Advertisement

Responsive Advertisement

கடலில் நீராடச்சென்ற இருவர் மாயம்

கடலில் நீராடச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திருகோணமலை அலஸ்தோட்ட கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று இளைஞர்கள் நீராட சென்ற நிலையில், அந்த பகுதி மீனவர்களினால் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சந்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. திருகோணமலை செல்வநாயகபுர பிரதேசத்தை சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments