மட்டக்களப்பு - மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் தரமுயர்த்தப்பட்ட நூலகம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த நூலகம் பாடசாலை அதிபர் எஸ்.சண்டேஸ்வரன் தலைமையில் கிழக்கு லயன்ஸ் கழகத்தின் உதவியுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுனர் லயன் அசேல குணவர்த்தன மற்றும் அக்கரைப்பற்று லயன்ஸ் கழகத்தின் தலைவர் ஏ.எம்.ஹலீம்,பிராந்திய செயலாளர் லயன் ஜி.முரளிதரன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.
கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த பாடசாலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை கருத்திற்கொண்டு லயன்ஸ் கழகத்தினால் இந்த நூலகம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை,பாரதி வித்தியாலயத்தில் எதுவித வசதிகளும் இல்லாமல் இயங்கி வந்த நூலகத்திற்கு தளபாடங்கள் உட்பட பெருமளவான நூல்கள் வழங்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், லயன்ஸ் மாவட்ட தலைவர் ரி.ஆதித்தியனின் முயற்சியால் இந்த நூலகம் அபிவிருத்தி செய்யப்பட்டு தரமுயர்த்தப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தினராலும் பாடசாலை பொதுநூலகத்திற்கு ஒரு தொகை நூல்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வின் போது லயன்ஸ் மேலதிக மாவட்ட அமைச்சரை பொருளாளரும் மாவட்ட கிரிக்கட்சபையின் தலைவருமான லயன் பொறியியலாளர் என்.பி.ரஞ்சனின் 56வது பிறந்த தினமும் கொண்டாடப்பட்டமை குறிப்பித்தக்கது.
0 Comments