Home » » மட்டக்களப்பு குருக்கள்மடம் பொது நூலகத்தின் வாசகர் வட்டத்தின் புதிய தலைவராக விவேகானந்தம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்

மட்டக்களப்பு குருக்கள்மடம் பொது நூலகத்தின் வாசகர் வட்டத்தின் புதிய தலைவராக விவேகானந்தம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்


மட்டக்களப்பு குருக்கள்மடம் பொது நூலகத்தின் வாசகர் வட்டம் இன்று புதிதாக தெரிவு செய்யப்பட்டது. அந்த வகையில் இந்நிகழ்வில் மாவட்டட சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மற்றும் மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் என்போர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னர் செயற்பட்ட வாசகர் வட்டத்தில் பல குறைபாடுகள் இனங்காணப்பட்டதால்  புதிய வாசகர் வட்டம் பொது மக்களால் தெரிவு செய்யப்பட்டது. வாசகர் வட்டத் தலைவராக விவேகானந்தம் அவர்களும் செயலாளராக நூலக உதவியாளரும் பொருளாரராக சுயந்தன் அவர்களும் மற்றும் ஊறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.  இந்நிகழ்வானது குருக்கள்மடம் பொது நூலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறுபட்ட கருத்துக்கள்  பரிமாறப்பட்டன.













Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |