இங்கிலாந்து செல்லும் இலங்கை டெஸ்ட் அணியின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன

Saturday, April 30, 2016

எதிர்வரும் மே மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு இருப­துக்கு 20 போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதேவேளை இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி அயர்லாந்து அணியுடனும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்தத் தொடருக்கான அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி அடுத்த மாதம் 4 ஆம் திகதி இங்கிலாந்து பயணமாகிறது. முதல் டெஸ்ட் போட்டி மே 19 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்நி­லையில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ள 17 வீரர்கள் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் சபை நேற்று முன்தினம்(27) இரவு அறிவித்தது.
அதன்படி அஞ்சலோ மெத்தியூஸ் தலைவராகவும், தினேஷ் சந்திமால் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை காயத்தினால் அவதிப்பட்டு வரும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கவிற்கு 3 மாதங்கள் ஓய்வை வழங்குவதற்கு இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து செல்லும் டெஸ்ட் அணி வீரர்களின் விபரம்:-
மெத்தியூஸ் (அணித்தலைவர்), தினேஷ் சந்திமால் (துணைத்தலைவர்), தசுன் சானக, தம்மிக்க பிரசாத், தனஞ்சய டி சில்வா, தில்ருவான் பெரேரா, திமுத் கருணாரத்ன, துஷ்மந்த சமீர, கெளஷால் சில்வா, குஷல் மெண்டிஸ், திரிமன்னே, மிலிந்த சிறிவர்த்தன, நிரோஷன் திக் வெல்ல, நுவன் பிர தீப், ரங்கன ஹேரத், சமிந்த எரங்க, சுரங்க லக்மால்.
READ MORE | comments

தாஜூதீன் கொலை வழக்கு! முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனுக்கும் தொடர்பு

றக்பி வீரர் வசிம் தாஜூதீன் கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு எதிராகவும் சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
வசிம் தாஜூதீன் கொலையை மறைத்த குற்றத்துடன் என்.கே.இலங்ககோனுக்கு தொடர்பிருப்பதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தாஜுதீனைக் கொலை செய்தவர் யார்? என்பது என்.கே.இலங்ககோனுக்கு நன்கு தெரியும் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
READ MORE | comments

தீ விபத்தில் பாடசாலை மாணவி பலி! பதுளையில் நடந்த பரிதாபம்

Friday, April 29, 2016

குளியலறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பலியான சம்பவமொன்று, பதுளை தெல்பத்த தோட்டத்தில் 27.04.2016 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத அதே வேளை, இவ் தீ விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பதுளை விசேட பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
READ MORE | comments

தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதை ஏப்ரல் மாத்த்தில் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை, கல்விக் கல்லூரி அபிவிருத்திக்கு புதிய திட்டம்.

2013 ஆம் ஆண்டில் க. பொ. த. (உயர்தரம்) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களிடையே 19 தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு தகைமை பெற்ற விண்ணப்பதாரிகளின் பெயர்ப் பட்டியல் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சகல பீடாதிபதிகளுக்கும் அனுப்பி வைப்பதற்கு கல்விக் கல்லூரி ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கு அமைய அந்த பீடாதிபதிகளால் தகைமை பெற்ற விண்ணப்பதாரிகளை சேர்த்துக் கொள்வதற்காக நாளை (05) உரிய அழைப்புக் கடிதங்களை அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மாணவர்களைப் பதிவு செய்யும் பணியை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் முதல் வாரத்துக்குள் குறித்த பாட நெறிகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. 
புதிய நியமனம் பெற்ற ஆசிரியர்களின் சேவை வசதிகள் குறைபடாமல் தமது கடமைகளைச் செய்துகொண்டு போவதற்காக, கஷ்ட பிரதேசங்களில் ஆசிரியர் தேவைபாட்டை நிறைவு செய்யும் நோக்கத்தில் இம்முறை கல்விக் கல்லூரிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்தலுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் தேவைப்பாடுகளுக்கு அமைய சேர்த்துக் கொள்வதற்காக எடுக்கப்பட்ட கொள்கையடிப்படையிலான தீர்மானத்தின் மேல் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் காணப்படும் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் தேவைப்பாடு தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. அதற்கு அமைய இனிமேல் தாமதமின்றி ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமாக இருக்கும். அத்துடன் 2014 ஆம் ஆண்டில் க. பொ. த. (உயர்தரம்) பரீட்சையில் தோற்றிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்குத் தேவையான வர்த்தமானி அறிவித்தல் 2016 ஜூன் மாதம் வெளியிடப்படும். அதில், மாணவ ஆசிரியர்களை செப்டம்பர் மாதமளவில் சேர்த்துக்கொள்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே 2016 திசம்பர் மாதமளவில் 2015 ஆம் ஆண்டில் க. பொ. த. (உயர்தரம்) பரீட்சைக்குத் தோற்றியுள்ள மாணவர்களை தேசிய கல்விக் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்வதற்கு வர்த்தமானி அறிவித்தல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு திட்டம் இடப்பட்டுள்ளது. அதற்கு அமைய 2012 க. பொ. த. (உயர்தரம்) ஆண்டுக்காக சேர்த்துக்கொள்ளப்பட்ட 3,500 ஆசிரிய மாணவர்களுக்குப் பதிலாக 2013 க. பொ. த. (உயர்தரம்) ஆண்டுக்காக ஆசிரிய மாணவர்கள் 4,700 பேர் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளார்கள். அவ்வாறே, எதிர் வரும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஒரு கல்வியாண்டில் சேர்த்துக்கொள்ளப்படும் ஆசிரிய மாணவர் எண்ணிக்கையை 6,200 வரை அதிகரிப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
அவ்வாறே, அடையாளம் காணப்பட்டுள்ள 1,190 விரிவுரையாளர்கள் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனநுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கானல் ஆட்சேர்ப்பு இனி மேற்கொள்ளப்படும். தேவைப்பாட்டுக்கு அமைய புதிய விரிவுரையாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.
READ MORE | comments

மே 2 ஆம் திகதி விடுமுறை இல்லை

மே தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மே 2ஆம் திகதி அரச விடுமுறை தினமில்லை யென பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
READ MORE | comments

இளம் இயக்குனரால் கர்பமான நயன்தாரா… அதிர்ச்சியில் திரை உலகம்

நயன்தாரா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சிம்புவிடம் காதல் தோல்வி, பின் பிரபுதேவாவிடம் தன் வாழ்க்கையையே பறிகொடுத்தது, தற்போது ஆர்யாவுடன் காதல் கிசுகிசு என சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் நயன்தாரா.
 இவ்வளுவு சர்ச்சைகள் பின் தொடர்ந்தும் கூட, நயன்தாராவிற்கு மார்க்கெட் உயர்ந்துகொண்டே தான் செல்கின்றது. ராஜா ராணி, ஆரம்பம் என ஹிட் கொடுத்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் நயன்தாரா.
 பெரிய ஹீரோக்களுடன் மட்டும் நடிக்காமல் ‘அனாமிகா’ போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடிகின்றார். இதற்கு காரணம் பாலிவுட் நடிகை வித்யா  பாலனை முந்த வேண்டும் என்பதே.
 இதற்காக சிறிய ஹீரோக்களுடன் நடித்தாலும் பரவாயில்லை, என ஒப்புக்கொள்கின்றார். அப்படி ஒப்புக்கொண்ட படம் தான், அறிமுக இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கும் புதிய படம். இப்படம் திகில் நிறைந்த பேய் படமாம்.
 இதில் முழுக்க முழுக்க நயன்தாராவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரமாம். இந்த படத்தில் ஒரு கைக்குழந்தைக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
 தற்பொழுது நயன்தாரா இந்த படத்தில் கர்பிணிப்பெண்ணாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணம் இளம் இயக்குனர் அஷ்வின் சரவணன் தானாம். கர்ப்பிணி பெண்ணாக நடிப்பதன் மூலம், ரசிகர்களின் அனுதாபம் அதிகமாக கிடைக்கும் என கூறி நயன்தாராவை கர்ப்பமாக்க முடிவு செய்துள்ளார்.
 ஒரு புதிய இயக்குனர் படத்தில், நயன்தாரா ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும், கர்ப்பிணி பெண்ணாகவும் நடிக்க சம்மதித்துள்ளது திரை பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
READ MORE | comments

இலங்கைக்கு1.5 பில்லியன் டொலர் கடன்;அனைத்துலக நாணய நிதியம் இணக்கம்

பொருளாதார மறுசீரமைப்புக்கு இலங்கைக்கு  உதவும் வகையில், 1.5 பில்லியன் டொலர் கடனை வழங்கவுள்ளதாக அனைத்துலக நாணய நிதியம்  அறிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு 1.5 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு, அதிகாரிகள் மட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அனைத்துலக நாணய நிதியத்தின்  சிறிலங்காவுக்கான பிரதிநிதி ரொட், ஸ்னேய்டர் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் மாதம் துவக்கத்தில் நடக்கவுள்ள அனைத்துலக நாணய நிதியத்தின் நிறைவேற்றக் குழுக் கூட்டத்தில் இந்தக் கடனுக்கான அங்கீகாரம் அளிக்கப்படவுள்ளது.
READ MORE | comments

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வல்லுநர்கள் இன்று இலங்கை வருகின்றனர்

இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதிலுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வல்லுநர்கள் இன்று இலங்கை வருகின்றனர்.
இலங்கை அரசின் அழைப்பை ஏற்று, நீதிமன்ற சுயாதீனத்துவம் சம்பந்தமான ஐ.நாவின் விஷேட பிரதிநிதி மோனிகா பிண்டோ மற்றும் சித்திரவதை மற்றும் கொடூரமான மனிதாபிமானமற்ற துன்புறுத்தல்கள் சம்பந்தமான ஐ.நாவின் விஷேட பிரதிநிதி ஹுவான் ஈ மெண்டஸ் ஆகிய இருவரும் இலங்கை வருகின்றனர்.
எதிர்வரும் 07ம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர்கள் இருவரும், நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதிலுள்ள சவால்கள் மற்றும் சித்திரவதை மற்றும் வேறு வகையான கொடூரமான மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தக்கூடிய நடத்தை அல்லது தண்டனைகளை அடையாளம் காண்பதில் இருக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.
READ MORE | comments

மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்,சத்தியாக்கிரகம்

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கற்கும் மூன்றாம் வருடம், மற்றும், இரண்டாம் வருட அரையாண்டில் கற்கும் மாணவர்கள் அவர்களது சில கோரிக்கைகளுக்கு பல்கலைக் கழக நிருவாகம், அக்கறையின்றிச் செயற்படுவதாககத் தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை (29) பல்கலைக் கழக வாழாகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில. ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து பிற்பகல் தொடக்கம் வளாகத்திற்கு முன்பாக மாணவர்கள் சத்தியக்கிரக போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கற்கும் மூன்றாம் வருடம், மற்றும், இரண்டாம் வருட அரையாண்டில் கற்கும் மாணவர்களாகிய நாங்கள் எங்களது உரிமையான கல்விச் சுற்றுலா விடயத்தில் பல்கலைக் கழக நிவாகத்தினல் அக்கறையின்றிச் செயற்படுவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தற்போது எமது கல்விச் சுற்றுலா கடந்த 2 மாத காலமாக பிற்போடப்பட்டுக் கொண்டே வருகின்றது. இவற்றால் எமது பரீட்சைகள், மற்றும் கல்வி நடவடிக்கைகள் என்பன பாதிக்கப் படுகின்ற நிலமை காணப்படுகின்றது. இவற்றைக் கண்டித்தே நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம். என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
விடுதிகளுக்கு ஒழுங்கான பாதுகாப்பு இல்லை, நிருவாக அடக்குமுறை, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில் நிகழ்வுகள் ஒழுங்கு படுத்தப் படுகின்றன. மாணவர்களின் கல்விசார் பிரச்சனைகள் தொடர்பில் நிருவாகத்தினர் அலட்சியம், போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை மாணவர்கள் இதன்போது ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தமது உரிமையை கோரிபோது தம்மை பல்கலைக்கழகத்தினை விட்டு நிக்கிவிடுவோம் என சிலர் மிரட்டியதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது நியாயமான உரிமைகள் வென்றெடுக்கும் வரையில் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.hy

READ MORE | comments

தமிழரசுக் கட்சியின் இளைஞரணி செயலாளர் சிவகரன் கைது: பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை

Wednesday, April 27, 2016

இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் இன்று புதன்கிழமை மதியம் பயங்கரவாத விசாரனைப்பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து இன்று புதன் கிழமை 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சிவகரனை கைது செய்ய வருகைதந்த பயங்கரவாத விசாரனைப்பிரிவு அதிகாரிகளினால் ஆவணம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் அவசரகால ஒழுங்கு விதிகள் சட்டத்தின் கீழ் அல்லது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் அத்தாட்சி பத்திரமமே இது என்றும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் எந்த காரணத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்ற விடயம் குறிப்பிடப்படவில்லை.
READ MORE | comments

பிள்ளையானுக்கு மீண்டும் பிணை

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தவைரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேர் மீதான வழக்கு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 11ம் திகதி குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வை சேர்ந்த எம். கலீல் ஆகியோரே இக் கொலை தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களாவர்.
 அதே நேரம் சிவநேசதுரை சந்திரகாந்தன் தன்னை பிணையில் செல்ல அனுமதி கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் பிண மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இம் மனு மீதான விசாரனையும் நாளை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது தேவாலயத்திற்குள்ளேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
READ MORE | comments

2018க்குள் சகல மாணவர்களுக்கும் விடுதி வசதிகள் : அமைச்சரவையில் அங்கீகாரம்

2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் படி அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதி வசதிகள் செய்து கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பணியை 2018 ஆம் ஆண்டுக்குள் செய்து முடிக்க அரசாங்கம் எண்ணியுள்ளது.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 60 விடுதிகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை 2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பூர்த்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிலையங்கள் என்பவற்றில் காணப்படும் 62மூ விடுதி பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்.
எதிர்காலத்தில் இணைத்துக் கொள்ளப்படும் தொழில்நுட்ப பாடத்திட்டத்தை தொடரும் மாணவர்கள் மற்றும் பொது பல்கலைக்கழகங்களில் காணப்படும் பொதுப் பிரச்சினையான விடுதி பற்றாக்குறையினை நிவர்த்திக் நோக்கில் 2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியுதவியுடன் 16 விடுதிகளை அமைப்பதற்கு  உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்  லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்குஅமைச்சரவைஅங்கீகாரம் வழங்கியுள்ளது.
READ MORE | comments

பாரீஸ் குண்டுவெடிப்பில் வெடித்து சிதறிய தீவிரவாதி: அதிர்ச்சியூட்டும் வீடியோ

Tuesday, April 26, 2016

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ,எஸ் தீவிரவாதிகள் கடந்து ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி Salah Abdeslam என்பவர் கைது செய்யப்பட்டு, இது தொடர்பான விசாரணை அவரிடம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நவம்பர் 13 ஆம் திகதி உணவகம் ஒன்றிற்கு சென்ற தற்கொலை குண்டுதாரி ஒருவர் வெடித்து சிதறும் அதிர்ச்சியூட்டும் வீடியோவை பிரான்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது.
பாரீஸில் உள்ள உணவகம் ஒன்றிற்கு உள்ளூர் நேரப்படி இரவு 9.40 மணியளவில் இத்தீவிரவாதி செல்கிறார்.
அங்கு அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில், ஒருவித படபடப்புடன் தனது முகத்தினை மறைத்துக்கொண்டு, காலியாக உள்ள மேஜையினை நோக்கி விரைகிறார்.
இவர், அங்கு சென்ற மறுநொடியில், மின்னல் வேகத்தில் வெடித்து சிதறுகையில், இவரது உடல் இரண்டு பாகங்களாக பிரிவதை காண முடிகிறது.
உணவருந்த வந்த மற்ற நபர்கள், சிறுவித காயங்களுடன் அலறியவாறு அங்கிருந்து தப்பித்து ஓடுகின்றனர்.
தற்போது இந்த வீடியோ, இது குழந்தைகளுக்கு பொருத்தமான வீடியோ கிடையாது என்ற எச்சரிக்கையுடன் ZoneInterdite என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இச்சம்பத்தில் ஈடுபட்ட தீவிரவாதியின் பெயர் Brahim Abdeslam(31). இவர் பாரீஸ் தாக்குதலின் முக்கிய குற்றவாளியான Salah Abdeslam - இன் சகோதரன் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

விபத்தை ஏற்படுத்தும் வகையில் நடு வீதியில் 37 மின் கம்பங்கள்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகர சபையின் பராமரிப்பின் கீழ் வரும் பல வீதிகளில் பாதையின் நடுவில் 37 மின்கம்பங்களை நிறுவி வீதிக்கு கொங்கிறீற் இடப்பட்டுள்ளதால் பயணிகளும் வாகனங்களும் பெருத்த அசௌகரியத்துக்கு உள்ளாவதாக பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கண்டிக்கப்பட்டது.
ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோரின் இணைத் தலைமையில் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அங்கு சமுகமளித்திருந்த சமூக நல ஆர்வலர்களாலும் அதிகாரிகளாலும் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த மின் கம்பங்களை இடமாற்றுவதற்கு கடந்த பல வருடங்களுக்கு முன்னரே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும் கூட நகர சபை நிருவாகம் அவ்வேலைகளை இதுவரை முன்னெடுக்கவில்லை என்று கண்டிக்கப்பட்டது.
ஏறாவூர் நகர சபைப் பிரிவில் உள்ள பல கொங்கிறீற் வீதிகளின் நடுவில் இந்த மின் கம்பங்கள் காணப்படுகின்றன.
இருட்டு வேளையில், அவசர பயணத்தின் நிமித்தம், மற்றும் நிறைமாதக் கர்ப்பிணிகள் உட்பட அவசர நோயாளிகள், முச்சக்கர வண்டிகளில் பயணிப்போர் மாணவர்கள், ஆசிரியர்கள் இந்த நட்ட நடு வீதி மின்கம்பங்களில் மோதுண்டு உயிராபத்தில் சிக்க வேண்டிய ஆபத்து இருப்பதாக அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
நடு வீதியிலுள்ள இந்த மின் கம்பங்களைப் பிடுங்கி அகற்றி வீதி மருங்குகளில் பொருத்துவதற்கு ஒட்டு மொத்தமாக சுமார் 4 இலட்ச ரூபாய் செலவு தொகையை நகர சபை அங்கீகாரம் அளித்தபோதும் கடந்த பல வருடங்களாக நகர சபை நிருவாகம் இதில் கவனம் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இது குறித்து அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இது மிகப் பாரதூரமான விடயம், எனவே இது குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் என்கின்ற வகையில் நகரசபைச் செயலாளர் இந்த விடயத்தில் உடனடியாக செயற்பட்டு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் திட்டமிடப்படாத அமைக்கப்பட்டுள்ள நடு வீதிகளிலுள்ள இந்த மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று பணிக்கின்றேன்.
இல்லையேல் இந்த விடயம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியேற்படும் என எச்சரித்தார்.DSC03666
READ MORE | comments

பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவர் கைது

மட்டக்களப்பு,காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி – கர்பலா பிரதேசத்தில் நேற்று முன்தினம்  இரவு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரை நேற்று திங்கட்கிழமை இரவு  கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரையும் இன்று   செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்களும் கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவில் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என்றும் இவர்கள் குறித்த பெண்ணை முச்சக்கர வண்டியொன்றில் ஒன்றில் ஏற்றி கர்பலா பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிய வருகின்றது.
பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளானதாக கருதப்படும் இரு பிள்ளைகளின் தாயான 38 வயதுடைய பெண், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
READ MORE | comments

சட்ட விரோத மண் அகழ்வினை தடுக்கும் வகையில் விசேட குழு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படும் மண் அகழ்வினை தடுக்கும் வகையில் பிரதேச செயலாளர் தலைமையில் விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பட்டிப்பளை பிரதேச அபிவிருத்துக்குழுக்கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் இணைத்தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,பட்டிப்பளை பிரதேச செயலாளர் த.டினேஸ் உட்பட தினைக்களங்களின் அதிகாரிகள்,பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
புட்டிப்பளை பகுதியின் வாழைக்காலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வுகள் நடைபெறுவதுடன் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் 16 இடங்களில் சட்ட விரோதமாக மண் அகழப்படுவதாகவும் அவை தடுத்து நிறுத்தப்படவேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை விடுத்தார்.
இந்த சட்ட விரோத மண் அகழ்வுகள் இரவு வேளைகளிலேயே அதிகளவில் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோர் ரவுடிகள் போல் மற்றவர்களை அச்சுறுத்தி இந்த மண் அகழ்வில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
இதனை தடுத்து நிறுத்துவதற்கு தீர்க்கமான முடிவு ஒன்றிணை இந்த பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் எடுக்கவேண்டும் எனவும் இந்த சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்க பொலிஸார் ஆதரவளிப்பதாகவும் இவை நிறுத்தப்படவேண்டும் எனவும் இங்கு வேண்டுகோள் விடுத்தார்.
இங்கு கருத்து தெரிவித்த கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.பெர்னாணந்து,பட்டிப்பளை பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வு தொடர்பில் பொலிஸார் கண்காணிப்புடன் ஈடுபட்டுவருவதாகவும் அவ்வாறானவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
ஆத்துடன் வவுணதீவு பகுதியில் அனுமதிப்பத்திரத்துடன் மண் அகழ்வில் ஈடுபடுவதுடன் அந்த வாகனங்கள் கொக்கட்டிச்சோலை பகுதியூடாக பயணிப்பதன் காரணமாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கமுடியாது எனவும் தெரிவித்தார்.
இதன்போது சட்ட விரோத மண் அகழ்வினை தடுக்கும் வகையில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் தலைமையில் பட்டிப்பளை பொலிஸார்,விவசாய அமைப்பு,கிராமசேவையாளர்கள்,பொதுமக்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.IMG_0233
READ MORE | comments

தினமும் காலையில் எழுந்ததும் 1 ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

Sunday, April 24, 2016

பல உணவுகளில் சேர்க்கப்படும் வெந்தயம் என்ன தான் கசப்பாக இருந்தாலும், தன்னுள் ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக இதில் புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. இத்தகைய வெந்தயத்தை நம் முன்னோர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தார்கள்.
இப்படி இதனை தினமும் சாப்பிட்டு வந்ததாலோ என்னவோ, நோய்கள் அவர்களை அண்டவே இல்லை எனலாம். அந்த அளவில் வெந்தயம் உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி வந்தது. அதிலும் தற்போது கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருப்பதால், இதனை கோடையில் தினமும் சாப்பிட்டால் இன்னும் நல்லது.
சரி, இப்போது கோடையில் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு நன்மைப் பெறுங்கள்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகள் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். மேலும் ஆய்வுகளிலும் வெந்தயத்தை சாப்பிடுவதால் டைப்-2 நீரிழிவு பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைப்பதாக தெரிய வந்துள்ளது.
மாரடைப்பு
வெந்தயம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது மாரடைப்பினால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுவதைத் தடுத்து நல்ல பாதுகாப்பு வழங்கும். இதற்கு வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.
புற்றுநோய்
ஆய்வுகளில் வெந்தயத்தில் உள்ள சக்தி வாய்ந்த சத்துக்கள், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதாக தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.
மாதவிடாய் பிடிப்புகள்
வெந்தயத்தை பெண்கள் காலையில் எழுந்ததும் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் வலி நிவாரணி பண்புகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புக்களைத் தடுக்கும்.
உடல் சூடு
கோடையில் உடலில் அதிகம் சூடு பிடிக்கும். இதனைத் தடுக்க தினமும் காலையில் வெந்தயத்தை சாப்பிட வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடல் சூடு பிடிப்பது தடுக்கப்படும்.
கொலஸ்ட்ரால் குறையும் ஆய்வுகளில் வெந்தயம் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. இதற்கு வெந்தயத்தில் உள்ள நரின்ஜெனின் என்னும் ஃப்ளேவோனாய்டு தான் காரணம். ஆகவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.
செரிமானம்
செரிமான பிரச்சனைகள் ஏதும் நேராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதனால் செரிமான கோளாறுகள், வாய்வுத் தொல்லை போன்றவை நீங்குவதோடு, மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்றவைகளும் தடுக்கப்படும்.
எடை குறையும்
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.
சிறுநீரக செயல்பாடுகள்
வெந்தயத்தில் உள்ள பாலிஃபீனோலிக் ஃப்ளேவோனாய்டுகள், சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரித்து, சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும். எனவே சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிடுங்கள்.
கல்லீரல்
கல்லீரல் தான் உடலை சுத்தம் செய்கிறது. அத்தகைய கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால், உடல் முழுவதும் பாதிப்பிற்குள்ளாகும். கல்லீரல் முதலில் பாதிக்கப்படுவதற்கு ஆல்கஹால் முக்கிய காரணம். ஆனால் வெந்தயத்தை தினமும் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பாலிஃபீனாலிக் உட்பொருட்கள் மதுவினால் கல்லீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்

READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த இறைபதமடைந்த பா.லோகிதராஜன் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டிக் கிரியை

26.03.2016 அன்று திருமலையில் இறைபதமடைந்து குருக்கள்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்ட குருக்கள்மடத்தைச் சேர்ந்த பா.லோகிதராஜன் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டிக்  கிரியை நிகழ்வானது எதிர்வரும் 25.04.2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 





READ MORE | comments

வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்க முடியாது: தேசிய காங்கிரஸின் மாநாட்டில் தீர்மானம்

வடமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பிலான தீர்மானத்துக்கு தேசிய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த வட மாகாண சபையின் தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உதுமா லெப்பை தெரிவித்தார்.
முஸ்லிம்களும் தமிழர்களைப் போன்று தனித்துவமான தேசிய இனம் என்பதை மறந்து தமிழ் அரசியல் தலைமைகள் நடந்து கொள்வதாக கூறிய அவர் அதிகாரப் பகிர்வில், தமிழர் தரப்பு முஸ்லிம்கள் தொடர்பாக தனித்து தீர்மானங்களை எடுப்பது, ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றும் தெரிவித்தார்.
சனிக்கிழமை அக்கரைப்பற்று நகரில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ எல் அதாவுலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரன தீர்மானம் பிரதானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு இரு மாகாணங்களும் இணைக்கப்படுமாயின் சம அந்தஸ்துடையதாக தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும் அதேபோல் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும் அமையக் கூடியதாக மாகாண எல்லைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அந்தத் தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

முச்சக்கர வண்டி- மோட்டர் சைக்கிள் விபத்து: மட்டக்களப்பில் 6 பேர் காயம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கடற்கரை வீதி, மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கு முன்பாக வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் ஒன்றில் 06 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மோதியே இவ்விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயங்களுக்குள்ளான ஒரு பெண், இரு குழந்தைகள் உட்பட 06 பேர் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாரதூரமாக காயம்பட்ட இளைஞர் ஒருவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
READ MORE | comments

சிவனை தியானித்து சமாதியானவர்தான் இயேசு! வெடித்தது புதிய சர்ச்சை

Saturday, April 23, 2016

கிறிஸ்தவர்களின் தெய்வமான ஏசு கிறிஸ்து, பிறப்பால் தமிழர் என்றும், கருப்பு நிறம் கொண்டவர் என்றும், அவர் சிவ பெருமானை தியானித்து சமாதி நிலைக்கு சென்ற ஒரு சித்தர் எனவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான கணேஷ் தாமோதர் சாவர்கர் Christ Parichay என்ற புத்தகத்தில் எழுதியிருந்தார். 1946ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த புத்தகம் மராத்தி மொழியில் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில் சர்ச்சை வெடித்துள்ளது.
சாவர்கர் நேஷனல் மெமோரியல் என்ற அமைப்பு, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்களின், கொள்கை, கோட்பாடு, இலங்கியங்களை பாதுகாத்து வருகிறது. இவ்வமைப்புதான், வரும் 26ம் தேதி Christ Parichay புத்தகத்தின் மராத்தி மொழியாக்கத்தை வெளியிட உள்ளது. இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பல அம்சங்கள் புதிய தகவல்களை தெரிவிப்பதை போல இருப்பினும், கிறிஸ்தவர்கள் இதுவரையில் நம்பிக்கொண்டிருக்கும் தகவல்களுக்கு எதிரானதாக உள்ளது.
1897910_288800654603842_944174816_n
இந்த புத்தகம் தமிழகத்தோடு ஏசுகிறிஸ்துவுக்கு இருந்த நெருங்கிய தொடர்பை விவரிக்கிறது. புத்தகத்திலுள்ள முக்கிய அம்சங்களை பாருங்கள்: ஏசு கிறிஸ்துவின் நிஜப்பெயர் கேசவ் கிருஷ்ணா. தமிழ்தான் அவரது தாய் மொழி.
ஏசு கிறிஸ்து இயல்பில், தமிழகத்து இந்துக்களை போல கருப்பு நிறம் கொண்டவர். தச்சு தொழில் செய்யும் ஆசாரி குலத்தில் பிறந்தவர். இருப்பினும் அந்த ஜாதி விஸ்வகர்மா பிராமணர் ஜாதி என்றே அழைக்கப்படுகிறது. ஏசுவின் 12வது வயதில் அவருக்கு பூணூல் போடும் சடங்கு நிறைவேற்றப்பட்டது.
ஏசு கிறிஸ்துவின் தந்தை பெயர் சேசப்பன். அதுதான் காலப்போக்கில் திரிந்து சேஷப் என்றும், பிறகு, ஜோசப் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. தமிழும், சமஸ்கிருதமும் அக்காலத்தில் உலகின் ஆதி மொழிகளாக இருந்தன.
ஜெருசலேம், அரபு நாடுகள் அமைந்துள்ள பகுதிகளில் வசிப்போருக்கு தமிழ் தாய் மொழியாக இருந்தது. இப்போதும்கூட அரபு மொழிகளில் தமிழின் ஆதிக்கம் இருப்பதை உணர முடியும். அப்படித்தான் பாலஸ்தீன் பகுதியில் பிறந்த ஏசுவுக்கும் தமிழ் தாய் மொழியாக இருந்தது. அவர் இந்தியாவுக்கு வந்து யோகா பயின்றிருந்தார்.
ஏசுவை சிலுவையில் அறைந்த பிறகும், தனது யோகத்திறமையால் உயிரோடு இருந்தார். அவை சக தோழர்கள் மீட்டு, சித்த வைத்திய முறையில், சிலுவை காயங்களை குணப்படுத்தினர். இறுதி காலத்தில், இமயமலை பகுதியில், ஏசு, லிங்க வடிவத்தில் சிவபெருமானை நோக்கி தியானம் செய்து வந்தார்.
3 வருட கடும் தவத்திற்கு பிறகு ஏசுவுக்கு, சிவபெருமான் காட்சியளித்து முக்தியை அளித்தார். பல்வேறு பகுதிகளி்ல இருந்தும் சாதுக்களும், முனிவர்களும் அங்கு வந்து ஏசுவை தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டனர். ஏசுவை ஈஷாநாத் என்றே முனிவர்கள் அழைத்தனர்.
ஏசு தனது 49வது வயதில், இந்த ஜட உடலை விட்டுச் செல்ல முடிவு செய்தார். இதன்பிறகு ஆழ்நிலை சமாதி நிலைக்கு சென்று, ஏசு தனது உயிரை துறந்து முக்தியடைந்தார். இப்போதும், காஷ்மீரில் ஈஷாநாத் என்ற பெயரில் அவர் ஜீவமுக்தியடைந்த சமாதி உள்ளது.
கிறிஸ்தவம் என்பது தனி மதம் கிடையாது. இந்து மதத்தின் ஒரு அங்கமே கிறிஸ்தவம். பைபிள் ஏசு கூறிய வார்த்தைகள் கிடையாது. இவ்வாறு அந்த புத்தகம் விவரிக்கிறது. இதற்கு ஆதாரமாக பல நூல்களை எடுத்துக்காட்டுகிறது
இதுகுறித்து, சுதந்திர வீரர் சாவர்கர் தேசிய நினைவகத்தின் செயல் தலைவர் ரஞ்சித் சாவர்கர் கூறுகையில், 70 வருடம் கழித்து புத்தகத்தை பப்ளிஷ் செய்வதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. புத்தகம் குறித்து சர்ச்சை எழும் என எனக்கும் தெரியும். ஆனால், இது புதிது கிடையாது. ஏற்கனவே எழுதியுள்ள புத்தகத்தைதான் மராத்தியில் வெளியிடுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே மும்பையை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள், புத்தகத்திலுள்ள அம்சங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளன. பாதிரியார் வார்னர் டிசோசா கூறுகையில், கிறிஸ்தவர்கள் மத நம்பிக்கையை இந்த புத்தகம் அசைக்காது என்றும், யூகத்தின் அடிப்படையில் புத்தகம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மட்டக்களப்பு காத்தான்குடியில் அமைச்சு செயலாளர் கைது..!

காத்தான்குடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் காத்தான்டி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி ரி.மகேஸ்வரன் தெரிவித்தார்.
இச்சம்பவம் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
களுவாஞ்சிக்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி கே.அமலநாதன் செலுத்தி வந்த ஜீப் மற்றும் முச்சக்கரவண்டி போன்ற வாகனங்கள் மோதிய போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
காத்தான்குடி-06, பிரதான வீதி இரும்புத் தைக்கா பள்ளிவாயல் முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில் காயங்களுக்குள்ளான காத்தான்குடியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பயணிகள் உட்பட 5 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் அமலநாதன் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.batti_ds
READ MORE | comments

அரச ஊழியர்களுக்காக புதிய திட்டம்!

இலங்கையின் அரச ஊழியர்களுக்கு வாகனத்தை கொள்வனவு செய்வதற்கான அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பிலான ஒரு திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது .
அரச ஊழியர்களுக்கு மூன்று வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.
ஆறு வருட சேவையை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு முதல், வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படும் என்றும் அதன் பின்னர் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படும் என்று மேலும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் முன்மொழியப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், பொறியளாளர்கள் , அரச ஊழியர்கள் , பொது ஊழியர்கள் என அனைவருக்கும் இந்த திட்டத்தின் படி வாகன அனுமதி பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

குழந்தைக்கு வினோதமான பெயர் சூட்டிய கெய்ல்!

Friday, April 22, 2016

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் 36 வயதான கிறிஸ் கெய்ல், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக பங்கேற்றுள்ளார்.
கெய்ல், தனது காதலியும், ஜமைக்காவைச் சேர்ந்த பேஷன் டிசைனருமான நடாஷா பெரிட்ஜிடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நடாஷாவுக்கு பிரசவவலி ஏற்பட்ட தகவல் அறிந்து கிறிஸ் கெய்ல் சில தினங்களுக்கு முன்பு தாயகம் திரும்பினார்.
இதற்கிடையே பேட்டி அளித்த கெய்லின் சக அணி வீரர் சர்ப்ராஸ்கான், கெய்லுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், அடுத்த இரு ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தவறான தகவல் பரிமாற்றம் காரணமாக, சர்ப்ராஸ்கான் தவறான தகவலை வெளியிட்டிருப்பது நேற்று தெரியவந்தது. அதாவது கெய்லுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதை கெய்ல் தனது ‘இன்ஸ்டாகிராம்’ சமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அவர் குழந்தைக்கு ‘ப்ளஷ்’ என்ற பெயர் சூட்டியிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பெயர் இன்னொரு சர்ச்சைக்குரிய சம்பவத்தில் தொடர்புடையதாகும். கடந்த ஜனவரி மாதம் கிறிஸ் கெய்ல் ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் ஆடிய போது டி.வி. பெண் நிருபர் மெக்லானிக்கு பேட்டி அளித்தார்.
‘உனது கண் வசீகரமாக இருக்கிறது. இந்த ஆட்டத்தில் நாங்கள் எப்படியும் ஜெயித்து விடுவோம். அதன் பிறகு நாம் ஒன்றாக மது அருந்தலாம்’ என்று கூறியது சலசலப்பை உருவாக்கியது.
இவ்வாறு கூறி விட்டு இறுதியில் ‘டோன்ட் ப்ளஷ் பேபி’ என்றும் அந்த நிருபரை பார்த்து கூறினார். அப்படியென்றால் தமிழில் ‘வெட்கப்படாதே குழந்தாய்’ என்று அர்த்தம்.
அந்த சம்பவத்தில் உபயோகப்படுத்திய ஒரு வார்த்தையை இப்போது குழந்தைக்கு பெயராக வைத்திருப்பது ஆச்சரியப்படுத்தியுள்ளது. ‘ப்ளஷ்’ என்று தமாசுக்காக கெய்ல் வலைதளத்தில் பதிவு செய்திருக்கலாம் என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.
தந்தையான கெய்லுக்கு, பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘குட்டித்தேவதை ப்ளஷ் என்னை அங்கிள் என்று அழைக்கப்போவதை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என்று இணையதளத்தில் கூறியுள்ளார்.
READ MORE | comments

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் கடல் பகுதியில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் கடல் பகுதியில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இந்நபர் கடந்த 13ம் திகதி காணாமல் போனவர் எனவும் இவர் மகிழுரைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்



READ MORE | comments

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அக்கறை காட்ட வேண்டும்: பிரித்தானியா வலியுறுத்து

பொறுப்பு கூறுதல் விடயத்தில் இலங்கை அக்கறை காட்ட வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சினால் வருடாந்தம் வெளியிடப்படும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை தொடர்பான அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்ய அரசாங்கம் கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதனை வரவேற்க வேண்டுமெனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இலங்கையில் ஜனநாயக ரீதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் வரவேற்கப்பட வேண்டியது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை உறுதி செய்ய அரசாங்கம் மேலும் முனைப்பு காட்ட வேண்டுமென இந்த அறிக்கையில் முக்கியமாக வலியுறுத்தியுள்ளது.
READ MORE | comments

பல்கலைக்கழக கட்டமைப்பை மாற்றியமைக்க இந்த வருடத்திற்குள் சட்ட வரைபு: பிரதமர்

பல்கலைக்கழக கட்டமைப்பை தற்போதைய காலத்திற்கு ஏற்றால் போல் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழங்களில் பகிடிவதைகள் , பாலியல் மற்றும் பால் நிலைகளை அடிப்படையாக கொண்ட  வன்முறைகளைத் தவிர்ப்பது தொடர்பாக  கொழும்பு, கலதாரி ஹொட்டலில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டு  உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழங்களுக்குள் சட்டம் சரியாக செயற்படுத்தப்படாமையே அங்கு  பகிடிவதைகள் , பாலியல் மற்றும் பால் நிலை ரீதியிலான வன்முறைகள் என்பன அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகமே பொறுப்புக் கூறவேண்டும். இவர்களே நாட்டின் சட்டத்தை பல்கலைக்கழகத்திற்குள் உறுதிசெய்ய அவர்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். இதனை செய்யாது குறித்த  வன்முறைகளை தவிர்க்க முடியாது.
இதேவேளை தற்போது நாட்டிலுள்ள பல்கலைக்கழக கட்டமைப்பானது.  1942 ஆம் ஆண்டை அடிப்படையாக கொண்டது. இதனால் இன்றைய காலத்திற்கு ஏற்றால் போல் அதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.  அந்தவகையில்  இலங்கையில் தற்போது புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள பொலிஸ் பல்கலைக்கழகத்தை அவுஸ்திரேலிய பல்கலைக் கழகங்களின் கட்டமைப்புக்கு ஏற்றவிதத்தில் நிர்மாணிக்குமாரே நான் வலியுறுத்தியுள்ளேன்.
ஏனெனில், அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களே அமெரிக்காவினதும் மற்றும் இங்கிலாந்தினதும் பல்கலைக்கழகக் கட்டமைப்புக்கேற்ப காணப்படுகின்றன. இதனால் குறித்த பொலிஸ் பல்கலைக்கழகத்தையும் அவ்வாறு அமைக்க கூறியுள்ளேன்.  இதேவேளை எதிர்க்காலத்தில் இங்கு  இதுபோன்ற பல்கலைக் கழகங்களே நிர்மானிக்கப்பட வேண்டும். இதற்காக தற்போது சட்டவரைபொன்றும் தயாரிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

வவுனியாவில் பெற்ற தாயை 5 வருடங்கள் அடைத்துவைத்திருந்த கொடூரமான மகன்!

வவுனியா சாந்தசோலை கிராமத்தில் 95 வயதான பெற்ற தாயை அறைக்குள் மகன்அடைத்துவைத்துள்ளார் என்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்படுள்ளது.
இதனையடுத்து குறித்த தாயை மீட்ட பொலிஸார், அவரை வைத்தியசாலையில்சேர்த்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா சாந்தசோலைக் கிராமத்தில் வசித்துவரும் மகன் தனது தாயை 5வருடங்களாக அறைக்குள் அடைத்து வைத்துள்ளார் என்று பொதுமகன் ஒருவரால் வவுனியாபொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டது.
இதனையடுத்து சம்பவஇடத்துக்கு நேற்று விரைந்த பொலிஸார் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாயை மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மகனிடம் வினவியபோது, "எனது தாயை நான்அடைத்துவைக்கவில்லை. அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் 5 வருடங்கள் அவரைஅறைக்குள் வைத்து நல்லமுறையில் பராமரித்து வந்தேன்.
வவுனியா பொலிஸ்நிலையத்தில் தவறான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது" - என்றார்.
தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு என்றால் அவரை ஏன் 5 வருடங்களாக வைத்தியசாலையில் சேர்க்காமல் வைத்திருந்தீர்கள் என்று மகனிடம் வினவியபோது,
அதற்கு அவர் பதில் எதனையும் வழங்கவில்லை. மகனை பொலிஸார் கைதுசெய்யவில்லை.
எனினும், இது தொடர்பில் தாம் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றோம் என்று வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
READ MORE | comments

இலங்கையர்களுக்கு மகிந்த விட்டுச் சென்ற கடன் தொகை எவ்வளவு தெரியுமா?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு நாட்டை பொறுபேற்கும் போது ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக இருந்த தனிநபர் கடனானது 2015 ஆம் ஆண்டு அவர் ஆட்சியை விட்டுச் செல்லும் போது 4 லட்சத்து 52 ஆயிரம் ரூபாவாக அதிகரித்திருந்தாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் உள்ள சகல மக்களின் கடன் சுமையை அதிகரித்து விட்டே மகிந்த ராஜபக்ச ஆட்சியை விடடுச் சென்றார்.அதேபோல் மகிந்த ராஜபக்ச நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்ற போது நாட்டின் மொத்த கடன் 21 லட்சத்து 39 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவாக இருந்தது.
மகிந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சியை விட்டு செல்லும் போது நாட்டின் மொத்த கடன் 73 லட்சத்து 90 ஆயிரத்து 899 மில்லியன் ரூபா.இதனையே மகிந்த ராஜபக்ச நாட்டுக்கு மிகுதியாக வைத்து விட்டுச் சென்றார்.
நாடு தற்போது கடன் பொறியில் சிக்கியிருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதியின் அரசாங்கமே காரணம்.பெற்ற கடன்களில் தரகு பணம் பெற்றனர்.
தேசிய உற்பத்தி துறையை அழித்தனர்.அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்காது, கண்காட்சி திட்டங்களை உருவாக்கினர். நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவாத அபிவிருத்தித் திட்டங்களை ஏற்படுத்தினர்.
நாட்டை கடனாளியாக்கி விட்டு, அந்த பணத்தை அழித்தனர். இவற்றை யார் செய்தனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.இவ்வாறான நிலையில், கூட்டு எதிர்க்கட்சியினர் ஆடை அணிந்து கொண்டா மக்களை பற்றி பேசுகின்றனர் என நான் கேள்வி எழுப்புகிறேன்.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த மகிந்த அரசாங்கத்திற்கு காலம் அவகாசம் இருந்தது.
போர் முடிந்த பின்னரும் போர் இல்லாத சூழ்நிலையில், 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சியை விட்டு செல்லும் போது நாட்டின் மொத்த வெளிநாட்டு கடன் 44 பில்லியன் டொலர்கள்.
இரண்டு மடங்காக வெளிநாட்டு கடன் அதிகரித்து காணப்பட்டது.யுத்தம் நடைபெறாத நிலையில், எதற்கான இந்த பணம் செலவிடப்பட்டது.
அவர்கள் பெற்ற பெருந்தொகை கடன் காரணமாக நாடு தற்போது மிகப் பெரிய கடன் பொறியில் சிக்கியுள்ளது என்றார்.
முதலாம் இணைப்பு
அர்ப்பணிப்புகள் காரணமாகவே சிங்கப்பூர் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்தது: கபீர் ஹசீம்
ஜக்கிய தேசியக் கட்சியினர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி அமைதியான புரட்சியை செய்ததாகவும் அன்று முதல் தொடர்ந்தும் கட்சியினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளனர்.
கட்சியினரை போலவே கட்சி என்ற வகையில் நாமும் சில அர்ப்பணிப்புகளை செய்துள்ளேம்.
ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களை கைப்பற்றிய போதிலும் தனித்து ஆட்சி அமைக்காது, நாட்டை ஆட்சி செய்வதற்கு பதிலாக நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தோம்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த அர்ப்பணிப்பை செய்ததுடன் ஜனவரி 8 ஆம் திகதி பொது வேட்பாளரை நிறுத்தியதன் மூலமும் ஐக்கிய தேசியக் கட்சி அர்ப்பணிப்பை செய்தது. இதுவும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க செய்த அர்ப்பணிப்பாகும்.
கடந்த 20 வருடங்களாக போராட்டம் நடத்தி வந்த கட்சி என்ற வகையில் இந்த அர்ப்பணிப்பை எங்களால் செய்ய முடிந்தது.கூலித் தொழிலாளிகளின் தேசம் என பெயரிடப்பட்ட சிங்கப்பூர் இன்று ஆசியாவின் பொருளாதார கேந்திர நிலையமாக மாறியுள்ளது.
அந்நாட்டு மக்கள், தலைவர்கள் செய்துள்ள அர்ப்பணிப்புகள் காரணமாகவே சிங்கப்பூர் இந்த நிலைமையை அடைந்துள்ளது.
அதேபோல் குடிசைவாசி சமூகம் என கூறப்பட்ட கொரியா தற்போது தொழிற்நுட்பத்தின் கேந்திர நிலையமாக மாறியுள்ளது.மக்களும், அந்த நாடுகளின் தலைவர்கள் செய்த அர்ப்பணிப்புகள் காரணமாவே இந்த நாடுகள் இவ்வாறு முன்னேற்றத்தை நோக்கி சென்றுள்ளன.
இதனால், ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை அனுஷ்டிக்கும் மே தினமானது அர்ப்பணிப்புகளை மேற்கொள்ளும் மக்களின் மே தினம் என்பதை மிகவும் அக்கறையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம் எனவும் அமைச்சர் கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |