வும் கிடைக்காதது கவலைக்குரியதாகும்.
இந்த மகிழடித்தீவு,கொக்கட்டிச்சோலை படுகொலைகளிலும் பல்வேறு தரப்பட்டவர்களை இந்த மண் இழந்துள்ள போதிலும் அவர்களுக்கான நீதி இதுவரை வழங்கப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் படுகொலைக்குள்ளானவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
READ MORE | comments

சாரதிகள் அவதானம் ; அமுலுக்கு வருகிறது புதிய சட்டமூலம்

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான புதிய சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து அமுலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்தில் ஈடுபடும் மற்றும் ஏனைய முச்சக்கரவண்டிகளில் கட்டாயம் மீற்றர் கருவி பொருத்துதல், முச்சக்கரவண்டி செலுத்தும்போது புகைப்பிடிப்பதை தவிர்த்தல் மற்றும் முச்சக்கரவண்டிகளில் பயணிப்போருக்கு சொந்தமான பொருட்கள் தவரவிடப்படுமாயின் அதனை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தல் போன்ற சட்டமூலங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை முச்சக்கரவண்டி சாரதியின் சாரதி அனுமதிப்பத்திர இலக்கம், நிழற்படம், வாகனம் பதிவுசெய்யப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கம் மற்றும் சாரதியின் பெயர் என்பவற்றை பயணிகளுக்கு தெரியும்படி காட்சிப்படுத்தலும் முக்கியமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

பிரதமரின் உரை தமிழர்களின் மனதில் நீங்காத வடுவை ஏற்படுத்தியுள்ளது – பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்

பிரதமர் அண்மையில் காணாமல்போனவர் தொடர்பில் தெரிவித்த கருத்து தமிழர்களின் மனங்களில் நீங்காத வடுவை ஏற்படுத்தியுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
1987 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலைசெய்யப்பட்டிருந்தனர். இப்படுகொலை சம்பவத்தின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்;று அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முப்பது வருட நீங்காத நினைவும் எப்போதும் மாறாத எம்மவர் துயரும் என்னும் தலைப்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நினைவுப்பேருரையாற்றினார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தமிழர்களின் பகுதிகளில் சிங்கள பேரினவாதத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு படுகொலைகளும் திட்டமிட்டவகையில் இலங்கை தீவில் இருந்து தமிழர்களை முற்றுமுழுதாக அழிக்கவேண்டும் என்ற நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள் எங்களை அழிக்கஅழிக்க நாங்கள் வளர்ந்துகொண்டேயுள்ளோம். தமிழர்களின் போராட்டம் இந்தியா தொடக்கம் அமெரிக்காவரையில் உலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒன்றிணைத்து போராடக்கூடிய வல்லமைகொண்ட இனமாக தமிழினம் வளர்ந்துநிற்கின்றது என்றால் அதற்கு காரணம் பேரினவாத அரசின் ஒடுக்குமுறையாகும்.
கொக்கட்டிச்சோலை பகுதிகளில் 1987 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில் படுகொலைகள் நடைபெற்றுள்ளன்.அந்தவேளையில் அந்த படுகொலைகளை செய்தவர்களுக்கு தெரியும் தாங்கள் கொலைசெய்பவர்கள் விடுதலைப்புலிகள் அல்ல என்று.அவர்களின் நோக்கம் அன்று தமிழர்களை அழிப்பதாகவே இருந்தது.அந்த நோக்கிலேயே கடந்த காலத்தில் படுகொலைகள் நடைபெற்றுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு படுகொலைகள் நடாத்தப்பட்டன.
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தமிழ் இனத்தின் வரலாறுகள்.வடகிழக்கு இணைந்த தாயகத்தில் என்றொ ஒருநாள் தீர்வுத்திட்டத்தினைப்பெற்றுக்கொள்வோம்.அதற்காக ஒவ்வொரு தமிழனும் உயிர் இருக்கும் வரையில் போராடுவார்கள்.அது அரசியல் ரீதியாக இருக்கலாம்,ஆயுத ரீதியாக இருக்கலாம்.அகிம்சை ரீதியாககூட இருக்கலாம்.
அன்று தமிழர்கள் படுகொலைசெய்யப்படும்போது அதற்கு எதிராக அன்றைய இளைஞர்கள் போராடாமல் இருந்திருந்தால் இன்று தமிழ் இனமே அழிந்திருக்கும்;.முற்றுமுழுதாக சிங்கள பேரினவாத தீவாக இது மாற்றப்பட்டிருக்கும்.
எமது அடுத்த சந்ததியாவது வடகிழக்கு இணைந்த தாயகத்தில் ஒரு கௌரவமான வாழக்கையினை பெற்றுக்கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் போராட்டம் வெற்றியடையும் என நான் கருகின்றேன்.
இலங்கையின் தமிழர்கள் பகுதிகளில் நடைபெற்ற எந்த படுகொலைக்கும் இலங்கையில் இருந்த எந்த அரசாங்கமும் நீதி வழங்கவில்லை.ஒரு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டால் இன்னுமொரு நீதிமன்றத்தில் விடுதலை வழங்கப்படும் நிலையே இருந்துவருகின்றது.
இவ்வாறான நிலையில் இலங்கையில் நடைபெற்ற மிகப்பெரும் படுகொலையான முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எவ்வாறு நீதியினை எதிர்பார்க்கமுடியும்.நூற்றுக்கணக்கானவர்களை படுகொலைசெய்த படுகொலைகளுக்கு நீதிவழங்காத இந்த அரசாங்கம் இலட்சக்கணக்கானவர்களை படுகொலைசெய்த இராணுவத்திற்கு உள்ளூர் பொறிமுறையூடாக எவ்வாறு விசாரணை நடாத்தி தண்டனை வழங்கமுடியும்.இது ஏமாற்றும் செயற்பாடாகும்.
வடகிழக்கில் நடைபெற்ற அனைத்து படுகொலைகளையும் விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழு வேண்டும் என்பதே உலகமெங்கும் வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் கோரிக்கையாகவுள்ளது.
2007ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெருமளவான தமிழ் இளைஞர்கள் காணாமல்போயுள்ளனர்.இவர்களில் பலர் வீடுகளில் வைத்து வெள்ளைவானால் கடத்தப்பட்டுள்ளனர்,பலர் வீதிகளில் செல்லும்போது கடத்தப்பட்டுள்ளனர், பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டுள்ளனர்,அதற்கு மேலாக இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் தமிழர்களின் ஆதரவுடன் ஆட்சிபீடமேறிய பிரதமர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது காணாமல்போனவர்கள் வெளிநாடு சென்றிருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இராணுவத்திடம் கொண்டுசென்று தமது பிள்ளைகளை கையளித்தவர்களுக்கு இந்த பிரதமர் என்ன பதிலை சொல்லப்போகின்றார்.அவர்களை பிரதமரா வெளிநாடு அனுப்பிவைத்தார்.அல்லது நீங்கள் அவர்களைக்கொன்றுவிட்டீர்களா என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.
ஒருநாட்டின் பிரதமர் அந்த நாட்டின் மக்களின் மனதை,இறமையினை மதிக்கவேண்டும்.ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பேச்சு தமிழ் மக்களின் மனதில் நீங்காத வடுவினை ஏற்படுத்தியுள்ளது.நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தது இந்த அரசாங்கம் ஆட்சியமைக்கவேண்டும் என்பதற்கு அல்ல.மகிந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதற்காகவே ஆதரவளித்தோம்.பிரதமரின் இந்த உரை மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல தடவைகள் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.23 தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்பி விடுதலைசெய்வதாக அமைச்சர் சுவாமிநாதன் பாராளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.உறுதியளித்து ஆறுமாதங்களைகடந்துள்ள நிலையிலும் இன்னும் அவை நிறைவேற்றப்படவில்லை.அவர்களுக்கு இன்னும் புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை.
வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 65ஆயிரம் ஏக்கர் காணிகள் உள்ளது.இந்த அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இரண்டாயிரம் ஏக்கர் காணிகள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.தமிழர்களின் பூர்வீக நிலங்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.மிகுதி காணிகளை விடுவிப்பதற்கு இன்னும் 63 வருடங்கள் காத்திருக்கவேண்டுமா என்ற கேள்வியும் இன்று எழுந்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு தீர்வினை நோக்கிய நகர்வில் பொறுமையுடன் செயற்பட்டுவருகின்றது.அந்த பொறுமையினை இந்த அரசாங்கம் பலவீனமாக கருதிவிடக்கூடாது.அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வொன்றினை முன்வைக்கும்போது அதனை ஏன் குழப்பினீர்கள் என சர்வதேசம் எங்களை கேட்ககூடாது. அந்தவகையிலேயே நாங்கள் பொறுமைகாக்கின்றோம்.
READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடம் பொது நூலகத்தின் வாசகர் வட்டத்தின் புதிய தலைவராக விவேகானந்தம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்

Saturday, January 28, 2017


மட்டக்களப்பு குருக்கள்மடம் பொது நூலகத்தின் வாசகர் வட்டம் இன்று புதிதாக தெரிவு செய்யப்பட்டது. அந்த வகையில் இந்நிகழ்வில் மாவட்டட சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மற்றும் மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் என்போர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னர் செயற்பட்ட வாசகர் வட்டத்தில் பல குறைபாடுகள் இனங்காணப்பட்டதால்  புதிய வாசகர் வட்டம் பொது மக்களால் தெரிவு செய்யப்பட்டது. வாசகர் வட்டத் தலைவராக விவேகானந்தம் அவர்களும் செயலாளராக நூலக உதவியாளரும் பொருளாரராக சுயந்தன் அவர்களும் மற்றும் ஊறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.  இந்நிகழ்வானது குருக்கள்மடம் பொது நூலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறுபட்ட கருத்துக்கள்  பரிமாறப்பட்டன.













READ MORE | comments

மீண்டும் சுனாமி பேராபத்து..! தத்தலிக்கும் பூமி...!பெப்ரவரி 16 நடக்க போவது என்ன?

Add caption
எதிர் வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி பூமியை மர்ம பொருள் ஒன்று தாக்கவுள்ளதாக ரஷ்யாவைச் சேர்ந்த வானியலாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, சுனாமி பேரழிவை ஏற்படுத்த கூடும் என குறிப்பிட்டுள்ளதுடன், கடந்த ஆண்டு நாசா விசித்திரமான பொருளை பூமியில் சுற்று வட்டப்பாதையில் கண்டுள்ளது.
குறித்த பொருளின் பெயர் டபிள்யூ எப் 9 என கூறப்பட்டுள்ளது.அத்துடன், அப்பொருள் விண்கல் அல்லது சிறுகோளாக இருக்கலாம் என்று நாசா கணித்துள்ளது.
இதனை தொடர்ந்து, அண்மையில் பூமியை நோக்கி மர்ம பொருள் வருவதாகவும் அதனால் பூமிக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என நாசா குறிப்பிட்டது.
அத்துடன், 51மில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் அது கடந்து சென்று விடும் எனவும் அறிவித்தது.
இந்த நிலையில் குறித்த டபிள்யூ எப் 9 மர்ம பொருள் பூமியை வந்து தாக்கும் எனவும் அதனால் பூமியின் பல பகுதிகளில் சுனாமி போன்று பேரழிவுகள் ஏற்படக்கூடும் எனவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

இலங்கையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள் நீண்ட காலமாக வெளியிடப்படாத நிலையில் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளன.
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பெறுபேறுகள் வெளியிடப்படாதமையால் அவர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படாமலும்சம்பளம் அதிகரிக்கப்படாத நிலையும் காணப்பட்டது.
இதனால் தாம் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சுட்டிக் காட்டி தமது பெறுபேறுகளை விரைவாக வெளியிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பெறுபேறுகள் நீண்ட காலமாகியும் வெளியிடப்படாதமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கடந்த வாரம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு, பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பெறுபேறுகள் தாமதிக்கப்படுவதற்கான காரணத்தைக் கேட்டறிந்துள்ளார்.
மேலும், இனியும் தாமதிக்காது, விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தார் என்பதும், இவ்விடயம் தொடர்பில் கல்வி அமைச்சிடமும் தெரியப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
READ MORE | comments

நாட்டில் பல பிரதேசங்களில் கடும் மழையுடன் கூடிய கால நிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Friday, January 27, 2017

இன்றைய தினம் நாட்டில் பல பிரதேசங்களில் கடும் மழையுடன் கூடிய கால நிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பிற்பகல வேளையில் மழையுடன் இடி மின்னல் காணப்படுமெனவும் இதனால் இது குறித்து அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
READ MORE | comments

பாரிய விபத்திலிருந்து தப்பிய காங்கேசன்துறை – கொழும்பு ரயில்

காங்கேசன்துறையிலிருந்து நேற்று இரவு கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலுக்கு ஏற்படவிருந்த பாரிய விபத்து ரயில் சாரதியின் சாதுர்யத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது.
தலாவ ரயில் நிலையத்திற்கு ரயில் தண்டவாளத்தில் மற்றுமொறு தண்டவாள துண்டொன்றை குறுக்காக வைத்து அந்த ரயிலை விபத்துக்குள்ளாக்குவதற்கு இனந்தெரியாத குழுவொன்று முயற்சித்துள்ள நிலையில் தண்டவாளத்தில் ஏதோ பிரச்சினை இருப்பதனை உணர்ந்த சாரதி உடனடியாக ரயிலை நிறுத்தி அந்த விபத்தை தடுத்துள்ளார்.
இதேவேளை இதன்போது ரயிலுக்கு சிறியளவிலான சேதமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ரயிலின் சாரதியும் மற்றும் ரயில் பொறுப்பதிகாரியும் தலாவ பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.
READ MORE | comments

பணம் மோசடி செய்த நபருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை

(எஸ்.ஸிந்தூ)
பணம் மோசடி செய்த  நபருக்கு எதிராக இரண்டு  வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் .


தொழில் பெற்றுத்தருவதாக கூறி  ஒரு இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு  கணக்கு முடக்கப்பட்ட வங்கி காசோலையினை வழங்கி ஏமாற்றிய சம்பந்தமாக நளின் குணம் என்பவருக்கு  எதிராக 2013 .05.14 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை  2017.01.26 ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில்  மேற்கொண்ட விசாரணை முடிவின் சாட்சியங்கள் நிருபிக்கப்பட்டதன் காரணமாக குற்றவாளிக்கு எதிராக  இரண்டு  வருட கடுழிய சிறைத்தண்டனையை விதித்து நீதிபதி  மாணிக்கவாசகர் கணேசராஜா தீர்ப்பளித்துள்ளார்.
READ MORE | comments

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சிவகலை வித்தியாலயத்தில் தூய்மை படுத்தல்

Thursday, January 26, 2017

(எஸ்.ஸிந்தூ)
எதிர்வரும் மாதம் முதாலாம் திகதி (01.02.2017) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலை கட்டட தொகுதியை திறந்து வைப்பதற்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகை  தரவுள்ளார் இதனை முன்னிட்டு பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளை சிரமதான பணி மூலம் தூய்மை நிகழ்வு இன்று(26.01.2017) காலை 07. மணிக்கு ஆரம்பத்தது அந்த வகையில் தேற்றாத்தீவு சிவகலை  வித்தியாலயத்தின் அதிபர் த.சிறிதரன் தலைமையில் பாடசாலை வளாகம் மற்றும் சுற்று சுழல் தூய்மைபடுத்தப்பட்டது. இவ் தூய்படுத்தல் நிகழ்விற்கு சிவகலை  வித்தியாலயத்தின் பெற்றோர் நலன் விரும்பிகள் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.







READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |