Advertisement

Responsive Advertisement

மேல்மாகாண தமிழ் பாடசலைகளுக்கு புதிதாக 600 ஆசிரியர்கள்

மேல்மாகாண தமிழ் மொழி பாடசாலைகளுக்காக புதிதாக 600 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
தொடங்கொட கொடஹேன தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்ஷ உரையாற்றுகயில் இதனை தெரிவித்தார்.
இதற்கான நேர்முகப்பரீட்சைகளை மேல்மாகாண கல்வித்திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
தெரிவுசெய்யப்படுபவர்களுக்கு அடுத்த மாதம் நியமனக் கடிதங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
30 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 3 மாடிக் கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments