மட்டக்களப்பு கல்லடி,உப்போடை அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் மஹா கும்பாபிசேகம் -வானில் நடந்த அதிசயம்

Thursday, January 30, 2020

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு கல்லடி,உப்போடை அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்டபக்ஸ பிரதிஸ்டா மஹா கும்பாபிசேகம் இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையான ஆலயங்களில் ஒன்றாகவும் அற்புதங்கள் நிறைந்த ஆலயமாகவும் காணப்படும் இந்த ஆலயத்தின் மஹா கும்பாபிசேக கிரியைகள் கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

பரிவார மூர்த்திகள்,இராஜகோபுரம் உட்பட பல்வேறு பல்வேறு சித்திரவேலைப்பாடுகளுடன் ஆலயம் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மற்றும் N;நற்று புதன்கிழமை ஆலயத்தின் அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வும் நடைபெற்றது.
இன்று காலை ஆத்மபூஜை,துவஜபூஜை,யாகபூஜை பூர்ணாகுத உபசார ஹோமம்,மஹாபூர்ணாகுதி நடைபெற்று நவகுண்டத்தில் மஹா ஹோமம் நடைபெற்றதுடன் பிரதான கும்பம் உட்பட கும்பங்களுக்கு விசேட பூஜைகளும் அந்தனர்களினால் நடாத்தப்பட்டது.

இதன்போது சர்வமங்கல கோஷத்துடன் பக்தர்கள் புடைசூழ கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வேத நாத கோசங்களுடன் பக்தர்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் கும்பங்கள் கொண்டுசெல்லப்பட்டு இராஜகோபுரம்,மணிக்கோபுரங்கள்,பிரதான மூலஸ்தான்,பரிவார ஆலயங்களின் மூலஸ்தானங்கள் மஹா கும்பாபிசேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து பிரதான கும்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று பக்தர்களின் ஆரோகரா கோசத்திற்கு மத்தியில் மூலமூர்த்தியாகிய சித்திவிநாயகருக்கு கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.இன்றைய கும்பாபிசேக நிகழ்வின்போது ஆலயத்திற்கு மேலாக 20க்கும் மேற்பட்ட கருடன்கள் ஆலயத்தினை வலம்வந்த சம்பவம் அதிசயமாக பக்தர்களினால் காணப்பட்டது.

மஹா கும்பாபிசேகத்தினை கண்டுகழிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




























































































READ MORE | comments

இயற்கை மருத்துவத்தில் வாழைப்பூ மகத்துவம்:

இயற்கை மருத்துவத்தில் ஒன்று நாம் எடுக்கும் உணவுகள் ஆகும் .அப்படி வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் பெறும் நன்மைகள் முக்கனிகளுக்கு ஒன்றான வாழையின் அனைத்துப் பகுதிகளும் பெரிதும் பயனுள்ளதாக உள்ளன. அதில் வாழைப்பழம், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்துமே சாப்பிடுவதற்கு உகந்ததாக இருப்பதோடு, ஒவ்வொன்றிலும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன.
இப்போது நாம் அதில் வாழைப்பூவின் மகிமைகள் குறித்து தான் பார்க்கப் போகிறோம். பொதுவாக வாழைப்பூவை அதிகம் வாங்கி சமைக்கமாட்டார்கள். ஏனெனில் இதனை சுத்தம் செய்ய நீண்ட நேரம் ஆகும் என்பதால் தான். ஆனால் உண்மையில் இதனை அடிக்கடி சமைத்து உட்கொள்வது மிகவும் நல்லது.
வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் பெறும் நன்மைகள் பார்ப்போம்
வயிறு பிரச்சனைகள் நீங்கும்..
வாழைப்பழத்தைப் போன்றே வாழைப்பூவிலும் நார்ச்சத்து வளமான அளவில் நிறைந்துள்ளது. இதனால் இவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கும் போது, செரிமான பிரச்சனைகள், குடலியக்க பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்றவை தடுக்கப்படும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்..
வாழைப்பூவில் பாலிஃபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள செல்களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.
நீரிழிவு..
வாழைப்பூவில் கிளைசீமிக்-இன்டெக்ஸ் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாகவும்உள்ளதால், இவை இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரித்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் பராமரிக்க உதவும்.
வயிற்றுப் போக்கு..
வாழைப்பூ வயிற்றுப் போக்கை குணமாக்க உதவும்
மாதவிடாய் பிரச்சனைகள்..
வாழைப்பூவை உட்கொண்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்சனைக்கு நல்ல சிகிச்சையாக இருக்கும்.
இரத்த சோகை..
உணவில் வாழைப்பூவை அதிகம் சேர்த்து வருவதன் மூலம், உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். ஆகவே உங்களுக்கு இரத்த சோகை இருப்பின் வாழைப்பூவை உணவில் சேர்த்து வாருங்கள்.
மனநிலையை மேம்படுத்தும்..
வாழைப்பூவில் உள்ள மக்னீசியம், மனக்கவலையைக் குறைத்து, மன நிலையை மேம்படுத்தும். ஆகவே உங்களுக்கு மனம் சரியில்லையெனில், வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.
தாய்ப்பால் அதிகரிக்கும்..
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு போதிய அளவில் தாய்ப்பால் உற்பத்தி ஆகவில்லை என்றால், வாழைப்பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்
முக்கனிகளுக்கு ஒன்றான வாழையின் அனைத்துப் பகுதிகளும் பெரிதும் பயனுள்ளதாக உள்ளன. அதில் வாழைப்பழம், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்துமே சாப்பிடுவதற்கு உகந்ததாக இருப்பதோடு, ஒவ்வொன்றிலும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன.
இப்போது நாம் அதில் வாழைப்பூவின் மகிமைகள் குறித்து தான் பார்க்கப் போகிறோம். பொதுவாக வாழைப்பூவை அதிகம் வாங்கி சமைக்கமாட்டார்கள். ஏனெனில் இதனை சுத்தம் செய்ய நீண்ட நேரம் ஆகும் என்பதால் தான். ஆனால் உண்மையில் இதனை அடிக்கடி சமைத்து உட்கொள்வது மிகவும் நல்லது.
வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்..
வாழைப்பூவில் பாலிஃபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள செல்களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.
நீரிழிவு..
வாழைப்பூவில் கிளைசீமிக்-இன்டெக்ஸ் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாகவும்உள்ளதால், இவை இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரித்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் பராமரிக்க உதவும்.
READ MORE | comments

பிரபல கல்வியியல் கல்லூரியில் 175 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல்!

பத்தனை - ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதன் காரணமாக எதிர்வரும் 3ஆம் திகதிவரை கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. நேற்றையதினம் சுமார் 100 பேரும், இன்றையதினம் சுமார் 75 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களுக்கு கொட்டகலை, டிக்கோயா கிளங்கள் ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது என்றும் மருத்துவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் சிலருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், மேற்படி மாணவர்கள் எவ்வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்பதை கண்டறிவதற்காக இரத்த, சிறுநீர் மாதிரிகள் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் நேற்று திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளனர். இவர்களை பரிசோதித்த பின்னர் ஒருவகையான வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், இன்று காலை கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரியும், சுகாதார பரிசோதகரும் அங்கு சென்றனர். இதன்போது மேலும் 75 மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்பட, அவர்கள் அனைவரையும் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.
இதன்படி மாணவர்களை கொட்டகலை, கிளங்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் நேற்றையதினம் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுள் பெரும்பாலானோர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளை, ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன. கல்லூரி வளாகம் முழுமையாக பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளது.
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |